Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாறாதபொருளானாய்.. மகிழ்வெல்லாம் தந்தாய்! கண்ணா, உனைநான் கண்டேன்..!

Featured Replies

http://karumpu.com/wp-content/uploads/2010/01/Kannaa.mp3

கண்ணா, உனைநான் கண்டேன் உயிராய்!

அறிவே! அமுதே! அடடா, அழகே நீதான்!

கண்ணா, உனைநான் கண்டேன்..!

தீபங்கள் ஏற்றி, தேன் இசையாலே போற்றி,

தினம், தினம் வாழ்வே பெருவிழா!

உன்னைத்தேடி.. தேடி.. கண்டுகொண்டேன் என்னிடமே..!

அன்புருவே கண்ணா..!

பலநாள் இருந்தேன் தவமே!

பலநாள் இருந்தேன் தவமே!

ஒருநாள் வந்தாய்! உனையே தந்தாய்!

ஒருநாள் வந்தாய்! உனையே தந்தாய்!

சரணம்! சரணம்! குருவே..!

மாறாத பொருளானாய்! என்றும்,

மாறாதபொருளானாய்.. மகிழ்வெல்லாம் தந்தாய்!

கண்ணா, உனைநான் கண்டேன்..!

எதுவந்தபோதும் சிறுமை களைந்து

உயர் எண்ணம் தந்த அருளே!

எல்லையில்லாத பலமே நீதான்!

எல்லாம் நீயே அறிவாய்!

இறைவா.. எங்கும் உறைந்தாய்!

எவ்வுயிரும் உந்தனின் சொந்தமே!

காத்து அருள்வாய் கண்ணா!

பாடல் வரிகள், பாடல்: பவித்திரா

மூலம்: http://karumpu.com/archives/503

+++

இந்தப்பாடலை இன்று நான் எனது அக்கா பாடியபோது தொலைபேசிக்கால ஒலிப்பதிவு செய்து இணைச்சு இருக்கிறன்.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது.தொடருங்கள் மாப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

குரலில் சங்கீத வாசனை அடிக்கிறது. உங்கட அக்கா சங்கீதம் படிச்சிருக்கா போல..! கேட்கக் கூடியதாக இருக்கிறது. பொதுவா சங்கீதம் என்றால் நான் ஓடிவிடுவேன்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் குடும்பம் கலைக் குடும்பம் போல...எல்லோரும் பாடுவார்களா...உங்கள் குடும்பத்தை பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • தொடங்கியவர்

நன்றி சஜீவன், நெடுக்காலபோவான், ரதி.

அக்கா யாழ் பல்கலைக்கழகத்தில கலைப்பீடத்தில படிச்சவ. பிறகு மருதனார்மடம் சங்கீத அக்கடமியில படிச்ச. அதுக்கு பிறகு தமிழ்நாட்டில குயின்ஸ்மேரிஸ் இசைக்கல்லூரியில படிச்சவ. பயிற்சி செய்கிறது இல்லை. நாந்தான் ஆக்கினை கொடுத்து எழுத, பாட வச்சு இருக்கிறன். இப்ப அவவுக்கு கொஞ்சம் ஆர்வம் வந்து இருக்கிது. அமெரிக்காவில இருக்கிறா. தொலைபேசிக்கால கதைச்சு ஒலிப்பதிவு செய்கிறது மட்டும்தான் இப்ப ஒரே ஒரு வழி.

குடும்பம் கலைக்குடும்பம் எண்டு எல்லாம் சொல்லிறதுக்கு இல்லை. அப்பாவுக்கு பொயிலை போடுற கலை தெரிஞ்சு இருந்திச்சிது. அம்மா ஓரளவு பாடுவா. மூன்று அக்காமாரும் வாய்ப்பாடு, வயலின், வீணை உதுகள் படிச்சது, அண்ணா மிருதங்கம். ரெண்டாவது அக்கா மட்டும் நிகழ்வுகளில பாடுறது. மிச்சம் நான் அப்பிடி இப்பிடி வலைத்தளத்துக்கால பாடி என்னமும் விளையாட்டு காட்டுறது. அண்ணாவிண்ட மிருதங்கம் நித்தா கொள்ளுது. மூத்த அக்காவுக்கு சங்கீதத்தை மறந்து பல யுகங்கள் போயிட்டிது.

நான் மட்டும்தான் வீட்டில ஒண்டும் பழக இல்லை கீரிக்கட்டு தவிர. பிறகு... என்பாட்டில கீபோர்ட் வாசிச்சு பழகினது, பிறகு பியானோவும், வாய்ப்பாடு (ஆங்கிலம்) பழகினது கனடாவுக்கு வந்து. வீட்டில இருக்கேக்கே அக்காமாரிண்ட சுருதிப்பெட்டி, வீணை, வயலின், தாளம் எல்லாம் எடுத்து எண்ட விளையாட்டுக்கள்தான். அண்ணாவிண்ட மிருதங்கத்தையும் சடார் புடார் எண்டு மேளம் மாதிரி அடிக்கிறது. வீட்டில ஏதாவது சரஸ்வதி பூசை அப்பிடி ஏதும் வந்தால் எல்லாரும் சேர்ந்து பாடி வாசிக்கிறது. வேற பெருசாய் ஒண்டும் இல்லை. நான் கலைவெறி பிடிச்சு வீணை, வயலின் கம்பிகளை அறுத்துபோட்டன் எண்டு அக்காமாரோட முந்தி அடிக்கடி சண்டைவரும்.

கலைஞன்...

ஒலித்தொகுப்பு செய்யும் மென்பொருளில் தொலைபேசி இரைச்சலை நீக்கும் அல்லது குறைக்கும் வசதி இருக்குமே.

அதன்மூலம் இரைச்சலை எடுத்தால் நன்றாக இருக்கும்.

கலைஞன் இது என்ன பாடல்;;; இன்றுதான் இப்படி ஒரு பாடலை நான் கேட்கிறேன்... உங்கள் அக்கா நல்லா பாடியிருக்கிறா... தொடருங்கள் :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரே கலைக்குடும்பம் போலகிடக்கு

  • தொடங்கியவர்

நன்றி இளைஞன், சுஜி, குமாரசாமி அண்ணா.

இளைஞன், அது நான் லப்டொப்பில இருக்கிற ஒலிவாங்கியில ஒலிப்பதிவு செய்தனான். ஆனால் பிறகு இரைச்சலை மென்பொருளை பாவிச்சு நீக்கிவிட்டனான். எதிர்வரும் காலங்களில வழமையாய் நான் பாவிக்கிற ஒலிவாங்கியில ஒலிப்பதிவு செய்து பார்க்கவேணும்.

+++

சுஜி... கர்நாடக சங்கீதத்தில பெரும்பாலான பாட்டுக்கள் எல்லாம் கடவுளை வாழ்த்திப்பாடுகிற பாட்டுக்களாய்தான் இருக்கும். அக்காவும் பெரும்பாலும் கண்ணன், இராமன் எண்டு தான் பாட்டுக்கள் பாடுறது, கேட்கிறது. ஆனாலும்... இயற்கை சம்மந்தமாய் பாடல்கள் எழுதி பாடுறவ. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் கண்ணம்மா கண்ணம்மா என்று குழந்தையாக, தெய்வமாக, காதலியாக உருவகிச்சு பாடல்கள் எழுதி இருக்கிறார்தானே. கண்ணன், ராமன் எண்டு சொல்லி பாடுறதும் இப்பிடி ஒரு வகைதான் என்று நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

quote name='nedukkalapoovan' date='05 January 2010 - 10:45 AM' timestamp='1262706305' post='558954']

குரலில் சங்கீத வாசனை அடிக்கிறது. உங்கட அக்கா சங்கீதம் படிச்சிருக்கா போல..! கேட்கக் கூடியதாக இருக்கிறது. பொதுவா சங்கீதம் என்றால் நான் ஓடிவிடுவேன்..! :(

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் வீணை செய்து அதனை நலங் கெடப்புழுதியினில் எறிதல் முறையோ என்று பாடத்தோன்றுகிறது முரளி.

இனிய சாரீரம் உங்கள் சகோதரிக்கு, உங்கள் சகோதரியை உள்ள திறமையை முடக்காமல் வெளியுலகத்திற்கு கொண்டு வரச் சொல்லுங்கள். வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் சின்ன வயசில வீனையும்,பியானோவும் படிக்க வெளிக்கிட்டு படிச்சது ஆனால் இரண்டுமே தரம் 1 வருமுதலே தடைப்பட்டு போய் விட்டது அப்பாவிற்கு கிழக்கு மாகணத்திற்கு வேலை மாற்ற உத்தரவு வந்ததும் போன புது இடத்தில் அம்மா உன்னோட மட்டும் என்னால திரியலாது படிப்பை மட்டும் கவனி என என் கலைத் தாகத்திற்கு தடை போட்டு விட்டார்[இன்னும் அம்மா மேல் கோபம் இருக்கு]...கடைசியில் படிப்பும் இல்லை கலையும் இல்லை :( வீனையை ஒழுங்காய் படித்திருந்தலாவது புலம் பெயர் நாட்டில் நல்லா உழைத்திருக்கலாம்.

  • தொடங்கியவர்

நன்றி சகாரா அக்கா. அக்காவுக்கு யாழில இணைச்சது தெரிஞ்சு இருக்காது. தொடுப்பு அனுப்பிறன் மின்னஞ்சலில கருத்துக்களை பார்க்க.

ரதி... ஒன்றுக்குமே வயசு எல்லை என்று இல்லை. இப்பவும் நீங்கள் மனம் வச்சால் கீபோர்ட் பழகுறது கஸ்டமான காரியம் இல்லை. மற்ற ஆக்களுக்கு பாடி, வாசிச்சு கச்சேரி செய்து காட்டாட்டிக்கும் எங்கட சந்தோசத்துக்கு - ஆத்மதிருப்திக்கு நாங்கள் கலைகளில ஈடுபடுறதுக்கு வயசு எல்லை இல்லை. பிரபலமான பல இசையமைப்பாளர்கள் எல்லாம் நடுத்தர வயசில முதன்முதலாக இசைக்கருவிகளை தொட்டு பழகி பின்னர் பிரபலமாய் வந்து இருக்கிறீனம். தமிழ் சினிமா இசையமைப்பாளர் விஜய் அன்ரனி கூட தான் சுமார் இருபது இருபத்து ஒரு வயசிலதான் கீபோர்ட் பழகினதாய் பேட்டியில கேட்ட ஞாபகமாய் இருக்கிது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.