Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவர்களிற்குள் பிளவு ! பிரபாகரனால் செய்ய முடியாததை மஹிந்த செய்துள்ளார்

Featured Replies

இலங்கையில் சிங்கள மக்கள், படையினர் மற்றும் மகா சங்கத்தினர் மத்தியில் அரசாங்கம் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. பிரபாகரனால் செய்ய முடியாததை அரசாங்கம் இன்று செய்துள்ளது என்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டைப் பாதுகாத்த ஜெனரல் சரத் பொன்சேகா தேசத் துரோகியாகி விட்டார். கே.பி. இன்று தேசப்பற்றாளர் ஆகிவிட்டார் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சுட்டிக் காட்டினார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்படவுள்ள 10 இலட்சம் மக்களின் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கையின் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று கொழும்பு ஜே.ஆர். ஜயவர்த்தன நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

"குற்றங்களை முன்வைத்தே எவரையாவது கைது செய்ய முடியும். இது தான் சட்டம். அரசியலமைப்பும் இதனையே வலியுறுத்துகிறது. ஆனால், இவையனைத்தையும் மீறி ஜெனரல் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார். இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கலாகும். இன்று அவரது மருமகனின் தாயாரைg கைது செய்துள்ளனர். எதிர்காலத்தில் இறந்து போன அவர்களது உறவினர்களின் புதை குழிகளையும் தோண்டினாலும் அது அதிர்ச்சிக்குரிய விடயமல்ல.

எமது நாட்டு அரசியல் வரலாற்றில் தேர்தலில் போட்டியிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.

இவை போன்ற சம்பவங்கள் மியான்மாரில் இடம்பெற்றன. இன்று எமது நாட்டிலும் நடைபெறுகிறது. நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்த்தோம். ஆனால், இன்று இனங்களிடையே அரசாங்கம் பிளவுகளை ஏற்படுத்தி வருகிறது.

முதன் முறையாக சிங்கள மக்களை, மகா சங்கத்தினரை, படையினரை அரசாங்கம் பிளவுபடுத்தியுள்ளது. தாய்நாட்டை பாதுகாத்தவரை தேசத் துரோகியாக முத்திரை குத்தி நாட்டை காட்டிக் கொடுத்த கே.பிக்கு தேசப்பற்றாளன் முத்திரையை அரசாங்கம் குத்தியுள்ளது.

நாட்டில் அனைவராலும் மதிக்கப்படும் மகா சங்கத்தினர் விமர்சிக்கப்படுகிறார்கள்; அச்சுறுத்தப்படுகிறார்கள். அந்தளவுக்கு ஒழுக்கம் சீர்குலைந்து போய்விட்டது.

ஜெனரல் பொன்சேகா நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து மக்களைப் பாதுகாத்தார். அவர் தேசிய வீரர். எனவே தேர்தலின் போது அவருக்கு வாக்களித்தோர், வாக்களிக்காதோர் அனைவரும் அவரின் விடுதலைக்கான மகஜரில் கையெழுத்திட வேண்டியது அவசியமாகும்.

இது ஜெனரல் பொன்சேகாவின் விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மட்டுமல்ல, நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்தி மனித உரிமைகளை பாதுகாப்பதற்குமான போராட்டமுமாகும்.

இந்த நாட்டை மியன்மாராக மாற்றுவதற்கு இடமளிக்க மாட்டோம். எனவே மக்கள் அனைவரும் சர்வாதிகாரத்திற்கு எதிராக அணி திரள வேண்டும்." இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சோமவன்ச அமரசிங்க

"ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு 10 லட்சம் கையெழுத்துக்கள் அல்ல, அதனையும் தாண்டி ஒரு கோடி கையெழுத்துக்களைப் பெற வேண்டும். அவரின் விடுதலைக்காக தேசிய, சர்வதேச ரீதியில் இன்று போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. இதனை மேலும் உத்வேகப்படுத்த வேண்டும்.

இந்த அரசாங்கத்திடம் அதிகாரம் இருக்கின்றது. ஆனால், புத்திசாலித்தனம் கிடையாது. அண்மையில் லங்கா பத்திரிகை சீல் வைக்கப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பால் சீல் உடைக்கப்பட்டது.

அதேபோன்று அதன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் சென்றார்கள். குற்றமற்றவர் என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இத் தீர்ப்பு வெளியாகி அரை மணித்தியாலத்தில் ஊடகவியலாளர்களைக் கைது செய்யும்போது தன்னிடம் அறிவிக்குமாறு ஜனாதிபதி அறிக்கை வெளியிட்டார். இவ்வாறு அரசாங்கம் தோல்விகளைச் சந்தித்து வருகிறது.

சர்வதேச ரீதியாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் ஆளாகியுள்ளது. இதனால் ஜி.எஸ்.பி. வரிச் சலுகையும் பறிபோயுள்ளது."

திஸ்ஸ அத்தநாயக்க

"ஜெனரல் பொன்சேகாவை எதுவிதமான நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும். அரசியலமைப்புக்கு விரோதமான அரசின் நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும்."

இந்நிகழ்வில் ஐ.தே.க.வின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, தவிசாளர் ருக்ஷன் சேனாநாயக்க, பிரதித் தவிசாளர் காமினி ஜயவிக்கிரம பெரேரா மற்றும் ஆர். யோகராஜன், எம். சச்சிதானந்தன், மேல் மகாண சபை உறுப்பினர்களான முஸம்மில், முஜிபுர் ரஹ்மான், எஸ். சதாசிவம் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், ஆதரவாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்...

http://www.eelanatham.net/story/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜபக்சே போருக்கு பிறகு முதல் பயணம் செய்த நாடு மியன்மார். இன்னுமொரு மியன்மாரை சீனா உருவாக்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

"ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு 10 லட்சம் கையெழுத்துக்கள் அல்ல, அதனையும் தாண்டி ஒரு கோடி கையெழுத்துக்களைப் பெற வேண்டும். அவரின் விடுதலைக்காக தேசிய, சர்வதேச ரீதியில் இன்று போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. இதனை மேலும் உத்வேகப்படுத்த வேண்டும்.

உப்பிடித்தான் நாங்களும் பல கையெழுத்துக்களைப் பெற்று பலருக்கு அனுப்பி இருந்தோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ரனிலும்,சோமவன்சவும் சரத்துடன் இருக்க ஆசைப்படுகிறார்கள். :( சரத் வெளியில் வர சந்தர்ப்பம் இருக்குமென நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவர்களுக்குள் பிளவிற்கு வெற்றி தலைக்கு ஏறியதும், பொருளாதார நெருக்கடியுமே காரணம். இந்த இரண்டுக்கும் காரணம் பிரபாகரனே!

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவர் சிங்களமக்களைப் பிளவுபடுத்த விரும்பினார் என்பது சுத்தப் பொய்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவர ஒண்டாக்கினது தலைவர்தான் , இப்ப தலைவர் இல்லையெண்டு சொல்லுறதால புறிஞ்சு நிக்கிறாங்கள். தலைவர் வெளியில வர ஒண்டா சேந்திடுவாங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர ஒண்டாக்கினது தலைவர்தான் , இப்ப தலைவர் இல்லையெண்டு சொல்லுறதால புறிஞ்சு நிக்கிறாங்கள். தலைவர் வெளியில வர ஒண்டா சேந்திடுவாங்கள். :)

எதுக்காக சொல்லியிருந்தாலும்

தங்கள் வாக்கு பலிக்கணும்

சிங்களவர ஒண்டாக்கினது தலைவர்தான் , இப்ப தலைவர் இல்லையெண்டு சொல்லுறதால புறிஞ்சு நிக்கிறாங்கள். தலைவர் வெளியில வர ஒண்டா சேந்திடுவாங்கள். :)

பட்டம் தாறாங்கள் எண்டு ஒரு பக்கம் கத்தி கொண்டு திரியும் நீங்கள், பிரபாகரனை சொறியிறதிலை செலவளிக்கிறீயளே... உங்களுக்கு ஒரு சட்டம் மற்ரவைக்கு வேறியோ...??

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவர ஒண்டாக்கினது தலைவர்தான் , இப்ப தலைவர் இல்லையெண்டு சொல்லுறதால புறிஞ்சு நிக்கிறாங்கள். தலைவர் வெளியில வர ஒண்டா சேந்திடுவாங்கள். :wub:

யாரை சொல்லுறீங்க இது ஒட்டு குழுக்களுக்கும் பொருந்தும்தானே :)

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடித்தான் நாங்களும் பல கையெழுத்துக்களைப் பெற்று பலருக்கு அனுப்பி இருந்தோம்.

கையெழுத்தை வாங்கிய இடங்களில் இருந்து இப்போதைக்கு ஈமெயில்கள் மட்டும்தான் வந்துகொண்டிருக்கு..! :)

சிங்களவன் எங்களை அடிக்கவேன்டாலும் ஒற்றுமையா இருந்தான்... நாங்கள் அடிவாங்கும்போது கூட ஒற்றுமையா இருக்கவில்லையே?

சிங்களவன் பிரிஞ்சாலும் கவலைப்படும் நிலையல் இல்லை.. ஆனால் நாங்கள் சிதைவடைந்து கொண்டிருக்கிறோம் அதுக்குள்ள சிங்களவனைப் பார்த்து எங்களுக்கு நக்கல்.

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவர் சிங்களமக்களைப் பிளவுபடுத்த விரும்பினார் என்பது சுத்தப் பொய்.

எதிரியை பிளவுபடுத்த விரும்பாத தளபதியின் தலைமையிலான தற்காப்பு போராட்டம் தோல்வியடைந்தது எதிர்பார்த்திருக்க பட வேண்டியதுதான். :(

  • கருத்துக்கள உறவுகள்

கையெழுத்தை வாங்கிய இடங்களில் இருந்து இப்போதைக்கு ஈமெயில்கள் மட்டும்தான் வந்துகொண்டிருக்கு..! :)

:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.