Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தவம் வேண்டும்

Featured Replies

அன்பு பெருக்கும் கனிவு வேண்டும்,

துன்பம் உதிர்க்கும் உறவு வேண்டும்,

ஊக்கம் கொடுக்கும் உளம் வேண்டும்,

ஏக்கம் தணிக்கும் பரிவு வேண்டும்,

வீழ்வு தடுக்கும் உறுதி வேண்டும்,

தாழ்வு போக்கும் விரிவு வேண்டும்,

சஞ்சலம் நீக்கும் தெளிவு வேண்டும்,

அஞ்சாமன மாக்கும் பக்தி வேண்டும்,

வேற்றுமை விலக்கும் வலிவு வேண்டும்,

ஒற்றுமை படைக்கும் புத்தி வேண்டும்,

வாழ்வு பெருக்கும் சக்தி வேண்டும்,

ஈழம் அமைக்கும் பலம் வேண்டும்!

தமிழ் ஈழம் அமைக்கும் தவம் வேண்டும்!!

- சயனி

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முதற்கவிதைக்கு........ என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.....நீங்கள் வேண்டுவதெல்லாம்

உங்களுக்கும கிடைக்கக் வேண்டும்.

  • தொடங்கியவர்

நிலாமதி அக்காவின் ஊக்கத்துக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவரவாகுக..

நல்ல கவிதை

ஆனால் தமிழீழம் அடைவதற்கு தவம் இருக்கவேண் டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை

அது எமது தேவை

எனவே நாம் அதற்காகசெயற்படணும்

தமிழீழம் அமைக்கும் செயல் வேண்டும் என்று எழுதினால் நன்றாக இருக்கும்.

  • தொடங்கியவர்

நல்லவரவாகுக..

நல்ல கவிதை

ஆனால் தமிழீழம் அடைவதற்கு தவம் இருக்கவேண் டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை

அது எமது தேவை

எனவே நாம் அதற்காகசெயற்படணும்

தமிழீழம் அமைக்கும் செயல் வேண்டும் என்று எழுதினால் நன்றாக இருக்கும்.

கவிதை எழுத ஆசை எனக்கு இருந்தாலும் படிப்பில் கூட கவனம் என்றபடியால் நடக்கவில்லை. இப்ப கொஞ்ச நேரம் கிடைப்பதால் கிறுக்கிப் பார்ப்பேன். ஒன்றை உருப்படியா செய்வம் என்று வெளிக்கிட்டு எழுதிய முதல் முயற்சி தான்.

இதை கவிதை என்று சொல்லலாமோ? எனக்கு தெரியவில்லை. எழுதிப்போட்டு பார்த்தால் எனக்கும் ஒருமாதிரி இருந்துது. ஆனால் என் மனதிலிருந்து வந்த எண்ணங்களை அப்படியே போட்டுவிட்டேன். கருத்து நல்லதாக எனக்கு பட்டுது .

தவறுகளை சுட்டி காட்டியதுக்கு நன்றி விசு அண்ணா. தொடர்ந்தும் உங்களைப் போன்ற பெரியவர்கள் தவறுகளை சுட்டிக்காட்டினால் நல்லது. மற்றது "தவம்" என்று நான் கருதினது "கண்ணும் கருத்துமான கடும் முயற்சியை" அண்ணா.

மீண்டும் நன்றிகள் விசு அண்ணா.

முன்னம் ஓர் பச்சை புள்ளி போட்டு இருந்தன். வேற எழுதுறதுக்கு ஒன்றும் தோன்ற இல்லை. தொடர்ந்து எழுத வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

இது உங்களது முதல் படைப்பா...வாழ்த்துகள்...தொட‌ர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை எழுத ஆசை எனக்கு இருந்தாலும் படிப்பில் கூட கவனம் என்றபடியால் நடக்கவில்லை. இப்ப கொஞ்ச நேரம் கிடைப்பதால் கிறுக்கிப் பார்ப்பேன். ஒன்றை உருப்படியா செய்வம் என்று வெளிக்கிட்டு எழுதிய முதல் முயற்சி தான்.

இதை கவிதை என்று சொல்லலாமோ? எனக்கு தெரியவில்லை. எழுதிப்போட்டு பார்த்தால் எனக்கும் ஒருமாதிரி இருந்துது. ஆனால் என் மனதிலிருந்து வந்த எண்ணங்களை அப்படியே போட்டுவிட்டேன். கருத்து நல்லதாக எனக்கு பட்டுது .

தங்களுக்கு கருத்து எழுதும்போது தாங்கள் எமது 3வது தலைமுறையைச்சார்ந்தவர் என்று நான் நினைத்து எழுதவில்லை.

தற்போது அதுவும் எமது போராட்ட வடிவம் 3வது தலைமுறையாலும் சரியாக எழுதப்படுவதை காணும்போது மிகமிக சந்தோசம்

எம்போன்றோரின் வாழ்த்துக்களும் ஊக்குவிப்புக்களும் என்றும் இருக்கும் தங்களுக்கு...

ஏனெனில் ஏமாற்றப்பட்டு, தோற்கடிக்கப்பட்ட தலைமுறையைச்சார்ந்தவன் யான்.

தங்கள் ஒவ்வொரு காலடிக்கும் ஒவ்வொரு எழுத்துக்கும் எமது தலைமுறை தோள்கொடுக்கும்.

தொடரட்டும் உயரட்டும் படிப்பும் எழுத்தும் .

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

வேற்றுமை விலக்கும் வலிவு வேண்டும்,

ஒற்றுமை படைக்கும் புத்தி வேண்டும்

greendot-logo.gif

,

வாழ்வு பெருக்கும் சக்தி வேண்டும்,

ஈழம் அமைக்கும் பலம் வேண்டும்!

தமிழ் ஈழம் அமைக்கும் தவம் வேண்டும்!!

- சயனி

ஜனநாயக முறையில் ஈழம் அமைக்கும் தவம் வேண்டும்

வாழ்த்துகள் சயனி தொடரட்டும் உங்கள் படைப்புகள்

  • கருத்துக்கள உறவுகள்

இது உங்களது முதல் ஆக்கமா? அல்லது தவறுகள் இருந்தால் மற்றவர்கள் உங்களை இலகுவில் மன்னித்து விடுவார்கள் என்ற தந்திரமா??

எதுவாக இருப்பினும் அழகான வரிகள், பாராட்டுக்கள்!!!

"ஊக்கம் கொடுக்கும் உளம் வேண்டும்,

ஏக்கம் தணிக்கும் பரிவு வேண்டும்,

வீழ்வு தடுக்கும் உறுதி வேண்டும்,

தாழ்வு போக்கும் விரிவு வேண்டும், "

முக்கியமாக இந்தவரிகள் சிந்திக்க வைக்கின்றன...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

" முதல் படைப்பா? ; என்று கேட்கும் வண்ணம் அழகாகச்செதுக்கி இருக்கின்றீர்கள்.

தன்னம்பிக்கை சார்ந்த கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

வாழ்த்துகள். இதைப்போலவே தொடர்க!!!

'காணி நிலம் வேண்டும்" என்கின்ற பாரதியின் கவிதையையும்...'சத்தம் இல்லாத தனிமை வேண்டும் என்கின்ற வைரமுத்துவின் வரிகளையும் நினைவூட்டின!

நன்றி.

இது உங்களது முதல் ஆக்கமா? அல்லது தவறுகள் இருந்தால் மற்றவர்கள் உங்களை இலகுவில் மன்னித்து விடுவார்கள் என்ற தந்திரமா??எதுவாக இருப்பினும் அழகான வரிகள், பாராட்டுக்கள்!!!<<<<<<<<<<<

எப்படியண்ணா? உங்களுக்கு மாத்திரம் இப்படியெல்லாம் தோணுது?:D)))

[

  • கருத்துக்கள உறவுகள்

தங்கை என்ன கிண்டலா??? உதுதானே இப்ப நடைமுறையாக இருக்கு....மனதிலை உள்ளதை அப்படியே கொட்டிட்டன் அது தப்பா???

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை, வாழ்த்துக்கள்,

தமிழீழம் அமைக்கத் தவம்வேண்டும்.

  • தொடங்கியவர்

முன்னம் ஓர் பச்சை புள்ளி போட்டு இருந்தன். வேற எழுதுறதுக்கு ஒன்றும் தோன்ற இல்லை. தொடர்ந்து எழுத வாழ்த்துகள்!

நன்றிகள்.

Edited by Sayani

  • தொடங்கியவர்

எம் உணர்வுகள் எப்போதும் மழுங்காது.

மீண்டும் நன்றிகள் விசு அண்ணா.

சயனி..உங்கள் கவிதை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கின்றது. இன்னும் பல கவிகள் படைக்க வாழ்த்துக்கள்...!

  • தொடங்கியவர்

நன்றிகள் நுணாவிலன் அண்ணா.

ஜனநாயக முறையில் ஈழம் அமைக்கும் தவம் வேண்டும்

வாழ்த்துகள் சயனி தொடரட்டும் உங்கள் படைப்புகள்

நன்றிகள்.

ஜனநாயகம் என்றால் என்ன ஜில் மாமா?

  • தொடங்கியவர்

தமிழ்த்தங்கை - தன்னம்பிக்கை தரும் உங்களது வாழ்த்துக்களுக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்.

  • தொடங்கியவர்

இது உங்களது முதல் ஆக்கமா? அல்லது தவறுகள் இருந்தால் மற்றவர்கள் உங்களை இலகுவில் மன்னித்து விடுவார்கள் என்ற தந்திரமா??

எதுவாக இருப்பினும் அழகான வரிகள், பாராட்டுக்கள்!!!

"ஊக்கம் கொடுக்கும் உளம் வேண்டும்,

ஏக்கம் தணிக்கும் பரிவு வேண்டும்,

வீழ்வு தடுக்கும் உறுதி வேண்டும்,

தாழ்வு போக்கும் விரிவு வேண்டும், "

முக்கியமாக இந்தவரிகள் சிந்திக்க வைக்கின்றன...

கிண்டலா? அயல் கிராமத்து வல்வை லிங்கம் அண்ணா.

நண்பிகள் கவிதைகள் எழுதும்போது ஆலோசனைகள் சொல்லியிருப்பேன். சில தடவைகள் ஓரிரு வரிகள் அரைகுறையாக கிறுக்கி பார்த்திருப்பேன். ஆனால் ஏதாவது எழுதி பகிரவேண்டும் என்று எழுதியது இதுதான் முதல் தடவை. எழுதிய உடன் யாழில் சேர்த்து விட்டேன். போதுமா?

நன்றிகள் வல்வை லிங்கம் அண்ணா.

  • தொடங்கியவர்

நன்றிகள் Elugnajiru அண்ணா.

ஈழமகள் அக்கா! வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

நன்றிகள்.

ஜனநாயகம் என்றால் என்ன ஜில் மாமா?

ஆயுதமில்லாம் அரசியல் கதைப்பது மருமகள்

  • தொடங்கியவர்

ஆயுதமில்லாம் அரசியல் கதைப்பது மருமகள்

அப்பிடி என்றால் இந்த உலகில் எங்குமே இல்லாத ஜனநாயகத்தை பற்றி சொல்றியளோ?

  • கருத்துக்கள உறவுகள்

தங்கை சஜனி ஒரு முடிவோடுதான் வந்துள்ளீர்கள்!!!

  • தொடங்கியவர்

தங்கை சஜனி ஒரு முடிவோடுதான் வந்துள்ளீர்கள்!!!

என்ன சொல்கிறீர்கள் லிங்கம் அண்ணா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.