Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கடற்படை அட்டூழியம்: கலைஞர்(முதல் முறையாக.? ) கண்டனம்

Featured Replies

இலங்கை கடற்படை அட்டூழியம்: கலைஞர் கண்டனம்

நேற்று இரவு கடலில் மீன் பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மாவட்டம், வெல்லப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’7-7-2010 பிற்பகல் 12 மணி அளவில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு காவல் சரகத்தைச் சேர்ந்த வெல்லப்பள்ளம் கிராமம், மீனவர் காலனியைச் சேர்ந்த செல்லப்பன் உள்ளிட்ட நான்கு பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் இருபது கடல் மைல் தொலைவில் இரவு பத்து மணி அளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது,

அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைப் பயங்கரமாக தாக்கியதாகவும், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும், வலைகளையும் கடலிலே தூக்கி எறிந்ததாகவும், அந்தத் தாக்குதலில் செல்லப்பன் என்ற மீனவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், வேறு சில மீனவர்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாகவும் செய்தி வந்துள்ளது.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை இவ்வாறு கொடுமை புரிவதென்பது இது முதல் முறையல்ல. தொடர்ந்து நடைபெறும் தொடர்கதையாக உள்ளது.

தமிழக மீனவர்களின் இந்தத் துயர நிலை குறித்து - தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கும், பிரதமருக்கும், தொடர்புடைய அமைச்சர்களுக்கும் இதுவரை பல முறை நேரிலும், கடிதங்கள் மூலமும் கோரிக்கைகளை விடுத்தும் தமிழக மீனவர்களின் அவலம் நின்ற பாடில்லை.

தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறை சித்ரவதைக்கும் கொலைக்கும் ஆளாகும்போது - மத்திய அரசிடம் நாம் முறையிடுவதும், அவர்களும் நம்மைச் சமாதானப்படுத்துகின்ற முயற்சியிலே ஒரு கடிதமோ, வேண்டுகோளோ இலங்கை அரசுக்கும் விடுப்பதும் - ஆனால் அதற்குப் பிறகு சில நாட்களில் இப்படிப்பட்ட கொடுமை நடைபெறுவதும் மிகவும் கண்டிக்கத் தக்க ஒன்றாகும்.

இந்திய இலங்கை அரசுகளுக்கிடையே பேச்சுவார்த்தை அண்மையில் நடைபெற்று ஒப்பந்தம் போடப்பட்ட நேரத்திலே கூட, தமிழக மீனவர்களின் இந்நிலை குறித்து விரிவாகப் பேசப்பட்டு - தமிழக மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்தால் கூட, அவர்களை தாக்குவதோ, கொலை செய்வதோ கூடாது என்றும், முறைப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர இது போன்ற செயல்களில் இலங்கைக் கடற்படையினர் ஈடுபடக் கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு மாறாக, தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் இக்கொடுமையைக் களைய மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு இது போன்ற செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க - கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதோடு இந்த நிகழ்ச்சி பற்றிய உண்மை விபரமும் தமிழக மக்களுக்குத் தெரியப்படுத்தியாக வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=35486

சனியன் ஏதவது இப்ப மாறி இருக்குதோ??

செம்மறி மானாட்டுக்கு பிறகு ஞானம் பிறந்திருக்கிறது போலக்டக்குது..

இதுவும் தந்தி தானோ அலது நேரடியாக விடப்பட்ட கண்டன அறிக்கையோ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை கடற்படை அட்டூழியம்: கலை கண்டனம்

மற்ரப்பக்கம் ஒராள் ஈழத்தமிழனைவைச்சு அறிக்கையறிக்கயாய் விட சிங்கனுக்கு கொண்டெழுப்புது

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குப் போய் ஏன் தமிழனத்தலைவர் டாக்டர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி அவர்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டும். பேசாமல் 2 மணித்தியாலம் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கலாம்தானே. முன்பு 2 மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்து ஈழத்தமிழர்களை கலைஞர் காப்பாற்றினார் என்று செய்தி வெளியிட்டது சன், கலைஞர் தொலைக்காட்சி. இத்தொலைக்காட்சிகளை காசு கொடுத்து பார்க்கும் மானங்கேட்ட சூடு சுறணையற்ற ஈழத்தமிழர்கள் இன்னும் புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கிறார்கள்.

கொழும்பிலை மழை பெய்தால் டில்லியில் குடை பிடிப்பார்களா? :D

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குப் போய் ஏன் தமிழனத்தலைவர் டாக்டர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி அவர்கள் கண்டனம் தெரிவிக்க வேண்டும். பேசாமல் 2 மணித்தியாலம் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கலாம்தானே. முன்பு 2 மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்து ஈழத்தமிழர்களை கலைஞர் காப்பாற்றினார் என்று செய்தி வெளியிட்டது சன், கலைஞர் தொலைக்காட்சி. இத்தொலைக்காட்சிகளை காசு கொடுத்து பார்க்கும் மானங்கேட்ட சூடு சுறணையற்ற ஈழத்தமிழர்கள் இன்னும் புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கிறார்கள்.

பார்க்கும் ஒரு கூட்டம் இருப்பது என்னவோ உண்மைதான்..........

ஆனால் தமிழர்கள் சூடு சுறணை அற்றவர்கள் என்பது கண்டனத்துக்கு உரியது!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்படை அட்டூழியம்: கலைஞர் கண்டனம்

------

karunanidhi.jpgsoundarya-Rajinikanth-Engagement-Photos-01.jpg

நான் நேரம் மினக்கெட்டு எண்ணிப்பார்த்ததில்.......

கலைஞர் இதுவரை 1999 கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இத்துடன் 2000 மாவது கண்டனம் வெளியிட்டதற்காக...... நடிகைகளை வைத்து ஒரு பாராட்டு விழா நடாத்த வேண்டும்.

.

தமிழகமீனவர்களும்.. இலங்கை கடற்படையும்.. வன்முறையை கைவிட்டு சமாதான முரையில் இதற்க்கு தீர்வு காணவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

.

cartoon-3.jpg

.

இப்பத்தான் கலைஞர் ஐயா 'மானாட மார்பாட' பார்த்து முடித்து எழும்பியிருக்கார் போல.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு எண்ட மாதிரிக் கிழவனுக்கு அடுத்த மா நில சபைத் தேர்தல் ஞாபகம் வந்துட்டுது.

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் கண்டனம் மட்டுமல்ல.. இரண்டு கடிதமும் எழுதி இருக்கிறார். ஆனால் அந்தப் பொம்பிள ஜெயலலிதா ஏதுவுமே நடக்காதது போல குறட்டை விடுறா பாருங்க.. அவாவோட ஒப்பிடேக்க.. ஆகக் குறைஞ்சது இந்த மனிசன் கடிதமாவது எழுதுதே என்று திருப்திப்பட்டுக்க வேண்டியதுதான். :D:(

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அதற்கு மாறாக, தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் இக்கொடுமையைக் களைய மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு இது போன்ற செயல்கள் இனியும் நடைபெறாமல் இருக்க - கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதோடு இந்த நிகழ்ச்சி பற்றிய உண்மை விபரமும் தமிழக மக்களுக்குத் தெரியப்படுத்தியாக வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

எந்த கண்டனம் தெரிவித்தாலும் சிங்களவன் அடித்து கொண்டு தான் இருப்பான்.சரத் பொன்சேகா சொன்னது தமிழக அரசியல்வாதிகள் எவ்வளவு கேணையர்கள் என்பது தொடர்ந்து நிரூபணம் ஆகி கொண்டு இருக்கிறது.

எந்த கண்டனம் தெரிவித்தாலும் சிங்களவன் அடித்து கொண்டு தான் இருப்பான்.சரத் பொன்சேகா சொன்னது தமிழக அரசியல்வாதிகள் எவ்வளவு கேணையர்கள் என்பது தொடர்ந்து நிரூபணம் ஆகி கொண்டு இருக்கிறது.

இலங்கை கடற்படைக்கு எச்சரிக்கை

http://www.youtube.com/watch?v=DfRdXzHSqxc

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.