Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி!

பெங்களூர்: பெங்களூர் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து செக்ஸ் வழக்கில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா மீண்டும் சொற்பொழிவாற்றினார். அவரிடம் நடிகை மாளவிகா காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று பயபக்தியுடன் வணங்கினார்.

நடிகை ரஞ்சிதா, நித்தியானந்தாவுக்கு செய்த 'சேவை'க் காட்சிகள் வீடியோ மூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரும் தலைமறைவானார்கள். இதில்நித்தியானந்தாவை கர்நாடக போலீஸார் இமாச்சலப் பிரதேசத்தில் வைத்துப் பிடித்து பெங்களூர் கொண்டு வந்து சிறையில் அடைத்தனர். ரஞ்சிதா இன்னும் தலைமறைவாகவே இருக்கிறார்.

சிறையில் அடைக்கப்பட்ட நித்தியானந்தா பின்னர் ஜாமீனில் விடுதலையானார். அவர் போதனை செய்யக்கூடாது என்பதுஉள்பட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இந்த நிபந்தனைகளை கர்நாடக உயர்நீதிமன்றம் சமீபத்தில் தளர்த்தியது. இதையடுத்து மீண்டும் போதனைப் பாதைக்குத் திரும்பி விட்டார் நித்தியானந்தா.

கிட்டத்தட்ட 80 நாட்களுக்குப் பின்னர் முதல் முறையாகஅவர் போதனையை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றுமாலை பிடுதியில் உள்ள தனது ஆசிரமத்தில் சிஷ்யர்கள், பக்தர்களிடையே நி்த்தியானந்தா பேசினார்.

தனது செக்ஸ் மோசடி தொடர்பான செய்திகள் குறித்தும் கோபத்துடன் குறிப்பிட்டார் நித்தியானந்தா.

அப்போது அவர் பேசுகையில், இணையதள வரலாற்றிலேயே, பெரும் நெரிசல் ஏற்பட்டு இணையதள இணைப்புகள் ஸ்தம்பித்தது வரலாற்றில் இரண்டு முறைதான். முதலில் மைக்கேல் ஜாக்சன் மறைந்தபோது. இரண்டாவது நித்தியானந்தா சுவாமிகள் விவகாரத்தில்.

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. மைக்கேல் ஜாக்சன் ஆடினார், பாடினார், உலக மக்களை கேளிக்கைப்படுத்தினார். இன்னும் என்னவெல்லாமோ செய்தார். ஆனால் நான் என்ன செய்தேன். இப்படிப்பட்ட களேபரத்திற்கு நான் பொருத்தமானவன் இல்லையே? என்ற நித்தியானந்தா தனது சிறை அனுபவத்தையும் விவரிக்கத் தவறவில்லை.

சிறைக்குள் போய் ஞானோதயம் பெறுவது என்பது பெருமைக்குரிய விஷயமல்ல. அங்கு போய்தான் ஞானோதயம் பெற வேண்டும் என்று இல்லை. அங்கு போகாமலேயே ஞானோதயம் பெறமுடியும். அதை நான் உங்களுக்கு கற்றுத் தருகிறேன்.

இந்த நாட்களில் எனக்கு என்னவெல்லாமோ பட்டம் கொடுத்துள்ளனர். அவற்றுக்கும் எனக்கும் எந்தத்தொடர்பும் இல்லை. சிலர் என்னை நித்தி என்று கூட சுருக்கி கூப்பிட ஆரம்பித்து விட்டனர். அதுகுறித்தும் நான் கவலைப்படவில்லை.

எனது பக்தர்கள் அகிம்சை வழியில் செயல்பட்டதால் தான் என்னால் வெற்றி பெற முடிந்தது. அகிம்சை வழியை பின்பற்றினால் உங்களை எதுவும் செய்ய முடியாது.

ஒருவருக்கு நீதி சொல்லும் அதிகாரம் இருந்தாலும் கடவுளின் தீர்ப்பே இறுதியானது. கடவுளின் முடிவுக்கு யாரும் தீர்ப்பு சொல்ல முடியாது.

நீதிபதிகள் கடவுளாக முடியாது. நீ துன்பப்படும் போது உடனே மற்றவர்கனை எதிரியாக பார்க்க கூடாது. பகைமையில் இருந்து சுதந்திரம் பெறுவதே உயர்ந்த சுதந்திரம், கண்ணுக்கு கண்ணை எடுக்க வேண்டும் என்று விரும்பினால் ஒட்டு மொத்த உலகமே குருடாகி விடும் துன்பம் வாழ்க்கையில் வரும் போது அதை வெற்றிகரமாக எதிர் கொள்ள வேண்டும் என்றார் நித்தியானந்தா.

ஃப்ரீடம் என்ற தலைப்பில் நேற்று பேசினார் நித்தியானந்தா. நேற்று நடந்த இந்த ஆன்மீக சொற்பொழிவைக் கேட்க பலரும் வந்து குவிந்திருந்தனர். அவர்களில் நடிகை மாளவிகாவும் ஒருவர். நித்தியானந்தா பேசி முடித்ததும் அவரது காலில் விழுந்து பயபக்தியுடன் ஆசி பெற்றார் மாளவிகா.

முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியோ, சங்கோஜமோ, வெட்கமோ, கூச்சமோ இல்லாமல், படு இயல்பாக காணப்பட்டார் நித்தியானந்தா.

.

  • கருத்துக்கள உறவுகள்

.

மீண்டும் நித்தியானந்தா சொற்பொழிவு-நடிகை மாளவிகா ஆசி!

முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியோ, சங்கோஜமோ, வெட்கமோ, கூச்சமோ இல்லாமல், படு இயல்பாக காணப்பட்டார் நித்தியானந்தா.

.

அவருக்கு ஏன் வெட்கம்,கூச்சம்,பயம் இருக்க வேண்டும் போய் அவரின் பேச்சை கேட்ட ஆட்களூக்கு தான் அது எல்லாம் இருக்க வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப மாளவிகாவின் விடீயோவும் விரைவில் றிலீஸ் ஆகும் எண்டு சொல்லுறீங்க. என்னதான் பாதுகாப்பு ஏற்பாடு செய்தாலும், வல்லவனுக்கு வல்லவன் சாமியாற்ற மடத்தில இருப்பார்தானே :lol::D:D

தமிழ் சினிமாவில் மாளவிக்க ஓரளவு ஒழுங்காக நடித்தாலும், தெலுங்கில் ஓ.. கோ... என்று கொடிகட்டிப் பறந்த ஒரு நடிகை என்று நினைக்கிறன்... சுமேஷ் மேனன்னைத் திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கும் தாயான ஒரு நடிகை... போலிச் சாமியார் நித்தியானந்தாவை ஏன் சந்தித்து இருப்பார்??? உண்மையில் சொற்பொழிவு கேட்கத் தானாக்கும்.... :lol::D:D:(

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூர் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து செக்ஸ் வழக்கில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா மீண்டும் சொற்பொழிவாற்றினார். அவரிடம் நடிகை மாளவிகா காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று பயபக்தியுடன் வணங்கினார்

ஒரு வாரிசு உருவாகின்றது

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

valaimanaiblogspottamil.jpg

valaimanaiblogspottamil.jpg

நன்றி வலைமண்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இருந்தாலும் மாளவிகாவை நினைச்சால் கவலையா இருக்கு :lol::lol:^_^ உந்த கறுவாபயலுக்கு மாளவிகா அதிகம் :o:):(

மீனம்மா...... அதிகாலையிலும் அந்தி வேளையிலும் உந்தன் ஞாபகம்,,,,,,,,,,,,,,, :D:D:(

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

நித்தி கொஞ்ச நடிகைகளையாவது விட்டுவைராசா......நாங்களும் கனவுகாணத்தான்

இந்த செய்திக்கு கருத்து எழுதும் அனைவருக்கும் பொறாமை அதிகம் இருப்பது தெரிகிறது .

இப்படிக்கு

நித்தியானந்தா சிஷ்யன்

சும்மா இருங்கோ நித்தி என்னை மாதிரி நல்ல கறுப்பு. :lol:

Edited by கறுவல்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கருப்பு ஆக்களுக்கு உடம்பெல்லாம் மச்சம் எண்டுறீங்கள்

இது நடிகை மாளவிகா இல்லை..சின்னத்திரை நடிகை மாளவிகா.என்று எங்கோ படிச்சன்......

:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது நடிகை மாளவிகா இல்லை..சின்னத்திரை நடிகை மாளவிகா.என்று எங்கோ படிச்சன்......

:)

சின்னத்திரை மாளவிகாவோ....., பெரிய திரை மாளவிகாவோ எவராக இருந்தாலும்......

நித்தியானந்தருக்கு பொறுத்த இடத்திலை மச்சம் இருந்து, நல்லாய் வேலை செய்யுது.

கீழ்த்தரமானவர்கள் நிறைந்த இந்தியாவில் நித்யானந்தரின் பக்தர்கள் இனி அதிகரிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவையளை திருத்த ஏலாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.