Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் மீது திடீரென அக்கறை காட்டும் கருணாஸ். பின்னணியில் யார்?

Featured Replies

முதலில் மகனுக்கு முடியெடுக்க இலங்கை செல்வதாக கூறிய கருணாஸ், தற்போது இலங்கையில் நடக்க இருக்கும் வானொலியின் ஆண்டுவிழாவில் கலந்து கொள்வதற்காக இலங்கை செல்வதாக முன்னுக்குப் பின் முரணாக கூறுகிறார். நாம் தமிழர் இயக்கத்தின் மீது பழி சொல்வதற்காக யாரோ பின்னணியில் இருந்து பகடைக்காயாக கருணாஸை இயக்குகிறார்கள் என்று அவரது நடவடிக்கை சந்தேகிக்க வைக்கிறது.

முன்னதாக கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது மகனுக்கு முடி எடுக்க இலங்கையில் உள்ள முருகன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தேன். இன்று காலை விமானத்தில் டிக்கெட்டும் எடுத்து விட்டேன்.

நாம் தமிழர் இயக்கம் என்ற பெயரில் நான் இலங்கை செல்வதை கண்டித்து எனது செல்போனுக்கு 150-க்கும் மேற்பட்ட எஸ்.எம்.எஸ்.க்கள் வந்துள்ளன. சிங்களன் நடத்தும் வானொலி நிகழ்ச்சி யில் ரூ.10 லட்சம் பணத்துக்காக குடும்பத்தோடு செல்கிறார். அம்பாசமுத்திரம் அம்பானி இலங்கை செல்லும் இந்த துரோகிக்கு வழி அனுப்புங்கள் என்று எஸ்.எம்.எஸ்.சில் குறிப்பிடப்பட்டு உள்ளது. போன் செய்தும் மிரட்டுகிறார்கள்.

இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். 1985-ம் ஆண்டிலேயே கொடி விற்று ஈழத்தமிழர்களுக்காக பணம் கொடுத்தவன் நான். இலங்கை அகதி முகாமில் உள்ள25 மாணவர்களை படிக்க வைக்கிறேன்.

என்னை இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது. என் சம்பளத்தில் 40 சதவீதம் தொகையை ஈழத் தமிழர்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளேன். நான் நிச்சயம் இலங்கை செல்வேன்.

இவ்வாறு கருணாஸ் கூறினார்.

நன்றி:

http://www.thedipaar.com/news/news.php?id=16342

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=KpWCHk1d6Ig

காணொளியை பார்த்தேன் நண்பரே அவரின் பேச்சு முன்னுக்கு பின் முரணாக உள்ளது...முதலில் முருகக் கோயிலில் மகனுக்கு மொட்டையடிக்க.. பின்னர்... அதை சாக்கிட்டு இதுவா இதை சாக்கிட்டு அதுவா? இவருடைய பூர்வீகமும் இலங்கை என்று முன்பு ஏதோ ஒரு மேடையில் கூறினார்.. ஆனாலும் தினமலம் நன்றாகவே கேப்பில் கிடா வெட்டுகிறார்கள்... எனக்கென்னவோ இந்த கருணா என்று ஆரம்பிக்கும் பெயர் எதுவும் தமிழில் சரியில்லை என்றே தோன்றுகிறது... அந்த பெயரை புறக்கணித்தால் நன்று.. இது தொடர்பாக புதிய இடுகை இணைத்துள்ளேன்...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=73682

நன்றி...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பில் தொடங்கப்பட்ட தகவல் தொங்கியே நிற்கிறது

ஈழத்தமிழர் மீது திடீரென அக்கறை காட்டும் கருணாஸ். பின்னணியில் யார்?

விளக்கம் தேவை

இல்லாது விடில் இதுபோன்ற தலைப்புகளை இடுபவர்களை விட கருணாஸ் மேல்......

  • கருத்துக்கள உறவுகள்

இது நாம் தமிழர் இயக்கத்தினர் மீது கறை பூசி அவர்களை தனிமைப்படுத்த மேற்கொள்ளப்பட்டிருக்கும் கருணாநிதியின் நாசகார வேலை. இதன் பின்னணியில் கருணாநிதிக்கு வால்பிடிக்கும் சில திரையுலகத்தினரும் இருக்கலாம்

வெறும் எஸ் எம் எஸ் க்களின் அடிப்படையில் அதை நாம் தமிழர் அமைப்பினர் தான் அனுப்பு கின்றனர் என்பதை கருணாஸ் எப்படி உறுதி செய்து கொண்டு பொலீஸில் புகார் செய்கிறார் என்பது கேள்விக்குறி.

இது நாங்கள் அடிக்கிற மாதிரி அடிக்கிறம்.. நீ அழுகிற மாதிரி அழு.. நாங்கள் பிடிக்க வேண்டியவையை பிடிக்கிறம் என்ற தமிழக காவல்துறையின் அரசியல் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாகவே தெரிகிறது.

அதுமட்டுமன்றி கருணாஸ் என்ன மந்திர சக்தியாலா கண்டுபிடித்தார் எஸ் எம் எஸ் அனுப்பியவர்கள் நாம் தமிழர் இயக்கத்தை சார்ந்தோர் என்று. ஏன் வேறு யாராவது அவர்கள் பெயரில் அனுப்பி இருக்க முடியாதா.

அண்மையில் தமிழகத்தில் வெடித்த தண்டவாளக் குண்டிற்கும் நாம் தமிழர் இயக்கத்தின் மீது பழிபோட்டனர்.. அது நடக்க முடியாமல் போய் விட்டது. பின்னர் மீனவர் பிரச்சனையில் சீமானை உள்ள தள்ளி திருப்திப்பட்டனர். இப்போ.. தலைமை இன்றி இருக்கும்.. அந்த அமைப்பை பூரணமாக ஒழித்துக்கட்ட இவரை பாவிக்கிறார்கள்.

தமிழக முக்கிய திரையுலகத்தினர் இலங்கை செல்வதை தவிர்த்து வரும் நிலையில் அதனை தனக்குச் சாதமாக்கி சிறீலங்காவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காசு பார்க்க நினைக்கிறார் கருணாஸ். அதுதான் நேரத்துக்கு ஒரு காரணம் கண்டு பிடிக்கிறார்.

அதுமட்டுமன்றி.. இவரின் தாயாரை சிங்களவரோடு சம்பந்தப்படுத்தி கேவலப்படுத்தி வந்த மேசேஜ் இதுதான் என்று சொல்கிறார். ஆனால் எத்தனையோ ஈழத்தமிழ் பெண்களை சீரழித்த சிங்கள தேசத்துக்கு இவர் போவதென்பதை இட்டு உறுதியாக இருக்கிறாராம். இது இவரின் பொய் முகத்தை தானே காட்டுகிறது.

அடிப்படையில் கருணாஸின் குற்றச்சாட்டுக்கள் ஆதார அடிப்படைகள் அற்றதுடன் சகட்டு மேனிக்கு நாம் தமிழர் இயக்கத்தினரை இவர் சாடுவது கண்டிக்கக்கத் தக்கது. தனது பிழைப்புக்காக இவர் தான் செய்யும் சமூக செயற்பாடுகளையும் விளம்பரப்படுத்துகிறார். இப்படிப்பட்ட இவரிடம் இருந்து நீதியான கருத்துக்கள் வருமா என்பது சந்தேகம்.

இந்தியாவில் இல்லாத முருகன் கோவில்களா இலங்கையில்.. முடி எடுக்க. இது என்னவோ படப்பிடிப்பு என்று போய் அசினக்கா ராஜபக்ச மனிசியோட ஊருலா வந்தது போலவே அமைகிறது.

நடிகர் சங்கம் இது குறித்து கருணாஸிடம் ஒரு விசாரணை நடத்தி உண்மையை நிலையை விளக்க வைப்பதுடன் நாம் தமிழர் இயக்கம் மீதான கறைகளை போக்க உதவ வேண்டும்.

நாம் தமிழர் அமைப்பு தமிழகத்துக்குரிய அமைப்பு மட்டுமல்ல.. அது உலகத் தமிழினத்தின் அமைப்பும் கூட. கருணாஸ் சகட்டு மேனிக்கு அந்த அமைப்பின் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைப்பதை ஈழத்தமிழர் என்ற வகையில் எல்லோரும் தங்கள் கண்டனங்களை தெரிவிக்க வேண்டும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் மேலே எழுதிய கருத்தை பிரசுரித்து விட்டு நாம் தமிழர் இயக்கத்தின் இணையத்தளத்தை பார்த்தேன்.

அவர்களே கருணாஸின் எஸ் எம் எஸிற்கும் தமக்கும் தொடர்பில்லை என்று மறுப்பறிக்கை விடுத்துள்ளனர்.

கருணாஸின் இந்த நகர்வுக்குப் பின்னால் உள்ள சதியை எல்லா தமிழ் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

நடிகர் சங்கம் நடுவு நிலைமையோடு செயற்பட்டு உண்மைகளை வெளிக்கொணர உதவ வேண்டும். ஈழத்தமிழரின் துன்பத்தை.. வைத்து தாம் பிழைப்பு நடத்துவதை நடிகர்கள் நடிகைகள் சிலர் செய்வதை நடிகர் சங்கம் தடுக்க முயல வேண்டும்.

=============================

நடிகர் கருனாஸுக்கு குறுஞ்செய்தி. நாம் தமிழர் கட்சிக்கு தொடர்பு இல்லை - கட்சி தலைமை அறிவிப்பு.

http://www.naamtamilar.org/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நிச்சயமாக கருனைநிதியின் சூழ்ச்சியாகத்தான் இருக்கும். நாம் தமிழர் இயக்கத்தின் மீது அபாண்டமான பழி சுமத்தி உலக தமிழரிடமிருந்து நாம் தமிழர் இயக்கத்தை பிரிக்க பார்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் இயக்கம் கருநாகத்தின் பொய்பிரச்சாரத்தை முறியடித்து மக்கள் முன் பொய்யனாக்க வேண்டும்.ஒரு வருடத்துக்கு குறைவாக தேர்த்தல் இருக்கும் நிலையில் நாம் தமிழர் இயக்கம் மீது சேறு பூசும் நடவடிக்கையாக இச்சம்பவம் இருக்கிறது.

கருணாஸ் இலவசமாக தனக்கு விளம்பரம் தேடிக்கொள்கிறார் போல கிடக்கு... ! இல்லை காங்கிரசிலை சேருகிற எண்ணத்தில் இருக்கிறாரோ என்னவோ...??

எனக்கென்னவோ இந்த கருணா என்று ஆரம்பிக்கும் பெயர் எதுவும் தமிழில் சரியில்லை என்றே தோன்றுகிறது...

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இனத்துரோகி ”கருணா”ஸின் குற்றச்சாட்டு - நாம் தமிழர் சட்டப்படி சந்திக்கும்.

தமிழக சிரிப்பு நடிகர் கருணாஸ் என்பவர் தன்னை நாம் தமிழர் இயகக்த்தினர் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர்களைக் கைது செய்யக்கோரியும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. ஆகவே இது தொடர்பாக தனது நிலைப்பாட்டை நாம் தமிழர் இயக்கம் தெரிவிக்கின்றது.

கொழும்பில் உள்ள சூரியன் எப்.எம்.ஆனது அங்குள்ள திமிந்தா டி.சில்வா என்னும் பாராளுமன்ற உறுப்பினரின் தம்பியான ரய்னர் சில்வா என்பவரும் பஞ்சாபி ஒருவரும் இணைந்து நடத்தும் நிறுவனம் ஆகும்.சமீபத்திய சிங்களனின் போர் வெற்றியைக்கொண்டாடும் வகையிலும் இதன் 16 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டும் 3 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சியை இம்மாதம் 24,25,26 ஆகிய தேதிகளில் நடத்த முடிவு செய்தது.இதில் கலந்து கொள்ள தமிழ்நாட்டில் இருந்து பலரை அழைத்த பொழுதும் அனைவரும் கலந்து கொள்ள மறுத்து விட்டனர்.ஆனால் 10 லட்சம் பணத்துக்கு ஆசைப்பட்டு கலந்து கொள்ள சம்மதித்தவர் காமெடி நடிகர் கருணாஸ் ஆவார்.

இது தொடர்பாக அவருக்கு முன் பனம் 5 லட்சம் கொடுக்கப்பட்டு மீத தொகை நிகழ்ச்சி முடிந்த பின் வழங்கப்படுவதாக இருந்தது.இந் நிகழ்ச்சி தொடர்பாக அங்குள்ள வானொலியிலும் செய்தித்தாள்களிலும் கருணாஸ்,அவரது மனைவியும் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் புகழ் பாடகி கிரெஸ் கருணாஸ்,அங்காடித்தெரு சிரிப்பு நடிகர் பாண்டி ஆகியோர் கலந்து கொள்வது குறித்து விளம்பரமும் வந்தது.கறுப்பு ஜூலை நினைவு தினம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது அங்குள்ள தமிழர்கள் மத்தியில் தீராத வேதனையை அளித்தது. இதன் தொடர்ச்சியாக தம்மைத்தமிழராய் உணர்ந்த அனைவரும் இதனை எதிர்த்தனர்.

இது தொடர்பாக நடிகர் கருணாஸ் அவர்களை தொலைபேசியில் அணுகி சில உணர்வாளர்கள் கேட்டதற்கு,தான் கோவிலுக்கு செல்ல இருப்பதாக சிலரிடமும் ,தான் நடிகன் எனக்கு ஜாதி,மதம்,இல்லை எனக்கு அரசியல் தேவை இல்லை என்று சிலரிடமும்,பணம் வாங்கி விட்டேன் இனி மறுக்க முடியாது என்று சிலரிடமும்,தான் ஈழத்தமிழர்களுக்கு படிக்க உதவி செய்கின்றேன் என்று சிலரிடமும் முன்னுக்குப்பின் முரணான முறையில் பேசி இருக்கின்றார். ஆனால் தான் கொழும்பு செல்வது உறுதி என்றும் கூறி இருக்கின்றார். சிங்களனின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் அவர் பங்கு பெற இருப்பது குறித்து அனைவரிடமும் தீராத வேதனையைத்தந்தது. அவருடன் செல்வதாக இருந்த அங்காடித்தெரு நடிகர் பாண்டி மட்டும் தமிழ் உணர்வாளார்களின் வேண்டுகோளை ஏற்று கொழும்பு செல்லும் நிகழ்ச்சியை ரத்து செய்தார்.

இந்நிலையில் 24 சனி அன்று காலை 8.30 மணிக்கு சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் அவருக்கும் அவரது மனைவி உட்பட 9 நபர்களுக்கும் விமானச்சீட்டு சிங்கள எப்.எம்.நிறுவனத்தால் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. சில முண்ணனி இயக்குனர்களின் வேண்டுகோளை மீறியும் அவரது பயணம் உறுதியான நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து அவரிடம் தமிழர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்ய அவரிடமே முறையிட்டிருக்கலாம் என்று தெரிகின்றது. தனக்கு திரைப்பட வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் கனடா,அமெரிக்கா என்று ஈழத் தமிழர்களின் பணத்தில் பிழைப்பு நடத்திய கருணாஸ் இன்று சிங்களனின் வெற்றியைக்குறிக்கும் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க முனைந்துள்ளது மிகவும் வேதனையைத்தரும் ஒன்றாகும். அவரது இந்த இனத்துரோகச் செயலை தமிழர்கள் ஒரு பொழுதும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்.

இந்நிலையில் நேற்று காலை திடீரென்று சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் நாம் தமிழர் இயக்கத்தைச்சேர்ந்த சிலர் தன்னை தொலைபேசியில் மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார். உண்மை வெளியான உடன் முன்னுக்குபின் முரணாக பேசுகின்றார். தமிழர்களுக்கு உதவி செய்வதாக அசினின் வழியில் தம்பட்டம் அடிக்கின்றார். நாம் தமிழர் இயக்கத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசுகின்றார். தமிழர்களின் குரலாய் ஒலிக்கும் நாம் தமிழர் இயக்கம் இது குறித்து அச்சம் கொள்ளாது. இதனை சட்டப்படி சந்திக்கும். தமிழர்களின் இனமானப்பணியில் தன்னை தொடர்ந்து அர்ப்பணிக்கும்.

http://www.naamtamilar.org/textnews_detail.php?id=2152

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் அடிச்சு நாங்கள் பட்ட வேதனை கூட ஏதோ செத்தும் பிழைத்தும் தாங்கிகொண்டோம்........

ஈழதமிழனுக்கு உதவி உதவி என்று இவங்கள் தரும் வேதனைதான்............ எமை உயிரோடு கொல்கின்றது,

  • கருத்துக்கள உறவுகள்

கருணாஸ் கதாநாயகனாக நடித்த முதல் படமான திண்டுக்கல் சாரதியை வாங்கி வெளியிட்டது சன் தொலைக்காட்சி. அவரது 2வது கதாநாயகனாக நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்துக்கு ஒரு கோடி காசு கொடுத்து வாங்கியுள்ளது சன் தொலைக்காட்சி. இப்படத்தை தனது தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்வதற்கு இப்பணத்தைக் கொடுத்தது சன் தொலைக்காட்சி. கலாநிதி மாறன் சோனியாவின் அரசுக்கு நெருக்கமானவர். கருணாசுக்காக ஒரு கோடி கொடுத்தவர். கூட்டிக் கழித்துப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணாஸ் கதாநாயகனாக நடித்த முதல் படமான திண்டுக்கல் சாரதியை வாங்கி வெளியிட்டது சன் தொலைக்காட்சி. அவரது 2வது கதாநாயகனாக நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்துக்கு ஒரு கோடி காசு கொடுத்து வாங்கியுள்ளது சன் தொலைக்காட்சி. இப்படத்தை தனது தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்வதற்கு இப்பணத்தைக் கொடுத்தது சன் தொலைக்காட்சி. கலாநிதி மாறன் சோனியாவின் அரசுக்கு நெருக்கமானவர். கருணாசுக்காக ஒரு கோடி கொடுத்தவர். கூட்டிக் கழித்துப் பாருங்கள்.

என்ன தற்போதைய புதுபடத்திற்கு............. சன்ரீவியோட சேர்ந்து சிங்களவனும் தயாரிப்பு செலவை ஏற்றுள்ளான். இதுதான் வித்தியசம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.