Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது தவறு. குஷ்பு பேச்சு.

Featured Replies

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ பிரிவு சார்பில் இன்று காலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் குஷ்பு பேசும்போது, ’’நான் கர்ப்பமாகி இருக்கும்போது, குழந்தை பிறந்த 10 நாட்களுக்கு முன்பு வரை படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அதன்பிறகுதான் வீட்டில் ஓய்வாக இருந்தேன்.

முதல் குழந்தைக்கு இரண்டரை வயது வரையும், 2வது குழந்தைக்கு ஒன்றரை வயது வரையும் தாய்ப்பால் கொடுத்தேன். தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகள் தாய் மீது மிகவும் அன்பாக இருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் குழந்தைகளுக்கு கிடைக்கும்.

அமெரிக்கா போன்ற வெளிநாட்டில் தாய்ப்பால் கொடுப்பதில்லை. புட்டிப்பால் தான் கொடுக்கிறார்கள் என்று இங்குள்ள தாய்மார்கள் சொல்கிறார்கள். அமெரிக்காவில் 30 சதவீத பெண்கள் தாய்ப்பால் கொடுக்கிறார்கள்.

இந்தியாவில் 20 சதவீதம் பேர்தான் 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்கிறார்கள். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் முதலில் தெரிய வேண்டும். பிறந்த ஒரு மணி நேரத்தில் கண்டிப்பாக குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

இப்போது, பம்ப் செய்து பாட்டிலில் வைத்து கொடுக்கிறார்கள். அதுகூட தவறு. காரணம், தாயின் அணைப்பில், குழந்தைக்கு தேவையான கதகதப்பான சூழ்நிலை கிடைக்கும். இயற்கையான வரம் இருக்கும்போது, ஏன் புட்டிப்பாலுக்கு செல்ல வேண்டும்.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் முக்கியமானது என்பதை பிரச்சாரம் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்ற நிலையே வருந்தத்தக்கது’’என்று தெரிவித்தார்.

http://www.youtube.com/watch?v=vjFSnv556fY

நன்றி:

http://www.thedipaar.com/news/news.php?id=16644

  • கருத்துக்கள உறவுகள்

.

குஸ்பு பெரிய விஞ்ஞானி.... :D

தாய் பிள்ளைக்கு முலைப்பாலை கொடுக்கிறதே கொஞ்சநேரம்.

அதிலையையும்...... சில நேரம் தாயின் முலையிலிருந்து அதிக பால் சுரக்கும், சில நேரம் சுரக்காது.......

சில, நேரம் குழந்தைக்கு பசிக்கும், சில நேரம் பசிக்காது.....

அப்ப பம்ப் பண்ணிதான் பாலை வைச்சிருக்கவேணும்.

குஸ்பு தனக்கு தெரிஞ்ச தொழிலை மட்டும் செய்ய வேணும். ஆமா.... சொல்லிப்புட்டன்.

.

  • கருத்துக்கள உறவுகள்

பாலூட்டும் வழி முறைகளில்.. சிறந்தவை..

1. தாயே தாய்ப் பாலூட்டுவது

2. தாயே பம்ப் செய்து சரியாக பாதுகாக்கப்பட்ட பாலை ஊட்டலாம். (குறிப்பாக வேலைக்குச் செல்லும் தாய்மாருக்கு இது செளகரியம்.)

3. பால் சுரக்காதவங்க.. புட்டிப்பாலை ஊட்டலாம். (வைத்திய அல்லது உணவுப் பழக்க ஆலோசகரின்.. ஆலோசனையின் படி சரியான பால்மாவை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.)

  • கருத்துக்கள உறவுகள்

உந்த காதலர் தினம், நண்பர்கள் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் இன்னும் என்னென்ன தினங்கள் இருக்குதோ தெரியாது, ஆனா இந்தத் தினங்கள் எல்லாம் வியாபார நோக்கை முதன்மைப்படுத்தி உருவாக்கப்பட்டது. இந்தத் தினங்களுக்கு நடுவில தாய்ப்பால் குடுக்கிறதை ஊக்குவிக்கிற முகமாக ஒரு வாரத்தைக் கடைப்பிடிப்பது வரவேற்கத் தக்கது.

சிறியண்ணா, குஷ்பு விஞ்ஞானியோ இல்லையோ அவ சொன்ன கருத்து சரியாகவேபடுகிறது. ஆர் சொன்னது எண்டு பாக்கக் கூடாது அண்ணை, என்ன சொன்னது எண்டுதான் பாக்கவேணும். சீராகப் பால்கொடுத்து வரும் பெண்களுக்கு பால் சுரப்பதில் எந்தச் சிக்கலும் எழுவதில்லை. குறிப்பாக பெண்கள் இரவு நேரத்தில் குழந்தை பால் குடித்துத் தூங்கிய பின்னர், மீதமாக மார்பகங்களில் தேங்கி நிற்கும் பாலை அமத்தி வெளியில் எடுத்து விட வேண்டும். இதன் மூலம் மார்பகங்களில் பால்கட்டி ஏற்படுவதைத் தவிர்க்கமுடியும். அத்துடன் பால் சீராகவும் சுரக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் நிலை புரிந்துகொள்ளத் தக்கது. எனினும் நேரடியாக தாய்ப்பால் ஊட்டுவது, தாய் சேய் நலனுக்கு இன்றியமையாத்து மட்டுமல்ல ஒரு இறுக்க்மான அன்புப்பிணைப்பை உருவாக்குகின்றது. நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

.

முலைப்பால் ஊட்டும் போது........

"ஆராரோ..... ஆரிரரோ..... " என்று இழுத்துப் பாடினால் பால் அதிகம் சுரக்கும் என்று ஊரில் சொல்வார்கள்.

உண்மை தான் என்று நினைக்கின்றேன். இது எப்பிடி சாத்தியம் என்று தெரியவில்லை.

.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த காதலர் தினம், நண்பர்கள் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் இன்னும் என்னென்ன தினங்கள் இருக்குதோ தெரியாது, ஆனா இந்தத் தினங்கள் எல்லாம் வியாபார நோக்கை முதன்மைப்படுத்தி உருவாக்கப்பட்டது. இந்தத் தினங்களுக்கு நடுவில தாய்ப்பால் குடுக்கிறதை ஊக்குவிக்கிற முகமாக ஒரு வாரத்தைக் கடைப்பிடிப்பது வரவேற்கத் தக்கது.

சிறியண்ணா, குஷ்பு விஞ்ஞானியோ இல்லையோ அவ சொன்ன கருத்து சரியாகவேபடுகிறது. ஆர் சொன்னது எண்டு பாக்கக் கூடாது அண்ணை, என்ன சொன்னது எண்டுதான் பாக்கவேணும். சீராகப் பால்கொடுத்து வரும் பெண்களுக்கு பால் சுரப்பதில் எந்தச் சிக்கலும் எழுவதில்லை. குறிப்பாக பெண்கள் இரவு நேரத்தில் குழந்தை பால் குடித்துத் தூங்கிய பின்னர், மீதமாக மார்பகங்களில் தேங்கி நிற்கும் பாலை அமத்தி வெளியில் எடுத்து விட வேண்டும். இதன் மூலம் மார்பகங்களில் பால்கட்டி ஏற்படுவதைத் தவிர்க்கமுடியும். அத்துடன் பால் சீராகவும் சுரக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் நிலை புரிந்துகொள்ளத் தக்கது. எனினும் நேரடியாக தாய்ப்பால் ஊட்டுவது, தாய் சேய் நலனுக்கு இன்றியமையாத்து மட்டுமல்ல ஒரு இறுக்க்மான அன்புப்பிணைப்பை உருவாக்குகின்றது. நன்றி.

காவாலி, நீங்கள் சொல்வது போல்...... குஷ்புவை நான் ஒரு நடிகையாகத்தான் என்னால் பார்க்க முடியும்

தமிழ் நாட்டில் சில வேளை..... குஸ்பு பெரிய மார்பகத்துடன் சொன்னால்....... பலரை சென்றடையுமோ.... தெரியாது.

ஆனால்.... ஒவ்வொரு தாயும் குழந்தையை பெற்றவுடன் , தனது முலையால் பால் கொடுக்கவே.. விரும்புவாள்.

பலருக்கு பால் கொடுக்காவிட்டால்..... முலையிலிருந்து தானாகவே பால் சுரக்கும்.

முலையில் வேதனை ஏற்படும் போதே அந்தப் பாலை, பம்ப் பண்ணி தகுந்த வெப்ப நிலையில் வைத்து கொடுப்பதில் எந்தவிதமான தாய், சேய் பாசப்பிணைப்பிற்கும் இடையூறு வரப்போவதிலை. அந்த தாயில் ஆகக் கூடியது ஒரு வருடமோ.... சிறிது அதிகமோ தான் பால் சுரக்கப் போகின்றது....

வருசக் கணக்காய்...... போத்தில் கணக்கில் சுரக்க மாட்டாது. அதனை அவள் எப்படி கொடுத்தாலும் குழந்தை மறக்க மாட்டுது.

எதுக்கும்...... முலையில் இருந்து நேரடியாக கொடுப்பதை நானும் வரவேற்கின்றேன். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அரிவரி போட்டுவந்தும் பால் குடிச்சனான் :D :D

  • கருத்துக்கள உறவுகள்

.

நான் அரிவரி போட்டுவந்தும் பால் குடிச்சனான் :D :D

அண்ணை! அப்ப..... பல்லுக் கொழுக்கட்டை அவிச்சாப் பிறகுமோ...... :D

.

  • கருத்துக்கள உறவுகள்

பம்ப் செய்யாமல் தாய்ப்பால் வராது !

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை! அப்ப..... பல்லுக் கொழுக்கட்டை அவிச்சாப் பிறகுமோ...... :D

குசாண்ணாண்ட குசும்பைப் பார்க்கவே தெரியல்ல.. 5.. 6 வயசுக்கு பால் குடிச்சிருப்பாருன்னு..! இப்ப 60 வயதிலும் குடிக்கிறார்.. அது பனம் பால்..! :D)

பாலூட்டுதல்.. அடுத்த குழந்தைக்கான இடைவெளியைக் கூட்டும். முன்னைய காலத்தில் செயற்கையான கருத்தடை சாதனங்கள் குளிகைகள் இல்லாத காரணத்தினால்.. அடுத்த குழந்தைக்கான இடைவெளியை இப்படி பாலூட்டி அடைந்திருப்பார்கள். இல்ல அடுத்தடுத்து வருசத்துக்கு வருசம் .. குட்டி போட எல்லோ வைச்சிடுவாங்க.. சில ஆண்கள்..! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தாய் தன் பிள்ளைக்கு பாலூட்ட தொடங்கும்போதே

தாய்ப்பால் சுரக்கிறது

ஒரு சிலரைத்தவிர..

தாய்ப்பாலை எல்லாம் எடுத்து வைத்து பொடுப்பது சரியானதல்ல

உடனுக்குடன் அரவணைத்து கொடுக்கும்போது

பாலுடன் சேர்ந்து அனைத்துமே அதற்கு கிடைக்கிறது

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வரும் பெண்களுக்கு பால் சுரப்பதில் எந்தச் சிக்கலும் எழுவதில்லை. குறிப்பாக பெண்கள் இரவு நேரத்தில் குழந்தை பால் குடித்துத் தூங்கிய பின்னர், மீதமாக மார்பகங்களில் தேங்கி நிற்கும் பாலை அமத்தி வெளியில் எடுத்து விட வேண்டும். இதன் மூலம் மார்பகங்களில் பால்கட்டி ஏற்படுவதைத் தவிர்க்கமுடியும். அத்துடன் பால் சீராகவும் சுரக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் நிலை புரிந்துகொள்ளத் தக்கது. எனினும் நேரடியாக தாய்ப்பால் ஊட்டுவது, தாய் சேய் நலனுக்கு இன்றியமையாத்து மட்டுமல்ல ஒரு இறுக்க்மான அன்புப்பிணைப்பை உருவாக்குகின்றது. நன்றி.

எனக்கு இங்கு தாதிகள் வேறு வளியெல்லோ சொல்லி தந்தவை. :D:D

தாய்ப்பால் ஒரு இயற்கை வரம் என்று தலைப்பில் போட்டு இருக்குகே...

தாய்க்கும்- சேய்க்கும் உள்ள உறவில் தாய்ப்பாலும் ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறது என்பது யாவரும் அறிந்ததே. முடியுமான அளவு குழந்தையே தாயின் மார்பில் சுரக்கும் பாலைக் குடிப்பது/ குடிக்க ஊக்குவிப்பது நல்லது. தாய்ப்பாலை குழந்தை தானாகவே குடிக்கும் பொது தாய் தன் குழந்தையை வருடிக் கொடுப்பதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் ஒரு உணர்வு பூர்வமான பந்தம் உருவாகும் என்று சொல்வார்கள். இந்த உணர்வு குழந்தைக்கோ அல்லது தாய்க்கோ 'பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பதன்' மூலம் கிடைக்குமா?

சிலருக்கு தாய்ப்பால் சாதாரணமாகவே குழந்தைக்குக் கொடுக்கக் கூடியதாக இருக்கும், அதே நேரம் சிலருக்கு தாய்ப் பால் கட்டி பட்டும் போகும் என்று சொல்லுவார்கள். அவர்கள் மேலே சொல்லப் பட்ட முறைய கையாண்டு எடுக்கக் கூடிய அளவு எடுப்பது நன்று. இன்னும் சிலருக்கு தாய்ப் பாலுடன் சேர்ந்து குருதியும் வெளியாகும் அவர்கள் மருத்துவ அறிவுரை கேட்பது நன்று. (காலப் போக்கில் இதன் மூலம் மார்பகப் புற்று நோய் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்) சில பெண்கள் தங்கள் அழகு கேட்டு விடும் என்று தாய்ப்பால் கொடுப்பதை விரும்ப மாட்ட்ரார்கள் என்பது வேற்று இன மக்கள் மத்தியில் இன்னும் காணக் கூடியதாக இருந்தாலும், என்மின மக்கள் மத்தியில் மிகக் குறைவு என்றே நினைக்கிறன்.

குறை மாதங்களில் பிறந்த குழந்தையாக இருந்தால் குழந்தையின் வளர்ச்சியைப் பொறுத்து மேலே சொல்லப் பட்ட முறையை கையாளலாம்.

வேலைக்குப் போகும் தாய்மாருக்கு குழந்தை பிறந்ததும் அந்தக் குழந்தையைப் பராமரிபதற்கு குழந்தையின் தாய்க்கு பொதுவாக பிரசவ விடுமுறை என்று சொல்லப்படும் விடுமுறை கொடுக்கிறார்களே? அதற்குள் ஏன் பம்ப் செய்து தாய்ப்பால் கொடுப்பது என்ற முறையை கையாளவேண்டும்?

வேலைக்குப் போகும் தாய்மாருக்கு இம்முறை கைகொடுக்கும் என்ற வாதம் என்றால் அதை தவறு என்றே சொல்லுவேன்!

  • கருத்துக்கள உறவுகள்

கண்றாவி இந்த வட இந்திய குஸ்புவின் அறிவுரை... அதை கேட்கும் நிலையில் நாங்கள் இல்லை... முகப்பொலிவை கூட்ட அரசாஙக ஆஸ்பத்திரிக்கு ஓடும் அரசியல்வாதிகளுக்குதான் பயன்படும் இந்த பம்பு செட்டுங்கு... கருமம் கருமம்.. இவள் அறிவுரையை கேட்டு நடந்தால் கற்பாவது...தமிழர் பண்பாடாவது... மண்ணாகட்டியாவது... ஆடுமாடு போல ரோட்டில் கிடைப்பதை ஏறி கொள்ள வேண்டியதுதான்.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.