Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகமே எதிர்பார்த்த எந்திரன் டிரைலர் இன்று வெளியீடு.

Featured Replies

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ள எந்திரன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் 11.09.2010 அன்று நடைபெற்றது. கலாநிதிமாறன் முன்னிலையில் படத்தின் டிரெய்லரை ரஜினி வெளியிட்டார். படத்தின் இயக்குனர் சங்கர் மற்றும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் தயாரிபாளர்கள், இயக்குனர்கள் உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

விழாவில் பேசிய கலாநிதிமாறன், எந்திரன் படத்தின் டிரெய்லரை தமிழக முதல்வர் கருணாநிதியிடம் போட்டுக் காண்பித்தேன். டிரெய்லரை பார்த்துவிட்டு வியந்து பாராட்டினார். முதல்வர் கருணாநிதிக்கு எங்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தப் படத்துக்கு இந்தியா மட்டுமல்ல. உலகம் முழுவதும் அதிகமான எதிர்பார்ப்பு இருக்கிறது. படம் எப்படி இருக்கிறது என எல்லாருமே கேட்கிறார்கள். சவுத் இண்டியா சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த், எந்திரன் படம் வெளியாவதற்கு முன்பாகவே ஆல் இண்டாயா சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். எந்திரன் படத்தின் டிரெய்லரை என்னை வெளியிட சொன்னார்கள். நான் படத்தை வெளியிடுவதை விட எந்திரன் படத்தை உருவாக்கிய சங்கர், ரஜினி வெளியிடுவதுதான் சிறந்ததாக இருக்கும் என்றார்.

உலகம் முழுக்க 3000 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகவிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படம், சென்னை யில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.

இன்று-வியாழக்கிழமை-எந்திரன் படம் சென்னையில் வெளியாகும் திரையரங்குகள் உள்ளிட்ட விவரங்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

சத்யம் (3), தேவி (2), எஸ்கேப் சினிமா ஸ் (3), ஐநாக்ஸ் (2), அபிராமி (4), சங்கம் (2), ஆல்பட் (2), உதயம் (3), கமலா (2), பிவிஆர் (5), ஐட்ரீம், மகாராணி ஆகிய திரையரங்குகளில் எந்திரன் வெளியாகி்றது. இவை அனைத்தும் சென்னை நகர எல்லைக்குட்பட்ட திரையரங்குகள்.

காசி, பிருந்தா, தியாகராஜா, தேவி கருமாரி, மாயாஜால், பிரார்த்தனா, ராக்கி போன்ற திரையரங்குகள் சென்னை நகர எல்லைக்குள் வராதவை. புறநகர்ப் பகுதியில் மட்டும் 40க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் எந்திரனைக் காணலாம். 10 ஸ்கிரீன்கள் கொண்ட மாயாஜாலில் நாளொன்றுக்கு 60 காட்சிகளுக்கும் மேல் எந்திரன் திரையிடப்படுகிறது.

இன்று (செப் 11) படத்தின் அதிரடியான முன்னோட்டக் காட்சிகள் வெளியிடப்படுகிறது. இதனைசத்யம் திரையரங்கில் வைத்து ஒரு தனி விழாவாகவே நடத்துகிறார்கள். அதே நேரம் அம்பத்தூர் ராக்கி, கேகே நகர் காசி திரையரங்குகளிலும் ட்ரைலர் வெளியாகிறது.

அனைத்து ஏரியாக்களும் ‘ஹாட் சேல்ஸ்’!

இதற்கிடையே, எந்திரன் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிவுக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிகிறது. இன்னும் ஓரிரு நாள் பணிகள் மட்டுமே மிச்சம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் அனைத்து ஏரியாக்களும் படு பரபரப்பாக விற்றுத் தீர்ந்துள்ளன. இன்றைய நிலையில் எந்திரன் விற்பனை மட்டுமே பல நூறு கோடிகளைத் தாண்டியுள்ளது. அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளிவரும்போது, இந்தியத் திரையுலகமே பிரமித்துப் போகும் என்கிறார் எந்திரன் யூனிட்டைச் சேர்ந்த முக்கிய டெக்னீஷியன் ஒருவர்.

இந்தியாவின் அவதார்!

படம் வெளியாகும் முன்பே எந்திரனுக்கு இந்திய திரையுலகில் கிடைத்திருக்கும் முக்கியத்துவம், சர்வதேச அளவிலான வெளியீடு, ஆடியோ விற்பனை சாதனை போன்றவற்றை மையமாக வைத்து, ‘இந்தியாவின் அவதார்’ என வர்ணித்து சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பியுள்ளது பிரபல டிவி சேனல். அதில் எந்திரன் மூலம் ரூ 1600 கோடிக்கும் மேல் வசூல் குவியும் என புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளனர்.

“இந்தியாவிலிருந்து வெளியாகும் ஒரு படத்துக்கு இத்தனை எதிர்ப்பார்ப்பும், விற்பனையும் அமைகிறதென்றால் அதற்கு ஷங்கர் யூனிட்டின் கூட்டு முயற்சியும் ஒரு காரணம் என்றாலும், ரஜினி என்ற ஒற்றை மனிதரால் மட்டுமே இது சாத்தியமாகிறது. இந்திய சினிமா சரித்திரம் காணாத சாதனை இது” என்று அந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளனர்.

எந்திரன் டிரையல் படங்களைப் பார்வையிட

http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4718

புதிதாக ரீலீசான டிரைலர்.

Edited by easyjobs

  • கருத்துக்கள உறவுகள்

உலகமே எதிர்பார்த்த..?????? :rolleyes::lol::lol:

இதெல்லாம் ரொம்ப ஓவர்.

உலகமே எதிர்பார்த்த..??????

உலகம் -வரைவிலக்கணம் செய்க.

  • கருத்துக்கள உறவுகள்

கிணற்றுக்குள் இருக்கும் தவளைக்கு.......... வெளியில் ஒரு பெருத்த உலகம் இருப்பது தெரியும் என்று நீங்கள் சொல்கின்றீர்களா???

  • கருத்துக்கள உறவுகள்

உலகமே எதிர்பார்த்த....

ஆம் இன்று ஐரோப்பாக்காரன், அமெரிக்காக்காரன், அவுஸ்திரேலியாக்காரன், ஆபிரிக்கன் எல்லோரும்........

இன்று வேலைக்கும், பள்ளிக்கூடத்துக்கும் லீவு எடுத்து, எந்திரன் பட கட் அவுட்டுக்கு பால் ஊத்தி, படம் பார்க்க போகிறார்கள். :(

இந்த அரை நிமிட காணொளியையும் பாருங்கள்.

http://www.tubetamil.com/view_video.php?viewkey=7f30415bb68699463271

.

Edited by தமிழ் சிறி

ஐரோப்பாக்காரன், அமெரிக்காக்காரன், அவுஸ்திரேலியாக்காரன், ஆபிரிக்கன் எல்லாம் கிணற்றுத் தவளை என்று எந்திரன் குழுவினர் சொல்லுறார்கள் . பராக் பராக்.

கிணற்றுக்குள் இருக்கும் தவளைக்கு.......... வெளியில் ஒரு பெருத்த உலகம் இருப்பது தெரியும் என்று நீங்கள் சொல்கின்றீர்களா???

இல்லை .

Edited by கறுவல்

தலைவரின் மாவீரர் உரையையும் முந்தி இப்படித்தான் சொல்லிகொண்டிருந்தார்கள்."உலகமே எதிர்பார்த்துகொண்டிருக்கும்" என்று.

எல்லாம் ஒரு வியாபார தந்திரம் தான்.சிலது மட்டுத்தான் சிலருக்கு விளங்கும்

ஒரு 6 வருசத்திற்கு முதல் நானும் உதைநம்பி பீ.பீ.சீ யை போட்டிட்டு இருந்தா அதைபற்றி ஒரு சொல்லையும் காணோம்.அத்தப்பத்து சிம்பாவேயுடன் 200 ரன்கள் குவித்தார் என்று சொல்லுகின்றான்.உப்பவும் உதைதானே சொல்லுகினம் உலகத்தை நம்பி ஏமாந்ததென்று.

ரஜனி ரசிகர்களுக்கு உலகமே எதிர்பார்த்துகொண்டிருக்கின்றது என்றுபேய்காட்டுகின்றார்கள் என்றதுமாத்திரம் வடிவாக விள்ங்குது மற்றது மாத்திரம் விளங்காததால் தான் 35000 எமது மக்களும் முள்ளிவாய்க்காலில் முடிந்தவை.எந்திரன் தயாரிப்பாளர்களை மன்னிக்கலாம் அவன் ஒரு வியாபாரி, தங்கள் வியாபாரத்திற்கு 35000 எமது மக்களை பலிகொடுத்தவர்களை எக்காலமும் மன்னிக்க முடியாது.நான் சாகும் வரை திட்டிக்கொண்டேதான் இருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

..ரஜனி ரசிகர்களுக்கு உலகமே எதிர்பார்த்துகொண்டிருக்கின்றது என்றுபேய்காட்டுகின்றார்கள் என்றதுமாத்திரம் வடிவாக விள்ங்குது மற்றது மாத்திரம் விளங்காததால் தான் 35000 எமது மக்களும் முள்ளிவாய்க்காலில் முடிந்தவை.எந்திரன் தயாரிப்பாளர்களை மன்னிக்கலாம் அவன் ஒரு வியாபாரி, தங்கள் வியாபாரத்திற்கு 35000 எமது மக்களை பலிகொடுத்தவர்களை எக்காலமும் மன்னிக்க முடியாது.நான் சாகும் வரை திட்டிக்கொண்டேதான் இருப்பேன்.

எப்பேர்பட்ட முடிச்சுகளையும் அவிழ்ப்பவர்களை கண்டிருக்கிறேன்...ஆனால் இப்படியும் முடிச்சு போடலாமென முதல்முறையாக இப்பொழுது காண்கிறேன்..

எப்படியப்பா இதெல்லாம்....? நன்முயற்சி :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் மாவீரர் உரையையும் முந்தி இப்படித்தான் சொல்லிகொண்டிருந்தார்கள்."உலகமே எதிர்பார்த்துகொண்டிருக்கும்" என்று.

எல்லாம் ஒரு வியாபார தந்திரம் தான்.சிலது மட்டுத்தான் சிலருக்கு விளங்கும்

ஒரு 6 வருசத்திற்கு முதல் நானும் உதைநம்பி பீ.பீ.சீ யை போட்டிட்டு இருந்தா அதைபற்றி ஒரு சொல்லையும் காணோம்.அத்தப்பத்து சிம்பாவேயுடன் 200 ரன்கள் குவித்தார் என்று சொல்லுகின்றான்.உப்பவும் உதைதானே சொல்லுகினம் உலகத்தை நம்பி ஏமாந்ததென்று.

ரஜனி ரசிகர்களுக்கு உலகமே எதிர்பார்த்துகொண்டிருக்கின்றது என்றுபேய்காட்டுகின்றார்கள் என்றதுமாத்திரம் வடிவாக விள்ங்குது மற்றது மாத்திரம் விளங்காததால் தான் 35000 எமது மக்களும் முள்ளிவாய்க்காலில் முடிந்தவை.எந்திரன் தயாரிப்பாளர்களை மன்னிக்கலாம் அவன் ஒரு வியாபாரி, தங்கள் வியாபாரத்திற்கு 35000 எமது மக்களை பலிகொடுத்தவர்களை எக்காலமும் மன்னிக்க முடியாது.நான் சாகும் வரை திட்டிக்கொண்டேதான் இருப்பேன்.

தமிழ் மக்களுக்காக என்ன செய்தீர்கள் அல்லது என்ன செய்கிறீர்கள் என (சொல்லியா தெரிய வேண்டும் :lol: ) என உங்கள் மனச்சாட்சியை கேளுங்கள். ஒரு சிலரின் துரோகங்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதே நேரம் பலரின் தியாகங்களையும் எமது போராட்டம் கொண்டது. சாகும் வரை திட்டுவதிலும் பார்க்க சாகும் வரை ஏதாவது உருப்படியாக செய்ய பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்பேர்பட்ட முடிச்சுகளையும் அவிழ்ப்பவர்களை கண்டிருக்கிறேன்...ஆனால் இப்படியும் முடிச்சு போடலாமென முதல்முறையாக இப்பொழுது காண்கிறேன்..

எப்படியப்பா இதெல்லாம்....? நன்முயற்சி :lol::(:lol:

இதெல்லாம் ஒட்டுக்குழு வாழ்வில் சாதாரணமப்பா..! :lol:

மூன்றாமாளாக நின்று வேடிக்கைபார்பவர்களுக்கு அதன் வலியும் ரணமும் தெரியாது.எமது போராட்டம் என்பது நான்கு பேருக்குமட்டும் சொந்தமானதல்ல அப்படியொரு நிலைபாட்டுக்கு அதை தள்ளி தூரநின்று வேடிக்கை காட்டியவர்கள் தான் அதிகம்.நாங்கள் அடுத்த கட்ட வேலைதளத்திற்கு எப்பவோ நகர்ந்துவிட்டோம் தருணம் வரும் போது வெளிக்கொண்டுவருவோம் .அதை அரசியல் முலாம் பூசிஆரம்பத்திலேயே அழிக்கதயாராகவில்லை.

ராஜவன்னியன் நீர் எந்த கிரகத்திலிருக்கின்றீரோ எனக்கு தெரியாது.எந்திரனுக்கு முதலீடு 125 கோடி என கதைக்கின்றார்கள். இவர்களின் முதலீடுகள் உலகம் முழுக்க 1000 கோடியை தாண்டும்.எல்லாம் 2,3 வேலைகள் செய்த அப்பாவி பொதுமக்களின் பணம்.இப்போது கட்டடங்களாகவும் தனிப்பட்ட வியாபார நிலையங்களாகவும் வெளிவருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் அடுத்த கட்ட வேலைதளத்திற்கு எப்பவோ நகர்ந்துவிட்டோம் தருணம் வரும் போது வெளிக்கொண்டுவருவோம் .அதை அரசியல் முலாம் பூசிஆரம்பத்திலேயே அழிக்கதயாராகவில்லை.

மீண்டும் மாலை தீவு ஒன்றும் கைப்பற்ற மாட்டீர்கள் தானே. :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாமாளாக நின்று வேடிக்கைபார்பவர்களுக்கு அதன் வலியும் ரணமும் தெரியாது.எமது போராட்டம் என்பது நான்கு பேருக்குமட்டும் சொந்தமானதல்ல அப்படியொரு நிலைபாட்டுக்கு அதை தள்ளி தூரநின்று வேடிக்கை காட்டியவர்கள் தான் அதிகம்.நாங்கள் அடுத்த கட்ட வேலைதளத்திற்கு எப்பவோ நகர்ந்துவிட்டோம் தருணம் வரும் போது வெளிக்கொண்டுவருவோம் .அதை அரசியல் முலாம் பூசிஆரம்பத்திலேயே அழிக்கதயாராகவில்லை.

ராஜவன்னியன் நீர் எந்த கிரகத்திலிருக்கின்றீரோ எனக்கு தெரியாது.எந்திரனுக்கு முதலீடு 125 கோடி என கதைக்கின்றார்கள். இவர்களின் முதலீடுகள் உலகம் முழுக்க 1000 கோடியை தாண்டும்.எல்லாம் 2,3 வேலைகள் செய்த அப்பாவி பொதுமக்களின் பணம்.இப்போது கட்டடங்களாகவும் தனிப்பட்ட வியாபார நிலையங்களாகவும் வெளிவருகின்றது.

கருத்துச் சொல்வதற்கும், நேசக்கரம் நீட்டுவதற்கும் எந்த கிரகத்திலும் இருக்க தேவையில்லை..அஜூன்..தமிழன் என்ற உணர்விருந்தால் போதும் வலியையும் ரணத்தையும் உணர.

மற்றபடி போராட்ட இயக்கங்களுக்குள் இருக்கும் போட்டிகள், காட்டிக்கொடுப்புகள், கழுத்தறுப்புகள்,கொலைகள், சொத்துக்குவிப்புகள் என பட்டியலிட்டல் நீங்கள் சார்ந்திருப்பதும் புனிதமானதல்ல என்பதும் எல்லோருக்கும் தெரியும். பந்தயத்தில் எந்தக் குதிரைமேல் பணம் கட்டினால் வெல்லுமென்ற சராசரி மனிதனின் மனநிலையே நீங்கள் செப்பிய மூன்றாம் மனிதரான எமக்கு. அதில் நீங்கள் குற்றம் சொல்லும் முன்னாள் புலிகளென்ன..தங்களைப் போன்ற இன்னாள் எலிகளையும் ஈழம் பெற்றுத் தர முடியுமென்றால் வரவேற்க தமிழ் மக்கள் எவரும் தயார்.. முடியுமெனில் செயலில் காட்டவும்...

ஆனால் "வருவேன்..ஆனால் எப்போது வருவேன் என்று மட்டும் தெரியாது" என்ற அரசியல் "படம்" மட்டும் வேண்டாம்.. ஏனெனில் இந்த மாதிரி இந்திய "தோல்விப் படங்களை" பல கண்டாயிற்று! :lol:

.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் மாவீரர் உரையையும் முந்தி இப்படித்தான் சொல்லிகொண்டிருந்தார்கள்."உலகமே எதிர்பார்த்துகொண்டிருக்கும்" என்று.

எல்லாம் ஒரு வியாபார தந்திரம் தான்.சிலது மட்டுத்தான் சிலருக்கு விளங்கும்

.நான் சாகும் வரை திட்டிக்கொண்டேதான் இருப்பேன்.

பாருங்கள்

இதைத்தான் சொல்வது புலிக்காய்ச்சல் என்று.

நீங்கள் சாகும்வரை பேசுவீர்களோ எனக்கு தெரியாது

ஆனால் இப்படியே கதைத்து

எந்த அப்பாவியையாவது உள்ளே தள்ளிவிடாதீர்கள்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

உலகமே எதிர்பார்த்த..?????? :D:D:D

இதெல்லாம் ரொம்ப ஓவர்.

உலகமே எதிர்பார்த்த என்பதின் அர்த்தம் இப்போது புரிந்ததா நண்பரே. படம் தோல்வி அடைய வேண்டும் என பலரின் ஏக்கத்தை உடைத்து இன்று உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியுடன் வெற்றி நடைபோடுகிறது.

கிணற்றுக்குள் இருக்கும் தவளைக்கு.......... வெளியில் ஒரு பெருத்த உலகம் இருப்பது தெரியும் என்று நீங்கள் சொல்கின்றீர்களா???

கிணற்றுக்குள் இருந்தது தவளையா? இல்லை முதலையா? என்று இப்போது புரிந்து இருக்குமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.