Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென் தமிழீழம் ஏறாவூரில் மாங்காய் வடிவிலான அதிசயப் பிள்ளையார் (படங்கள் இணைப்பு)

Featured Replies

தென் தமிழீழம் மட்டக்களப்பு ஏறாவூர் எல்லை நகர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அதிசய விநாயகர் ஆலயத்தின் வளாகத்தில் உள்ள மாமரத்தில் பிள்ளையார் உருவத்தினை கொண்ட அதிசய மாங்காய் ஒன்று காய்த்துள்ளது.

மேற்படி ஆலயத்தின் புனர்நிர்மானப் பணிகள் இடம்பெற்று வரும் இத்தருணத்தில் இவ்வாறான அதிசயப் பிள்ளையாரின் தோற்றம் அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதனை பெருந்திரளான மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வழிபட்டு வருவதுடன், மாங்காய் உருவத்தில் தோன்றியுள்ள அதிசயப் பிள்ளையாரின் இயற்கையான இந்த வடிவம் பிள்ளையாரின் அருள் கடாட்சம் இந்த இடத்தில் நேரடியாக கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.

maankai1.JPG

maankai2.JPG

maankai3.JPG

maankai4.JPG

maankai5.JPG

http://www.vannionline.com/2010/10/blog-post_6928.html

  • 4 weeks later...

என்ன மாமங்கப்பிள்ளையாரோ. மாங்காய் பழுத்தபிறகு என்னவாம் செய்கிறது? மாங்கொட்டைக்கு திருநீறு சந்தணம் பூசுவதோ?

  • கருத்துக்கள உறவுகள்

மாங்காயைப் பார்க்க பிள்ளையார் ஞாபகத்துக்கு வரவில்லை. வேற ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

.

palam_ni_4.jpgganesh2.gif

முன்பொருமுறை உலகத்தை கெதியாக சுற்றிவருவது யார் என்று...... பிள்ளையாருக்கும், முருகனுக்கும் போட்டி ஏற்பட்ட போது.....

முருகன் தனது வாகனமான மயிலில் உலகை சுற்றக் கிளம்ப......

தாய், தகப்பனே உலகம் என்று முடிவுக்கு வந்த பிள்ளையார். சிவனையும், பார்வதியையும் சுற்றி வந்து மாம்பழத்தை பரிசாக பெற்றுக் கொண்டார்.

அதன் தொடர்ச்சியே.... மட்டக்களப்பு ஏறாவூர் கிராமத்தில் பிள்ளையார் மாங்காய் வடிவத்தில் தோன்றியிருப்பது.

இனி தமிழ் மக்களுக்கு தனது அருள் கிடைக்கும் என்று பிள்ளையார் சொல்லாமல், சொல்லும் போது...

அதனை..... உங்கள் கேலிப் பேச்சுக்களால், பிள்ளையாரின் அருள் பாலிக்கும் மனதை மாற்ற வேண்டாம்.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

.

மட்டக்களப்பு ஏறாவூர் கிராமத்தில் பிள்ளையார் மாங்காய் வடிவத்தில் தோன்றியிருப்பது.

இனி தமிழ் மக்களுக்கு தனது அருள் கிடைக்கும் என்று பிள்ளையார் சொல்லாமல், சொல்லும் போது...

அதனை..... உங்கள் கேலிப் பேச்சுக்களால், பிள்ளையாரின் அருள் பாலிக்கும் மனதை மாற்ற வேண்டாம்

ஒரு வேளை முன்பு பிள்ளையார் பால் குடிக்கும் போது யாரோ கேலிப் பேச்சுப் பேசியதினால் தான் சுனாமி, முள்ளிவாய்க்கால் அவலம் ஏற்பட்டிருக்கிறது போல கிடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மாங்காய் பிள்ளையாருக்கு அரோகரா

மாங்காயைப் பார்க்க பிள்ளையார் ஞாபகத்துக்கு வரவில்லை. வேற ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.

எது அப்பு ஞாபகத்துக்கு வருகுது

  • கருத்துக்கள உறவுகள்

மாங்காய் பிள்ளையாருக்கு அரோகரா

எது அப்பு ஞாபகத்துக்கு வருகுது

மாங் கொட்டைதான்.....

  • கருத்துக்கள உறவுகள்

மாங்காய் பிள்ளையார் மாம்பழம் ஆனதும் பஞ்சாமிர்தத்துடன் சங்கமமாகிடுவார்! :wub:

மாங்காயைப் பார்க்க பிள்ளையார் ஞாபகத்துக்கு வரவில்லை. வேற ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.

கந்தப்பு, இதை வாசித்து சிரித்தேன். உங்கள் கண்களும் கலைக்கண்கள். வேறு கோணத்தில் பார்த்தபடியால் எமது கண்களிற்கு புலப்படாத அந்த வேறு ஒன்று உங்கள் கண்களிற்கு புலப்பட்டு உள்ளது. என்னமோ.. முன்பொரு காலத்தில் நடனம் ஆடும்போது பிள்ளையாரைப் பார்த்து அவரின் வயிற்றைபார்த்து சிரித்தமைக்காக குறிப்பிட்ட நபர்மீது பிள்ளையார் கோபம்கொண்டு சாபம் இட்டதாக கதைகளில் வாசித்துள்ளேன். பிள்ளையாருடன் கிண்டல் வேண்டாம்.

முன்பொருமுறை உலகத்தை கெதியாக சுற்றிவருவது யார் என்று...... பிள்ளையாருக்கும், முருகனுக்கும் போட்டி ஏற்பட்ட போது..... முருகன் தனது வாகனமான மயிலில் உலகை சுற்றக் கிளம்ப...... தாய், தகப்பனே உலகம் என்று முடிவுக்கு வந்த பிள்ளையார். சிவனையும், பார்வதியையும் சுற்றி வந்து மாம்பழத்தை பரிசாக பெற்றுக் கொண்டார். அதன் தொடர்ச்சியே.... மட்டக்களப்பு ஏறாவூர் கிராமத்தில் பிள்ளையார் மாங்காய் வடிவத்தில் தோன்றியிருப்பது. இனி தமிழ் மக்களுக்கு தனது அருள் கிடைக்கும் என்று பிள்ளையார் சொல்லாமல், சொல்லும் போது... அதனை..... உங்கள் கேலிப் பேச்சுக்களால், பிள்ளையாரின் அருள் பாலிக்கும் மனதை மாற்ற வேண்டாம்.

இது கிண்டலா அல்லது பக்தியா? :wub:

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை முன்பு பிள்ளையார் பால் குடிக்கும் போது யாரோ கேலிப் பேச்சுப் பேசியதினால் தான் சுனாமி, முள்ளிவாய்க்கால் அவலம் ஏற்பட்டிருக்கிறது போல கிடக்கிறது.

எங்களுடைய சமையக்கடவுளை நாங்களே.... கேலி பண்ணும் போது......

அவர் எங்களுக்க்கு உதவாமல் விடுவதில் ஆச்சரியமில்லை கந்தப்பு. :lol:

--------

இது கிண்டலா அல்லது பக்தியா? :D

இது கிண்டல் இல்லை கரும்பு, பக்தி. :)

உங்கள் கிண்டல், கேலிகளை வைக்க இங்கும் ஒரு தலைப்பு உள்ளது. :D

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77140&pid=618806&st=0&#entry618806

.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மாமங்கப்பிள்ளையாரோ. மாங்காய் பழுத்தபிறகு என்னவாம் செய்கிறது? மாங்கொட்டைக்கு திருநீறு சந்தணம் பூசுவதோ?

மாங்காய் பழுத்து பின்பு அழுகிய நிலையை அடையும் போது , அழுகிய பிள்ளையார் என்று யாராவது சொல்லுவினமா?

எங்களுடைய சமையக்கடவுளை நாங்களே.... கேலி பண்ணும் போது......

அவர் எங்களுக்க்கு உதவாமல் விடுவதில் ஆச்சரியமில்லை கந்தப்பு. :lol:

பிள்ளையாரும் பலனை எதிர்ப்பார்த்துத் தான் உதவி செய்கிறார் போல இருக்கிறதே.

  • கருத்துக்கள உறவுகள்

மாங்காய்க்கும் நாமமா??

  • கருத்துக்கள உறவுகள்

தென் தமிழீழம் ஏறாவூரில் மாங்காய் வடிவிலான அதிசயப் பிள்ளையார்

பிள்ளையார் மாதிரியே இல்லையே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.