Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருப்பெயர்ச்சி பலன்கள் :-21.11.2010 முதல் 7.5.2011 வரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

21.11.2010 முதல் 7.5.2011 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள்

21.11.2010 ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 10.44-க்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைகிறார். 7.5.2011 வரை குருபகவான் தன் சொந்த வீட்டில் அமர்ந்து ஆட்சி செய்ய இருப்பதால், உலகெங்கும் பொருளாதாரத்தில் நிலவும் மந்த நிலை விலகும். தனி நபர் வருமானம் உயரும். கிராமங்கள் முன்னேறும். பெண்கள் முக்கிய பதவிகளில் அமர்வார்கள்.

மேஷம்: நேர்மையாளர்களே...

உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் குரு அமர்வதால், உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். மகளுக்கு திருமணம் முடியும். மகனுக்கு வேலை கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டை பார்ப்பதால், உடல் உபாதை நீங்கும். குருபகவான் உங்களின் 6-ம் வீட்டையும், 8-ம் வீட்டையும் பார்ப்பதால், அரசால் ஆதாயம் உண்டு. 21.11.2010 முதல் 2.1.2011 வரை குருபகவான், பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால், சுப நிகழ்ச்சிகள் நடக்கும். 3.1.2011 முதல் 13.3.2011 வரை சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். என்றாலும், சனிபகவான் உங்களுக்கு பாதகாதிபதியாக இருப்பதால்... வீண் அலைச்சல், பொருள் இழப்புகள் ஏற்படக்கூடும். 14.3.2011 முதல் 7.5.2011 வரை குருபகவான்... புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வ தால், நவீன சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். ஆனால்... திடீர் பயணம், வாகன பழுது ஏற்படலாம். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி வரும்.

இந்த குருப்பெயர்ச்சி உங்களைக் கடினமாக உழைக்க வைப்பதுடன் உங்கள் பலம், பலவீனங்களையும் உணர வைப்பதாக அமையும்.

ரிஷபம்: கடின உழைப்பாளிகளே...

ராசிக்கு 11-ம் வீட்டில் குருபகவான் நுழைவதால், உங்கள் கனவுகள் நனவாகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வீடு கட்டும் பணி முழுமையடையும். உங்களின் 3-ம் வீட்டையும், 7-ம் வீட்டையும் குரு பார்ப்பதால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீண் பழி, உடல் நலக் கோளாறு நீங்கும். 21.11.2010 முதல் 2.1.2011 வரை குரு பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால்... கணவருடன் வாக்குவாதம், பணப்பற்றாக்குறை ஏற்படக்கூடும். 3.1.2011 முதல் 13.3.2011 வரை சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால்... வீடு, வாகன வசதி பெருகும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். 14.3.2011 முதல் 7.5.2011 வரை குரு பகவான் உங்கள் யோகாதிபதி புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால், குடும்ப வருமானம் உயரும். உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். இடமாற்றம் உண்டு.

இந்த குருப்பெயர்ச்சி வசதி, வாய்ப்புகளை தருவதுடன், சமூகத்தில் உங்களை தலை நிமிர வைப்பதாகவும் அமையும்.

மிதுனம்: வாரி வழங்குபவர்களே...

உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமரும் குரு உங்களை எதார்த்தமான முடிவுகளை எடுக்க வைப்பார். குருபகவான் உங்களின் 2-ம் வீட்டை பார்ப்பதால், குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உங்கள் ராசிக்கு சுகவீடான 4-ம் வீட்டையும், 6-ம் வீட்டையும் குரு பார்ப்பதால்... உடல் உபாதை விலகும். என்றாலும், குரு உங்களுக்கு பாதகாதிபதி என்பதால் வீண் டென்ஷன், செலவுகள் வந்து போகும். 21.11.2010 முதல் 2.1.2011 வரை உங்கள் பாதகாதிபதியான குருபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால்... கணவருடன் வீண் விவாதம், மறைமுக அவமானம் வந்து செல்லும். 3.1.2011 முதல் 13.3.2011 வரை சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், புது முயற்சிகள் பலிதமாகும். ஓரளவு பணம் வரும். ஆனால், சேமிக்க முடியாதபடி செலவுகள் அதிகரிக்கும். 14.3.2011 முதல் 7.5.2011 வரை குரு பகவான் புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால், சாதித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கடின உழைப்பால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும்.

இந்த குருப்பெயர்ச்சி உங்களை சகிப்புத்தன்மையால் சாதிக்க வைக்கும்.

கடகம்: தன்மானச் சிங்கங்களே...

உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குரு அமர்வதால், தொட்ட காரியம் துலங்கும். குருபகவான் உங்கள் ராசியையும், உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டையும் பார்ப்பதால்... புகழ், கௌரவம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவர் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார். மகளுக்கு நல்ல வரன் அமையும். 21.11.2010 முதல் 2.1.2011 வரை குருபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால், வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். 3.1.2011 முதல் 13.3.2011 வரை சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், குடும்பத்தில் உங்கள் கை ஒங்கும். ஆனால், பிப்ரவரி மாதத்திலிருந்து கணவருடன் கருத்து மோதல்கள், உடல் உபாதை வந்து செல்லும். 14.3.2011 முதல் 7.5.2011 வரை குரு பகவான் புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால், உறவினர்கள் உங்கள் வீடு தேடி வருவார்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வியக்கும்படி நடந்து கொள்வீர்கள்.

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும், சவால்களில் வெற்றியையும் தருவதாக அமையும்.

சிம்மம்: நெஞ்சுறுதி கொண்டவர்களே...

உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் குரு பகவான் நுழைவதால், குடும்பத்தில் அடுத் தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குருபகவான் உங்களின் 2-ம் வீட்டையும், சுக ஸ்தானத்தையும் பார்ப்பதால், எதிர்பார்த்த பணம் வரும். கணவர் சுறுசுறுப்பாக இருப்பார். பிள்ளைகள் அயல்நாடு சென்று உயர்கல்வி தொடர்வார்கள். உங்களிடம் கடன் வாங்கியவர்கள் பணத்தைத் திருப்பித் தருவார்கள். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். 21.11.2010 முதல் 2.1.2011 வரை குருபகவான் பூரட்டாதி நட்சத்திரம் 4-ம் பாதத்தில் செல்வதால், திடீர் திருப்பங்கள் உண்டாகும். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். 3.1.2011 முதல் 13.3.2011 வரை சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். என்றாலும்... வீண் அலைச்சல், இழப்பு வந்து நீங்கும். 14.3.2011 முதல் 7.5.2011 வரை குருபகவான் புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால், பேசியே பல பெரிய காரியங்களை சாதிப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும், தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

இந்த குருப்பெயர்ச்சி உங்களை கொஞ்சம் அலைக்கழித்தாலும், இறுதியில் வெற்றியையே தருவதாக அமையும்.

கன்னி: பொறுமையின் சிகரங்களே...

ராசிக்கு 7-ம் வீட்டில் குருபகவான் ஆட்சிப்பெற்று அமர்வதால், திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். மனத்தாங்கலால் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். குருபகவான் உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்ப்பதால், கணவர் உங்களைப் பாராட்டுவார். வாரிசு உருவாகும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். குருபகவான் உங்களின் 3-ம் வீட்டையும், லாப வீட்டையும் பார்ப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. தங்க ஆபரணம் வாங்குவீர்கள். 21.11.2010 முதல் 2.1.2011 வரை குருபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால், பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். 3.1.2011 முதல் 13.3.2011 வரை சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாத நிலை இருக்கும். 14.3.2011 முதல் 7.5.2011 வரை குருபகவான் உங்கள் ராசிநாதன் புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால், உடல் அசதி நீங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு.

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு எதையும் சாதிக்கும் மனப்பக்குவத்தையும், வெற்றியையும் தருவதாக அமையும்.

துலாம்: துணிச்சல் மிக்கவர்களே...

உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் குருபகவான் நுழைந்திருப்பதால், கொஞ்சம் அலைக்கழித்தாலும் முடிவில் வெற்றியைத் தருவார். உங்களின் பிரபல யோகாதிபதிகளான சனிபகவான் மற்றும் புதனின் நட்சத்திரத்தில் குரு செல்வதால் அவ்வப்போது உங்களுக்கு யோகபலன்களையும் தருவார். குரு உங்களின் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டைப் பார்ப்பதால், கணவருக்கு வருமானம் அதிகரிக்கும். குருபகவான் உங்களின் 10-ம் வீட்டை பார்ப்பதால் புது வேலை கிடைக்கும். 12-ம் வீட்டையும் பார்ப்பதால், புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். 21.11.2010 முதல் 2.1.2011 வரை உங்களின் தைரிய ரோகாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். 3.1.2011 முதல் 13.3.2011 வரை உங்களின் சுக, பூர்வ புண்யாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால்... புது வீடு, வாகனம் வாங்குவீர்கள். 14.3.2011 முதல் 7.5.2011 வரை குருபகவான் உங்கள் பாக்ய விரயஸ்தானாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால்... உறவினர்கள், நண்பர்களுடனான மனக்கசப்பு நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் கடுமையாக உழைக்க வேண்டி வரும்.

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு அலைச்சலுடன் ஆதாயத்தை தருவதாக அமையும்.

விருச்சிகம்: மேன்மையானவர்களே...

ராசிக்கு 5-ம் வீட்டில் குருபகவான் நுழைவதால், உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் போன்ற விஷயங்கள் சாதகமாக முடியும். பூர்விக சொத்தை விற்று புதுச் சொத்து வாங்குவீர்கள். குரு உங்கள் ராசியை பார்ப்பதால் ஆடை, ஆபரணம் சேரும். குருபகவான் உங்களின் 9-ம் வீட்டையும், லாப வீட்டையும் பார்ப்பதால் கடன் பிரச்னைகள் தீரும். நவீன சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். 21.11.2010 முதல் 2.1.2011 வரையிலான காலகட்டங்களில் உங்களின் தன பூர்வப் புண்யாதிபதியான குருபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வீடு கட்ட லோன் கிடைக்கும். 3.1.2011 முதல் 13.3.2011 வரை சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வ தால் அரசு வேலைகள் முழுமையடையும். 14.3.2011 முதல் 7.5.2011 வரை குருபகவான் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால், சின்னச் சின்ன இழப்புகள் ஏற்படலாம். வியா பாரத்தில் வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு திடீர் திருப்பங்களை யும், வாய்ப்புகளையும் தருவதாக அமையும்.

தனுசு: சொன்ன சொல் தவறாத குணம் உடையவர்களே...

உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் குரு அமர்வதால், ஓரளவு நிம்மதி கிட்டும். ஆனால், ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். கணவருடன் மனஸ்தாபம் ஏற்படலாம். பணப்பற்றாக்குறை நீடித்தாலும், கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். உறவினர்கள், தாயாருடன் மனத்தாங்கல் வரும். என்றாலும், குருபகவான் உங்கள் சுக ஸ்தானத்தில் ஆட்சிப்பெற்று அமர்வதால் பாசம் குறையாது. 21.11.2010 முதல் 2.1.2011 வரை உங்களின் ராசிநாதனும், சுகாதிபதியுமான குருபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால்... மறைமுக அவமானம், இனம்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். 3.1.2011 முதல் 13.3.2011 வரை சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால்... ஏமாற்றம், வீண் டென்ஷன் ஏற்படக்கூடும். 14.3.2011 முதல் 7.5.2011 வரை குருபகவான் புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால், கணவர் பாசமாகப் பேசுவார். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.

இந்த குருப்பெயர்ச்சி உங்களை பக்குவப்படுத்துவதுடன், வாழ்க்கையின் சூட்சமத்தை உணர்த்துவதாக அமையும்.

மகரம்: தர்மத்தின் வழி நடப்பவர்களே...

உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் குருபகவான் மறைவதால், சட்டென்று யாரையும் நம்பாதீர்கள். உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை குரு பார்ப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். குருபகவான் உங்களின் 9-ம் வீட்டையும், லாப வீட்டையும் பார்ப்பதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மகனுக்கு புது வேலை கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். 21.11.2010 முதல் 2.1.2011 வரை குருபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் பாதியில் நின்ற வீடு கட்டும் பணி முழுமையடையும். 3.1.2011 முதல் 13.3.2011 வரை சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். 14.3.2011 முதல் 7.5.2011 வரை குருபகவான் புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பூர்விக சொத்து கைக்கு வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். புதிய பொறுப்புகள் தேடி வரும்.

இந்த குருப்பெயர்ச்சிஉங்களை குழப்பங்களில் இருந்து விடுவிப்பதுடன், இலக்கை எட்டிப் பிடிக்க வைக்கும்.

கும்பம்: களங்கமில்லாத உள்ளத்துக்கு சொந்தக்காரர்களே...

உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் குருபகவான் அமர்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால், குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். குருபகவான் உங்களின் ஆறாவது வீட்டையும், 8-வது வீட்டையும் பார்ப்பதால்... அலைச்சல், உடல் நலக் கோளாறு குறையும். குரு உங்களின் பத்தாவது வீட்டையும் பார்ப்பதால் திடீர் யோகம் உண்டாகும். 21.11.2010 முதல் 2.1.2011 வரை குருபகவான் தன் நட்சத்திரத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். 3.1.2011 முதல் 13.3.2011 வரை சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். 14.3.2011 முதல் 7.5.2011 வரை குருபகவான் புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு, வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.

இந்த குருப்பெயர்ச்சி அஷ்டமத்துச்சனியை கட்டுப்படுத்துவதுடன், தொலைநோக்குச் சிந்தனையால் உங்களை வெற்றி பெற வைக்கும்.

மீனம்: அற்புதமாக சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்களே....

உங்கள் ராசிக்குள்ளேயே குரு நுழைவதால், வேலைகளை முதல் முயற்சியில் முடிக்க முடியாமல் மூன்றாம் முயற்சியில் முடிக்க வேண்டி வரும். குருபகவான் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் கணவரின் பாசம் குறையாது. ஆனால், ஜென்ம குருவாக இருப்பதால் அவருடன் வாக்குவாதங்கள் வரும். குருபகவான் உங்களின் 5-ம் வீட்டையும், 9-ம் வீட்டையும் பார்ப்பதால், பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். 21.11.2010 முதல் 2.1.2011 வரை உங்கள் ராசிநாதனும், ஜீவனாதிபதியுமான குருபகவான் தன் நட்சத்திரத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால், பணம் வரும். 3.1.2011 முதல் 13.3.2011 வரை உங்களின் லாப, விரயாதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், வீடு வாங்க, கட்ட லோன் கிடைக்கும். 14.3.2011 முதல் 7.5.2011 வரை உங்கள் சுக, சப்தமாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் குரு செல்வதால், சிநேகிதிகள், உறவினர்களுடன் மனத்தாங்கல் வரலாம். புதன் பாதகாதிபதியாக இருப்பதால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில், வேலையாட்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

இந்த குருப்பெயர்ச்சி உங்கள் அனுபவ அறிவை அதிகப்படுத்துவதாக அமையும்.

http://www.vikatan.com/aval/dig3vc.html

  • கருத்துக்கள உறவுகள்

.

இந்த... குருப் பெயர்ச்சி எனக்கு, நல்லது செய்யிறதுக்கு எண்டே...... மாறியிருக்குது போல் உள்ளது. :D

இணைப்பிற்கு நன்றி கறுப்பி. :D

.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கூடாது எனப் போட்டு இருக்குது...எப்ப பார்த்தாலும் சனி அல்லது குரு மாறி,மாறி கூடாததைத் தான் தந்து கொண்டு இருக்குது :D நான் நாத்திகனாய் மாறப் போறேன் :lol: ...என் ராசிக்காரர்கள் அற்புதமாய் சிந்திக்கும் ஆற்றல் கொண்டவராம் :D

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாம் தன்மானச் சிங்கம்யா..! :D :D :lol:

21.11.2010 முதல் 7.5.2011 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள்

தனுசு: சொன்ன சொல் தவறாத குணம் உடையவர்களே...

உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் குரு அமர்வதால், ஓரளவு நிம்மதி கிட்டும். ஆனால், ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். கணவருடன் மனஸ்தாபம் ஏற்படலாம். பணப்பற்றாக்குறை நீடித்தாலும், கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். உறவினர்கள், தாயாருடன் மனத்தாங்கல் வரும். என்றாலும், குருபகவான் உங்கள் சுக ஸ்தானத்தில் ஆட்சிப்பெற்று அமர்வதால் பாசம் குறையாது. 21.11.2010 முதல் 2.1.2011 வரை உங்களின் ராசிநாதனும், சுகாதிபதியுமான குருபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால்... ..

நல்ல வேளை நான் Gay இல்லை :D:lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

:D கடைக்குட்டி நடக்க வெளிக்கிட்டுட்டாள்.பிரச்சனையில்லை :D
  • கருத்துக்கள உறவுகள்

planets.jpg

கோட்சார பலன்களை போல 2 ஆதிபத்தியங்கள் பெற்ற கிரகங்கள் வாரி வழங்குவதில்லை... முதலில் கோட்சாரத்தில் கூறப்பட்டுள்ள கால அளவையில் முதல் பாதி முதலில் மாட்டும் ஆதிபத்தியத்திற்கான பலன்களையும் ... பிற்பாதில் இரண்டாவது ஆதிபத்தியத்திற்கான பலங்களையும் வழங்கும்...சூரியன் சந்திரன் மட்டுமே ஒற்றை ஆதிபத்தியம் பெற்றுள்ள கிரகங்களாகும் :D

டிஸ்கி:

1,4,7,10, அனுகூல ஆதிபத்தியங்கள்...

5,9,11 யோக ஆதிபத்தியங்கள்

3,6,8,12 துர் ஆதிபத்தியங்கள்

உதாரணமாக உங்கள் ராசி மேசம் என வைத்து கொள்வோம்... அங்கிருந்து எண்ணிவர தனுசு 9 ஆக வருகிறது இதன் அதிபதி குருவாகும்... இது யோக ஆதிபத்தியமாகும் எனவே இந்த குருபெயர்ச்சி முதல் பாதி யோகமாக இருக்கும் ... அப்படியே மேலே இன்னும் கூட்டி கொண்டு வாங்க மீன ராசி 12 ஆக மாட்டுகிறது ..இதன் அதிபதியும் சேம் குருவாகும்.. இது துர் ஆதிபத்தியமாகும் (அதாவது செலவு அதிகம் ஏற்படும் காலமாகும்) எனவே இரண்டாவது பாதி குருவின் சுபாவபடி அனாதை சிறுவர்கள் ஆதரவற்றவர்களுக்காக காசு விரையம் செய்வீர்கள்... ஒரளவு செலவு எந்த வகையில் ஏற்படும் என கிரகங்களை வைத்து ஊகித்து சொல்லலாம் ரைட்டு :D

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

இப்படியான தகவல்களை ஒரு ஆங்கில இணையத்தில் தவழ விட்டால், வெள்ளையர்களிடம் இருந்து கொஞ்சம் பணம் பறிக்கலாம் :rolleyes: இந்த சேவைக்கு.

எனக்கு கூடாது எனப் போட்டு இருக்குது...எப்ப பார்த்தாலும் சனி அல்லது குரு மாறி,மாறி கூடாததைத் தான் தந்து கொண்டு இருக்குது :rolleyes: நான் நாத்திகனாய் மாறப் போறேன் :D ...என் ராசிக்காரர்கள் அற்புதமாய் சிந்திக்கும் ஆற்றல் கொண்டவராம் :)

நீங்கள் நாத்திகனாகிறதில பிரச்னை இல்லை ரதி, பாவம் ஆறுமுகநாவலரை கேள்விகள் கேட்டு நாத்திகனாய் ஆக்கிடாதேயுங்கோ.... :D:D

  • கருத்துக்கள உறவுகள்

21.11.2010 முதல் 7.5.2011 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள்

கும்பம்: களங்கமில்லாத உள்ளத்துக்கு சொந்தக்காரர்களே...

உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் குருபகவான் அமர்வதால்,

1) பணப்புழக்கம் அதிகரிக்கும்.

2)குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால், குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும்.

3)குருபகவான் உங்களின் ஆறாவது வீட்டையும், 8-வது வீட்டையும் பார்ப்பதால்... அலைச்சல், உடல் நலக் கோளாறு குறையும்.

4)குரு உங்களின் பத்தாவது வீட்டையும் பார்ப்பதால் திடீர் யோகம் உண்டாகும்.

5)21.11.2010 முதல் 2.1.2011 வரை குருபகவான் தன் நட்சத்திரத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். தங்க ஆபரணம் வாங்குவீர்கள்.

6)3.1.2011 முதல் 13.3.2011 வரை சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள்.

7)14.3.2011 முதல் 7.5.2011 வரை குருபகவான் புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு, வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு .

இந்த குருப்பெயர்ச்சி அஷ்டமத்துச்சனியை கட்டுப்படுத்துவதுடன், தொலைநோக்குச் சிந்தனையால் உங்களை வெற்றி பெற வைக்கும்.

[

என்னை வைத்து ஒன்றும் காமடி பண்ணலையே...........

Edited by விசுகு

குமாரசாமி

Posted Yesterday, 09:51 AM

Quote

குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

:unsure: கடைக்குட்டி நடக்க வெளிக்கிட்டுட்டாள்.பிரச்சனையில்லை :unsure:

விசுகு

Posted Yesterday, 04:06 PM

View Postகறுப்பி, on 09 November 2010 - 01:55 AM, said:

21.11.2010 முதல் 7.5.2011 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள்

கும்பம்: களங்கமில்லாத உள்ளத்துக்கு சொந்தக்காரர்களே...

உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் குருபகவான் அமர்வதால்,

1) பணப்புழக்கம் அதிகரிக்கும்.

2)குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால், குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும்.

3)குருபகவான் உங்களின் ஆறாவது வீட்டையும், 8-வது வீட்டையும் பார்ப்பதால்... அலைச்சல், உடல் நலக் கோளாறு குறையும்.

4)குரு உங்களின் பத்தாவது வீட்டையும் பார்ப்பதால் திடீர் யோகம் உண்டாகும்.

5)21.11.2010 முதல் 2.1.2011 வரை குருபகவான் தன் நட்சத்திரத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் செல்வதால் கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். தங்க ஆபரணம் வாங்குவீர்கள்.

6)3.1.2011 முதல் 13.3.2011 வரை சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள்.

7)14.3.2011 முதல் 7.5.2011 வரை குருபகவான் புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு, வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு .

இந்த குருப்பெயர்ச்சி அஷ்டமத்துச்சனியை கட்டுப்படுத்துவதுடன், தொலைநோக்குச் சிந்தனையால் உங்களை வெற்றி பெற வைக்கும்.

[

என்னை வைத்து ஒன்றும் காமடி பண்ணலையே....

.......

விசுகுவும் கு ச அண்ணையும் ஓரே ராசிபோல

ஆமா இரண்டுபேருக்கம் ஒரே பலன்தான் நடக்குதோ?

  • கருத்துக்கள உறவுகள்

21.11.2010 முதல் 7.5.2011 வரை

குருப்பெயர்ச்சி பலன்கள்

கும்பம்: களங்கமில்லாத உள்ளத்துக்கு சொந்தக்காரர்களே...

14.3.2011 முதல் 7.5.2011 வரை குருபகவான் புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

வீடு, வாகன வசதி பெருகும். [

ஒரு நண்பர் தொலைபேசி எடுத்து சுட்டிக்காட்டிய பின்னர்தான் நானும் விளக்கமாக பார்த்தேன்

நீங்களும் பாருங்கள்

இறைவா

நீ இதை சொல்லணும்

நான் நடத்தணும் :unsure: :unsure: :unsure:

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நண்பர் தொலைபேசி எடுத்து சுட்டிக்காட்டிய பின்னர்தான் நானும் விளக்கமாக பார்த்தேன்

நீங்களும் பாருங்கள்

இறைவா

நீ இதை சொல்லணும்

நான் நடத்தணும் :unsure: :unsure: :unsure:

சொல்லிட்டா போச்சு பக்தனே :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இறைவா! எனக்கும் அலைச்சலாம் அடியேனுக்கும் ஒரு நல் வார்த்தை சொல்லுகிறது! :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.