Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டமைப்பை சந்திக்காது கிருஸ்ணா சென்றுவிட்டார்: கூட்டமைப்பு அதிருப்தி

Featured Replies

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சந்திப்பதாக இருந்தது. எனினும் நேரமின்மைக் காரணமாக அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

எஸ்.எம்.கிருஷ்ணா இன்று காலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சந்திப்பதாக இருந்தது எனினும், அவர் ஹம்பாந்தோட்டயில் அமைக்கப்பட்டுள்ள இந்திய துணைத் தூதரகக் கிளையை திறக்கச் சென்றுவிட்டதனால் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டுள்ள இந்திய கிளைக் காரியலாயத்தை திறந்து வைத்தவுடன் எஸ்.எம்.கிருஷ்ணா இந்தியா நோக்கிப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

.தமக்கு நேரம் இல்லையென கிருஸ்ணா கூறியதாக சுரேஸ் எம். பி. கூறியுள்ளார். இதனால் தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

புலி இருக்கும் வரைதான் எல்லோருக்கும் மதிப்பும் மரியாதயும் என்பதனை உணரும் காலங்கள் ............. கண்முன்னே நடக்கின்றன

ஈழ நாதம்

Edited by உமை

இதற்கு பின்னல் நிச்சயம் சிங்களம் இருந்திருக்கும். இந்தியாவும் சிங்களத்தை இன்னும் முழுமையாக கைவிடும் நிலைக்கு வரவில்லை.

இந்த அணுகுமுறை மூலம் சீனாவுடனான உறவை சிங்களம் குறைக்கும் என இந்தியா எதிர்பார்க்கின்றது.

சிங்களம் குறைக்குமா என்பதில் இந்தியாவின் அடுத்த நகர்வு இருக்கலாம்.

அதுவரைக்கும் இந்தியாவுக்கு மன்னார் கடலில் எண்ணெய் வள ஆய்வு ( அமெரிக்காவில் நடந்த BP oil spill அழிவு போல இங்கும் நடக்கலாம்), சம்பூரில் அனல் மின் நிலையம் ( எவரேடியின் போபால் அழிவு போல இங்கும் நடக்கலாம்) , இரயில் போடும் ஒப்பந்தம் என "முதலீடுகள்" செய்கின்றது.

இந்தியாவுக்கு ஒரு அரசியல் தீர்வு இலங்கையில் தேவை என்பது இன்னும் முக்கியமாக தெரியவில்லை.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஹம்பாந்தோட்டயில் அமைக்கப்பட்டுள்ள இந்திய துணைத் தூதரகக் கிளையை திறக்கச் சென்றுவிட்டதனால் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

panipuri.jpg

இவனுங்கள் இந்த கடையின் மூலம் பானி பூரி வியாபாரம் செய்யும் முன்னர் ஈழ தோழர்கள் ஏதாவது செய்யவேணும்.. அப்படியே அந்த கடையின் மூலம் பானி பூரி விற்றால் யாரும் வாஙக கூடாது யாழ்பாணத்திலும் குருஸ்ணா திறக்க சென்றாராம்... எனவே இந்த கடைகளை புறக்கணிக்குக..

கொள்கைகளை விட்டு விட்டு இந்தியாவின் சொற்படி ஆடியவர்களுக்கு இந்தியா மீண்டும் பாடம் படிப்பித்திருக்கிகிறது.கஜேந்திர குமாரை வெளியேற்றிய போது எது நடக்கும் என்று சொன்னோமோ அது நடக்கிறது.அன்று சம்பந்தனுக்காக வாதிட்ட இறைவன் முதலானோர் இன்று என்ன சொல்கிறீர்கள்? இந்தியாவையும் சிறிலங்காவையும் நம்பி அரசியல் செய்தால் என்ன நடக்கும் என்பதற்க்கு பல வரலாறுகள் இருக்கின்றன.வரலாற்றில் இருந்து பாடம் படிக்காதவர்கள் மீண்டும் மீண்டும் தவறிழைப்பர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலி இருக்கும் வரைதான் எல்லோருக்கும் மதிப்பும் மரியாதயும் என்பதனை உணரும் காலங்கள் ............. கண்முன்னே நடக்கின்றன

இப்ப நடக்கிறதெல்லாம் வந்து நூற்றிலை ஒருபங்குதான் கண்டியளோ?

விசயம் இன்னும் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

சீனா இலங்கையில் வராதபடி இந்தியா எந்த வியூகம் எடுத்தாலும் சரிவராது.இலங்கை சீனா/பாகிஸ்தான் பக்கம் தான் நிற்கின்றது.இந்தியா ஏமாந்தது மட்டுமிலாமல் தலையிடியையும் தனது அரசியல் சாணக்கியமின்மையால் தொடர்ந்து தோற்றவண்ணம் உள்ளது. இந்தியாவுக்கு மிண்டு கொடுத்த ஒட்டுக்குழுக்கள், கூட்டணியினர் பாடும் அம்போ தான்.அமெரிக்கா/ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை விவகாரங்களில் தலையிட முடியாதபடி சீனா தனது காலை ஸ்திரமாக பதித்த வண்ணம் உள்ளது.

Edited by nunavilan

இஹிந்தியர் தமிழின விரோதிகள், தமிழின படுகொலையாளர்கள், பயங்கரவாதிகள் என் மீண்டும் நிரூபித்துள்ளனர். முதுகெலும்பில்லாத சம்பந்தன் முதுகெலும்புள்ளவர்களை கூத்தமைப்பில் இருந்து துரத்திக் கொண்டிருக்கட்டும்.

  • தொடங்கியவர்

கூத்தமைப்போ யாரோ அங்குள்ள மக்களுக்கு சரியான முறையில் உ|ண்மைகளை சொல்லவேண்டும். அவர்கள் என்ன இராஜதந்திரம் செய்யதாலும் பரவாயில்லை ஆனால் மக்களுக்கு யாரையும் நம்பி நம்பிக்கைகளையூட்டி தேர்தலில் வெற்றி பெறுவதே நோக்கமாக இருக்க கூடாது.

அதே நேரம் கஜேந்திரகுமார் போன்றவர்களும் தேர்தலில் தோற்றுவிட்டோம் என சொல்லிக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது. காவடி எடுத்தால் ஆடித்தான் ஆகவேண்டும். வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சென்று தினமும்மக்களை சந்தித்து பேசவேண்டும். ஊடகபலம் இல்லாவிடிலும் தனி நபர் பிரச்சாரங்களைசெய்யலாம்.

இந்த விசயத்தில் புலிகளின் பிரச்சார முறைகள் யுக்திகளை பாவிக்கலாம். புலிகள் ஊடகத்தை நம்பி எதுவும் செய்யவில்லை. எடுத்துக்காட்டாக இந்திய இராணுவ காலகட்டம் பற்றியும் குறிப்பிடலாம்.

கிராமம் தோறும் ஒரு தொண்டர் அல்லது ஒரு முகவர் இருந்தாலே போதும்...

ஒரு பத்திரிகையாளர் மா நாடு பலன் தராது.. அறிக்கைகள் முழு பலனையும் தராது.. உங்கள் கட்சியில் ஒவொரு உதவி அரசாங்க அதிபர் பிரிவிலும் எவ்வளவு தொண்டர்கள் இருக்கின்றார்கள் என கேட்டால் கஜேந்திர குமார் அண்ணையிடம் பதில் இல்லை.

கூட்டமைப்பு கூட இந்த விடயத்தில் நல்ல பதில் இல்லை. ஆக குறைந்தது ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் ஒரு கொட்டிலாவது உங்கள் கட்சிகளுக்கு உண்டா????

மக்கள் எம்மைத்தேடு வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. இது அதிகாரம் உள்ளவர்களிற்குத்தான் பொருந்தும்.

மக்களை தேடி நாம் செல்ல வேணும் என்பதும் இப்போ எடுபடாது. ஏனென்றால் இப்போதைய பிரச்சார நுட்பங்கள் அதைவிட வேகமானது.

மக்களுடனேயே நாம் இருக்க வேண்டும் என்பதுதான் இப்போ சரியானது.....

இதனைத்தான் புலிப்போராளிகள் செய்தார்கள்..

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

//

Edited by vasee

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா எப்படிப் பட்டதென்றால் ... பக்கத்து வீட்டு காரனோடு படுக்கும் தன் பொண்டாட்டியை கட்டுப்படுத்தவும் தெரியாமல் வெட்டிவிடவும் முடியாமல் தன் பங்குக்கு தானும் அப்பப்போ படுத்தெழும்பும் புருசனைப் போன்றது.

  • கருத்துக்கள உறவுகள்

படுத்த கையோட 3 வது வீட்டுக்காரனுக்கு (பாகிஸ்தான்காரனுக்கு) விட்டுக்கொத்துப் போட்டு வெளிக்கிட்டிட்டாங்கள். வெட்கம் கெட்ட பிறப்புகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா எப்படிப் பட்டதென்றால் ... பக்கத்து வீட்டு காரனோடு படுக்கும் தன் பொண்டாட்டியை கட்டுப்படுத்தவும் தெரியாமல் வெட்டிவிடவும் முடியாமல் தன் பங்குக்கு தானும் அப்பப்போ படுத்தெழும்பும் புருசனைப் போன்றது.

ஆயிரத்தில் ஒரு பொன்னான வசனம் காட்டாறு :D

தமிழ் கட்சிகள் அரங்க மகஜர் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கையளிப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் கையளிப்பதற்காக தமிழ்க் கட்சிகள் அரங்கத்தினால் தயாரிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் அடங்கிய மகஜரொன்று இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று காலை கையளிக்கப்பட்டது.

தமிழ் கட்சிகளின் அரங்க பிரதிநிதிகளான புளொட் தலைவர் டி.சித்தார்த்தன், எஸ்.டி.சந்திரகாசன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணி ரி.சிறிதரன் ஆகியோரினாலேயே இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போது அவரை சந்திப்பதான முயற்சியில் தமிழ்க் கட்சிகள் அரங்கம் ஈடுபட்டது.

இருப்பினும் தமிழ்க் கட்சிகள் அரங்கத்துடனான சந்திப்பில் ஈடுபடுவதற்கு எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு நேரமின்மை காணப்பட்டதால் அந்த முயற்சி பயனளிக்காது போனது. இந்நிலையிலேயே இந்தியத் தூதுவர் ஊடாக எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு மகஜரொன்றை அனுப்பி வைக்க தமிழ்க் கட்சிகள் அரங்கம் நடவடிக்கை எடுத்தது.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/12126-2010-11-30-09-28-06.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.