Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரகாஷ்ராஜ் கூட இப்பவும் நட்பாக இருக்கிறேன். லலிதகுமாரி

Featured Replies

இந்தப் பேட்டியை நீங்க எழுதும்போதுகூட பிரகாஷ்ராஜின் முதல் மனைவினுதான் எழுதுவீங்க.அதுதான் என் அடையாளம்.அந்த அடையாளத்தை சந்தோஷமாக ஏத்துக்கிறேன்’’ என்கிறார் லலிதகுமாரி.

முகத்தில் மாறாத சிரிப்புடன் இயல்பாய் பேசுகிறார்.

‘‘விவாகரத்தாகிவிட்டதற்குப் பிறகு அதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை’’என்று சொல்லும் லலிதகுமாரி, சமீபத்தில் ஒரு விழாவில் பிரகாஷ்ராஜின் மனைவி போனி வர்மாவைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.விவாகரத்தும் அதற்குப் பிறகுமான வாழ்க்கையைப் பற்றியும் கேட்கும்போது பக்குவமாக யதார்த்தமாக பதில் சொல்கிறார்.

‘‘சமீபத்துல என் தோழியின் மகள்கிட்டருந்து ஒரு போன். ‘என் கணவர் விவாகரத்து கேட்கிறார்.என்னால தாங்கிக் கொள்ள முடியவில்லை. கவுன்சலிங் செய்யுங்களேன்’னு அழுதாள்.அவளுக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியல.கவுன்சலிங் செய்யும் அளவிற்கு நான் முன்னேறலை.ஆனால் ஒரு விஷயம் மட்டும் சொல்ல முடியும். தொடர்ந்து கணவன்-மனைவி சண்டை போடுவதால் யாருக்கு லாபம்? சந்தி சிரிக்க மீடியாவில் ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கொள்வதில் என்ன கிடைக்கப்போகுது? இதனால் மேலும் வெறுப்புதான் அதிகமாகுமே தவிர பிரச்னைகள் சரியாகாது.விவாகரத்து செய்யப் போறோம்னு முடிவு செய்தாச்சு, அடுத்து என்ன பண்ணலாம்? இதுதான் முதல் எண்ணமாக இருக்கணும்.’’

பிரகாஷ்ராஜ் விவாகரத்து பற்றி உங்களிடம் பேசியபோது இப்படித்தான் தோன்றியதா?

‘‘பிரகாஷ் என்னிடம் விவாகரத்து கேட்கும்போது பிள்ளைகள் பற்றிய யோசனை தான் முதல்ல வந்துச்சு. கணவன் மனைவி பிரிந்துடலாம். ஆனால்,பிள்ளைகளும் அப்பாவும் பிரிய முடியாது. பசங்களுக்கு அப்பாவின் அன்பு தேவைப்படும். இதைப்பத்திதான் ரொம்ப யோசிச்சேன்’’ லலிதகுமாரி குரல் கனமாகிறது.

‘‘ இங்கே ஒரு விஷயத்தைச் சொல்லணும். விவாகரத்திற்குப்பிறகும் கணவரோடு முறுக்கிக்கொள்ளாமல் அவருடன் சுமுகமான பேச்சுவார்த் தையில் இருப்பதுதான் சரியான அணுகுமுறையாக நான் நினைக்கிறேன்.இன்றும் நான் அவருடன் நட்பாக இருக்கிறேன்.இது எதுக்குனா குழந்தைகளுக்காக.இப்பவும் என் மகள்களின் படிப்பு உட்பட அனைத்தையும் அவர்தான் பார்க்கிறார். வெளியூர், கோயில்களுக்கு நான் போகவேண்டி யிருந்தால்,மகள்களை அவர் வீட்டில் விட்டால் பார்த்துக்கறாங்க. விவாகரத்து, பசங்களின் மனதில் சின்ன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.தொடர்ந்து நம்ம பிரச்னையால் அவர்களுக்கு ஸ்டிரெஸ் கொடுக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கேன்.என் மகள்களின் மனதில் பிரகாஷ் பற்றி எந்த வெறுப்பான எண்ணங்களையும் நான் விதைக்கல.அதனால்தான் அவர்களால் சந்தோஷமாக அப்பாவின் திருமண வரவேற்பில் கலந்துக்க முடிஞ்சுச்சு!’’

சமீபத்தில் போனி வர்மாவையும் சந்தித்திருக்கிறீர்களே?

‘‘ஒரு கல்யாண நிகழ்ச்சியில் போனிவர்மாவையும் பிரகா ஷையும் முதன்முதலாக சந்திச்சேன். நானே போய் போனியிடம் பேசினேன். ‘நல்லா இருக்கீங்களா?’ன்னு கேட்டேன்.அவங் களும் நலம் விசாரிச்சாங்க. அவ்வளவுதான்.... ‘உன்னை நினைத்-தால் ரொம்ப பெருமையாக இருக்கு’-ன்னு பிரகாஷ் ஃபோனில் அழைத்துச் சொன்னார்.’’

போனிவர்மாவைப் பார்த்தபோது உங்களுக்கு என்ன தோணிச்சு?

‘‘ஒரு விஷயம் மட்டும்தான் மனசுல தோணிச்சு... அவங்க அழகா இருக்காங்க’’ அழகாக சிரிக்கிறார் லலிதகுமாரி

thanks to kumudam.jpg

for see more pictures go to .....

http://www.thedipaar.com/cinema/cinema.php?id=5636

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தத்தை சரியாக எடைபோட்டுவிட்ட பெண்மணி. பாவம் பிரகாஸ்ராஜ்! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தத்தை சரியாக எடைபோட்டுவிட்ட பெண்மணி. பாவம் பிரகாஸ்ராஜ்! :rolleyes:

உண்மைதான்.. குழந்தைகளின் நலனை முன்னிறுத்திய பக்குவம் சிறப்பானது..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பிடிப்பற்ற கணவன் மனைவியாய் வாழ்வதைக்காட்டிலும் மணபந்தத்தில் இருந்து விலகி நண்பர்களாக இருப்பது சிறந்தது. நமது சமூகத்தில்தான் ஒரு கணவனும் மனைவியும் பிரிந்தால் அவர்களின் அந்தரங்க வாழ்க்கையிலிருந்து அனைத்தையும் அலசி மொத்தத்தில் வாழ்க்கைத்துணை பொருந்தாத துன்பத்தில் விலகியவர்களை அதனைவிட அதிக வேதனையைக் கொடுத்து மனநோயாளிகள் ஆக்கிவிடுவார்கள். கவுன்ஸிலிஞ் செய்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள். துணையைக் காட்டிலும் துயரைத் தருவது ஒருவரின் முகத்தை அறியாமலே விமர்சனம் செய்யும் சமூகந்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே எல்லா மனைவி மாரும் இருந்திட்டா ஆண்களின் பாடு ஒரு வகையில் கொண்டாட்டமும் இன்னொரு வகையில் திண்டாட்டமுமாய் இருக்கும்..!

புது மனைவி - கொண்டாட்டம்.

எல்லா மனைவிகளோடும் உருவாக்கும் வாரிசுகளால்.. செலவுகால்.. திண்டாட்டம்.

லலிதாகுமாரி புத்திசாலி. குழந்தைகளோடு தன்னை கழற்றிவிடப் பார்த்த கணவருக்கு நல்ல தண்டனை...! :lol::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பிடிப்பற்ற கணவன் மனைவியாய் வாழ்வதைக்காட்டிலும் மணபந்தத்தில் இருந்து விலகி நண்பர்களாக இருப்பது சிறந்தது. நமது சமூகத்தில்தான் ஒரு கணவனும் மனைவியும் பிரிந்தால் அவர்களின் அந்தரங்க வாழ்க்கையிலிருந்து அனைத்தையும் அலசி மொத்தத்தில் வாழ்க்கைத்துணை பொருந்தாத துன்பத்தில் விலகியவர்களை அதனைவிட அதிக வேதனையைக் கொடுத்து மனநோயாளிகள் ஆக்கிவிடுவார்கள். கவுன்ஸிலிஞ் செய்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள். துணையைக் காட்டிலும் துயரைத் தருவது ஒருவரின் முகத்தை அறியாமலே விமர்சனம் செய்யும் சமூகந்தான்.

உண்மையை அப்பட்டமாய் எழுதி உள்ளீர்கள் சகாரா அக்கா.தம்பதியினர் தங்களுக்குள் மனஸ்தாபப்பட்டு கருத்தொருமித்து பிரிந்தாலும் இந்த சமுதாயம் முக்கியமாய் அப் பெண்ணைத் தான் சாடும்.உங்களுக்கு ஓர் பச்சை.

  • கருத்துக்கள உறவுகள்

லலிதாவுக்கு ஒரு ஆயிரம் பச்சை குத்தினாலும் தகும்

அதைவிட சகாரா அக்காவுக்கு.....

இந்த பெண் லலிதா மிகுந்த புத்திசாலி

வாழ்க்கை வாழ்வதற்கே

கட்டிக்கொண்டு அழுவதற்கல்ல என்பது எனது கொள்கை

அதை ரசிக்கணும்

முடியாது விட்டால் ஒதுங்கிக்கொள்ளணும்

அவர்கள் எதுக்காக உதுங்குகிறார்கள் என்பதை புரிந்து கொண்டுவிட்டால்.....?

துன்பம் ஏது..?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியே எல்லா மனைவி மாரும் இருந்திட்டா ஆண்களின் பாடு ஒரு வகையில் கொண்டாட்டமும் இன்னொரு வகையில் திண்டாட்டமுமாய் இருக்கும்..!

புது மனைவி - கொண்டாட்டம்.

எல்லா மனைவிகளோடும் உருவாக்கும் வாரிசுகளால்.. செலவுகால்.. திண்டாட்டம்.

லலிதாகுமாரி புத்திசாலி. குழந்தைகளோடு தன்னை கழற்றிவிடப் பார்த்த கணவருக்கு நல்ல தண்டனை...! :D:)

நெடுக்குசாமி! குடும்பவிசயத்திலையெல்லாம் நீங்கள் தலையிடப்படாது.உங்களுக்கு அதிலை அனுபவுமில்லை :( .அனுபவிச்சதுமில்லை :( .அனுபவிக்கபோவதுமில்லை :( :( :) .பிறகென்ன கோதாரிக்கு இதுவழியை நிண்டு நொய்...நொய்...எண்டு புறணி விட்டுக்கொண்டு...... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.