Jump to content

50வது சதம் அடித்தார் சச்சின்


Recommended Posts

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஐம்பது சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் செஞ்சுரியனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் அவர் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார். தனது 175 ஆவது போட்டியிலேயே டெண்டூல்கர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த சச்சின் டெண்டுல்கர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையும் ஏற்படுத்தி விட்டார்.

சச்சின் டெண்டூல்கர் 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். கராச்சியின் தேசிய மைதானத்தில் இடம்பெற்ற அப்போட்டியில் அவர் 15 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார். 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தனது முதல் சதத்தை டெண்டூல்கர் அடித்தார். அப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் 119 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிகப்படியான சதங்களை அடித்தவர்களின் வரிசையில் டெண்டூல்கருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ரிக்கி பாண்டிங் இருக்கிறார். அவர் இதுவரை 39 சதங்களை அடித்துள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/12/101219_sachinfifty.shtml

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் தொடர்ந்து ஏதாவதொரு சாதனைக்கு மேல் சாதனையாக நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார். வாழ்த்துக்கள்!! :wub:

இணைப்புக்கு நன்றி அகூதா!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் சாதனையாளன் சச்சினுக்கு வாழ்த்துக்கள். ஒரு நாள் போட்டிகளிலும் 50 சதம் அடிக்க வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடிக்காத வீரர் என்டால் சச்சின் ஆகவே அவருக்கு என்ட வாழ்த்து இல்லை :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடிக்காத வீரர் என்டால் சச்சின் ஆகவே அவருக்கு என்ட வாழ்த்து இல்லை :D

நேர்மையான விளையாட்டுக்காரரைப் பிடிக்காதோ? :wub:

Link to comment
Share on other sites

கிரிக்கெட் சாதனையாளன் சச்சினுக்கு வாழ்த்துக்கள். ஒரு நாள் போட்டிகளிலும் 50 சதம் அடிக்க வேண்டும்!

இது எல்லாம் ஒரு பிழைப்பா? சச்சினுக்கு இது ஒரு வேலை அடிக்கூர ஒவரு சதத்துக்கு அவன் காசு கண்டு கொள்ளுவான்.

நேர்மையான விளையாட்டுக்காரரைப் பிடிக்காதோ? :wub:

என்ன நக்கலோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையான விளையாட்டுக்காரரைப் பிடிக்காதோ? :wub:

சச்சின் ஒரு நாளும் தன்ட டீம் வெல்ல வேண்டும் என்ட எண்ணத்தில் விளையாடுவது இல்லை.அவரது நோக்கம் அவர் சதமடித்தால் சரி :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் ஒரு நாளும் தன்ட டீம் வெல்ல வேண்டும் என்ட எண்ணத்தில் விளையாடுவது இல்லை.அவரது நோக்கம் அவர் சதமடித்தால் சரி :wub:

அடடா. நீங்கள் கிரிக்கெட்டை அண்மையில்தான் ரசிக்கத் தொடங்கினீர்கள் போலுள்ளது :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் ஒரு நாளும் தன்ட டீம் வெல்ல வேண்டும் என்ட எண்ணத்தில் விளையாடுவது இல்லை.அவரது நோக்கம் அவர் சதமடித்தால் சரி :wub:

உங்கட இந்த கருத்தை வாசிக்க எனக்கு கினத்துக்கை விழுந்து தர்கொலை செய்யனும் போல இருக்கு, ஆனால் நான் வசிக்கும் நாட்டில் கினறு இல்லை அதாலை தான் உயிர் வாழுறேன் இப்பவும் :wub::wub:

Link to comment
Share on other sites

ரதி சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை..! :wub: இந்த 50 ஆவது சதம் அடிச்சதிலயும் பிரச்சினைப் படுகினம்..! :D

கடைசி ஆட்டக்காரர்களையும் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க விடாமல் செய்வதுதான் முன்னணி ஆட்டக்காரர்களின் வழக்கம்..! இதற்காக சில ஓட்டங்களை எடுக்காமல் கூட விடுவார்கள்..! :wub:

ஆனால் சச்சின் தான் 100 அடித்தவுடன் கடைசி ஆட்டக்காரர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டார்..! ஐந்தாவது நாளில் இன்னும் சில மணிநேரங்கள் போக்குக் காட்டியிருந்தால் போட்டியை சமமாக்கியிருக்கலாம் எண்டு நான் சொல்லவில்லை..! ஆய்வாளர்கள் சொல்லுகினம்..! :D

சச்சினுக்கு நூறு அடித்தமா வீட்டுக்குப் போனமா எண்டு இருக்கவேணுமாம்..! :wub:

பி.கு.: ராகுல் டிராவிட் அணித்தலைவராக இருந்தபோது நடந்தது இது. சச்சின் விளையாடிக்கொண்டிருந்தபோது ஆட்டத்தை டிக்ளேர் செய்துவிட்டார். இதில் சச்சினின் நூறோ அல்லது இருநூற்ரி ஐம்பதோ பாதிக்கப்பட்டு விட்டது..! அதனால அவர் டிராவிட் மேல சினம் கொண்டதா படிச்ச ஞாபகம்..! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறு வயதில் சச்சின்

th_65809_172553042784596_100000897050151_369367_2266587_n.jpg

Link to comment
Share on other sites

சச்சின் சரியான இனத்துவேசி. சிறீகாந் தலைவராக இருந்தபோதுதான் இவர் அறிமுகமானார். அந்த நேரத்தில் கூட இவர் சிறீகாந் தமிழன் என்று அவருக்கு மரியாதை கொடுப்பதில்லை. சிறீகாந் ஒரு பேட்டி ஒன்றில் கூறினார். அனைத்து வீர்ர்களும் ஆங்கிலத்தில் உரையாடுவார்களாம். தான் அங்கு சென்றால் உடன் வேண்டுமென்று இந்தியில் கதைப்பார்கள் என . அதில் இவன் சச்சினும் அடக்கம். அதலிருந்து இவனை எனக்கு பிடிக்காது.

Link to comment
Share on other sites

எனக்குப் பிடிக்காத வீரர் என்டால் சச்சின் ஆகவே அவருக்கு என்ட வாழ்த்து இல்லை :wub:

எனக்கும் தான்

ஆனால் என்னவென்றால், எனக்கு எந்த ஒரு இந்திய கிரிகட் பேர்வழியையும் பிடிக்கவே பிடிக்காது... இந்திய அணி தோற்கும் போதெல்லாம் மனசு நிறைந்து போகும்..அது இந்திய கிரிகட் அணிதான் என்று இல்லை, எந்த இந்திய தேசிய விளையாட்டு அணியாக இருந்தாலும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் சரியான இனத்துவேசி. சிறீகாந் தலைவராக இருந்தபோதுதான் இவர் அறிமுகமானார். அந்த நேரத்தில் கூட இவர் சிறீகாந் தமிழன் என்று அவருக்கு மரியாதை கொடுப்பதில்லை. சிறீகாந் ஒரு பேட்டி ஒன்றில் கூறினார். அனைத்து வீர்ர்களும் ஆங்கிலத்தில் உரையாடுவார்களாம். தான் அங்கு சென்றால் உடன் வேண்டுமென்று இந்தியில் கதைப்பார்கள் என . அதில் இவன் சச்சினும் அடக்கம். அதலிருந்து இவனை எனக்கு பிடிக்காது.

94645.jpg

சச்சின் அப்படி பட்டவர் என்று நான் நிவைக்க வில்லை இந்தியன் கிரிக்கெட் ரீம்மில் ரொம்ப நாகரிகம்மான வீரர்கள் யார் என்று என்னிட்டை கேட்டா நான் முதல் சுரஸ் ரெயினாவை தான் சொல்லுவன் அவருக்கு அடுத்த இடத்தில் சச்சின் ராகுல்டாவிட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் சரியான இனத்துவேசி. சிறீகாந் தலைவராக இருந்தபோதுதான் இவர் அறிமுகமானார். அந்த நேரத்தில் கூட இவர் சிறீகாந் தமிழன் என்று அவருக்கு மரியாதை கொடுப்பதில்லை. சிறீகாந் ஒரு பேட்டி ஒன்றில் கூறினார். அனைத்து வீர்ர்களும் ஆங்கிலத்தில் உரையாடுவார்களாம். தான் அங்கு சென்றால் உடன் வேண்டுமென்று இந்தியில் கதைப்பார்கள் என . அதில் இவன் சச்சினும் அடக்கம். அதலிருந்து இவனை எனக்கு பிடிக்காது.

சச்சின் கர்நாடகக்காரன் என்று நினைக்கின்றேன்.....

இவர்கள் தமிழரை மதிக்க விரும்பாதவர்கள்.

அவர்களுக்கு இந்தியா... என்னும் சினிமா மாயை தேசத்தில் தான் பல கிரிக்கெட் ரசிகர்கள்.

இதுவே... உலகளாவிய உதை பந்தாட்டத்தில் ஊறிப்போன பெரிச்சாளி நாடுகள் எல்லாம் இப்படிப் பட்டவர்களை காலத்திற்க்கு ஏற்ப பாவிக்கும்.

இங்கிலாந்து அறிமுகப் படுத்திய கிரிக்கெட்டை, இந்தியா இன்னும் வைத்து ஆடுது என்றால்......

அதுக்குப் பெயர் அடிமைத்தனம். மகாத்மாகாந்தி கேள்விப் பட்டால் சரியாய் கவலைப் படுவார். :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் கர்நாடகக்காரன் என்று நினைக்கின்றேன்.....

இவர்கள் தமிழரை மதிக்க விரும்பாதவர்கள்.

அவர்களுக்கு இந்தியா... என்னும் சினிமா மாயை தேசத்தில் தான் பல கிரிக்கெட் ரசிகர்கள்.

இதுவே... உலகளாவிய உதை பந்தாட்டத்தில் ஊறிப்போன பெரிச்சாளி நாடுகள் எல்லாம் இப்படிப் பட்டவர்களை காலத்திற்க்கு ஏற்ப பாவிக்கும்.

இங்கிலாந்து அறிமுகப் படுத்திய கிரிக்கெட்டை, இந்தியா இன்னும் வைத்து ஆடுது என்றால்......

அதுக்குப் பெயர் அடிமைத்தனம். மகாத்மாகாந்தி கேள்விப் பட்டால் சரியாய் கவலைப் படுவார். :wub:

சச்சின் மும்பாய் சிறி அண்ணா , அனில் கும்பிளே ராகுல்டாவிட் சிறிநாத் அவங்கள் தான் கர்நாடக்கா காரங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் மும்பாய் சிறி அண்ணா , அனில் கும்பிளே ராகுல்டாவிட் சிறிநாத் அவங்கள் தான் கர்நாடக்கா காரங்கள்...

உங்கள் தகவலுக்கு நன்றி பையா.....

எல்லாம் ஒரே, குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.... (நான் கிரிக்கெட் மட்டையை சொன்னேன்)

சின்ன ஒரு கிரிக்கெட் விளையாட்டு.... உங்கள் ரசனைக்காக...

DSCN1053%20559x419.jpg

படத்தில் பொல்லுடன் நிற்பவர் யார்?

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தகவலுக்கு நன்றி பையா.....

எல்லாம் ஒரே, குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.... (நான் கிரிக்கெட் மட்டையை சொன்னேன்)

சின்ன ஒரு கிரிக்கெட் விளையாட்டு.... உங்கள் ரசனைக்காக...

DSCN1053%20559x419.jpg

படத்தில் பொல்லுடன் நிற்பவர் யார்?

.

மாகாத்மா காந்தி போல இருக்கு :wub::wub::wub:

Link to comment
Share on other sites

94645.jpg

சச்சின் அப்படி பட்டவர் என்று நான் நிவைக்க வில்லை இந்தியன் கிரிக்கெட் ரீம்மில் ரொம்ப நாகரிகம்மான வீரர்கள் யார் என்று என்னிட்டை கேட்டா நான் முதல் சுரஸ் ரெயினாவை தான் சொல்லுவன் அவருக்கு அடுத்த இடத்தில் சச்சின் ராகுல்டாவிட்

நாகரீகமானவர்கள் இனத்துவேசமாக இருக்கமாட்டார்களா?

சிறீகாந்த்தும் சச்சினும் ஒன்றாக விளையாடிய போட்டிகளின் காணொளிகளிருந்தால் பாருங்கள் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன் இந்தியாவிற்காக சச்சின் விளையாடிய போட்டிகளை வைத்துப் பார்த்தால் தெரியும்.பல போட்டிகளில் சச்சின் சதமடித்திருப்பார்[அல்லது அரைச் சதம்] ஆனால் இந்தியா தோத்திருக்கும்...மாறாக சச்சின் குறைந்த ஓட்டத்தில் ஆட்டம் இழந்திருந்தால் இந்தியா வென்றிருக்கும்...ஆட்டம் இழக்கவும் மாட்டார் ஆனால் அதிரடியாக விளையாடும் பின் வருசை துடுப்பாட்டக்காரரை துடுப்பாடவும் விட மாட்டார்...துடுப்பை வைத்து சும்மா தட்டிக் கொண்டு இருப்பார்...சரியான கர்வம் பிடித்தவர் அவருக்கு நினைப்பு அவர் இந்தியா அணியில் இல்லா விட்டால் இந்தியா நன்றாக விளையாடாது என...இவரது முக்கியமான குறிக்கோளே இவர் சதமடிக்க வேண்டும்[சாதனை புரிய வேண்டும்]ஆனால் போட்டிகளில் வெற்றிகளைப் பற்றி இவர் என்டுமே கவலைப்பட்டதில்லை.

பி.கு எனக்குப் பிடிக்காத அணி என்டால் இந்தியா,இந்தியா,இந்தியா...விளையாட்டில் மட்டும் இல்லை எதிலுமே இந்தியா வெல்லக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாகாத்மா காந்தி போல இருக்கு :wub::wub::wub:

ஓம்... சரியான பதில் பையா....

மகாத்மாகாந்தி..... தொடக்கம் ராஜீவ்காந்தி, சீனியா காந்தி, நாகுல் காந்தி எல்லாம்....

ஈழத்தமிழனை பொல்லாலை அடிக்க வெளிக்கிட்ட மாதிரி ஒரு ஃபீலிங்.

இன்னும் எத்தினை காந்தீஸ் வரப் போகுதோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன் இந்தியாவிற்காக சச்சின் விளையாடிய போட்டிகளை வைத்துப் பார்த்தால் தெரியும்.பல போட்டிகளில் சச்சின் சதமடித்திருப்பார்[அல்லது அரைச் சதம்] ஆனால் இந்தியா தோத்திருக்கும்...மாறாக சச்சின் குறைந்த ஓட்டத்தில் ஆட்டம் இழந்திருந்தால் இந்தியா வென்றிருக்கும்...ஆட்டம் இழக்கவும் மாட்டார் ஆனால் அதிரடியாக விளையாடும் பின் வருசை துடுப்பாட்டக்காரரை துடுப்பாடவும் விட மாட்டார்...துடுப்பை வைத்து சும்மா தட்டிக் கொண்டு இருப்பார்...சரியான கர்வம் பிடித்தவர் அவருக்கு நினைப்பு அவர் இந்தியா அணியில் இல்லா விட்டால் இந்தியா நன்றாக விளையாடாது என...இவரது முக்கியமான குறிக்கோளே இவர் சதமடிக்க வேண்டும்[சாதனை புரிய வேண்டும்]ஆனால் போட்டிகளில் வெற்றிகளைப் பற்றி இவர் என்டுமே கவலைப்பட்டதில்லை.

பி.கு எனக்குப் பிடிக்காத அணி என்டால் இந்தியா,இந்தியா,இந்தியா...விளையாட்டில் மட்டும் இல்லை எதிலுமே இந்தியா வெல்லக் கூடாது.

சாதனைக்காக ஆடவில்லை: உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை; தெண்டுல்கர் சொல்கிறார்

50-வது சதம் குறித்து தெண்டுல்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது சதம் எண்ணிக்கையில் மேலும் ஒன்று உயர்ந்துள்ளது. 50 சதம் என்பது வெறும் எண்ணிக்கைதான். நான் சாதனைக்காக ஒருபோதும் ஆடியது இல்லை. அணிக்காக தொடர்ந்து விளையாடுவதுதான் எனது லட்சியமாக இருக்கிறது.

50-வது சதம் அடித்தது மகிழ்ச்சிதான். மகிழ்ச்சி அடையவில்லை என்று என்னால் கூற இயலாது. ஆனால் எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்பதுதான் உண்மை. எனது உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை.

50-வது சதத்தோடு நான் நின்று விடமாட்டேன். எதிர்காலத்திலும் தொடர்ந்து சதம் அடிப்பேன். நேற்று முன்தினம் எனது தந்தையின் பிறந்தநாள் 50-வது சதத்தை எனது தந்தைக்கு அர்பணிக்கிறேன்.

50-வது சதம் அடிப்பதற்காகவே நியூசிலாந்து எதிரான ஒருநாள் தொடரில் நான் விலகவில்லை.

இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/2010/12/20145229/sachin-50-century-sachin-inte.html

Link to comment
Share on other sites

நான் ஒரு கிரிக்கெட் டைகாட் விசிறி.சச்சினிலும் குறை கூறுபவர்களை இன்றுதான் பார்க்கின்றேன்.சச்சின் ஒரு நாளும் சுயநலத்திற்காக விளையாடியதில்லை.போன ஆஸி சீரிஸ் பார்த்தால் தெரியும்.மிகவும் கட்டுக்கோப்பான அனைவரையும் மதிக்கும்,எந்த கொன்ரவேசிக்கும் போகாத ஒரு ஜென்டில்மன்.ஒரே ஒரு குறை 90 களில் கொஞ்சம் தடுமாறுவது.ஆரம்பத்தில் அதுவும் இல்லை பின்னர் வந்து, இப்போ அதுவும் இல்லை.

போனமுறை ஜ்.பீ.எல் பார்த்தவர்களுக்கு தெரியும் சச்சினின் அருமை.சும்மா தமிழங்களுக்கு சான்ஸ் கொடுப்பத்தில்லை என சப்பு கொட்டாதையுங்கோ.இப்போ எத்தனை சான்ஸ் தினேஷ் கார்த்திக்கு கொடுத்தார்கள் பயன் படுத்தவில்லை.முதல் இரண்டு உலககோப்பையும் கப்டின் பண்ணியது வெங்கட்ராகவன் தான்.முதல் உலககோப்பை கடைசிக்கு முதல்,இரண்டாவது உலககோப்பை கடைசி.மூன்றாவது உலக கோப்பை கபில் கப்டன் பண்ணி சாம்பியனும் ஆனார் அதுவும் சொதப்பல் ரீமுடன்.பைனலில் அதிக ரன் அடித்தது சிறிகாந்த் தான்.

தமிழ் சிறி எந்த காந்தி வந்தாலும் எங்களுக்கு அடிதான்.நாங்கள் ஒழுங்காக இருந்தால் அவங்கள் ஏன் அடிக்கின்றாங்கள்.காந்தியில்லை கார்ப்பர் தொட்டு ஒபாவரை அடித்துப்போட்டாங்கள்.இப்பவும் நாங்கள் அவங்களிலதான் பிழை சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா இதுக்கு என்ன சொல்ல போறிங்கள்

sascin.jpg

Link to comment
Share on other sites

ரதி அக்கா இதுக்கு என்ன சொல்ல போறிங்கள்

sascin.jpg

இந்த போட்டியில் சச்சினுக்கு நூறு அடிக்க வாய்ப்பு வழங்காமையால் ஏற்பட்ட பிரச்சனைகள் எவ்வளவு தெரியுமா. இது ஒன்றும் சச்சின் விட்டுக்கொடுத்ததல்ல.

நான் ஒரு கிரிக்கெட் டைகாட் விசிறி.சச்சினிலும் குறை கூறுபவர்களை இன்றுதான் பார்க்கின்றேன்.சச்சின் ஒரு நாளும் சுயநலத்திற்காக விளையாடியதில்லை.போன ஆஸி சீரிஸ் பார்த்தால் தெரியும்.மிகவும் கட்டுக்கோப்பான அனைவரையும் மதிக்கும்,எந்த கொன்ரவேசிக்கும் போகாத ஒரு ஜென்டில்மன்.ஒரே ஒரு குறை 90 களில் கொஞ்சம் தடுமாறுவது.ஆரம்பத்தில் அதுவும் இல்லை பின்னர் வந்து, இப்போ அதுவும் இல்லை.

போனமுறை ஜ்.பீ.எல் பார்த்தவர்களுக்கு தெரியும் சச்சினின் அருமை.சும்மா தமிழங்களுக்கு சான்ஸ் கொடுப்பத்தில்லை என சப்பு கொட்டாதையுங்கோ.இப்போ எத்தனை சான்ஸ் தினேஷ் கார்த்திக்கு கொடுத்தார்கள் பயன் படுத்தவில்லை.முதல் இரண்டு உலககோப்பையும் கப்டின் பண்ணியது வெங்கட்ராகவன் தான்.முதல் உலககோப்பை கடைசிக்கு முதல்,இரண்டாவது உலககோப்பை கடைசி.மூன்றாவது உலக கோப்பை கபில் கப்டன் பண்ணி சாம்பியனும் ஆனார் அதுவும் சொதப்பல் ரீமுடன்.பைனலில் அதிக ரன் அடித்தது சிறிகாந்த் தான்.

தமிழ் சிறி எந்த காந்தி வந்தாலும் எங்களுக்கு அடிதான்.நாங்கள் ஒழுங்காக இருந்தால் அவங்கள் ஏன் அடிக்கின்றாங்கள்.காந்தியில்லை கார்ப்பர் தொட்டு ஒபாவரை அடித்துப்போட்டாங்கள்.இப்பவும் நாங்கள் அவங்களிலதான் பிழை சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.

சிறீகாந் தலைவராக சிறப்பாக செயற்பட்டும் அவரை ஏன் தலைமைப்பொறுப்பிலிருந்தும் அணியிலிருந்தும் தூக்கினர்? சடகோபன் ரமேசினை ஏன் அணியிலிருந்து தூக்கினர்? எதற்கெடுத்தாலும் தமிழர்களை மட்டும் குறைசொல்லாதீர்கள். முதலில் இனவுணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். சிறீகாந் தேர்வுக்குழுத்தலைவரராக வந்தமையால்தான் தினேஸ் கார்த்திக் முரளி விஜய் போன்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒவ்வொருவரும் எந்த மூலையில் இருந்து எழுதுகின்றார்களோ என்ற உங்கள் கூற்று உங்களுக்கும் சேர்த்தே  பொருந்தும்.   அரசியல் கட்டுரை அல்லது விமர்சனம்  சில விடயங்களை சுட்டிக்காட்டும் போது அதை எதிர் கொள்ள முடியாமல் சிங்கள இனவாத அரசை பற்றி கூறவில்லையே. அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்பது போன்ற கேள்வியை கேட்பது உங்கள் வாடிக்கை.  தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலத்தை தனது சிங்கள அரசு பாவித்தது என்று ஒரு கட்டுரையில் கூறியதை கவனிக்க மட்டீர்களா? அவ்வாறு அவர்கள்  கூறாவிட்டாலும் அது தானே உண்மை.   மேற்கண்ட  இணைப்புகளில் இருக்கும் உண்மைகளை  உங்களால் சகிக்கமுடியவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறேன்.  ஆனால்,  தமிழரசுகட்சி தனது அரசியல் பாதையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகளை விட தனது பாராளுமன்ற பதவிக்கு போட்டியாக வந்த தனது அரசியல் எதிரிகளை  ஒழித்துகட்டுவதற்கே முதலிடம் கொடுத்தது என்பதை  அன்றைய வரலாற்றை தெரிந்த அனைவரும் அறிவர்.  நேர்மையாக இவை பற்றி எழுதிய அன்றைய ஈழநாடு பத்திரிகை மீது அவதூறை அள்ளி வீசி,  எச்சரிக்கும் தொனியில்,  “ஈழநாடே வாயை மூடு”  என்று,   அன்று சுதந்திரன்  பத்திரிகை எழுதியது. அதன் பின்னர் எதிர்தது விமர்சனம் செய்தவர்களை வாயை மூட வைத்து இன்றைய மீள முடியாத  அவலநிலைக்கு தமிழ் மக்களை  இட்டு சென்றது இவர்களின் அரசியல் தொடர்ச்சியே.   நான் தமிழர் அரசியல் வரலாறு பற்றி  பேசும் போது  அவற்றின் உண்மைகளை  மறைப்பதற்காக என் மீது அவதூறு பொழிவதிலே நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்கள். நீ அந்த முகாம் அந்த இயக்கம் என்பது போன்ற இந்தப் பாணியை  நீங்கள்  பெற்றதும் அந்த  தமிழ் அரசியல் தொடர்ச்சி தான்.   உலக நாடுகளின் ஆதரவு இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களூடான  வெற்று  அரசியல் தமிழ் மக்களை மேலும் பலவீனமாக்கவே உதவும் என்பதையும் அது பற்றி உங்களைக்கோ உங்களை போல  மாய உலகில் சஞ்சரிப்பவர்களுக்கோ  கவலை இல்லை என்பதும் தெரிந்ததே.   நீங்கள் கூறியவாறு எவரையும் சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இவர்களை பற்றி உலகம் அறியும். போலி துவாரகா வரை இவர்களின் சுயநல அரசியல் நீண்டே  செல்கிறது. போலி துவாரகாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லோருமே தமிழ் தேசிய தூண்கள் என்ற பிம்பத்துடன் முன்னர் வலம் வந்து இன்று முகமூடி கிழிந்து நிற்பவர்களே.  தமிழ் தேசிய அரசியல்  உருவாக்கிய போலி பிம்பங்களை விற்று பணம் பண்ணும் அரசியலை செய்து அவர்கள் காசு பார்கிறார்கள்.  இலங்கை ஒற்றையாட்சியை  நான்  ஆதரிப்பவன் என்று என்னைக்க கூறுகின்றீர்கள்.   ஆனால்,  இன்று தேசியம் பேசும் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களே. இன்றைய தாயக/ புலம்பெயர் மக்களில் மிக பெரும்பான்மையினரை அரசியல் கதைக்கவே  ஆர்வமற்றவர்களாக மாற்றி,  பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று விலகி வாழும்  நிலையை ஏற்படுத்தியவர்களும் இவர்களே.  உங்களை போல என்னை போல ஒரு சிறு பகுதியினர் மட்டுமே இன்று  இலங்கையில் தமிழரின் எதிர்காலம் எப்படி அமையும், அமைய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு  அரசியல் விவாதங்களிலாவது ஈடுபட்டுள்ளோம்.  மிக பெரும்பான்மை தாயக/ புலம் பெயர் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தம்மை விடுவித்து  இலங்கை ஒற்றையாட்சியை ஏற்று அதன் கீழ் வாழ்வதை ஏற்று கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற ஜதார்தத நிலையை உங்களால் விளங்கி கொள்ள முற்படமாட்டீர்கள். ஆனல் இந்த உண்மையை கூறிய என் மீது வசைமாரி பொரிவீர்கள் என்பது அறிந்ததே. அது பற்றி கவலை இல்லை.   இந்த எனது பதிவுக்கு  பதிலாகவும் என்மீது  வசை மாரி தான் வரும் என்பதும் நான் அறிந்ததே. 
    • ஆசிய பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கை : கண்காணிப்பு விமானத்தை வழங்கும் அவுஸ்திரேலியா! ஆசிய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்கு இலங்கைக்கு சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தக திணைக்களத்தின் (தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பகுதி) பிரதி செயலாளர் மிச்சேல் சங் இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார். மிச்சேல் சங்கின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமையவே சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலங்கைக்கு வழங்குகிறது. சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் ஆள் கடத்தல் என்பவற்றை தடுப்பது உள்ளிட்ட இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முதற்கட்டமாக இந்த விமானம் வழங்கப்படுவதாக மிச்சேல் சங் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380118
    • ரஷ்ய எல்லை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட 68 யுக்ரேனிய ஏவுகணைகள். யுக்ரேன் வான்பாதுகாப்பு ஒத்துழைப்பினை விரைவுபடுத்தவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது யுக்ரேனுக்கான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார் ரஷ்ய படையினரின் வான் அச்சுறுத்தல் அதிகரித்துவருவதனால் அவசரமாக தமக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு தேவைப்படுவதாக யுக்ரென் ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலன்ஸ்கி அமெரிக்காவிடம் கோரிக்னை முன்வைத்திருந்தார் இந்த நிலையில் யுக்ரேனுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான ராணுவ உதவியில் 6 பில்லியன் பெறுமதியான வான்பாதுகாப்பு உதவித்தொகை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது இதேவேளை யுக்ரேனில் ரஷ்யா இன்று அதிகாலை பாரிய விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் கார்கிவ் நகரில் உள்ள வைத்தியசாலை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ரஷ்ய எல்லை பகுதியில் சுமார் 68 யுக்ரேனிய ஏவுகணைகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1380087
    • எனக்கும் இதே கொள்கை தான், மற்றும் சொந்த இடம் சாவகச்சேரி தான் என்பதால் நீங்கள் சொல்லும் தகவல் உண்மை என இத்தால் அறிவிக்கப்படுகின்றது 🥹
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.