Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் ஷோபாசக்தி ஆவது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஷோபாசக்தி ஆவது எப்படி?

புலிகளை துரோகி என்றேன்.

அவர்கள் என்னை அரவணைத்துக் கொண்டார்கள்.

ஈழத் தேசியம் ஒரு கற்பிதம் என்றேன்.

பௌத்த மரபு உனக்கு வசதியாய் இருக்கும் என்றார்கள்.

பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்ட போது,புலிகள் மக்களை கலைத்துப் பிடித்துச் சுட்டார்கள் என்றேன்.

எனது நூலை ஆங்கிலத்தில் கொண்டு வர உதவினார்கள்.

போருக்கு உதவிய எல்லா நாடுகள் குறித்தும் மௌனம் காத்தேன்.

சாதகமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து போருக்கு எதிராக நிறுத்தினேன்.

என்னை நடுநிலையாளர் என்று சான்றிதழ் கொடுத்தார்கள்.

வெளிப்படையாக வரவா என்றேன்.

இல்லை இல்லை நீ இந்த முகத்தோடு இருப்பதுதான் எங்களுக்கு வசதி என்றார்கள்.

இதற்கு மேல் விற்க எதுவும் இல்லை என்றேன்.

அவர்களோ முட்கம்பி வேலிகளிலும் வனாந்தரங்களிலும் வீசப்பட்ட மக்களைக் காட்டினார்கள்; கூடவே எலும்புக் கூடுகளையும்.

இப்போது நான் சொன்னேன் அவர்களே அவர்களை அழித்துக் கொண்டார்கள் என்று.

இனி எனது நூல்கள் ஜெர்மன், டேனிஷ், பிரெஞ்ச் மொழிகளிலும் வரும்....நானும் மாற்றுக்கருத்துப் பாரம்பரியத்தில் வந்த ஒருவனாவேன்-

-அருள் எழிலன்

  • கருத்துக்கள உறவுகள்

மிக்கவும் சரியான வார்த்தைகள். எலும்புத்துண்டங்களை எப்படிக் கவ்விக்கொள்வது என்பதை இக்கவிதையின் நாயகர்களிடமே அறிந்துகொள்ளவேண்டும். ஆனால் என்ன எலும்பத்துண்டங்கள் தனது படைப்பகளுக்கான அங்கீகாரமாகவும் இருக்கலாம். ஏனெனில் வயிறுகழுவுறதுக்கு வாய்ப்பிருக்குதுதானே! ஒருவேளைச்சோறாகிலும் ஐரோப்பிய நாட்டில் வாழ்ந்தால் கிடைக்குமென்பதைச் சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிஸ்ஸ்ன்னலு கோஸ்டிக.. தமிழ்நாடு பிற்போக்கு எழுத்தாளர் கோஸ்டிக.. இவனுங்க இலக்கிய அக்கபோரு தாங்கல..நாடு நாடா சுத்துற ஜிலுஜிலுப்பா..இந்த அன்னியன் ஸ்டைலை முன்னமே பார்த்திருக்கேன்.. இவன் என் ஏரிய பக்கம் மாட்ட மாட்றான்.. இவனுக்கு மிற்போக்கு.. பிற்போக்கு.. தற்போக்கு.. அனைத்தையும் சொல்லித்தருவேன்.. இன்னும் யாரும் இந்தாளுக்கு லாடம் கட்டல.. ஆதான் ஏசி ரூமுலு ஒக்காந்து புலி எதிர்ப்பு.. பினாத்துராக.. :(

"ஷோபா சக்தி" ஒரு தமிழ் இலக்கியவாதி...

இலக்கியம் எண்டாலே புனைவு தானே...??

  • கருத்துக்கள உறவுகள்

பெரியவங்க நீங்க சொன்ன சரியாகத்தான் இருக்கும் தோழர் தயா..

டிஸ்கி:

இந்த இலக்கியம் அந்தா இந்தா ..ஆனை மலை ...அண்டார்டிக்கா மலை .....சுற்றிலாவாக இங்கு நாடு நாடாக சுத்தும் புலி எதிர்ப்பு இலக்கிய கோஸ்டிகள் ...எங்க ஊருக்கு ஒரு முறை முன்னறிவித்திவிட்டு தகுந்த போலீஸ் பாதுகாப்போடு வருகுக. :(

டிஸ்கிக்கு டிஸ்கி:

போலீஸ் இருக்கும் போது அடிச்சாத்தான் ஒரு கிக்கு இருக்கும்... :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

பெரியவங்க நீங்க சொன்ன சரியாகத்தான் இருக்கும் தோழர் தயா..

டிஸ்கி:

இந்த இலக்கியம் அந்தா இந்தா ..ஆனை மலை ...அண்டார்டிக்கா மலை .....சுற்றிலாவாக இங்கு நாடு நாடாக சுத்தும் புலி எதிர்ப்பு இலக்கிய கோஸ்டிகள் ...எங்க ஊருக்கு ஒரு முறை முன்னறிவித்திவிட்டு தகுந்த போலீஸ் பாதுகாப்போடு வருகுக. :(

டிஸ்கிக்கு டிஸ்கி:

போலீஸ் இருக்கும் போது அடிச்சாத்தான் ஒரு கிக்கு இருக்கும்... :)

"ஷோபா" எண்டதோ "ஷக்தி" எண்தோ தமிழ் சொல் கிடையாது அது எப்படி தமிழ் இலக்கியம் ஆனது எண்று நீங்கள் என்னை கேக்காதவரைக்கும் மகிழ்ச்சி... இந்தளவுக்கும் அந்த பெயர் புனை பெயர்... :lol: :lol: :lol:

Edited by தயா

... சிலர் உரிந்து விட்டுட்டு நிர்வாணமாக ஓடுவார்கள்/தோன்றுவார்கள் .... பிரபல்யம் அடையலாம்/பொருள் தேடலாம் என்று!

..... இன்னும் சிலர், பொதுவான கருத்தொன்றுக்கு எதிராக நிலை எடுப்பார்கள் ... அதன் மூலமாவது பெயர் வெளிவரட்டும் என்று!

இதில் சோபாசக்தி, இரண்டும் சேர்ந்த ஓர் கலவையான தயாரிப்பு ..... எப்படியாயினும் .... நல்ல தமிழில் சொல்வதானால், சோபாசக்தி ஓர் "விபச்சாரி"!!!!

சொல்லுவதற்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாத மனிதன் இவர்..தண்ணி அடித்துவிட்டு பெண்களிடம் லவ்வுவார் வெறிய முறிய பெண்ணியம் பேசுவார்..அவ்வளவு தான் இவரது கொள்கை.. நான் தமிழருக்கு எதிரி இல்லை என்பார் கொல்லை வழியே துரோக வேலைகளை அரங்கேற்றுவார்..என்ன சொல்கிறார் என்று அவருக்கே புரிவதில்லை மற்றவர்களுக்கெங்கே புரியப்போகிறது..?

Edited by நெருப்பு நீலமேகம்

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு ஆங்காரமாக கருத்துக்களால் ஷோபாசக்திக்கு வயிற்றுவலி வராது. இதில் கருத்தெழுதிய எத்தனை பேர் அவருடைய புத்தகங்களைப் படித்திருக்கின்றீர்கள்? <_<

கிருபன், சோபா சிறந்த புனை கதை எழுத்தாளர் என்பதில் எவருக்கும் இரு வேறு கருத்து கிடையாது.ஆனால் அவர் அரசியலையே புனைவு ஆக்கி இருக்கிறார்.அவரின் அரசியல் புனைவால் ஆனது.தன்னை ஒரு தலித்தாகக் காட்டிக் கொண்டு , நாடகமாடுகிறார்.அது போலவே பெண்ணிய விடுதலை பேசிக் கொண்டு ,பெண்களைத் தனது ஆண் பசிக்கு இரையாக்குகிறார்.பெரியாரைப் பின் பற்றுவதாகக் கூறிக் கொண்டு தமிழத் தேசியம் என்பது பெரும் கதையாடல் எங்கிறார்.தேசிய விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து காசு பார்த்துக் கொண்டு மக்கள் விடுதலை பற்றிப் பேசுகிறார்.அவரின் வேடம் இன்று அவருடன் இருந்தவர்களாலேயே அடையாளம் கலைக்கப்பட்டு இன்று அம்மணமாக நிற்கிறார்.பல நாட் களவு ஒரு நாள் பிடிபடும் தானே.கருத்தியல் ரீதியான எந்தக் கேள்விகளுக்கும் நேர்மையக அவர் முகம் கொடுத்தது கிடையாது.தன்னைச் சுற்றி புனைவால் ஒரு விம்பத்தை உருவாக்கி அதன் மேல் தனது சுய இன்பத் தேடலை ,மக்களின் அவலத்தின் மேல் நாடாத்துபவர்.இப்படியான ஒரு மோசமான மனிதனுக்கு எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவிக்க முடியும்.முக நூலைத் திறந்தால் சோபாவைக் காறி உமிழ்ந்த எச்சில் தான் எல்லா இடமும் கிடக்கிறது.

தன் வினை தன்னைச் சுடும்.கெட்டிக்காரன் புழுகு நெடு நாள் நிலைக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஓசி விளம்பரம். யாருன்னே உந்த சோபா செட்டியை சாறி சக்தியை தெரியாதவங்களுக்கும் தெரிய வைக்க இது உதவும். அவங்க உதுகளைப் பயன்படுத்தி தாங்க புலி எதிர்ப்பில் மக்களை கவர்ந்ததாக நினைச்சு கர்விச்சுக் கொண்டு திரிய நல்லா இருக்கும். :D:)

'திட்டரும்’ திருடரும் ஒன்றோ?! ... 5by Valar Mathi on Saturday, 12 February 2011 at 11:50

ஷோபா சக்திக்கும் எனக்கும் வாய்க்கா வரப்பு தகராறா என்ன!

ஈழப் போர் முடிந்த பின்னும், அங்கே இனப்படுகொலையே நடக்கவில்லை என்று வாதிட்ட சுசீந்திரனின் பேட்டியை, அக்கருத்தில் தனக்கு உடன்பாடு உண்டா இல்லையா, விமர்சனங்கள் ஏதும் இருக்கின்றதா என்பது பற்றி ஒரு குறிப்பும் இல்லாமல் “சத்திய கடதாசி”யில் (http://goo.gl/bBd2A) வெளியிட்ட பிறகுதான் ஷோபா சக்தியோடு முறித்துக் கொள்ளும் முடிவை எடுத்தேனே தவிர வேறு என்ன காரணம் கெடக்கு!

அதுவும் ஜனநாயகத்தின் பெயரால் செய்யப்பட்ட ஒரு மோசடிச் செயல்.

சுசீந்திரனின் பேட்டி “சத்திய கடதாசி”யில் வெளியானபோது அதற்கான எனது எதிர்வினையை அங்கு பதிவு செய்திருந்தது குறித்தும் இங்கே முகநூலிலேயே 10 நாட்களுக்கு முன்பாக பதிவும் செய்திருக்கிறேன். (காண்க: http://goo.gl/Lejze) அருண்மொழிவர்மனின் குறிப்பில்.

அங்கே நான் இட்ட இரண்டாவது பின்னூட்டம் இதுதான்:

//சென்னை நண்பர்கள் அன்போடு ”குண்டு” ரவி என்றழைத்த நண்பர் என்று நினைக்கிறேன் :)

மன்னியுங்கள் உங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ உங்களை அப்படித்தான் நாங்கள் அழைத்தோம். இதில் வன்மமோ, கேலியோ கிடையாது.

அதை விடுவோம்.

சுசீந்திரன் எனது கேள்விக்குப் பதில் சொல்ல முனைவார் என்பதும் கிடக்கட்டும் (நீங்கள் குறிப்பிடுவதுபோல் எனது கேள்விக்கு பதில் சொல்வது ”இலங்கை அரசியல் சூழலை பொறுப்போடு அணுகமுயற்சிக்க வேண்டியதன்” அவசியமாகவே அவருக்குத் தோன்றாது என்பதே என் எண்ணம்).

தமது கருத்துக்களை பரிசீலனை செய்வார் என்று நினைக்கிறீர்களா என்ன? :)

என்னைப் பொறுத்தவரையில் சுசீந்திரனும், நமது (மன்னிக்க, மீண்டும் என்னைப் பொறுத்தவரையில், முன்னாள் நண்பர்கள் என்ற நிலையில் நிறுத்த விரும்புகிற ஷோபா சக்தியும் சுகனும் இன்னும் பிறரும் [அழுத்தம் இப்போது சேர்த்தது) நண்பர்களும் மிகக் குரூரமானதொரு புலியெதிர்ப்பு சிங்கள அரச நிலைப்பாட்டாதரவு மனநிலையில் இருந்து கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருப்பதாகவே கருதுகிறேன்.

அவர்கள் எக்கருத்து நிலைப்பாட்டை, செயல்பாட்டை எதிர்க்கிறார்களோ அதே கருத்து நிலைப்பாட்டின், செயல்பாட்டின் பிரதிபிம்பங்களாக மாறிவிட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது :(

என்ன செய்ய :(

‘வரலாறு’ எவரையும் மன்னிக்காது என்பதாகச் சொல்லப்படும்போது மனிதர்கள் சகமனிதர்களை மன்னிக்கப் பழகுவது எங்ஙனம் ??? :(((( //

இதிலே அவதூறாக ஒரு சொல்லேனும் இருக்கிறதா?

ஆனால், இப்பின்னூட்டம் வெளியிடப்படவே இல்லை (மேலே கொடுத்திருக்கும் முகநூல் குறிப்பில் நீக்கிவிட்டிருக்கிறார்கள் எனக் கவன மறதியாகக் குறிப்பிட்டிருக்கிறேன்).

சரி, ஏதேனும் வேலைகள் இருக்கலாம் என்று காத்திருந்தேன். ஆனால், அதற்குப் பிறகு வேறு சிலரின் பின்னூட்டங்கள் வெளியிடப்பட்டதைக் கண்டபோதுதான் விளங்கியது, இவர்கள் எந்தவிதமான காத்திரமான கருத்தியல் விவாதத்திற்கும் தயாரானவர்கள் இல்லை என்பது. தாம் சொல்லும் விஷயங்களுக்கு மாற்றான கருத்துக்களை எதிர்கொள்ளும் திராணியற்ற திருடர்கள் என்று. காத்திருந்து வெறுத்துப்போய் வசைபாடி ஒரு கமெண்டும் அனுப்பி வைத்தேன் என் மனநிலையை அறியப்படுத்த.

இன்றுவரையிலும் ஷோபா சக்தியிடம் இருந்து சுசீந்திரன் அப்பேட்டியில் கூறியிருந்த கருத்துக்கள் மீதான நேரடியான எந்தவொரு எதிர்வினையும் இல்லை. எந்தவொரு ஆமோதிப்பும் இல்லை, விமர்சனமும் இல்லை, மறுப்பும் இல்லை.

அதே சமயம், தானும் இனப்படுகொலையைக் கண்டிப்பதாக ஒரு ஸ்டேட்மெண்டை விடும் தந்திரத்தைச் செய்யவும் தவறவில்லை இந்தச் சிகாமணி.

சுசீந்திரனின் மேற்கண்ட பேட்டி வெளியாவதற்கு முன்பாகவே ”ஈழத்தில் இனப்படுகொலைதான் நடக்கிறது என்று எப்போதோ சொல்லிவிட்டேனே!” என்று சப்பை கட்டிக் கொள்ள இயலுமல்லவா? அதற்கு மேற்கோளாக இப்போது சிகாமணி இதைக் காட்டுவார் =>

//மோதல் தவிர்ப்புப் பகுதி என அறிவித்துவிட்டு அந்தப் பகுதியையே, பொதுமக்கள் வாழும் பகுதிகளையே இலங்கையின் முப்படைகளும் குறிவைத்துத் தாக்கிக்கொண்டிருக்கின்றன. இன்று இலங்கை இராணுவம் அதிநவீனமயப்படுத்தப்பட்டிருக்கிறது. புலிகளின் தளங்களையும் பொதுமக்கள் வாழும் பகுதிகளையும் துல்லியமாக வேறுபடுத்திக் கண்டுபிடிக்கும் ராடர்கள் அவர்கள் வசமிருக்கின்றன. முன்னேறி வரும்போது எவ்வளவு தூரத்தில் மனித நடமாட்டமிருக்கிறது என நுகர்ந்து கண்டுபிடிக்கும் அதிநவீன உணர்கருவிகள் அவர்களிடமுண்டு. பொதுமக்கள் எனத் தெளிவாக இனங்கண்ட பின்பும் மக்களை இரக்கமேயில்லாமல் எறிகணைகளை வீசியும் விமானத் தாக்குதல்களை நடத்தியும் கொன்றொழிக்கிறார்கள். மருத்துவமனைகள் கூட தாக்கியழிக்கப்படுகின்றன. இதை இனப்படுகொலை எனச் சொல்லாமல் வேறெப்படி அழைப்பது?அப்படியானால் கொழும்பிலும் அரசகட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலும் இப்போது தமிழ்மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்றொரு கேள்வியை நீங்கள் கேட்கமாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். இனப்படுகொலை என்பது பல்வேறு நுட்பமான வழிகளிலும் பொருத்தமான தருணங்களையும் களங்களையும் தேரர்ந்தெடுத்துத்தான் செயற்படுத்தப்படும். அய்ரோப்பாவில் நாஸிகள் யூதர்களை இனப்படுகொலை செய்தபோதும் இந்த தந்திரமான உத்திகளைத்தான் நடைமுறைப்படுத்தினார்கள். மறுபுறத்தில் இந்தப் படுகொலைகளுக்குத் துணைபோன ஒருபகுதி யூதர்களை நாஸிகள் பாதுகாக்கவும் செய்தார்கள் என்பது வரலாறு. யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் கொழும்பிலும் இன்றும் அரச படையினராலும் அரசின் நிழலில் நிற்கும் தமிழ் இயக்கங்களாலும் சிறுகச் சிறுகத் தமிழர்கள் கடத்தப்பட்டும் கொலைசெய்யப்பட்டுக்கொண்டும் தானிருக்கிறார்கள்.//

( http://goo.gl/NVjKW) வியாக்கானம் இன்னும் நீண்ட பத்தியாகத் தொடர்கிறது.

மேலே இருப்பதிலிருந்து இனப்படுகொலை குறித்தான சிகாமணியின் புரிதல் எந்த மட்டத்தில் இருக்கிறது என்பதை சும்மா ஒரு தோராயமாகத் தான் கணிக்க முடியும். “இரக்கமே இல்லாமல் தாக்குவது, மருத்துவமனைகளை அழிப்பது, நுட்பமான - தந்திரமான வழிகளை நாஜிக்களைப்போலக் கையாள்வது, சிறுகச் சிறுக கொலை செய்வது.” இப்படியாக ’நுட்பமாக’ வாசிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆக, ஈழத்தில் நடந்தேறிய இனப்படுகொலையையும் கண்டிச்சாச்சு, அதை ’நுட்பமாக’வும் வெளக்கியாச்சு.

அதுக்குப் பொறவு?

விடுதலைப் புலிகள் அப்பாவித் தமிழ் மக்களை மனிதக் கேடயமாக பிடித்து வைத்திருக்காவிட்டால் இந்த அவலம் நடந்தே இருக்காது என்று ’விமர்சனமும்’ செய்தாச்சு.

அதுக்குப் பொறவு?

நாடு கடந்த தமிழீழ அரசைப் போட்டு மிதிச்சாச்சு!

அப்பாலிக்கி?

கருங்கடல்.

அப்பாலே, ”தமிழக மீனவர்களைத் தாக்கும் சிங்கள அரசை எதிர்த்து தமிழகத் தோழர்களே கிளர்ந்தெழுங்கள்!” சுவிசேஷ அழைப்பு.

இனப்படுகொலை - அதுதான் செத்துப் போச்சேய்யா!

புலம் பெயர் ஈழத் தமிழர்கள் ஒபாமாவின் கோமணத்தைத் துவைத்துக் கொடுத்தாலும் ஒன்னும் நடக்காது, ஏகாதிபத்திய அரசுகளை நம்பி எத்தனை முறை ஏமாந்தாலும் இந்த முட்டாள்களுக்கு அறிவு வராது,” என்று நக்கலடித்துக் கொண்டு நகர்ந்துகொண்டே போவது.

அதுவாச்சும் நான் ஒரு புல்லைக்கூடப் புடுங்கிப் போடமாட்டேன். தம்மால் இயன்றதைச் செய்பவர்களையும் நக்கலடித்துக் (விமர்சனமாம் அது - வெங்காயம்) கொண்டே இருப்பேன். திருவிளையாடல் தருமியாக கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பேன். நெருக்கிப் பிடித்து யாராவது என்னைத் திருப்பிக் கேள்வி கேட்டால், அவர்களை மதிக்கமாட்டேன். அவதூறு செய்கிறார்கள் என்று பல்லவி பாடுவேன். அடுத்தடுத்து ஆட்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்தால், நான் எப்போ அப்படிச் சொன்னேன், உங்களுக்கு வெளக்கம் சொல்லிச் சொல்லியே மாயுதப்பா! உஸ்ஸ் எபா! கண்ணைக் கட்டுதே! என்று சிலிர்ப்பது. இதுதன் இந்த யோக்கியச் சிகாமணியின் இலட்சணம்.

நானும் இதை எத்தனை முறைதான் வெளக்கி வெளக்கிச் சொல்வது? உஸ் எபா! எனக்கும் கண்ணைக் கட்டுதே!

இங்கே ஆரம்பத்தில், சுட்டிகளோடு சுட்டிக் காட்ட விரும்பியது, ஒரு ஆரோக்கியமான கருத்தாடலுக்குக்கூடத் தயாராக இல்லாத, ஜனநாயகத்தின் பேரால் கள்ளத்தனம் செய்கிற திருட்டுச் சிகாமணி என்பதற்கு மேலாக, ஷோபா சக்திக்கு வேறு எந்தத் தகுதியும் இல்லை என்பதையே. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமல்ல. இங்கே முகநூலில் நடந்த பல விவாதங்களிலும் இந்தச் சிகாமணியிடம் வெளிப்பட்டது இதுதான் என்பதை வாசித்தவர்கள் (சொம்பு தூக்கிகள் அல்ல) புரிந்திருப்பார்கள்.

ஈழத்தில் நிகழ்ந்தது ஒரு இனப்படுகொலை என்பதை வலியுறுத்துபவர்கள், அதற்கு நீதி செய்யப்பட வேண்டும் என்பதற்காகப் பல்வேறு விதங்களில் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இதில், பல்வேறு தரப்பினருக்கும் வேறு வேறு விதமான புரிதல் மட்டங்கள் இருக்கலாம்.

ஒன்று, அவர்களுக்கு அணுசரணையாக இருக்க வேண்டும். அல்லது பொத்திக் கொண்டு இருக்க வேண்டும்.

என்னளவில், சர்வதேசச் சட்டங்கள், கோட்பாட்டளவில், இனப்படுகொலை என்பதை சர்வதேச அரசுகள் எதைக் கொண்டு வரையறுக்கின்றன என்பது குறித்தான புரிதல்களை நோக்கி, தமிழ்ச் சூழலில் ஒரு தெளிவை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும் என்பதையிட்டு வாசித்தவற்றை எழுதுவதை வரித்துக் கொண்டிருக்கிறேன். அதைப் பகிரவும் செய்வேன்.

ஆனால், நமது சிகாமணியோ, ”ஒலகம் எவ்ளோ பெர்சு, ஏகாதிபத்தியங்கள் எவ்ளோ ஸ்ட்ராங்கு, இது தெரியாத இந்தத் தமிழ்த் தேசியவாத மடப்பயல்களெல்லாம் காமெடி செய்திட்டு இருக்காங்கப்பா” என்று விமர்சனம் என்ற பெயரில் நக்கலடித்து கொண்டிருந்ததைத் தவிர என்னத்த செய்து கிழித்தார்?

”வளர்மதியும்கூட தமிழ்த்தேசியவாதிகளோடு கொஞ்சிக்கூடிக் குலவுகிறானப்பா” என்று பொரணி பேசியதைத் தவிர என்னத்தைச் செய்து கிழித்தது இந்தச் சிகாமணி?

இத்தனை வெட்டி நக்கலையும் செய்துவிட்டு, இப்போதும் உதார் விடுகிறது இந்தச் சிகாமணி, “நான் எப்போது தமிழ் தேசியத்தையோ ஈழ விடுதலையையோ மறுத்தேன்” என்று!

யாராச்சும் வெளக்குங்கப்பா!

'திட்டரும்’ திருடரும் ஒன்றோ?! ... 4by Valar Mathi on Friday, 11 February 2011 at 11:53

சரி, நட்புக்குத்தான் தகுதியான ஆள் இல்லை, அரசியல் ஓர்மையிலாவது அடிப்படைத் தார்மீக நியாயங்களைக் கடைப்பிடிப்பாரா என்றால் அதுவும் இல்லை.

ஷோபா சக்தியின் தார்மீகத் தராசு ரொம்ப சிம்பிளானது. தனக்கொரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயம். ஊருக்கு உபதேசம். உள்ளுக்குள் கபட வேடம்.

மிகச் சாதாரணமாக இதைச் சுட்டிக் காட்டிவிட முடியும்.

வசை பாடுகிற வளர்மதியை பொருட்படுத்த மாட்டேன் என்று தார்மீகத் தராசை ஏந்திக் ’களமாடும்’ இதே ஷோபா சக்தி, தனது சகாக்களுக்கு அந்தத் தராசைத் தூக்கத் துணிவாரா?

பிலால் முகம்மது என்ற முஸ்லீம் பெயரில் ஒளிந்துகொண்டு கீற்று இதழ் இஸ்லாமியர்களுக்கு எதிரான இதழ் என்று எழுதுவது ஒரு ஆர். எஸ். எஸ் காரனின் தந்திரம் என்ற விமர்சனத்திற்கு இதுவரை முகம் கொடுத்திருக்கிறாரா?

அப்படியான ஒரு ஆர். எஸ். எஸ் தந்திரத்தைக் கையாண்ட கட்டுரையை லும்பினி இதழில் வெளியிட்டது தவறு என ஒப்புக்கொள்வாரா ஷோபா சக்தி?

இதுவரையில் இல்லை.

ஷோபா சக்தியின் அரசியல் ஓர்மையின் இலட்சணம் அவ்வளவுதான்.

பிலால் முகம்மது என்ற சுகுணா திவாகர் பாடிய வசைகளையும், கூசாமல் எழுதிய அவதூறுகளையும் சுட்டிக் காட்டி “பொருட்படுத்தத்தக்க ஆளே இல்லை நீ பிலால் முகம்மது” என்று சொல்லத் துணிவாரா?

இந்த இடத்தில் மீண்டும் ஒரு ஃப்ளேஷ் பேக் அவசியப்படுகிறது.

இதுவும் நடந்து ஆச்சு ஒரு நாலு வருஷம்.

இதிலேயும் தமிழச்சிதான் மாட்டிக் கொண்டார்.

சுகுணா திவாகரின் சாதியப் பின்புலத்தை நான் சுட்டிக் காட்டியதில் இருந்து தொடங்கியது பிரச்சினை. அதற்கு சு. தி - யின் எதிர்வினை எப்படி இருந்தது என்பதை அறிந்திராதவர்களுக்காக சில விஷயங்களைச் சொல்கிறேன்.

பிள்ளைமார் சாதிப் புத்தி படைத்த நபர் சுகுணா திவாகர் என்பதை நான் சுட்டிக் காட்டியதும், வச்சாரே ஒரு ஒப்பாரி. “அய்யோ என சாதியைச் சொல்லிட்டானே! நான் ஒரு சாதிய எதிர்ப்புப் போராளி! எனக்கு சாதி உணர்வே கிடையாது” என்று. சாதிய உணர்வு இல்லை என்றால் உன் ஆதிக்க சாதிப் பின்புலத்தைச் சுட்டிக் காட்டினால் ஏன் கோபம் வரவேண்டும்?

அத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை. “வளர்மதி என்னிடமிருந்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பித் தராமல் என்னை ஏமாற்றிவிட்டான்” என்று இடுப்புக் கீழே கீழ்மையான தாக்குதல்.

அனானிமஸாக அவரும் அவரது நண்பர்களுமாகச் சேர்ந்து வண்டை வண்டையாய் என்னைத் திட்டி கமெண்டுகள். அத்தனையையும் “தான் பெரிய ஜனநாயகவாதி” என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு அனுமதித்தது சு. தி.

பொறுமையாகவே பதில் சொன்னேன். பணத்தைக் கடனாக வாங்கியிருந்ததையும் ஒப்புக் கொண்டேன். என் நிலைமை சரியாகும்போது திருப்பித் தருவேன் என்பது சு. தி வுக்குத் தெரியும். ஆனாலும், அப்படியான கீழ்மையான தாக்குதல்.

அத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை. அடுத்தடுத்து எந்த விஷயத்தைப் பற்றி எழுதினாலும், எனக்கு மட்டுமே புரியும்படியான நக்கல்கள், குத்தல்கள், நைச்சியங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தது.

அத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை. அடுத்த ஆகக் கேவலமான தாக்குதல் - “கல்யாணமாகி, இரண்டு குழந்தைகள் பெற்ற தமிழச்சிக்கு வளர்மதி 10 லவ் லெட்டர் அனுப்பினான்” என்று கீழ்மையான அவதூறு.

எங்கே ஆதாரத்தைக் காட்டு என்று திரும்பக் கேட்டதற்குப் பதிலே இல்லை.

இப்படியான கீழ்மையிலும் கீழ்மையான அவதூறுகளைச் செய்த சுகுணா திவாகர் என்ற பிலால் முகம்மதுவை நோக்கி, “நீ பொருட்படுத்தத் தகுதியான ஆளே இல்லை” என்று சொல்வாரா ஷோபா சக்தி?

அட, அதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள். பிலால் முகம்மது என்ற பெயரில் எழுதுவது ஒரு அரசியல் மோசடி என்பதை ஒப்புக்கொண்டு ”நீ ஒரு ஆர். எஸ். எஸ் காரனின் வேலையைச் செய்திருக்கிறாய்” என்று தனது சகாவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா?

இதுவரையிலும் இல்லை. எனது அக்கட்டுரையை இருவர் சுட்டிக் காட்டியபின்னும் அதை மட்டும் கவனமாகத் தவிர்த்துவிட்டு “நடராசன் என்ற பெயரில் நான் எழுதியதை அம்பலப்படுத்தவே யாம் அதே நடராசன் என்ற பெயரிலான கட்டுரையை வெளியிடும் திருவிளையாடலை ஆடினோம்” என்று திருட்டு நைச்சியப் பதில் மட்டுமே வந்திருக்கிறது யோக்கியரிடமிருந்து.

ஷோபா சக்தியின் அரசியல் ஓர்மையின் இலட்சணத்திற்கு இன்னொரு எடுத்துக்காட்டுச் சம்பவத்தையும் காட்டுகிறேன்.

ஈழப் போர் முடிவுக்கு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பாக, இலங்கை அரசை போரை நிறுத்தச் சொல்லி நிர்ப்பந்தப்படுத்த தில்லியில் ஒரு ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தது பலருக்கு நினைவிருக்கலாம்.

அந்த நிகழ்வை ஒருங்கிணைக்கச் சொல்லி தோழர் தியாகுவை கேட்டுக் கொண்டு, அதற்கான நிதியையும் தந்து உதவியவர்கள் கனடாவில் உள்ள புலம் பெயர் ஈழத் தமிழர்கள். விடுதலைப் புலிகளுக்குச் சார்பானவர்கள்.

நடந்தது என்ன என்பது பலருக்குத் தெரிந்திருக்கும்.

தோழர்கள் தியாகு, பா. ஜெயப்பிரகாசம் இருவருக்கும் ’கடுக்கா’ கொடுத்துவிட்டு, அந்த நிகழ்வை ஹைஜேக் செய்து, இரண்டு இரயில் பெட்டிகள் நிறைய தன்னை வழிபடுபவர்களை (தேவதையாச்சே) கூட்டிகொண்டு போய், (இதைத்தான் The Great Train Robbery என்று ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் குறித்திருக்கிறேன்) தில்லியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக முழங்கிவிட்டு வந்தவர் யார் எனவும் பலருக்கும் தெரிந்திருக்கும்.

இப்போது ஒரு கேள்வியை எழுப்பிப் பாருங்கள். ஷோபா சக்தி, விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சிப்பவர். விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த நிகழ்வை அவர் விமர்சிப்பார். அது அவருக்கான நியாயம்.

அவரது நியாயத்தின்படியே பார்த்தால், அந்நிகழ்வை ஹைஜேக் செய்து, ஒருங்கிணைத்துச் சென்ற ”டோளர்” அம்மிணியை அவர் கடுமையாக விமர்சித்திருக்க வேண்டும்.

இதுவரை ஒரு வார்த்தை வந்ததா? அது குறித்து ஒரு பேச்சு எழுந்ததா?

அதனால்தான் வசைபாடினேன் இது அரசியல் உறவு அன்று என்று. திருட்டுக் கூட்டு என்று.

பொதுவாழ்வில், பொதுப்பரப்பில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை, அது ஒரு ஜனக்கூட்டமே செத்து மடிவதாக இருந்தாலும், தனது சுயத்தைப் பெருக்கிக் கொள்வதற்காக, அற்பப் புகழுக்காக, ஆதாயங்களுக்காக முன்னெடுப்பது அரசியல் ஓர்மை அல்ல. அயோக்கியத்தனம்.

ஒரு ஜனக்கூட்டம் அழிவின் விளிம்பில் இருக்கும் நிலையிலும் அதைத் தம் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்பவர்களை வசைபாடியதில் என்ன தவறு இருக்கிறது?

அது குறித்து கள்ள மௌனம் சாதிப்பவர் மீது என்ன மரியாதை வேண்டியிருக்கு?

அரசியல் தார்மீகமோ அறமோ பேச, ”அவதூறு அவதூறு” எனக் கூச்சலிட அத்தகைய நபர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?

முற்போக்குவாதிகளின் ‘’பிற்போக்கு” பெண்ணியம்by Priya Thambi on Sunday, 13 February 2011 at 20:55

காதலிக்கும் அல்லது மணந்து கொண்ட பெண்ணோடு உறவு என்பதோடு நின்றுவிடாமல், தான் சந்திக்கும் பெண்களை எல்லாம் பாலியல் பண்டமாக மட்டுமே பார்க்கும் ஆணாதிக்க மனப்பான்மையை எதிர்கொள்வதே இன்றைய பெண்களின் மிகப்பெரிய சவால்.

தன்மீது நடத்தப்படும் பாலியல் தாக்குதல்களை ஒரு கிராமத்துப் பெண்ணால் ஓரளவுக்கு எளிதாக சமாளிக்க முடிகிறது. ‘அடி செருப்பால..’ என்று தொடங்கி காதால் கேட்க முடியாத வசையின் மூலம் தன் எதிர்ப்பை அவளால் தெரிவிக்க முடிகிறது. கோபத்தில் பல பெண்கள் கைகளில் கிடைத்தவற்றை எடுத்துத் தாக்குகிறார்கள். உடனடியாக எதிர்வினையாற்றக் கூடிய சுதந்திரம் கிராமத்துக் பென்களுக்கு இருக்கிறது.

சென்னை போன்ற மாநகரங்களில் வேலைக்குப் போகும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள் ஒன்றல்ல இரண்டல்ல... வெறித்துப் பார்ப்பவர்கள், பேருந்துகளில் உரசுபவர்கள், முகத்துக்குக் கீழே மேய்ந்து கொண்டே பேசுபவர்கள், இரட்டை அர்த்தத்தில் பேசிக் கொண்டு நூல் விடுபவர்கள் என வகை வகையாகத் திரிகிறார்கள் ஆண்கள். ஓர் ஆண் பெறும் பதவி உயர்வை - திறமைக்குக் கிடைத்த பரிசாகப் பேசும் ஆண்கள், அதே பதவி உயர்வு ஒரு பெண்ணுக்குக் கிடைத்தால், ‘படுக்கையறை வழியாகப் பெற்றாள்’ என்று இழித்துப் பேசுவதையும் பார்த்திருக்கிறேன். ஆம் எப்போதும் இவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்கள்.

அதுவும், படித்த முற்போக்கான, பெண்ணியம் பேசக்கூடிய பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் வரைமுறையற்றவை. பெண்ணியம் பேசுகிறாள் என்றாலே, எப்போதும் யாருடனும் உறவுக்குத் தயாராக இருப்பாள் என்ற எண்ணம்தான் இங்கே இருக்கிறது. பெண்ணியம் பேசுகிற பெண் தானே என்று தவறாக நடக்க முயன்று ‘புரட்சியாளர்’ ஒருவர் அடிவாங்கிய கதை தெரியும் தானே.. அந்த புரட்சிப்புலி (புலி அவருக்கு பிடிக்காதே?) இப்போது பெண்ணியக் கருத்துக்களை கேட்போர் காதுகளில் ரத்தம் வடிய பேசிக்கொண்டிருக்கிறது. பெரியாரின் வழியில் நிற்கிறேன் என்ற தம்பட்டம் வேறு அடித்துக் கொண்டிருக்கிறது.

யார் என்று ஆர்வமாக இருக்கிறதா? ஷோபாசக்தி தான் அந்த புரட்சியாளர். இவர் பாலியல் சுதந்திரம் பேசுவது பெண்களை படுக்கையறையில் தள்ளுவதற்குத்தான் போலிருக்கிறது. பாலியல் விடுதிகளுக்குப் போய் வந்த அனுபவங்களை ‘முற்போக்கு’ முலாம் பூசி கதைகளாகக் கட்டுவதன் பின்னே இருப்பது, பெண்ணியம் அல்ல; ‘எவ கிடைப்பா?’ என அலையும் ஆணாதிக்க தடித்தனம்.

பெண்களுக்கான பாலியல் சுதந்திரம் குறித்து - பாலியல் ஒர்மை கடந்து சிந்தித்தவராக - பெரியார் மிகப் பிரம்மாண்டமாக நிற்கிறார். ஆனால், பெரியார் பேரை சொல்லிக் கொண்டு, கட்டற்ற பாலியல் சுதந்திரம் பேசும் ஆண்களின் முகங்களைக் கிழித்தால் உள்ளே இருப்பது பாலியல் வக்கிரம் மட்டுமே. இவர்கள் பேசும் பாலியல் சுதந்திரம் எந்தக் காலத்திலும் பெண்களுக்கு விடுதலையைக் கொண்டுவரப் போவதில்லை. இவர்கள் தங்களது இச்சைகயை எளிதாகத் தீர்த்துக் கொள்வதற்குத்தான் பெண்ணியத்தையும், பாலியல் சுதந்திரத்தையும் பேசுகிறார்கள்.

தலித்தியம், பெண்ணியம் போன்ற தத்துவங்களை இந்த ‘முற்போக்கு அறிவுஜீவிகள்’ எப்படி தங்களது சுயதேவைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது. ஆனால், இவர்கள் தங்கள் மீதான விமர்சனங்களை கள்ள மௌனம் காத்தோ அல்லது அவதூறு என்று வாய் கூசாமல் சொல்லியோ கடந்து போகிறார்கள். ஆனால், இதே அறிவுஜீகள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், மக்களுக்குப் போராடியவர்கள் மீது அவதூறையோ, சேற்றையோ வாரியிறைக்கத் தவறுவதில்லை.

காரல் மார்க்ஸ், சே குவேராவின் பாலியல் வாழ்க்கையை எல்லாம் தோண்டித் துருவி பேசும் இவர்கள், தமது சொந்த வாழ்க்கையில் எப்படி நியாயமாக நடந்து கொண்டார்கள் என்பது குறித்து ஒரு நாளும் பேசுவதில்லை. ஏனென்றால் கடைசி வரைக்கும் ஆண்களாகவே வாழ்கிறார்கள். They are always men.

இவர்கள் தான் அருந்ததி ராய் மீது சேறடிக்கிறார்கள். இடதுசாரித் தலைவர்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள். ம.க.இ.க. தோழர்களை நக்கலடிக்கிறார்கள்.

ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும். ம.க.இ.க. தோழர்களை நம்பி என்னால் இரவுப் பயணம் போக முடியும். பலமுறை அவர்களோடு போய் வந்துமிருக்கிறேன். இந்த ‘பின்நவீனத்துவ’ முகமூடிகளுடன் ஒரு பகல் பயணத்தைக் கூட என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை

Edited by narathar

ஷோபாசக்தியிடம் கேட்ட இருபது கேள்விகள்

In ஷோபாசக்தி

Tuesday, February 15, 2011ஆதியிலே ஷோபாசக்தியோடு முரண் இருந்தது - பாகம் 02

ஷோபாசக்தி ஒரு நோட்டைத் தனது ஃபேஸ்புக்கில் எழுதிவிட்டு ஒரு நண்பருக்குப் பதிலளிக்கும்போது ."இதே வேண்டுகோளை முன்னர் xxxxx மும், டிசேயிடமும் வைத்தேன் அவர்கள் அதைச் செய்யவில்லை. நீங்களாவது செய்யுங்களேன்." எனக் கூறியதே இரண்டாம் ஆட்டம் தொடங்குவதற்கான முதற்புள்ளியாக அமைந்தது.

எனது குறிப்பான (ஷோபாவிற்கு எழுதிய பின்னூட்டம்) வாசிப்பவர்கள், அங்கே நான் ஷோபாசக்தி சிலரை வேண்டுமென்றே தவிர்க்கின்றார் என்று குறிப்பிடவே எழுதியிருந்தேன் என்பதை விளங்கியிருப்பார்கள். At the first place, I really don't want ask any questions to him. நிச்சயமாக அவரிடம் எனக்கு எந்தக் கேள்விகளும் எழுப்ப வேண்டியிருக்கவில்லை. எனெனில் நான் தொடர்ந்து ஷோபாசக்தியின் புனைவுகளையே வரவேற்பவனாகவும், அவரது அரசியலைத் தொடர்ந்து என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது இருப்பதாகவும் கூறிவந்திருக்கின்றேன். எனவே அதன் அடிப்படையில் எனக்கு அவரிடம் கேள்விகள் கேட்பதற்கான எண்ணம் ஒருபோதும் இருந்ததில்லை.

ஷோபாவிற்கு எழுதிய பின்னூட்டம் குறிப்பில் ஒரு மூன்றாம் மனிதனாய், ஷோபாசக்தியின் ஃபேஸ்புக் பித்தலாட்டங்களை அவதானித்துவிட்டு அதை ஒருவேண்டுகோளாய் வைக்கவேண்டுமெனவே எழுதினேன். அவரோடு நெருங்கி உறவாடக் கூடியவர்களே ஷோபாவின் இந்த சமனிலையற்ற ஆட்டத்தை ஷோபாவிற்குச் சுட்டிக்காட்டவில்லையே என்ற ஆதங்கத்தையும் எனது குறிப்பில் எழுதியிருந்தேன்.

ஆனால் அதேவேளை ஷோபாவை தொடர்ந்து பல்லாண்டுகளாய் நுட்பமாய் அவதானித்து வந்தவன் என்றவகையில் ஒரு கவனக்குறிப்பையும் இவ்வாறு இறுதியில் எழுதியிருந்தேன்...

'எனக்குத் தெரியும் இதற்கும் நீங்கள் வெட்டி ஒட்டிக் கேள்வி கேட்பீர்கள் என்று. பரவாயில்லை. ஆனால் எனக்கு உடனே பதில் சொல்ல முடியுமோ தெரியவில்லை. அவ்வாறு எதுவும் எழுதாவிட்டால் 'காணாமற்போய்விட்டான் / தலைமறைவாகிவிட்டான்' என யமுனாவிற்குச் செய்ததைப் போல மட்டும் செய்துவிடாதீர்கள், நேரம் வாய்க்கும்போது அதற்கும் பதில் சொல்வேன்'.

ஆக, ஷோபாவை எவ்வாறு சரியாகக் கணிப்பிட்டேனோ, நேரம் பார்த்து அவர் எனக்கும் அடிக்கத் தொடங்கினார். அதாவது "டிசேயிடமும் வைத்தேன் அவர்கள் அதைச் செய்யவில்லை. நீங்களாவது செய்யுங்களேன். "

ஏற்கனவே நடந்தவற்றை அறியாது வாசிக்கும் ஒருவர், ஏதோ நான் ஷோபாசக்தியிடம் கேள்வி கேட்கவேண்டுமென ஒற்றைக் காலில் நின்றதாகவும், பிறகு ஷோபாவிடம் பயந்து பின்வாங்கிய‌தாக‌வுமே எண்ணிக்கொள்வார். என்னிடம் கேள்விகள் இருக்கின்றன என்று நான் கூறாமலே ஷோபா எப்படி ஒரு முடிவுக்கு வருகின்றார், பெயர்களை இணைத்துப் பேசுகிறார் என்பதைப் பாருங்கள் (ஷோபாவின் விவாதத்திறமையின் நளினங்கள் குறித்து, சில உதாரணங்களை அடுத்த பதிவில் எழுதலாம் என இருக்கின்றேன்).

இது ஷோபாவிற்குப் புதிதுமல்ல. ஷோபா பிரான்சில் பலருக்குச் செய்ததுதான்.. இறுதியில் யமுனா ராஜேந்திரனுக்கு 'காணவில்லை' எனவும் ஒரு 'சுவரொட்டி' சத்தியக்கடதாசியில் ஒட்டப்பட்டதையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஆக இதை நினைத்து எனக்கு வருந்த எதுவுமில்லை. ஆனால் இதை இப்படியே விட்டால், உசாத்துணை (reference) போடுவதுபோல ஷோபா இனிவரும் காலங்களில் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் என் பெயரையும் இழுப்பார் என்றெண்ணி அவருக்கான சில கேள்விகளை இவ்வாறு எழுதத்தொடங்கினேன்.

(பார்க்க: ஆடு அறுக்க முன்னரே அடுப்பிலே சட்டி வைக்கலாமா மேன்மை தங்கிய ஷோபா சக்தி?)

"....நான் முன்னர் எச்சரிக்கையாக எழுதியது இப்போது நிகழ்ந்திருக்கின்றது. 'டிசேயிடம் கேட்டேன், அவர் அதைச் செய்யவில்லை' என்கின்றார் ஷோபா. ஆக, இதன் மறைபொருள் நான் தெகிரியமாகச் சிங்கிள் சிங்கமாய் நின்று கேட்டும் டிசே போன்ற தூசிகள் எல்லாம் பயத்தில் ஓடிவிட்டாங்கள் எனவும் விரும்பினால் வாசிக்கலாம். உண்மையில் அந்த உரையாடலைத் தொடர விருப்பமில்லை. எனெனில் ஷோபா குறுக்குமறுக்குமாய் மறித்து தாச்சி விளையாடி... எப்படி என்றால் ஆவது அளாப்பி 'சிங்கம் வென்றது' என்று மார்தட்டுவார் எனபது நன்கு தெரியும். தோல்விதான் என ஏற்கனவே தெரிந்த முடிவுக்காய், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட பாதையில் போய் என்ன பிரயோசனம்? நான் என்ன கைப்புள்ளயா என்ன? வடிவேலுக்காவது அடிவாங்குகிற அளவுக்கு படங்களில் காசு கொடுகின்றனர். நான் இப்படி அடிவாங்க ஷோபாவா எனக்கு காசு அனுப்புவார்?

இந்தாருங்கள் ஷோபா உங்களுக்கு வெற்றி என அவருக்குக்கேடயத்தை இப்போதே மனமுவந்து கொடுத்துவிடுகின்றேன். ஏன் கிண்ணத்துக்குப் பதிலாய் கேடயம் கொடுக்கின்றேன் என்றால் ஷோபா ஒரு சிங்கம். அவருக்கு கேடயம் கொடுத்தால் அதைக் கவசமாய் நெஞ்சில் அணிந்துகொண்டு அடுத்த போர்க்களத்துக்குச் சென்று வெற்றி வாகை சூடுவார். அந்தப் பெருமிதத்ததால் என்னை மாதிரியான கைப்புள்ளகளையும் மறந்துவிடுவார். நானும் என்பாட்டில் நிம்மதியாக இருக்கலாம்.

இவ்வாறுதான் சற்றுமுன்னர்வரை இருந்தேன். இருந்தும் ஒரேயொரு கவலைமட்டும் வந்தது. நாளை நான் மண்டையை போடும்போது ஷோபாவோ அல்லது அவரது இரசிகர்களோ என் கல்லறைக்கு முன் நின்று, 'கேளடா கேளடா என ஷோபாசக்தி நெஞ்சை நிமிர்த்திக் கேட்டும், இவன் ஷோபாவிடம் கேள்வி கேட்காது தப்பியோடிய கோழை' எனச் சபிக்கமாட்டார்களா என்ன? (புனை)பெயரில் 'தமிழன்' என்ற பெயரை வைத்துக்கொண்டு 'கோழை'யாய்ச் செத்தால் அது முழுத்தமிழ் இனத்துக்குமே அவமானம் அல்லவா?

ஆகவே சில கேள்விகளை சும்மா ஒப்புக்காய் எழுதிவிடுகின்றேன். தயவுசெய்து இனிவருங்காலங்களில் ஷோபா, 'இதே வேண்டுகோளை முன்னர் XXXXமும் டிசேயிடமும் வைத்தேன்' என்று சொல்கின்றபோது எனது பெயரை அகற்றி பெரும் வரலாற்றுக் கறையிலிருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். வேண்டுமானால், இதே வேண்டுகோளை முன்னர் டிசேயிடம் வைத்தேன். அவர் ஒரு வாலிழந்த பல்லிபோலக் கேள்விகள் கேட்டார். நான் செத்த பாம்புக்கு அடிகின்றமாதிரி அவரது கேள்விகளுக்குச் சுழன்று சுழன்று பதில் அளித்து சும்மா தூவென எல்லாவற்றையும் ஊதித்தள்ளிவிட்டேன்' என எழுதவேண்டுமென இறைஞ்சிக் கேட்கின்றேன்..

இனிச் சும்மா வரலாற்றுப் பழியிலிருந்து தப்புவதற்காய் சும்மா சாட்டுக் கேள்விகள்..

(இப்போது ஷோபாவின் பதில்களையும் இணைத்திருக்கின்றேன் ~டிசே)

(1) எக்ஸிலில் வந்த விளம்பரங்களைக் கண்டித்து 'அறம்' பாடிய நீங்கள், எந்த 'அறத்தின்பாற்பட்டு' பெருநிறுவனங்கள் நடத்தும் தீராநதி, இந்தியா ரூடே, விகடன் போன்றவற்றிற்கு பேட்டி கொடுத்தீர்கள்/எழுதச் செய்தீர்கள்?

(மேலதிக விளக்கம்: கற்சுறாவின் ஃபேஸ்புக்கில் உள்ளது)

ஷோபாசக்தி: (1) 90களில் இருந்த எனது கருத்து எப்போதுமே மாறாதிருக்க வேண்டும் என அவசியம் இல்லை. வெகுசன ஊடகங்களிலும் நமது கருத்துகள் வரவேண்டும் என 2000களில் முடிவெடுத்தேன். ஆனால் அதற்கான அறம் என்ன தேர்வு, என்ன என்பதை எனது புதுவிசை இதழ் நேர்காணலில் காலச்சுவடு/மாலதி மைத்ரி/சுகிர்தராணி குறித்த கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.

(2) வால்பாறையில் நடந்த கூட்டத்தில் ம.மதிவண்ணன் தலித் என்பதற்காய் அவமானப்பட்டதை சுகிர்தராணி இங்கே (http://padamkadal.blogspot.com/2009/08/blog-post_12.html) பதிவு செய்திருக்கின்றார். நானறிந்தவரை அந்நிகழ்வில் பங்குபற்றிய அ.மார்க்ஸோ அல்லது நமது புகலிட 'தலித்தியத்தோழர்' சுகனோ இது குறித்து எதையும் பதிவு செய்ததாக அறியவில்லை? இவை குறித்து விரிவாக அறிந்திருக்கக்கூடிய 'தலித்தியப் போராளியான' நீங்கள் இதைப் பற்றி எங்கும் பதிவு செய்ததாகவும் இல்லை. அது ஏன்? காலம் கடந்தபின்பாயினும் சுகிர்தராணியின் கட்டுரைக்கான உங்கள் பதில் என்ன?

ஷோபாசக்தி: (2).அங்கு மதிவண்ணன் அவமானப்படுத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. நான் அங்கே இருந்திருப்பின் பிரச்சினை கைவாறில் முடிந்திருக்கும்

(3) அருந்ததிரோய் உயிர்மை கொடுத்த முற்பணத்தைத் திரும்பிக்கொடுக்கவில்லை என்பதற்காய் ஒரு ஸ்டேட்டஸ் செய்தி விடுகின்றீர்கள். நல்ல விடயமே. நமக்கான சார்புகளைத்தாண்டி பாதிக்கப்பட்டவருக்காய் நாம் குரல் எழுப்பவேண்டுந்தான். ஆனால் இதே உயிர்மைதான் மெலிஞ்சிமுத்தனின் 'வேருலகு' விடயத்தில் தம் வியாபார முகத்தைக் காட்டியது என 2-3 மூன்று இடங்களில் பதிவு செய்திருந்தேன். அண்மையில் ________ கூட அதே பதிலைக் கூறியிருந்தேன். அந்த விடயத்துக்கு ஏன் எதுவுமே கூறவில்லை? அருந்ததிரோய் ரேஞ்சில் மட்டுந்தான் பேசுவீர்களா? என் பல்லி மூளையோ, எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன் என சொல்கிறது. அஃது உண்மைதானா?

ஷோபாசக்தி: (3.4).பாருங்கள் நண்பரே புத்தகங்களை வெளியிடுவதற்காக காலச்சுவடு உயிர்மை போன்ற நிறுவனங்களிடம் நமது புலம்பெயர்ந்த படைப்பாளிகள் செல்வது எனக்கு உள்ளபடியே வருத்தத்தைத் தருவது. மனிதன் பாம்பைக் கடித்தால்தான் செய்தி. பாம்பு மனிதனைக் கடிப்பது சாதாரணம். அருந்ததிராய் பிரச்சினை அவ்வகைப்பட்டது

(4) 50, 000 ரூபாயை அருந்ததி ரோய் திரும்பிக்கொடுக்காமல் இருப்பது 'நேர்மையற்றது' என்கின்ற முடிவுக்கு வருகின்றீர்கள். நல்லதே. உங்களிடம் இன்னுமிரு நண்பர்களிடமும் தமிழகத்தில் இருந்து X எனும் நண்பர் 50 நூற்களை விமானத்தில் அனுப்பி வைக்கின்றார். அந்நூலின் விலை கனடாவிலேயே 30 டொலருக்குத்தான் விற்கப்படுகின்றது. ஆக 50 * 30 = 1500 டொலர்ஸ் + விமானச் செலவு. ஒரு கனடியன் டொலர் = 40 இந்திய ரூபாய் என்றாலே. அனுப்பிய புத்தகங்கள் மட்டுமே 60, 000 ரூபாய் வரும். விமானச் செலவை விடுவோம். அவை தடிமனான புத்தகங்கள். அந்த எக்ஸ் நண்பர் நீங்கள் அந்தச் செலவை அனுப்பவில்லை என என்னிடம் நேரடியாகச் சொன்னார். உங்களிடம் கேட்டால், அந்த நூலை எழுதியவர் எமது 'வளர்ப்புத் தந்தை' போன்றவர் எனக் கூறி தப்பிவிடுகின்றீர்கள் என்றும் கூறுகின்றார். (வாசிக்கும் மற்றவர்களுக்கு சார்பு நிலை வரக்கூடாது என்ற முன்னெச்சரிக்கைக்காய்..., இதைச் சொன்னவர் வளர்மதி இல்லை எனவும் கூறிவிடுகின்றேன்). ஆக, 50, 000 ரூபாய் நீங்கள் அந்த நண்பருக்கு கொடுக்க வேண்டியிருக்கிறதல்லவா? அருந்ததிரோயின் நேர்மையற்றதனத்தைக் கண்டிக்கும் நீங்கள் இதுகுறித்து ஏன் உங்கள் மனச்சாட்சியின் நேர்மையைக் கேள்வி கேட்கவில்லை?

*டிசே யின் குறிப்பு :மேலும் 3/4 ற்குப் பதில் சொல்வதாய் ஷோபா எழுதியிருக்கின்றார். இது நேரடியாக ஷோபாவின் மீது நான் முன்வைக்கும் கேள்விக்கு அவர் தன் நிலையில் இருந்து பதிலளிக்கவில்லை என்பதைச் சுட்ட விரும்புகின்றேன்)

(5) கறுப்பு தொகுப்பில் அலன் சோகலின் மோசடிக் கட்டுரையைப் பிரசுரித்திருக்கின்றீர்கள். அது குறித்து வெளிப்படையாக நீங்கள் எழுதியிருக்கின்றீர்களா? 'கறுப்பு' வாங்கி வாசிக்கும் வாசகர்களிடம் இதற்காய் மன்னிப்புக் கேட்டிருக்கின்றீர்களா? (இதேயிடத்தில் ஒன்றைக் கூறவேண்டும், இந்தக் கட்டுரையை மட்டும் வைத்து உங்களோடும் அ.மார்க்சோடும் இருக்கும் பகையால் காலச்சுவடு கண்ணன் முழுத்தொகுப்பையை நிராகரித்தபோது, ரோசாவசந்த், திண்ணைதூங்கி உட்பட நான் வரை உங்களுக்கு ஆதரவாகவே 'பதிவுகள்' தளத்தில் பேசினோம் என்பதையும் ஒருகுறிப்புக்காய் கூறிக்கொள்கிறேன்)

ஷோபாசக்தி: (5) அது நாங்கள் ஏமாற்றப்பட்ட சம்பவம். எனக்கோ சுகனுக்கோ ஆங்கிலம் தெரியாததால் நடந்த சம்பவம். தெரிந்து செய்த பிழையன்று..அறியாமையால் செய்த தவறு. அறியாமையை அறிக்கையிட அப்போது கொஞ்சம் வெட்கப்பட்டோம். அவ்வளவே.

(6) சனதருமபோதினியில் சாருவின் 'உன்னதசங்கீதம்' எந்த அடிப்படையில் பிரசுரிக்கப்பட்டது? தொகுப்பாளர் என்றவகையில் அந்தக் கதை குறித்து உங்களுக்கு என்ன அபிப்பிராயம் உண்டு?

ஷோபாசக்தி: (6).அது ஒரு சிறந்த கதை என்பதே எனது கருத்து. அல்லாத பட்சத்தில் பிரசுரித்திருக்க மாட்டோம். எனக்கு ஆங்கிலம்தான் தெரியாதே தவிர தமிழ் நன்றாகவே தெரியும்.

(7) இன்று இலங்கையில் நடைபெறும் சர்வதேச இலங்கை எழுத்தாளர் மாநாடு, காலி எழுத்தாளர் மாநாடு என எல்லாவற்றுக்கும் ஓடி ஓடிப்போய் கையெழுத்து இடுகின்றீர்கள். நண்பர்களுக்கு அனுப்பி ஆதரவும் கேட்கின்றீர்கள். உங்களது அரசியலைத் தெளிவாக வைப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே. எனது கேள்வி என்னவென்றால் ஒரு பேச்சுக்கு இலங்கை அரசுக்குப் பதிலாக விடுதலைப் புலிகள் போரில் வெற்றி பெற்று அவர்கள் தனிநாடும் அடைந்திருந்தால் இதேமாதிரிதான் செயற்பட்டிருப்பீர்களா? அப்படித்தான் செயல்பட்டிருப்பீர்கள் என்பதை உங்களின் 'நான் புலிகளை 100% எதிர்க்கிறேன். இலங்கை அரசை 200% எதிர்க்கிறேன்' என்ற கோசமும் வலுச்சேர்க்கிறது. எனெனில் 200% எதிர்ப்பைச் செய்வதாகச் சொன்ன அரசு அதிகாரம் செலுத்தும் நிலத்திலே இப்படி உங்களின் 'ஆதரவுத்தளம்' செயற்படும்போது, 100% எதிர்ப்பைக் காட்டிய புலிகள் வென்றிருந்தால் இன்னும் நிறைய ஆதரவு கொடுத்திருப்பீர்கள் என்பதே யதார்த்தமாகும். அப்படியாயின் புலிகள் செய்த எல்லாவற்றையும் மறந்து பகை மறப்பும் மீள் நல்லிணக்கமும் மக்களைக் காரணங்காட்டி செய்யச் சொல்லும் அ.மார்க்ஸ் போல நீங்களும் கூறுவீர்களா?

ஷோபாசக்தி: (7).ஆம்...யார் வென்றிருந்தாலும் பகை மறப்பும் சமாதானமுமே முதன்மையானவை என்றே வலியுறுத்துவேன். புலிகள் போரியல் வெற்றியின் உச்சங்களில் இருந்து ஒரு அரசுமாதிரியையே கட்டமைத்திருந்த காலத்திலும் இதையே கூறினேன்

(8) பத்மநாப அய்யரை அவரின் பெயரில் 'அய்யர்' இருக்கின்றது என்ற ஒரு காரணத்தை வைத்தே நீங்கள் எல்லாம் செத்த பாம்புக்கு அடிப்பதுபோல அவரைச் சாடுனீர்கள் (இங்கே எனக்கு அய்யரோடு தனிப்பட்ட நெருங்கிய பரிட்சயம் என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது). கனடாவுக்கு வந்த பலமுறைகளில் ஒரேயொரு முறை மட்டுமே அவரைச் சந்தித்திருக்கின்றேன்). நானறிந்தவரை அய்யர், தான் பிரமாண சாதியில் பிறந்ததை முன்வைத்து எவரையும் ஒடுக்கியதாகவோ ஒதுக்கியதாகவோ கேள்விப்பட்டதில்லை. எவரும் அப்படி எழுதியும் வாசித்ததுமில்லை. நீங்கள் இவ்வளவு கிழித்தும் உங்கள் தொகுப்புக்கள்/படைப்புக்களை தானே வாங்கி அய்யர் தன் நண்பர்களுக்கு அனுப்பிவைப்பதாகவும் கேள்விப்பட்டிருக்கின்றேன். அதுவல்ல என் கேள்வி. நீங்கள் உங்கள் சத்தியக்கடதாசியில் ஹரி தனது முழுப்பெயருடன் எழுதிய மத்தியகல்லூரி பற்றிய கட்டுரையைப் பிரசுரித்திருந்தீர்கள். ஹரிக்கும் அவரது பின்னால் வரக்கூடிய பெயருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாததுபோலவே பத்மநாப அய்யரும் இருக்கின்றார். சாதிப்பெயர்களை எடுத்துவிட்டு சாதிமான்களாய் உலாவருபவர்களையும் நீங்கள் அறியாததுமல்ல? அய்யர் என்ற பெயர் இருப்பதால் மட்டுமே பத்மநாப அய்யரோடு தேவையில்லாமல் தனவிய நீங்கள் எப்படி ஹரியின் முழுப்பெயரோடு உங்கள் தளத்தில் ஒரு கட்டுரையைப் பிரசுரிக்கச் செய்தீர்கள்? இதற்குப் பெயர் தான் நேர்மையா? அறமா?

ஷோபாசக்தி: (8.)ஹரி போன்ற யாழ்ப்பாணத்திலிருந்த பதின்ம வயது இளையவரையும் பழுத்த இலக்கிய இயல் வாழ்நாள் சாதனையாளரான பத்மநாபரையும் ஒரே மாதிரியாக மதிப்பிடுவது தவறு. ஹரி எழுதவந்த குறுகிய காலத்திலேயே சாதிப் பெயரைத் துறந்துவிட்டார். பத்மநாபர் இப்போதும் சுமககிறார். அவரும் துறக்கும்வரை 'தனகுவதை'த் தவிர வேறு வழியில்லை.

(9) தேசியம் குறித்து உங்களின் பொதுவான வரைவிலக்கணம் என்ன? இலங்கையில் தமிழ்த்தேசியத்திற்கான அவசியம் இருக்கின்றதா? ஆம்/இல்லை எதுவெனிலும் உங்கள் பதில்களை முன்வைக்கவும்.

ஷோபாசக்தி: (9) மிகவும் சுருக்கமாகச் சொல்கிறேன்: தொழிலாளிக்கு தாய்நாடு கிடையாது என்ற கார்ல் மார்க்ஸின் பார்வையும் நானொரு தேசத்தரோகி என்ற பெரியாரின் அறைகூவலுமே எனது வழிகள்.

(10) நீங்கள் ரயாகரன், கலாமோகன் உட்பட யமுனா ராஜேந்திரன் வரை விடாது துரத்தி அவர்களை 'அம்பலத்தியிருக்கின்றீர்கள்'. ஆனால் இன்று சுகன் தான் கூறியவற்றுக்கு மாறாய் நடந்துகொண்டிருப்பதை (அண்மையில் பானுபாரதியும் தன் பேஸ்புக்கில் குறிப்பிட்டிருக்கின்றார்) பார்த்துக்கொண்டிருந்தும் நீங்கள் ஏன் ஒரு கட்டுரை எழுதவில்லை (ஒரேயொரு கட்டுரை சுடப்படும் இளைஞர் பற்றிய சுகனின் புரட்டுக்கதையைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்) நான் கேட்பது சுகனின் கோட்பாடு/அரசியல் சரிவுகளை முன்வைத்து ஒரு கட்டுரை ஏன் இதுவரை எழுதவில்லை?

ஷோபாசக்தி: (10) சுகனின் கோட்பாடு அரசியல் சரிவுகள் என நீங்கள் குறிப்பிடுவது எதையோ?

(11) அனைவருக்குமான திறந்த உரையாடல்கள் என்பது இணையத்தில் முக்கியமானது. நமது இயக்கங்கள் அனைத்தும் அவ்வாறு இருக்காத‌தால்தான் தம்மில் தாமே மண்ணை அள்ளிப்போட்டது மட்டுமில்லாது அவர்களை நம்பிய மக்கள் மீதும் மண்ணை அள்ளிப்போட்டார்கள். 'சனநாயக வெளி' பற்றி அக்கறையுள்ள நீங்கள் ஏன் பின்னூட்டங்களை தடுத்தீர்கள்? வளர்மதி தனது பின்னூட்டங்கள் தடுக்கப்பட்டதென்கிறார். ரஃபேலும் அதைக் குறிப்பிடுகின்றார். வேறு சிலரும் முன்னர் அவ்வாறு கூறியதாக நினைவு. பெயர்கள் சரியாக நினைவுமில்லை. நீங்கள் சத்தியக்கடதாசியிலிருந்து 'ஷோபாசக்தி டொட் கொம்' ற்குப் போனபோதும் நீண்டகாலமாய் பின்னூட்டப்பகுதி மூடப்பட்டே இருந்தது. ஆக இதுவும் சனநாயக வெளி என்கின்றீர்களா? இப்போது பேஸ்புக்கிலும் அதைத் தொடர்கின்றீர்கள். உங்களைச் சீண்டுகின்றார்கள் என்பதற்காய் அவர்களை அகற்றுகின்றீர்கள். இணையம் போன்ற வெளியிலேயே எம்மால் சகிப்புத்தன்மையும், எல்லோரையும் ஏற்றுக்கொள்ளமுடியாதிருக்கும்போது, எங்களைப் போன்றவர்கள் சனங்களை முன்னிட்டு அரசியலோ அல்லது இலக்கியந்தான் பேசமுடியும் என நம்புகின்றீர்களா? சனத்தோடு புழங்கும் வெளியில் இதேபோன்ற ஆட்கள் எரிச்சலூட்டும்போது கிடைக்கும் தும்புக்கட்டையாலோ அல்லது துவக்காலோ போடாமல் விடமாட்டோம் என்பது என்ன நிச்சயம்? ஆக இணையத்திலேயே சகிப்புத்தன்மை இல்லாத நாங்கள் சனங்களுக்கான அரசியலோ, எதுவோ பேசுவதென்பது சுத்த பம்மாத்துதான் என்கின்றேன். ஆமா/இல்லையா என்பதை ஒற்றைவரியில்லாது விளக்கத்துடன் தரவும்.

ஷோபாசக்தி: (11).தனிநபர்கள் மீது அவதூறு பரப்புதைத் தடுப்பதற்காக பின்னூட்டங்களில் மட்டுறுத்தல் நீக்கல் மூடல் எல்லாமே செய்வேன். நீங்கள் உங்களுடைய வலைப் பதிவில் எழுதுவதை நான் தடைசெய்தால்தான் அதற்குப் பெயர் கருத்துச் சுதந்திர மறுப்பு. என்னுடைய தியேட்டரில் உங்களுடைய ஆபாசப் படத்தை ஓட்டவிடாமல் நான் தடுத்தால் அதன் பெயர் பொறுப்புணர்வு.

(12) இந்தக் கேள்வி குழந்தைப் போராளி சம்பந்தமானது. கேட்கும்போது தயக்கங்கள் இருந்தன. இப்போது அது Too personal போன்று தோன்றுவதால் அதை பொதுவெளியில் வைக்க விரும்பவில்லை. அதேசமயம் ஷோபா இதற்குப் பதில் அளித்திருந்தார் என்பதையும் குறிப்பிடவேண்டும். அதற்கு நன்றி (~டிசே)

(13) சாதியம் குறித்து... நீங்கள் பல இடங்களில் குறிப்பிட்டமாதிரி எங்களுக்கு ஓர் பெரியாரோ அம்பேத்காரோ அயோத்திதாசரோ நாராயணகுருவோ இல்லாதுபோனது சாபமே. ஆனால் இவர்களைப் போன்ற பலரும் இருந்துகூட இன்னமும் இந்தியாவில் சாதியம் வீரியமாகவே இருக்கின்றது. அண்மையில் கூட ஆதவன் தலித்துக்களின் வீடுகள் எரிக்கப்பட்டதைப் பதிவு செய்திருக்கின்றார். புலிகளின் காலத்தில் சாதி ஒழிப்பு நடைபெறவில்லை என்பதுவும் உண்மையே. ஆனால் சாதி நாசூக்காய் மறைக்கப்பட்டிருந்தது. அதனால்தான் பொதுவெளியில் பலர் தம் சாதித்திமிரைக் காட்டத் தயக்கமிருந்தது. எனெனில் புலிகளால் தண்டனை கொடுக்கப்படுமென்று.

அண்மையில் தேவதாசன் பதிவுசெய்த விடீயோவில் கோயிலில் ஒரே இடத்தில் பொங்கிப்படைப்பதை, தலித்துக்களும் இருக்கின்றார்கள் என்பதால் ஆதிக்க சாதி தனிக்கொட்டில் போட்டுப் பொங்க அதை உடைத்த தலித்துக்களை பொலிஸ் கைதுசெய்திருக்கின்றது. புலிகளிடம் இருக்கும் துவக்குப் பயத்தால் இவ்வாறு தனியே கொட்டில்போட்டுப் பொங்க ஆதிக்கசாதியினர் போயிருக்கமாட்டார்கள் என ஒருவர் ஒரு வாதத்தை வைக்கின்றார் என வைப்போம். அதாவது அவர் புலிகளின் காலத்தில் இருப்பதைவிட இப்போது சாதித்திமிரும் ஒடுக்குமுறைகளும் அதிகம் என முடிவுக்கு வருகிறார் என்றால் உங்களின் பதில் என்னவாக இருக்கும்? இப்போதைய சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எவ்வாறான போராட்டங்களை முன்வைப்பீர்கள்.?

ஷோபாசக்தி: (13).புலிகள் காலத்தில் துப்பாக்கி நிழலில் சாதியம் மறைந்திருந்தது. அது இப்போது வெளிவருகிறது என்ற கருத்துத்தான் எனது கருத்தும். புலிகள் மீதான எனது விமர்சனம் அவர்கள் சாதியத்தை வளர்தார்கள் என்பதல்ல. சாதியைக் கில்லியெறிய அவர்கள் ஆழமான வேலைத்திட்டங்களை வைக்காததையே எப்போதும் எனது விமர்சனமாக வைத்து வந்திருக்கிறேன். இன்றைக்கு உகந்த போராட்ட வடிவம் எது என்ற எனது கருத்தை அறிய எனது 'வசந்தத்தின் இடிமுழக்கம்' என்ற கட்டுரையைப் படிக்கவும்.

(14) எதிர்காலத்தில் ஈழத்தில் முன்னால் புலிகள் ஒரு அரசியல் கட்சியாக பரிணாமித்து, தமிழ்ப்பிரதேசங்களில் முக்கிய கட்சியாக மாறுகின்றனர் என வைப்போம். அரசியலில் பலம் பெறுகின்ற அவர்கள் இலங்கை அரசிடமும், உலகிடமும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுயாட்சியும் (விரும்பினால் பிரிந்துபோகின்ற உரிமையும் தரவேண்டுமென) ஒரு பொதுசன வாக்கெடுப்பைக் கேட்கின்றார்கள் என வைப்போம். அவ்வாக்கெடுப்பில் அங்குள்ள மக்கள் தனிநாட்டுக்கு ஆதரிக்கின்றார் என (சும்மா ஒரு ஆசைக்குத்தான்) வைப்போம். ஆனால் உங்களுக்கு நிச்சயமாகத் தெரிகிறது. தனிநாடு வந்தால் அது எப்படி முன்னர் புலிகளின் ஆட்சி இருந்ததோ அதே பிரின்சிப்பல்கள் பின்பற்றப்படுமென்று. நீங்கள் மக்களின் முடிவுக்கு தலைசாய்த்து புதிய நாட்டை ஏற்றுக்கொள்வீர்களா? அல்லது புலிகளின் மிச்சங்கள் இன்னும் இருக்கின்றது என்பதற்காய் எதிர்ப்பீர்களா (இந்தக்கேள்விக்கு hint: இப்போது மக்களைக்காரணங்காட்டித்தான் எல்லா இடங்களிலும் ஓடி ஓடிக் கையெழுத்திடுகின்றீர்கள்...மக்களின் முன் மகிந்தா ஒரு பொருட்டாக இல்லாதபோது, அம்மக்களின் முடிவின் முன் புலிகளும் ஒரு பொருட்டில்லையென இந்த அப்பாவி மனம் நம்புகிறது)

ஷோபாசக்தி: (14). நான் எப்போதுமே தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக் குரலுக்கு ஆதரவாய் இருப்பவன். தேசிய இனங்களின் இணைப்பாட்சி முறையே இப்போதைக்கு ஏற்ற தீர்வு எனக் கருதுகிறேன்

இந்தக் கேள்விகள் வளர்மதியினதுடையது...

(நினைவூட்டல்...

Shoba Sakthi டீசே மேலதிக விளக்கத்திற்காக மறுபடியும் சொல்கிறேன். வளர்மதியின் கேள்விகள் நியாயம் என நீங்கள் கருதும் பட்சத்தில் அந்தக் கேள்விகளோடு உங்களிற்கு உடன்பாடு இருக்கும் பட்சத்தில் தயவு செய்து அநதக் கேள்விகளை வெறுமனே கட் அன்ட் பேஸ்ட் செய்து உங்களது கேள்விகளாக வையுங்கள். நான் கண்டிப்பாக பதில் சொல்வேன். பதில்களுக்கு மட்டுமல்ல கேள்விகள் கேட்பவருக்கும் பொறுப்புணர்வு தேவையென்பதாலேயே இந்தக் கோரிக்கை.

November 13, 2010 at 9:31pm )

1. ஒடுக்கப்பட்டோர் விடுதலை – குறிப்பாக, தலித் விடுதலை குறித்து ஒரு தலித் அல்லாத ஆதிக்க சாதியில் பிறந்த நபர் எந்த அளவில் நின்று பேசுவது? தலித்துகளுடைய பிரதிநிதி போலவும், அவர்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துவிட்டது போன்ற பாவனையோடும் பேசுவது சரியா? தமிழகத்தில் அ. மார்க்ஸ் இப்படிப் தலித் அரசியல் பேசிய காரணத்தினால்தானே ரவிக்குமார், ”எங்கள் அரசியலை – விடுதலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீ நடையைக் கட்டு” என்று அ. மார்க்சை ஒதுக்கித் தள்ளினார்? புலம் பெயர் சூழலிலும் அதே போன்று தலித்துகளுடைய பிரதிநிதிகள் போல வரிந்து கட்டிக்கொண்டு அதே தவறை செய்வது சரியா?

2. அடையாள அரசியலை நிராகரிப்பதாகக் கூறிய உங்கள் தரப்பு அரசியல் அடையாள அரசியல்தானே செய்கிறது? இது உங்கள் கொள்கைக்கு முரணானதில்லையா?

3. பெரியாரின் தாசர்களாக தம்பட்டமடித்துக் கொள்ளும் நீங்கள் பெரியார் 1930 கள் முதல் தன் வாழ்நாளின் இறுதிவரை வலியுறுத்தியது சாதிய ஒழிப்போடு கூடிய தமிழ் தேசிய விடுதலையைத் தவிர வேறு என்ன? இதை மறுக்கிறீர்களா ஏற்றுக் கொள்கிறீர்களா? மறுத்தால், விளக்க வேண்டும். ஏற்றால், முரண்பாட்டை விளக்க வேண்டும்.

4. இந்தப் பெருங்கதையாடல் என்கிறீர்களே, அதற்கு விளக்கம் சொல்ல முடியுமா? உங்கள் விளக்கப்படியே பார்த்தால், இந்துத்துவத்துவ பெருங்கதையாடல் என்று சொல்ல முடியுமா?

5. வித்தியாசம் வித்தியாசம் என்கிறீர்களே வித்தியாசத்திற்கும் முரண்பாட்டிற்கும் இடையிலான வித்தியாசம் என்ன என்று சொல்ல முடியுமா?

6. பலஸ்தீனத்திலே தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தும் நீங்கள், ஈழத்திற்கோ தமிழகத்திற்கோ அதை ஏன் நிராகரிக்கிறீர்கள்? பலஸ்தீனத்திலே இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவருக்கும் கடும் மோதல்கள் இல்லையா? ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் மட்டும் அக முரண்பாடுகளைச் சொல்லி விடுதலையை மறுப்பவர்கள், பலஸ்தீனத்திற்கு அதைச் சொல்லாமல் விடுவது ஏன்?

7. காஷ்மீரில் அகமுரண்கள் இல்லையா? அங்கே ‘துரோக’ அமைப்புகளால் எண்ணற்ற உயிர்பலிகள் நிகழவில்லையா? இன்றும் ஆயுதப் போராட்டத்தோடு சேர்த்த அமைதிப் போராட்டத்தையும் சளைக்காமல் நடத்திக் கொண்டுதானே இருக்கிறார்கள். அதிலும், உலகிலேயே வலுமிக்க இராணுவங்களுள் ஒன்றை எதிர்த்தல்லவா போராடிக் கொண்டிருக்கிறார்கள்? காஷ்மீர் விடுதலையை ஒப்புக்கொள்வதா வேண்டாமா?

(இறுதி 1-6 வரையான கேள்விகளுக்கு ஷோபா விரிவாகவே தனது தளத்தில் பதிலளித்திருப்பதால், அவற்றின் விடைகளே இங்கே பதியவில்லை)

-----------------

எனது அசல் கேள்விகளான 14ற்கும் பதிலளித்து ஷோபா, இவ்வாறு கேட்டிருந்தார்....

Shoba Sakthi வளர்மதியின் கேள்விகள் அபத்தமானவை என்றும் பொருட்படுத்த்தக்கவையல்ல என்றும் எத்தனை தடவைதான் சொல்வது. மறுபடியும் நான் டிசேயிடம் கேட்பது நீங்கள் தொகுத்த அவரின் கேள்விகள் வலுவானவையெனவும் சரியானவையெனவும் நீங்கள் கருதுகிறீர்களா? அவ்வாறு நீங்கள் கருதும் பட்சத்தில அவை உங்களுடைய கேள்விகளாயும் மாறிவிடும். மகிழ்ச்சியாகப் பதில் தருகிறேன். தனிக் கட்டுரையாகவே எழுதிவிடலாம். வளர்மதியின் கேள்விகளை உங்களது கேள்விகளாக முன்வைக்கிறீர்களா என்பதைத் தயவு செய்து தெளிவுபடுத்தினீர்கள் எனில் வேலையைத் தொடங்கிவிடுவேன்.

நான் அதற்கு இவ்வாறு பதிலளித்திருந்தேன்:

ஷோபா, வளர்மதியின் கேள்விகளுக்கான பதில்களை நானும் எதிர்பார்க்கின்றேன் (அவை என் கேள்விகளுமென நீங்கள் எடுத்துக்கொண்டாலும் எனக்கு பிரச்சினையில்லை). வேண்டுமெனில் கேள்வி இல.5 ஐத் தவிர்த்துவிட்டு பதில் எழுத வேண்டுகிறேன்

வளர்மதியின் 6 கேள்விகளுக்கு ஷோபா இப்போது பதிலளித்திருக்கின்றார். ஆனால் அவற்றை டிசே தமிழனின் கேள்விகளாக்கிவிட்டார். ஆகக்குறைந்து, வளர்மதி தொடக்கத்தில் கேட்டு, அதையே டிசேயும் கேட்டிருந்தார் என்றாவது வளர்மதிக்கு கிரெடிட் கொடுத்திருக்கலாம். ஆனால் அவற்றை குறிப்பிடாதது மட்டுமின்றி பேஸ்புக்கில் நடந்த ஒரு விவாதத்தை இடைநடுவில் இருந்து பொதுத்தளத்தில் எடுத்துப்போட்டு அதற்குப் பதிலளிக்கிறேன் என ஷோபாசக்தி தொடங்கியதை எந்தவகையான அறம் என்பதை ஷோபாவிடம் அல்ல, வாசிக்கும் உங்களிடம் முன்வைக்கின்றேன்.

மேலும், வளர்மதியின் கேள்விகள் (மூன்றாம் கையால் வைக்கப்படுவது என்றும் ஷோபா இப்போது சொல்லிக்கொண்டு திரிகிறார்; இதுகுறித்து வரும் பகுதிகளில் எழுதுவேன்). உண்மையில் வளர்மதி என்னிடம் எந்தப்பொழுதிலும் தனது கேள்விகளை ஷோபாசக்தியிடம் கேட்கச் சொல்லிக் கேட்டதில்லை என வெளிப்படையாக முன்வைக்கின்றேன். ஷோபா புலிகளிடம் இருந்தபோது உளவுத்துறைக்குள் இருந்து வேலை செய்திருக்கலாம்; பல திடுக்கிடும் உண்மைகளைக் கூடக் கண்டும்பிடித்திருக்கலாம். ஆனால் இங்கே நடக்காத ஒரு விடயத்தை நடந்த்தாய் 'பாவனை' செய்வது மிக அநியாயமானது.

நான், ஏன் எனது கேள்விகளோடு இப்போது வளர்மதியின் கேள்விகளையும் இணைத்தேன் என்றால், நான் ஷோபாவோடு முரண்பட்டு எழுதிய முதலாவது நோட்டிலேயே ஷோபாவிற்கு இது பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றேன்.

வளர்மதி உங்களுக்கு இளங்கோவன் அன்பன் என்பவரின் பகுதியில் ஜந்தோ பத்துக் கேள்விகள் கேட்டிருந்தார். அவை முக்கியமான கருத்தியல் கேள்விகள். அதற்கான உங்கள் பதில் சுயவிமர்சன்மாகவும் உங்களை முன்னகர்த்திச் கொள்வதாகவும் இருந்திருக்கும். 'மாற்று அரசியலை' ஒருகாலத்தில் நம்பிக்கையோடு பார்த்துப் பின் சலித்துபோன எங்களுக்கும் கூட உதவியிருக்கும். சரி வளர்மதியோடுதான் 'ஆற்றைப் பார்த்துக் கோபம்' என்றிருந்தால் கூட, வேறு யாரோ திருப்பிப் போட்டு பதில் அளிக்கச் சொல்லியிருந்தார்களே. அப்போதும் மவுனந்தானா?

இளங்கோவன் அன்பனின் ஃபேஸ்புக்கில், வளர்மதி இதே 6 கேள்விகளை முன்வைத்து ஆகக்குறைந்து 4-5 மாதங்களாகி இருக்கும். எத்தனையோ அபத்தமான கேள்விகளுக்கு எல்லாம் தனது 24மணிநேர சேவை (இது அவரே குறிப்பிட்டதுதான்) மூலம் பதிலளித்து வந்த ஷோபா இந்தக் கேள்விகளைத் தொடர்ந்து ஏன் புறக்கணித்து வந்தார் என்பதையும் வாசிப்பவர்க‌ள் கவனத்திற் கொள்ளவேண்டும்.

மேலும், டிசே தமிழனின் ஆறு கேள்விகள் என்று எழுதிய பதிவில் எவ்வாறு

வெறுமனே கலைச்சொற்களால் கோர்க்கப்பட்ட போலி அறிவுஜீவித்தனமான சத்தற்ற கேள்விகள் அவை. அந்தக் கேள்விகளின் பின்னாலிருப்பது மலிவான குதர்க்கவாதமே என நான் கருதுகிறேன். எனக்கூறி 'வாசகத் தோழர்கள் பொறுத்தருள்க. என் கடமையைச் செய்ய என்னை அனுமதியுங்கள்.' என்னமாதிரி பில்ட் அப் (build-up) கொடுக்கின்றார் எனப் பாருங்கள். அதேபோன்று எனது அசல் 14 கேள்விகளும் தவிர்க்கப்பட்டு மிக நுட்பமாக இந்த 6 கேள்விகள் மட்டுமே அவ‌ர‌து த‌ள‌த்தில் முன்வைக்கப்பட்டதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

இப்போது சற்று காலச்சக்கரத்தைச் சுழற்றுவோம். 'என்னிடம் ஏன் கேள்வி கேட்கவில்லை?' என்றும் 'கேள்வி கேட்காமல் டிசே தமிழன் ஓடிவிட்டார்' எனவும் எழுதவும் துணிகிற ஷோபாசக்தி இந்த முன்னுரை /முக்குகின்ற உரையைத் தவிர்த்து- நேரடியாக -கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கவேண்டியதுதானே? முதலிலே ஒரு அறிமுகம் கொடுத்து கேள்வி/பதில்களை வாசிக்கமுன்னரே வாசகருக்கு தானொரு அறிவுஜீவி என்கின்ற தோரணையைக் கொடுப்பது. இந்த 'முன்னுரையின்' பின்பு ஒரு வாசகர் முன் அனுமானமின்றி உள்ளே போகமுடியுமா?

மேலும், கேள்விகள் கேட்பவன் ஒரு முட்டாளாக இருக்கிறான் ஆகவே வாசகத் தோழர்களே பொறுத்தருள்க எனத் 'தெளிவாக' ச் சொல்லி, ஆனாலும் பாருங்கள் 'நான் எப்போதும் நல்லவனப்பு, எவன் என்றாலும் பதில் சொல்லாமல் தப்பியோடுபவன் அல்ல' என்கின்ற தோரணையை 'என் கடமையைச் செய்ய அனுமதியுங்கள்' மூலம் கட்டமைப்பது....

ஆம் நண்பர்களே. இதுதான் ஷோபாசக்தி. நீங்கள் இந்தச் சுழலிருந்தும், அவரது நளினமான விவாதத் திறமைகளிலிருந்தும் (ஒரு விடயத்திலிருந்து இன்னொரு விடயத்துக்கு spider man மாதிரித் தாவுவது வரை) உங்களைக் காப்பாறிக்கொள்ளாமல் விட்டால் ஷோபாவுடன் உரையாடுவது என்பது 'சொந்த செலவிலே சூனியம் வைப்பது' போன்றதுதான்.

(இன்னும் வரும்)

ஆதியிலே ஷோபாசக்தியோடு முரண் இருந்தது

In ஷோபாசக்தி

Saturday, February 12, 2011- பகுதி 01

1.

ஷோபாசக்தி இப்போது டிசே தமிழன் கேட்ட 6 கேள்விகள் என ஒரு பதிவைத் தனது தளத்தில் எழுதியிருக்கின்றார். ஆனால் இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்ட பின்னணிக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. ஃபேஸ்புக்கினுள் ஷோபாவும் நானும் தொடர்ச்சியான ஒரு உரையாடலை அண்மைக்காலமாய்ச் செய்து வந்திருக்கின்றோம். எனது தனிப்பட்ட விருப்பு சார்ந்து 'டிசே தமிழன்' என்ற பெயரில் இருக்கும் ஃபேஸ்புக்கில் 45 நண்பர்களை மட்டுமே இணைத்து private access கொடுத்து ஒரு மூடிய தளமாகவே வைத்திருக்கிறேன். ஆனால், இப்போது ஷோபா என்னை முன்னிறுத்தி ஒரு பதிவை அனைவரும் பார்க்கக்கூடிய பொதுத்தளத்தில் எழுதியிருக்கின்றார். ஆனால் இது ஃபேஸ்புக்கினுள் நடந்த விவாதங்களின் தொடர்ச்சியே. உண்மையில் ஷோபாவின் இப்பதிவு தலையுமின்றி வாலுமின்றி இடைநடுவில் நின்று அந்தரத்தில் ஆடுகின்றது.

'நண்பர் ஒருவர் பேஸ்புக்கில் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கின்றேன்' என ஷோபா குறிப்பிட்டிருந்தார் என்றால் எனக்கு எந்தச் சிக்கலுமில்லை. எனது பெயரைக் குறிப்பிட்டிருப்பதால் நான் நடந்தவற்றை ஆதியிலிருந்து அந்தமாகப் பொதுத்தளத்தில் முன்வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஷோபா எனக்கு ஏற்படுத்தியிருக்கிறார். ஷோபா என்னிடம் அனுமதி கேட்காமல் எங்களுக்குள் நடந்த உரையாடலை பொதுத்தளத்தில் வைத்தது என்னளவில் சோர்வையே ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அவரைப் போலின்றி, அவருக்கு நான் இப்படி ஃபேஸ்புக்கில் நடந்த அனைத்தையும் பொதுத்தளத்தில் வைக்கப்போகின்றேன் எனக் கூறியே இங்கே இவற்றை எழுதத் தொடங்குகின்றேன் என்பதையும் குறிப்பிட விழைகிறேன்.

அத்துடன், ஷோபா டிசே தமிழன் கேட்ட கேள்விகள் எனக் கூறுபவை முதலில் வளர்மதியிடம் இருந்து வந்தவை. அதற்கான எந்த கிரடிட்டும் வளர்மதிக்கு ஷோபா கொடுக்கவில்லை என்பது எரிச்சலையே ஊட்டுகின்றது. ஆகவே அந்தக் கேள்விகளின் மூலம் வளர்மதி என முதலில் தெளிவுபடுத்தி விடுகின்றேன். அத்துடன் நான் ஷோபாவிடம் கேட்ட மிகுதி அசல் 14 கேள்விகள் இருக்கின்றன. அதை இப்போது தனது தளத்தில் நுட்பமாக மறைத்திருக்கின்றார். அந்தக் கேள்விகளையும் -ஷோபாவைப் போல மறைக்காது- இங்கே முன்வைத்து ஷோபாவின் பதில்களையும் தரப்போகின்றேன். அத்துடன் ஷோபாவிடம் கேட்ட கேள்விகளுக்கு அவரின் பதில்களை வைத்து ஒரு 'பொழிப்புரை' எழுதுவதாகக் கூறியிருக்கின்றேன். அதையும் இனிவரும் நாட்களில் செய்வேன்.

இனி நடந்தவை....!

இலங்கைச் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு அண்மையில் நடந்தது நாமனைவரும் அறிந்ததே. அதை முன்னிட்டு சில மாதங்களுக்கு அதற்கான எதிர்ப்பு, ஆதரவு என்ன எல்லாத்தளங்களிலும் அறிக்கைகள் மாறி மாறி அனுப்பப்பட்டுக்கொண்டிருந்தன. அறிக்கைகளில் அரசியலில் எரிச்சலுற்று, நான் பேஸ்புக்கில் -அறிக்கை எத்தனை 'அரி'க்'கை' யடா...!- என நிலைத்தகவல் எழுத, ஒருசாராரின் அறிக்கையைப் பிரதிநிதிப்படுத்திய ஷோபா, நான் அவரது அறிக்கையையும் கேலி செய்வதாக நினைத்து, எனது நிலைச்செய்தியின் கீழ் சில பின்னூட்டங்களை எழுதினார்.

அவரோடு அதற்கு முன் ஃபேஸ்புக்கில் எந்த விரிவான உரையாடலையும் செய்திராத நான் இவ்வாறு ஒரு நோட்டை அதன் நீட்சியில் அவருக்கு எழுதினேன். (பார்க்க: 'ஷோபாவிற்கு எழுதிய பின்னூட்டம்' ). அந்தப் பதிவுக்கு ஷோபாசக்தி எழுதிய முதற்பின்னூட்டம் இப்படியாக அமைந்தது: Shoba Sakthi சரி நண்பா நீங்கள் இங்கே வைத்துள்ள அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசுவோம். நான் பதில் சொவல்வதில்லை என்ற விசயம் குறித்தும் பேசுவோம். முதலில் நீங்கள் கொழும்பில் நடக்கவிருக்கும் மாநாடு குறித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள். ஏனெனில் விவாதம் இதைக் குறித்ததுதானே! பின்பு மிகுதி நியாயத்தைப் பேசுவோம்.

ஷோபாவின் இக்கேள்வியைச் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் வாசிப்பதற்கான ஒரு அறிக்கையை நான் எழுதினேன். (பார்க்க 'மாற்றை முன்வைத்தல்')

அதற்கு ஷோபாசக்தி, இந்த அறிக்கைக்கு தான் முதல் ஆளாக கையெழுத்து வைக்கிறேன். பிற நண்பர்களுக்கும் அனுப்பி கையெழுத்து வைக்கச் சொல்வோம் என எழுதியிருந்தார். ஆனால் இந்த அறிக்கைகளையே 'அரிக்கைக'ளாக நினைத்த நான் ஷோபாவின் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்காது, 'ஷோபா இது அறிக்கையில்லை. இது உங்களுக்கு மறுமொழியாக - நான் சொல்லவிரும்பியதை- அறிக்கை வடிவத்தில் எழுதியிருந்தேன். அறிக்கை வடிவத்தைத் தேர்ந்தெடுத்ததும், கீழே பெயர்களைப் பட்டியலிட்டதும் கூட இந்த அறிக்கை அரசியலை நக்கலடிக்கவே தவிர உண்.மையான அறிக்கைக்காய் இல்லை. ஏற்கனவே -அறிக்கை எத்தனை 'அரி'க்'கை' யடா- எழுதியவன்/நக்கலடித்தவன் அதேபோக்கில் ஓர் அறிக்கை எழுதுவான் என நீங்கள் நம்பியிருக்க மாட்டீர்கள் எனவே நான் நினைக்கின்றேன்.' என நான் ஒதுங்கிப்போய்விட்டேன். ஷோபாவும் நானும் அதன்பிறகு எவ்வித உரையாடல்களைச் செய்யவுமில்லை. இதை ஒரு 'பகை' மறப்பெனவும் எடுத்துக்கொள்ளவும்.

ஆமாம், அதுவே உண்மை. ஆனால் சில தினங்களுக்கு முன் ஷோபா ஒரு பதிவை எழுதி என்னையும் ரக் (tag) செய்திருந்தார். அங்கிருந்து தொடங்கியது இரண்டாம் ஆட்டம்.

(தொடர்ந்து வரும்...)

http://djthamilan.blogspot.com/2011/02/01.html

இவ்வளவு ஆங்காரமாக கருத்துக்களால் ஷோபாசக்திக்கு வயிற்றுவலி வராது. இதில் கருத்தெழுதிய எத்தனை பேர் அவருடைய புத்தகங்களைப் படித்திருக்கின்றீர்கள்? <_<

"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" - பழமொழி

அவருடைய ( http://www.shobasakthi.com/shobasakthi/ ) இந்தக்கடைசி சிறுகதை (http://www.shobasakthi.com/shobasakthi/?p=798) காணும் அவரை எடைபோட.

இன்றும் தமிழர்களை இழிவுபடுத்தி, அவர்களை விட்டு தள்ளி வாழுவதே நல்லது எனவும் தொனிப்பட வரையப்பட்ட கதாபாத்திரம் தமிழின வக்கிரத்தையே தமிழருக்கு "இலக்கியம்" என்ற பெயரில் அதே தமிழர் தலையில் வைப்பதும், வயிற்றுவலியுடன் தலைவலியையும் தரும். முழுக்க வாசித்தால் நெஞ்சு வலியே மிஞ்சும்.

இவரைத்தான் இந்திய முன்னோடியான தமிழ் வாராந்தரப் பத்திரிகைகள் புலம்பெயர் எழுத்தாளரெனெ அடையாளம் கண்டு செவ்விவெளியிடுகின்றார்கள்.தூஷணமும் இலக்கியமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

திருக்குரானைப் படிக்காமல் அவற்றைத் தீயிட்டுக் கொளுத்துவார்கள், கம்பராமாயணத்தைப் படிக்காமல் அவற்றைத் தீயிட்டுக் கொளுத்துவார்கள். இப்படியேதான் ஏவல்பேய்களாக இருக்கவேண்டும்!

நாரதர், டிசேயின் ஷோபாசக்தி மீதான ஆக்கங்களை இன்னொரு திரியில் இணைத்திருக்கின்றேன். நெடுக்ஸிற்கு டி.சேயையும் பிடிக்காது!

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு ஆங்காரமாக கருத்துக்களால் ஷோபாசக்திக்கு வயிற்றுவலி வராது. இதில் கருத்தெழுதிய எத்தனை பேர் அவருடைய புத்தகங்களைப் படித்திருக்கின்றீர்கள்? <_<

நடிகர் விஜய்யோ என்னவோ ஆரம்பத்தில் நடிகர் கார்த்திக் என்பவரின் பாணியை பின்பறினாராம் அவரிடம் யாரோ சொன்னார்களாம் அவரே இந்தி நடிகர் அனுபம் கேர் என்பவரை பின்பற்றுகிறார் என்று பிறகென்ன நடுவில் இவரேதுக்கு என்று நடிகர் அனுபம் கேரின் படத்தை பார்க்கத்தொடங்கிவிட்டராம் நடிகர்.

ஒரே ஒரு சிறுகதை மட்டும் வாசித்தேன் அதுவும் யாழில்(உருவகக்கதை),

துரோகியின் தாய் என்ற இரசிய கதையும், ஓவியன் என்ற கோமல் சுவாமிநாதனின் கதையை மீளவும் வாசித்தது போல இருந்த்தது.

ஆனால் கதையின் முடிவில் உட்கரு ஆன வக்கிரம் மட்டும் மற்ற இரு கதையிளிருந்த்து மாறுபட்டிருந்த்தது.

அவர் ஒரு திறமை சாலி தான் என்பதற்கு அந்த கதை ஒரு உதாரணம்

இன்றைய தமிழ் இலக்கியம் எவ்வாறு இருக்க வேண்டும்?

ஒரு எழுத்தாளர் இலக்கிய நயனத்துடன் திறமையாக எழுதுகின்றார் என்பதற்காக மட்டுமே வைத்து அவரை ஒரு சமூகத்தின் தலைசிறந்த எழுத்தாளராக பட்டம் கொடுக்க முடியுமா?

இல்லை என்னை வெகுவாக ஒருவர் கவர்ந்துள்ளார் (வெறுக்க வைத்துள்ளார்) என்பதற்காக நான் அவரை எல்லோரும் விரும்பவேண்டும் (வெறுக்கவேண்டும்) என எதிர்பார்க்கலாமா?

இல்லை அந்த படைப்புக்களால் இன்றைய சமூக தேவைகளுக்கு, சமூக மாற்றங்களுக்கு அவற்றால் பலன்கள் உள்ளதா என பார்த்தல் அவசியமா?

ஒரு சமூக நோக்குடைய இலக்கிய படைப்பாளி எவ்வாறு இருக்க வேண்டும்?

தனியவே சமூகத்தில் உள்ள குறைகளை, பிழைகளை எழுத வேண்டுமா? இல்லை தனியவே நல்லதுகளை மட்டும் எழுதல் வேண்டுமா? இல்லை அவற்றுடன் சமூக, வாழ்கை சீர்திருந்த்தங்களையும் முன்வைத்தல் வேண்டுமா?

எவ்வாறான மொழி நடையை வாசிப்பவர்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்பதை எழுத்தாளர் கவனத்தில் கொள்ளல் வேண்டுமா?

மேலுள்ள கேள்விகளுக்கு தனிப்பட்டவராகவும் சமூகமாகவும் விடை காணும்பொழுது அந்த சமூகத்தின் இலக்கியவாதியும் இனம்காணப்படலாம்.

அவதூறாளர்களே! நீங்களே என்னைப் பேச வைத்தீர்கள்

.ப்ய் ஸ்கொப ஸக்தி ஒன் Wஎட்னெச்டய், Fஎப்ருஅர்ய் 16, 2011 அட் 11:17அம்.ப்ரியா தம்பி நான் தமிழச்சியிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக முகப்புத்தகத்தில் குற்றச்சாட்டை வைத்ததுமே நான் அவரது திரியில் அந்தக் குற்றச்சாட்டைக் கடுமையாக மறுத்தேன். ஆதாரம் காட்ட முடியாதபட்சத்தில் ப்ரியா தமபி குற்றச்சாட்டை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றேன். ப்ரியா தம்பி, வளர்மதியை ஆதாரம் காட்டி அந்தக் குற்றச்சாட்டை தமிழச்சி ஏற்கனவே எழுதியிருக்கிறார் என்றார். 'தமிழச்சி எழுதியதாகச் சொல்லப்படும் அந்த இணைப்பைத் தரமுடியுமா' என நான் மட்டுமல்லாமல் வேறுசிலரும் கேட்டோம். இப்போதுவரை தமிழச்சி எழுதியதாகச் சொல்லப்படும் அந்தக் குற்றச்சாட்டிற்கான இணைப்பை யாரும் முன்வைக்கவில்லை. நான் தொடர்ந்தும் ப்ரியா தம்பியின் திரியிலும் எனது முகப்புத்தகப் பக்கத்திலும் இடைவிடாது மறுப்பை எழுதியவாறே இருந்தேன்.

தமிழச்சியே வந்து ப்ரியா தம்பியின் திரியில் 'ப்ரியா தம்பி எழுதியது சரியே' என்றதும் பிரச்சனை இன்னொரு பரிமாணத்தை எட்டிற்று. தமிழச்சி அப்போது கூடத் தான் முன்னரே அவ்வாறொரு குற்றச்சாட்டை வைத்ததாகச் சொல்லவில்லை. அவர் ப்ரியா தம்பியின் குற்றச்சாட்டைச் சரியென்று மட்டுமே கூறினார். அதாவது ப்ரியா தம்பி உருவாக்கிய குற்றச்சாட்டிற்கு தமிழச்சி தனது அங்கீகாரத்தை அளித்தார். ப்ரியா தம்பியோ ஆதாரத்தைக் காட்டியாகிவிட்டது "நாண்டுகிட்டு சாவீங்களா" என என்னிடம் கேட்டார். ஏராளமானவர்கள் தமிழச்சியின் கூற்றை ஆதாரமாக ஏற்றுக்கொண்டு என்மீது தொடர்ந்து பழிகளைச் சுமத்தினார்கள். எனது மறுப்பை ஆதரித்து நின்ற தோழர்கள் பலரும்கூட என்பொருட்டு பழிச் சொற்களைச் சுமக்கவேண்டியிருந்தது. நான் விவாதத்திலிருந்து தற்காலிகமாக விலகிக்கொண்டு தமிழச்சிக்கு Fஅcஎபோக் ஊடாக ஒரு செய்தியை அனுப்பிவிட்டுத் தமிழச்சியின் பதிலுக்காகக் காத்திருக்கலானேன். அந்தச் செய்தி இது:

ஸ்கொப ஸக்தி, 15 Fஎப்ருஅர்ய் அட் 03:51

வணக்கம்,

நமது கடந்தகால உறவுகளை பொதுவெளியில் வைக்க வேண்டாம் என்ற காரணத்தினாலேயே நீங்கள் கடந்த 4 வருடங்களாக என்னைத் தாக்கி பதிவுகள் போட்டுவந்த போதிலும் நான் மவுனம் காத்தேன்.ஏனெனில் இணையத்தில் கிசுகிசுக்களளிற்காகக் காத்திருப்பவர்களே 95 சதவீதமானோர்.

ஆனால் இது குறித்து உங்களிற்குக் கவலையே இல்லை என உங்களது தொடர்ந்த பதிவுகள் நிரூபித்தன. இன்று ப்ரியா தம்பியின் முகப் புத்தகத்தில் அவர் எழுதிய 'நான் அத்துமீறி நீங்கள் என்னை அடித்தது' என்ற பதிவை உண்மையே எனச் சான்றிதழ் கொடுத்து நீங்கள் பின்னூட்டம் போட்டிருக்கிறீர்கள்.

எனவே, நமக்குள்ளான உறவு என்ன? பிரிவு ஏன் ? என்ற எல்லா விடயத்தையும் நான் முழுவதுமாக எழுதுவதற்கு நீங்கள் என்னைத் தூண்டியுள்ளீர்கள். எனினும் இவ்வளவு நடந்த பின்னும் நமது உறவைப் பகிரங்கமாக எழுத எனது மனது ஒப்பவில்லை.

இனி என்ன செய்வது என நீங்கள்தான் சொல்ல வேண்டும். நீங்கள் சொல்லாத பட்சத்தில், உங்களுடைய கையைப் பிடித்து இழுத்தேன் என்ற விமரிசனத்திற்கு நான் விரிவான பதிலை எழுத வேண்டியிருக்கலாம்.

எனினும் இந்த நிமிடம் வரை நமது உறவைப் பகிரங்கமாக வெளியிலே வைக்க வேண்டாம் என்றே எனது மனது சொல்கிறது.

இனி நடப்பதும் நடக்காததும் உங்களது கையில். விளைவுகளிற்கும் நீங்களே பொறுப்பு. என் மீது எந்தப் பழியும் சேராது.

- சக்தி

நான் தமிழச்சிக்கு செய்தி அனுப்பி இரண்டு நாட்களாகிவிட்டன. அவர் எனக்கு இதுவரை எந்தப் பதிலும் அனுப்பவில்லை. எனது செய்தியை தமிழச்சி கவனிக்காமல் இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில் அவர் இந்த இருநாட்களுமே பேஸ்புக்கில் தொடர்ச்சியாக செயற்பட்டுக்கொண்டேயிருக்கிறார். தவிரவும் எனது செய்தி அவருக்கு அனுப்பப்பட்ட பின்பும் அவர் ப்ரியா தம்பியின் திரியில் என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு வலுவூட்டும் வகையில் கருத்துகளை எழுதுகிறார். அவரின் பதிலின்மையை நான் எவ்வாறு விளங்கிக்கொள்வது? நான் அவருக்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டிருந்ததுபோல நான் வெளிப்படையாக எழுதுவதில் அவருக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என்றே விளங்கிக்கொள்கிறேன். ஒருவகையில் அவரின் அனுமதியுடனேயே நான் எனது தரப்பைச் சொல்கிறேன். இனி எனக்கும் தமிழச்சிக்குமான தொடர்பு என்ன என்று நான் பேசத் தோழர்கள் என்னை அனுமதிக்க வேண்டும். ஏனெனில் அதைச் சொல்லாமல் இந்தக் குற்றசாட்டு அவதூறேயென நிரூபணம் செய்ய எனக்கு இனி வழிகள் கிடையாது. இந்தக் குற்றச்சாட்டுத் தவறென எடுத்துக்காட்ட எவ்வளவு மிகக் குறைந்தளவு சொற்கள் தேவைப்படுமோ அந்தச் சொற்களை மட்டுமே நான் இங்கே பேசப் போகிறேன்.

2007 பெப்ரவரியில் ஒரு இதழில் எனது நேர்காணல் வெளிவந்ததைத் தொடர்ந்து அதைக் குறித்துப் பேச தமிழச்சி என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டார். அதுவே நமக்கிடையேயான முதலாவது அறிமுகம். அதையடுத்து வந்த நாட்களில் தொலைபேசி வழியே இருவரும் நீண்ட நேரங்கள் பேசினோம். குறிப்பாக ஈழப் போராட்டம் மற்றும் பெரியாரியல் குறித்தே பேசிக்கொண்டிருந்தோம். சில நாட்களிலேயே தமிழச்சியின் அழைப்பின்பேரில் அவரின் வீட்டுக்குச் சென்றேன். நான் சில நூற்களை அவருக்குக் கொடுத்தேன். அவர் பெரியாரின் படமொன்றை எனக்கு வழங்கினார்.

சில நாட்களிலேயே அடுத்த சந்திப்பு தமிழச்சின் வீட்டின் அருகிலிருந்த ஒரு உணவுவிடுதியில் நடந்தது. அந்தச் சந்திப்பில் வலைப்பதிவுகளின் முக்கியத்துவம் குறித்து அவரிடம் நீண்டநேரம் விளக்கினேன். தமிழில் தட்டச்சு செய்யும் முறையை அவருக்கு விளக்கினேன். அடுத்து வந்த நாட்களில் அவருக்கு ஒரு வலைப்பதிவையும் ஆரம்பித்துக்கொடுத்தேன். அவர் வலைப்பதிவு உலகத்திற்குள் வந்ததன் பின்னாக எங்களது உரையாடல்களும் சந்திப்புகளும் அதிகமாயின. நட்பும் வலுப்பட்டது.

இந்த நட்பு ஒரு வருடத்திற்கும் சற்றுக் கூடுதலான காலம் மட்டுமே நீடித்தது. இந்தக் காலகட்டத்தில் பல்வேறு முரண்கள் எங்களுக்குள் வந்திருந்த போதும் பரஸ்பர விட்டுக்கொடுத்தல்கள் மூலம் நட்பு நீடித்தது. இறுதியில் 2008 நடுப்பகுதியில் நட்பு முறிந்துபோயிற்று. அதன்பின்பு இன்றுவரை நாங்கள் ஒருவரையொருவர் சந்திக்கவேயில்லை. தொலைபேசியில் கூடப் பேசியதில்லை. உறவு முறிந்ததுமே உடனடியாகவே தமிழச்சி இணையங்களில் என்னைப் பல பெண்களோடு உறவுள்ளவன் என்றும் கஞ்சாக் கேஸ் என்றும் குடிகாரன் என்றும் எழுதத் தொடங்கினார். எனக்கு இந்தக் 'குற்றச்சாட்டுகள்' குறித்து எந்தக் கவலையுமில்லை. அதனால் எதிர்வினை ஏதும் இந்தக் கணம் வரை நான் செய்ததில்லை. என்பொருட்டு எனது தோழர்களும் தமிழச்சியிடம் வசைகளைச் சுமக்க நேரிட்டது. இலக்கியச் சந்திப்பையும், பெண்களை சந்திப்பையும், தலித் முன்னணியையும் கூட்டுக் கலவி முகாம்கள் என்றெல்லாம் எழுதினார். அப்போதும் நான் மவுனம் காத்தேன். அந்த மவுனம் என்பது விவாதத்திற்கு அஞ்சிய மவுனம் கிடையாது. அவரது விமர்சனங்கள் வெறும் வசைகளே என்பதாலும் அவைகளிற்கு ஆயுளோ பெறுமதியோ கிடையாது என்பதாலும் நான் மவுனமாயிருந்தேன். தாதா, தமிழினத் துரோகி என்று என்மீது அவர் வைத்த வசைகளை அவரோடு நான் நட்பாயிருந்த நாட்களின் பெயரால் கண்டுகொள்ளாமலிருந்தேன். அது ஒருவகையில் நமக்கிடையே நட்பிருந்த நாட்களிற்கு நான் கொடுத்த மரியாதை.

பிரிவு நிகழ்ந்த சில நாட்களிலேயே //ஷோபா நமக்கிடையேயான உறவு என்ன? நீங்கள் என்ன லவ் பண்ணுறீங்களா// எனக் கேட்டுத் தமிழச்சி தனது வலைப்பதிவில் எழுதினார். 22 யூலை 2008ல் வெளியாகிய அந்தக் கட்டுரை இப்போதும் அவரது தளத்திலுள்ளது. அப்போதும் எனது பதில் மவுனமே. எங்களுக்கிடையே இருந்த உறவைப் பொதுவெளியில் எழுதவும், அதன்முலம் மற்றவரின் அந்தரங்கத்திற்குள் நுழைந்து வேடிக்கை பார்க்க விரும்பும் நபர்களிற்கு தீனிபோடவும் நான் ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை.

ஆனால் இப்போது ப்ரியா தம்பி கிளப்பியிருக்கும் குற்றச்சாட்டு அவ்வகையானதல்ல. தமிழச்சியை முன்னிறுத்தி ஒரு பெருங் கும்பலே அவதூறு என்னும் ஆயுதத்தின் துணையால் என்மீது தாக்குதலைத் தொடுத்துள்ளது. அந்த ஆயுதம் வெறுமனே ஷோபாசக்தி என்ற என்ற தனி மனிதனைக் குறிவைத்து வீசப்பட்டதல்ல. அவ்வாறு ஷோபாசக்தியைக் குறிவைக்க ப்ரியா தம்பிக்கும் காரணங்கள் ஏதுமில்லை. அவர் இந்தக் குற்றச்சாட்டின் மூலம் எனது அரசியல் கருத்து நிலைப்பாடுகளையே தகர்க்க முயல்கிறார். அதனாலேயே பின்நவீனத்தும், போலித் தலித்தியம், போலிப் பெண்ணியம், போலிப் பெரியாரியம், சனநாயகக் காவலர்களின் முகமூடி எனச் சொற்களை வீசுகிறார். எனவே இப்போது நான் பேச நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன். அவதூறாளர்களே! நீங்களே என்னைப் பேசவைத்தீர்கள்.

தமிழச்சிக்கும் எனக்கும் நடந்த இரண்டாவது சந்திப்பிலிருந்தே நாங்கள் இருவரும் ஒருவர்பால் ஒருவர் வெகுவாக ஈர்க்கப்பட்டோம். அது மனம் சார்ந்த ஈடுபாட்டிலிருந்து பரஸ்பரம் உடல்சார்ந்த உறவாக எங்களது மூன்றாவது சந்திப்பிலேயே மாறிற்று. 2008 நடுப்பகுதியில் நாங்கள் பிரியும்வரை அது தொடர்ந்தது. நமக்கிடையே இருந்த உறவு யாருக்கும் தெரியாதவொரு இரகசியச் செயற்பாடாகவும் இருக்கவில்லை. இந்த உறவு அய்ரோப்பியத் தமிழ் இலக்கிய வட்டத்தில் ஒருசிலராலாவது அறியப்பட்டேயிருந்தது. எனது குடும்ப உறுப்பினர்களும் அறிவார்கள். எனவே நான் பாலியல் அத்துமீறல் செய்தேன் அதனால் தமிழச்சி என்னைத் தாக்கினார் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது வெறும் அவதூறே. நமது பிரிவிற்குப் பின்பாக எழுப்பப்பட்டிருக்கும் இந்த அவதூறைச் சரியான குற்றச்சாட்டு என தமிழச்சி சொல்வதும் தமிழச்சியின் கூற்றை குற்றச்சாட்டிற்கான ஆதாரமாகக்கொண்டு மற்றவர்கள் என்மீது தாக்குதலைத் தொடுப்பதும் கொஞ்சமும் நேர்மையேயற்ற செயல்கள். தமிழச்சி இயக்கப்படுவது நமக்கிடையேயான பிரிவிற்குப் பழிவாங்கும் எண்ணத்தால், மற்றவர்கள் இயக்கப்படுவது என்னைக் 'குணசித்திரப் படுகொலை' செய்யும் எத்தனத்தால்.

இவ்வளவு காலமும் நான் காத்துவந்த மவுனத்தை இப்போது ப்ரியா தம்பி கலைத்து வைத்திருக்கிறார். எனக்கும் தமிழச்சிக்குமிருந்த உறவையும் பிரிவையும் உள்ளது உள்ளபடியே நான் பகிரங்கமாக இங்கே வைத்திருப்பதால் நிச்சயம் தமிழச்சி பெருத்த மனவுளைச்சலுக்கு ஆளாகுவார் என்பது எனக்குத் தெரியும். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

பல பெட்டையர்களுக்கு மத்தியில் ஒரு ஆண்மகன்.இப்படி எழுத ஒரு கட்ஸ் வேணும்.ஒழுங்காக ஒரு வரி தமிழில் எழுத தெரியாதவனெல்லாம் விமர்சனம் வைக்கிறான்.

தமிழச்சிக்கும் எனக்கும் நடந்த இரண்டாவது சந்திப்பிலிருந்தே நாங்கள் இருவரும் ஒருவர்பால் ஒருவர் வெகுவாக ஈர்க்கப்பட்டோம். அது மனம் சார்ந்த ஈடுபாட்டிலிருந்து பரஸ்பரம் உடல்சார்ந்த உறவாக எங்களது மூன்றாவது சந்திப்பிலேயே மாறிற்று. 2008 நடுப்பகுதியில் நாங்கள் பிரியும்வரை அது தொடர்ந்தது. நமக்கிடையே இருந்த உறவு யாருக்கும் தெரியாதவொரு இரகசியச் செயற்பாடாகவும் இருக்கவில்லை. இந்த உறவு அய்ரோப்பியத் தமிழ் இலக்கிய வட்டத்தில் ஒருசிலராலாவது அறியப்பட்டேயிருந்தது.

இவ்வளவு காலமும் நான் காத்துவந்த மவுனத்தை இப்போது ப்ரியா தம்பி கலைத்து வைத்திருக்கிறார். எனக்கும் தமிழச்சிக்குமிருந்த உறவையும் பிரிவையும் உள்ளது உள்ளபடியே நான் பகிரங்கமாக இங்கே வைத்திருப்பதால் நிச்சயம் தமிழச்சி பெருத்த மனவுளைச்சலுக்கு ஆளாகுவார் என்பது எனக்குத் தெரியும். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

பல பெட்டையர்களுக்கு மத்தியில் ஒரு ஆண்மகன்.இப்படி எழுத ஒரு கட்ஸ் வேணும்.ஒழுங்காக ஒரு வரி தமிழில் எழுத தெரியாதவனெல்லாம் விமர்சனம் வைக்கிறான்.

ஒருபக்கக் கருத்து முழு உண்மையாகி விடாது.

எது எப்படியோ பெரும் போலி வேஷம் பகிரங்கமாக கலைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான இலக்கியவாதிகளின் சபலப்புத்திக்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு.

தொடர்புடைய ஏனைய பெண்களும் பழிகளை சந்திக்கவேண்டி வரும் என்ற பொறுப்பற்ற பழிவாங்கும் உணர்வு வெளிப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு ஆங்காரமாக கருத்துக்களால் ஷோபாசக்திக்கு வயிற்றுவலி வராது. இதில் கருத்தெழுதிய எத்தனை பேர் அவருடைய புத்தகங்களைப் படித்திருக்கின்றீர்கள்? <_<

கிருபன் அண்ணா அவர் எழுதிய புத்தகங்களை முழுமையாக வாசிக்வில்லைதான்.............

ஆனால் அவர் கொப்பி அடித்த மூலங்களை வாசித்திருக்கிறோம்!

  • கருத்துக்கள உறவுகள்

கா.. தூ.

இது எல்லாம் ஒரு பிழைப்பு.

இவங்க - தமிழச்சி கதையே தனி ஒரு முன் பின் நவீனத்துவ "இலக்கியமாகி" இங்கு விரும்பிப் படிப்பப்பட்டாலும் ஆச்சரியமில்ல. :lol::D

----------------------------------------------

ஷோபா சக்திக்கும் ஜெயேந்திரனுக்கும் என்ன வித்தியாசம்?

காதலிக்கும் அல்லது மணந்து கொண்ட பெண்ணுடன் உறவு என்பதோடு மட்டும் நின்றுவிடாமல், தான் சந்திக்கும் பெண்களை எல்லாம் பாலியல் பண்டமாக மட்டுமே பார்க்கும் ஆணாதிக்க மனப்பான்மையை எதிர்கொள்வதே இன்றைய பெண்களின் சவால்களில் முக்கியமானதாக இருக்கிறது.

தன்மீது நடத்தப்படும் பாலியல் தாக்குதல்களை ஒரு கிராமத்துப் பெண்ணால் ஓரளவுக்கு எதிர்கொள்ள முடிகிறது. ‘அடி செருப்பால..’ என்று தொடங்கி கடுமையான வசவுகள் மூலம் தன் எதிர்ப்பை அவளால் தெரிவிக்க முடிகிறது. கோபத்தில் பல பெண்கள் கைகளில் கிடைத்தவற்றை எடுத்துத் தாக்குகிறார்கள். அத்துமீறி நடந்த ஆண்டைகளின் குறிகளை தலித் பெண்கள் வெட்டி எறிந்த கதைகளையும் படித்திருக்கிறேன். கிராமத்துப் பெண்கள் அந்த நிமிடத்தில் எதிர்வினையாற்றக் கூடிய சுதந்திரத்துடன் இருக்கிறார்கள். நாகரிகச் சுமைகளை சுமந்து கொண்டு வாழும் நகரப் பெண்களுக்கு தனது எதிர்ப்பை பகிரங்கமாகத் தெரிவிக்கும் வெளிகூட இங்கு மறைமுகமாக மறுக்க‌ப்பட்டிருக்கிறது.

சென்னை போன்ற மாநகரங்களில் வேலைக்குப் போகும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறல்கள் ஒன்றல்ல இரண்டல்ல... வெறித்துப் பார்ப்பவர்கள், பேருந்துகளில் உரசுபவர்கள், முகத்துக்குக் கீழே மேய்ந்து கொண்டே பேசுபவர்கள், இரட்டை அர்த்தத்தில் பேசிக் கொண்டு நூல் விடுபவர்கள் என வகை வகையாகத் திரிகிறார்கள் ஆண்கள். ஓர் ஆண் பெறும் பதவி உயர்வை - திறமைக்குக் கிடைத்த பரிசாகப் பேசும் ஆண்கள், அதே பதவி உயர்வு ஒரு பெண்ணுக்குக் கிடைத்தால், ‘படுக்கையறை வழியாகப் பெற்றாள்’ என்று இழித்துப் பேசுவதையும் பார்த்திருக்கிறேன். ஆம் எப்போதும் இவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்கள்.

அதுவும், படித்த முற்போக்கான, பெண்ணியம் பேசக்கூடிய பெண்கள் எதிர்கொள்ளும் ஏச்சுக்களும், பேச்சுக்களும் வரைமுறையற்றவை. பெண்ணிய எழுத்துக்கள் குறித்து எந்தப் புரிதலும் இல்லாமல், ஆபாசம் என்றோ மஞ்சள் பத்திரிக்கை எழுத்து என்றோ பொதுஇடங்களில் நஞ்சைக் கக்கும் ஆணாதிக்க மனோபாவம் இன்றளவும் தொடர்கிறது.

பெண்ணியப் புரிதல் இல்லாத இவர்களை விட ஆபத்தானவர்கள், பெண்ணியம் பேசிக்கொண்டே பெண்களை சுரண்டக்கூடிய மனிதர்கள்... பெண்ணியம் பேசுகிறாள் என்றாலே, எப்போதும் யாருடனும் உறவுக்குத் தயாராக இருப்பாள் என்ற எண்ணம்தான் இவர்களிடம் இருக்கிறது. இந்த இடத்தில் அண்மையில் எனக்குத் தெரிய வந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். இச்சம்பவம் இப்போது நடந்ததல்ல. பாரீஸில் வசிக்கும் பெண் தோழர் அவர். பெண்ணியக் கருத்துக்களை, பெரியாரியக் கருத்துக்களை தொடர்ந்து எழுதி வருபவர். மணமாகி, குழந்தைகளும் இருக்கிறார்கள்.

பெண்ணியம் பேசுபவர் என்பதால், எதற்கும் தயாராக இருப்பார் என்ற ஆணாதிக்க வக்கிரத்தோடு ஒரு ‘முற்போக்கு’ முகமூடி இவரை அணுகியிருக்கிறது. பெண்ணியம், கட்டற்ற பாலியல் சுதந்திரம் என்று பேசி நூல் விட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அத்துமீறி நடக்கவும் முயற்சித்திருக்கிறது. அப்போதுதான் அந்த ‘பின்நவீனத்து’வவாதிக்குத் தெரிந்திருக்கிறது, நமது பெண் தோழருக்கு கராத்தேயும் தெரியும் என்பது. அடி பின்னி எடுத்துவிட்டார். அப்போதே அதை இணையதளங்களில் எழுதியுமிருக்கிறார். ஆனால், அந்த யோக்கிய சிகாமணி இதுவரை அந்தப் பெண் தோழரிடம் அத்துமீறி நடந்தற்கு மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. அதெயெல்லாம் விடக் கொடுமை, அதே ‘முற்போக்கு’, இப்போது பெண்ணியக் கருத்துக்களை கேட்போர் காதுகளில் ரத்தம் வடிய பேசிக்கொண்டிருக்கிறது. பெரியாரின் வழியில் நிற்கிறேன் என்ற தம்பட்டம் வேறு.

யாரென்று கேட்கிறீர்களா? இதுநாள் வரை தலித் வேஷம் போட்டுக் கொண்டிருந்த வெள்ளாளன் ஷோபா சக்திதான் அது. இந்த யோக்கியவான் பாலியல் சுதந்திரம் பேசுவது என்பது பெண்களை படுக்கையறையில் தள்ளுவதற்குத்தான் போலிருக்கிறது. பாலியல் விடுதிகளுக்குப் போய் வந்த அனுபவங்களை ‘முற்போக்கு’ முலாம் பூசி கதைகளாகக் கட்டுவதன் பின்னே இருப்பது, பெண்ணியம் அல்ல; ‘எவ கிடைப்பா?’ என அலையும் ஆணாதிக்க தடித்தனம்.

பெண்களைப் பாலியல் பண்டமாக மட்டுமே பார்ப்பதில் காஞ்சி ஜெயேந்திரனுக்கும், ஷோபா சக்தி போன்றவர்களுக்கும் இடையே ஒரு வித்தியாசத்தையும் பார்க்க முடியவில்லை. ஜெயேந்திரன் தன்னிடம் அத்துமீறி நடக்க முயற்சித்ததை பொது ஊட‌க‌ங்க‌ளில் ப‌கிர‌ங்க‌மாக‌ வெளிப்ப‌டுத்திய‌ எழுத்தாள‌ர் அனுராதா ர‌ம‌ணன், க‌டைசிவ‌ரை எந்த‌வொரு நியாய‌த்தையும் பெறாமலேயே இறந்து விட்டார். பாரீஸ் தோழ‌ர் ப‌ல முறை எழுதியும் அவ‌ருக்கான‌ நியாய‌ம் இதுவ‌ரை கிடைக்க‌வில்லை. ஷோபா ச‌க்தியும் தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு க‌ள்ள‌ மௌன‌த்தைத் த‌விர எந்த‌ ப‌திலையும் இதுவ‌ரை த‌ர‌வில்லை. 'வேலைக்குப் போகும் பெண்க‌ள் ஒழுக்க‌ம் கெட்ட‌வ‌ர்க‌ள்' என்று காஞ்சி ஜெயேந்திர‌ன் உதிர்த்த‌ வார்த்தைக‌ளுக்கு சற்றும் குறைவில்லாத‌து ஷோபா ச‌க்தியின் செய்கை.

பெண்களுக்கான பாலியல் சுதந்திரம் குறித்து - பாலியல் ஒர்மை கடந்து சிந்தித்தவராக - பெரியார் மிகப் பிரம்மாண்டமாக நிற்கிறார். ஆனால், பெரியார் பேரை சொல்லிக் கொண்டு, கட்டற்ற பாலியல் சுதந்திரம் பேசும் சில ஆண்களின் முகங்களைக் கிழித்தால் உள்ளே இருப்பது பாலியல் வக்கிரம் மட்டுமே. இவர்கள் பேசும் பாலியல் சுதந்திரம் எந்தக் காலத்திலும் பெண்களுக்கு விடுதலையைக் கொண்டுவரப் போவதில்லை. பல பேருடன் கூடித் திரிவதற்கும், தங்களது இச்சையை எளிதாகத் தீர்த்துக் கொள்வதற்கும்தான் இவர்கள் பெண்ணியத்தையும், பாலியல் சுதந்திரத்தையும் பேசுகிறார்கள். முதல் மனைவி உயிருடன் இருக்க, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட காலகட்டத்தில்தான், பாலியல் சுதந்திரம் குறித்து அ.மார்க்ஸ் பேசத் தொடங்கினார் என்று நண்பர் ஒருவர் சொன்னதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. (அம்பேத்கரும், பெரியாரும் முதல் மனைவி இறந்தபின்பே இரண்டாவது திருமணம் செய்தார்கள் என்பதும், அந்தத் திருமணத்தையும் பகிரங்கமாக செய்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது)

தலித்தியம், பெண்ணியம் போன்ற தத்துவங்களை இந்த ‘முற்போக்கு அறிவுஜீவிகள்’ எப்படி தங்களது சுயதேவைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது. ஆனால், இவர்கள் தங்கள் மீதான விமர்சனங்களை, கள்ள மௌனம் காத்தோ அல்லது அவதூறு என்று வாய் கூசாமல் சொல்லியோ கடந்து போகிறார்கள். (இந்தக் கட்டுரையையும் தனிமனிதத் தாக்குதல் அல்லது அவதூறு என்று சொல்லி இவர்கள் கடந்துபோகக் கூடும். ஆனால், பொதுவெளியில் புரட்சி பேசுபவர்கள் சொந்த வாழ்க்கையில் அதற்கு விரோதமாக நடந்து கொள்வது குறித்து என்றேனும் ஒரு நாள் பேசித்தான் ஆக வேண்டும். இவர்களை திருஉருக்களாகக் கருதிக் கொண்டு பின்னால் செல்பவர்களுக்காகவாவது இதைப் பேச வேண்டும்.)

ஆனால், இதே அறிவுஜீகள் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், மக்களுக்காகப் போராடியவர்கள் மீது அவதூறையோ, சேற்றையோ வாரியிறைக்கத் தவறுவதில்லை. காரல் மார்க்ஸ், சே குவேராவின் பாலியல் வாழ்க்கையை எல்லாம் தோண்டித் துருவி பேசும் இவர்கள், தமது சொந்த வாழ்க்கையில் எப்படி நியாயமாக நடந்து கொண்டார்கள் என்பது குறித்து ஒரு நாளும் பேசுவதில்லை. ஏனென்றால் கடைசிவரைக்கும் ஆண்களாகவே வாழ்கிறார்கள். They are always men.

லீனா மணிமேகலையின் சுதந்திரத்திற்காக கூட்டம் நடத்திய அ.மார்க்ஸ் & கோ, பாரீஸ் பெண் தோழருக்காக ஒரு கூட்டம் நடத்துமா என்றால் மாட்டார்கள். யாரை சொறிந்துவிட வேண்டும், யாரைப் பிறாண்ட வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகவேத் தெரியும்.

அருந்ததி ராய் மீது சேறடிப்பார்கள்; இடதுசாரித் தலைவர்களைக் கொச்சைப்படுத்துவார்கள்; ம.க.இ.க. தோழர்களை நக்கலடிப்பார்கள். ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும். ம.க.இ.க. தோழர்களை நம்பி என்னால் இரவுப் பயணம் போக முடியும். பலமுறை அவ்வாறு பத்திரமாகப் போய் வந்துமிருக்கிறேன். இந்த ‘பின்நவீனத்துவ’ முகமூடிகளுடன் ஒரு பகல் பயணத்தைக் கூட என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

(பின்குறிப்பு: ஃபேஸ்புக்கில் எழுதியதை கொஞ்சம் விரிவாக்கி இங்கே தந்திருக்கிறேன். பாரீஸ் பெண் தோழர் யார் என்பதும், ஷோபா சக்தி & கோ எனது கட்டுரைக்கு ஆற்றிய எதிர்வினைகளும் ஃபேஸ்புக்கில் இருக்கின்றன. பொதுவான வாசகர்களின் புரிதலுக்காக அவற்றை கீழே பின்னூட்டங்களாக இட்டுள்ளேன்.)

இந்த இணைப்பை நிச்சயம் வாசியுங்கோ...

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13010&Itemid=263

தமிழச்சிக்கும் எனக்கும் நடந்த இரண்டாவது சந்திப்பிலிருந்தே நாங்கள் இருவரும் ஒருவர்பால் ஒருவர் வெகுவாக ஈர்க்கப்பட்டோம். அது மனம் சார்ந்த ஈடுபாட்டிலிருந்து பரஸ்பரம் உடல்சார்ந்த உறவாக எங்களது மூன்றாவது சந்திப்பிலேயே மாறிற்று. 2008 நடுப்பகுதியில் நாங்கள் பிரியும்வரை அது தொடர்ந்தது. நமக்கிடையே இருந்த உறவு யாருக்கும் தெரியாதவொரு இரகசியச் செயற்பாடாகவும் இருக்கவில்லை. இந்த உறவு அய்ரோப்பியத் தமிழ் இலக்கிய வட்டத்தில் ஒருசிலராலாவது அறியப்பட்டேயிருந்தது.

இவ்வளவு காலமும் நான் காத்துவந்த மவுனத்தை இப்போது ப்ரியா தம்பி கலைத்து வைத்திருக்கிறார். எனக்கும் தமிழச்சிக்குமிருந்த உறவையும் பிரிவையும் உள்ளது உள்ளபடியே நான் பகிரங்கமாக இங்கே வைத்திருப்பதால் நிச்சயம் தமிழச்சி பெருத்த மனவுளைச்சலுக்கு ஆளாகுவார் என்பது எனக்குத் தெரியும். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

பல பெட்டையர்களுக்கு மத்தியில் ஒரு ஆண்மகன். இப்படி எழுத ஒரு கட்ஸ் வேணும்.ஒழுங்காக ஒரு வரி தமிழில் எழுத தெரியாதவனெல்லாம் விமர்சனம் வைக்கிறான்.

ஒருபக்கக் கருத்து முழு உண்மையாகி விடாது.

எது எப்படியோ பெரும் போலி வேஷம் பகிரங்கமாக கலைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான இலக்கியவாதிகளின் சபலப்புத்திக்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு.

தொடர்புடைய ஏனைய பெண்களும் பழிகளை சந்திக்கவேண்டி வரும் என்ற பொறுப்பற்ற பழிவாங்கும் உணர்வு வெளிப்படுகிறது.

Shoba Sakthi: இல்லை சங்கர், இந்த வழக்கை நானா கிளப்பினேன். கிளப்பியவர்களக்கு அதை நிரூபிக்க வேண்டிய கடமையுள்ளதல்லவா. நான் இந்த வழக்கே முற்றிலும் பொய் என்கிறேன். நடக்காத ஒன்றை எப்படிக் கேட்டாலும் யாரும் புண்பட வாய்ப்பில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13010&Itemid=263

இலக்கியவாதிகளாக உள்ள காமுகர்களின் கொட்டங்களும் தமிழினத்தின் பின்னடைவில் ஒரு பங்கை வகித்துள்ளது.

புலிகளை எதிர்க்கும் ஒரு காமுகனின் வேஷம் கலைந்துள்ளது. விரைவில் இன்னும் சிலரது வேஷங்களும் கலையும்.

Edited by ஆராவமுதன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

<_< தமிழியக்கியத்தில் இவர் பெயர் முக்கியமானதாம், ஆனால் தமிழன் 2009 இல் வேட்டையாடப்படும்போது சிங்களம் செய்தது சரிதான் என்று கூறியிருக்கிறார். அப்படியானால் இவரது இலக்கியம் யாருக்காக?? நுணி நாக்கில் ஆங்கிலம் பேசும் பணக்கார வர்க்கத்துக்கு மட்டுமா??

முன்னால்ப் போராளி என்று தன்னை அடிக்கடி விளிக்கும் இவரெல்லாம் எப்படிப் போராளியாக இருந்தார் என்பதே கேள்விக்குறிதான்.

போராளிகளின் முகாமுக்குப் பக்கத்தால் சென்றால் கூட இனவுணர்வு இருக்குமே?? அதுகூட இல்லாமல் என்ன முன்னால் போராளி எனும் அடைமொழி??

இவர், முருகபூபதி....இவர்கள் எல்லாமே புகழுக்காகவும், பணத்துக்ககவும் இனத்தையும், விடுதலையையும் விற்கும் வெறும் வியாபாரிகள். இவர்களுக்கும் பெட்டிக்கடையில் பலான புத்தகம் விற்பவனுக்கும் வேறுபாடில்லை.

இவ்வளவு ஆங்காரமாக கருத்துக்களால் ஷோபாசக்திக்கு வயிற்றுவலி வராது. இதில் கருத்தெழுதிய எத்தனை பேர் அவருடைய புத்தகங்களைப் படித்திருக்கின்றீர்கள்? <_<

காகம் திட்டி மாடு சகாது எண்டுறீயள்... உண்மை தான்... ஆனால் இந்த விசயம் ஷோபா சக்திக்கு தெரியுமோ.... ?? எப்பவும் புலியை திட்டுறதாலை கேக்கிறன்... :lol:

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.