Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூண்டுக் கிளிகளும் குடும்ப நல விதிகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிடித்தமாதிரி நடந்துக்கோ

பிரியமாய்ப் பேசு

கழுத்தளவு கவலையென்றாலும்

கண்ணில் அதைக் காட்டாதே...

ஆளப்பிறந்தவன் அவன்

பேணப் பிறந்தவள் நீ

காணக்கிடைத்த கடவுளாயிருப்பதால்

கல்லானாலும் கணவன்...

விதவிதமாய் உடுத்திக்கொள்

வித்தியாசமாய்ச் சமைத்துப்போடு

வயிற்றின் வாயிலாக

அவன் மனசுக்குள் நுழையப்பார்...

ஆணென்றால் அவன் கொஞ்சம்

அப்படி இப்படித்தான் இருப்பான்,

கட்டிய கணவனையும்

குழந்தைபோல நினைத்துக்கொள்...

சிரித்த முகமென்றால் சீதேவி

சீறிக்கொண்டேயிருந்தால் மூதேவி

பொறுமையின் சிகரமென்றால் பூதேவி

பொறுப்பின்றிச் செலவழித்தால் பூலன்தேவி...

கல்யாணம் பேசியதிலிருந்து

கணக்கில்லாத அறிவுரைகள்;

எல்லாவற்றையும் கேட்டவள்

இறுதியாய்ச் சொன்னாள்...

வழிவழியாய்ச் சொல்லுகிற

விதிகளெல்லாம் கடைப்பிடிக்க

வானத்திலிருந்து யாரும்

வரனாக வருவதில்லை...

பயத்தோடு பார்ப்பதற்கும்

பக்குவமாய் நடிப்பதற்கும்

அவன் தலைவன் மட்டுமல்ல,

நன்றும் தீதும்

பகிர்ந்துகொள்ளப் போகும்

நண்பனும்கூடத்தான்...

அதனால்

பெண்மையின் விதிகளை

என்னிடம் சொன்னதுபோல

ஆண்மைக்கும் சொல்லுங்கள்,

அதை

அனுப்பிவைக்கிறேனென்று!

*****

படித்ததும் பகிர்ந்தும்.....http://kurinjimalargal.blogspot.com/2011/02/.

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்பது

வண்டிலில் கட்டிய மாடுகளா

போட்டிபோட்டு முன் பின்செல்ல :(

அன்புக்கு முன்னாலே

எல்லாமே பறந்துவிடும்

தூசுபோல...

எடுப்பதை விடுத்து

கொடுப்பதை நினைப்பின்

கொஞ்சுமே இன்பம் இல்வாழ்க்கையில்..... :wub::wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

விதவிதமாய் உடுத்திக்கொள்

வித்தியாசமாய்ச் சமைத்துப்போடு

வயிற்றின் வாயிலாக

அவன் மனசுக்குள் நுழையப்பார்...

பகிர்வுக்கு நன்றி.இப்படியும் இதயத்துக்குள் நுழைய ஒரு வழி உண்டா?? :):)

reason for edit: forgoet :):)

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை சகோதரி.. :)

கவிதையில் இதற்கு மேல் உள்ள வரிகள் அற்புதம்..... :D

வழிவழியாய்ச் சொல்லுகிற

விதிகளெல்லாம் கடைப்பிடிக்க

வானத்திலிருந்து யாரும்

வரனாக வருவதில்லை...

பயத்தோடு பார்ப்பதற்கும்

பக்குவமாய் நடிப்பதற்கும்

அவன் தலைவன் மட்டுமல்ல,

நன்றும் தீதும்

பகிர்ந்துகொள்ளப் போகும்

நண்பனும்கூடத்தான்...

அதனால்

பெண்மையின் விதிகளை

என்னிடம் சொன்னதுபோல

ஆண்மைக்கும் சொல்லுங்கள்,

அதை

அனுப்பிவைக்கிறேனென்று

பிடித்தமாதிரி நடந்துக்கோ

பிரியமாய்ப் பேசு

கழுத்தளவு கவலையென்றாலும்

கண்ணில் அதைக் காட்டாதே...

ஆளப்பிறந்தவன் அவன்

பேணப் பிறந்தவள் நீ

காணக்கிடைத்த கடவுளாயிருப்பதால்

கல்லானாலும் கணவன்...

விதவிதமாய் உடுத்திக்கொள்

வித்தியாசமாய்ச் சமைத்துப்போடு

வயிற்றின் வாயிலாக

அவன் மனசுக்குள் நுழையப்பார்...

ஆணென்றால் அவன் கொஞ்சம்

அப்படி இப்படித்தான் இருப்பான்,

கட்டிய கணவனையும்

குழந்தைபோல நினைத்துக்கொள்...

*****

படித்ததும் பகிர்ந்தும்.....http://kurinjimalargal.blogspot.com/2011/02/.

முடியலை... என்னமோ தெரியவில்லை இவ்வளவு கவிதை வரிகளும் பிடிக்கவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

படித்ததை பகிர்ந்த கவிதை அழகு.

அதனால்

பெண்மையின் விதிகளை

என்னிடம் சொன்னதுபோல

ஆண்மைக்கும் சொல்லுங்கள்,

அதை

அனுப்பிவைக்கிறேனென்று!

இவற்றுக்கெல்லாம் விதிமுறைகள் இருக்கின்றனவா?

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி.இப்படியும் இதயத்துக்குள் நுழைய ஒரு வழி உண்டா?? :):)

reason for edit: forgoet :):)

யாரோ ஒரு கூக் (சமையல் காறனோ காறியோ?) நுழைவதற்கு முயல்கிறார்களா?

பிடித்தமாதிரி நடந்துக்கோ

பிரியமாய்ப் பேசு

கழுத்தளவு கவலையென்றாலும்

கண்ணில் அதைக் காட்டாதே...

ஆளப்பிறந்தவன் அவன்

பேணப் பிறந்தவள் நீ

காணக்கிடைத்த கடவுளாயிருப்பதால்

கல்லானாலும் கணவன்...

விதவிதமாய் உடுத்திக்கொள்

வித்தியாசமாய்ச் சமைத்துப்போடு

வயிற்றின் வாயிலாக

அவன் மனசுக்குள் நுழையப்பார்...

ஆணென்றால் அவன் கொஞ்சம்

அப்படி இப்படித்தான் இருப்பான்,

கட்டிய கணவனையும்

குழந்தைபோல நினைத்துக்கொள்...

சிரித்த முகமென்றால் சீதேவி

சீறிக்கொண்டேயிருந்தால் மூதேவி

பொறுமையின் சிகரமென்றால் பூதேவி

பொறுப்பின்றிச் செலவழித்தால் பூலன்தேவி...

இப்படியெல்லாம் நடக்கத்தேவையில்லை. :D

நல்ல புரிந்துணர்வு இருந்தால் போதும்.

Family life is a team work. You share your time and life with your partner.

கணவன்...அவன்

கழுத்தளவு கவலையென்றாலும்

கண்ணில் அதைக் காட்டாதே...

விதவிதமாய் உடுத்திக்கொள்

சீறிக்கொண்டேயிருந்தால் மூதேவி

பொறுப்பின்றிச் செலவழித்தால் பூலன்தேவி...

கல்யாணம் பேசியதிலிருந்து

கணக்கில்லாத அறிவுரைகள் சொன்னாள்...

பக்குவமாய் நடிப்பதற்கும் ...

உங்கள் வார்த்தைகளை கொஞ்சம் மாற்றியுள்ளேன். கோவிக்க வேண்டாம் நிலாமதியக்கா.

நான் கேள்விப்பட்டது -

ஆண்கள் கல்யாணம் செய்வது - பெண்கள் மாற மாட்டார்கள் என்று நம்பி.

பெண்கள் கல்யாணம் செய்வது - ஆண்களை மாற்றி விடலாம் என்று நம்பி.

இது தான் பிரச்சனை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈஸ் ...........முதலில் அது என் ஆக்கம் அல்ல . படித்ததை பகிர்ந்தேன் .அவ்வளவு தான் . நீங்கள் கூறிய வரிகளில் உண்மை இருக்கும் தன்மை அதிகம். .வாழ்க்கை தானே , மேடும் பள்ளமும் நிறைந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.