Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யாழ் கள உறவுகளே,

இது எனது பரீட்சார்த்த முயற்சி. நீங்கள் இதைக் கதையாக எடுத்தாலும் சரி அல்லது கவிதையாக எடுத்தாலும் சரி.

உங்கள் கருத்தைத் தெரியப்படுத்துங்கள். ஆனால் நான் ஒரு கற்றுக்குட்டி என்பதை மறந்துவிடாதீர்கள்.

'தூற்றுவார் தூற்றலும், போற்றுவார் போற்றலும் போகட்டும் கண்ணனுக்கே'

பண்பாடு

காலைக்கருக்கல் மெல்ல விலக

மல்லிகை வாசம் மனத்தை நிறைத்தது.

காக்கைகள் கரையல் காதைக் கிழிக்க

மாட்டு வண்டில்கள் வீதியில் போயின.

கோவில் மணிகள் தாங்களும் ஒலித்துத்

தங்கள் இருப்பையும் காட்டிக் கொண்டன.

பயணக் களைப்புக் கொஞ்சம் குறையத்

தம்பையர் மனமும் ஊருக்கு வந்தது.

இருபது வருஷம் எப்படிப் போட்டுது.

நம்ப முடியாமல் தம்பையர் திகைத்தார்.

ஊரைப்பார்க்க மனசு துடித்தது.

கடலைப் பார்க்கத் தம்பையர் நடந்தார்.

போயிலைத் தோட்டங்கள் தொலைந்து இருந்தன.

புகைக்குடிசைகள் பாதியாய் நின்றன .

பழைய துலாக்கள் பாறிப் போயின.

குழம்பிய படியே தம்பையர் நடந்தார்.

ஆமிக்காரர்கள் மூட்டிய நெருப்பில்

முள்ளிப் பத்தைகள் முடிவைக்கண்டன.

முள்ளிப் பத்தையில் சுட்ட நண்டுகள்

நினைவில் மட்டும் வந்து போயின.

கோவில் மட்டும் வெள்ளையும் சிவப்புமாய்

புதிசு போல நிமிர்ந்து நின்றது.

தென்னை மரங்கள் உயிரை இழந்து

தென்னங்கிளிகளின் வீடுகள் ஆகின.

கடலுக்குள் யாரோ மீன் பிடித்தார்கள்.

வீசிய வலையில் தூசிகள் வந்தன

தடியில் தொங்கிய ஓலையும் பாயும்

காற்றில் அசைந்து வெறுமையைக் காட்டின.

சலித்த உருவம் கரைக்கு வந்தது

'தம்பியை எங்கோ கண்ட மாதிரி'

சுயமாய் வந்தது சுக விசாரணை

'தம்பையன், என்னை மறந்து போட்டியே'

சின்னத்துரையன் சந்தோசப் பட்டான்

'கனகாலம் தம்பி, வீட்டுக்கு வாவன்'

கனிவாய் இனித்தது, அவனது அழைப்பு.

வீட்டில் எந்த மாற்றமும் இல்லை.

அன்றைக்குப் போலவே இன்றைக்கும் இருந்தது.

'தம்பி, என்ன தண்ணி சுடுகுதோ?'

அவனது கேள்வியில் அக்கறை தெரிந்தது.

அலட்டி முடிந்து கிளம்பும் நேரம்

அவனது கையில் பாரைக்கருவாடு

'வேண்டாம் சின்னத்துரை'

'தம்பி மறுக்காதை"

பொல்லாத கோவம் அவனுக்கு வருமாம்.

காசைக் கொடுத்தேன். வாங்க மறுத்தான்

அவனது பார்வையில் அக்கினி தெரிந்தது.

திரும்பி நடந்தேன்

'தம்பி, கருவாடு எங்காலை?'

ஆமிக்காரன் படுத்திற பாட்டிலை

கடலுக்கிள்ளை இறங்கேலாதாம்.

சின்னததுரயன் வீட்டிலை கேட்டன்

பட்டினி என்று பல்லவி பாடுறான்.

எந்தன் கண்களில் கண்ணீர் துளிர்த்தது

பாரியின் தேர்க்கதை நினைவுக்கு வந்தது

ஆயிரம் தேர்கள் அவனிடம் இருந்தது.

ஒன்றைக்கொடுத்தால் உயிரா போய்விடும்?

என்னிடம் நானே கேட்கின்ற கேள்வி.

எதையோ ஒன்றை இழந்து விட்டேனா?

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புங்கை யூரான் .......

.எளிமையான நடையில் கவி வரியில் கதை நன்றாக் உள்ளது . உங்கள்முயற்சிக்கு பாராட்டுக்கள் . அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்யுங்கள் . கதைப் பகுதியில் இதைப் பதிந்தால் பொருத்தமாக இருக்கும். .

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

கதை கவிதையில் கச்சிதம்! :)

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புங்கை யூரான் .......

முதலில் இந்த பெயருக்கு என்ன அர்த்தமாம்......?

அல்லது எந்த ஊர் ஒளிந்து கிடக்குதாம்.....?

Edited by விசுகு

அறிமுகமே அசத்தலாக இருக்கின்றது. வணக்கம் வருக .....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புங்கை யூரான் .......

.எளிமையான நடையில் கவி வரியில் கதை நன்றாக் உள்ளது . உங்கள்முயற்சிக்கு பாராட்டுக்கள் . அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்யுங்கள் . கதைப் பகுதியில் இதைப் பதிந்தால் பொருத்தமாக இருக்கும். .

நன்றி. நிலாமதி அக்கா. யாழ் களத்தில் மெல்ல மெல்ல அறிமுகம் ஆவதாகே உத்தேசம்.

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

கதை கவிதையில் கச்சிதம்! :)

நன்றி சுவி.தங்களைப்போல யாழ் கள அனுபவசாலிகளின் ஊக்கம் தென்பைத்தருகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புங்கை யூரான் .......

முதலில் இந்த பெயருக்கு என்ன அர்த்தமாம்......?

அல்லது எந்த ஊர் ஒளிந்து கிடக்குதாம்.....?

நன்றிகள் விசுகு, புங்கையூரில் மறைந்திருப்பது ' புங்குடுதீவு' என்னும் ஒரு கிராமம்.நீங்களும் அந்தப் பக்கமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறிமுகமே அசத்தலாக இருக்கின்றது. வணக்கம் வருக .....!

நன்றிகள் தமிழினி. 'தோல்விகளை ஏணிப்படியாக்குங்கள்.'

அருமையான அறிவுரை

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் விசுகு, புங்கையூரில் மறைந்திருப்பது ' புங்குடுதீவு' என்னும் ஒரு கிராமம்.நீங்களும் அந்தப் பக்கமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்

நன்றி

தங்களை வரவேற்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி

கல்லாய் மண்ணாய் காடாய்க்கிடக்கு எம்பூமி

வேதனையை தந்தவனை வேரறுக்க வக்கற்று

கூனிக்குறுகி குடிசைக்குள் கிடக்கிறார் எம் மக்கள்

இவ்வளவும் செய்தவனோ ஆலமரம் நட்டபடி

எம் மண்ணை ஆக்கிரமித்து எக்காளமிட்டபடி

வாருங்கள் எழுதுங்கள்

தங்கள் எழுத்தும் ஆதரவும் அவர்க்கு வேண்டும்

Edited by விசுகு

வணக்கம் புங்கையூரான். வாங்கள். நல்ல கதை/கவிதை. உண்மைதான், மருந்தாயினும் விருந்தோடுண் என்பது தமிழர் பண்பாடாம். அதை நாம் (பெரும்பாலோர்) மறந்துவிடுகிறோம். குசேலர்கள் மறப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான நடைக்கவி..

இது உண்மைச் சம்பவமா? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புங்கையூரான். கவிதை அருமை. பண்பாட்டை நினைவூட்டியமைக்கும் நன்றி.(அப்படி நிலைமை புலத்தில் என சொல்ல வந்தேனாக்கும்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

தங்களை வரவேற்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி

கல்லாய் மண்ணாய் காடாய்க்கிடக்கு எம்பூமி

வேதனையை தந்தவனை வேரறுக்க வக்கற்று

கூனிக்குறுகி குடிசைக்குள் கிடக்கிறார் எம் மக்கள்

இவ்வளவும் செய்தவனோ ஆலமரம் நட்டபடி

எம் மண்ணை ஆக்கிரமித்து எக்காளமிட்டபடி

வாருங்கள் எழுதுங்கள்

தங்கள் எழுத்தும் ஆதரவும் அவர்க்கு வேண்டும்

நன்றி விசுகு,

ஆலமரம் நட்டால் நல்லது. ஆனால் அவர்கள் நடுவதோ 'அரசமரம்'. சங்கமித்தை தொட்டதால் அரசமரமும் பாவப் பட்டுப் போனது.

வணக்கம் புங்கையூரான். கவிதை அருமை. பண்பாட்டை நினைவூட்டியமைக்கும் நன்றி.(அப்படி நிலைமை புலத்தில் என சொல்ல வந்தேனாக்கும்)

நன்றிகள் பல, நுணாவிலான். 'மனிதம்' புலத்தில் மெல்ல மெல்ல மவுனித்துக் கொண்டு இருக்கிறது.

அருமையான நடைக்கவி..

இது உண்மைச் சம்பவமா? :unsure:

நன்றி இசைக்கலைஜன். சம்பவம் உண்மை.நடந்த இடம் கற்பனை.

வணக்கம் புங்கையூரான். வாங்கள். நல்ல கதை/கவிதை. உண்மைதான், மருந்தாயினும் விருந்தோடுண் என்பது தமிழர் பண்பாடாம். அதை நாம் (பெரும்பாலோர்) மறந்துவிடுகிறோம். குசேலர்கள் மறப்பதில்லை.

நன்றிகள் பல.'குசேலர்கள்' என்ற ஒரு வார்த்தையால் எல்லாவற்றையும் விளக்கி விட்டீர்கள்.

வணக்கம் வாங்கோ!

உங்கள் வரவே அருமை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ!

உங்கள் வரவே அருமை.

நன்றி சுந்தரி.

நெய்தல் மனம் கமழும் நல்ல கவிதையின் முடிவுப் பந்தி - தமிழர்கள் அனைவரும் சிந்தித்து உணரவேண்டிய அர்த்தம் நிறைந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெய்தல் மனம் கமழும் நல்ல கவிதையின் முடிவுப் பந்தி - தமிழர்கள் அனைவரும் சிந்தித்து உணரவேண்டிய அர்த்தம் நிறைந்தது.

நன்றிகள் ஆராவமுதன், நெய்தலின் மனம், எங்கள் ஊர் முழுவதும் மணக்கும். அந்த மணத்தை நுகர எப்போதும் ஒரு ஏக்கம்.

வணக்கம் ...

அழகான .. ஆழமா காவியத்துக்கு என் நன்றி ... :)

வார்த்தைகள் காட்சியாக மனதில் ஓடுகின்றது .. இன்னும் பல கவிதைகள் படைக்க என் வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ...

அழகான .. ஆழமா காவியத்துக்கு என் நன்றி ... :)

வார்த்தைகள் காட்சியாக மனதில் ஓடுகின்றது .. இன்னும் பல கவிதைகள் படைக்க என் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்களுக்கு நன்றிகள், பிரியா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.