Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய அணி வெற்றி பெற்றதை கொண்டாடிய யாழ். வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணி வெற்றி பெற்றதை கொண்டாடிய யாழ். வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

இந்திய கிரிக்கட் அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றிய சந்தோசத்தில் பட்டாசு கொழுத்திய யாழ். வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற உலக கோப்பை கிரிக்கட் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியதும், யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் பட்டாசு வெடித்து மக்கள் ஆரவாரப்பட்டனர்.

ஆயினும் நேற்றுப் பகலும் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் அச்சுறுத்தி தடுத்துள்ளனர். இருப்பினும் அதனையும் மீறி வர்த்தகர்களும் பொதுமக்களும் பட்டாசு வெடித்துள்ளனர்.

அவ்வாறு பட்டாசு வெடித்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மீது போலீசார் தற்போது வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். அவர்களின் வர்த்தக நிலையங்கள் முன்பாக குப்பை கூளங்கள் சேர்க்கப்பட்டு, சூழலுக்கு மாசு விளைவித்ததாக அவர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=51313

  • கருத்துக்கள உறவுகள்

இதை இந்திய வெற்றி என்று கருதாமல், சிங்களத்தின் தோல்வியென்று கருதி கொண்டாடி மகிழ்ந்திருந்தால் சந்தோஷம். அதை விடுத்து இந்திய மாயைக்குள் இன்னும் விடுபடாது கொண்டாடி மகிழ்வதென்பது வெட்கம்.

:(ன்று தணியுமிந்த இந்திய மோகம், என்று தொலையுமெங்கள் அடிமை சேவகம் ??!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இதை இந்திய வெற்றி என்று கருதாமல், சிங்களத்தின் தோல்வியென்று கருதி கொண்டாடி மகிழ்ந்திருந்தால் சந்தோஷம். அதை விடுத்து இந்திய மாயைக்குள் இன்னும் விடுபடாது கொண்டாடி மகிழ்வதென்பது வெட்கம்.

:(ன்று தணியுமிந்த இந்திய மோகம், என்று தொலையுமெங்கள் அடிமை சேவகம் ??!!!!!

ரகு உங்களுக்கு ஒரு பச்சை.நானும் இதில் யார் வென்றாலும் எப்படி கொழுவி விடலாம் என்றுதான் எண்ணிக்கொன்டுருந்தேன்.நான் தோனியின் ரசிகன் எனது அரசியல் அவரின் விளையாட்டடையும் ரசிக்க முடியாமல் பண்னி விட்டது. :unsure:

'பட்டாசு கொளுத்திய தமிழர்கள் தாக்கப்பட்டனர்'

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை வெற்றி கொண்டதையடுத்து யாழ்குடாநாட்டில் பட்டாசு வெடிகொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆயுததாரிகளால் தாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவிக்கின்றார்.

யாழ்குடாநாட்டில் பல இடங்களில் இவ்வாறான தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தமிழோசையிடம் தெரிவித்தார்.

வெடிகொளுத்திய பலர் வீதிகளில் குப்பைகளை ஏற்படுத்தியதாக படையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறையில் மட்டும் சுமார் 20 பேர்மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

வெள்ளை வேன்களிலும் மோட்டார் சைக்கிள்களிலும் வந்த ஆயுததாரிகளே பரவலாக இவ்வாறான தாக்குதலை நடத்தியதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.

கிரிக்கெட் போட்டியை உறவினர் வீடுகளில் பார்த்துவிட்டு திரும்பியவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்த்து யுத்த வெற்றியுடன் ஒப்பிட்டு இராணுவத்தைச் சார்ந்தவர்களும் அரசியல்வாதிகளும் சித்தரித்ததன் விளைவுதான் இதுவெனவும் சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/04/110404_jaffnamatch.shtml

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அதாவது இந்தியாவில் அரையிறுதி போட்டி பாகிஸ்த்தான் இந்தியாவிற்கிடையிலான போட்டியே பெரிதும் பரபரப்பாக இருந்தது பாகிஸ்த்தானின் ஒவ்வொரு விக்கட் இழப்பிற்கும் வாணவேடிக்கை மேழதாளம் என களைகட்டியது . அதன்பின்னர் இறுதியாட்டத்தில் சிறீலங்காவிடம் தோற்றாலும் கவலையில்லை அது நம்ம நாடு அல்லது நம்ம பசங்க வென்றால் என்ன தோத்தால் என்ன என்கிற மனநிலைதான் எல்லோரிடமும் இருந்தது சச்சின் இறுதி ஆட்டத்தினை முடித்து இந்தியா வென்றுவிட்டது எனஅறிவிக்கப்பட்ட பின்னரே ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமானது

பெல்கம்மிலிருந்து சாத்திரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடா மக்கள் இந்தியாவை நம்பிக் கொண்டாடும் அளவுக்கு முட்டாள்கள் இல்லை. அதேவேளை சிங்களத்தை எதிர்பதற்கான ஒரு பாதுகாப்பு வடிவமாக இதனை கருதி அவர்கள் செயற்பட்டிருப்பார்களே அன்றி அந்த மக்களை எப்போதும் ஒரு மட்டமாக எடைபோடுவதை தவிர்க்க வேண்டும்.

சிங்களம் பற்றிய தெளிவான செய்தியை இந்த நிகழ்வுகள் இந்தியாவிற்கு எடுத்துச் சென்றிருக்கும். இந்தியா நம்பை பகைத்ததில் காணப் போகும்.. இழப்பை அது ஈடுசெய்ய முடியாத நிலை வரும் போதே அது அதனை உணரவும் செய்யும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு அதாவது இந்தியாவில் அரையிறுதி போட்டி பாகிஸ்த்தான் இந்தியாவிற்கிடையிலான போட்டியே பெரிதும் பரபரப்பாக இருந்தது பாகிஸ்த்தானின் ஒவ்வொரு விக்கட் இழப்பிற்கும் வாணவேடிக்கை மேழதாளம் என களைகட்டியது . அதன்பின்னர் இறுதியாட்டத்தில் சிறீலங்காவிடம் தோற்றாலும் கவலையில்லை அது நம்ம நாடு அல்லது நம்ம பசங்க வென்றால் என்ன தோத்தால் என்ன என்கிற மனநிலைதான் எல்லோரிடமும் இருந்தது சச்சின் இறுதி ஆட்டத்தினை முடித்து இந்தியா வென்றுவிட்டது எனஅறிவிக்கப்பட்ட பின்னரே ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமானது

பெல்கம்மிலிருந்து சாத்திரி

நேரடி செய்திக்கு நன்றி.

இலங்கை வென்றிருந்தால் அது இலங்கையின் வெளிநாட்டு அரசியல் விவகாரங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கும், என்பது செய்தியாக இருந்தது. ஆனால் அது தற்போது இல்லை என்றாகிவிட்டது. இந்த நிலையில்தான் தமிழர்கள் இந்தியா வென்றமையைக் கொண்டாடியிருப்பார்கள். நானும் இலங்கை வெற்றிபெறக் கூடாது என்பதில் ஆவலாகவிருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்திற்கு எதிரான நிலைப்பாடே யாழ் மக்களின் வெளிப்பாடாகக் கொள்ளவேணுமே ஒழிய இந்தியாவுக்கான நேரடி ஆதரவு எனக் கொள்ள முடியாது.இந்த விடயத்தில் சிங்களத்திற்கும் இந்தியத்திற்குமான உறவைச் சிதைப்பதற்கான ஒரு சிறு முயற்சி என எடத்தக் கொள்ளுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அதாவது இந்தியாவில் அரையிறுதி போட்டி பாகிஸ்த்தான் இந்தியாவிற்கிடையிலான போட்டியே பெரிதும் பரபரப்பாக இருந்தது பாகிஸ்த்தானின் ஒவ்வொரு விக்கட் இழப்பிற்கும் வாணவேடிக்கை மேழதாளம் என களைகட்டியது . அதன்பின்னர் இறுதியாட்டத்தில் சிறீலங்காவிடம் தோற்றாலும் கவலையில்லை அது நம்ம நாடு அல்லது நம்ம பசங்க வென்றால் என்ன தோத்தால் என்ன என்கிற மனநிலைதான் எல்லோரிடமும் இருந்தது சச்சின் இறுதி ஆட்டத்தினை முடித்து இந்தியா வென்றுவிட்டது எனஅறிவிக்கப்பட்ட பின்னரே ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமானது

பெல்கம்மிலிருந்து சாத்திரி

சாஸ்திரி அண்ணா மட்ச்சை பார்த்த மாதிரி தெரியவில்லையே!...சச்சின் எங்கே பைனலில் மட்ச்சை முடித்து வைத்தவர் தோணி அல்லவா முடித்து வைத்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு இது வேணும் என்றே தோன்றுகிறது

முள்ளிவாய்க்காலுக்கே ஒரு அஞ்சலி அல்லது ஊர்வலம் போகமுடியாதவைக்கு இந்திய வெற்றிக்கொண்டாட்டம் தேவையா...?

சிங்களவனுக்கு எதுவுமே ஒவ்வாதவை என்பது முள்ளிவாக்காலுக்கு தெரிந்த இவர்களுக்கு இந்திய வெற்றிக்கொண்டாட்டத்துக்கு ஆட்டம் போடத்தான் வேண்டுமென்றால்...

அதன் பலாபலனை சிங்களத்திடம் பெறுவதும் சரிதானே.....? :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவுஸ்திரெலியா வென்றிருந்தால் தான் வெடி கொளுத்தியிருப்பேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.