Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களின் உணர்ச்சிகளை புரியாத ஆண்கள்..........

Featured Replies

பெண்களின் உணர்ச்சிகளை புரியாத ஆண்கள்..........

பெண் ஒரு வெற்றியாளனை ஆண்மைக்குரியவனை தனக்குத் துணையாக தேர்வு செய்ய விரும்பினாலும் நாளடைவில் ஆணின் அடிப்படை இயல்புகள் தன்னுடன் அவனை ஒன்றவிடாமல் தடுத்துவிடும் என்பதை அறியாமல் அரவணைப்பும் நெருக்கமும் தனக்குக் கிடைப்பதில்லை என நினைத்து ஏமாறும் நிலையேற்படும்.

பெண்ணின் மென்மையான உணர்வுகளை உணராமல் இதை கேலி செய்வதோ இந்த குணங்கள் தனக்கு வந்தால் தன்னை ஆண்மைத் தனத்திலிருந்து அப்புறப்படுத்திவிடும் என்ற அச்சத்தில் செக்ஸைத் தவிர வேறு விதத்தில் தனது உணர்வை வெளிப்படுத்த ஆண் தயங்குகிறான்.

ஆனால் பாலுறவைவிட காதலை தன்னிடம் ஆண் நிறைய பகிர்ந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்த்து ஏமாறும் பெண் தடுமாற்றத்திற்கு ஆளாகிறாள். பல அண்கள் வெளியில் செல்வாக்குடன் உள்ளனரே தவிர வீட்டில் மனைவியுடன் மனம்விட்டுப் பேசவேண்டும் பழகவேண்டும் காதலைச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை.

98 வீதமான பெண்கள் தங்கள் மீதுள்ள காதலை கணவன் அடிக்கடி வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறார்கள். தங்களைப் பற்றி தங்கள் உணர்வுகளைப் பற்றி தங்களுடைய திட்டங்களைப் பற்றி அதிகமாக பேசவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறெல்லாம் நடக்காத போது 40 வீதமான பெண்கள் விவாகரத்து பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள்.

42 வீதமானோருக்கு பேர் வேறொரு உறவை நாடுகிறார்கள். அந்த உறவு இன்னொரு ஆணுடனாக இருக்கலாம் தனது குழந்தையின் மீது கவனம் செலுத்துவதாக அல்லது வேலையின் மீது கவனத்தைத் திருப்புவதாக இருக்கலாம். வெளியுலகத்தை சாராமல் வீட்டுச் சூழலில் அதிகம் இருக்கும் பெண் தனது உணர்வுகளை கணவன் தூண்ட வேண்டும் என எதிர்பார்க்கிறாள்.

அதற்குப் போதிய அவகாசம் அளிக்கிறாள். இதைப் புரிந்துகொண்டு மனைவியுடன் மனம்விட்டுப் பேசுவதை கணவன் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இருவருக்கும் இடையே நெருக்கமிராது மனைவியின் மனம் அன்பிற்காக ஏங்கத் தொடங்கும். அந்த ஏக்கம் தேவையற்ற விளைவுகளைத் தரக்கூடும்.

படித்ததில் பிடித்தது

அன்புடன்

தமிழ்மாறன்

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் உணர்ச்சிகளை மட்டும் அதிகம் கவனத்தில் எடுக்கும் உலகம்.. (குறிப்பாக வியாபார விளம்பர மருத்துவ விஞ்ஞான உலகம்) ஆண்களின் உணர்ச்சிகளை இட்டு அதிகம் அக்கறை செய்யாததும்.. அது பற்றி பெண்களுக்கு குறிப்பெழுதாது விடுவதும் ஏன்..??! பெண்கள் மட்டும் என்ன ஆண்களின் உணர்வுகளை 100% மதிச்சு தெரிஞ்சு அதற்கேற்பவா நடக்கினம்...??!

போங்கையா.. போய் வேற வேலை இருந்தா பாருங்கைய்யா..! பொண்ணு பொண்ணென்று புலம்பி உங்க வாழ்க்கையை வீணடிக்காதீங்க. அவங்க பொண்ணுங்களும் சாதாரணமான மனிதர்களே. தசை எலும்பு நரம்பு தோல் போர்த்தியவர்கள் தான் அவர்களும். அங்க வேறு விசேசம் இருக்கிற மாதிரி ஒன்றும் தெரியல்ல. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் உணர்ச்சிகளை புரியாத ஆண்கள்..........

பெண் ஒரு வெற்றியாளனை ஆண்மைக்குரியவனை தனக்குத் துணையாக தேர்வு செய்ய விரும்பினாலும் நாளடைவில் ஆணின் அடிப்படை இயல்புகள் தன்னுடன் அவனை ஒன்றவிடாமல் தடுத்துவிடும் என்பதை அறியாமல் அரவணைப்பும் நெருக்கமும் தனக்குக் கிடைப்பதில்லை என நினைத்து ஏமாறும் நிலையேற்படும்.

பெண்ணின் மென்மையான உணர்வுகளை உணராமல் இதை கேலி செய்வதோ இந்த குணங்கள் தனக்கு வந்தால் தன்னை ஆண்மைத் தனத்திலிருந்து அப்புறப்படுத்திவிடும் என்ற அச்சத்தில் செக்ஸைத் தவிர வேறு விதத்தில் தனது உணர்வை வெளிப்படுத்த ஆண் தயங்குகிறான்.

ஆனால் பாலுறவைவிட காதலை தன்னிடம் ஆண் நிறைய பகிர்ந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்த்து ஏமாறும் பெண் தடுமாற்றத்திற்கு ஆளாகிறாள். பல அண்கள் வெளியில் செல்வாக்குடன் உள்ளனரே தவிர வீட்டில் மனைவியுடன் மனம்விட்டுப் பேசவேண்டும் பழகவேண்டும் காதலைச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை.

98 வீதமான பெண்கள் தங்கள் மீதுள்ள காதலை கணவன் அடிக்கடி வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறார்கள். தங்களைப் பற்றி தங்கள் உணர்வுகளைப் பற்றி தங்களுடைய திட்டங்களைப் பற்றி அதிகமாக பேசவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறெல்லாம் நடக்காத போது 40 வீதமான பெண்கள் விவாகரத்து பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள்.

42 வீதமானோருக்கு பேர் வேறொரு உறவை நாடுகிறார்கள். அந்த உறவு இன்னொரு ஆணுடனாக இருக்கலாம் தனது குழந்தையின் மீது கவனம் செலுத்துவதாக அல்லது வேலையின் மீது கவனத்தைத் திருப்புவதாக இருக்கலாம். வெளியுலகத்தை சாராமல் வீட்டுச் சூழலில் அதிகம் இருக்கும் பெண் தனது உணர்வுகளை கணவன் தூண்ட வேண்டும் என எதிர்பார்க்கிறாள்.

அதற்குப் போதிய அவகாசம் அளிக்கிறாள். இதைப் புரிந்துகொண்டு மனைவியுடன் மனம்விட்டுப் பேசுவதை கணவன் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இருவருக்கும் இடையே நெருக்கமிராது மனைவியின் மனம் அன்பிற்காக ஏங்கத் தொடங்கும். அந்த ஏக்கம் தேவையற்ற விளைவுகளைத் தரக்கூடும்.

படித்ததில் பிடித்தது

அன்புடன்

தமிழ்மாறன்

வாத்தியார்

***********

  • கருத்துக்கள உறவுகள்

தம்பிமாரே முதலில் பெண்களின் உணர்வை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்...பூப் போன்ற மென்மையான இதயம் கொண்ட‌வளை புயலாக மாற்றாதீர்கள்

  • தொடங்கியவர்

என்ன வாத்தியார் திருத்தங்களை பார்த்தால் உங்கள் வீட்டிலும் இதே பிரச்சினை போல தான் தெரியுது!!!!

எதற்கும் எங்களிற்கு காரியம் அக வேண்டும் என்றால் பெண்களை மதிப்பதாக சும்மா நாடகம் எண்டாலும் ஆடித்தான்

தீர வேண்டும்

தங்கை ரதி அவர்களே பெண்களின் மென்மையான மனதை புரிந்து கொண்டதால் தானே நாங்கள் அதாவது

ஆண்கள் விவாகரத்து கேட்பதில்லை...............பெண்கள் தான் கல் நெஞ்சக்காரர்கள் என்கிறார்கள்!!!!!!!

எங்கட நெடுக்கால போனவரிட்ட கேட்டால் இதைப்பற்றி நிறையவே சொல்லுவார்...................

...பூப் போன்ற மென்மையான இதயம் கொண்ட‌வளை புயலாக மாற்றாதீர்கள்

...முடியல ...என்னால தாங்க முடியல...

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

...முடியல ...என்னால தாங்க முடியல...

முடியவில்லை என்டால் போய்ப் படுங்கள் :D

தமிழ்மாறன் அவர்களே ஆண்கள் 90% அமசடக்கு கள்வர்கள்

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் உணர்ச்சிகளை புரியாத ஆண்கள்.

ஆண்களின் உணர்ச்சிகளை புரியாத பெண்களும் நிறையவே இருக்கிறார்கள் ஆனால் அதை யாரும் தெரிந்து கொள்ள முற்படுவது இல்லை.

  • தொடங்கியவர்

சரியாக சொன்னீர்கள் கறுப்பி உண்மையில் 21ம் நூற்றாண்டில் பாவப்பட்டவர்கள் என்றால்

இந்த ஆண்கள் தான்

உண்மையை சொல்ல போனால் பெண்களால் ஆண்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்

அது யாருக்கும் தெரிவதில்லை.........

ஆண்களும் சரி பெண்களும் சரி ஒருவரின் உணர்ச்சியை இன்னொருவர் முழுமையாகப் புரிந்து கொள்ளுவது இலையே... :rolleyes: அப்படி வாழ்க்கையில் புரிந்து கொண்டு நடப்பின் பிரச்சனைகள் எங்கிருந்து வருகின்றன??

எப்ப பார்த்தாலும் பெண்கள் ஆண்களைக் குறை சொல்வதும், ஆண்கள் பெண்களைக் குறை சொல்லவதும் தான் மாறி மாறி நடக்குது, இப்படியே மண்டையப் போடும் வரைக்கும் மாறி மாறி பிடுங்குப்படுக் கொண்டு இருந்துவிட்டு ஒருத்தர் போனப் பிறகு கண்ணீர் விட்டுக் கொண்டு இருந்து என்ன பயன்?

முடிந்த அளவுக்கு இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சியாவது பண்ணுங்கோ, முயற்சிகூட எடுக்க ஏலாதா? அடுத்தவருக்கு துன்பம் கொடுக்காமல் தனியாகவே வாழ்ந்தது விட்டுப் போங்கள்... அடுத்தவருக்குத் துன்பமில்லாமல் ஒருத்தன்/ஒருத்தி வாழ்ந்தான்/வாழ்ந்தாள் என்ற பெயராவது உங்களுக்கு மிஞ்சும்... :)

இந்த இணைப்பின் மூலத்தை ஒரு பெண்தான் எழுதியிருப்பார்.

'ஆண்களின் .................narchikalai :wub: அறியாத பெண்கள்'

என்றெல்லாம் ஆண்கள் கட்டுரைகள் வரைவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=hG2HHZ9fvnU

பீஷ்மரை வீழ்த்த சிகண்டியை முன்னிறுத்தி போர் செய்த அர்ஜுனன் முதற்கொண்டு.. யாரும் இவர்களை கேர் செய்யவில்லை..

ஆண் பெண் என பாகுபாட்டை விடுத்து இவர்களுக்கும் கொஞ்சம் குரல் கொடுப்பம்.. :(

  • தொடங்கியவர்

இந்த இணைப்பின் மூலத்தை ஒரு பெண்தான் எழுதியிருப்பார்.

தப்பிலி என்ன தான் சொல்ல வாறியள்.....................

ஆணுக்குள் பெண்மையும் பெண்ணுக்குள் ஆண்மையும் கலந்திருப்பது தான்

மனித வாழ்க்கை..................

இது இல்லாதவிடத்து தான் சிக்கல்களும் புரிந்துணர்வும் இல்லாமல் வாழ்க்கை நரகமாகிறது!!!!

ஏற்றுக்கொள்கிறீர்களா???

என்ர அனுபவம்பா படித்து பயன் பெறுங்கள்

Pநீங்கள் சந்தோசமாக இருந்தால் அது எனக்கும் சந்தோசம்............

அடிக்கடி நெடுக்கால போனவற்ரை அறிவுரைகளையும் கேழுங்கோ இல்லாட்டி பெண்கள்

எங்களை பந்தாடிப் போடிவினம்

இந்த இணைப்பின் மூலத்தை ஒரு பெண்தான் எழுதியிருப்பார்.

தப்பிலி என்ன தான் சொல்ல வாறியள்.....................

ஆணுக்குள் பெண்மையும் பெண்ணுக்குள் ஆண்மையும் கலந்திருப்பது தான்

மனித வாழ்க்கை..................

இது இல்லாதவிடத்து தான் சிக்கல்களும் புரிந்துணர்வும் இல்லாமல் வாழ்க்கை நரகமாகிறது!!!!

ஏற்றுக்கொள்கிறீர்களா???

என்ர அனுபவம்பா படித்து பயன் பெறுங்கள் நீங்கள் சந்தோசமாக இருந்தால் அது எனக்கும் சந்தோசம்............

அடிக்கடி நெடுக்கால போனவற்ரை அறிவுரைகளையும் கேழுங்கோ இல்லாட்டி பெண்கள்

எங்களை பந்தாடிப் போடிவினம்

  • கருத்துக்கள உறவுகள்

அடடா பெண்களுக்கு உணர்ச்சிகள் வேற இருக்கா :unsure: நான் நினைச்சன் தனிய ஆசை மட்டும் தான் இருக்கு என்று :lol:

அடிக்கடி நெடுக்கால போனவற்ரை அறிவுரைகளையும் கேழுங்கோ

ஏன் தமிழ்மாறன் வீட்டில எனக்கு அடி வாங்கித்தாற ஐடியாவா? :lol:

  • தொடங்கியவர்

என்ன தப்பிலி நீங்களும் பெண்ணிணால் வஞ்சிக்கப்படும் துன்பப்படும் ஆணா!!!!!!

என்ன செய்வது எங்களின் கஸ்ட காலம் தான் ஏதோ பிறந்து விட்டோம்

இணைந்து விட்டோம் வாழ்க்கை வண்டில இழு............க்க வேண்டியது தான்...........

சயீவன் பெண்களுக்கு உணர்ச்சிகள் இருப்பதால் தானே அவர்கள் அழுகிறார்கள்............

  • கருத்துக்கள உறவுகள்

அடடா பெண்களுக்கு உணர்ச்சிகள் வேற இருக்கா :unsure: நான் நினைச்சன் தனிய ஆசை மட்டும் தான் இருக்கு என்று :lol:

சகீவனுக்கு ஒரு பச்சை போட விருப்பம்...பச்சைகள் முடிந்து விட்டது.....பச்சை குத்த விடுறதில ஏன் தான் கஞ்சத்தனம் காட்டுறாங்களோ தெரியவில்லை... :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.