Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் களம் கணவன் கடைசிக்கனவு

Featured Replies

நெடுக்ஸ், நீங்கள் என்னதான் தலைகீழாக நின்று கூறினாலும்.. நீங்கள் இயக்கத்தில் இணைந்து ஆயுதம் தூக்கி போராடவில்லை என்பதை முதலில் ஒத்துக்கொள்ளுங்கள். அன்பினி போல் உங்கள் கால்கள் துண்டாடப்படவில்லை. அன்பினிபோல் நீங்கள் பல்வேறு விதமான இம்சைகளிற்கு உள்ளாகவில்லை. இந்தவகையில் நீங்கள் என்னதான் தலைகீழாக நின்று உங்கள் த.வி.பு விசுவாசத்தை காட்டினாலும் அன்பினியின் த.விபு பற்றிய நேரடியான அனுபவங்களோ, உணர்வுகளோ உங்களிற்கு இல்லை. இதை முதலில் ஒத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் பாசையில் கூறினால் உங்கள் அப்பட்டமான சுயநலம் காரணமாக படிப்பாளி என்கின்ற வேடம் போட்டு புலமைப்பரிசிலில் மாணவர் வீசா மூலம் லண்டன் வந்தவர் நீங்கள். அப்படிப்பட்ட உங்களிற்கு மற்றவன் எந்தவகையில் வெளிநாட்டிற்கு ஓடினான் என்று கூறி விமர்சனம் செய்யவும், நையாண்டி செய்யவும் உங்கள் சிந்தனைப்படி உரிமை கிடையாது.

கதையில் மிகத்தெளிவாக வெளியில் இருந்து பார்க்கப்படும் பார்வைக்கும், இயக்கத்தினுள் உள்ளே இருந்து பார்க்கப்படும் பார்வைக்கும் வித்தியாசம் காட்டப்பட்டுள்ளது. இயக்கத்தில் உள்ளவர்கள் சாதாரண மனிதர்கள். அவர்களிற்கு சாதாரண மனிதர்களிற்கு உள்ள உணர்வலைகளே உள்ளதாகவே கூறப்பட்டுள்ளது. அதாவது...

நெடுக்ஸ், நீங்கள் இப்போதும் சுமார் பத்து வருடங்களிற்கு முன்னர் அன்பினி தனது பதினாறாவது வயது சொச்சத்தில் பக்கத்துவீட்டில் குடியிருந்தவர்களை வேலிக்கால் எட்டி, எட்டிப்பார்த்து இயக்கம் பற்றி பல்வேறு விதமான ஆசைக்கனவுகளை கட்டிக்கொண்ட நிலமையிலேயே இருக்கின்றீர்கள் என்று புரிகின்றது. அன்பினி போல் ஓர் அப்பாவியாக இருக்கின்றீர்கள்.

  • Replies 142
  • Views 22.8k
  • Created
  • Last Reply

இது கதையல்ல.உண்மை. இயக்கம் சம்பந்தப்பட்டதல்ல.மனிதர்களின் உளவியல் சம்பந்தப்பட்டது.ஒருவன் இயக்கத்தில் இருந்தாலும் எந்தபெரும் பதவியில் இருந்தாலும் பிச்சைகாரனாக இருந்தாலும் எந்த இனம் மதம் ஆக இருந்தாலும் சூழ்நிலையும் கட்டுப்பாடுகளும்(சட்டமும் ஒழுங்கும்) தான் எம்மை கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றது.

இவர்கள் இப்படித்தான் எதுவும் செய்யா மாட்டார்கள் பூப்போட்டு கும்பிடவேண்டும் என்பதெல்லாம் தான் எதையும் இழக்காமல் மற்றவனை தள்ளிவிடுவதற்கான ஆலாபனைகள்.

விடுதலை என்றுவந்து பலர் செய்த பஞ்சமா பாதகங்கள் நேரில் கண்டவன் நான்.அதற்காக எல்லோரும் அப்படியானவர்களுமில்லை. அன்பினிக்கு நடந்த நல்லதும் கெட்டதும் இயக்கத்திற்குள்ளேயும் வெளியேயும் நடந்துள்ளது.உலகமே இப்படித்தான். நாங்கள் புனிதர்கள் என்பது எம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள போடும் வேசமே.

அமெரிக்காவில் உள்ள மருதங்கேணியும், பிரான்சில் உள்ள விசுகுவும், லண்டனில் உள்ள நெடுக்சும் வெவ்வேறு இயக்க பணிகளின் நிமித்தம் அந்தக்காலத்தில் வெளிநாடுகளிற்கு அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் ஆயுதம் தூக்கி போராடினால் தமிழீழம் கிடைக்காது, போரில் தோற்றுவிடுவோம் என்று கருதியே தலைவர் அவர்களை வெளிநாடுகளிற்கு அனுப்பி வைத்தார். எனவே, தயவுசெய்து இவர்களை குறைகூறாதீர்கள். இவர்கள் தலைவரின் செல்லப்பிள்ளைகள்.

பங்கர் வெட்ட வரச் சொல்ல சைக்கிளை போட்டுவிட்டு ஓடிப் போய் வீட்டில் பிள்ளை பிடிக்கிறாங்கள் என்று சொன்னவர்களையும் நமக்குத் தெரியும். அதைச் சொல்லி கொழும்புக்கு ஓடி கனடாவில் அகதியானவர்களையும் நமக்குத் தெரியும். அதேபோல்.. அண்ண எங்க வரனும் என்று சொல்லி.. கொடும் செல்லடிக்கு மத்தியிலும் பங்கர் வெட்ட வந்தவர்களையும் எமக்குத் தெரியும்.

தாங்கள் த.வி.பு மத்தியில் புகழ்பெறுவதற்காக ஊரில் உள்ள பெடியன்கள், நண்பர்களிற்கு கதை சொல்லி அவர்களை கொத்தாக கொண்டு சென்று இயக்கத்தில் சேர்ப்பித்துவிட்டு பின்னர் தாங்கள் நைசாக கழன்று இயக்கத்தை விட்டு வெளியேறி வெளிநாடு வந்தவர்களையும் எமக்கு தெரியும். இவர்கள் பசப்புக்கதைகளை நம்பிப்போனவர்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டு தற்போது சுவர்களில் படங்களாக.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் உள்ள மருதங்கேணியும், பிரான்சில் உள்ள விசுகுவும், லண்டனில் உள்ள நெடுக்சும்

வெவ்வேறு இயக்க பணிகளின் நிமித்தம் அந்தக்காலத்தில் வெளிநாடுகளிற்கு அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் ஆயுதம் தூக்கி போராடினால் தமிழீழம் கிடைக்காது, போரில் தோற்றுவிடுவோம் என்று கருதியே தலைவர் அவர்களை வெளிநாடுகளிற்கு அனுப்பி வைத்தார். எனவே, தயவுசெய்து இவர்களை குறைகூறாதீர்கள். இவர்கள் தலைவரின் செல்லப்பிள்ளைகள்.

சிங்களவனை நம்பாதேபோராட்டுக்கான காரணங்கள் அப்படியேதான் உண்டு

உனக்காக நீயே போராடவேண்டும் என்று தொடர்ந்து சொல்பவன் புலி நன்றி ஜயா

தெரியாமல் தான் கேட்கின்றேன்

உங்களுக்கு புலி என்றால் இவ்வளவு எரிச்சல்?

புலியை விட்டால் வேறு என்ன தெரியும் உங்களுக்கு?

ஒரு கதை எழுதக்கூட அவர்கள் தான் வேண்டுமா தங்களுக்கு?

அவர்களைத்தொடாதவரை எனக்கும் தங்களுக்கும் எந்த பகையுமில்லை. தொட்டால் நான் நிச்சயம் வருவேன். கேட்பேன். எங்கேயென்றாலும்.........................................

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மூளைசலவை செய்யபடுகின்றவனுக்கு அது மூளைசலவை என்று தெரிந்தால் அது என்ன மூளைசலவை.

அதுதான் முழுநேரமாக இங்கே முயற்சிக்றீர்களோ??????????????

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் முழுநேரமாக இங்கே முயற்சிக்றீர்களோ??????????????

விடுங்கள் ஜயா

பாவங்கள்

எவரும் இவர்களுடன் இல்லை

அந்த காழ்ப்புணர்சியால் வரும் வசனங்கள் இவை.

10 பேரைக்கூட்டி ஒரு ஊர்வலம் போனார்களா என்று கேளுங்கள்?

நேற்று உலகம் முழுவதும் சனம் திரண்டார்களே

இவர்கள் எங்காவது போனார்களா என்று கேளுங்கள்.

புலிக்கு குடிக்கப்பழக்கி அவர்கள் ஊற்றிக்கொடுத்து குடித்தோம் என்பதிலேயே இவர்களது குணம் தெரிந்துவிடும்.

தெரியாமல் தான் கேட்கின்றேன்

உங்களுக்கு புலி என்றால் இவ்வளவு எரிச்சல்?

புலியை விட்டால் வேறு என்ன தெரியும் உங்களுக்கு?

ஒரு கதை எழுதக்கூட அவர்கள் தான் வேண்டுமா தங்களுக்கு?

அவர்களைத்தொடாதவரை எனக்கும் தங்களுக்கும் எந்த பகையுமில்லை. தொட்டால் நான் நிச்சயம் வருவேன். கேட்பேன். எங்கேயென்றாலும்.........................................

இவ்வளவு த.வி.பு விசுவாசத்தை காட்டு நீங்கள்:

1. ஏன் த.வி.புவில் இணைந்து ஆயுதம் ஏந்தி போராடவில்லை? ஏன் தாயகத்தை விட்டு ஓடினீர்கள்?

2. உங்கள் பிள்ளைகளை ஏன் த.வி.புவில் ஆயுதம் ஏந்தி போராடுவதற்காக இணைக்கவில்லை?

3. அன்பினியை நீங்கள் உங்கள் மகளாக நினைத்து அவருக்கு கூறக்கூடிய ஆறுதல் வார்த்தை என்ன?

4. இதுவரை அன்பினியின் அவலங்கள் பற்றி ஏதும் கூறவில்லையே, ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன சொல்ல வருகறீர்கள் என்பதை மற்றவருக்கும் புரியும் தமிழில் எழுதினால் அதற்கு பதில்களை எழுதலாம்............

என்ன மாவீரர்கள்தான் இனி கருத்துகளத்தில் வந்து எழுதவேண்டும்??? என்று சொல்ல வருகின்றீர்களா?

அல்லது நீங்கள்தான் பெரிய மேதாவி அடுத்தவன் எல்லாம் முட்டாள் என்று அபிலாசைபட்டால் அப்படியே அதை ஏற்றுகொள்கிறேன்.

புலிகளையும் தமழர்களையும் பிரித்து வேறாக்கிவிட்டால் ஸ்ரீலங்க அரசை காப்பற்றிவிடலாம் என்று நப்பாசைகொள்கிறீர்களா???

புலிகள் மீது போர்குற்றங்களை மறைமுகமாக சாடுவதால்............. இங்கே உள்ளவர்களை மூளைசலவை செய்யலாம் என்று பேராயப்படுகிறீர்களா??

நான் ஆயுதும் தூக்கி போராடவில்லை.............. அதை செய்திருந்தாலும் அதை அதை பறையடிக்க வேண்டிய தேவை எனக்கில்லை. நான் கால்களை இழக்கவில்லை எனக்கு இரண்டு கால்களும் நலமாக உள்ளன. எனக்கு தற்போது எந்த கொலையச்சுறுத்தலும் சிங்கள காடைகளாலோ அதனோடு கூடிதிரியும் கோடாரிகாம்புகளினாலோ இல்லை.

நான் தமிழ்ஈழ விடுதலைபோரில் போரடி மரணிக்கவில்லை இன்னமும் உயிரோடுதான் இருக்கிறேன்.

அதற்கும் நான் மேலே எழுதிய கருத்திற்கும் என்ன தொடர்பு என்பதை நீங்கள் எனது கருத்தை மேற்கோள்காட்டி எழுதினால் எனது தவறை புரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும். நான் நீங்கள் அர்ஜுன் அளவிற்கு அறிவாளி இல்லை நானும் எதாவது மூளைசலவைக்கு ஆளாகியிருக்கலாம் அதை சுட்டிகாட்டடினால் எனது தவறுகளை புரிய வாய்ப்பிருக்கும். அதைவிடுத்து காகம் மாதிரி கரைந்துகொண்டு போனால் வாசிக்கும்போது அடியும் முடியும் புரியமுடியாதுள்ளது.............. ஆனால் எதையோ எழுதியள்ளதாக மட்டும் தெரிகிறது. தயவு செய்து அதை செய்வீர்கள் என்று நம்புகிறேன்................... அதைவிடுத்து சாதாரண பமாரமக்களாகிய எங்களுடைய அறிவை எடைபோடாது உங்கள் அறிவுக்கு எட்டிய கருத்துகளை எழுதிகொண்டிருந்தால் எம்மால் புரியமுடியவில்லை என்பதை தாழ்மையோடு எடுத்துரைக்கிறேன். ஆனால் சிறிய ஒரு அறிவுரையாக சொல்கிறேன் பெருத்த அரசியல் தலைவர்கள் பங்கேற்று உலகத்தை எப்படி நடத்துவது 2050ல் 9பில்லியனாக வரப்போகும் சனத்தொகைக்கு தேவையான உணவை எப்படி உற்பத்தி செய்வது போர்களை தவிர்ப்பது போன்ற கருத்தாடல்கள் நாடுதோறும் நடக்கின்றது அங்கே சென்றால்................. (எமக்கும்) உலகத்திற்கும் நல்ல புண்ணியமாக இருக்கலாம். அங்கே மூளைசலவை செய்யாபடாது தன்னலமற்ற கருத்துகளையே வரவேற்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் அண்ணாவோ,மருதங்கேணி அண்ணாவோ யாராக இருந்தாலும் தயவு செய்து இதை அன்பினி என்ற தனிமனுசியின் வாழ்க்கை என எண்ணாதீர்கள்?

போருக்குப்பின்னரான ஒட்டுமொத்த முன்னாள் போராளிகளின் வாழ்க்கை இது?

கதை சொன்ன விதத்தில் வேண்டும் என்றால் தவறுகள்,திணிப்புக்கள் இருந்திருக்கலாம். ஆனால் இப்படியான ஒரு விடையம் நடக்காதது போல எழுதுவது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. இது யாராலும் மறக்கவும்,மறைக்கவும் முடியாது எல்லாரும் ஆளாளுக்கு விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ பேச்சாளர்கள் என்ற நினைப்பில் செயற்படுவது தான் இன்னும் எம்மால் ஒற்றுமையாக முடியாமல் உள்ளதற்கான காரணங்களில் முக்கியமான காரணமாக உள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கம் என்பது தனிநபர் சொத்தல்ல ஆளாளுக்கு உரிமை கொண்டாட உங்களுக்கு இருக்கும் அதே உரிமை தான் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கின்றது.

அன்பினி போன்ற ஆயிரம் உறவுகளின் வாழ்க்கையைக் கூட‌ நீங்கள் புத்தியால்,அறிவுக்கண்ணால் பார்க்கிறீர்கள் நாங்கள் மனச்சாட்சியால்,உணர்வுகளால் அவற்றை தரிசிக்கிறோம். அறிவால் பேசி வெல்வதற்கு இது பட்டிமன்றத்தலைப்பு அல்ல,அவர்களுக்கு என்ன செய்யலாம் என்பதை உங்கள் மனச்சாட்சியைத்தொட்டு யோசியுங்கள்.

உதவி செய்வது என்பது அவர்களை மற்றவர்களில் தங்கி இருக்க வைப்பதற்கு அல்ல மாறாக நடக்க முடியாதவனுக்கு தடியை குடுத்து சொந்தமாக நடைபழக்குவதற்கே. ஒரு நேர உணவுக்கு வழி இல்லாதவனிடம் போய் உரிமை பற்றி வகுப்பெடுக்க உங்களால் முடியுமாக இருக்கலாம் ஆனால் அப்படி ஒரு அருகதை எனக்கு,என்னை போன்றவர்களிடம் இல்லை.

இதற்கு மேல் அவரவர் தனிப்பட்ட விடையம்.

மருதங்கேணி, மேலே அன்பினியால் எழுதப்பட்ட கதையை பூரணமாக வாசித்தீர்களா அல்லது இல்லையா? இன்னமும் வாசிக்கவில்லையானால் வாசித்துவிட்டு கருத்திடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணாவோ,மருதங்கேணி அண்ணாவோ யாராக இருந்தாலும் தயவு செய்து இதை அன்பினி என்ற தனிமனுசியின் வாழ்க்கை என எண்ணாதீர்கள்? போருக்குப்பின்னரான ஒட்டுமொத்த முன்னாள் போராளிகளின் வாழ்க்கை இது?

கதை சொன்ன விதத்தில் வேண்டும் என்றால் தவறுகள்,திணிப்புக்கள் இருந்திருக்கலாம்.

இந்தக்கதையின் 11 பக்கம்வரை வாசித்துவிட்டு நிறுத்திவிட்டேன். அதுவரை அந்த பெண் தனிப்பட்ட ஒரு சாதாரண அதேநேரம் புலிகளால் ஏமாற்றப்பட்ட பெண்ணாகவே சித்தரிக்கப்படுகின்றாள்.

இதுவரைதமிழர்களுக்கு நடந்த கொடுமையை உணர்ந்து போராளியானதாக ஏதாவது உண்டா ஜீவா?

Edited by விசுகு

இந்தக்கதையின் 11 பக்கம்வரை வாசித்துவிட்டு நிறுத்திவிட்டேன். அதுவரை அந்த பெண் தனிப்பட்ட ஒரு சாதாரண அதேநேரம் புலிகளால் ஏமாற்றப்பட்ட பெண்ணாகவே சித்தரிக்கப்படுகின்றாள். இதுவரைதமிழர்களுக்கு நடந்த கொடுமையை உணர்ந்து போராளியானதாக ஏதாவது உண்டா ஜீவா?

நீங்களும் மருதங்கேணி போல் கதையை முழுமையாக வாசிக்கவில்லை. நெடுக்ஸ் நீங்களாவது முழுமையாக வாசித்தீர்களா அல்லது நீங்களும் பதினொரு பக்கங்கள் வாசித்துவிட்டு அல்லது மேலோட்டமாக வாசித்துவிட்டு கருத்து இடுகின்றீர்களா?

விசுகு, உங்களால் இதே வினாவை மாண்டுபோன முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளிடம் கேட்க முடியுமா? அதாவது அவர்கள் தமிழர்களிற்கு நடந்த கொடுமையை உணர்ந்துதான் போராளிகள் ஆகினார்களா என்று?

தமிழருக்கு நடந்த கொடுமையை உணர்ந்த (?) உங்களாலேயே ஆயுதம் ஏந்தி போராடமுடியவில்லை. இதற்குள் எப்படி அன்பினி தமிழருக்கு நடந்த கொடுமையை உணர்ந்து இயக்கத்தில் இணையவில்லை என்று குறைப்பட்டுக் கொள்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக்கதையின் 11 பக்கம்வரை வாசித்துவிட்டு நிறுத்திவிட்டேன். அதுவரை அந்த பெண் தனிப்பட்ட ஒரு சாதாரண அதேநேரம் புலிகளால் ஏமாற்றப்பட்ட பெண்ணாகவே சித்தரிக்கப்படுகின்றாள்.

விசுகு அண்ணா தயவுசெய்து குறை நினைக்காதீர்கள்.

ஒவ்வொருத்தருடைய பார்வை ஒவ்வொருமாதிரி என்னுடைய கோணத்தில்,என்னுடைய கிரகிப்பில் இருப்பது போல மற்றவர்களுடைய பார்வையும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது. இவை இப்படியே பேசாது போனால் இடைவெளி இன்னும் அதிகமாகுமே தவிர குறையப்போவதில்லை.

புலி என்ற முகத்திரையை கிழித்து அதே போல புலி எதிர்ப்பு,மாற்றுக்கருத்து என்பதை விடுத்து மனிதர்களை பாருங்கள். இக்கதையை கூட முழுமையாக படிக்க,ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு ஏதோ ஒன்று( உதாரணமாக புலி விசுவாசம் தடுக்கின்றது என்றால் இது ஆரோக்கியமான நிலை தானா என்பதையும் யோசியுங்கள். முதலில் நாம் எம்மை நாமே சுயவிமர்சனம் செய்யவேண்டிய நிலையில் தான் இருக்கிறோம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. மற்றவனுடைய கருத்தை செவிமடுக்கும் நிலையில் இல்லாத நாங்கள் எப்படி பிரச்சனைகளுக்குரிய தீர்வை தேடப்போகிறோம்?

இதுவரைதமிழர்களுக்கு நடந்த கொடுமையை உணர்ந்து போராளியானதாக ஏதாவது உண்டா ஜீவா?

இல்லை விசுகு அண்ணா. என் அறிவுக்கு தெரிந்து நாங்கள் இடம்பெயர்ந்தது கூட இல்லை. இந்தியன் ஆமி வந்த போது ஒரு தடவை வரணிக்கு இடம்பெயர்ந்து போனதாக அம்மா சொன்னா. எனக்கு தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் தங்களுக்கு ஒன்று சொல்லவேண்டும் ஜீவா

இது வெளிவந்ததும் அதை பிரின்ற் எடுத்தேன்.

அதை புத்தகமாக்குவதுடன் அதை எனது நண்பர்களுக்கும் கொடுக்கும் எண்ணம் எனக்கு.

வாசிக்கலாம் என்று தொடங்கியபோது இது வேறு எதற்காகவோ எழுதியது போலிருந்தது எனக்கு...............???

அதனால் நிறுத்திவிட்டேன்.

ஒரு பிரதி கையிலுண்டு.

முழுமையாக வாசிக்கவில்லை இன்னும்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, உங்களால் இதே வினாவை மாண்டுபோன முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளிடம் கேட்க முடியுமா? அதாவது அவர்கள் தமிழர்களிற்கு நடந்த கொடுமையை உணர்ந்துதான் போராளிகள் ஆகினார்களா என்று?

இந்த முப்பதாயிரம் போராளிகளும்

பொழுது போக்குக்காகவோ

பக்கத்தில் வகுப்பு நடந்ததால் .

அல்லது

மோட்டார் சைக்கிள் ஓடலாம்

உடுப்பு போடலாம்

ஆயுதம் எடுத்து சுடலாம்

காதலிக்கலாம்

அப்பா அம்மாவுக்கு கட்டுப்படாமல் திரியலாம்.............................................................

என்று இயக்கத்துக்கு வந்தார்களா கலைஞன் மற்றும் ஜீவா?

இதில் நமக்குள் சிக்கல்.

இதற்கான பதிலிலேயே எல்லாம் தங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் படி இந்தப் 17 வயதுப் பெண் தானாக விரும்பி சுதந்திரமாக இருக்க விரும்பித் தான் இயக்கத்தில் சேர்ந்தார் அதாவது தான் நினைத்ததை செய்வதற்கு[மூளைச்சலவை செய்யப்பட்டு அல்ல] ஆனால் இயக்கம் என்டால் கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும்..இயக்கத்திற்குப் போன பிறகு இயக்கத்தை குற்றம் சொல்லுவது தப்பு...அவருக்கு பிடிக்கா விட்டால் முதலிலே விலகி இருக்க வேண்டும் ஆனால் அவர் விலகவில்லை காரணம் அவருக்கு இயக்கத்தில் தொடர்ந்து இருக்க பிடித்து இருந்தது.

இன்று ஜீவா எழுதிய முதலாவது பதிவில் சொன்ன மாதிரி கதையை எழுதியவர் கதையை கூட்டி எழுதி இருக்கலாம் ஆனால் இப்படியான சம்பவங்கள் அங்கு நடந்து கொண்டு தான் இருக்கிறது.அதை இல்லை என உங்களால் மறுக்க முடியுமா?....பாதிக்கப்பட்ட அந்த பெண்ணோடு சேர்த்து இன்னும் எத்தனையோ முன்னால் போராளிகள் கஸ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்...எமக்காக போராடிய அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க உதவலாமே...நாங்கள் எப்படியாவது அவர்களை பாதுகாப்போம் என்ட நம்பிக்கையில் தானே தலைவர் விட்டு விட்டுப் போனவர்.அவருக்காகவாவது அந்தப் பாதிக்கப்பட்ட போராளிகளுக்கும்,மக்களுக்கும் உதவுங்கள்.

விசுகு அண்ணா இந்த 30000 போராளிகளில் 10000 க்கும் குறைந்தவர்கள் தான் விரும்பி எமக்காக,எமக்கு நாடு வேண்டும் என்ட காரணத்தால் போராடப் போனவர்கள் மற்றவர்கள் பல் வேறு காரணங்களுக்காக இணைந்தவர்கள்

ரதி, அவருக்கு இயக்கத்தில் இணைவதற்கான விருப்பம் மூளைச்சலவை செய்யப்பட்ட பின்னர்தானே வந்தது? அவர் இயக்கத்தைவிட்டு விலக முனைந்தார், ஆனால் பயம் காரணமாக (மூளைச்சலவை) அது முடியவில்லை. கதையை முழுமையாக பொறுமையாக படியுங்கள். இயக்கத்தில் இணைந்து கால்கள் துண்டாடப்பட்ட பின்னர் வீட்டிலும் வரவேற்பு இல்லாத நிலையில் அவர் எப்படி இயக்கத்தை விட்டு விலக முடிடியும்? இயக்கத்தில் இணைந்தால்தானே அதற்குள் உள்ள இம்சைகள் விளங்கும். அது புரியாமல்தானே அன்பினி தன்னையும் இணைத்துக்கொண்டார்?

இயக்கத்தில் இருந்து பல்லாயிரம் பேர் விலகினார்கள். இதற்கு என்ன கூறப்போகின்றீர்கள்? விலகியவர்கள் அனைவரும் தமிழருக்கு நடக்கும் கொடூரங்களை உணர்ந்து அறியாமலா விலகினார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ரதி

எம்மால் முடிந்த அளவுக்கும்மேலாக நாம் அவர்களுக்கு செய்து கொண்டுதான் இருக்கின்றோம். அதேநேரம் அவர்களுக்கான நிரந்தர அமைதியான வாழ்வுக்கான எமது பங்களிப்பு நேரம் அதிகமானது.

நன்றி தங்களது பணிவான எழுத்துக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணாவோ,மருதங்கேணி அண்ணாவோ யாராக இருந்தாலும் தயவு செய்து இதை அன்பினி என்ற தனிமனுசியின் வாழ்க்கை என எண்ணாதீர்கள்?

போருக்குப்பின்னரான ஒட்டுமொத்த முன்னாள் போராளிகளின் வாழ்க்கை இது?

கதை சொன்ன விதத்தில் வேண்டும் என்றால் தவறுகள்,திணிப்புக்கள் இருந்திருக்கலாம். ஆனால் இப்படியான ஒரு விடையம் நடக்காதது போல எழுதுவது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. இது யாராலும் மறக்கவும்,மறைக்கவும் முடியாது எல்லாரும் ஆளாளுக்கு விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ பேச்சாளர்கள் என்ற நினைப்பில் செயற்படுவது தான் இன்னும் எம்மால் ஒற்றுமையாக முடியாமல் உள்ளதற்கான காரணங்களில் முக்கியமான காரணமாக உள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கம் என்பது தனிநபர் சொத்தல்ல ஆளாளுக்கு உரிமை கொண்டாட உங்களுக்கு இருக்கும் அதே உரிமை தான் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கின்றது.

அன்பினி போன்ற ஆயிரம் உறவுகளின் வாழ்க்கையைக் கூட‌ நீங்கள் புத்தியால்,அறிவுக்கண்ணால் பார்க்கிறீர்கள் நாங்கள் மனச்சாட்சியால்,உணர்வுகளால் அவற்றை தரிசிக்கிறோம். அறிவால் பேசி வெல்வதற்கு இது பட்டிமன்றத்தலைப்பு அல்ல,அவர்களுக்கு என்ன செய்யலாம் என்பதை உங்கள் மனச்சாட்சியைத்தொட்டு யோசியுங்கள்.

உதவி செய்வது என்பது அவர்களை மற்றவர்களில் தங்கி இருக்க வைப்பதற்கு அல்ல மாறாக நடக்க முடியாதவனுக்கு தடியை குடுத்து சொந்தமாக நடைபழக்குவதற்கே. ஒரு நேர உணவுக்கு வழி இல்லாதவனிடம் போய் உரிமை பற்றி வகுப்பெடுக்க உங்களால் முடியுமாக இருக்கலாம் ஆனால் அப்படி ஒரு அருகதை எனக்கு,என்னை போன்றவர்களிடம் இல்லை.

இதற்கு மேல் அவரவர் தனிப்பட்ட விடையம்.

என்னுடைய கருத்துக்களின் நோக்கம் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அவர்களின் பின்புலக் புனைகதைகளுக்கு அப்பால் உதவிகள் போய் சேர்வதோடு அவர்கள் நிரந்தரமாக மீட்சிப்படுத்தப்பட்டு சுபீட்சமான வாழ்வை வாழ வேண்டும் என்பதுதான். ஆளாளுக்கு எனி காலிழந்தற்கு கையிழந்தற்கு ஒரு கதை சொல்லி ஒட்டு மொத்த போராட்டத்தையும் அதற்காக விலை கொடுத்த போராளிகளையும் மக்களையும் கேவலப்படுத்தி அதில் வரும் வருமானத்தில் வாழ நினைப்பதிலும்.. தன் மானத்தோடு இனமானத்தோடு வாழ விளைதலே மேல்.

போராட்டத்தையும் இதர போராட்ட கால சம்பவங்களையும் தங்களுக்கு ஏற்ற மாதிரி விபரித்து அதனை போராட்டத்தையும் அதன் இட்டு நிகழ்ந்த தியாகங்களையும் கொச்சைப்படுத்த அந்த தியாகங்களில் பங்கெடுத்த மக்கள் என்ற வகையில் நாமும் பொறுத்துக் கொள்ள முடியாது. எம்மைப் பொறுத்தவரை நாமும் போராட்ட காலத்தை கழித்துத்தான் இருக்கிறோம். நாம் சந்திக்காததை இன்னொருவர் சந்தித்ததாகச் சொல்லும் போது அதை உடனடியாக நம்ப வேண்டிய அவசியம் கிடையாது.

என்னைப் பொறுத்தவரை இந்தப் பெண்ணின் மீது இரக்கத்திற்குப் பதில்.. எத்தனையோ உயிர் தியாகிகள் உயிர் கொடுத்து வளர்த்த அத்தனையையும் தனது சுயதேவைக்காக... சுய இழப்புக்காக இவர் கொச்சைப்படுத்த நினைப்பது இவர் மீது வெறுப்பையும் இவருக்கு உதவி செய்ய வேண்டுமா என்ற எண்ணத்தையுமே ஏற்படுத்துகிறது.

இரண்டு கால்களையும் இழந்து இரஞ்சிக் கொண்டிருக்கும்.. ஒருவர் மீது இரக்கமும்.. அன்பும்.. பரிவும் ஏற்படுவது வழமை. அதைக் கூட இந்தக் கதை எழுதிய பாணி இல்லாமல் செய்கிறது. இது பட்டிமன்றக் கருத்தல்ல.. எம் மன உணர்வில் உந்தப்பட்ட கருத்து..!

தயவுசெய்து... இப்படியான போராட்டத்தையும் போராட்ட கால தியாகிகளையும்.. அவர்களின் அர்ப்பணிப்புக்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக உண்மையை விளம்புகிறோம்.. உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறோம் என்ற போர்வையில்.. கதை எழுதுவதை நிறுத்திவிட்டு.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானவற்றை கேட்டுப் பெற்றுக் கொடுங்கோ. அதுவே அவர்களுக்கு மற்றவர்கள் உதவி செய்ய அதிகம் தூண்டும். இந்தக் கதையை மட்டுமல்ல.. இதற்கு முன்னர் எழுதப்பட்ட சில கதைகளாலும் கூடத்தான் நேசக்கரத்தினூடான எனது பங்களிப்பை குறைத்துக் கொண்டேன். அது நேசக்கரத்தின் மீதான கடுப்பில் அல்ல. அது மக்களை உதவி கேட்டு அணுகும் முறையில் கையாளும் தவறினால் ஆகும்..!

நீங்கள் (சம்பந்தப்படவர்கள்) இதனை திருத்தாவிட்டால்.. பாதிக்கப்படப் போவது.. அன்பினி போன்றவர்களே. கதை எழுதுபவர்களோ.. எழுதியதாகச் சொல்பவர்களோ கிடையாது.

Edited by nedukkalapoovan

பலரதுபின்னோட்டங்கள் என்ன சொல்லுகின்றன.இவர்கள் தாங்களோ தங்களது பிள்ளைகளகளோ பாதிகப்படாதவரை இப்படியே துதிபாடிக்கொண்டுதான் இருப்பார்கள்.கடைசி 10 ஆண்டுகளில் போராளில் பற்றாக்குறை வந்து பலவந்தமாக சிறுவர்களை பிடிக்கதொடங்கியது அனைவருக்கும் தெரிந்த உண்மை.இதில் எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்பதயாராக இருந்தார்கள்.கடைசிக்காலங்களில் நான் அறிய புலம்பெயர்ந்த எவரும் போய் போராட்டத்தில் இணையவில்லை.

அங்கு என்ன நடக்கின்றது என்னவென்று இவர்களுக்கு வெட்ட வெளிச்சம்.மற்றது வெளிவேசம் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அமைப்பானது சமூகத்தில் பலவிதப்பட்ட பல இயல்புகளைக் கொண்ட அல்லது வித்தியாசமான எதிரெதிரான சிந்தனைகளைக்கொண்ட சகல மக்களையும் இணைத்துக் கொள்வதில் தான் அதன் வளர்ச்சி தங்கியுள்ளது .

சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் தன்மை மட்டும் அதன் வளர்ச்சிக்குஉதவாது.

மற்றவர்களின் மனம் புண்படாமல் அவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி

அவர்களின் உதவியுடன் ஒரு அமைப்புச் செயல்படுமானால் அந்த அமைப்பிற்கு என்றுமே வளர்ச்சியே.

அதனால் பயனடையும் மக்களுக்கும் மகிழ்ச்சியே .

தனிப்பட்ட ஒருவர் மீதான அல்லது ஒரு அமைப்பின் மீதான விமர்சனத்திற்காக ஒரு இனத்தின்

விடுதலைக்காகப் போராடியவர்களைக் கொச்சைப் படுத்துவது ஒரு அமைப்பிற்கும் அதன் வளர்ச்சிக்கும்

அதன் எதிர்காலத்திற்கும் உகந்ததல்ல.

ஒரு அமைப்பின் விடாமுயற்சியைக் கண்டு வியந்து அதன் அமைப்பில் என்னையும் இணைத்துக்கொண்டு

(அங்கத்தவராக) ஒரு சில தடவைகள் நிதி உதவியும் செய்தேன்.

ஆனால் அவர்கள் நிதி சேகரிப்பதற்காக கையாளும் நடைமுறைகளைக் கண்டுவியந்து ஒதுங்கும்படியாகிவிட்டது.

அதேபோல இங்கு பாதிக்கப்பட்ட பெண்ணை நினைத்து மனம் வருந்தினாலும் அவரின் நிலையை

வெளிக்கொண்டு வந்தவர் மற்றவர்களின் மனதைப் புண்படும் வகையில் சில தனிப்பட்ட கருத்துக்களையும்

உட்புகுத்தியிருக்கின்ராரோ எனத் தோன்றுகின்றது.

அந்தப்பெண்ணின் நிலை யாருக்கும் மீண்டும் வரக்கூடாது

அதற்காக தமிழினம் ஒன்றுபட வேண்டும். குறுகிய சிந்தனைகளைக் கைவிட்டு நீண்டகால

சிந்தனைகளுக்கு இடமளித்து வரலாறுகளை மீட்டு இனி வரும் காலங்களில்

இப்படியான அவலங்களைத் தவிர்க்கலாம்.

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

பலரதுபின்னோட்டங்கள் என்ன சொல்லுகின்றன.இவர்கள் தாங்களோ தங்களது பிள்ளைகளகளோ பாதிகப்படாதவரை இப்படியே துதிபாடிக்கொண்டுதான் இருப்பார்கள்.கடைசி 10 ஆண்டுகளில் போராளில் பற்றாக்குறை வந்து பலவந்தமாக சிறுவர்களை பிடிக்கதொடங்கியது அனைவருக்கும் தெரிந்த உண்மை.இதில் எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்பதயாராக இருந்தார்கள்.கடைசிக்காலங்களில் நான் அறிய புலம்பெயர்ந்த எவரும் போய் போராட்டத்தில் இணையவில்லை.

அங்கு என்ன நடக்கின்றது என்னவென்று இவர்களுக்கு வெட்ட வெளிச்சம்.மற்றது வெளிவேசம் மட்டுமே.

போராட்டத்தை இனங்காட்டி கனடாவில் பல தசாப்தங்களாக பதுங்கி வாழ்க்கை வாழும் நீங்கள் இவற்றை எழுத என்ன தகுதி இருக்கிறது. உண்மைகளை அறியாமல் சகட்டு மேனிக்கு விடுதலைப் புலிகள் மீது சேறு வாரி வீசுவதற்கு என்றே நீங்கள் அதிகம் யாழுக்கு வருகிறீர்கள். இதனை ஒரு கருமமாகச் செய்யும் நீங்கள்.. முதலில் உங்கள் மனச்சாட்சியை தட்டிக் கேளுங்கள்.. எனக்கு இதனை எழுத என்ன தெரியும்.. என்ன தகுதி இருக்கிறது என்று..! வெங்காயத்தனமாக இருக்காதீர்கள்..! வெங்காயத்தை உரிக்க உரிக்க எதுவும் இல்லாதது போல்.. உங்கள் அரசியல் சார்ந்த எழுத்துக்களிலும் எதுவும் அர்த்தமுள்ளதாக உண்மையை சாட்சியங்களோடு பகிர்வதாக காண முடியவில்லை.

1987 - 90 களில் உங்கள் புளொட் உட்பட அமைப்புக்கள் இந்திய இராணுவத்தோடு சேர்ந்து சொந்த மக்களை சித்திரவதை செய்ய.. பிள்ளை பிடிச்சது போல விடுதலைப் புலிகள் பிள்ளை பிடிக்கவில்லை. அவர்கள் மக்களிடம் போராட்ட போர்க்கள நிலவரத்தைச் சொல்லி வீட்டுக்கொருவர் போராட வர வேண்டும் என்ற அழைப்பை பகிரங்கமாகத்தான் முன் வைத்தனர்.

இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய பிரதமர் வின்சன் சேர்ச்சில்.. ஆண்கள் போர்க்களத்துக்கு வரவில்லை என்றால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று அறிவித்துத்தான் நேசப்படைகளுக்கு ஆள் திரட்டினார். அதைக் கூட விடுதலைப் புலிகள் தேசத்திற்காக செய்யவில்லை. போராட்ட காலத்தில் சில சம்பவங்கள்.. மக்களின் அதி உச்ச விருப்புக்கு இணங்க நடக்க முடியாதவை. நெருக்கடியான சூழல்களில் அரசுகள்.. நிர்வாகங்கள் மக்களோடு கொஞ்சம் கண்டிப்பாக நடக்க வேண்டியது அவசியமாகிறது. அவை தவிர்க்கப் பட முடியாதவை. ஆனால் விடுதலைப் புலிகள் அதனைக் கூட இயன்ற வரை தவிர்க்க முற்பட்டவர்கள் என்பதை நாங்கள் 1986 இல் இருந்து 1998 வரை பல்வேறு காலக்கட்டங்களில் அவதானித்திருக்கிறோம். கூட இருந்து அனுபவித்திருக்கிறோம்..! எங்கள் எழுத்துக்கள் மூளைச் சலவைகளின் விளைவல்ல. உண்மைகளை.. ஆராய்ந்து அறிதலின் விளைவு என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். காரணம்.. உங்கள் மூளை எங்கனும்.. புலி எதிர்ப்பு என்ற ஒரு பாசி நோயாகப் படர்ந்து கிடக்கிறது. அதை அகற்றாமல் உங்களுக்கு உண்மைகள்.. கண்ணுக்குத் தெரியப் போவதுமில்லை. தெரிந்தாலும் நீங்கள் அதனை உணர்ந்தாலும்.. உணர்ந்ததாகக் காட்டிக் கொள்ளப் போவதும் இல்லை.

அந்த வகையில் உங்கள் போன்ற அர்த்தமற்றவர்களின் இருப்பே இந்த உலகிற்கு பாரமானதும் கூட...! அதன் விளைவுகளே இந்த அன்பினிகளின் பெருக்கம்..!

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, அவருக்கு இயக்கத்தில் இணைவதற்கான விருப்பம் மூளைச்சலவை செய்யப்பட்ட பின்னர்தானே வந்தது? அவர் இயக்கத்தைவிட்டு விலக முனைந்தார், ஆனால் பயம் காரணமாக (மூளைச்சலவை) அது முடியவில்லை. கதையை முழுமையாக பொறுமையாக படியுங்கள். இயக்கத்தில் இணைந்து கால்கள் துண்டாடப்பட்ட பின்னர் வீட்டிலும் வரவேற்பு இல்லாத நிலையில் அவர் எப்படி இயக்கத்தை விட்டு விலக முடிடியும்? இயக்கத்தில் இணைந்தால்தானே அதற்குள் உள்ள இம்சைகள் விளங்கும். அது புரியாமல்தானே அன்பினி தன்னையும் இணைத்துக்கொண்டார்?

இயக்கத்தில் இருந்து பல்லாயிரம் பேர் விலகினார்கள். இதற்கு என்ன கூறப்போகின்றீர்கள்? விலகியவர்கள் அனைவரும் தமிழருக்கு நடக்கும் கொடூரங்களை உணர்ந்து அறியாமலா விலகினார்கள்?

கலைஞன் கதையை ஒரு தரம் முழுமையாக வாசித்தேன்...எதை அடிப்படையாக வைத்து அன்பினி இயக்கத்திற்குப் போவதற்கான விருப்பம் மூளைச் சலவை செய்யப்பட்டு என சொல்கிறீர்களோ தெரியவில்லை?...அன்பினியின் வீட்டுக்குப் பக்கத்தில் இயக்கம் வருகிறது.அவர்களது செயற்பாடுகளைப் பார்த்து அதாவது அந்த இயக்கப் போராளிப் பெண்கள் தலைமுடியை குட்டையாக வெட்டி இருப்பார்கள் ஆனால் இவர‌து வீட்டில் இர‌ட்டை பின்னல் போட‌ வேண்டும்,மோட்டார் சைக்கிள் ஓடும் பெண் போராளிகளைப் பார்த்து அதைத் தவிர‌ வீட்டுக்கு வரும் தளபதி மேல் அந்த வயதில் வரும் காதல்...அந்த தளபதி அன்பினியின் பெற்றோடு கதைத்து சில சலுகைகளை பெற்றுக் கொடுக்கிறார் மேலும் அத் தளபதி அன்பினியை காதலித்ததாக தெரியவில்லை...இதை தான் மூளைச்சலவை என்று நீங்கள் நினைக்கிறீர்களோ தெரியவில்லை.

பத்திரிகை,வானொலி பார்த்து,கேட்டு இயக்கத்திற்கு போன அன்பினி இயக்கத்திற்கு போனவர்கள் வீர‌ மர‌ணம் அடைவார்கள்,காயம் அடைவார்கள்,ஊனப்படுவார்கள் என்பதும் தெரிந்திருக்கவே வேண்டும்...இயக்கத்திற்கு போன உட‌னையே பயிற்சி கொடுக்காமல் ஒருவரையும் வைத்திருக்க மாட்டார்கள் அவர்கள் அர‌சியல் துறை போராளியாக இருந்தால் சரி புலனாய்வு போராளியாக இருந்தாலும் சரி அதில் அவர் விதி விலக்கு அல்ல...பிடிக்காமல் சிலர் பயிற்சியில் இருந்து வெளியேறி இருப்பது போல இவரும் வெளியேறி இருக்கலாம்...இவர் அப்படி வெளியேறவில்லை ஏதோ ஒரு கார‌ணத்திற்காக இயக்கத்தில் இருந்து போட்டு அதை கார‌ணம் காட்டி இயக்கத்தை குறை கூறுவது தப்பு.

தற்போது அந்தப் பெண் பாதிக்கப்பட்டு உள்ளார் அதில் மறு கருத்து இல்லை அவரைப் போல சிலர் பாதிக்கப்பட்டு உள்ளார் அதிலும் மறு கருத்து இல்லை...2 லட்சம் ரூபா அவருக்கு புலம் பெயர் நாட்டில் இருந்து அனுப்பி உள்ளார்கள்.இங்குள்ளவர்கள் உதவி செய்யாமலும் இல்லை ஆனால் அங்குள்ளவர்கள் சிலரும் ஏமாற்றுக்கார‌ராக உள்ளனர்...மருதங்கேணி எழுதின மாதிரி சாந்தி அக்கா தன்னை முன்னிலை படுத்தவே இந்தக் கதையை எழுதியுள்ளார் என்பதே என் கருத்து

ரதி உங்களுக்கு மூளைச்சலவை என்றால் என்ன என்று தெரியவில்லை போல. கீழ்வரும் பத்தியில் இதன் ஓர் வடிவம் பற்றி கூறப்பட்டு உள்ளது. மூளைச்சலவை என்பது பலவித கோணங்களில் பல்வேறு பரிமாணங்களை கொண்டது. நீங்கள் ஓர் சமூகவியலாளராக இருப்பின் இதை மேலும் தெளிவாக விளங்கிக் கொள்ளக்கூடியதாக அமையும்:

44647537.png

பத்திரிகை,வானொலி பார்த்து,கேட்டு இயக்கத்திற்கு போன அன்பினி இயக்கத்திற்கு போனவர்கள் வீர‌ மர‌ணம் அடைவார்கள்,காயம் அடைவார்கள்,ஊனப்படுவார்கள் என்பதும் தெரிந்திருக்கவே வேண்டும்...இயக்கத்திற்கு போன உட‌னையே பயிற்சி கொடுக்காமல் ஒருவரையும் வைத்திருக்க மாட்டார்கள் அவர்கள் அர‌சியல் துறை போராளியாக இருந்தால் சரி புலனாய்வு போராளியாக இருந்தாலும் சரி அதில் அவர் விதி விலக்கு அல்ல...பிடிக்காமல் சிலர் பயிற்சியில் இருந்து வெளியேறி இருப்பது போல இவரும் வெளியேறி இருக்கலாம்...இவர் அப்படி வெளியேறவில்லை ஏதோ ஒரு கார‌ணத்திற்காக இயக்கத்தில் இருந்து போட்டு அதை கார‌ணம் காட்டி இயக்கத்தை குறை கூறுவது தப்பு.

தற்போது அந்தப் பெண் பாதிக்கப்பட்டு உள்ளார் அதில் மறு கருத்து இல்லை அவரைப் போல சிலர் பாதிக்கப்பட்டு உள்ளார் அதிலும் மறு கருத்து இல்லை...2 லட்சம் ரூபா அவருக்கு புலம் பெயர் நாட்டில் இருந்து அனுப்பி உள்ளார்கள்.இங்குள்ளவர்கள் உதவி செய்யாமலும் இல்லை ஆனால் அங்குள்ளவர்கள் சிலரும் ஏமாற்றுக்கார‌ராக உள்ளனர்...மருதங்கேணி எழுதின மாதிரி சாந்தி அக்கா தன்னை முன்னிலை படுத்தவே இந்தக் கதையை எழுதியுள்ளார் என்பதே என் கருத்து

நல்லாய்த்தான் உள்ளது. இயக்கத்தில் சேர்ந்தால் ஏதோ யாரோ உங்களுக்கு (தமிழருக்கு?) அடிமைபோல் ஏவல் வேலை செய்யவேண்டும் எனும் கணக்கில் எழுதி இருக்கின்றீர்கள். நல்லகாலம் இப்படியோர் பதிவை சாந்தி அவர்கள் இங்கு இட்டது. நம்மவர்களின் உண்மை முகங்களை எதிர்கால அப்பாவித்தமிழருக்கு (போராளிகள்?) காண்பிப்பதற்கு இவை நிச்சயம் உதவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.