Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடியவனின் கைது ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது – எமில்டா சுகுமார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெடியவனின் கைது ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது – எமில்டா சுகுமார்

24 மே 2011

தமிழீழ விடுதலைப் புலிகளின் நோர்வே தலைவர் நெடியவன் கைது செய்யப்பட்டமை மன ஆறுதலை ஏற்படுத்தியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

மிக அண்மைக்காலம் வரையில் நெடியவன் தமக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின் அஞ்சல்களின் மூலம் நெடியவன் தமக்கு அச்சுறுத்தல் விடுத்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காது பதவியை இராஜினாமா செய்யுமாறு நெடியவன் தம்மிடம் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்மையும் தமது குடும்பத்தாரையும் படுகொலை செய்யப் போவதாக நெடியவன் மிரட்டி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தாம் மிகுந்த மன உலைச்சலினால் பாதிக்கப்பட்டிருந்ததாக எமில்டா சுகுமார் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் முல்லைத்தீவை கட்டுப்படுத்திய காலத்தில் எமில்டா குமார் அந்தப் பிரதேசத்தில் எட்டு ஆண்டுகள் அரசாங்க அதிபராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக ஆற்றி வரும் சேவை தொடர்பில் மக்களும் அரசாங்கமும் கொண்டுள்ள நம்பிக்கை தமக்கு உந்து சக்தியாக அமைந்துள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

source:GTN.

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒருவரின் கருத்து இது. இது சிறிலங்கா அரசு எழுதிக் குடுத்த கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

யாரென்றே அறியப்படாத நெடியவனை.. ஊடகங்கள் வாயிலாக விடுதலைப்புலிகளின் தலைவராகக் காட்டி.. இப்போ அவரை விசாரிப்பதை எல்லாம் விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு தோல்வியாக சித்தரிக்கும் வேலையை சிறீலங்காவும் சில இணைத்தலைமை நாடுகளும் சர்வதேச நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. இது சிறீலங்கா மீதான போர்க் குற்ற விசாரணையை இட்டு காலம் கழிக்க வைக்கும் நடவடிக்கை. சிறீலங்காவை அதில் இருந்து தப்பிக்க வைக்கும் நடவடிக்கையாகும்.

இவை எல்லாம் சிறீலங்கா சிங்கள அரசு மீது மேற்கொள்ளப்பட்டிருக்கும் போர்க்குற்ற குற்றச்சாட்டை மக்கள் மறக்கச் செய்ய நடத்தப்படும் பிரச்சாரங்கள். இவற்றை இட்டு மக்கள் குழப்பமடையாமல்.. குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்க சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்..!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒருவரின் கருத்து இது. இது சிறிலங்கா அரசு எழுதிக் குடுத்த கருத்து.

உண்மையாகவா? அவரின்கருத்தில்லைய??

  • கருத்துக்கள உறவுகள்

நெடியவன் கைது செய்யப்படவில்லை.விசாரிக்கப்பட்டார் என்று செய்திகள் கூறுகின்றன.ஆகவே இந்தச் செய்திகள் மக்களைக்குழப்புவதற்காகச் சொல்லப்பட்டவை.நெடியவனை தலைவராக இங்கே யாரும் கொண்டாடவில்லை.அவரை சிறிலங்கா அரசுதான் பெரிய ஆளாகக் காட்டி புலம் பெயர் தமிழர்களின் முனைப்புக்களை மழுங்கடிக்க முயற்சிப்பதுடன்.புலிகள் வெளிநாட்டில் இன்னும் இரகசியமாக இயங்குகிறார்கள்.என்று வெளிநாடுகளுக்குக் காட்ட முனைகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடியவன் கைது செய்யப்படவில்லை.விசாரிக்கப்பட்டார் என்று செய்திகள் கூறுகின்றன.ஆகவே இந்தச் செய்திகள் மக்களைக்குழப்புவதற்காகச் சொல்லப்பட்டவை.நெடியவனை தலைவராக இங்கே யாரும் கொண்டாடவில்லை.அவரை சிறிலங்கா அரசுதான் பெரிய ஆளாகக் காட்டி புலம் பெயர் தமிழர்களின் முனைப்புக்களை மழுங்கடிக்க முயற்சிப்பதுடன்.புலிகள் வெளிநாட்டில் இன்னும் இரகசியமாக இயங்குகிறார்கள்.என்று வெளிநாடுகளுக்குக் காட்ட முனைகிறது.

உங்கள் கருத்துடன் நான் ஒத்து போகின்றேன் தங்கள் கருத்து தற்கால சூழலுக்கு ஏற்புடையது.

Edited by tamil arasu

  • கருத்துக்கள உறவுகள்

பொய்கள் வரிசையில் வலம் வருகையில்

மெய்கள் ஒரு பக்கம் ஒதுக்கிக் கொள்கின்றன!!!

  • கருத்துக்கள உறவுகள்

மிக அண்மைக்காலம் வரையில் நெடியவன் தமக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின் அஞ்சல்களின் மூலம் நெடியவன் தமக்கு அச்சுறுத்தல் விடுத்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காது பதவியை இராஜினாமா செய்யுமாறு நெடியவன் தம்மிடம் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தம்மையும் தமது குடும்பத்தாரையும் படுகொலை செய்யப் போவதாக நெடியவன் மிரட்டி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தாம் மிகுந்த மன உலைச்சலினால் பாதிக்கப்பட்டிருந்ததாக எமில்டா சுகுமார் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் முல்லைத்தீவை கட்டுப்படுத்திய காலத்தில் எமில்டா குமார் அந்தப் பிரதேசத்தில் எட்டு ஆண்டுகள் அரசாங்க அதிபராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாங்குற பத்து அஞ்சு பிச்சைக்கு இதல்லாம் தேவைதானா?.....

ஜப்பான்ல ஜாக்கிசான் மிரட்டினாரு.

அமெரிக்கவுல மைக்கல் ஜாக்சன் மிரட்டினாரு..

கலர்கலரா ரீலா வுடுற..

ரீல் அந்து போச்சு...

21.gif21.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

நெடியவனின் கைது ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது – எமில்டா சுகுமார்

24 மே 2011

இதன் காரணமாக தாம் மிகுந்த மன உலைச்சலினால் பாதிக்கப்பட்டிருந்ததாக எமில்டா சுகுமார் குறிப்பிட்டுள்ளார்.

source:GTN.

மன உளைச்சலால் பாதிக்க பட்டிருந்த நேரங்களில் அரச படைகளே எனக்கு மிகுந்த ஆறுதல் அழித்து வந்தனர் என்று அவர் கூறியது செய்திகளில் இருட்டடிப்பு செய்யவட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் நெடியவன் பற்றி எனக்கு ஒரு உடன்பாட்டுக்கு வரமுடியாதிருந்தது.

ஆனால் இந்த அம்மாவுக்கு அவரது கைது இனிக்கிறது என்றால் நெடியவன் தமிழர்களுக்கு வேண்டப்பட்டவராகத்தான் இருக்கவேண்டும்.

சொல்வதற்கு ஒன்றும் கிடைக்கவில்லையே என்று சொன்னால் ஏனப்பா குதிக்கிறீயள். :D:D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவா? அவரின்கருத்தில்லைய??

சிறிலங்காவில் நான் இருந்தாலும் ஆமி/அரசு வெருட்டுகிற வெருட்டில உயிரைக் காப்பாற்ற இப்படித்தான் அறிக்கை விடுவேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் நான் இருந்தாலும் ஆமி/அரசு வெருட்டுகிற வெருட்டில உயிரைக் காப்பாற்ற இப்படித்தான் அறிக்கை விடுவேன்.

அப்ப உந்த மாவீரர் பெற்ரோர்கள் எப்படியிருகின்றார்கள், அவர்களை ஆமிக்கு தெரியாதோ?அவர்கை கொடுமை சித்திரவதை ஆமிசெய்வதில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உந்த மாவீரர் பெற்ரோர்கள் எப்படியிருகின்றார்கள், அவர்களை ஆமிக்கு தெரியாதோ?அவர்கை கொடுமை சித்திரவதை ஆமிசெய்வதில்லையா?

இதில் நான் சொல்ல வந்த கருத்து -அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவர்கள் தைரியமாகக் கருத்துச் சொல்ல முடியாது. சொன்னால் உயிரோடு இருக்க முடியாது. உ+ம் - தராகி சிவராம், ஜோசப் பராஜசிங்கம், லசந்த விக்கிரமசிங்க, ரவிராஜ்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உந்த மாவீரர் பெற்ரோர்கள் எப்படியிருகின்றார்கள், அவர்களை ஆமிக்கு தெரியாதோ?அவர்கை கொடுமை சித்திரவதை ஆமிசெய்வதில்லையா?

பெரும்பாலோர் இப்பொழுது அமைதி காட்கிறார்கள். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தின் மகன் இராணுவத்தின் சிறையில் இருக்கிறார். இதனால் தான் கனகரத்தினம் அவர்கள் தற்பொழுது அரசுக்காக குரல் கொடுக்கிறார்( நிர்பந்தப்படுத்தப் பட்டிருக்கிறார்).

பெரும்பாலோர் இப்பொழுது அமைதி காட்கிறார்கள். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தின் மகன் இராணுவத்தின் சிறையில் இருக்கிறார். இதனால் தான் கனகரத்தினம் அவர்கள் தற்பொழுது அரசுக்காக குரல் கொடுக்கிறார்( நிர்பந்தப்படுத்தப் பட்டிருக்கிறார்).

நிச்சயம் எல்லாம் அரசின் நிர்ப்பந்தம். இல்லை என்டாலும் இருக்கு என்டு சொல்லனும். அதுதான் அங்கு உள்ள நிலை.

அப்படி இல்லை என்டா எப்படி சுகுமாருக்கு பதவி கொடுத்தவை?

வன்னியில் பல வருடம் வேலை செய்த ஒருத்தருக்கு இப்படி ஒரு பதவி இலகுவில் கிடையாது.

அப்ப அரசின் சொல்வதை ஏற்பேன் அல்லது அதற்கு மேலும் சொல்வேன் என்ற படியால் தான் பதவியில இருக்கிறா.

பிழைத்து போகட்டும்.

தமிழரின் காலம் எல்லா எட்டப்பரும் தான் இப்போ வழிகாட்டு கிறார்கள்.

டக்கிலஸ், கருனா, பிள்ளையான், சித்தார்த்தன், ஆனந்த சங்கரி, இப்படி பெரும் பட்டியல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.