Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமிர்தலிங்கத்திற்கு நிகழ்வு நடத்தியது தமிழரசுக்கட்சி! பிரதம விருந்தினராக வரதராஜப்பெருமாள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கத்திற்கு நிகழ்வு நடத்தியது தமிழரசுக்கட்சி! பிரதம விருந்தினராக ஒட்டுக்குழு வரதராஜப்பெருமாள்!

Wednesday, July 13, 2011, 21:30சிறீலங்கா

கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட துரோகி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்திற்கான சிரார்த்த தினத்தினை தமிழரசுக்கட்சி தனது அலுவலகத்தில் இன்று அனுஷ்டித்தது. நிகழ்விற்கு ஒட்டுக்குழு ஈபிஆர்எல்எப் நாபா அணியின் செயலாளர் நாயகம் ஒட்டுக்குழு வரதராஜப்பெருமாள் முக்கிய உறுப்பினராக அழைக்கப்பட்டிருக்கின்றார்.

யாழ்.மார்டின் வீதியில் இன்று நடைபெற்ற இந் நிகழ்விற்கு தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் குலநாயகம் தலைமை தாங்க கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா, கட்சி முக்கியஸ்தர்கள் சி.வி.கே.சிவஞானம், சிற்றம்பலம் உட்பட்டவர்கள் பங்குகொண்டிருந்ததாக தெரிவிக்கின்றனர் .

தமிழ்த் தேசியத்திற்கு எதிராகச் செயற்பட்டமையால் 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி கொழும்பில் வைத்து அமிர்தலிங்கமும் வீ.யோகேஸ்வரனும் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.

ஒட்டுக்குழு வரதராஜப் பெருமாளை தமிழரசுக்கட்சியுடன் இணைத்துக் கொள்வதற்கான மூன்று சுற்றுப் பேச்சுக்கள் இதுவரையில் நடைபெற்றிருப்பதாக தமிழரசுக்கட்சியினருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பதிவு செய்யாமல் பாரம்பரிய கட்சியான தமிழரசுக்கட்சியினைத் தனித்துவமாக முன்னெடுத்துச் செல்லலாம் என்ற ஆலோசனையினை ஒட்டுக்குழு வரதராஜப் பெருமாளே மாவை சேனாதிராசாவிற்கு முன்மொழிந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.

இதனை அடுத்து தமிழரசுக்கட்சியின் முக்கிய நிகழ்வுகளில் ஒட்டுக்குழு வரதராஜப் பெருமாள் பங்குகொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

http://www.tamilthai.com/?p=21692

Edited by தமிழ் அரசு

  • Replies 142
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"தமிழ்த் தேசியத்திற்கு எதிராகச் செயற்பட்டமையால் 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி கொழும்பில் வைத்து அமிர்தலிங்கமும் வீ.யோகேஸ்வரனும் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்"????

http://rste.org/2011/07/12/இந்திய-உளவு-நிறுவனத்தின்/

இந்திய உளவு நிறுவனத்தின் வஞ்சகம்

பிரேமதாசா இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்று ஒரு மாதம் கெடு விதித்து அறிவித்த நாள், 1989 ஜூன் 1, கெடு முடியும் நாள் ஜூலை 29. இந்த ஒரு மாத இடைவெளியில் தான் சில முக்கிய தலைவர்கள் கொலை செய்யப்பட்டு, அவர்களை கொலை செய்தவர்கள் விடுதலைப்புலிகள்தான் என்ற பழியை சுமத்தி ஊடகங்கள் வழியாக பரப்பினர். எந்தத் தேதியில், யார் யார் கொல்லப்பட்டார்கள்?

1989 ஜூலை 12 – தமிழர் அய்க்கிய விடுதலை முன்னணி தலைவர்கள் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன்.

1989 ஜூலை 17 – அதாவது, அடுத்த நான்கு நாட்களில் புளோட் இயக்கத் தலைவர் உமா மகேசுவரன்.

1989 ஜூலை 23 – அடுத்த 10 நாட்களில் ‘பிரபாகரன்’ மாத்தையால் கொல்லப்பட்டார் என்ற அறிவிப்பு (அனைத்து இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்களில் உயிருடன் இருந்த பிரபாகரன் – மாத்தையாவால் கொல்லப்பட்டதாக இந்திய உளவு நிறுவனம் செய்திகளைப் பரப்பியது).

பிரேமதாசா – இந்திய ராணுவம் வெளியேற கெடு விதித்த ஒரு மாத கால இடைவெளியில் மட்டும், இந்தக் கொலைகள் நடந்தன என்றால், அதன் நோக்கம், மூளை, பின்னாலிருந்து இயக்கிய சக்திகளைப் புரிந்து கொள்ள முடியும்.

Edited by Queen

தமிழ்த் தேசியத்திற்கு எதிராகச் செயற்பட்டமையால் 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி கொழும்பில் வைத்து அமிர்தலிங்கமும் வீ.யோகேஸ்வரனும் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.

உங்கள் இணைப்பில் தவறு உள்ளது. 1989 ஆம் ஆண்டு தான் இந்த சம்பவம் நடைபெற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: அமிர்தலிங்கம் கொல்லப்பட்டது சரியா தவறா என்பதற்கப்பால இந்த மனிதர் இந்திய ஆக்கிரமிப்பை தமிழ்நாட்டிலிருந்தபடி நியாயப்படுத்தியவர். இந்திய ஆக்கிரமிப்பு ராணுவத்தை வாழ்த்திப் பாடியதோடு, ஈழத்தமிழர்கள் புலிகளுக்கெதிரான யுத்தத்தில் இந்திய ராணுவத்திற்கு உதவ வேண்டும் என்று "வெற்றி மாலை" வானொலி நிகழ்ச்சியில் பலமுறை கோரிக்கை விடுத்தவர். அவர் வழிவந்த தேசியக் கூட்டமைப்பும் அதையேதான் செய்துவருகிறது .

உமாவைக் கொன்றது யாரென்று தெரியவில்லை. ஆனால் அவர்பற்றி நாங்கள் எழுதுவதை விட அவர் கழகப் போராளிகளே அதிகம் தெரிந்துவைத்திருப்பார்கள்.

ஆனால் அரசிய பேசி உசுப்பேத்திவிட்ட கூட்டணியினரைக் காட்டிலும் போராளிக்குழுக்கள் எவ்வளவோ மேல். இடை நடுவில் சிலர் திசை மாறிப்போயிருந்தாலும்கூட, ஆரம்பத்தில் ஆக்கிரமிற்கெதிரான போராட்டம் என்பது உண்மையாகத்தானிருந்தது.

வரதராஜப்பெருமாள் போன்ற பயங்கரவாதிகளின் கைக்கூலிகளை அரவணைப்பவர்கள் அனைவரும் ஈழ மக்களால் தூக்கி வீசப்படுவார்கள். அது மாவையாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி.

கடத்தல், கப்பம், கொலை, கொள்ளைக்கார டக்லஸ் கும்பலுக்கும் கைக்கூலி வரதராஜப்பெருமாலுக்கும் இடையில் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. மாவை அயல் நாட்டு பயங்கரவாதிகளின் கைக்கூலியாக மாறுவதை யாரும் சகித்துக்கொள்ளமாட்டார்கள்.

எல்லாரையும் துரோகி துரோகி என்று ஈற்றில் சரணடைந்த சாதாரண போரளிகளை கூட துரோகி என்று பட்டம் சுமத்தும் அளவுக்கு வந்திருக்கின்றோம். புலிகலின் தீவிர ஆதரவாளர்கள் மட்டுமன்றி, தளபதிகளே இன்று அரசுடன் இணைந்து செயற்படும் மோசமான நிலையில் நிற்கின்றோம். ஆனால் இன்னும் எம் புளிச்சல் ஏவறை தனமான பார்வை மாறவில்லை. இந்தப் பார்வையால் விளைந்த அனைத்தும் பேரழிவுதான் என்ற உண்மையை உணரும் அளவுக்கு கூட நாம் இன்றும் இல்லை.

அமிர்தலிங்கம் அவர்கள் ஒரு காலத்தில்; ஈழ விடுதலை போராட்டம் முனைப்பு பெற்ற ஒரு காலகட்டத்தில் முக்கிய பங்காற்றியவர். ஈழ விடுதலைச் சங்கிலியில் முக்கிய கண்ணி அவர். நிச்சயம் மரண தண்டனைக்குட்படுத்தும் அளவுக்கான ஒரு கொலை அரசியல் செய்த ஒருவர் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

:( நிழலி,

அமிர்தலிங்கத்தின் கொலையை நியாயப்படுத்துவது எனது நோக்கமல்ல. இன்னும் சொல்லப்போனால் அவரின் கொலையை மிகவும் நாசுக்காகப் பயன்படுத்தி எம்மைப் பயங்கரவாதிகளாக உலகுக்குக் காட்டுவதில் சிங்களம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. " அவர்கள் தமிழ் தலைவர்களைக்கூடக் கொன்றார்கள்" என்கிற பழியும் அவப்பெயரும் காலம் காலமாக எம்முடனேயே ஒட்டிவிடும்படி அவரது கொலை ஆக்கிவிட்டது. ஆனால் அவரைக் கொன்றதன் மூலம் கிடைத்த பயன் எதுவென்று பார்த்தால் எதுவுமேயில்லை என்பதுதான் எனது வாதம்.

நான் சொல்ல வந்தது அவர் இறுதிக்காலத்தில் செயலாற்றிய விதம் பற்றியது. இந்தியாவே எல்லாம் என்று நம்பியிருந்ததன் விளைவு, ஈற்றில் இந்தியாவே எமக்கு மிகப்பெரிய எதிரியாக மாற்றிவிட்டது. இத்தனை ஏம்மாற்றங்களுக்குப் பின்னரும் இந்தியாவின் சூழ்ச்சிகளை இன்னும் பார்க்க மறுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பற்றியது. அவ்வளவுதான்.

மற்றும்படி, அமீர் கொலையாகட்டும், யோகேஸ்வரன் கொலையாகட்டும், ரஜீவ் கொலையாகட்டும், இன்னும் நூற்றுக்கணக்கான அப்பாவிச் சிங்களவர்களின் கொலையாகட்டும்.. இவை எதுவுமே எமக்கு எந்தப் பயனையும் தரவில்லை. மாறாக சர்வதேசத்தில் பயங்கரவாதிகள், கொலைகாரர்கள் என்கிற அவப்பெயரைத் தவிர. இவற்றால் நாம் அடைந்தது எல்லாம் அழிவுகள்தான், இறுதி முள்ளிவாய்க்கால்வரை.

:( நிழலி,

அமிர்தலிங்கத்தின் கொலையை நியாயப்படுத்துவது எனது நோக்கமல்ல. இன்னும் சொல்லப்போனால் அவரின் கொலையை மிகவும் நாசுக்காகப் பயன்படுத்தி எம்மைப் பயங்கரவாதிகளாக உலகுக்குக் காட்டுவதில் சிங்களம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. " அவர்கள் தமிழ் தலைவர்களைக்கூடக் கொன்றார்கள்" என்கிற பழியும் அவப்பெயரும் காலம் காலமாக எம்முடனேயே ஒட்டிவிடும்படி அவரது கொலை ஆக்கிவிட்டது. ஆனால் அவரைக் கொன்றதன் மூலம் கிடைத்த பயன் எதுவென்று பார்த்தால் எதுவுமேயில்லை என்பதுதான் எனது வாதம்.

நான் சொல்ல வந்தது அவர் இறுதிக்காலத்தில் செயலாற்றிய விதம் பற்றியது. இந்தியாவே எல்லாம் என்று நம்பியிருந்ததன் விளைவு, ஈற்றில் இந்தியாவே எமக்கு மிகப்பெரிய எதிரியாக மாற்றிவிட்டது. இத்தனை ஏம்மாற்றங்களுக்குப் பின்னரும் இந்தியாவின் சூழ்ச்சிகளை இன்னும் பார்க்க மறுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பற்றியது. அவ்வளவுதான்.

மற்றும்படி, அமீர் கொலையாகட்டும், யோகேஸ்வரன் கொலையாகட்டும், ரஜீவ் கொலையாகட்டும், இன்னும் நூற்றுக்கணக்கான அப்பாவிச் சிங்களவர்களின் கொலையாகட்டும்.. இவை எதுவுமே எமக்கு எந்தப் பயனையும் தரவில்லை. மாறாக சர்வதேசத்தில் பயங்கரவாதிகள், கொலைகாரர்கள் என்கிற அவப்பெயரைத் தவிர. இவற்றால் நாம் அடைந்தது எல்லாம் அழிவுகள்தான், இறுதி முள்ளிவாய்க்கால்வரை.

ரகு,

என் பதில் வெறுமனே உங்களின் பதிலை குறித்து வைத்து செய்த பதில் அல்ல. இந்த திரியின் செய்தியில் (தமிழ் தாய் எனும் தளத்தின் செய்தி) அமிரை வெளிப்படையாகவே துரோகி என்று விளித்து இருந்தது; அதை வாசித்த பின் உங்களின் பதிலையும் வாசித்தே பதில் எழுதி இருந்தேன்

மற்றும் படி, நீங்கள் சொன்னது போல் படுகொலைகள் எம் விடுதலைக்கு உதவியதை விட பாதகமாக இருந்தது என்பதே உண்மை

எல்லாரையும் துரோகி துரோகி என்று ஈற்றில் சரணடைந்த சாதாரண போரளிகளை கூட துரோகி என்று பட்டம் சுமத்தும் அளவுக்கு வந்திருக்கின்றோம். புலிகலின் தீவிர ஆதரவாளர்கள் மட்டுமன்றி, தளபதிகளே இன்று அரசுடன் இணைந்து செயற்படும் மோசமான நிலையில் நிற்கின்றோம். ஆனால் இன்னும் எம் புளிச்சல் ஏவறை தனமான பார்வை மாறவில்லை. இந்தப் பார்வையால் விளைந்த அனைத்தும் பேரழிவுதான் என்ற உண்மையை உணரும் அளவுக்கு கூட நாம் இன்றும் இல்லை.

அமிர்தலிங்கம் அவர்கள் ஒரு காலத்தில்; ஈழ விடுதலை போராட்டம் முனைப்பு பெற்ற ஒரு காலகட்டத்தில் முக்கிய பங்காற்றியவர். ஈழ விடுதலைச் சங்கிலியில் முக்கிய கண்ணி அவர். நிச்சயம் மரண தண்டனைக்குட்படுத்தும் அளவுக்கான ஒரு கொலை அரசியல் செய்த ஒருவர் இல்லை.

பழய கதையை விட்டு மேலே போவோம். எனக்கு என்ன நடந்தது என்று தெரியாது. ஆனால் பாலா அண்ணா சில விடயங்களை துன்பியல் சம்பவங்கள் என்று வர்ணித்தார். எது சரி எது பிழை என்பது தமிழருக்கு சுதந்திரம் கிடைத்தபின்னர் ஆராய நல்ல நேரங்கள் வரும். இப்போ அடுத்த அலுவல் என்ன என்று சிந்திக்க வேண்டும். அமிர்தலிங்கம் சரி என்று நினைப்பவர்கள் கூட ருத்திராவுக்கு ஆதரவு வழங்கமுடியும். ருத்திரா நா.க.த.அ. உலகநாடுகளின் நலன்களை கருத்தில் எடுக்கும் என்கிறார். அது இந்தியாவின் நலங்களையும் உள்ளடக்கும். அல்லாதார் த.தே.கூ தங்கள் ஆதரவை வழங்கமுடியும்.

நாம் ஒவ்வொரு வீட்டு பிறந்தநாள் பாட்டியிலும் செய்வதை கட்டுபடுத்த முயலக்கூடாது. கதராடை, உப்பு சத்தியாகிரகங்கள் நமக்கு வெற்றி அளிக்க முடியாது. நாம் வேறு வேறு நாடுகளில் இருகிறோம் சன் டி.வி. சிலர் பார்க்கத்தான் போகிறார்கள். எமது போராட்டம் இவற்றை உணர்ந்து மேலே போய் உலகநாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். இன்றைய நிலையில் போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா அவசியம். இந்தியா ஒத்துழைத்தால் ரூசியா ஒத்துழைக்கும். அப்போது ஐ நா வில் சீனா தனியே நில்லாது. இந்தியாவை கூட்டு சேரா நாடுகள் சற்று கேட்டு நடக்கும். வரதராஜப்பெருமாள் இனிமேல் நமக்கு கேடுதல் செய்ய முடியாது. அவரை, ஆனந்தசங்கரியை கண்டு பயப்படுவது பேதமை.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரையும் துரோகி துரோகி என்று ஈற்றில் சரணடைந்த சாதாரண போரளிகளை கூட துரோகி என்று பட்டம் சுமத்தும் அளவுக்கு வந்திருக்கின்றோம். புலிகலின் தீவிர ஆதரவாளர்கள் மட்டுமன்றி, தளபதிகளே இன்று அரசுடன் இணைந்து செயற்படும் மோசமான நிலையில் நிற்கின்றோம். ஆனால் இன்னும் எம் புளிச்சல் ஏவறை தனமான பார்வை மாறவில்லை. இந்தப் பார்வையால் விளைந்த அனைத்தும் பேரழிவுதான் என்ற உண்மையை உணரும் அளவுக்கு கூட நாம் இன்றும் இல்லை.

அமிர்தலிங்கம் அவர்கள் ஒரு காலத்தில்; ஈழ விடுதலை போராட்டம் முனைப்பு பெற்ற ஒரு காலகட்டத்தில் முக்கிய பங்காற்றியவர். ஈழ விடுதலைச் சங்கிலியில் முக்கிய கண்ணி அவர். நிச்சயம் மரண தண்டனைக்குட்படுத்தும் அளவுக்கான ஒரு கொலை அரசியல் செய்த ஒருவர் இல்லை.

நிழலி உங்களுக்கு கடந்த கால வரலாறு தெரியாதா ?

நீங்கள் அப்போது புலிகளுக்கு உங்கள் கருத்துகளை ஏன் சுட்டிக்காட்டவில்லை !

தமிழினப் படுகொலை மேற்கொண்ட பயங்கரவாதிகளுடன் நெருங்கியிருக்கும் வரதராஜப்பெருமாள் போன்ற பயங்கரவாதிகளின் கைக்கூலிகளை அரவணைப்பவர்கள் அனைவரும் ஈழ மக்களால் தூக்கி வீசப்படுவார்கள். அது மாவையாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி.

கடத்தல், கப்பம், கொலை, கொள்ளைக்கார டக்லஸ் கும்பலுக்கும் தமிழினப் படுகொலை மேற்கொண்ட பயங்கரவாதிகளுடன் நெருங்கியிருக்கும்

கைக்கூலி வரதராஜப்பெருமாலுக்கும் இடையில் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. மாவை அயல் நாட்டு பயங்கரவாதிகளின் கைக்கூலியாக மாறுவதை யாரும் சகித்துக்கொள்ளமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கம் அவர்கள் துரோகியாகக்கணிக்கப்பட்டு கொல்லப்பட்டவரல்ல. பேச்சுவார்த்தைக்கு போனவர்களுக்கும் அங்கிருந்தவர்களுக்கும் எழுந்த கைகலப்பே இக்கொலைக்கு காரணம். அங்கு பேச்சுவார்த்தைக்கு போனவர்களும் உயிருடன் இல்லாதபடியால்..................?

இதுவும் புலிகளின் தலையில் விழுந்தது. அமிர்தலிங்கம் பற்றி கவலைப்படும் நாம் பேச்சுவார்த்தைக்கு போய் சுட்டுக்கொல்லப்பட்ட எமது மூத்தபோராளிகள் பற்றி எழுதுவதில்லை. ஏனெனில் புலிகள் என்றால் சாகலாம் சாகடிக்கப்படலாம். இது எழுதாதவிதி எம் மனதில்..............??? :(:(

அமிர்தலிங்கம் அவர்கள் துரோகியாகக்கணிக்கப்பட்டு கொல்லப்பட்டவரல்ல. பேச்சுவார்த்தைக்கு போனவர்களுக்கும் அங்கிருந்தவர்களுக்கும் எழுந்த கைகலப்பே இக்கொலைக்கு காரணம். அங்கு பேச்சுவார்த்தைக்கு போனவர்களும் உயிருடன் இல்லாதபடியால்..................?

இதுவும் புலிகளின் தலையில் விழுந்தது. அமிர்தலிங்கம் பற்றி கவலைப்படும் நாம் பேச்சுவார்த்தைக்கு போய் சுட்டுக்கொல்லப்பட்ட எமது மூத்தபோராளிகள் பற்றி எழுதுவதில்லை. ஏனெனில் புலிகள் என்றால் சாகலாம் சாகடிக்கப்படலாம். இது எழுதாதவிதி எம் மனதில்..............??? :(:(

உங்களுக்கு என்ன நடந்தது என்று தெரிந்தும் சப்பைக் கட்டு கட்டாதீர்கள் விசுகு. எதையுமே; எந்த தவறையுமே ஏற்றுக் கொள்ளாமை நிச்சயம் விடிவையோ அல்லது நாளைய பாதையை சரிவர அமைக்கவோ உதவப் போவதில்லை. உங்களைப் போன்ற மூத்தவர்களின் உண்மை பேசா தன்மை கூட எம் போராட்டத்தின் இன்னொரு சாபம். வரலாறுகளில் பாடம் படிக்காத எம் இனத்தின் இன்னொரு குணாம்சம்

அமிரின் கொலையை புலிகள் பல மேடைகளில் நேரடியாகவே குறிப்பிட்டு தாம் செய்தததாக கூறியிருந்தார்கள். தமிழ் ஈழ கோரிக்கையை கைவிட்ட எவருக்கும் இதே தண்டனை தான் என்று பலதடவைகள் குறிப்பிட்டு இருந்தார்கள். உத்தியோக பூர்வ உரிமை கோரல் தவிர அனைத்து விதமாகவும் தாமே என்று மக்களுக்கு தெரிவித்து இருந்தார்கள்.

அத்துடன் நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போல புலிகள் பேச்சுவார்த்தைக்கு என்று போய் கொல்லப்பட்ட நிகழ்வு ஒன்று தான் நடந்துள்ளது. அது இந்திய ஏவல் படையினருடனான போர்க் காலத்தில் போராளி ஜொனி கொல்லப்பட்ட நிகழ்வு மட்டுமே. புலிகள் எல்லா விடயங்களிலும் மிகவும் அவதானமாக இருப்பவர்கள்; சும்மா பேச்சுவார்த்தைக்கு போய் சாகும் அளவுக்கு திட்டமில்லாத அமைப்பாக அவர்கள் இருக்கவில்லை. முள்ளிவாய்கால் நிகழ்வை குறிப்பிட்டு இருந்தீர்கள் என்றால், அது பேச்சுவார்த்தைக்கு போன நிகழ்வு அல்ல. சரணடைய போன நிகழ்வு. . நீங்கள் நினைப்பது போல் இந்த நிகழ்வுக்காக கவலைப் படாதவர்களை நான் காணவில்லை. அந்த கவலையின் உச்சம் தான் இன்று போர்க் குற்றத்தை இலங்கை அரசின் மீது நிரூபிக்கும் அளவுக்கு தீவிர நிலையில் நிற்கின்றது

நிழலி உங்களுக்கு கடந்த கால வரலாறு தெரியாதா ?

நீங்கள் அப்போது புலிகளுக்கு உங்கள் கருத்துகளை ஏன் சுட்டிக்காட்டவில்லை !

எப்படி உங்களுக்கு இவ்வளவு அறிவு பூர்வமாக, யதார்த்த பூர்வமாக, மிகவும் கருத்தாழமான கேள்விகளை கேட்கத் தோன்றுகின்றது? நான் இவ்வளவு நாளும் உங்களை 'செய்திகளின் Contents பற்றி எந்த உணர்வும் அற்ற வெறும் வெட்டி ஒட்டி ஆள்' என்று தவறாக நினைத்து விட்டேன்; மன்னிக்கவும்

இப்படியான மிகவும் ஆழமான கேள்விகளை தொடர்ந்து கேட்கவும்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது முள்ளிவாய்க்காலின் பின் ஒரு பொய் முகமாகவே இருக்கிறது. புலம்பெயர் தமிழ் மக்களையும் தமிழ் தேசியத்தை தமிழீழ விடுதலையை தமிழீழ விடுதலைப் புலிகளை நேசிக்கும் மக்களையும் எதிர்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதனையும்.. சிங்கள ஆளும் வர்க்கத்தை.. இந்திய ஆளும் வர்க்கத்தை திருப்திப்படுத்த தமிழரசுக் கட்சி என்பதையும் பயன்படுத்துகிறார்கள்.. தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து மிதவாதிகள் என்ற பெயர் பெற்றதாகச் சொல்லும் மாவை போன்றவர்கள்.

மாவை சேனாதிராஜா.. சம்பந்தன் போன்றவர்கள் ஒரு காலத்தில் தமிழ் தேசியக் கொள்கை.. தமிழீழக் கொள்கையை எதிர்த்தவர்கள். தேசிய தலைவர் இவர்களோடு தொடர்ந்து முரண்பட்டுக் கொண்டிருந்தால்.. இலங்கைத் தீவில் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும் என்ற அடிப்படையில் தான்.. தமிழீழ விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணிக்கு உயிர் கொடுக்காமல்.. முன்னாள் துரோகிகள் பலரை ( ஆனந்த சங்கரி உட்பட) உள்வாங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிறுவினார். அதற்கென்று ஒரு பொது அரசியல் நிகழ்ச்சி நிரலை கொள்கையை வகுக்க தூண்டினார். அது மக்களிடத்தில் அரசியல் வெற்றிடத்தை நிரப்பவும்.. சிங்கள சார்ப்பு தமிழ் ஆயுதக் குழுக்கள் மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் போன்ற ஜிகாத் அமைப்புக்கள் அரசியல் ஆதிக்கம் செய்வதையும் தலைவர் கட்டுப்படுத்த முனைந்தார். அதற்கு நல்ல பாலபலனும் கிடைத்தது.

தலைவர் இருக்கும் வரை இருந்த அந்தக் கட்டுக்கோப்பு.. இன்று அவரின் நேரடி வழிகாட்டல் இல்லாத நிலை என்றதும்.. தானாக அந்த அமைப்பு சிதறி வகுத்த கொள்கைகளுக்கு அப்பால் செயற்பட ஆரம்பித்திருக்கிறது. எமது உரிமைகளை மற்றவர்களை திருப்திப்படுத்துவன் மூலம் ஒரு போதும் பெற முடியாது. மற்றவர்களிடம் நாம் பேரம் பேசும் நிலை இருந்தால் மட்டுமே எமது உரிமைகளை தக்க வைக்க முடியும்.

அமிர்தலிங்கம்.. யோகேஸ்வரன்.. உட்பட பலர் தங்களை மிதவாத இந்திய சார்ப்பு அரசியல்வாதிகளாகவே காட்டி வந்தனர். அவர்கள் வரிசையில் மாவை.. வரதராசுப் பெருமாள் போன்றவர்கள் இணைவதில் எந்த ரகசியமும் இருக்க வாய்ப்பில்லை. நாளை சுரேஸ் பிரேமச்சந்திரனும்.. வரதராசுப் பெருமாளுடன் கைகுலுக்கலாம்.

ஆனால் மீண்டும் 1987 ஆண்டு கால கசப்புணர்வுகளை இவர்கள் மக்கள் மத்தியில் வளர்க்க முற்படுவார்களாக இருந்தால்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற தமிழ் மக்களுக்கு காட்டப்படும் பொய் முகம்.. அவர்களால் கிழித்தெறியப்பட்டு மீண்டும் பேரினவாத சிங்களக் கட்சிகளின் பின்னால் மக்கள் வேறு வழி இன்றி போகும் அபாயமும் உண்டு. அந்த வகையில் இந்த அரசியல் சதிராட்டத்தில் தமிழ் தேசிய.. தமிழீழ உணர்வு மழுங்கடிக்கபடலாம். அதை நிச்சயம் சிங்களமும் இந்திய பேரரசும் செய்ய விளையும்.

அதற்கு உள்ள ஒரே ஒரு மாற்றீடு.. வலுவான ஆனால் தமிழரசுக் கட்சிக்கு மாற்றீடான தமிழ் தேசிய பற்றுள்ள.. தமிழீழ இலட்சியப்பற்றுள்ள மக்களைக் கொண்ட ஒரு கட்சியாக உள்ள கட்சிகள்.. தமிழ் தேசிய விடுதலை முன்னணி போன்ற கட்சிகளை முன்னிறுத்த வேண்டும். அல்லது மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணிக்கு உயிர்ப்பளிக்க வேண்டும்.

தமிழ் மக்கள் தமிழ் தேசிய கொள்கையையோ, தமிழீழக் கொள்கையையோ எனிக் கைவிடத் தயார் இல்லை. அதேபோல் கடந்த கால துரோகங்களை மறக்கும் நிலையிலும் இல்லை. துரோகிகள் துரோகிகள் தான். அவர்கள் தொடர்பான எந்த வகையான சப்பை கட்டுக்களும் எனி மக்கள் மனதில் இடம்பெற முடியாது. இன்றுவரை முள்ளிவாய்க்கால் சம்பவங்களுக்கு இனப்படுகொலைகளுக்கு கண்டனமோ.. கவலையோ தெரிவிக்காதவர்களில்.. வரதராஜப் பெருமாளும் ஒருவர். இப்படியான வெளிப்படையான துரோகிகளை தமிழரசுக் கட்சி உள்வாங்க நினைக்கும் என்றால்.. அதற்கான பிரதிபலனை அது மக்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளும்.

தேசிய தலைவரின் முயற்சியால் உருவானது அவர் வகுத்த கொள்கைகளை மதிக்கிறது என்ற காரணங்களுக்காகவே மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து நிற்கின்றனர். சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் தனித்து நின்று போட்டி இட்டு படுதோல்வி கண்டவர்கள். பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்த பின் தான் அவர்களுக்கு மக்கள் கடந்த கால துரோகங்களை புலிகள் மன்னிக்க கேட்கிறார்கள் என்று எண்ணி வாக்குப் போட்டார்கள். ஆனால் மீண்டும் தமிழ் மக்களையும் அவர்களின் பிள்ளைகளான புலிகளையும் தமிழ் தேசிய.. தமிழீழ விடுதலைக் கொள்கைகளையும் சொந்த அரசியல் நலனுக்காக காட்டிக் கொடுக்க யார் முன்வந்தாலும் அவர்கள் மக்களால் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். மக்கள் ஒன்றும் இந்த விடயத்தில் முட்டாள்கள் கிடையாது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் செய்யவில்லை என்று நான் எழுதவில்லை

துரோகியாக கணித்து கொலை செய்யப்பட்டார் என்ற கருத்துக்குத்தான் நான் பதில் எழுதியிருந்தேன்.

என்ன நடந்தது என்று தெரிந்து கொண்டு வந்து எழுதுங்கள் நிழலி.

பல காலமாக இதற்கான பதில் எவருக்குமே தெரிந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

:( நிழலி,

அமிர்தலிங்கத்தின் கொலையை நியாயப்படுத்துவது எனது நோக்கமல்ல. இன்னும் சொல்லப்போனால் அவரின் கொலையை மிகவும் நாசுக்காகப் பயன்படுத்தி எம்மைப் பயங்கரவாதிகளாக உலகுக்குக் காட்டுவதில் சிங்களம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. " அவர்கள் தமிழ் தலைவர்களைக்கூடக் கொன்றார்கள்" என்கிற பழியும் அவப்பெயரும் காலம் காலமாக எம்முடனேயே ஒட்டிவிடும்படி அவரது கொலை ஆக்கிவிட்டது. ஆனால் அவரைக் கொன்றதன் மூலம் கிடைத்த பயன் எதுவென்று பார்த்தால் எதுவுமேயில்லை என்பதுதான் எனது வாதம்.

நான் சொல்ல வந்தது அவர் இறுதிக்காலத்தில் செயலாற்றிய விதம் பற்றியது. இந்தியாவே எல்லாம் என்று நம்பியிருந்ததன் விளைவு, ஈற்றில் இந்தியாவே எமக்கு மிகப்பெரிய எதிரியாக மாற்றிவிட்டது. இத்தனை ஏம்மாற்றங்களுக்குப் பின்னரும் இந்தியாவின் சூழ்ச்சிகளை இன்னும் பார்க்க மறுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பற்றியது. அவ்வளவுதான்.

மற்றும்படி, அமீர் கொலையாகட்டும், யோகேஸ்வரன் கொலையாகட்டும், ரஜீவ் கொலையாகட்டும், இன்னும் நூற்றுக்கணக்கான அப்பாவிச் சிங்களவர்களின் கொலையாகட்டும்.. இவை எதுவுமே எமக்கு எந்தப் பயனையும் தரவில்லை. மாறாக சர்வதேசத்தில் பயங்கரவாதிகள், கொலைகாரர்கள் என்கிற அவப்பெயரைத் தவிர. இவற்றால் நாம் அடைந்தது எல்லாம் அழிவுகள்தான், இறுதி முள்ளிவாய்க்கால்வரை.

உங்களின் இந்தக் கருத்து என்னிடத்தில் ஒரு வினவலை எழுப்புகிறது. நாங்கள் இவர்களைக் கொன்றதால சர்வதேச பயங்கரவாதிகள் ஆயிட்டம் (ம்ம்.. சர்வதேசம் சொல்ல மறந்தாலும்.. நாங்களே எங்களைச் சொல்லிக் கொள்ளுவம்.). ஆனால் நாங்கள் இவர்களைக் கொல்ல முதலிருந்தே எங்களைக் கொன்று கொண்டிருக்கிற சிங்களவனை ஏன்.. சர்வதேசம் பயங்கரவாதிகளாகக் காட்டவில்லை. சும்மா சிவனே என்றிருந்த கடாபியை பயங்கரவாதியாக்க முடியுமுன்னா.. ஏன் இவ்வளவு படுகொலைகளை.. சர்வதேச ஆதாரங்களோடு செய்து முடித்துவிட்டு ஏப்பம் விடும் சிங்களத்தை பயங்கரவாதிகளாகக் காட்டவில்லை. தமிழர்கள் மீது சிங்களப் பேரினவாத பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்ட பின் தான் தமிழர்கள் பயங்கரவாதத்தை கையில் எடுத்தார்கள். அதனையும் நீங்கள் இங்கு சொல்லிக் கொள்ள வேண்டும். அதேபோல்.. இந்தியா எம்மீது தனது பயங்கரவாதத்தை 1987 இல் காட்ட முற்பட்ட பின் தான் தமிழர்களும் அதற்கு அதன் பாசையில் பதிலளிக்க தள்ளப்பட்டார்கள்.

அமிர்தலிங்கம்.. ஆயுதம் ஏந்தாக.. ஒரு மிகக் கொடிய பயங்கரவாதி... ஏன் ஒரு போர்க்குற்றவாளியும் கூட. அது என்னைப் பொறுத்தவரை நல்ல தெளிவாகவே தெரிகிறது. சொந்த மக்கள் இந்தியப் படைகளின் படுகொலைகளால் மடிந்து கொண்டிருக்க.. இந்தியப் படைகள் மக்களுக்கு இழப்பில்லாத வகையில் பயங்கரவாதிகளை ஒடுக்கிக் கொண்டிருப்பதாக அறிக்கை விட்டவர். அதையே தான் கோத்தாவும் சொல்கிறார். ஆனால் கோத்தா போர்க்குற்றவாளி.. அமிர்தலிங்கம்.. மிதவாதி. :unsure::o

அமிர்தலிங்கம்.. இந்தியாவிற்கு சார்ப்பாக செயற்பட்டு எமது உரிமைகளை அடகு வைத்து சொற்ப சலுகைகளைப் பெற முனைந்தாரே ஒழிய.. அவர் தமிழ் மக்களின் உரிமைகளைப் பூரணமாக பெற்றுக் கொடுக்க.. தனது நுண்ணறிவை பயன்படுத்தியதாக எப்போதும் எவரும் கண்டறியவில்லை.

எங்க போய் தலையை முட்ட... எம்மவர்களின் அரசியல் தெளிவற்ற குழம்பும் மனநிலையை நினைத்தால்.. கவலை தான் மிகுகிறது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கம் துரோகியா?

ஆம்

1977 தேர்தலில் தமிழ் மக்களிடையே 85 வீதவாக்கு பெற்றவர்

அடுத்த தேர்தலில் 25 வீதம்(???) பெற்றார்

அதற்கு அடுத்த தேர்தலில் வடமாகாணத்தில் மக்களால் புறக்கணிக்கப்படுவார் என்று தெரிந்ததால்....

மட்டக்களப்பில் தேர்தலில் நின்று 2 வீத வாக்குகளை மட்டும் பெற்று தோல்வியடைந்தார்.

இத்துடன் அவர் விலகியிருப்பின்..............???

அதையும் தாண்டி சிறிலங்கா அரசின் துணையோடு விகிதாசாரமுறையில் ஒரு சீற்றைப்பெற்றுக்கொண்டு தமிழ்மக்களின் பிரதிநிதியாக??????? பாராளுமன்றம் சென்றார். :(:(:(

Edited by விசுகு

புலிகள் செய்யவில்லை என்று நான் எழுதவில்லை

துரோகியாக கணித்து கொலை செய்யப்பட்டார் என்ற கருத்துக்குத்தான் நான் பதில் எழுதியிருந்தேன்.

என்ன நடந்தது என்று தெரிந்து கொண்டு வந்து எழுதுங்கள் நிழலி.

பல காலமாக இதற்கான பதில் எவருக்குமே தெரிந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.

நீங்கள் புலிகளின் உள் கணிப்புகளை எல்லாம் அறியக் கூடிய அளவுக்கு புலிகளின் தலைமைப் பீடத்தில் இருந்தவர் என்று எனக்கு தெரியாமல் போய் விட்டது. இனி புலிகளின் செயல்பாடுகள் பற்றி கதைக்கும் போது இருபத்தி எட்டு வருடத்துக்கும் மேலாக பிரான்சில் இருக்கும் உங்களிடம் கேட்டு தெரிந்து விட்டு எழுதுகின்றேன். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு என்ன நடந்தது என்று தெரிந்தும் சப்பைக் கட்டு கட்டாதீர்கள் விசுகு. எதையுமே; எந்த தவறையுமே ஏற்றுக் கொள்ளாமை நிச்சயம் விடிவையோ அல்லது நாளைய பாதையை சரிவர அமைக்கவோ உதவப் போவதில்லை. உங்களைப் போன்ற மூத்தவர்களின் உண்மை பேசா தன்மை கூட எம் போராட்டத்தின் இன்னொரு சாபம். வரலாறுகளில் பாடம் படிக்காத எம் இனத்தின் இன்னொரு குணாம்சம்

அமிரின் கொலையை புலிகள் பல மேடைகளில் நேரடியாகவே குறிப்பிட்டு தாம் செய்தததாக கூறியிருந்தார்கள். தமிழ் ஈழ கோரிக்கையை கைவிட்ட எவருக்கும் இதே தண்டனை தான் என்று பலதடவைகள் குறிப்பிட்டு இருந்தார்கள். உத்தியோக பூர்வ உரிமை கோரல் தவிர அனைத்து விதமாகவும் தாமே என்று மக்களுக்கு தெரிவித்து இருந்தார்கள்.

அத்துடன் நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போல புலிகள் பேச்சுவார்த்தைக்கு என்று போய் கொல்லப்பட்ட நிகழ்வு ஒன்று தான் நடந்துள்ளது. அது இந்திய ஏவல் படையினருடனான போர்க் காலத்தில் போராளி ஜொனி கொல்லப்பட்ட நிகழ்வு மட்டுமே. புலிகள் எல்லா விடயங்களிலும் மிகவும் அவதானமாக இருப்பவர்கள்; சும்மா பேச்சுவார்த்தைக்கு போய் சாகும் அளவுக்கு திட்டமில்லாத அமைப்பாக அவர்கள் இருக்கவில்லை. முள்ளிவாய்கால் நிகழ்வை குறிப்பிட்டு இருந்தீர்கள் என்றால், அது பேச்சுவார்த்தைக்கு போன நிகழ்வு அல்ல. சரணடைய போன நிகழ்வு. . நீங்கள் நினைப்பது போல் இந்த நிகழ்வுக்காக கவலைப் படாதவர்களை நான் காணவில்லை. அந்த கவலையின் உச்சம் தான் இன்று போர்க் குற்றத்தை இலங்கை அரசின் மீது நிரூபிக்கும் அளவுக்கு தீவிர நிலையில் நிற்கின்றது

எப்படி உங்களுக்கு இவ்வளவு அறிவு பூர்வமாக, யதார்த்த பூர்வமாக, மிகவும் கருத்தாழமான கேள்விகளை கேட்கத் தோன்றுகின்றது? நான் இவ்வளவு நாளும் உங்களை 'செய்திகளின் Contents பற்றி எந்த உணர்வும் அற்ற வெறும் வெட்டி ஒட்டி ஆள்' என்று தவறாக நினைத்து விட்டேன்; மன்னிக்கவும்

இப்படியான மிகவும் ஆழமான கேள்விகளை தொடர்ந்து கேட்கவும்

ஒருவர் வாகன விபத்தில் கொல்லபட்டபின்பு.................

இவர் இந்த வீதியால் போயிராது போயிருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார் என்று தத்துவாந்தம் பேசுவது என்பது சுலபமானது. ஆனால் அன்றாடம் வாகனங்கள் விபத்திற்கு உள்ளாகாது வீதியை புரணமைத்து பாதுகாத்து விதிமுறைகளை நடைமுறைபடுத்துவதே கடினமானது.

ஈழவிடுதலைபோரை "லிபரேசன் ஓபரேசன்" முடிவுக்கு கொண்டுவரும் என்றுதான் அப்போதைய சிங்கள அரசு நினைத்தது தன்னாலான எல்லா ஏற்பாடுகளையும் செய்து படைநடவடிக்கையை தொடங்கியது. மக்கள் என்றுமே அறிந்திரா செல்கள் விமான குண்டுகள் என்று அள்ளி வீசியபோது மக்கள் சிதறி ஓடினார்கள். புலிகளுக்கும் எல்லாம் புதிதாகவே இருந்தது துணிவு என்ற ஒன்றைவிட வேறேதும் அவர்களிடம் இருக்கவில்லை அந்த படையை எதிர்க்க போதிய போராளிகளோ ஆயுதங்களோ ஏதுமே இருக்கவில்லை. இது ஒருபுறம் நடந்துகொண்டிருக்க புலிகளின் கதை இதோடு முடிந்துவிடும் இனி அடுத்த கட்ட அரசியலுக்கு இறங்கினால் நாம்தான் தமிழரின் தலைவர்கள் என்ற எண்ணத்துடனேயே அமிர்தலிங்கம் இந்தியா சென்று ஓடிய ஈப்பி சாப்பி களை சந்தித்து றோவினுடைய நிகழ்சிநிரலை உருவாக்கி கொண்டிருந்தார்கள்.

இறந்துகொண்டிருந்த மக்களை பற்றியோ ஈழவிடுதலைக்காக தம்மை அர்பணித்து போராடிகொண்டிருந்த புலிகளை பற்றியோ எந்த அக்கறையும் அவர்கள் கொள்ளவில்லை அடுத்த தலைவர் நான் செயலாளர் நீ என்ற சதிவேலைகளே நடந்துகொண்டிருந்தது.

புலிகள் எல்லாவற்றையும் இழந்துகொண்டிருந்தார்கள்...................... அவர்களிடம் இப்போது எஞ்சி இருந்தது அவர்களுடைய உயிர்தான்.

அதை எப்படி ஆயுதம் ஆக்குவது என்ற கேள்விக்கு விடையாகவே உயிராயுதமாக மில்லர் வெடித்தான். அது கொழும்பில் இருந்த இராணுவ தலைமையகம் மட்டும் அதிர்ந்தது. சிங்கள படைக்கும் இப்படியானதொரு படையெடுப்பு என்பது இதுவே முதல் முறை அடுத்து புலிகளின் நகர்வு எதுவாக இருக்கும் என்பது அவர்களுக்கு புரியவில்லை................... லிபரேசன் ஓபரேசன் ஒரு தளர்வு நிலையை அடைந்தது.

புலிகள் எம்ஜிர் உடன் கொண்டிருந்த உறவு கராணமாக இந்திய மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கபட்டு அவசர உணவு தேவையை தீர்க்கும்படி எம்ஜிர் வற்புறுத்தவே. உணவுகளை ஏற்றியபடி ஒரு கப்பல் சென்னையில் இருந்து புறபட்டது அதை இடைமறித்து சிங்களபடை திருப்பி அனுப்பியது. அதற்கு பதிலடியாகவே உணவு பொட்டலங்கள் மிக் ரக விமானங்கள் மூலம்போடபட்டது (மிக் முதன்முறை இலங்கை வான்பரப்பில் பறந்தது அப்போதுதான்) அதோடு தொடங்கியது இந்திய இலங்கை பேச்சுகக்கள்.

தலைவர் டில்லிக்கு பேச்சுவார்த்தைக்கு என்று ஒரு நிகழ்சிநிரலை கொடுத்தே அழைத்து செல்லபட்டார் அங்கே சென்றவுடன்தான் மத்திய அரசின் அழுத்தங்களும் றோவின் திருவிளையாடலும் திரைக்குபின்னால் நின்கொண்டிருந்த அமிர்தலிங்கம் நாடக குழுவையும் புலிகளின் தலமை முதன்முறையாக நேரிலே கண்டுகொள்கிறது. நேரடியாகவே ராஜீவ்காந்தி வந்து நடத்திய இராண்டாவது நாள் பேச்சுவார்ததையிலும் தமிழர்களுக்கான எந்த விடயம் பற்றியும் இல்லை அமிர் உங்களுக்கு தலைமைதாங்குவார் போராளி குழுக்களான நீங்கள் ஈப்பி சாப்பி எல்லாம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு அமீர் வாழ்க என்று சுவரொட்டிகள் ஒட்டும் தேசிய பணியை தொடர்ந்து செய்து நாட்டுக்காக போராடுங்கள் என்ற தொனியிலே அமைந்தது. இதில் எமக்கு என்ன லாபம் என்ற அன்ரன் பாலசிங்கம் அவர்களின் கேள்விக்கு பிரபாகரனுக்கு இலங்கையில் ஒரு முக்கிய பதவி பெற்றுதரலாம் என்று ராஜீவ் உறுதி வழங்கினார். எங்களுக்கு பதவி மக்களுக்கு? என்ற பிரபாகரனின் கேள்வியை பாலசிங்கம் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதுதான் உங்களுக்கு பதவி தருகிறோமே மக்களை பற்றிய விடயங்களை பின்னாளில் பார்ககலாம் என்றார் ராஜீவ். அதற்கு நான் உங்களைபோல அரசியல்வாதியில்லை நான் ஒரு போராளி என்று தலைவர் சொன்னதை மொழிபெயர்க்க பாலசிங்கம் அவர்கள் தயங்கினார் அண்ணே சொல்லுங்கோ என்று திரும்பவும் அவர் சொன்னபோது அதை அவர் மொழிபெயர்த்தார். அதோடு கோபம்கொண்டே ராஜீவ்காந்தி எழுந்துபோய்விட்டார் பின்பு புலிகள் தாம் பேச்சுவார்த்தை நடத்துவதென்றால் எம்ஜிர் அவர்களின் நம்பிக்கைக்கு உரிய ஒருவர் அதில் பங்குபெறவேண்டும் என்றும் ஒருவரை அனுப்பும்படியும் எம்ஜிர் ரை புலிகள் கேட்டனர். பின்பு தமிழக்த்தில் இருந்து ஒருவர் சென்றபின்பு கிட்டதட்ட சிறையடைக்கபட்டதுபொல் இருந்த தலைவரேடு பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆயுதங்களை ஒப்படைக்க புலிகளின் தலமை ஒப்புகொண்டது........................... செய்தி ஈழத்திற்கு வந்ததும் போராளிகள் பொங்கி எழுந்துவிட்டனர் ஆயுதங்களை ஒப்படைக்க முடியாது அப்படியாயின் நாம் இயக்கத்தை விட்டு விலகுகிறோம் என்று ஒரு புதிய குழு தொடங்கியது அதை கட்டுபடுத்த கிட்டுஅவர்கள் ஒரு பேச்சுவார்த்தையை போராளிகளோடு நடத்திகொண்டிருந்தார்.

ஆரம்ப பேச்சுவார்த்தைகளில் தமிழ் ஈழத்தில் ஒரு தேர்தல் நடத்தபடும் என்றும் அதன் முடிவின்படியே புலிகளோ அமீரோ தலமையை ஏற்பது என்றும் சொல்லபட்டது அதற்கும் புலிகள் ஒப்புகொண்டனர். ஆனால் தனது தோல்வியை தெளிவாக தெரிந்த அமீரும் றோவும் பின்பு ஒருபோதும் அந்த தேர்தல்பற்றி எதையுமே பேசவில்லை. டில்லியில் புலிகள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் அமீரை சாட்டியே நிராகரிக்கபட்ன இத்தனைக்கும் கொழும்பில் இருந்து கும்பியடித்ததை தவிர இவர் என்ன செய்தார் என்று யாருக்கும் தெரியாது. (ஆனால் தமிழ் இனத்தையே காத்தாராம் என்று ஒரு புரளியை புலிகாய்ச்சல் பிடித்தவர்கள் சொல்கிறார்களே தவிர எப்படி காத்தார் என்பதற்கு அவர்களிடமும் பதில் இல்லை). கடைசியாக புலிகளை கிட்டதட்ட வற்புறுத்தியே ஒப்பந்தத்தில் கைஎழுத்து வாங்கியது இந்திய அரசு. ( இதற்குள் தலைவருடைய உண்ணாவிரம் எம்ஜிர் அவர்களின் மருத்துவ அமெரிக்க விஜயம் என்று அதற்கான காரணங்களும் இன்னும் பல அமீர் நாடக குழுவின் நாடகங்களும் உண்டு)

அது சரியோ தவறோ என்ற வாதத்திற்கான விடையை காணுவது என்பது போராட்டத்தை சற்றேனும் சுமந்தவர்களுக்கும் அதை வேடிக்கை பாhத்தவர்களுக்கும் இடையில் எப்படியொரு இடைவெளி தோன்றுமோ அதுபோலவே விடைகளும் தோன்றும். ஆதாவது லஞ்சிற்கு பீவ் ஸ்ரேக் சாப்பிட்டுவிட்டு வந்து 3மணி மீட்டிங்கில் மிருகவதை கொடுமையானது என்று மிருகாபிமானம் பேசிவிட்டு செல்வார்களே அவர்களுக்கும் மிருகங்களை கட்டி காப்பவனுக்கும் ஒரு இடைவெளியிருக்குமல்லவா அதுபோலவே இதுவும்.

அமீரை போடவேண்டும் என்ற எண்ணம் புலிகளுக்கு தோன்றிய காலம் அதுதான். அதன்பின்பு அமீரை போடுவது என்ற முடிவை அவர்கள் எடுத்துவிட்டார்கள் அந்தளவிற்கு அவர் விடுதலையை தனது பதவிக்காக விலைபேசியிருந்தார். அமீர்ரை போடும் பொறுப்பு பருத்துறையை சேர்ந்த விசுவிடம் ஒப்படைக்கபட்டது பொட்டம்மானுக்கு முன்பு புலிகளின் புலனாய்வு வேலைகளை இவரே நெறிபடுத்தி வந்தார் வன்னியில் வவுனிகுளம் பகுதியில் இவருடைய முகம் அமைந்திருந்தது அங்கிருந்தே புலானாய்வு வேலைகயை செயற்படுத்தி வந்தார்கள். அமீரை போடும் பொறுப்புடன் விசு அவர்கள் கொழும்பு சென்றார்...................

பேசவேண்டும் என்றே விசுவும் கூடி சென்றவரும் அமீர் வீட்டிற்குபோனார்கள் பேச என்று சென்றபடியால்தான் அவர்களை சோதனை இன்றி அவர்கள் உள்ளே அழைத்தார்கள். இவர்கள் மறைத்துவைத்திருந்த பிஸ்டலை எடுத்து சுட்டுவிட்டு ஒட முயன்றார்கள் முடியவில்லை குப்பியையும் கடித்துவிட்டு வைத்திருந்த ஒரு கைகுண்டையும் வெடிக்க வைத்து தற்கொலை செய்தார்கள். அப்போதைய நேரத்தில் விசுவினுடைய இழப்பு புலிகளை பொறுத்தவரை இரு ஈடுகொடுக்க முடியாதது புலானாய்வு துறையை புலிகளுக்கு கட்டமைத்தவர் அவரே. இப்படியொரு திட்டத்தை ஏன் அவர் வகுத்தார் என்பது புலிகளின் தலமைக்கு கூட இன்றுவரை தெரியாது.

அமீரை போடவேண்டும் என்று நினைத்தார்களே தவிர விசுவை கொடுத்து அதை செய்ய நினைக்கவில்லை ஆனால் விசு அப்படியொரு முடிவை தானாகவே எடுத்து செய்திருந்தார்.

அமீரை சுட்ட விதத்திலும் புலிகளின் தலமைக்கும் புலிகளுக்கும் உடன்பாடில்லை பேச அழைத்து சுட்டது என்பதை அவர்கள் தங்களது போர்விதிகளுக்கு மாறாக பாhத்தார்கள்.

அமீர் இறந்து இரண்டாம் நாளே விசுவிற்கு சுவொரொட்டி அடித்து எல்லா இடமும் ஒட்டியிருந்தார்கள். (அதை புலிகள் மறதை;ததாக மாற்று கருத்து மாணிக்கங்கள் இங்கே எழுதுகிறார்கள்) விசுவினுடைய இறுதி நிகழ்வு அவருடைய முகாம் இருந்த வவுனிகுள பகுதியில் அமீர் இறந்து இரண்டாம்நாள் பெரிதாக மக்களால் அனுஸ்டிக்க பட்டிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் புலிகளின் உள் கணிப்புகளை எல்லாம் அறியக் கூடிய அளவுக்கு

புலிகளின் தலைமைப் பீடத்தில் இருந்தவர் என்று எனக்கு தெரியாமல் போய் விட்டது. இனி புலிகளின் செயல்பாடுகள் பற்றி கதைக்கும் போது

இருபத்தி எட்டு வருடத்துக்கும் மேலாக பிரான்சில் இருக்கும் உங்களிடம் கேட்டு தெரிந்து விட்டு எழுதுகின்றேன். நன்றி

மீண்டும் தப்பான புரிந்துணர்வு

புலிகள் வேறு யாருமல்லர்

எனது அண்ணன் தம்பிகள்

புலிகளில் இருந்தால்தான் அமிருக்கு நடந்தது தெரியவேண்டுமென்றில்லை. சாதாரண ஒரு பொதுமகனுக்கே தெரிந்த விடயம்தான்.

அடுத்தது

வெளிநாடுவந்தாலும்

1000 வருடம் ஆனாலும்

தாயகத்துக்கும் எனக்குமான தூரம் மிகச்சிறியது.

வெளியில் வந்தால் எதுவும் தெரியாது என்பதும் மிகத்தவறான கணிப்பு. :(:(:(

Edited by விசுகு

ஆமிர்தலிங்கம் ஒரு துரோகி, இளைஞர்களின் போராட்டத்தை கொச்சை படுத்தி வளர விடாமல் மித வாத அரசியல் பேசி போராட்டத்தை இல்லாமல் செய்வதில் பெரும் பங்காற்றியவர். அவர் இடம் வெற்றிடமான பின் தான் மாற்றங்கள் வந்தன.

இந்தியனின் வால் பிடித்து தாங்களே மீண்டும் அரசியல் செய்யும் நிலமைக்கு கொண்டு வரலாம் என்றுதான் இந்திய ஆமி நாட்டுக்கு வந்த போது கனவு கண்டவர்.

இங்க இலண்டினில ஒரு பரதேசி நாங்க தமிழ்படிக்க குடுக்கிற காசை வேண்டி கொன்டு அமிர்தலிங்கத்தின் மகனை கூப்பிட்டு பிரதம விருந்தினராக்கி கலை விழா வைக்கிறார்,.

இப்படி துரோகிகளும் ,ஊத்தை அரசியல் செய்தவனுக்கும் தான் இப்ப காலம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி உங்களுக்கு கடந்த கால வரலாறு தெரியாதா ?

நீங்கள் அப்போது புலிகளுக்கு உங்கள் கருத்துகளை ஏன் சுட்டிக்காட்டவில்லை !

நிழலி மொக்குத்தனமான வேலையெல்லாம் செய்யமாட்டார்!

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கத்தை புலிகள் கொல்லாமல் விட்டிருக்கலாம்.சங்கரி போல அரசியல் அனாதையாக்கபட்டிருப்பார்.

அவர் கொல்லப்பட்டதால் எந்த அனுதாபமும் ஏற்படவில்லை. ஏனெனில் இளைஞர்களை உசுப்பேத்தி விட்டு ( இரத்தப்பொட்டு வைக்கும் அளவுக்கு)தமிழ் மக்களின் வாக்குகளை அள்ளியவர், மக்களின் உணர்வுகளை உணரதவறி விட்ட ஒரு தலைவர் எதனையும் தமிழ்மக்களுக்காக செய்யவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிழலி மொக்குத்தனமான வேலையெல்லாம் செய்யமாட்டார்!

கிருபன் நீங்கள் என்ன நிழலியின் பேச்சலரா.....?

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் நீங்கள் என்ன நிழலியின் பேச்சலரா.....?

ஆம். நல்ல சம்பளம் தருகின்றார் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.