Jump to content

கடாபியின் கடைசி நாட்கள்?


akootha

Recommended Posts

கடாபியின் முக்கிய 'ஓயில்' குத நகரம் வீழ்ச்சியடைந்தது

லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபியின் முக்கியமான எண்ணெய்க் குதங்கள் இருக்கும் பிறீகா நகரம் இன்று லிபிய போராளிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தலைநகர் திரிப்போலிக்கு கிறக்கே சுமார் 750 கி.மீ தொலைவில் இந்த நகரம் இருக்கிறது. மேற்கண்ட நகரத்தின் வீழ்ச்சி தமக்கு ஒரு பின்னடைவே என்று கடாபி ஆதரவுப் படைகள் தெரிவித்துள்ளன.

அதேவேளை இன்று திரிப்போலிக்கு 160 கி.மீ தொலைவில் உள்ள சில்ரன் நகரமும் போராளிகள் கரங்களுக்கு வந்துள்ளது. ஆனால் கடுமையான நிலக்கண்ணி வெடிகளுக்குள்ளால் முன்னேறிய காரணத்தால் கூடுதல் இழப்புக்கள் ஏற்பட்டதாக போராளிகள் தரப்பு தெரிவிக்கிறது.

இத்தனைக்குப் பிறகும் இன்று வெளியிட்ட அறிவிப்பில் பதவி விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கடாபி தெரிவித்துள்ளார்.

http://www.alaikal.com/news/?p=79742

-------------------------------------------------

எகிப்தின் பாணியில் லிபியாவிலும் தொடர் போராட்டங்கள்: http://www.yarl.com/...showtopic=81917

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply

திரிப்பொலியை நேட்டோ உதவியுடன் அணுகிவிட்டனர்?

Link to comment
Share on other sites

போர்நிறுத்தம் கோருகிறது லிபிய அரசாங்கம்

லிபியாவில் கர்ணல் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் தலைநகர் திரிபோலியை நோக்கி முன்னேறி வரும் நிலையில், உடனடியாக போர்நிறுத்தம் வரவேண்டும் என்று லிபிய அரசாங்கம் கோரியுள்ளது.

சனிக்கிழமை இரவு திரிபோலி நகரின் சில பாகங்களில் கிளர்ச்சிப் படையினருக்கும் கடாஃபிக்கு விசுவாசமான படையினருக்கும் இடையே கடும் சண்டைகள் நடந்திருந்தன.

"உடனடி போர்நிறுத்தம் வேண்டும்"

இதனிடையே இன்று லிபியாவின் உள்துறை அமைச்சர் உடனடியாக போர்நிறுத்தம் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது எழுந்துள்ள நெருக்கடிக்கு யுத்தமில்லாத வழியில் தீர்வு காண முடியும் என்றும், அது சாத்தியமே என்பதை தமது அரசாங்கம் மாதக் கணக்கில் சொல்லி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் சொன்னதைக் கேட்டிருந்தால், நேட்டோவின் கரங்கள் ரத்தக் கரை படிந்தவையாக மாறியிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது." என்றும் லிபிய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

நேட்டோ இராணுவ உதவி வழங்கியதால்தான் கிளர்ச்சிப் படையினரால் திரிபோலிவரை முன்னேறி வர முடிந்துள்ளது என்று அவர் கூறினார்.

"இப்போது அவர்கள் திரிபோலிக்குள்ளும் நுழைய அனுமதிக்கப்பட்டால், அரசியல் சீர்திருத்தம் அவர்களது நோக்கமாக இருக்காது. இரத்த வெறியும், பழிவாங்கும் எண்ணமும்தான் அவர்களிடையே மேலோங்கி நிற்கும்." என்று லிபியாவின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/global/2011/08/110821_libyaceasefire.shtml

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்நிறுத்தம் கோருகிறது லிபிய அரசாங்கம்

மகிந்தவின் நண்பன் கடாபி, ஆறு மாதத்துக்கு முன்பே... சரணடைந்து போர் நிறுத்தம் கேட்டிருந்தால் அதனைச் செய்திருக்கலாம்.

அடுத்து வரும் சில நாட்களில், கடாபி கொல்லப்பட்டோ....., கைது செய்யப்பட்டோ, நாட்டை விட்டு ஓடியோ.... போகும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அடிச்சுத் துவைங்கடா..... கடாபியை கோவணத்தோடை பார்க்க ஆசையாயிருக்கு. :D

Link to comment
Share on other sites

மகிந்தவின் நண்பன் கடாபி, ஆறு மாதத்துக்கு முன்பே... சரணடைந்து போர் நிறுத்தம் கேட்டிருந்தால் அதனைச் செய்திருக்கலாம்.

அடுத்து வரும் சில நாட்களில், கடாபி கொல்லப்பட்டோ....., கைது செய்யப்பட்டோ, நாட்டை விட்டு ஓடியோ.... போகும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அடிச்சுத் துவைங்கடா..... கடாபியை கோவணத்தோடை பார்க்க ஆசையாயிருக்கு. :D

சிறி அண்ண, பின்லேடனுக்கு நடந்தது போல் கடாபிக்கும் நடக்கலாம்... அதாவது, கடலுக்கடியில் கலைக் கட்டி அடக்கம் பண்ணிவிட்டோம் என்று அறிவித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ண, பின்லேடனுக்கு நடந்தது போல் கடாபிக்கும் நடக்கலாம்... அதாவது, கடலுக்கடியில் கலைக் கட்டி அடக்கம் பண்ணிவிட்டோம் என்று அறிவித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. :rolleyes:

கல்லைக் கட்டி கடலில் போட்டால் உடம்பு முழுமையாக இருக்கும் குட்டி.

புரட்சியாளர் கைகளில் அம்பிட்டால்....பீஸ்,பீஸாக்கிப் போடுவாங்கள். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

கல்லைக் கடலில் போட்டால் உடம்பு முழுமையாக இருக்கும் குட்டி.

புரட்சியாளர் கைகளில் அம்பிட்டால்....பீஸ்,பீஸாக்கிப் போடுவாங்கள். :icon_mrgreen:

அமெரிக்கா அப்படி அறிவித்தலும் கடாபியை கடலுக்கடியில் தான் அடக்கம் பண்ண வேணும் என்று இல்லை...சிறி அண்ண :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா அப்படி அறிவித்தலும் கடாபியை கடலுக்கடியில் தான் அடக்கம் பண்ண வேணும் என்று இல்லை...சிறி அண்ண :lol:

லிபிய மண்ணில் அடக்கம் பண்ண புரட்சியாளர்கள், சம்மதிப்பார்களா... குட்டி.

வாற மாதம் கடாபி ஆட்சிக்கு வந்து, 42 வருடங்களாகின்றது. அதுக்குள்ளை, ஆளை அமத்த வேணும். :icon_idea:

Link to comment
Share on other sites

லிபிய மண்ணில் அடக்கம் பண்ண புரட்சியாளர்கள், சம்மதிப்பார்களா... குட்டி.

வாற மாதம் கடாபி ஆட்சிக்கு வந்து, 42 வருடங்களாகின்றது. அதுக்குள்ளை, ஆளை அமத்த வேணும். :icon_idea:

அடக்கம் பண்ணுறாங்களோ இல்லையோ, ஆனால் ஆளை அமைத்த வேணும், அப்பத்தான் கடாபியின் தோஸ்த்துகளுக்கு ஒரு பாடமாக அமையும் :icon_idea:

Link to comment
Share on other sites

கடாபியி ஒரு மகன் விடுதலையாளர்களின் கையில்

Link to comment
Share on other sites

-- திரிப்போலிக்குள் புகுந்துள்ள கிளர்ச்சியாளர்கள் சிறிய எதிர்ப்பையே சந்தித்தனர்.

-- ஒபாமா பதவியை விட்டு இறங்க வேண்டுகோள்.

-- இன்னும் சில மணித்தியாலங்கள் இல்லை நாட்களில் வருட கடாபி ஆட்சி முடிவுக்கு வரும் என நம்பப்படுகின்றது.

-- ஆனால் அதன் பின்னர் நிலைமை என்னவாகும் என்ற பயம் உள்ளது.

Beyond Tripoli’s Cheering, Fears of What’s Next

http://www.nytimes.com/2011/08/22/world/africa/22scene.html

UK Prime Minister David Cameron

It is clear from the scenes we are witnessing in Tripoli that the end is near for Gaddafi.

He has committed appalling crimes against the people of Libya and he must go now to avoid any further suffering for his own people.

Office of French President Nicolas Sarkozy

As the outcome is no longer in doubt, the president of the republic urges Col Gaddafi to spare his people pointless suffering by renouncing without delay what little powers he retains.

Nato Secretary General Anders Fogh Rasmussen

The Libyan people have suffered tremendously under Gaddafi's rule for over four decades. Now they have a chance for a new beginning.

Now is the time for all threats against civilians to stop, as the United Nations Security Council demanded. Now is the time to create a new Libya - a state based on freedom, not fear; democracy, not dictatorship; the will of the many, not the whims of a few.

That transition must come peacefully. It must come now. And it must be led and defined by the Libyan people.

http://www.bbc.co.uk/news/world-africa-14611277

Link to comment
Share on other sites

வீழ்ந்தது லிபியாவின் திரிபோலி: கடாபியின் மகன்மார் கைது

42 ஆண்டுகால ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து லிபியாவின் பல நகரங்களையும் கேணல் கடாபியின் எதிர்பாளர்கள் கைப்பற்றி வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை கேணல் கடாபி மறைந்திருக்கும் முக்கிய பகுதி எனக் கருதப்படும் திரிபோலியையும் எதிர்ப்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

கேணல் கடாபியின் படையினருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் பாரிய சண்டை நிலவியதன் பின்னர் திரிபோலி எதிர்ப்பாளர்களின் கைவசமாகியுள்ளது. இந்நிலையில் கேணல் கடாபியின் மகன்களான சைப் அல் இல்ஸாம் மற்றும் சாதி ஆகியோரும் எதிர்ப்பாளர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கேணல் கடாபியின் நிலைபற்றி இதுவரை எந்த செய்திகளும் வெளிவரவில்லை.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/26718-2011-08-22-03-42-31.html

Link to comment
Share on other sites

கடாபியின் மூன்று மகன்மார்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் அவர் வாரிசான சாயிப் இஸ்லாம் கடாபி, கடாபியின் வாரிசு என கருதப்பட்டவர்.

இவரின் கைதை உறுதி செய்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், இவரை தன்னிடம் ஒப்படைக்கும் படி கேட்க உள்ளது.

Link to comment
Share on other sites

வாசஸ்தலத்தைச் சூழ மோதல்; 24 மணித்தியாலங்களில் 1300 பேர் பலி

நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகலிலிருந்து ஏற்பட்ட மோதல்களில் 1300 பேர் பலியானதாகவும் சுமார் 5000 பேர் காயமடைந்தாகவும் லிபிய தகவல் துறை அமைச்சர் மௌஸா இப்ராஹிம் செய்தியாளர் மாநாடொன்றில் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த எண்ணிக்கையை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

தலைநகர் திரிபோலியில் இன்னும் 15-20 சதவீதமான பகுதிகளில் கடாபியின் ஆதரவுப் படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கிளர்ச்சிப் படைகளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கடாபியின் பாப் அல் அஸீஸீயா மாளிகையிலிருந்து இன்று திங்கட்கிழமை அதிகாலை வெளிவந்த இராணுவத் தாங்கிகள் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, கடாபியின் அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சி படைகள் தலைநகர் திரிபோலியில் முன்னேறி வரும் நிலையில் திரிபோலியின் பச்சை சதுக்கப் பகுதியில் நேற்றிரவு மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.அச்சதுக்கத்தில் கடாபியினால் அறிமுகப்படுத்தப்பட்ட பச்சை நிறத்திலான லிபிய தேசியக் கொடியை கிளர்ச்சியாளர்கள் கிழித்தெறிந்தனர். இப்பகுதியில் முன்னர் கடாபிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கிளர்ச்சிப் படைகளின் முன்னேற்றத்தை மேற்கு நாடுகளின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

கடாபிக்கு எதிரான உத்வேகம் இன்றிரவு இன்றிரவு திருப்புமுனையை அடைந்துள்ளது என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். 'ஒரு கொடுங்கோலனின் பிடியிலிருந்து திரிபோலி நழுவுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் அந்நாட்டு தேசிய பாதுபாப்புச் சபைக் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக தனது விடுமுறையை சுருக்கிக்கொண்டு லண்டனுக்குத் திரும்பினார். கடாபியின் முடிவு நெருங்கிவிட்டது தெளிவாகியுள்ளது கமெரோன் கூறினார்.

கேணல் கடாபி கடந்த மே மாதத்திற்குமுன் பகிரங்கமாக தென்படவில்லை. எனினும் நேற்று ஞாயிறு இரவும் அவர் வானொலி மூலம் உரையாற்றினார். கிளர்ச்சியாளர்களிடமிருந்து திரிபோலியை பாதுகாப்பதற்கு ஆயுதம் ஏந்துமாறு நகர மக்களை அவர் கோரியுள்ளார். கடாபியின் கட்டுப்பாட்டில் அவருக்கு விசுவாசமான சுமர் 65,000 படையினர் இருப்பதாக லிபிய தகவல்துறை அமைச்சர் மௌஸா இப்ராஹிம் கூறியுள்ளார். ஆனால் படையினர் சிலர் கிளர்ச்சியாளர்களிடம் சரணடைந்துள்ளனர்.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/26742--24-1300-.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடாபிக்கு ஆதரவு கொடுக்க தயார் என்ற மகிந்த எங்கே

அவருக்கே வழியை காணோம் அப்படியிக்கையில் எப்படி .....?

மகிந்தவின் நெருங்கிய நண்பனின் நாட்கள்....?

இவனுடன் சேர்ந்தாலே அவங்களுக்கும் தரித்திரம் பிடிச்ச மாதிரித்தானே.

Link to comment
Share on other sites

அடுத்த இலக்கு ஈரான்>>>>>>????????????? ஈரானை அடக்க சொல்லி சவுதி அமெரிக்காவுக்கு நெருக்குதல்.

- லிபியாவில் அல்கைதாவின் கவனத்தை திருப்பி விட்டு ஈராக்கில் இருந்தும் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை பாதுகாப்பாக அமெரிக்க எடுக்குமா?

இந்த வெற்றியில் ஈரான் மீது கை வைக்க படுமா?

ஈரானை விடவும் ஒரு முக்கிய நாட்டின் மீது அமெரிக்காவின் கண் இருக்கு அது எந்த நாடு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த இலக்கு ஈரான்>>>>>>????????????? ஈரானை அடக்க சொல்லி சவுதி அமெரிக்காவுக்கு நெருக்குதல்.

- லிபியாவில் அல்கைதாவின் கவனத்தை திருப்பி விட்டு ஈராக்கில் இருந்தும் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை பாதுகாப்பாக அமெரிக்க எடுக்குமா?

இந்த வெற்றியில் ஈரான் மீது கை வைக்க படுமா?

ஈரானை விடவும் ஒரு முக்கிய நாட்டின் மீது அமெரிக்காவின் கண் இருக்கு அது எந்த நாடு?

வட கொரியா. அனால் அது அவ்வளவு சுலபமாக அமையாது இந்த விடயம் அமெரிக்காவுக்கும் தெரியும் ............ :lol:

Link to comment
Share on other sites

எப்படி வீழ்ந்தது திரிப்போலி 3 மாதம் விசேட பயிற்சி

லிபியத் தலைநகர் திரிப்போலியை கைப்பற்றுவதற்கான விசேட பயிற்சிகள் போராளிகளுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே வழங்கப்பட்டுள்ளன என்று நியூயோர்க் ரைம்ஸ் தொவிக்கிறது.

பிரிட்டன், பிரான்ஸ் உட்பட பல நாடுகள் போராளிகளுக்கான விசேட பயிற்சிகள், அதி நவீன ஆயுதங்கள் போன்றவற்றை வழங்கி தாக்குதலை தூண்டி விட்டுள்ளன. இந்தப் பயிற்சி நடைபெற மறுபுறம் மேலைத்தேய ஊடகங்கள் கவனத்தை திசை திருப்பும் செய்திகளை வெளியிட்டுள்ளன. போராளிகளால் திரிப்போலியை கைப்பற்ற இயலாது என்று அவை கதையளந்து வந்தன.

அதேநேரம் யாரும் எதிர் பாராத வேகத்தில் கடாபி வீழ்ச்சியடைய நேட்டோ நாடுகள் வழங்கிய உதவியே காரணம் என்று போராளிகள் நன்றி கூறினார்கள். நன்கு பயிற்றப்பட்ட போராளிகள் திரிப்போலியில் உறங்கு நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள்.

போராளிகள் ஸாவியா நகரில் இருந்து திரிப்போலியைத் தொட்டதுதான் தாமதம் நாலாபக்கங்களில் இருந்தும் புதிய அதிரடித் தாக்குதல்கள் ஆரம்பிக்க கடாபியின் படைகள் கொலகொலத்துவிட்டன. கடாபியின் மகன்கூட தப்பியோட முடியாதபடி மாட்டிக் கொண்டார். ஆயுதக் கொள்கலங்கள் நாட்டில் இருந்த ஏரி வழியாக இரகசியமாகக் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. நன்கு திட்டமிடப்பட்ட பாரிய இராணுவ மூளைகள் இந்த வெற்றிக்குப் பின்னால் தொழிற்பட்டுள்ளன. ஏறத்தாழ ஓர் அதிரடித்தாக்குதலில் கடாபி சரிக்கப்பட்டிருக்கிறார்.

http://www.alaikal.com/news/?p=79990

Link to comment
Share on other sites

கடாபி தற்கொலை செய்யமாட்டார் அரசியல் தஞ்சம் கோரலாம்

தோல்வியின் கடைசிப் படிக்கு வந்துவிட்ட கேணல் கடாபி அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற கேள்விகள் மேலைத்தேய ஊடகங்களில் பரவலாக வெளிவர ஆரம்பித்துவிட்டன.

தற்போது இவர் ஹிட்லர் கடைசிகாலத்தில் பங்கரில் இருந்ததைப் போன்ற அவலமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். எல்லாவற்றையும் ஆறு மாத காலத்தில் பறி கொடுத்து அரிச்சந்திரன் போல மயானத்திற்கு வந்துள்ளார். ஆகவே ஹிட்லர் போல மனைவியுடன் தற்கொலை செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு ஆய்வாளர்கள் இல்லை என்று தெரிவித்துள்ளனர். வெனிசியூலா, சிம்பாப்பே, துருக்கி ஆகிய நாடுகளில் ஏதோ ஒரு நாட்டில் அரசியல் தஞ்சம் கோருவதற்கு முயற்சி எடுப்பார்.

சர்வாதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை பெற்று எஞ்சிய காலத்தை வாழ்ந்து முடிக்கவே முயற்சிப்பார் என்று ஒரு கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. அப்படிச் செய்தாலும் மேற்கண்ட நாடுகள் அவரை சர்வதேச நீதிமன்றுக்கு ஒப்படைக்காமல் வைத்திருக்க முடியாது.

அதேவேனை ருமேனிய சர்வாதிகாரி கயோசிஸ் தானாக சரணடைந்து 1989 ம் ஆண்டு விசாரணையை சந்தித்து மரணமடைந்தது போல ஒரு முடிவை அவர் சந்திக்க நேரிடும என்றே எதிர் பார்க்கப்படுகிறது.

ரோம் நகரம் எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல திரிப்போலி எரியும்போது பிடில் வாசிக்கக் கூடிய கோமாளித்தனமான மூளையுடைவர் கடாபி. அவர் சாகுமளவிற்கு போக மாட்டார். அச்சத்தினால் மற்றவர்களை கொல்லும் உளவியல் நோயாளியான கடாபி தான் தற்கொலை மூலம் மரணமடைய அச்சமடையும் சர்வாதிகாரிகளின் வரிசையிலேயே வருகிறார் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

http://www.alaikal.com/news/?p=80001

Link to comment
Share on other sites

இந்தத் தாக்குதலிற்கு பின்னால் கிளர்ச்சிக்காரர்களிற்கான பயிற்சி ஆயுதம் வழிநடத்தல்களில் பிரான்சின் உளவுத்துறைக்கு பெரிய பங்கு உண்டு. தாங்குதல்கள் தொடங்கியதுமே இந்தத் தடைவை திரிப்போலி வீழ்ந்துவிடும் என பிரான்ஸ் ஊடகங்களில் செய்திகள் வெளிவரத்தொடங்கி விட்டிருந்தது.அதனை பிரான்சின் வெளிநாட்டமைச்சரும் உறுதி செய்திருந்தார்.

Link to comment
Share on other sites

உலகிலேயே அதி சிறந்த மசகு எண்ணெயை லிபியா கொண்டுள்ளது. அதாவது குறைந்த செலவில் சுத்திகரிக்கப்பட்டு பாவனை செய்யக்கூடியது. இந்த மசகு எண்ணெயை மேற்கு ஐரோப்பா குறிவைத்துள்ளது. அதைவிட நிலவாயுவும் உள்ளது. சீனாவே இதில் நட்டமடைந்துள்ளது, கடாபியுடன் வளர்த்த உறவு போய்விட்டது.

இந்த வளங்களை இத்தாலி, பிரான்சு ஆகிய நாடுகளே அதிகளவில் 'அனுபவிக்கும்' என கூறப்படுகின்றது.

அதேவேளை ஏற்கனவே பல இனக்குழுமங்களை கொண்ட லிபியாவில் யார் எண்ணெய் குதங்களை கட்டுப்படுத்துவது என்ற போட்டி தொடங்கிவிட்டது. இதனால் மேற்குலகம் இன்னும் சில நாட்களில் லிபியாவில் 'அமைதியை' தேடி பல நகர்வுகளை மேற்கொள்ளும்.

Link to comment
Share on other sites

அடுத்த இலக்கு ஈரான்>>>>>>????????????? ஈரானை அடக்க சொல்லி சவுதி அமெரிக்காவுக்கு நெருக்குதல்.

- லிபியாவில் அல்கைதாவின் கவனத்தை திருப்பி விட்டு ஈராக்கில் இருந்தும் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை பாதுகாப்பாக அமெரிக்க எடுக்குமா?

இந்த வெற்றியில் ஈரான் மீது கை வைக்க படுமா?

ஈரானை விடவும் ஒரு முக்கிய நாட்டின் மீது அமெரிக்காவின் கண் இருக்கு அது எந்த நாடு?

அடுத்தது சிரியா. அவர்கள் தான் கணக்காக முதுகை காட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.ஈரான்,வடகொரியாவுடன் இராஜதந்திரப்போர் செய்யத்தான் மேற்குலகம் விரும்பும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆசிய பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கை : கண்காணிப்பு விமானத்தை வழங்கும் அவுஸ்திரேலியா! ஆசிய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்கு இலங்கைக்கு சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தக திணைக்களத்தின் (தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பகுதி) பிரதி செயலாளர் மிச்சேல் சங் இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார். மிச்சேல் சங்கின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமையவே சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலங்கைக்கு வழங்குகிறது. சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் ஆள் கடத்தல் என்பவற்றை தடுப்பது உள்ளிட்ட இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முதற்கட்டமாக இந்த விமானம் வழங்கப்படுவதாக மிச்சேல் சங் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380118
    • ரஷ்ய எல்லை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட 68 யுக்ரேனிய ஏவுகணைகள். யுக்ரேன் வான்பாதுகாப்பு ஒத்துழைப்பினை விரைவுபடுத்தவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது யுக்ரேனுக்கான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார் ரஷ்ய படையினரின் வான் அச்சுறுத்தல் அதிகரித்துவருவதனால் அவசரமாக தமக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு தேவைப்படுவதாக யுக்ரென் ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலன்ஸ்கி அமெரிக்காவிடம் கோரிக்னை முன்வைத்திருந்தார் இந்த நிலையில் யுக்ரேனுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான ராணுவ உதவியில் 6 பில்லியன் பெறுமதியான வான்பாதுகாப்பு உதவித்தொகை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது இதேவேளை யுக்ரேனில் ரஷ்யா இன்று அதிகாலை பாரிய விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் கார்கிவ் நகரில் உள்ள வைத்தியசாலை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ரஷ்ய எல்லை பகுதியில் சுமார் 68 யுக்ரேனிய ஏவுகணைகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1380087
    • எனக்கும் இதே கொள்கை தான், மற்றும் சொந்த இடம் சாவகச்சேரி தான் என்பதால் நீங்கள் சொல்லும் தகவல் உண்மை என இத்தால் அறிவிக்கப்படுகின்றது 🥹
    • இந்தியா மட்டுமா காரணம் ? சீனா, பாகிஸ்தான் , ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் காரணமில்லையா?   செப்டம்பர் 11 தாக்குதல் ,  நீண்டகால சமாதான பேச்சுவார்த்தை,  கருணா பிரிவு, தொழில்நுட்ப வளர்ச்சி , குடும்பத்தில் இருந்து ஒருவர் கட்டாயமாக சேர்தல் ( இதில் பல எதிரானவர்களும் இயக்கத்தில் ஊடுருவினார்கள்), காட்டி கொடுப்பு …… 2004 - 2009 காங்கிரஸ் கூட்டணியில் 16 தொகுதியில் திமுக வென்றிருந்தது. அந்த 16 பேரும் ஆதரவை விழக்கியிருந்தால் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா?  பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வென்ற 6 பெறும் ,  தமிழகத்தில்  இரு கம்னியூஸ்ட் காட்சிகளிலும் இருந்து வென்ற 4 பேரும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தார்கள். திமுக , காங்கிரஸ் ஆதரவை விலக்கினால் பாட்டாளி கட்சியும் ஆதரவை நீக்குமா?  இதே கூட்டணியில் இருந்த மதிமுக (4 வேட்பாளர்கள்) 2006 இல் ஆதரவை விலக்கியிருந்தது. அப்படி திமுக, காங்கிரசுக்கு ஆதரவை 2009 ஆரம்பத்தில்விலக்கபூபோவதாக சொன்னால்  ( வன்னியை மெல்ல மெல்லமாக சிங்களப்படைகள் 2009 சனவரியில் இருந்து கைப்பற்றியது) , 3 மாதத்தில் தேர்தல் வருகுதுதானே என்பதினால் காங்கிரஸ் தனது இலங்கைக்கு எதிராக செயல்பட்டிருக்குமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.