Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞாபகங்களுடன் இன்றும்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆறுவருடங்கள் முதல் எழுதிய கவிதையிது. இன்று பழைய தூசுதட்டியதில் கண்ணில் எட்டியதை இணைக்கிறேன்)

ஞாபகங்களுடன் இன்றும்....

மீண்டும் சந்திப்பதாய்

ஒரு மாலைநேர

ஈரக்காற்றின் உவர்ப்போடு

அழுததாய் ஞாபகம்.

தாஜ்மகால் பற்றியும்

தலைசிறந்த

காதல் இலக்கியம் தந்த

ஜிப்ரான் பற்றியும்

நிறையவே பகிர்தல்கள்.

ஒரு தாஜ்மகால்

ஒரு முறிந்த சிறகு

எங்களுக்காயும் எழுதப்படுமெனும்

எண்ணமேயில்லை

கௌரவப் பிரிதலாய் அது

நீண்டதொரு தசாப்தம் நிறைவாகிறது.

என்றாவது நினைவு வரும்

சிறுவயது ஞாபகம் போல்

எப்போதாவது வந்துபோகும்

ஞாபகங்களுடன் இன்றும்....

காதலென்ற சொல்லுக்காய்

செய்து கொண்ட சத்தியங்கள்

நினைவு இடுக்குகளிலிருந்து

கழன்று விழுகிறது.

சத்தியம் ää சபதம்

சாத்தியமில்லாக் கனவுகள்

எல்லா மனசிலும்

காதலின் வலி உணர்வாயும்

நினைவாயும் நிசம் உணர

மனம் மறுத்து

நடிப்புகள் மேலாக....

'காதல் ஒருதரம்தான்"

மறுபடி மறுபடி வரும் காதல்

என்பது கவர்ச்சியென்ற

சத்தியங்களெல்லாம்

சாத்தியமில்லையென்றா சபதமிட....?

12.03.05

  • கருத்துக்கள உறவுகள்

காதல் ஒரு தடவை தான் வருமா?...எத்தனை முறை தோற்றாலும் புதிதாய் காதலித்து கொண்டே இருப்போம் ஆனால் முதல் காதல் மட்டும் மறக்க முடியாது...கவிதை நன்றாக உள்ளது சாந்தி அக்கா எனது சார்பாக பச்சை

ம் ........யாரைத் தான் காதல் விட்டு வச்சிது!

முதலில் ஒரு பச்சை குத்தி விடுகின்றேனே..!!!! :)

முதற்காதல்............. அதில் அகப்படாதவர் அரிதிலும் அரிது!

ஒருதலையோ, இருதலையோ.... அவர்களின் மனதளவிலேனும் அதைத் தாண்டித்தான் வந்திருப்பர்!

எனக்கும் ஒரு முதற்காதல்........... கதை! :( யாழ்ப்பாண இடப்பெயர்வுக் காலமது!

அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் க(வி)தையாக வரிக்கின்றேன் வெகுவிரைவில்!

அக்கா! பழைய ஞாபகங்களை தூண்டிவிட்டீர்களே!!!!!!!!!!!!!!

இண்டைக்கு நித்திரை கொண்ட மாதிரித்தான்!!!!!!!!!! :D

எனக்கு மிகவும் பிடித்த வரிகள்......

என்றாவது நினைவு வரும்

சிறுவயது ஞாபகம் போல்

எப்போதாவது வந்துபோகும்

ஞாபகங்களுடன் இன்றும்....

  • கருத்துக்கள உறவுகள்

காதலென்ற சொல்லுக்காய்

செய்து கொண்ட சத்தியங்கள்

நினைவு இடுக்குகளிலிருந்து

கழன்று விழுகிறது

.நல்லதொரு காதல் கவிதை சாந்தி அக்கா. ஆறு வருடங்கள் மட்டுமல்ல, இன்னும் அறுநூறு வருடங்களுக்கும் இது பொருத்தமானது.

காதலிக்கும் போது ஒருவன் அல்லது ஒருத்தி, அரசியல்வாதியாகின்றான்(ள்).

அதன் விளைவு தான் அந்த நிறைவற்றப் படாத சத்தியங்கள்!!!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கவிதைக்கு ஒரு பச்சை.

அக்கா நீங்கள் தூசு தட்டி ஏன் சும்மா இருக்கிறவே பக்கம் அந்த தூசை அனுப்பி வைக்கிறீங்கள்....?:):(

  • கருத்துக்கள உறவுகள்

Quote: "'காதல் ஒருதரம்தான்" மறுபடி மறுபடி வரும் காதல் என்பது கவர்ச்சியென்ற சத்தியங்களெல்லாம் சாத்தியமில்லையென்றா சபதமிட....?"

நல்ல கவிதை அக்கா, நன்றி தூசி தட்டி பகிர்வுக்கு, இளமைக்காதல் கவர்ச்சி & காமம் இதை வைத்துதான் வரும், இப்ப உங்கள் கணவன் (நீங்க பூரி கட்டையுடன் திரியாமல்) or மனைவியை காதலித்து பாருங்கள், அது "கவர்ச்சியென்ற சத்தியங்களெல்லாம் சாத்தியமில்லையென்று சபதமிட வரும்"

உண்மையான காதலை இழந்த பின்பும் அதை மறக்காமல் நினைத்து கொண்டு வாழும் அனைவரும் ஒரு உயிர் உள்ள தாஜ்மஹால் தான்..

காதலில் வெற்றி துணையையும் தோல்வி கவிதையையும் தருகிறது...

Edited by வீணா

அருமையான அழகான ஆழமான வரிகள். எண்ணப்பதிவுக்கும் என் முதற்காதலை என்னுள் கொண்டுவந்தமைக்கும் நன்றி சாந்தி.

Edited by அபிராம்

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சந்திப்பதாய்

ஒரு மாலைநேர

ஈரக்காற்றின் உவர்ப்போடு

அழுததாய் ஞாபகம்.

குப்பிளானிலை கடற்கரை இல்லையே அப்ப எந்த ஊராய் இருக்கும்.. :blink: :blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்.

7பச்சை குத்திய 7பேருக்கும் நன்றிகள். :lol:

எனக்கும் ஒரு முதற்காதல்........... கதை! :( யாழ்ப்பாண இடப்பெயர்வுக் காலமது!

அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் க(வி)தையாக வரிக்கின்றேன் வெகுவிரைவில்!

அக்கா! பழைய ஞாபகங்களை தூண்டிவிட்டீர்களே!!!!!!!!!!!!!!

இண்டைக்கு நித்திரை கொண்ட மாதிரித்தான்!!!!!!!!!! :D

என்னமாதிரி கவிதை நித்திரை வந்திச்சோ..?? :lol:

உங்கள் இடம்பெயர்ந்த காதலையும் எழுதுங்கோ. வாசிக்க காத்திருக்கிறோம்.

காதலிக்கும் போது ஒருவன் அல்லது ஒருத்தி, அரசியல்வாதியாகின்றான்(ள்).

அரசியல் இல்லாத வாழ்வேயில்லை புங்கையூரான். எங்கும் அரசியல் எதிலும் அரசியல் இதுதான் உலக அதிசயம்.

உங்களின் கவிதைக்கு ஒரு பச்சை.

அக்கா நீங்கள் தூசு தட்டி ஏன் சும்மா இருக்கிறவே பக்கம் அந்த தூசை அனுப்பி வைக்கிறீங்கள்....? :):(

அப்ப கன கண்ணில தூசி விழுந்து கண்ணீர் வடியுது யாயினி..என்ன..?? :D

இப்ப உங்கள் கணவன் (நீங்க பூரி கட்டையுடன் திரியாமல்) or மனைவியை காதலித்து பாருங்கள், அது "கவர்ச்சியென்ற சத்தியங்களெல்லாம் சாத்தியமில்லையென்று சபதமிட வரும்"

உடையாத உடையாருக்கு ஒரு பச்சை. :lol:

உங்க வீட்டு பூரிக்கட்டை றெம்பத்தான் நொந்து போயிருக்கும் போலை. :icon_idea:

உண்மையான காதலை இழந்த பின்பும் அதை மறக்காமல் நினைத்து கொண்டு வாழும் அனைவரும் ஒரு உயிர் உள்ள தாஜ்மஹால் தான்..

தாஜ்மகால் பல்லாயிரம் பேரின் உழைப்பை உறிஞ்சிய செளிப்பல்லவா வீணா. அது பணக்காரனின் பணம்.

அருமையான அழகான ஆழமான வரிகள். எண்ணப்பதிவுக்கும் என் முதற்காதலை என்னுள் கொண்டுவந்தமைக்கும் நன்றி சாந்தி.

அபிராம், உங்களையும் இக்கவிதை பழைய ஞாபகங்களை மீட்க வைத்திருக்கிறது. ஏதோ ஒரு இடத்தில் பதிவாக்கி வைப்போமென கண்ணில்பட்டதை மீள் பதிவிட்டேன். பலரை வாசிக்க வைத்துள்ளது. நன்றிகள்.

குப்பிளானிலை கடற்கரை இல்லையே அப்ப எந்த ஊராய் இருக்கும்..

சாத்திரி

குப்பிளானில இந்தக்கவிதை எழுதப்படேல்லயே :icon_idea:

Edited by shanthy

உயிர் உள்ள தாஜ்மஹால்

ஏமாற்றியவரோ அல்லது ஏமாந்தவரோ

குப்பிளானிலை கடற்கரை இல்லையே அப்ப எந்த ஊராய் இருக்கும்.. :blink: :blink:

அது மயிலிட்டி பாங்கோ :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.