Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ் அரசாங்கத்தை குறை சொல்ல முதல், எம்மவர் செய்வது சரியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது நான் இருக்கும் இடத்தில் நடந்தது. சிட்னி அகதி முகாமில் தூக்கு மாட்டி இறந்தபின் இதை எழுதனும் போல் இருந்திச்சு.

போன வருடம் 15க்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் குடித்துவிட்டு ஒரு போட்டி, மின் கம்பத்தில் ஏறி கம்பியைத் தொட்டால் $1000. ஒருவன் ஏறி இறங்கி வந்தபின் அவன் சொன்னான் தொட்டுவிட்டேன் என்று சிலர் இல்லையென பயங்கர அடிபாடு,

அதில் சிலர் வெளிக்கிட்டு வீட்டை போக அதற்கு முதலே அங்கு போய் காவல் நின்று திரும்ப அடிபாடு அதில் ஒருத்தனுக்கு கத்தி குத்து, பொலிஸ் வர கில்லி படம் மாதிரி நண்பேண்டா என்று கூறி தவிர்த்துவிட்டார்கள் ஜெயிலை,

பக்கத்து வீடுகளுக்கு எப்படி இருந்திருக்கும் இவர்களின் செயல். இவர்கள் அகதி முகமில் இருந்து வெளி வந்தவுடன் ப்ரிட்ஜ், வசிங் மிசின், தளபாடங்கள்,...etc இப்படி பல வசதிகள் செய்து கொடுக்க, அதில் பலவற்றை வித்துவிட்டார்கள், அந்த பணத்தில் இப்படிப்பட்ட சேட்டைகள்,

இன்னுமொரு கேஸ் நடந்தது இதைவிட மோசமா, இப்ப ஜெயிலில்,

இவர்கள் செய்வதை பார்த்து முகமில் இருப்போர்களை வெளியில் விட அவுஸ் அரசாங்கம் இரண்டு தரம் யோசிக்குமா or இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

சிலரின் செயல்களால்.... பல நாட்டு அரசுகளுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் தப்பான அபிப்பிராயங்கள் ஏற்பட்டுள்ளது உண்மை உடையார்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இனத்திலும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் உள்ளனர். எனவே அரசாங்கம் இப்படியான சம்பவங்களைப் பொதுமைப்படுத்தி ஒரு இனத்தை முத்திரைகுத்துவதில்லை. அரசாங்கம் தேவையான ஆராய்வுகளை மேற்கொண்டே தமது கொள்கைகளை வகுக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஒருவரின் தற்கொலையை வைத்து கொண்டு அவுஸ்ரேலியாவை திட்டாதயுங்கோ>.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா இனத்திலும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் உள்ளனர். எனவே அரசாங்கம் இப்படியான சம்பவங்களைப் பொதுமைப்படுத்தி ஒரு இனத்தை முத்திரைகுத்துவதில்லை. அரசாங்கம் தேவையான ஆராய்வுகளை மேற்கொண்டே தமது கொள்கைகளை வகுக்கின்றன.

நீங்க சொல்வது 100% சரி,

முஸ்லீம்-

Edited by உடையார்

இது நான் இருக்கும் இடத்தில் நடந்தது. சிட்னி அகதி முகாமில் தூக்கு மாட்டி இறந்தபின் இதை எழுதனும் போல் இருந்திச்சு.

போன வருடம் 15க்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் குடித்துவிட்டு ஒரு போட்டி, மின் கம்பத்தில் ஏறி கம்பியைத் தொட்டால் $1000. ஒருவன் ஏறி இறங்கி வந்தபின் அவன் சொன்னான் தொட்டுவிட்டேன் என்று சிலர் இல்லையென பயங்கர அடிபாடு,

அதில் சிலர் வெளிக்கிட்டு வீட்டை போக அதற்கு முதலே அங்கு போய் காவல் நின்று திரும்ப அடிபாடு அதில் ஒருத்தனுக்கு கத்தி குத்து, பொலிஸ் வர கில்லி படம் மாதிரி நண்பேண்டா என்று கூறி தவிர்த்துவிட்டார்கள் ஜெயிலை,

பக்கத்து வீடுகளுக்கு எப்படி இருந்திருக்கும் இவர்களின் செயல். இவர்கள் அகதி முகமில் இருந்து வெளி வந்தவுடன் ப்ரிட்ஜ், வசிங் மிசின், தளபாடங்கள்,...etc இப்படி பல வசதிகள் செய்து கொடுக்க, அதில் பலவற்றை வித்துவிட்டார்கள், அந்த பணத்தில் இப்படிப்பட்ட சேட்டைகள்,

இன்னுமொரு கேஸ் நடந்தது இதைவிட மோசமா, இப்ப ஜெயிலில்,

இவர்கள் செய்வதை பார்த்து முகமில் இருப்போர்களை வெளியில் விட அவுஸ் அரசாங்கம் இரண்டு தரம் யோசிக்குமா or இல்லையா?

நன்றிகள் உடையார் உங்கள் பதிவிற்கு . உங்கு மாத்திரம் இல்லை எங்கடை டமில் பீப்பிள்ஸ் போன எல்லா நட்டிலையும் இதே விளையாட்டுத்தான் . ஐரோப்பியர்களது மனிதநேயத்தை கல்லாக்கி இறுக்கியதில் பெரும் பங்கு இப்படிப்பட்டவர்களின் நடத்தையே . இதன் எதிர்வினையை 2009 களில் புலம் பெயர் தேசங்களில் பார்த்தோம் . இதைத்தான் சாத்திரி தனது பாணியில் < பவாம் பிறபாகரனாக்கினார் >. ஒரு சிறிய உதரணம் உடையார் , எனக்குத் தெரிந்தவர்கள் ஒருவர்கள் கொழும்பில் உள்ள தங்களது வீட்டை வித்து வந்த காசில் , அமெரிக்காவில் வீடு வாங்கிக் குடியேறியுள்ளார்கள் . இப்பொழுது சொல்லுங்கள் தமிழர்களுக்கு இலங்கையில் பிரைச்சனையா ஐரோப்பாவின் பார்வையில் ^_^ ^_^ ^_^ ^_^ ????????????????

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிவுக்கு, நன்றிகள் உடையார்!

எனது அவதானங்களின் படி, உண்மையான அகதிகள் பெரும்பாலும் வெளியில் வருவதில்லை! அவர்களது நிதி நிலைமை, அவர்கள் வெளிக்கிட அனுமதிப்பதில்லை. மற்றப்படி அவர்களது, கவுரவமும் வெளி நாட்டு, அடிமை வாழ்வுக்கு ஒத்துழைப்பதில்லை. சாந்தியக்கா போன்ற சிலரது உதவிகளின் மூலமே, அவர்கள் தங்கள் வாழ்க்கையைக் கவுரவமாக வாழ முடிகின்றது!

மற்றும் படிக்கு வெளியில் வருபவர்கள், எமது பாரம்பரிய கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதில்லை. இங்கு நான் எல்லோரையும் குறிப்பிடவில்லை. அகதி அந்தஸ்துக் கோரும், பெரும்ப்பான்மையானோரைப் பற்றித் தான் கூறுகின்றேன்! நல்ல தமிழர்களும் நிரம்ப உள்ளார்கள். அவர்களது விகிதாசாரம், ஒரு இனத்தின் குணாதிசயங்களைப் பிரதி பலிக்கப் போதுமானதல்ல!

சுவிச்சர்லாந்தில், களவாக ஆடு பிடித்துக் கறி சமைப்பவர்களிடம், வயது போன அகதிகளுக்கு உதவும் பெண்கள், நீங்கள் எதையும் செய்யுங்கள்! ஆனால் சட்டத்திற்குப் புறம்பாக நடக்காதீர்கள் என்று, கண்ணீர் விட்டு மன்றாடிய சம்பவம் ஒன்றும் நினைவுக்கு வருகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொதைய அவுஸ்திரேலிய அரசு அகதி ஒருவருக்கு ஆண்டு ஒன்றுக்கு தலா $80000 செலவிடுகிறது அதுதவிரவும் அதனது அகதி தொடர்பான நிலைப்பாட்டினால் இந்தோனேசியா மலேசியா போன்ற நாடுகளுக்கு பல மில்லியன் பணத்தை கொடுத்து பலனின்று உள்ளது.

ஆரம்பத்தில் வெள்ளையின மக்களை மட்டும் கொண்ட குடிவரவு கொள்கையை கொண்டிருந்தது,ஆனாலும் இத்தாலியருக்கெதிரான போக்கை பொதுவாக கொண்ட சமூகமாக அவுஸ்திரேல்ய சமூகம் 60 களில் காணப்பட்டது பின்னர் அது ஆசியருக்கெதிராகவும் இப்போது நம்மவருக்கும் மற்ற நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கெதிராகவும் உள்ளது இதன் பின்னணியே குரொனுள்ளா கலவரம் ஆகும் இதன் பிரதிபலிப்பே இரண்டு பெரிய கட்சிகளின் அகதி கொள்கையாகும்.

அவுஸ்திரேலியாவை பொறுத்தவரை எம்மவர்களின் குற்றச்செயல் மற்றவர்களை விட ஒப்பீட்டளவில் மிகக்குறைவு, உண்மை என்னவென்ற்றால் நாம் வேண்டாத விருந்தாளிகள்.

எம்மவர்கள் உண்மையில் தலை சிறந்தவகல் அல்ல அண்மையில் இங்கு ஒரு பத்திரிகை வில்லாவூட்டில் காவல் துறையின் கண்கானிப்பிலிள்ள ஒரு குடும்ப்த்தின் குழந்தையை மில்லியன் டொலர் பேபி என குறிப்பிட்டிருந்தார்கள் அந்த குடும்பத்தினால் நாட்டிற்கு ஆபத்து என்று குறிப்பிட்டே அவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்,அவரது உறவினர் அவர்களை பார்ப்பதற்காக வருவதுண்டு அந்த குடும்பத்தினரில் ஒருவர் அவுஸ்திரேலியாவை விட்டே ஓடி விட்டார் அவர் பல பண மோசடிகளில் ஈடுபட்டவர் அவரது நண்பர்கள் மாட்டிகொண்டு விட்டனர் வளமை போல தாம் தப்புவதற்காக புலிகளே தம்மை வற்புறுத்தி ஈடுபடுத்தினர் என்று பொய்யை உதிர்த்துள்ளனர் இருப்பினும் காவல்துறை புலிகள் இதில் சம்பந்த்ப்பட்டதிற்கு எந்த தெளிவான ஆதாரமும் இல்லை என்று கூறிவிட்டது.

அவுஸ்திரேலியாவை பொறுத்தவரை எம்மவர்களின் குற்றச்செயல் மற்றவர்களை விட ஒப்பீட்டளவில் மிகக்குறைவு, உண்மை என்னவென்ற்றால் நாம் வேண்டாத விருந்தாளிகள்.

பல மேற்கத்தைய நாடுகளிலும் இதுதான் நிலைமை. பொருளாதார/அரசியல் ரீதியில் வளர்வதை விரும்புவதில்லை. ஆனால் அதையும் தாண்டி சாதிக்கவேண்டும். அடுத்த தலைமுறை அப்பொழுதான் நிமிரும். நிமிர வேண்டும். நிமிர வைக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

படகுகளில் அவுஸ்திரெலியாவுக்கு வந்து குடியுரிமை பெற்ற இரு சிறுமிகளின் தகப்பன் யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் ஒன்றில் மகிந்த இராஜபக்சாவின் கட்சி சார்பாகக் கேட்டவர். இவர் டக்லசின் ஈபிடிபியுடன் நெருக்கமான தொடர்பு உடையவர். சிறிலங்கா அரசுடன் விசுவசமாக இருப்பவர். என்றாலும் படகில் தனது பிள்ளைகளை அவுஸ்திரெலியாவுக்கு அனுப்பி இருக்கிறார். இன்னுமொரு படகில் அனுப்பப்பட்ட இவரது மகன் படகு கவிழ்ந்து கொல்லப்பட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.