Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோழிப் புரியாணி செய்முறை தேவை

Featured Replies

யாராவது சிக்கின் புரியாணி (தமிழ் றெஸ்ரோறன்களில் செய்யிற மாதிரி) செய்யத் தெரிந்தால் ஒருக்கா சொல்வீர்களா?

*** தலைப்புத் தமிழுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

சிக்கின் பிரியாணி.

picture072p.th.jpg

தேவையான பொருட்கள்..

பாஸ்மதி ரைஸ்.....4 கப்.

நெய்......தேவைக்கேற்ப..

கருவாப்பட்டை..

ஏலக்காய்..

கஜு

முந்திரி வற்றல்..

மஞ்சள்தூள் சிறிதளவு..

தயிர்.....2 மே.க

சிக்கின் 5 லெக் பீஸ்..

கறி பவுடர்....3 மே.கரண்டி..

உப்பு.....(தேவைக்கேற்ப)

வெங்காயம்....பெரியது 1 (நறுக்கி வைத்துக்கொள்ளவும்)

கருவேப்பிலை.

ரம்பை 3,4 துண்டுகள்..

பெருஞ்சீரகம்...1 தே.கரண்டி.

கடுகு......அரை தே.க

இஞ்சி விழுது...2.மே.க

பூண்டு விழுது.....2மே.க

தக்காளி....3 (பெரியது)

செய்முறை..

(நாளை எழுதுகிறேன்..)

அதுவரை கடைக்குப் போய் எல்லாப்பொருட்களையும் வாங்கி வாங்கோ.. smile.gif

(இது எங்கள் வீட்டில் நான் தயாரித்து, உங்களுக்காக எடுத்த படம்...) smile.gif

செய்முறை...

முதலில் சுத்தமாக்கிய சிக்கினை ஓரளவு பெரிய துண்டுகளாக்கி வைத்துக்கொண்டு.அதனுடன் உப்பு, கறிப்புவடர் ,இஞ்சி,பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து 15 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.

ஒரு சோஸ்பானில் கொஞ்சம் நெய் விட்டு, மிதமான சூட்டில் நெய் காய்ந்ததும், கஜு,பிலம்ஸ், கருவாப்பட்டை, ஏலக்காய், ரம்பை (நோ ரம்பா.. tongue.gif )கருவேப்பிலை போட்டு வறுத்துக்கொள்ளுங்கள்..

பாஸ்மதி ரைசை அளவாக தண்ணீர் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ரைஸ் குக்கரில் வேகவிடுங்கள்..பாதி ரைஸ் வெந்ததும் நெய்யில் வறுத்த பொருட்களை ரைசுடன் சேர்த்து கிளறி விடவும்.

கறிவைக்கும் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு எண்ணெய் சூடேறியதும், நறுக்கிய வெங்காயம், பெருஞ்சீரகம், கடுகு, கருவேப்பிலை ,ரம்பை இலை சேர்த்து தாளிக்கவும்.

அதன் பின்பு நறுக்கிய தக்காளிப்பழத்தையும் அதனுடன் சேர்த்துக் கிளற வேண்டும்..

அதன் பின்னர் பிரட்டி வைத்த சிக்கினையும் தாளிததிற்குள் போட்டு கிளறி விடவும்.

அதனுடன் 2 மே.கரண்டி தயிர் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக சிக்கினை வேக விடவேண்டும்.(உப்பு தேவையென்றால் பார்த்துப்போடவும்...அட சும்மா எட்டிப்பார்த்து இல்லப்பா....டேஸ்ட் பார்த்துதான்.) biggrin.gif

கெட்டியாக சிக்கின் கறி வந்ததும், கொஞ்சம் இறைச்சிக் கறிப்பவுடர் சேர்த்து ஒரு கொதி கொதித்ததும்...இறக்கிவிடவும்..

ஒரு பெரிய வாய்அகன்ற பாத்திரத்தில் இந்த சிக்கின் கறியுடன்...வேகவைத்த ரைசைப்போட்டு கிளறி விடவுடம்...

இப்போது சிக்கின் பிரியாணி ரெடியாகிவிட்டது... 18.gif

இதற்கு முட்டை அவியல், தக்காளி சாலட், கோழிப்பொரியல் சேர்த்து வைத்து சாப்பிடலாம்..

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=14628

  • தொடங்கியவர்

மிக்க நன்றி நுணா :)

  • கருத்துக்கள உறவுகள்

Microwave Chicken Briyani..!

http://www.ifood.tv/...chicken-biryani

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிக்கன் பிரியாணி

* சிக்கன் – 1 கிலோ (அல்லது சிக்கன் லெக் பீஸ் – 1 கிலோ)

* பாஸ்மதி அரிசி – 3 கப்

* எண்ணெய் – 5 தேக்கரண்டி

* வெண்ணெய் – 3 தேக்கரண்டி

* பிரிஞ்சி இலை – 2

* ஏலக்காய் தூள் – இரு சிட்டிகை

* பட்டை – 4

* லவங்கம் – 5

* சோம்பு – 1 தேக்கரண்டி

* இஞ்சி – 1 பெரியது

* பூண்டு – 1 பெரியது

* வெங்காயம் – 3

* பச்சை மிளகாய் – 10

* மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

* உப்பு – தேவைக்கேற்ப

* புதினா – 1/2 கப்

* கொத்தமல்லி இலை – 1/2 கப்

* தக்காளி – 3

* தேங்காய் துருவல் – 1/2 கப்

* மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

* பெப்பர் – 1 தேக்கரண்டி

* லெமன் – 1 பெரியது

* நெய் – 3 தேக்கரண்டி

* கறிவேப்பிலை – 1 கைபிடி

* குக்கரில் எண்ணெய், வெண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரிஞ்சி இலை, சோம்பு, ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

* பட்டை, லவங்கம், சோம்பு, இஞ்சி, பூண்டுஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து குக்கரில் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.

* வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் மிக்ஸியில் அரைத்து குக்கரில் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.

* பிறகு மஞ்சள் தூள், பாதி உப்பு, புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு வதக்கவும்.

* வதங்கியதும் தக்காளியை அரைத்து சேர்த்து நன்கு வதக்கவும். (தேவையெனில் நடுவில் எண்ணெய் சேர்க்கலாம்.)

* தேங்காயை அரைத்து சேர்த்து நன்கு வதக்கவும்.

* பின் நன்றாக வதங்கிய பின் கோழியை சேர்த்து வதக்கி கொண்டே இருக்கவும்.

* பின் மிளகாய் தூள், பெப்பர் (காரம் பார்த்து சேர்க்கவும்).

* தண்ணீர் சேர்க்காமல் கோழியுடன் மசாலா நன்கு ஒட்டி சுருண்டு வரும் வரை வதக்கவும்.

* அரிசி சேர்த்து வதக்கி 6 கப் தண்ணீர் விட்டு லெமன் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் நிறுத்தி விடவும்.

* பின் அரை மணி நேரம் கழித்து குக்கரை திறந்து நெய், கறிவேப்பிலை சேர்த்து லேசாக கிளறி பரிமாறவும்.

Note:

காரம் அவரவர்களுக்கு ஏற்றார் போல் சேர்க்கவும். (எந்த ஒரு உணவு செய்யும் போதும் அரைத்த மசாலாவை நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்குவது மிக முக்கியம்.)

IMG_4584.JPG

கோழியுடன் அரிசியைச் சேர்த்து சமைக்கும் பொழுது (ப்ரெஷர் குக்கர் இல்லாமல் சாதாரண பாத்திரத்தில்) ஒரு கப் அரிசிக்கு எத்தனை கப் தண்ணீர் விட வேண்டுமென யாருக்கும் தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள் அரிசிஎன்டால் (லோன்க்ரைஸ்) சுமார் நாலு,நாலரை செ. மீ.தண்ணீர். அதாகப் பட்டது , பாத்திரத்தில் அரிசியை நன்கு கழுவியதும் அரிசியை moodith தண்ணீர் விட்டு arisiyin மட்டத்தில் இருந்து உங்கள் வலது கை விரலை செங்குத்தாக வைத்து நடுவிரலின் இரண்டாவது ரேகை அளவு நீர் இருந்தால் போதும். பாசுமதி என்றால் கொஞ்சம் குறைவாகத் தண்ணீர் விட்டால் போதும்.

அசத்துங்க அலைமகள்! :)

  • தொடங்கியவர்

மிக்க நன்றி நெடுக்ஸ், தமிழ் அரசு & அறிவிலி :) அறிவிலி சமைத்துப் பார்த்திட்டு சொல்கிறேன் எப்பிடி என்று :)

மஞ்சள் அரிசிஎன்டால் (லோன்க்ரைஸ்) சுமார் நாலு,நாலரை செ. மீ.தண்ணீர். அதாகப் பட்டது , பாத்திரத்தில் அரிசியை நன்கு கழுவியதும் அரிசியை moodith தண்ணீர் விட்டு arisiyin மட்டத்தில் இருந்து உங்கள் வலது கை விரலை செங்குத்தாக வைத்து நடுவிரலின் இரண்டாவது ரேகை அளவு நீர் இருந்தால் போதும். பாசுமதி என்றால் கொஞ்சம் குறைவாகத் தண்ணீர் விட்டால் போதும்.

நன்றி சுவி.

இதைத்தான் 'மலையவு அரிசிக்கும் இறையளவு தண்ணீர்' என்று சொல்கிறதாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் பல முறைகளில் பிரியாணி செய்வதுண்டு அதில் ஒரு செய்முறை;

வாங்கின கோழியை அரைவாசியாக பிரிக்கவும் அல்லது குழம்புக்கு என்று தனிய கோழி வாங்கவும்.

கோழிக்காலை நன்றாக கீறிப் போட்டு தனி மிளகாய்த் தூளும்,உப்பும் போட்டு முதல் நாளே ஊற வைக்க வேண்டும்.

அடுத்த நாள் கோழிக் காலை மிதமான எண்ணெயிலோ அல்லது அதிக எண்ணெய் விட்டோ பொரிக்க வேண்டும்...வெங்காயமும் பொரிக்க வேண்டும்.

குழம்புக்கு என வைத்திருக்கும் கோழியை கழுவி சுத்தம் செய்து போட்டு தண்ணீர் அதிகம் விட்டு தேவையான அளவு உப்பும்,மஞ்சலும்,எண்ணெய் விட்டு அவிய வைக்கவும்.

அரைவாசிக்கு மேல் அவிந்த உடன் கோழியை எடுத்து விட்டு அந்த கோழி அவிந்த தண்ணீரில் அரியைப் போட்டு சமைக்கவும்.

அவிந்த கோழியை நீங்கள் எப்படி சாதரணமாக குழப்பு வைப்பீர்களோ அப்படி வைக்கவும்.

சோறு அவிந்த உடன் அதில் பொரித்த கோழி,பொரித்த வெங்காயத்தை போட்டு கலக்கவும்.

முட்டையை அவிக்கவும்,தக்காளி பச்சடி செய்யவும்

இந்த பிரியாணியில் கோழிக் குழம்பை விட்டு முட்டையும்,பச்சடியும் சேர்த்து சாப்பிட‌ அந்த மாதிரி இருக்கும்.

செய்து பார்த்து விட்டு ஒருதரும் என்னை அடிக்க வாறதில்லை சரியா ஏதோ அலைமகள் கேட்டார் என்பதற்காக எனக்கு தெரிந்ததை எழுதினேன்

  • தொடங்கியவர்

கேட்டதற்காக இப்படியா எழுதுவது, மினக்கெட்டுச் சமைத்துச் சரியில்லாட்டா நாயும் இல்லை போட :lol:

மினக்கெட்டு எழுதியதற்கு நன்றி ரதி :)

  • கருத்துக்கள உறவுகள்

ஓகோ இதுதான் புரியானியா.இணைப்பிற்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓகோ இதுதான் புரியானியா.இணைப்பிற்கு நன்றி.

அப்ப இவ்வளவு நாளும் வெள்ளைச்சோத்துக்கை மஞ்சள்தூளை கலக்கிப்போட்டு ஆட்டுறைச்சியோடை குழைச்சு ஒரே அமுக்கு தான் போலை கிடக்கு

வட் இஸ் கஜு அண்ட் லவங்கம் ?

  • கருத்துக்கள உறவுகள்

வட் இஸ் கஜு அண்ட் லவங்கம் ?

இதுதான் கஜு

57859_f260.jpg

இதுதான் லவங்கம்

5128094.jpg

ஓ.. மரமுந்திரி அண்ட் கராம்பு.

மிக்க நன்றி

கோழி புரியாணி செய்து பார்த்தேன். மிக நன்றாக இருந்தது. எல்லோரும் விரும்பிச் சாப்பிட்டார்கள்.

கோழியை தயிர், கொத்தமல்லி இலை, புதினா இலை, சீரகத்தூள், கறித் தூள், இறைச்சி தூள், மஞ்சள் உப்புப் போட்டு பிரட்டி வைத்து , பின் வெங்காயம், இஞ்சி, உள்ளி போட்டு தாளித்து கறி சமைக்கவும்.

பாஸ்மதி அரிசியை அரை மணித்தியாலம் ஊறப் போட்டு, முதுதாக அவிக்காமல் பொல்லுச் சோறாக அவிக்கவும்.

ஒரு அகன்ற பாத்திரத்தில் முதலில் கொஞ்சம் சோறை பரவி அதன் மேல் கோழிக்கறி , கொத்தமல்லி இலை போட்டு அதன் மேல் மீண்டும் சோற்றைப் போட்டு மீண்டும் கோழிக்கறி+கொத்தமல்லி இலை............ அடுக்கடுக்காகப் போடவும். கடைசியாக குங்குமப் பூவை பாலில் கரைத்து தெளிக்கவும். விரும்பினால் முந்திரிப் பருப்பு, பொறித்த வெங்காயமும் தூவலாம்.

பாத்திரத்தை இறுக்க மூட்டி 'தம்' கட்டி (ஆவி வெளியேறாமல் இருக்க அலுமினியத் தாள் அல்லது துணி வைத்து இறுக்குதல்) மெல்லிய தணலில் 20 - 30 வைக்கவும். தோசைக் கல்லின் மீது வைத்துச் சூடாக்கினால் இன்னும் நல்லது.

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கோழிப்பிரியானி பெரிய அளவில் செய்ய வேன்னி உள்ளது.(70 பேர்)யாராவது ஒரு வழிபண்ங்கோப்பா :lol: ஏன் என்றால் 5 பேருக்கென்டால் ஒரு அளவும் 50 பேருக்கென்டால் அளவுகள் வித்தியாசப்படும் எல்லோ அது தான் :) .

சஜீவன்,

அளவு சொல்லத் தெரியாது. வேறு யாராவது சொல்வார்கள். புரியாணிக்கான சோறு செய்து பார்த்த முறைகளில் சுவையாக இருந்த முறை இது.

அரிசியை அவிக்கும் பொழுது தேங்காய்ப் பால் (ரின்) விட்டு சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கருவா / ஏலம்/ கராம்பு / ரம்பை / கறிவேப்பிலை ஆகியவற்றை சிறிது எண்ணெயில் தாளித்துப் போட்டால் நல்ல சுவையாக இருக்கும். சோறை கறியுடன் கலக்கும் பொழுது முந்திரிப்பருப்பை நெய்யில் தாளித்துப் போட்டு, கொஞ்சம் 'கிஸ்மிஸ்' (முந்திரி வற்றல்) உம் சேர்த்தால் நன்றாக இருக்கும். ஒருமுறை சிறிய அளவில் செய்து பார்த்து விட்டு பெரிய அளவில் சமையுங்கள். தேங்காய்ப் பாலின் அளவை அதிகரித்தால் சுவையாக இருக்கும். ஆனால் கொழுப்புக் கூடியது.

புதிதாக முயற்சிக்கப் போகிறீர்கள் இந்த 70 பேரையும் நினைக்கத்தான் பாவமாக் கிடக்கு. :D

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன்,

புதிதாக முயற்சிக்கப் போகிறீர்கள் இந்த 70 பேரையும் நினைக்கத்தான் பாவமாக் கிடக்கு. :D

லொள்ளு :lol: என்றாலும் தகவலுக்கு நன்றி தப்பிலி :)

  • கருத்துக்கள உறவுகள்

நான் பல முறைகளில் பிரியாணி செய்வதுண்டு அதில் ஒரு செய்முறை;

வாங்கின கோழியை அரைவாசியாக பிரிக்கவும் அல்லது குழம்புக்கு என்று தனிய கோழி வாங்கவும்.

கோழிக்காலை நன்றாக கீறிப் போட்டு தனி மிளகாய்த் தூளும்,உப்பும் போட்டு முதல் நாளே ஊற வைக்க வேண்டும்.

அடுத்த நாள் கோழிக் காலை மிதமான எண்ணெயிலோ அல்லது அதிக எண்ணெய் விட்டோ பொரிக்க வேண்டும்...வெங்காயமும் பொரிக்க வேண்டும்.

குழம்புக்கு என வைத்திருக்கும் கோழியை கழுவி சுத்தம் செய்து போட்டு தண்ணீர் அதிகம் விட்டு தேவையான அளவு உப்பும்,மஞ்சலும்,எண்ணெய் விட்டு அவிய வைக்கவும்.

அரைவாசிக்கு மேல் அவிந்த உடன் கோழியை எடுத்து விட்டு அந்த கோழி அவிந்த தண்ணீரில் அரியைப் போட்டு சமைக்கவும்.

அவிந்த கோழியை நீங்கள் எப்படி சாதரணமாக குழப்பு வைப்பீர்களோ அப்படி வைக்கவும்.

சோறு அவிந்த உடன் அதில் பொரித்த கோழி,பொரித்த வெங்காயத்தை போட்டு கலக்கவும்.

முட்டையை அவிக்கவும்,தக்காளி பச்சடி செய்யவும்

இந்த பிரியாணியில் கோழிக் குழம்பை விட்டு முட்டையும்,பச்சடியும் சேர்த்து சாப்பிட‌ அந்த மாதிரி இருக்கும்.

செய்து பார்த்து விட்டு ஒருதரும் என்னை அடிக்க வாறதில்லை சரியா ஏதோ அலைமகள் கேட்டார் என்பதற்காக எனக்கு தெரிந்ததை எழுதினேன்

ஆத்தாடி....ரெம்பப் பயங்கரமான முறையா இருக்கே ரதி அக்கா.... :D

Edited by சுபேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.