Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவுநாள் இன்றாகும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

kumar-pp.jpg

மாமனிதர் குமார்பொன்னம்பலம் அவர்களின் 12வது ஆண்டு நினைவுநாள் இன்று நினைவுகூரப்படுகின்றது.மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் 2000ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் நாள் சிறீலங்கா கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஸ்ண வீதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் தனது தந்தையான ஜி.ஜி.பொன்னம்பலம் உயிரோடு இருந்த காலத்தில் அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தபோதும் தேர்தல்கள் எதிலும் அவர் பங்குபற்றவில்லை.நாடாளுமன்ற அரசியலில் வெற்றிகள் எதுவும் கிடைக்கவில்லையாயினும், அதற்கு வெளியே தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் பாடுபட்டார். அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் சார்பில் நீதிமன்றங்களில் வாதாடினார்.

எந்த இடத்திலும் தமிழ் மக்களுக்குச் சார்பான கருத்துக்களைத் துணிவாக வெளியிட்டுவந்தார். இதனால் இனவாதிகள் அவரை வெறுத்தனர். அதன் காரணமாக அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ் மக்களின் உரிமைக்களுக்காக சிறீலங்காவின் முன்னாள் அரச அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுடன் நேரடியாகச் சாவால் விடுத்திருந்த நிலையில், மாமனிதர் குமார் பொன்னம்பலம் சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது நினைவூட்டத்தக்கது.

http://www.tamilthai...newsite/?p=2895

  • கருத்துக்கள உறவுகள்

மாமனிதர் குமார் பொன்னம்பலம் உட்பட பல தமிழ் தேசிய தலைமைகள் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு இதுவரை எவருக்கும் தண்டனைகள் வழங்கப்படவில்லை.

ஆனால் விடுதலைப்புலிகளால் அரசியல் தலைவர்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு சர்வதேசத்தாலும்.. பிராந்திய நாடுகளாலும்.. சிங்கள அரசாலும்.. விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக இனங்காட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை.. விடுதலைப்புலிகள் செய்யாத படுகொலைகளுக்கான சூத்திரதாரிகளை இந்த உலகம் நீதியின் முன் நிறுத்தாமல் பாதுகாத்து வைத்திருப்பது... இந்த உலகம் மிகவும் தீய உள்நோக்கங்களைக் கொண்டு இயங்கிக் கொண்டிருப்பதையே இனங்காட்டுகிறது..!

இது தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்போடும் ஆராய்ந்தும் செயற்பட வேண்டியவர்களாக இருப்பதுடன்.. இப்படி நீதியே கிட்டாமல் இருக்கும் படுகொலைகளின் பின்னால் உள்ளவர்களை தண்டிக்க சர்வதேசத்தை கோர வேண்டும்.

அதன் மூலம் சிங்கள.. மற்றும் சிங்கள இந்திய விசுவாச தமிழ் ஆயுத கும்பல்களின் கொலை வெறியை சர்வதேசம் உணர்ந்து போலி சனநாயகச் செயற்பாடுகள் மூலம் அவர்கள் பாதுகாக்கப்படுவது குறித்து தெரிந்து கொண்டு அவற்றை நீக்கி.. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வாய்ப்பு செய்து கொடுப்பதோடு.. தமிழ் மக்கள் தாமே தம் பாதுகாப்பையும் ஆட்சி உரிமையையும் தமது பூர்வீக மண்ணில் தீர்மானிக்கும் சனநாயக நிலைக்கு வர உலகம் ஆதரவளிக்க கோர வேண்டும்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு நாள் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு நாள் அஞ்சலிகள்

பல வழிகளில் 'சிங்கத்தின் குகைக்குள் இறுதிவரை வாழ்ந்த புலி' இவர்.

நினைவு நாள் வணக்கங்கள்!

நினைவு நாள் வணக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு நாள் அஞ்சலிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.