Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளைகள வெளிநாட்டில வளக்கிறது என்டா.........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பர்.அதுவும் நடிகர்கள் அந்த மாதிரி நடித்திருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அழகான நடிப்பு..... இறுதி வரிகள் மிகவும் சிறப்பு ..பகிர்வுக்கு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ!

இணைப்புக்கு நன்றிகள், சுண்டல்!!!

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் எனக்கு, அந்த ஒளிப்பதிவு தெரியவில்லை.computer_smiley14.gif

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பிள்ளைகளின் தவறை விட பெற்றோரின் தவறே அதிகம். பெற்றோர் பிள்ளைகளுக்குரிய சூழலுக்கு தம்மை இசைவாக்கிக் கொள்ளாமல்.. ஊரின் பழைய காலக் கனவில் வாழ்ந்து கொண்டிருப்பது.. தான்.. பிள்ளைகள் - பெற்றோர் இடைவெளியை அதிகரிக்கச் செய்கிறது. பெற்றோர்.. பிள்ளைகளோடு.. நெருக்கமாகவும்.. நட்போடும்.. அவர்களோடு உற்ற தோழமையோடும் வாழத் தெரிந்து கொண்டால்.. எத்தனையோ பிரச்சனைகள் இல்லாமல் செய்யப்படும்..! பெற்றோர் - பிள்ளைகள் புரிந்துணர்வும் அதிகரிக்கும். அதுமட்டுமன்றி.. பிள்ளைகளுக்கு பெற்றோர் வழிகாட்டிகளாக.. நல்ல ஆலோசர்களாக நட்போடு இருக்க வேண்டுமே தவிர அதிகாரத் தோறணைகளுக்கு எல்லாம் பிள்ளைகள் கட்டுப்பட எனி வாய்ப்பே இல்லை..! இதனை பெற்றோர் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்..!

ஊரில மட்டும் பிள்ளைகள் நல்லா வளரினமோ..??! அங்கும் பிரச்சனைகள் உள்ளன தானே. :):icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டல் எனக்கு, அந்த ஒளிப்பதிவு தெரியவில்லை.computer_smiley14.gif

யேர்மனியில் பொதுவாக ஆபாசமான ஒளிப்பதிவுகளை தடை செய்வது உண்டு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது. இதை இங்கு முன்பே பார்த்த ஞாபகம்.

ஆனாலும் கற்பனை மிகுந்த குற்றச்சாட்டு

இங்கு பரவாயில்லை என்பதற்கான சோடனைகளுக்காய் நிலத்தை பழிக்கும் தத்துவார்த்தம்.

ஒரு பிள்ளை துள்ளி விளையாடுவதைக்காட்டி அவனை தூரவைக்கும் போக்கு அவர் பிள்ளைமேல் வைத்திருக்கும் பாசத்தில் கேள்வி எழுப்புகிறது.

எது எப்படியாயினும் நான் செய்ததை என் பிள்ளை செய்வது குற்றம் எனும் மனநிலையிலிருந்து பெற்றோர் வெளியில் வரவேண்டும்.

எழுந்து அசைந்து துள்ளி ஓடி எம்முன்னால் வளர்ந்த பிள்ளையை ரசித்த நாம் அதன் அடுத்த கட்டத்தையும் ரசிக்கணும்.

இந்த நிலையை நாம் எடுத்தால் வாழ்வும் ருசிக்கும். அது எல்லோருக்கும் பயன்படும்.

என் பிள்ளைகளுக்கு நான் நண்பன். தோளுக்கு மிஞ்சினால் தோழன். ஆனாலும் அவர்களது அப்பா.

இதில் பங்குபற்றியவர்களின் அமைதியான நடிப்பு நன்றாகவே இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வயோதிப தாயும்,தந்தையும் உண்மையான கணவன்,மனைவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வேற சித்தன்........இப்ப தமிழ்ஸ் அண்ணா ஒடி திரிய போறார்..........

பிள்ளையளை பொத்தி பொத்தி வளர்கிற பெற்றோர் தான் பெரும்பாலும் இப்படியான சூழ்நிலைகளைக் கண்டு மனம் தளர்கிரார்கள் என்று நினைக்கிறன்.

1) பிள்ளைகள் ஓடினால் தடக்குப்பட்டு கீழே விழுவார்கள், அதனால் ஓடாமல் நடக்க வேண்டும் என்பது அவர்களது எண்ணம். விழாமல் ஓடுவதற்குகோ அல்லது, விழுந்தாலும் எழும்பி ஓடவேண்டும் என்று எத்தனை பெற்றோர் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்??

2) பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளின் பெற்றோர் முடிந்த அளவு தமது பிள்ளைகளுடன் சேரும் நண்பர்களைப் பற்றி வீட்டில் கதைத்து முடிந்த அளவு அவர்களின் (பிள்ளையின் நண்பர்களின்) பெற்றோருடன் கதைத்துப் பழகினால் இரு குடும்பத்துப் பிள்ளைகளின் நட்பும் ஓரளவு பாதுகாப்பாக இருக்க சந்தர்ப்பங்கள் உண்டு.

3) பெற்றோர்கள் பிள்ளைகளிடையே ஒரு புரிந்துணர்வு, எதையும் தைரியமாக மனம் விட்டுக் கதைக்கக் கூடிய சூழ்நிலையை இந்தக் காலத்துப் பெற்றோகள் கடைப் பிடிப்பதன் மூலம் தமது பிள்ளைகளின் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள/ அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

4) நல்லது கெட்டதுகளை சொல்லி வளர்த்தாலும், சில கெட்ட பழக்கங்கள் பிள்ளைகளுக்கு அவர்களின் நட்பின் மூலமோ அல்லது மன அழுத்தத்தின் மூலமோ அவர்கள் பழகிவிட்டால் எல்லாமே குடி முழுகிப் போய்விட்டது என்ற தோரணையில் வீட்டுச் சூழ்நிலை இருக்குமானால் அந்தப் பிள்ளை அந்த வீட்டில் இருந்து வெளியே போவதே ஒரு option ஆக இருக்கூடும்.

5) இன்னொரு முக்கிய விடையம், பிள்ளைகளின் படிப்பு... பல பெற்றோர்களிடையே போட்டி மனப் பான்மை யாரோட பிள்ளை அதிகம் படிக்கிறதென்பது... அந்த அவசரத்தில் பிள்ளைகளின் ஆசையை கேட்பதே குறைவு... பிள்ளைக்கு விருப்பம் இல்லாத பாடத்தை (தமக்கு விருப்பம் அல்லது தாம் நினைத்தது கடந்த காலத்தில் நடக்கவில்லை என்ற ஏமாற்றத்தில்) படிக்கத் திணிப்பது.. ஒரு இடத்தில் tuition க்கு விட்டாலும் நம்பிக்கை இல்லை அவன் ஒழுங்கா பிள்ளைக்குச் சொல்லி கொடுக்கிறானோ தெரியாது என்ற சந்தேகத்திலை 4 இடத்திலை பிள்ளையளை ஓய்வில்லாமல் படி படி என்று கலைக்கிறது... பிள்ளைகளுக்கு இவற்றை ஏற்றுக் கொள்ளும் மனநிலை இருக்குமா எனத் தெரியவில்லை ஆனால் நிச்சயம் தமது நண்பர்களிடம் பர்கிர்ந்து கொள்ளவார்கள், அவர்களது நட்பு வட்டத்தில் ஒரு சிலர் புகைப் பிடிப்பவர்களாக இருந்தால் என்ன அறிவுரை சொல்லுவார்கள்?? 2 சிகரட்டை இழு, டென்சன் கொஞ்சம் குறையும் என்று தானே?? பிள்ளைகள் இவ்வாறன சூழ்நிலைகளுக்குள் போவதை பல பெற்றோர் தெரிந்தோ தெரியாமலோ காரணமாக உள்ளார்கள்... பிறகு ஒப்பாரி வைக்கிறது பிள்ளைக்கு எல்லாம் பார்த்து பார்த்து செய்தனாங்கள், பிள்ளை இப்படி பாதை மாறிப் போட்டான் என்று...

5 வயதில் இருக்கும் பிள்ளைபோல 15 வயதில் அந்தப் பிள்ளை இருக்க வேணும் என்று நினைத்தால் அது பெற்றோரின் மடத்தனம். வயதுக்கேற்ற குழப்படிகளை எந்த நாட்டில் வாழ்ந்தாலும் பிள்ளைகள் செய்வார்கள் என்பது தான் யதார்த்தம்.

இன்னொன்று இந்த இணைப்பில் அவதானித்தது... தகப்பனும் தாயுமா சேர்ந்து மாறி மாறி மகனுக்குப் போன் பண்ணினம் (தகப்பன் முதல் தரம் போன் பண்ணி, அவரை வைக்கச் சொன்னாப் பிறகும்...) பிள்ளைக்கு போன் அடிக்க அவன் எடுக்க இல்லை என்றால் திரும்ப அடிக்கிறதில ஒரு நியாயம் இருக்கு... அவன் வைக்கச் சொன்னாப் பிறகு திரும்பத் திரும்ப அடிச்சால் விசர் தானே வரும்?? (இதுக்குத் தங்களை நியாயப் படுத்த 'பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு' என்று பழமொழி வேற...) :rolleyes:

பெற்றோரின் நிலையைப் புரிந்து பிள்ளைகள் வளர வேண்டும் என்கிறார்கள், ஆனால் எந்தனை பெற்றோர்கள் தங்கள் தமது பிள்ளைகளின் நிலையைப் புரிந்து நடந்து கொள்ளகிறார்கள்?? பாசம் இருக்கத்தான் வேணும், அதற்காக பாசம், பாசம் என்று அந்தப் பாசத்தால் தமது பிள்ளையின் எதிர் காலத்தை நாசமாக்கக் கூடாது! இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே!!! :)

....

ஊரில மட்டும் பிள்ளைகள் நல்லா வளரினமோ..??! அங்கும் பிரச்சனைகள் உள்ளன தானே. :):icon_idea:

இணைப்பில், ஊரில இருக்கிற தாயைப் பார்த்து தானே மகனும் தலைமுடி வளர்த்துக் கொண்டு ஸ்டைலா லண்டன் வந்திருக்கிறான்... அதைப் பார்த்தாலே தெரிய இல்லையா ஊரில நல்ல வளர்ப்பென்று?? :lol::D

Edited by குட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா அத தானே இந்த கதையிலையும் சொல்லினம்...ஊரில கொண்டுபோய் வளர்தாலும் பிள்ளை பாதை மாறலாம் என்று............குட்டி அண்ணா நல்ல கருத்து ஒரு பச்சை.........

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில் பொதுவாக ஆபாசமான ஒளிப்பதிவுகளை தடை செய்வது உண்டு. :lol:

நீங்க வேற சித்தன்........இப்ப தமிழ்ஸ் அண்ணா ஒடி திரிய போறார்..........

computersmiley.gif :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.