Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேணல் ஜெயம் இறுதி போரில் வீரச்சாவா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேணல் ஜெயம் இறுதி போரில் வீரச்சாவா?

விடுதலைப் புலிகளின் அதி முக்கிய, மற்றும் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் ஜெயம் அவர்கள் கொல்லப்பட்டார் என்ற செய்திகள் தற்போது உறுதிசெய்யப்படுகின்றது. விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட(2009) போரின்போது இவர்கொல்லப்பட்டதாக சில தகவல்கள் வெளியானது. இருப்பினும் இவரை இலங்கை இராணுவம் சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் சில ஊர்ஜிதமற்ற செய்திகள் அப்போது வெளியாகியிருந்தது. ஆனால் தற்போது கிடைக்கப்பெற்ற புகைப்படங்கள் அடிப்படையில் கேணல் ஜெயம் அவர்கள் இறுதிவரை போராடி, இராணுவத்தினருக்கு பாரிய இழப்பை ஏற்படுத்திய பின்னர், அவர்கள் கிட்ட நெருங்கிய வேளை தன்னைத் தானே சுட்டுக் கொன்றுள்ளார் எனவும் அறியப்படுகிறது.

கேணல் ஜெயம் அவர்கள் தன்னைத் தானே சுட முன்னர் சயனைட் வில்லையையும் கடித்துள்ளார். முன்னேறிவரும் இராணுவத்திடம் எச்சந்தர்ப்பத்திலும் தான் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதில் அவர் இறுதிவரை உறுதியாக இருந்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் பல ஆள ஊடுருவும் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி, மட்டு மற்றும் அம்பாறைப் பகுதியில் பல தாக்குதல்களை நடத்தியவர் கேணல் ஜெயம் ஆவார். கேணல் ஜெயம் என்னும் பெயரைக் கேட்டாலே இலங்கை இராணுவம் கிலி கொள்ளும் அளவுக்கு அவர் தாக்குதல் யுக்திகள் இருந்தது. தேசிய தலைவரின் நம்பிக்கைக்குரிய போராளியாக அவர் என்றும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக குடும்பிமலைப் பிரதேசத்தை இராணுவம் கைப்பற்றியவேளை, அங்கே நிலைகொண்டு இராணுவத்துடன் பாரிய போரைத்தொடுத்தவர் கேணல் ஜெயம் அவர்கள். இறுதியா அப்பகுதி இராணுத்திடம் வீழ்ந்தது, அவ்வேளை அவரிடம் ஆயுதங்கள் தீர்ந்துவிட்டது. இருப்பினும் துப்பாக்கியில் உள்ள கத்தியால் போரிட்டு இராணுவத்தினர் பலரை எதிர்கொண்டு, அங்கிருந்து தப்பி காட்டு வழியூடாக வன்னி வந்தடைந்தார் கேணல் ஜெயம் என்பதும் குறிப்பிடத்தக்கவிடையமாகும்.

http://www.thedipaar...ws.php?id=41212

Edited by nunavilan

சிங்களவனிடம் சரண்டைந்து புலத்து பூனைகளால் துரோகியாக்கபடுவதை விட அவர் செய்தது சரி ஆனால் இதையே மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பாக்க முடியாது..

கேணல் ஜெயம் மாத்தையா வின் கைதின் போது கொஞ்சக்காலம் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டது பின் அவருக்கு ஒன்றுமே தெரிந்துஇருக்கவில்லை என்று விடுதலையும் செய்யப்பட்டார்.

நல்ல காலம் அந்தாள் வீரசாவடைந்திட்டுது

இல்லையெண்டால் எங்கடையள் சொல்லும் " எனக்கு அப்பவே தெரியும் ஜெயத்தானுக்கு மாத்தையவின்ர பிரச்சனையில றோ வோட தொடர்பு அது தான் எல்லாத்தையும் காட்டி கொடுத்திட்டான் என்று"

தம்பி சசி உங்களுக்கு ஜெயம் என்டால் மாத்தையவின்ட பிரச்சனையில மாட்டியது மட்டும் தான் தெரியும் மற்றவைகள் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

கேணல் ஜெயம் அவர்கள்

கொண்ட கொள்கைக்காக

இலட்சியத்துக்காக

தான் சார்ந்த இயக்கத்தின் மற்றும் தலைவரின் உறுதிமொழிக்கமைய

எமக்காக தன்னையே கொடுத்துள்ளார்.

அவரையும் அவரது கொடூரமான படத்தையும் இங்கு போட்டு அதற்கு எழுதப்படும் கருத்துக்களைப்பார்க்கும்போது ...

மிகுந்த வேதனையாக உள்ளது. 30 வருட தியாக்த்தீயில் உருகி மாவீரர்கள் மன்னிப்பார்களாக.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் கேணல் ஜெயம் அவர்களுக்கு வீரவணக்கங்கள்..!

மாவீரனே உனக்கு எனது வீரவணக்கங்கள்...........

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமான முதுநிலை மூத்த போராளிகள் பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் ஜெயமண்ணா பற்றி அதிகம் எழுதப்பட்டதில்லை. எழுதப்படாத எத்தனையோ வரலாறுகள் ஜெயமண்ணா பற்றியது இருக்கிறது. ஒரு போராளியாக தளபதியாக அவர் சாதித்தவை இறுதிவரை தனது இலட்சியத்தில் உறுதியாய் நின்று மரணமடைந்தது வரை ஆயிரம் கதைகள் அவரது வரலாறு.

மாவீரர் கேணல் ஜெயமண்ணா அவர்களுக்கு வீரவணக்கங்கள்..!!

  • கருத்துக்கள உறவுகள்

கேணல் ஜெயம் அவர்கள்

கொண்ட கொள்கைக்காக

இலட்சியத்துக்காக

தான் சார்ந்த இயக்கத்தின் மற்றும் தலைவரின் உறுதிமொழிக்கமைய

எமக்காக தன்னையே கொடுத்துள்ளார்.

மாவீரர் கேணல் ஜெயம் அவர்களுக்கு வீரவணக்கங்கள் !

Edited by தமிழரசு

நல்ல காலம் அந்தாள் வீரசாவடைந்திட்டுது

இல்லையெண்டால் எங்கடையள் சொல்லும் " எனக்கு அப்பவே தெரியும் ஜெயத்தானுக்கு மாத்தையவின்ர பிரச்சனையில றோ வோட தொடர்பு அது தான் எல்லாத்தையும் காட்டி கொடுத்திட்டான் என்று"

தம்பி சசி உங்களுக்கு ஜெயம் என்டால் மாத்தையவின்ட பிரச்சனையில மாட்டியது மட்டும் தான் தெரியும் மற்றவைகள் தெரியாது.

அவளவுக்கு நம்பிக்கை தமிழ்மக்கள் மேல.

ஆமா 2004 ஆம் ஆண்டுவரை மல்லாவியில் இருந்தேன் என்றால் நம்பவா போறிங்கள்? ^_^

கேணல் ஜெயம் அவர்கள்

கொண்ட கொள்கைக்காக

இலட்சியத்துக்காக

தான் சார்ந்த இயக்கத்தின் மற்றும் தலைவரின் உறுதிமொழிக்கமைய

எமக்காக தன்னையே கொடுத்துள்ளார்.

அவரையும் அவரது கொடூரமான படத்தையும் இங்கு போட்டு அதற்கு எழுதப்படும் கருத்துக்களைப்பார்க்கும்போது ...

மிகுந்த வேதனையாக உள்ளது. 30 வருட தியாக்த்தீயில் உருகி மாவீரர்கள் மன்னிப்பார்களாக.

நீங்கள் இந்த கருத்து சொல்ல முன் 2 பேர் கருத்து எழுதி இருக்கோம் ஒன்று நான் மற்றது டொங்கி என்பவர் அந்த கருத்தில் ஜெயம் அவர்களை பற்றி தப்பான அல்லது அவருது பெயருக்கு இழுக்கான கருத்துக்கள் எங்கை ஜயா இருக்கு? :D

ஒரு மாவீரனை அவமரியாதை செய்ய நினைக்கும் புறம்போக்குகளும் இந்த உலகில் இருக்குதுகள்.

ஜெயம் அண்ணா ஒரு சகாப்தம்.

ஜெயம் அண்ணாவின் கொல்லப்பட்ட உடலின் படங்கள் (இதே படங்கள்) நெருப்பு போன்ற புலிகளுக்கும் தமிழர்களுக்கும் எதிரான இணையத் தளங்களில் 2009 ஆண்டிலேயே வெளிவந்துவிட்டன...

இப்பதான் புதுசாக வருவது போல் இன்று மீண்டும் இவை வெளி வருவதன் காரணம் நிச்சயம் நல்ல காரணமாக இருக்காது. தேடிப்பார் போன்ற இணையத்தளங்கள் தம் பக்கம் வாசகர்களை அதிகரிக்க இறுதி வரைக்கும் போராடிய மாவீரர்களையும் மலினப் புத்தியுடன் பயன்படுத்த தொடங்கிவிட்டது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

tham_gene_17_02_06_01.jpg

வீரவணக்கங்கள்.

68b5a0dfb14621b6326fc9372dd87344.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!

ஒரு மாவீரனை அவமரியாதை செய்ய நினைக்கும் புறம்போக்குகளும் இந்த உலகில் இருக்குதுகள்.

இங்கை எங்கை அவமரியாதைக்குரிய கருத்து இருக்கு ?

கொஞ்சம் விளங்கப்படுத்தவும்.

Edited by I.V.Sasi

இங்கை எங்கை அவமரியாதைக்குரிய கருத்து இருக்கு ?

கொஞ்சம் விளங்கப்படுத்தவும்.

உந்தப் பருப்பு இங்கு வேகாது!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை எங்கை அவமரியாதைக்குரிய கருத்து இருக்கு ?

கொஞ்சம் விளங்கப்படுத்தவும்.

அவர் கடைசி வரை முள்ளி வாய்க்காலில் இருந்து எமக்காக போராடி அங்கேயே மடிந்தும் விட்டார் அதற்குப் பிறகும் அவருக்கு மாத்தையாவோட‌ தொட‌ர்பு அது,இது என பழைய விசர்க் கதைகள் எதற்கு?...அதைத் தான் எல்லோரும் இங்கே சுட்டிக் காட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை எங்கை அவமரியாதைக்குரிய கருத்து இருக்கு ?

கொஞ்சம் விளங்கப்படுத்தவும்.

அவர் கடைசி வரை முள்ளி வாய்க்காலில் இருந்து எமக்காக போராடி அங்கேயே மடிந்தும் விட்டார் அதற்குப் பிறகும் அவருக்கு மாத்தையாவோட‌ தொட‌ர்பு அது,இது என பழைய விசர்க் கதைகள் எதற்கு?...அதைத் தான் எல்லோரும் இங்கே சுட்டிக் காட்டுகிறார்கள்.

அவர் கடைசி வரை முள்ளி வாய்க்காலில் இருந்து எமக்காக போராடி அங்கேயே மடிந்தும் விட்டார் அதற்குப் பிறகும் அவருக்கு மாத்தையாவோட‌ தொட‌ர்பு அது,இது என பழைய விசர்க் கதைகள் எதற்கு?...அதைத் தான் எல்லோரும் இங்கே சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஏன் நீங்கள் அப்படி பார்க்க வேண்டும்?

பொதுவாக புலிகளின் அமைப்பில் துரோகம் செய்தார்கள் என்ரு கைது செய்பவர்கள் நிருபிக்க பட்டால் மரணதண்டனை நிச்சையமாக் நிருபிக்காவிட்டால் விடுதலை புலிகளில் இருந்து விலத்தி போக அனுமதிப்பார்கள் ஆனால் தளபதி ஜெயம் விடயத்தில் அப்படி ஒன்றுமே நடபெறவும் இல்லை மாறாக அவர் நம்பிக்கை உரியவராகவே இறக்கும் வரை இருந்தார்..

மேலே எழுதியவர்களின் உண்மையான பிரச்சனை என்ன தெரியுமா?

இவர்கள் உண்மையான விசுவாசிகளாம் அவர்கள் கண்ணுக்கு குறி மட்டும் தான் தெரியுமாம்.

மேல நான் சொன்ன விடையத்தை வேறு ஒருவர் சொன்னால் அதை ஒரு தகவலாக தான் எடுப்பார்கள் ஆனால் நான் சொன்னதால் வேற நோக்கத்தில் சொல்கிறேன் என்ற அவர்களின் மாயக்கண்ணாடிகு தெரிகிறது...................

அது அவர்களின் தவறில்லை அவர்களுக்குள் ஒரு மறைமுக போட்டி புலிகளின் தியாகத்திலும் வீரத்திலும் அவர்களின் ராஜதந்திரத்திலும் சரி சந்தேகப்படாதவர்கள் , குற்றம் கண்டு பிடிக்காதவர்கள் என்ற விசுவாச பெயறை பாதுக்காக்கவே.............

இது எடுபட கொஞ்சக் காலம் எடுக்கும்.

பலாலியில் இருந்து இராணுவம் யாழ்நகரை நோக்கி முனேறி வரும் போது தடுப்ப்பு சமரில் நீர்வேலிக்கும் கோப்பைக்கும் இடையில் என நினைக்கிறேன் ஒரு சண்டையில் நெல். கேண்ல் அகிலா வீரச்சாவைடைகிறார் அவரின் வீரசாவு செய்தியை நடுத்த நாள் உதயன் பேப்பரில் செய்தியாக போடும் போது இவர் ராஜீவ் கொலையில் தேடபப்டும் ஒருவர் என்று போட்டு இருந்தார்கள். அதுவும் புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ் இருந்தது . அது போல தான் மத்தையா விடையத்தில் இவர் மீது சந்தேகப்பட்டார்கள் என்று சொன்னேன் . அதுக்கு ஏதோ 2 3 பேர் மேல தங்கட விசுவாசத்தை காட்டுறதுக்கு படுற பாடு இருக்கே சொல்ல முடியவில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனிடம் சரண்டைந்து புலத்து பூனைகளால் துரோகியாக்கபடுவதை விட அவர் செய்தது சரி ஆனால் இதையே மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பாக்க முடியாது..

கேணல் ஜெயம் மாத்தையா வின் கைதின் போது கொஞ்சக்காலம் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டது பின் அவருக்கு ஒன்றுமே தெரிந்துஇருக்கவில்லை என்று விடுதலையும் செய்யப்பட்டார்.

சசி சொன்னதில்... தவறிருப்பதாக தெரியவில்லை.

அவரின் கருத்தை, டொங்கி பிழையாக விளங்கி விட்டார் போலுள்ளது.

இங்கு நான் ஒன்றும் பிழையாக விளங்கிக் கொள்ளவில்லை.

தேவையில்லாமல் ஜெயம் அண்ணாவின் கைதும் தடுத்து வைப்பும் இப்போது தேவையா?

மாவீரர் கேணல் ஜெயம் அவர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பிமலை (தொப்பிக்கல) மலைஉச்சியில் இருந்து எனக்குத் தெரிந்த நண்பர், ஜெயம் அவர்களைத் தொடர்பு கொண்ட போது, அவர் என்ன மாதிரி அண்ணை நிலமை என்று கேட்ட போது புலிகளின் ஒரு தளபதியாக இருந்த போதும் யதார்த்தவாதியாக நிலமையைக் கூறியவர் அவர்.

அவர் கூறியது இதுதான். நாம் கிழக்கு மாகாணத்தினை முற்றாக கைவிடுகின்ற நிலமை வரப் போகின்றது. அத்துடன், பேச்சுவார்த்தையில் நாம் சென்று எமது உரிமைகளை வெல்ல வேண்டும். இல்லை எனில் வன்னியையும் நாம் இழப்போம் என்றார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத் தளபதிகள் பலருடன் பழகியவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.

அதாவது, பிரிகேடியர் பால்ராஜ், பொட்டம்மான், கேணல் தீபன், கேணல் பால்ராஜ் உள்ளிட்ட பல தளபதிகள் போரை விரும்பவில்லை என்று. ஏனெனில் அவர்கள் தளபதிகள் அவர்களுக்குத்தான் தெரியும் தம்மிடம் உள்ள வளங்கள் பற்றியது.

அப்போது போரை விரும்பியது தமிழ்ச்செல்வன், காஸ்ட்ரோ மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும்தான்.

இந்த உண்மைகளை அறிந்து வைத்திருக்கக்கூடிய ஒரே நபர் அன்டன் பாலசிங்கம் அவர்களின் மனைவி ஆவார். அவரிடம் நன்கு தொடர்பில் உள்ளவர்கள் கேட்டு அறிந்து கொள்ளலாமே.

இங்கே மீண்டும் கூற வருவது இதுதான். அனைத்துலக சமூகம் ஹமாஸ் இயக்கத்துக்கு காட்டாத சலுகைகளைக்கூட விடுதலைப் புலிகளுக்கு காட்டியது. கிளிநொச்சியின் வாசலுக்கே வந்தது. நாம் அதனைச் சரியாக பயன்படுத்தினோமா?

சிறிலங்கா அரசில் தவறுகள் இல்லை என்று இங்கே நான் கூற வரவில்லை. வாய்ப்புக்கள் எம்மை நாடி வந்த போது அதனை நாம் சரியாக பின்பற்றினோமா என்றால் இல்லை என்று நாம் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.

சரி, இப்போது யாவும் முடிந்துவிட்டது. ஆனாலும் தொடர்ந்தும் மாய உலகுக்குள்தானே இருக்கின்றோம். இன்னும் அதில் இருந்து விடுபட புலம்பெயர் சமூகம் தயாராக இல்லையே.

Edited by nirmalan

குடும்பிமலை (தொப்பிக்கல) மலைஉச்சியில் இருந்து எனக்குத் தெரிந்த நண்பர், ஜெயம் அவர்களைத் தொடர்பு கொண்ட போது, அவர் என்ன மாதிரி அண்ணை நிலமை என்று கேட்ட போது புலிகளின் ஒரு தளபதியாக இருந்த போதும் யதார்த்தவாதியாக நிலமையைக் கூறியவர் அவர்.

அவர் கூறியது இதுதான். நாம் கிழக்கு மாகாணத்தினை முற்றாக கைவிடுகின்ற நிலமை வரப் போகின்றது. அத்துடன், பேச்சுவார்த்தையில் நாம் சென்று எமது உரிமைகளை வெல்ல வேண்டும். இல்லை எனில் வன்னியையும் நாம் இழப்போம் என்றார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத் தளபதிகள் பலருடன் பழகியவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.

அதாவது, பிரிகேடியர் பால்ராஜ், பொட்டம்மான், கேணல் தீபன், கேணல் பால்ராஜ் உள்ளிட்ட பல தளபதிகள் போரை விரும்பவில்லை என்று. ஏனெனில் அவர்கள் தளபதிகள் அவர்களுக்குத்தான் தெரியும் தம்மிடம் உள்ள வளங்கள் பற்றியது.

அப்போது போரை விரும்பியது தமிழ்ச்செல்வன், காஸ்ட்ரோ மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும்தான்.

இந்த உண்மைகளை அறிந்து வைத்திருக்கக்கூடிய ஒரே நபர் அன்டன் பாலசிங்கம் அவர்களின் மனைவி ஆவார். அவரிடம் நன்கு தொடர்பில் உள்ளவர்கள் கேட்டு அறிந்து கொள்ளலாமே.

இங்கே மீண்டும் கூற வருவது இதுதான். அனைத்துலக சமூகம் ஹமாஸ் இயக்கத்துக்கு காட்டாத சலுகைகளைக்கூட விடுதலைப் புலிகளுக்கு காட்டியது. கிளிநொச்சியின் வாசலுக்கே வந்தது. நாம் அதனைச் சரியாக பயன்படுத்தினோமா?

சிறிலங்கா அரசில் தவறுகள் இல்லை என்று இங்கே நான் கூற வரவில்லை. வாய்ப்புக்கள் எம்மை நாடி வந்த போது அதனை நாம் சரியாக பின்பற்றினோமா என்றால் இல்லை என்று நாம் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.

சரி, இப்போது யாவும் முடிந்துவிட்டது. ஆனாலும் தொடர்ந்தும் மாய உலகுக்குள்தானே இருக்கின்றோம். இன்னும் அதில் இருந்து விடுபட புலம்பெயர் சமூகம் தயாராக இல்லையே.

அண்ணை இந்த திரியில் வேண்டாம்.... இன்னொரு திரியில் விவாதிப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.