Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் ஆண்கள் மனைவிமாருக்கு அஞ்சுகிறார்கள்..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

woman-threat-man.jpg

எனக்கு பெண்கள் என் மீது ஆதிக்கம் செய்வது பிடிப்பதில்லை. பெண்கள் மட்டுமல்ல.. எவராக இருந்தாலும்.. என் மீது எனது தனிப்பட்ட விடயங்களில் மூக்கை நுழைப்பது அதைச் செய்.. இதைச் செய் என்பது எனக்கு அவ்வளவா பிடிப்பதில்லை. புத்திமதி சொல்லக் கேட்பது வேறு.. ஒன்றை தயவோடு.. அன்போடு செய்யச் சொல்வது வேறு...! ஆனால் ஒன்றை அதிகார தொனியில் அல்லது மேலாதிக்க நோக்கில்.. அல்லது கட்டாயக் கடமை என்ற போர்வையில்.. செய் என்று பணிப்பது வேறு.. எனக்கு இந்த கடைசியில் சொன்ன செயல்கள் செய்பவர்களைப் பொதுவாகப் பிடிப்பதில்லை..! அப்படிச் சொல்லப்படும் விடயங்களை தெரிந்து கொண்டே செய்யாமல் புறக்கணித்தும் விடுவேன். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை..!

இதில் உங்கள் நிலைப்பாடு என்ன..???! பெண்கள் சொல்வதை எல்லாம் கேட்டு நடப்பதுவா.. அவர்களுக்கு ஆண்கள் மீது மரியாதையை உண்டு பண்ணும்..??! இந்த வெட்டி மரியாதை நமக்கு அவசியம் தானா..??!

ஆண் மேலாதிக்கம் என்பது போல.. பெண் மேலாதிக்க நிலையும் இருக்கிறது. இதுவா ஆண்கள் (பொதுவாக) வீட்டில் பெண்களுக்கு அஞ்சக் காரணம்.. அல்லது வேறேதாவது உண்டா..???!

அண்மையில் எனக்குத் தெரிந்த ஒரு அண்ணா.. பாவம்.. விடுமுறையைக் கழிக்க மனைவி பிள்ளைகளோடு வந்திருந்தார். கொண்டு வரும் லக்கேஜ் காவுவதில் இருந்து மனைவியின் சேலைகள் அடுக்குவது வரை.. ஏன் அவை எந்த லக்கேஜில் இருக்குது என்று சொல்லி எடுத்துக் கொடுப்பது வரை.. அவர் செய்து கொண்டிருந்தார். அதுக்கும் மேலதிகமாக.. முன்னர் எல்லாம் (திருமணத்திற்கு முன் ) சுயமா சிந்திச்சவர்.. முடிவெடுத்தவர்.. இப்ப ஒரு முடிவெடுக்க.. மனைவியை கூப்பிட்டு வைச்சுக் கதைக்கிறார். எதற்கு எடுத்தற்கும்.. எங்களுக்கு குடும்பம் இருக்கு.. நான் குடும்பகாரன் என்று விடயங்களை.. தன் குடும்பம் சாராத பொறுப்புக்களை தட்டிக்கழிக்க முனைகிறார். எனக்கென்றால் தலைக்கில்லால போச்சுது. இடத்தை விட்டுக் காலி செய்துவிட்டேன்..! ஏன் இப்படி ஆகிறார்கள்.. எங்கள் தமிழ் ஆண்கள்..???!

இவர்களுக்கு மட்டும் தானா இந்தப் பூமிப் பந்தில் குடும்பம் இருக்குது..??! ஏன் குடும்பகாரன் என்றால் பிற விடயங்களை தட்டிக்கழிக்க வேணும் என்றது இவர்களின் மனைவியரின் கட்டாயச் சட்டமா..???! ஒன்னுமா புரியல்ல..???! உங்களுக்காவது இவற்றின் பின்னால் உள்ள காரணங்கள் ஏதாவது புரியுது..??! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பிச்சாச்சா ராசா

எழுதுகின்றேன். நேரம் வேணுமே

மனிசியிடம் அனுமதிகிடைக்குமோ தெரியல....? :lol::icon_idea: :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பிச்சாச்சா ராசா

எழுதுகின்றேன். நேரம் வேணுமே

மனிசியிடம் அனுமதிகிடைக்குமோ தெரியல....? :lol::icon_idea: :icon_idea:

நீங்களுமா.. மனிசியிடம் அனுமதி கேட்கனும்.. கொடுமை சரவணா..??! :lol:

எப்போதாவது (திருமணம் ஆக முதல்) உங்கள் நண்பவர்களோடு விடயங்களைப் பகிர்ந்து கொள்ள அம்மாவிடம் அனுமதி பெற்றிருக்கிறீங்களா..??! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் ஒவ்வொரு தனிக்கதைகள் உண்டு..! அதனால் இவ்விடயங்களைப் பொதுமைப்படுத்துவது கடினம்..! :D

என்னைப்பொறுத்தவரையில், இருவேறு குடும்பச் சூழ்நிலைகளில் இருந்து வந்து கணவன் மனைவியாக இணைந்தவர்களில் இருவரிடத்திலுமே மாறுதல்கள் ஏற்படுகிறது..! ஒருவர் மற்றொருவருக்கு முகம் பார்க்கும் கண்ணாடிபோல..! :rolleyes:

திருமணத்திற்கு முன்னர் சிலவற்றை சரி என நினைத்துச் செய்துகொண்டிருப்போம்..! அதில் பின்னர் மாற்றம் வரும்..! இதையெல்லாம் திருமணம் செய்து பார்த்தால்தான் விளங்கிக்கொள்ள முடியும்..! எழுதுவது கடினம்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கோழி மிதிச்சு குஞ்சு முடம் ஆகுமா

குஞ்சு மிதிச்சு கோழி முடம் ஆகுமா ராசா?

ஆனால் இது மிதிச்சா.....???? :lol::D :D

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் ஒவ்வொரு தனிக்கதைகள் உண்டு..! அதனால் இவ்விடயங்களைப் பொதுமைப்படுத்துவது கடினம்..! :D

என்னைப்பொறுத்தவரையில், இருவேறு குடும்பச் சூழ்நிலைகளில் இருந்து வந்து கணவன் மனைவியாக இணைந்தவர்களில் இருவரிடத்திலுமே மாறுதல்கள் ஏற்படுகிறது..! ஒருவர் மற்றொருவருக்கு முகம் பார்க்கும் கண்ணாடிபோல..! :rolleyes:

திருமணத்திற்கு முன்னர் சிலவற்றை சரி என நினைத்துச் செய்துகொண்டிருப்போம்..! அதில் பின்னர் மாற்றம் வரும்..! இதையெல்லாம் திருமணம் செய்து பார்த்தால்தான் விளங்கிக்கொள்ள முடியும்..! எழுதுவது கடினம்..! :lol:

எப்படி இப்படி.. அடியோடு மாறிப் போயிடுறீங்க.. என்றது தான் கேள்வியே..???! உங்களைப் போலத் தான் நான் சந்தித்த அந்த அண்ணாவும் இருந்தார். எப்படி இருந்தவர்.. இப்படி ஆகிட்டாரே என்று ஒரு பக்கம் கவலையாக இருந்தது.. இன்னொரு பக்கம்.. சந்தோசமான குடும்பத்தை கொண்டிருக்கிறார் என்ற அளவில் மகிழ்ச்சியாக இருந்தது..! :):icon_idea:

குஞ்சு மிதிச்சு கோழி முடம் ஆகுமா ராசா?

ஆனால் இது மிதிச்சா.....???? :lol::D :D

இதில் குஞ்சு என்று யாரைச் சொல்லுறீங்க...??! கோழி என்று யாரைச் சொல்லுறீங்க..???! ஏன் இவ்வளவு பயப்பிடிறீங்க...???!

அவன் ஒருத்தன் யாழில விடுப்புக் கதைப்பானாம்.. இவர் அதுக்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறாராம்.. அவங்களுக்கு என்ன மனிசியா பிள்ளையா குட்டியா.. நீங்களும் அவங்களோடு போய் குந்தி இருந்து கொண்டு.. விடுப்புக் கதைக்கிறீங்களோ...! வந்து கிச்சினுக்க வேலையைப் பாருங்க என்று திட்டு விழும் என்று பயப்பிடுறீங்க போல..! அப்படி திட்டினா சொல்லுங்க.. ஆண் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ்.. உள்ள போக வேண்டு வருமுன்னு..! :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு பக்கம்.. சந்தோசமான குடும்பத்தை கொண்டிருக்கிறார் என்ற அளவில் மகிழ்ச்சியாக இருந்தது..! :):icon_idea:

என்னப்பா இது

மண்டியிடுவதையிட்டு சந்தோசமா? :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது

மண்டியிடுவதையிட்டு சந்தோசமா? :lol::D

என்ன செய்வது அப்படி நினைச்சு எங்கள் அளவில் அவர் மகிழ்ச்சியா இருக்கிறார் என்று நினைச்சுக்க வேண்டியது தானே அண்ணா..!

ஏன் இந்த ஆண்கள்.. மண்டி இடுகிறார்கள் என்பது தான் புரியல்ல..???! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி திட்டினா சொல்லுங்க.. ஆண் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ்.. உள்ள போக வேண்டு வருமுன்னு..! :icon_idea::lol:

உள்ள போடுறது சரி

ஆனால் எங்களுக்கு தேவைகள் இருக்கே :wub:

அதுக்கு இன்னொன்றை நாடணும்

அதுவும்இதைத்தானே செய்யப்போகுது

பிறகு கோட்டு கேசு என்று அலையத்தான் நேரம் சரி... :lol::icon_idea: :icon_idea:

கோட்டுக்கேசு என்று போனா எவ்வளவு அறவிடுவினம் என்பதை நினைத்துப்பார்க்கவே பயமா இருக்கப்பா.... :lol::D

பயம் !!! என் அகராதியிலேயே இல்லை

என் மனிசிக்கு இதைச் சொல்லிப் போடாதைங்கோ...பிறகு நான் வீட்டுக்கு போக ஏலாது

  • கருத்துக்கள உறவுகள்

இரவு பட்டினி போட்டிடுவா என்றுதான்

காவல்துறைக்குமட்டும்தான் அஞ்சுவோம் !

ஐந்து யுவதிகளை கடந்த எட்டு மாதங்களில் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கை நடத்தி வந்த 28 வயது இளைஞன் சிலாபம் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டு உள்ளார்.

இவர் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தார் என்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.

இவர் நிலச் சுவாந்தர் போல நடித்து இருக்கின்றார். மனைவிமாரின் தங்க நகைகளை வஞ்சகமாக பெற்று 3.2 மில்லியன் ரூபாய்க்கு அடகு வைத்து இருக்கின்றார்.

இவரிடம் இருந்து திருமண சான்றிதழ்கள் இரண்டையும், 40000 ரூபாய்க்கு இவர் அடகு வைத்திருந்த 400,000 ரூபாய் பெறுமதியான ஒரு நகையையும் பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.

இவர் திருமணம் செய்த யுவதிகளில் ஒருவர் ஆடைத் தொழில்சாலையில் வேலை பார்ப்பவர். இன்னொருவர் வெளிநாட்டு வேலைக்கு சென்று திரும்பி வந்து இருப்பவர். முஸ்லிமாக நடித்த முஸ்லிம் யுவதிகள் இருவரை மண்ந்து இருக்கின்றார்.

இவர் திருமணம் செய்த யுவதிகள் வலஹபிட்டிய, செல்லக் கதிர்காமம், ராஜங்கண, பண்டுருவ, கல்நேவ ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள்.

இவர் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தமைக்காக ஏற்கனவே இரண்டரை வருட சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தார்.

இவர் யுவதிகளை பஸ் பயணங்களின்போது மடக்குகின்ற பழக்கத்தை வழக்கமாக கொண்டு இருக்கின்றார்.

filee.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பயம் !!! என் அகராதியிலேயே இல்லை

என் மனிசிக்கு இதைச் சொல்லிப் போடாதைங்கோ...பிறகு நான் வீட்டுக்கு போக ஏலாது

இதிலிருந்து நிழலி சொல்லவருவது என்னவென்றால்

அகராதிக்கும் இல்லறத்துக்கும் சம்பந்தமில்லை.

ஆனால் பயத்துக்கும் மனைவிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. :lol::D :D

குடும்ப நலன்களுக்காக விட்டுக் கொடுப்புகள் அவசியம். அதற்காக அடிமையாக இருக்கத் தேவையில்லை. நாங்களா விரும்பிச் செய்ய வேண்டும். ஒருத்தரில ஒருத்தர் அன்பாக இருந்தால், மற்றவரைக் கஷ்டப்படுத்தமாட்டீங்கள். தனிப்பட்ட முறையில் நான் இன்னுமொருவரை அடக்கி ஆள விரும்புவதில்லை. அதேபோல இன்னுமொருவர் என்னை அடக்கியாளவும் விடமாட்டேன்.

முடிவுகள் எடுக்கும் பொழுது அந்த விடயத்தில் உங்களுக்கு நல்ல அனுபவம் இருந்தாலன்றி, மற்றவரையும் ஆலோசித்துச் செய்வது நல்லதுதானே. இதைத்தானே வேலைத் தளங்களிலும் செய்கிறார்கள். அதற்காக சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் துணையை அபிப்பிராயம் கேட்க வெளிக்கிட்டால் சுயம் தொலைந்து போகும்.

தனிய இருக்கக்குள்ள வாழ்ந்த மாதிரியே கலியாணம் கட்டிய பின்னும் வாழ முடியாது. குடும்பம், பிள்ளைகள் என்று வர உங்களிலும் மாற்றங்கள் வரும். சிலர் அடிமையாக இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். நான் கண்ட பெரும்பாலானவர்கள் விருப்பத்துடன்தான், ஒருவருடன் ஒருவர் ஒத்துப்போகிறார்கள்.

அண்மைய பதிவுகளைப் பார்க்கையில், நெடுக்காலபோவான் எதுக்கோ 'ரெக்கி' எடுக்கிற மாதிரிக் கிடக்கு. :unsure:

கொள்கையளவில் திருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றுசேர்வது, ஆனால் நடைமுறையில் இது சாத்தியமாவது கடினம். ஏனெனில் ஆண்களும் பெண்களும் இயற்கையாகவே இருவேறு படைப்புக்கள்.

அதேவேளை விட்டுக்கொடுப்புடன் வாழுவது, குறிப்பாக பிள்ளைகள் நல்வாழ்வுக்காக, நடைமுறையில் சாத்தியமாகின்றது. அதுவும் மேற்குலக வாழ்க்கையில் கடினமாகின்றது. ஆனால் அந்த விட்டுக்கொடுப்பு சமுதாய வளர்ச்சிக்கு தேவையானது. இதில் அவர் பயப்படுகின்றார் இவர் பயப்படுகின்றார் என்பதல்ல முக்கியம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்மைய பதிவுகளைப் பார்க்கையில், நெடுக்காலபோவான் எதுக்கோ 'ரெக்கி' எடுக்கிற மாதிரிக் கிடக்கு. :unsure:

எனக்காக அல்ல. நாங்கள் வாழும் சமூகத்திற்காக.. உலகிற்காக..! :):icon_idea:

கொள்கையளவில் திருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றுசேர்வது, ஆனால் நடைமுறையில் இது சாத்தியமாவது கடினம். ஏனெனில் ஆண்களும் பெண்களும் இயற்கையாகவே இருவேறு படைப்புக்கள்.

அதேவேளை விட்டுக்கொடுப்புடன் வாழுவது, குறிப்பாக பிள்ளைகள் நல்வாழ்வுக்காக, நடைமுறையில் சாத்தியமாகின்றது. அதுவும் மேற்குலக வாழ்க்கையில் கடினமாகின்றது. ஆனால் அந்த விட்டுக்கொடுப்பு சமுதாய வளர்ச்சிக்கு தேவையானது. இதில் அவர் பயப்படுகின்றார் இவர் பயப்படுகின்றார் என்பதல்ல முக்கியம்.

சில சமயம் அந்த விட்டுக் கொடுப்புக்கள் எல்லை தாண்டியதாக இருப்பதை வெளியில் உள்ளவர்கள் உணர முடிகிறதே..???! அதையிட்டு என்ன சொல்லலாம்..??! :):rolleyes:

சில சமயம் அந்த விட்டுக் கொடுப்புக்கள் எல்லை தாண்டியதாக இருப்பதை வெளியில் உள்ளவர்கள் உணர முடிகிறதே..???! அதையிட்டு என்ன சொல்லலாம்..??! :):rolleyes:

உள்ளே உள்ளவர்களால் மட்டுமே அதை முழுமையாக உணர முடியும்.

வெளியில் உள்ளவர்கள், அவர்கள் தான் வெளியிலே உள்ளனரே :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளே உள்ளவர்களால் மட்டுமே அதை முழுமையாக உணர முடியும்.

வெளியில் உள்ளவர்கள், அவர்கள் தான் வெளியிலே உள்ளனரே :)

சுதந்திரத்தை இழந்த ஒரு வாழ்வு.. அதற்கு விட்டுக்கொடுப்பு என்ற பெயரில் ஒரு ஆபரணம் அணிந்து உள்ள இருந்து அழகு பார்த்து என்ன பயன்..???! சமூகம் அதை அழகு பார்க்க... அதனால் நன்மை அடைய ஏன்.. இந்த மனித இனம் விரும்புதில்ல.. குறிப்பா பெண்கள் விரும்புறாங்க இல்ல..???! கலியாணம் என்ற ஒன்றின் மூலம் ஆணின் சுதந்திர உணர்வுகள் பறிக்கப்படுவது தான்.. விட்டுக்கொடுப்பா..???! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடாத்தலாம் என்கின்றனர்.

அப்படியாயின் அதைக்கொண்டிழுக்கவும் அதைவிட அதிகம் பொய்யும் நடிப்பும் வேண்டுமல்லவா நெடுக்கு...

எல்லாமே ஒரு ஒழுங்கமைப்புத்தானே?

ஒருவர் பலசாலியானால் மற்றவர் ஆமாப்போடுவது நியதிதானே தம்பி?

சுதந்திரத்தை இழந்த ஒரு வாழ்வு.. அதற்கு விட்டுக்கொடுப்பு என்ற பெயரில் ஒரு ஆபரணம் அணிந்து உள்ள இருந்து அழகு பார்த்து என்ன பயன்..???! சமூகம் அதை அழகு பார்க்க... அதனால் நன்மை அடைய ஏன்.. இந்த மனித இனம் விரும்புதில்ல.. குறிப்பா பெண்கள் விரும்புறாங்க இல்ல..???! கலியாணம் என்ற ஒன்றின் மூலம் ஆணின் சுதந்திர உணர்வுகள் பறிக்கப்படுவது தான்.. விட்டுக்கொடுப்பா..???! :):icon_idea:

இன்று ஆணில் பலரும் சட்டிபானை கழுவுகிறார்கள், பிள்ளைகளை பார்கின்றார்கள்... எமது தந்தை தலைமுறையில் இது நடந்தது இல்லை.

ஆம், அது விட்டுக்கொடுப்பு அதில் பிழையோ இல்லை மதிப்புக்குறைவோ இல்லை.

சுதந்திரத்தை இழந்த ஒரு வாழ்வு.. அதற்கு விட்டுக்கொடுப்பு என்ற பெயரில் ஒரு ஆபரணம் அணிந்து உள்ள இருந்து அழகு பார்த்து என்ன பயன்..???! சமூகம் அதை அழகு பார்க்க... அதனால் நன்மை அடைய ஏன்.. இந்த மனித இனம் விரும்புதில்ல.. குறிப்பா பெண்கள் விரும்புறாங்க இல்ல..???! கலியாணம் என்ற ஒன்றின் மூலம் ஆணின் சுதந்திர உணர்வுகள் பறிக்கப்படுவது தான்.. விட்டுக்கொடுப்பா..???! :):icon_idea:

விட்டுக் கொடுப்பை, சுதந்திரத்தை இழந்த வாழ்வு என்று எடுக்க முடியாது. வெளியில் இருந்து பார்க்கும் பொழுது சுதந்திரத்தை இழந்த மாதிரி இருக்கும். உண்மை அதுவல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

விட்டுக் கொடுப்பை, சுதந்திரத்தை இழந்த வாழ்வு என்று எடுக்க முடியாது. வெளியில் இருந்து பார்க்கும் பொழுது சுதந்திரத்தை இழந்த மாதிரி இருக்கும். உண்மை அதுவல்ல.

இதைத்தான்

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதா??? :lol::D :D

உண்மையில் அஞ்சுவது அல்ல ,அஞ்சுவது போல் காட்டிக்கொள்வது. ஏனெனில் எமது உலகம் வேறு அவர்கள் உலகம் வேறு.எமது உலகத்தில் உலா வரவேண்டும் என்றால் அவர்களுடன் நியாயம் கதைக்காமல், சண்டை பிடிக்காமல் இருப்பதுதான் நல்லது.

உண்மையில் சுயநலத்திற்காகவே ஆண் அப்படி செய்கின்றான்.

இதைத்தான்

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதா??? :lol::D :D

'இவன் ரொம்ப நல்லவன்பா. எவ்வளவு அடித்தாலும் தாங்குவான்' என்கிற மாதிரி பொஸிடிவ்வாக எடுத்துக் கொள்வது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் அஞ்சுவது அல்ல ,அஞ்சுவது போல் காட்டிக்கொள்வது. ஏனெனில் எமது உலகம் வேறு அவர்கள் உலகம் வேறு.எமது உலகத்தில் உலா வரவேண்டும் என்றால் அவர்களுடன் நியாயம் கதைக்காமல், சண்டை பிடிக்காமல் இருப்பதுதான் நல்லது.

உண்மையில் சுயநலத்திற்காகவே ஆண் அப்படி செய்கின்றான்.

இதில மட்டும் ஆண்கள் எல்லோரும் ஒரே கட்சி போலக்கிடக்கு....

:lol::icon_idea: :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.