Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tamilenthi-appa-150x150.jpg

பிரிகேடியர் தமிழேந்தி, தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம், (15.02.1950 – 10.03.2009). தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களிலும் போராளிகளிலும் நன் மதிப்பு பெற்றிருந்தவர். 10.03.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சவடைந்தார்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்க காலத்தில் இருந்து விடுதலைக்காக உழைத்து அனைவராலும் தமிழேந்தி அப்பா என அழைக்கப்படும் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் இரண்டாம் ஆண்டு 10.03.2011 இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதிப்பிரிவு பொறுப்பாளராக செயற்பட்டு விடுதலைப்போராட்டத்திற்காக தாயகத்திலும் புலம்பெயர்நாடுகளிலும் நிதியினை பெற்றுக்கொள்ளும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டார். தாயகத்தில் பால்வேறு துறைகளை உருவாக்கி ஒருநாட்டின் அராசங்கத்தின் வருமானங்கள் எவ்வழிகளில் பெற்றுக்கொள்ளலாமோ அவ்வாறு பலவழிகளில் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

இதற்காக பல பிரிவுகளை உருவாக்கி பண்ணைகளை உருவாக்கி, தொழில்சாலைகளை உருவாக்கி மற்றும் விவசாய செய்கையினை மேற்கொண்டு விடுதலைப்போராட்டத்திற்காக வருமானங்களை ஈட்டிக்கொண்டிருந்தார்.

மற்றும் விடுதலைப்புலிகளின் கட்டமைப்பின் தளஅமைப்பு வேலைகள் உள்ளிட்ட கட்டுமான வேலைகள் அனைத்தினையும் ஒழுங்குபடுத்தி மேற்கொண்டார். சமாதான காலப்பகுதியில் தமிழ் மொழியில் பற்றுக்கொண்டு அனைத்து நிர்வாக கட்டமைப்புக்களிலும் தமிழ் பெயர்சூட்டி தமிழினை வளர்க்க பெரும்பாடுபட்டார்.

பல போராளிகளுக்கு தமிழ் மொழி ஊடாக பல திட்டங்களையும் தமிழின் வரலாற்றினையும் கற்றுக்கொள்ள பல முனைப்புக்களுடன் செயற்பாட்டார். தாயகத்தில் போர் உக்கிரம்பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறை செயலாளராக மாற்றம் பெற்று விடுதலைப்போராட்டத்திற்கான அடுத்தகட்ட பணியினை மேற்கொண்டார்.

இந்த காலகட்டப்பகுதியில் களத்தில் நிற்க்கும் போராளிகளையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டமைப்பினையும் சீர்செய்து போராளிகளின் செயற்பாட்டினை கண்டு படைத்துறை ரீதியிலான பல வளர்ச்சிகளுக்கு தமிழீழ தேசியத்தலைவர் அருகில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருந்தார்.

இன்நிலையில் சிறீலங்காப்படையினரின் போர் உக்கிரம் பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் 10.03.2009 அன்று புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் சிறீலங்காப்படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரவரலாறானார்.

tamilenthi-appa.jpg

http://www.tamilthai...newsite/?p=6188

தமிழீழம் என்னும் புனித இலட்சியத்துக்காக தமது இனிய உயிரை அற்பணித்த பிரிகேடியர் தமிழேந்தி அப்பா (ரஞ்சித் அப்பா) உட்பட இந்நாளில் வீர காவியமான வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வீரவணக்கம்..!

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்.

வீர வணக்கங்கள் !!

நினைவு நாள் வீரவணக்கங்கள்......................

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு நாள் வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள் !!!

நினைவு நாள் வீரவணக்கங்கள்

தாயகவிடுதலைக்காக தம்மை அர்பணித்த இம் மாவீரர்களுக்கு வீரவணக்கம்.

  • 2 weeks later...

பிரி...கேடியருக்கு மரியாதை இல்லாமல் போகப்போகுது. ”சேரன்” கோப்பியும், சிக்கின் றோலும் இல்லாமல் இந்தாளாலை இருக்கேலாது எண்டகதை கனபேருக்கு தெரியுமோ தெரியாது. ஆமி கிளிநொச்சி பிடிச்சபிறகும் இந்தாள் கிரிக்கெட் மச் பாக்க அன்ரனா கட்ட அலைஞ்ச கனபேர் இப்பவும் இருக்கினம்.

நல்லகாலம் மனிசன் செல்விழுந்து செத்தது. இல்லாட்டி தயாமாஸ்ரர் மாதிரி இப்ப பேட்டி கொடுத்துக் கொண்டிருப்பார்............................

இந்தாள் பற்றி இதிலை எழுதின கனக்க திரிவு படுத்தப்பட்ட கற்பனைகளே. முந்தி விழுதுகளிலை வாறமாதிரி கிறவுண்டுக்கையே இறங்காதவனை விளையாட்டில் வீரன் என்று எழுதுறமாதிரி............

  • கருத்துக்கள உறவுகள்

அவரே அங்கே இருந்து கொண்டு கிரிக்கட் பார்த்திருக்கிறார் நாங்கள் இங்கே இருந்து கொண்டு கிரிக்கட் பார்த்தால் என்ன?

படத்துறைச் செயலர் என்றால் என்ன?

பிரி...கேடியருக்கு மரியாதை இல்லாமல் போகப்போகுது. ”சேரன்” கோப்பியும், சிக்கின் றோலும் இல்லாமல் இந்தாளாலை இருக்கேலாது எண்டகதை கனபேருக்கு தெரியுமோ தெரியாது. ஆமி கிளிநொச்சி பிடிச்சபிறகும் இந்தாள் கிரிக்கெட் மச் பாக்க அன்ரனா கட்ட அலைஞ்ச கனபேர் இப்பவும் இருக்கினம்.

இது ஓவர் ஸ்பேட்.

அதை விடுங்கப்பா. உவருக்கு யாரப்பா பிரிகேடியர் கொடுத்தது. இயக்கமே கேணல் தானே கொடுத்தது.

தயவு செய்து நாடுக்காக இறந்த ஒருவரை , அவரை நினைவு படுத்தி போற்றும் களத்திலே நின்று கொண்டு , தவறான விமர்சனகள் எழுதுவதை தவிருங்கள் . அவரின் சிறந்த நிதி சம்பத்தமான திடங்களால தான் இயக்கம் பாரிய வளர்ச்சி கண்டது . அவர் அந்த பொறுப்பில் இருந்த படியால்தான் திருமணத்தையே தவிர்த்திருந்தார் .

பேகரையும் , பீட்சாவையும் சாப்பிட்டு கொண்டு எழுதுவது சுலபம்.

தமிழீழம் என்னும் புனித இலட்சியத்துக்காக தமது இனிய உயிரை அற்பணித்த பிரிகேடியர் தமிழேந்தி அப்பா (ரஞ்சித் அப்பா) உட்பட இந்நாளில் வீர காவியமான வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்

போராளிகளுக்கு இரு நேர உணவும், ஒரு நேர வெறும் தேநீரும் கொடுத்தால் காசு மிஞ்சும் என இவர் போட்ட திட்டம்தான் போராட்டத்தை கொண்டு நடத்தியதோ????

பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் தனிப்பட்ட வாழ்விலும் நேர்மையானவர்களாக, எடுத்துக்காட்டானவர்களாக இருக்கவேண்டும். முள்ளிவாய்க்காலில் பச்சைக் குழந்தைகள் எல்லாம் சாகும்போது உணவுகளை பதுக்கிவைத்திருந்த நிதி திட்டமிடலை சொல்லவா???? 5000 விற்ற சீனி 05 மணித்தியாலத்தில் 50 ஆனது எப்படி.????

  • 9 years later...
  • கருத்துக்கள உறவுகள்+
On 21/3/2012 at 14:57, பகலவன் said:

அதை விடுங்கப்பா. உவருக்கு யாரப்பா பிரிகேடியர் கொடுத்தது. இயக்கமே கேணல் தானே கொடுத்தது.

ஓமோம், உண்மைதான்.

உந்த தாத்தாவிற்கு புலிகளால் வழங்கப்பட்டது 'கேணல்' தரநிலைதான்!
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.