Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தில் ஐநா மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு - மே 17 இயக்கம் கோரிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. சபை சார்பில் தமிழ் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: மே 17 இயக்கம் வலியுறுத்தல்

மே 17 இயக்கம் நிர்வாகிகள் மணியரசன், தியாகு, விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கூறியதாவது:

இலங்கையில் நடந்த போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கையின் இந்த போர்க்குற்றத்திற்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்.

ஈழ மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேயை கடுமையாக தண்டிக்க வேண்டும். ஐ.நா. சபை சார்பில் இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி தனி தமிழ் ஈழம் அமைக்க வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி 18ந் தேதி மாலை 4 மணி அளவில் மெரினா கடற்கரையில் மாபெரும் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். இப்பேரணிக்கு தமிழர்கள் திரண்டு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

நன்றி நக்கீரன்.கொம்

422895_3520250368492_1339044043_33366106_2068202283_n.jpg

சனல் நாலு ஐ.நா. உட்பட்ட சர்வதேசம் விட்ட பிழைகளால் தான் தமிழின படுகொலை அரங்கேறியது என தெளிவாக நிரூபித்துள்ளது.

அந்த கறைபடிந்த வரலாற்றை கழுவ தென் சூடான் போன்று சுயநிர்ணய வாக்கெடுப்பை ஐ.நா. நடாத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக இரத்தங்களுக்கு நன்றி.  நல்ல செயல். 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் உறவுகளே

நீங்கள் நினைத்தால் முடியும்.

எம் மண் விடியும்

தமிழ் நாடு விழித்தால் தமிழனுக்கு விடிவு.நன்றி எம் தோழர்களே.

இச்சந்தர்ப்பத்தை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடையாது , ஒற்றுமையாக போராடுவோம் உறவுகளே

இச்சந்தர்ப்பத்தை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடையாது , ஒற்றுமையாக போராடுவோம் உறவுகளே

வணக்கம் ஹரி,

22 ஆம் திகதியில் ஜெனீவாவில் நடக்க இருக்கும் அமெரிக்க பிரேரணைக்கு எவ்வாறு நாம் ஆதரவு நாடுகளை சேர்க்கலாம்?

அதற்கு அந்த நாட்டு மக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் வாதிகள் மத்தியில் சனல் 4 ஆவணத்தைஎவ்வாறு கொண்டு செல்லலாம்?

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தான் சரியான திசையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறோம் போல் உள்ளது!

இலக்கு மகவும் தெளிவாக உள்ளது!

நன்றிகள், தமிழகச் சொந்தங்களே!

ஹரியைக் கண்டது மிகவும், மகிழ்ச்சி!

எம் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்டது ஒரு இனப்படுகொலை.

வாய் மூடி மௌனியாக இருந்த ஒட்டு மொத்த உலகில் ஒரு பகுதி இப்போது

போர்க்குற்றத்தைப் பற்றி பேசத் தொடங்குகிறது.

இந்த போர்க்குற்றம் என்ற சொல் இனப்படுகொலையாக மாற்றம் பெற்றால்

தமிழர்கள் தமது விடுதலையைப் பெறுவார்கள்.

எம்மவர்களின் அறிவார்ந்த செயற்பாடே இவற்றிற்கான வழியை ஏற்படுத்தும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குற்றத்தைச் செய்து விட்டு மனிதாபிமான உள்ள எவரும் அமைதியான தூக்கம் செய்யமுடியாது. மனச்சாட்சி நெஞ்சைத்தட்டும். அதைவிடத் தமிழர்கள் தட்டிக்கொண்டே இருக்கின்றார்கள். புலிகளை ஒடுக்கியபின் தான் சர்வதேசத்திற்கு சிங்கள அரசின் கபடநாடகம் நன்றாக விளங்கியுள்ளது போல் இருக்கின்றது. ஏனெனில் இவர்களையும் எல்லா ஏமாற்றத்தொடங்கிவிட்டான். தமிழர்களின் போராட்டம் சரியானதே என்பதை உலகம் தெளிவாக உணரத்தொடங்கியுள்ளது.

அத்துடன் அமெரிக்காவின் இந்தியாவை உடைக்கும் திட்டத்திற்கும் சரியான பாதை திறந்திருக்கின்றது. தமிழர்கள் இந்தியா உதைத்தபோதும் இந்தியாவின் காலைப்பிடித்துக்கொண்டு நின்றதால் அமெரிக்கா அமைதியாக இருந்தது. இப்பொழுது தமிழர்கள் இந்தியாவை கணக்கெடுக்கவில்லை என்பதும் தெளிவாயிற்று. இப்பொழுது தமிழர்களுக்கு ஒரு அமைதியான அதிகாரப+ர்வமான தீர்வை அமெரிக்கா முன்னின்று செய்தால் தமிழர்களின் நன்றிக்கடனான ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியும். இது அமெரிக்காவிற்கு தென் ஆசியப்பிராந்தியத்தில் காலூன்ற நல்லதொரு வாய்ப்பு ஆக அமையும்.

தமிழர்களின் ஆறாத காயத்திற்கு மருந்தளித்தாகவும் அமையும். எனவே அமெரிக்காவின் விய+கங்களுக்கு தமிழர்கள் மதிப்பளித்து பாதையை நல்லபடி திருப்புதல் வேண்டும்.

இதை கொண்டே இந்தியாவின் துரோகத்தனத்திற்கு நல்ல பதில் கொடுக்கமுடியும். சிங்களவன் சீனனனைக்கொண்டு இந்தியாவை ஓரம் கட்டியது போல் தமிழர்களும் அமெரிக்காவை வைத்து இந்தியாவை ஓரம் கட்டவேண்டும்.

அமெரிக்கா இந்தியாவுடன் நல்லுறவு நிலைபோல் இருந்தாலும், கனிவான சந்தர்ப்பங்கள் வரும்போது அமெரிக்கா நழுவிவிடும். பழம் நழுலிப்பாலுள் விழுந்த கதையாக அமெரிக்காவை எங்கள் பக்கம் சாய்க்கவேண்டும். இதற்கு நாங்கள் என்னவிலையும் கொடுக்கலாம்.

Posted Yesterday, 10:21 AM

மேலுள்ள வாக்கியதின்படி நிகழ்வு நடைபெறவேண்டும் ..........................

எம்மால் முடியும், எம்மால முடியும் என்று ஒவ்வொரு தமிழனும் கடுமையாக உழைக்கும் [போராடும்] காலமிது.............இந்தக்காலம் எம்விடிவுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களில் அதிமுக்கியமான சந்தர்ப்பமும்,காலமும் ஆகும் .......நாம் எடுக்கும் ஒவ்வொரு அரசியல் முயற்சியும் 3 வருடங்களுக்கு முன்பு நாம் கொடுத்த ஆயுத அடியைவிட பலமாக எதிரியை உதைக்கவேண்டும்..........................

  • கருத்துக்கள உறவுகள்

வள்ளுவன் வாழ்ந்த வானளந்த தமிழகமே!

உள்ளிருந்து எழுகின்ற எம் நன்றிக்கு அளவில்லை

குற்றத்தைச் செய்து விட்டு மனிதாபிமான உள்ள எவரும் அமைதியான தூக்கம் செய்யமுடியாது. மனச்சாட்சி நெஞ்சைத்தட்டும். அதைவிடத் தமிழர்கள் தட்டிக்கொண்டே இருக்கின்றார்கள். புலிகளை ஒடுக்கியபின் தான் சர்வதேசத்திற்கு சிங்கள அரசின் கபடநாடகம் நன்றாக விளங்கியுள்ளது போல் இருக்கின்றது. ஏனெனில் இவர்களையும் எல்லா ஏமாற்றத்தொடங்கிவிட்டான். தமிழர்களின் போராட்டம் சரியானதே என்பதை உலகம் தெளிவாக உணரத்தொடங்கியுள்ளது.

அத்துடன் அமெரிக்காவின் இந்தியாவை உடைக்கும் திட்டத்திற்கும் சரியான பாதை திறந்திருக்கின்றது. தமிழர்கள் இந்தியா உதைத்தபோதும் இந்தியாவின் காலைப்பிடித்துக்கொண்டு நின்றதால் அமெரிக்கா அமைதியாக இருந்தது. இப்பொழுது தமிழர்கள் இந்தியாவை கணக்கெடுக்கவில்லை என்பதும் தெளிவாயிற்று. இப்பொழுது தமிழர்களுக்கு ஒரு அமைதியான அதிகாரப+ர்வமான தீர்வை அமெரிக்கா முன்னின்று செய்தால் தமிழர்களின் நன்றிக்கடனான ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியும். இது அமெரிக்காவிற்கு தென் ஆசியப்பிராந்தியத்தில் காலூன்ற நல்லதொரு வாய்ப்பு ஆக அமையும்.

தமிழர்களின் ஆறாத காயத்திற்கு மருந்தளித்தாகவும் அமையும். எனவே அமெரிக்காவின் விய+கங்களுக்கு தமிழர்கள் மதிப்பளித்து பாதையை நல்லபடி திருப்புதல் வேண்டும்.

இதை கொண்டே இந்தியாவின் துரோகத்தனத்திற்கு நல்ல பதில் கொடுக்கமுடியும். சிங்களவன் சீனனனைக்கொண்டு இந்தியாவை ஓரம் கட்டியது போல் தமிழர்களும் அமெரிக்காவை வைத்து இந்தியாவை ஓரம் கட்டவேண்டும்.

அமெரிக்கா இந்தியாவுடன் நல்லுறவு நிலைபோல் இருந்தாலும், கனிவான சந்தர்ப்பங்கள் வரும்போது அமெரிக்கா நழுவிவிடும். பழம் நழுலிப்பாலுள் விழுந்த கதையாக அமெரிக்காவை எங்கள் பக்கம் சாய்க்கவேண்டும். இதற்கு நாங்கள் என்னவிலையும் கொடுக்கலாம்.

இதெல்லாம் எங்களிற்குத் தேவையில்லாத பிரச்சினை.

எமக்கு வேண்டியது எமது விடுதலை. இந்தியாவை உடைப்பதல்ல.

தற்போது கனித்துள்ள சூழ்நிலையை வைத்துக் கொண்டு எமது இலட்சியத்தை அடைய உலக ஆதரவைத் திரட்ட வேண்டும்.

ஈழத்தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் கொள்கை முற்றாக மாற்றம் பெறவேண்டும். அதற்கான தொடக்க புள்ளியை தற்போதைய சூழல் ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து தமிழக அரசியற் கட்சிகளும், மக்களும் இந்திய நடுவண் அரசை எமக்கெதிராகச் செயற்படாதவாறு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். அதற்கான ஊக்கத்தை, அழுத்தத்தை நாம் தமிழக உறவுகளிற்கு கொடுக்க வேண்டும்.

அதைவிடுத்து மடத்தனமான கருத்துக்களைத் தெரிவித்து தமிழக உறவுகளே எம்மைக் கைவிடும் நிலைக்கு இட்டுவிடாதீர்கள்.

இதெல்லாம் எங்களிற்குத் தேவையில்லாத பிரச்சினை.

எமக்கு வேண்டியது எமது விடுதலை. இந்தியாவை உடைப்பதல்ல.

தற்போது கனித்துள்ள சூழ்நிலையை வைத்துக் கொண்டு எமது இலட்சியத்தை அடைய உலக ஆதரவைத் திரட்ட வேண்டும்.

ஈழத்தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் கொள்கை முற்றாக மாற்றம் பெறவேண்டும். அதற்கான தொடக்க புள்ளியை தற்போதைய சூழல் ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து தமிழக அரசியற் கட்சிகளும், மக்களும் இந்திய நடுவண் அரசை எமக்கெதிராகச் செயற்படாதவாறு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். அதற்கான ஊக்கத்தை, அழுத்தத்தை நாம் தமிழக உறவுகளிற்கு கொடுக்க வேண்டும்.

அதைவிடுத்து மடத்தனமான கருத்துக்களைத் தெரிவித்து தமிழக உறவுகளே எம்மைக் கைவிடும் நிலைக்கு இட்டுவிடாதீர்கள்.

மின்னல் சரியாகச் சொன்னீர்கள், எமக்கான பொது வேலைத்திட்டமும், பொது எதிரியுமுண்டு அதற்கு எதிரான போராட்டமாகவும் அது சார்ந்த செயற்பாடாகவும்தான் எமது செயற்பாடுகள் இருக்கவேண்டும்.

தமிழகம் என்பது இந்தியாதான் என்றவிடயம் பலவேளைகளில் எம்மவர்களால் மறக்கப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.