செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
நடிகர் வடிவேலுவைப் போல் வெறியில் தூங்கிய மஹிந்த கைது ஹொரவ்பொத்தானை-நகரத்திலுள்ள மதுபானசாலையொன்றின் கூரையை உடைத்து உள்ளே சென்று, பியர் அருந்தி விட்டு வெறியில் வெளியேசெல்ல முடியாமல் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த நபரொருவரை நேற்று(25) கைது செய்துள்ளதாக, ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரவ்பொத்தானை - சமகிகம பகுதியைச் சேர்ந்த மஹிந்த திலகரெட்ன (40 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, ஹொரவ்பொத்தானை-நகரத்திலுள்ள பியர் ஹவுஸ் கூரையை, சந்தேகநபர், ஞாயிற்றுக்கிழமை (24) இரவு உடைத்துக்கொண்டு, கீழே இறங்கியுள்ளார். அங்கு, இலாச்சியில் இருந்த 2,300 ரூபாய் பணத்தை எடுத்து, தன்னுடைய …
-
- 2 replies
- 1.5k views
-
-
பெங்களூரூ: பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா முறைப்படி தீட்சை ( சன்னியாசம் ) பெற்று நித்யானந்தாவின் சீடரானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன் படுக்கையறையில் இருந்ததாக வீடியோ ஒளிபரப்பானது. இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக பல சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தது. தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்டது. பல இடங்களில் இவருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது. இன்று நித்யானந்தாவுக்கு 37வது பிறந்தநாள் ஆகும். இந்நிலையில் ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா இன்று தீட்சை வழங்கினார். பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு மா ஆனந…
-
- 18 replies
- 1.5k views
-
-
ஷில்பா ஷெட்டிக்கு முத்தம் கொடுத்த: நடிகருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி புதுடில்லி: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு, பொது இடத்தில் முத்தம் கொடுத்ததாக, ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் மீது தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. அவர் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வந்து செல்லலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெர். எய்ட்ஸ் தொடர்பான பிரசாரத்திற்காக கடந்த ஆண்டு டில்லி வந்தார். அங்கு நடந்த விழாவில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும் பங்கேற்றார். விழா நடந்து கொண்டிருந்தபோது, திடீரென ஷில்பா ஷெட்டிக்கு முத்தம் கொடுத்தார் ரிச்சர்ட். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரிச்சர்ட்டுக்கு எதிராக …
-
- 0 replies
- 1.5k views
-
-
நாயை துரத்தி சென்ற சிறுத்தை நாயுடன் சேர்ந்து 7 மணி நேரமாக கழிவறைக்குள் சிக்கி கொண்டது கர்நாடகாவின் தட்சிண கன்னட மாவட்டத்தின் பிலினேல் கிராமத்தில் சிறுத்தை ஒன்று நாயை துரத்தி உள்ளது. நாய் ரெகப்பா என்பவரின் வீட்டின் கழிவறைக்குள் புகுந்தது தொடர்ந்து சிறுத்தையும் கழிறைக்குள் புகுந்து. சிறுத்தை கழிவறைக்குள் நுழைந்ததை பார்த்ததும் அந்த வீட்டு பெண்மணி உடனடியாக கழிவறையின் கதவைப் பூட்டி பக்கத்து வீட்டுகாரர்களை அழைத்து உள்ளார். உடனடியாக போலீஸ் அதிகாரிகளுக்கும் வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. கழிவறையில் நாயும், சிறுத்தையும் சிக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து வனத்துறை சரகர் கரிகலன் கூறியதாவது:…
-
- 17 replies
- 1.5k views
- 1 follower
-
-
கல்லறையில் பிணத்தை தோண்டி ரத்தம் குடிக்கும் காட்டேரியை பற்றி கட்டுக்கதைகள் படித்திருப்பீர்கள். ஆண் ரத்தத்தை குடிக்கும் அணங்கு என்றும் கூட சினிமாக்களிலும் பார்த்திருப்பீர்கள். ஆனால், உண்மையில் இப்படி இந்தக் காலத்திலும் சிலர் உள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா? நம்புங்கள். ஆஸ்திரேலியாவில் ஒரு பெண், தன் அன்பை வெளிப்படுத்த உச்சகட்டமாய், கணவனின் ரத்தத்தை குடிக்கிறாள். இவளின் பெயர் கிரிஸ் பாய்சன். (பெயரிலேயே விஷம் இருக்கு...) ‘நான் என் கணவனின் அனுமதியுடன் தான் அவரது ரத்தத்தை குடிக்கிறேன். காதலன் தன் காதலியின் ரத்தத்தை குடிப்பதும், காதலன் ரத்தத்தை காதலி குடிப்பதும் அன்பை வெளிப்படுத்தும் ஒரு உச்சகட்ட உத்தி தான். நான் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான பெண்கள், ரத்தம…
-
- 5 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா..!! (படங்கள்) தமிழ் திரையுலகின் பிரபல்ய நடிகை ரம்பா இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். இலங்கை தமிழரான இந்திரன் என்பவரை 2010ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரம்பா. இந்திரன் யாழ்ப்பாணம் சுதுமலைப்பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட நிலையில் இன்றையதினம் நடிகை ரம்பா தனது புகுந்த வீட்டிற்கு வருகை தந்தார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் கனடாவில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு லாவண்யா, ஷாசா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 1993ஆம் ஆண்டு திரைக்கு அறிமுகமாகி பல ரசிகர்களின் கனவுக்கன்னியான ரம்பா ரஜினி,அஜித், விஜய் உட்பட பல பிரபல்ய நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 4 replies
- 1.5k views
-
-
செல்போன் குளியல் . Tuesday, 18 March, 2008 11:55 AM . டோக்கியோ, மார்ச். 18: குளிக்கும் போது பாடுபவர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஜப்பானிலோ குளிக்கும் போது செல்போன்களை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாம். . ஜப்பானில் சமீபத்தில் நடத்தப் பட்ட ஆய்வு ஒன்றில் 41 சதவிகிதம் பேர் குளிக்க செல்லும் போது கையில் செல்போனையும் எடுத்துச் செல்லும் பழக்கத்தை கொண்டி ருப்பது தெரியவந்துள்ளதாம். இவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் வயதினர் என்றும், இமெயில் டைப் செய்வதற்காக குளியல் அறைக்கு செல்போனை அதிக அளவில் எடுத்துச் சென்று பயன்படுத்துகின்றனர் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக பாட்டு கேட்பதற்காக செல்போனை பலர் எடுத்…
-
- 1 reply
- 1.5k views
-
-
உயிர்போகும் தருவாயிலில இருந்த பாம்பு பெண்ணாகிய மாரிய அதியச சம்பவம் கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படிதியுள்ளது.கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகே இருந்த பாம்பை கொல்ல முயன்றபோது, அங்கே மக்கள் கூட்டம் திரண்டது. பின்னர் மக்கள் அதைக் கொல்ல முயன்ற போது, அது திடீரென ஒரு பெண்ணாக உரு மாறியது..இது பற்றி எபாஹ் குரிப்புகையில் "பாம்பு பெண்ணாக உருவானதாக மக்கள் கூச்சளிடுகையில், அந்தப் பெண் கோபத்துடன் 'உரு மாறினா என்ன?' எனக் குறிப்பிட்டது." என்று கூறினார்.மேலும் குறிப்பிடுகையில் "வித்தியாசமான பாம்பு போன்ற ஓசையை எழுப்பியபடி எழுந்த அந்தப் பெண்ணின் உடல் பாம்புச் சட்டை போன்ற சுடுபட்ட தோலைக் கொண்டிருந்தார்."காவல் துறையினருக்கு மக்கள் தகவல் கொடுக்க, அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்தப் பெ…
-
- 2 replies
- 1.5k views
-
-
பிரபல மல்யுத்த வீரரான கனடாவைச் சேர்ந்த கிறிஸ் பேனாட் தனது மனைவி மற்றும் மகன் ஆகியொரைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். (இதேவேளை ரொறன்ரோவில் தமிழர்கள் செறிந்து வாழும் மோனிங்சைட் கைட்ஸ் பகுதியிலும் ஒருவர் தனது மனைவி மற்றும் தாயாரை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.) Deaths Of WWE Champ Chris Benoit, Family May Have Been Murder-Suicide Autopsy results expected at Tuesday press conference. By James Montgomery Del.icio.us Digg Newsvine Send Print You Tell Us The deaths of former WWE champion Chris Benoit, his wife Nancy and their son Daniel are being treated as an apparent murder-suicide, according to The Associate…
-
- 0 replies
- 1.5k views
-
-
இன்றைய தினம் காலை கோத்தபாய அரசாங்கத்திற்கு எதிராக யாழ் நகரை சுற்றி எதிர்ப்புப் பேரணி ஹிருணிக்கா தலைமையில் நடைபெற்று இருக்கிறது.. அதை குழப்ப வந்த கோத்தாவின் எடுபிடி சித்தார்த்துக்கு அடி எண்டா செம அடி விழுந்திருக்கு யாழ்ப்பாணத்தில.. நல்லவேளை தமிழண்ட கையில அம்பிட்ட படியால அடி ஓட தப்பினான் சித்தார்த்.. இதுவே சிங்கள ஏரியாவில செய்து சிங்கள சனத்திட்ட அம்புட்டு இருந்தா இருக்கிற கோவத்தில உசிரோட கொழித்தி இருப்பானுங்க.. சனம் தின்னவழி இல்லாமல் படுற கஸ்டத்திலும் இவன் சொம்பு தூக்க வந்திருக்கிறான்.. அதுசரி வரலாற்றில் காக்கை வன்னியர்களுக்கு எப்பதான் மனசாட்ச்சி இருந்தது..?
-
- 7 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணம் - மிருசுவில் தவசிகுளம் கண்ணகை அம்மன் கோயிலில் இருந்த பாம்பை நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் (14) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, கண்ணகை அம்மன் கோயில் அடியார்கள் நீண்ட காலமாக நாகபாம்பு ஒன்றை பால் ஊற்றி வளர்த்து வந்தனர்.இந்நிலையில் சம்பவ தினத்தன்று மாலை வேளையில் கோயில் முன்றலில் குரங்குடன் வந்த நபரொருவர், சிறுவர்களுக்கு குரங்கு ஆட்டம் காட்டியுள்ளார். அதனைத்தொடர்ந்து மகுடி வாசித்துள்ளார். மகுடி சத்தம் கேட்ட பாம்பு கோயில் முன் பகுதிக்கு வந்துள்ளது. அதன்போதே குறித்த நபர் பெட்டிக்குள் பாம்பை அடைத்து கொண்டு சென்று…
-
- 24 replies
- 1.5k views
- 1 follower
-
-
இது கொஞ்சம் பெரிய இடத்து விசயம்.... பொல்லாப்பு தான். இருந்தாலும் பேசத்தான் வேணும். பிரிட்டிஷ் ராணியம்மாவுக்கு நான்கு பிள்ளைகள். முடிக்குரிய இளவரசர் சார்லஸ், இளவரசர் அன்ரூ, இளவரசி ஆன், இளவரசர் எட்வர்ட். இவர்களில் இரண்டாவது மகன், அன்ரூ சிறுவயதில் கொஞ்சம் துடுக்கானவர். பின்னாளில் பிரச்சனைக்குரியவர்.....ஆகி உள்ளார். நான்கு சகோதரர்களில், ஏனைய மூவரும், இவர் இனி பொது நிகழ்வுகளில் பங்கு பெறக்கூடாது என்று ஒருமித்த முடிவினை எடுத்துள்ளனர். இவரது அண்ணர் மகன், வில்லியம், சிம்மாசனத்துக்கு, இரண்டாவது வாரிசு. அடுத்த முடிக்குரிய வாரிசு சார்லின் மகன். இவர் தனது சித்தப்பா, அன்ரூ அரச குடும்ப நலன்களுக்கு ஆபத்தானவர் என்று வைத்த உள்குடும்ப கருத்து ஒன்று வெளியே கசிந்துள்…
-
- 17 replies
- 1.5k views
-
-
இத்தாலியில் இறந்த கர்ப்பிணி பெண் ஒருவர் மூன்று மாதங்கள் கழித்து குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இத்தாலியிலுள்ள மில்லன்(Milan) நகரின் சான் ரஃபேல்(San Raphel) என்னும் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்(36) ஒருவர் திடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். 6 மாத கர்ப்பிணியான அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில் தீவிர ஆலோசனைக்கு பின் குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என தீர்மானித்துள்ளனர். இதன்பின் கடந்த 3 மாதங்களாக மருத்துவக் கருவிகள் மூலம் செயற்கையாக பெண்ணின் உடல் உறுப்புகளை இயங்கச்செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அவரின் வயிற்றில் இருந்து, ஆண் குழந்தையை ஆரோக்கியமாக வெளியில் எடுத்துள்ளனர் . - See more at: ht…
-
- 0 replies
- 1.5k views
-
-
https://www.youtube.com/watch?v=AwCEKy8lZR4 பாம்பை வெட்டி சமைத்த சமையல்காரர்: உயிரற்ற பாம்பின் தலையால் கடி வாங்கி பரிதாப பலி! பெய்ஜிங்: சீனாவில் வெட்டிய பின்னரும் உயிருடன் இருந்த பாம்பு ஒன்று கடித்ததில் சமையல்காரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாம்புக் கறிக்குப் பெயர் போன சீனாவில் இந்த நூதன சம்பவம் நடந்துள்ளது. நாகபாம்பு கடித்து உயிரை விட்டவர் பெயர் பெங்பாங் ஒரு சமையல்காரர். அங்குள்ள ஒரு ஓட்டலில் பாம்பு கறி சமைத்தார். அதற்காக இந்தோனேசியா மற்றும் சீனா கலப்பின நாகப்பாம்பின் தலையை வெட்டி துண்டாக்கி விட்டு அதன் உடல் பாகத்தின் கறியை எடுத்து உணவாக சமைத்தார். துண்டிக்கப்பட்ட பாம்பின் தலையை 20 நிமிடம் கழித்து குப்பை கூடையில…
-
- 4 replies
- 1.5k views
-
-
55,000 அமெரிக்க டொலர் செலவில் திருமண பந்தத்தில் இணைந்த நாய் ஜோடி ஆண் நாயொன்றுக்கும் பெண் நாயொன்றுக்கும் 55,000 அமெக்க டொலர் செலவில் ஆடம்பரத் திருமணம் நடத்தப்பட்ட சம்பவம் அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. அண்மையில் இடம்பெற்ற இத் திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரூபின் என்ற பெண் நாய்க்கும் கார்ட்டர் என்ற ஆண் நாய்க்கும் பாம் டிஸேர்ட்டிலுள்ள வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்றனர். மேற்படி திருமணத்தை மத குருவான ஹரி பார்பர் நடத்தி வைத்தார். ஆண் நாயின் உரிமையாளரான ஆன் இத் திருமணம் குறித்து விபரிக்கையில், "நான் எனது மகனை (கார்ட்டரை) இழக்கவில்லை. மாறாக …
-
- 16 replies
- 1.5k views
-
-
திருச்சியில், முதலிரவுக்கு சம்மதித்காத மனைவியிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட கணவனை, போலீசார் கைது செய்தனர். திருச்சி தீரன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 32, ஆட்டோ டிரைவர். இவருக்கும், நாகை மாவட்டம், சீர்காழி புளிச்சங்காட்டை சேர்ந்த சரஸ்வதி, 27, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும், 12ம் தேதி, திருச்சி வயலூரில் திருமணம் நடந்தது. திருமணத்தன்று இரவு, வெங்கடேசன் அறைக்குள் நுழைந்த சிறிது நேரத்துக்குள், சரஸ்வதி அலறியடித்தபடி வெளியே ஓடி வந்துவிட்டார். உறவினர்கள் சமாதானம் செய்த போதிலும், தனியறையில் படுத்து தூங்கினார். அதன்பின், சீர்காழியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அங்கும், முதலிரவு நடத்த சரஸ்வதி சம்மதிக்கவில்லை என்பதால், தம்பதியினர் திருச்சி திரும்பினர். மறுநாள் கா…
-
- 3 replies
- 1.5k views
-
-
கோத்தபாயவை கைப்பற்ற சொன்னால் ராஜபக்சகளின் உள்ளாடைகளை கைப்பற்றிய போராட்டகாரர்கள்! நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியால் ரசாங்காத்தை பதவி விலகுமாறு கோரி போராட்டத்தை முன்னடுத்திருந்தனர். அந்த வகையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இன்று இனப்படுகொலையாளி கோத்தபாயராஜபக்சவின் மாளிகையை கைப்பற்றியுள்ளனர். அதோடு அங்கிருந்த ராஜபக்சகளின் உள்ளாடைகளையும் போராட்டகாரர்கள் கைப்பற்றினர். அது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதுமட்டுமல்லாது கோட்டாவின் மாளிகையில் புகுந்த பொதுமக்கள் அங்கிருந்து எடுத்துக்கொண்ட செல்பிகளும் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. . நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியால் அரசாங்காத்தை பதவி விலகுமாறு கோரி போராட்டத…
-
- 21 replies
- 1.5k views
-
-
ரசியாவில் பரசூட்டில் இந்த கழுதையை பறக்க விட்டுள்ளனர் . ரசியாவில் இந்த வினோத நிகழ்வு நடை பெற்றுள்ளது . மிருக வதை சட்டத்தின் கீழ் இதனை செய்தவர்கள் கைதாகாமல் இருந்தால் சரி .
-
- 9 replies
- 1.5k views
-
-
முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசலில் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அதிசயமான சம்பவம். (வீடியோ இணைப்பு) கடந்த வாரம் நேபாளத்தில் முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான பள்ளிவாசலில் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அதிசயமான சம்பவம். பள்ளிவாசல் கோபுரத்தை(மினரா) தூக்கிவைப்பதற்கு கிரேனை கேட்டபோது மறுக்கப்பட்டதுடன் உங்கள் அல்லாஹ்வால் முடிந்தால் அதை தூக்கி வைக்கச் சொல்லுங்கள் என்று சிலர் கூறினர்.சொல்லி அடுத்த நொடியே கோபுரம் தானாக சென்று அமர்ந்து கொள்ளும் காட்சியை காணலாம்..
-
- 5 replies
- 1.5k views
-
-
அரிவாள் என்றாலே தமிழ் சினிமாவின் உபயத்தால் நமக்கு நினைவிற்கு வருவது மதுரைதான். இப்பொழுது அதே மதுரைக்கார்ரகள், அரிவாளை வைத்து ஒரு சாதனை படைத்துள்ளனர். ஆம்... 33 அடி நீளமும், 6 அடி அகலம் கொண்ட, 7 அடி நீளமுள்ள கைப்பிடியுடன் 800 கிலோ எடை கொண்ட பிரமாண்ட அரிவாளை தயாரித்துள்ளனர். மதுரை சுற்றுவட்டாரத்தில், கோயிலுக்கு அரிவாளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். அதன்படி, மதுரையில் இருந்து சதுரகிரி செல்லும் வழியில் டி.கல்லுபட்டியில் உள்ள கருப்பண்ணசாமி கோயிலுக்கு காணிக்கையாக வழங்க இந்த அரிவாள் தயாரிக்கப்பட்டு உள்ளது. அந்த கோயிலை உருவாக்கி, நிர்வகித்து வரும் கணேசமூர்த்தி மௌன அடிகளார் இது குறித்து கூறும்போது, ''இந்த கோயிலை நான் உருவாக்கி 19 ஆண்டுகள் ஆகின்றது. இந்த 19 ஆ…
-
- 3 replies
- 1.5k views
-
-
-
- 16 replies
- 1.5k views
-
-
28 ஆண்டுகளாக நடந்து வந்த கேரள கன்னியாஸ்திரீ அபயா கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரீ ஸ்டெபி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது கேரள மாநில சிபிஐ நீதிமன்றம். சிறை தண்டனையுடன் சேர்த்து பாதிரியார் தாமஸ் கோட்டூருக்கு ரூ. 6.50 லட்சமும் கன்னியாஸ்திரீ ஸ்டெபிக்கு ரூ. 5.50 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 49 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 1992ம் ஆண்டு கொலை நடந்தபோது கன்னியாஸ்திரீ அபயாவுக்கு வயது 19 மட்டுமே. கேரளாவில் மிக நீண்டகாலம் விசாரிக்கப்பட்ட கிரிமினல் வழக்காக இந்தக் கொலை வழக்கு வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. சகோதரி அபயாவின் உடல், அவர் தங்கியிருந்த விடுதியின் கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்ட 28 ஆண்டுகள் கழித்து, பாதிரியா…
-
- 8 replies
- 1.5k views
-
-
-
சென்னையில் கம்ப்யூட்டர் வெடித்து வாலிபர் பலி சென்னை, ஏப் 4 சென்னையில் கம்ப்யூட்டர் ஒன்று திடீரென்று வெடித்து சிதறியதில் அதில் பணிபுரிந்து கொண்ட கம்ப்யூட்டர் எஞ்சினியர் ஒருவர் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தார். சென்னை வேளச்சேரியில் வசிப்பவர் விஜயகுமார். மதுரையை சேர்ந்த இவர் டிசிஎஸ் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் எஞ்சினியராக பணியாற்றி வந்தார். மதுரையை சேர்ந்த இவர் நேற்றிரவு தனது வீட்டில் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கம்ப்யூட்டர் வெடித்துச் சிதறியது. இதில் விஜயகுமார் உடலில் தீப்பிடித்து சம்பவ இடத்திலேயே அவர் தீயில் கருகி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நடந்த போது, அவருடன் தங்கியிருந்த ராம…
-
- 7 replies
- 1.5k views
-
-
யாழ் போதனா வைத்தியசாலையில் பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றியளித்தது! February 10, 2021 யாழ். போதனா வைத்தியசாலையில் முதற்தடவையாக மேற்கொள்ளப்பட்ட பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றியளித்துள்ளது. மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்த அறுவைச் சிகிச்சையை விசேட வைத்திய நிபுணர் இளஞ்செழியன் பல்லவன் சுமார் 12 மணித்தியாலத்தில் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார். https://globaltamilnews.net/2021/156700/
-
- 13 replies
- 1.5k views
-