சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
985 topics in this forum
-
சிறீ லங்காவின், மாண்புமிகு புதிய சனாதிபதி அவர்கள் சில காலங்களுக்கு முன்னர் பேசிய வீடியோ ஒன்றை நேற்றுப் பார்த்தேன். யாழ் பொதுநூலகம் எரிக்கப்பட்டதையும் அதை எரிக்க காரணகர்த்தாவாக இருந்த ஜே ஆர் அவர்களையும் வன்மையாக கண்டித்து அவர் பேசியிருந்தார். அதைக் கேட்டு எமது பயப் புள்ளைகள் எல்லாம் பயங்கரமாக உணர்ச்சிவசப்பட்டு ஏராளமாக ஷெயார் செய்திருந்தார்கள். யாழ் நூலகத்தை ஜே ஆர் எரித்தற்கான அவர் சொல்லும் காரணம்... மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் வெல்வதற்காகத்தான் ஜே ஆர் யாழ் நூலகத்தை எரித்தாராம். இதுதான் சிங்கள முற்போக்குவாதிகள், இடதுசாரிகள், புத்திஜீவிகளின் புத்திசீவித்தனம்! பிற இனங்கள் மீதான சிங்களப் பேரினவாதத்…
-
-
- 3 replies
- 721 views
- 1 follower
-
-
"நான் ஒராள் செய்யிறதாலே என்ன பெருசா நடக்கப் போகுது, ஆருக்குத் தெரியப் போகுது" என்னும் மனோபாவத்தில் நாம் ஒவ்வொருவரும் செய்த பல்லாயிரம் சிறு தவறுகள் ஈழவிடுதலைப் போராட்டத்தை எவ்வளவு பாதித்திருக்கும், நமக்காகப் உயிர் கொடுத்துப் போராடியவர்களுக்கு எவ்வளவு பெரிய ஆப்பை இறுக்கியிருக்கும் என நினைத்துப் பார்க்க வேண்டும். உதாரணமாக, வெளிநாடுகளில், "புலிகளுக்குப் பயந்துதான், வெளிநாடு வந்தனான்" என்று வாக்குமூலம் கொடுத்து வதிவிட உரிமையை எளிதாக வாங்கிக் கொண்ட "தீவிர புலி மற்றும் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள்" எத்தனை பேர் உள்ளனர். லோயர்களின் மூளைச் சலவைக்கு ஆட்பட்டு இவ்வாறு கொடுத்த வாக்குமூல…
-
- 3 replies
- 1.3k views
-
-
கட்டிப் பிடிப்பதற்கு மூன்று நிமிடங்கள்தான் அனுமதி Dunedin (Neuseeland) விமான நிலையத்தில் இருக்கும் அறிவித்தல் பலகையைப் பார்க்கும் போது, கோபமும் வருகிறது அதே நேரம் சிரிப்பும் சேர்ந்து வருகிறது. பயணிகளை வழியனுப்பும் போது கூட வருபவர்கள் அவர்களைக் கட்டி அணைத்துக் கொள்வதற்கு மூன்று நிமிடங்கள்தான் அனுமதி என்று Dunedin விமான நிலைய அறிவித்தல் பலகையில் இருக்கிறது. விமான நிலையத்தின் தலைவர் டானியல் டி போனோ (Daniel De Bono) ஒரு வானொலி நேர்காணலில் இப்படிச் சொல்கிறார், “ஒரு ஆய்வின்படி, கட்டிப்பிடிக்கும்போது, "காதல் ஹோர்மோன்" ஒக்ஸிடாசினை ("love hormone" oxytocin) வெளியிட 20 வினாடிகள் போதுமானது. ஆகவே மூன்று நிமிடங்கள் கட்டிப் பிடிப்பதே அதிகமானது. யாராவது மூன்று நிமிடங்களுக்க…
-
-
- 3 replies
- 625 views
- 1 follower
-
-
https://www.facebook.com/groups/1838618882939539/permalink/2225319530936137/
-
- 3 replies
- 953 views
- 1 follower
-
-
தொழில்ரீதியாக உங்கள் உடற் கட்டமைப்பை கட்டி எழுப்ப வேண்டுமானால், Anaboleஐ பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது” இப்படிக் குறிப்பிடுகிறார் ஒரு உடற் பயிற்சிக் கூடப் பயிற்சியாளர் ஒருவர். Anaboleஐ பயன்படுத்தினால், தங்களின் வாழ்க்கையை அது சிதைத்துவிடும் என்பதை கண்கூடாகக் கண்டும் சிலர் புகழுக்காகவும் பணத்துக்காகவும் தொடர்ந்து அந்தத் தவறை செய்கிறார்கள். உடற்பயிற்சியின் போது தசைக் கட்டமைப்பை (muscle building)வளர்த்துக்கொள்ள Anabole Steroide ஊக்கமருந்தைப் பயன்படுத்துவார்கள். Jo Lindnerம் அதற்கு விதிவிலக்கானவரல்ல. உடற்கட்டமைப்பில், யேர்மனியின் மிக பெரிய நட்சத்திரமாக இருந்தவர் Jo Lindner. அவர் தனது 30ஆவது வயதில் (30.06.2023) மரணிப்பார் என்று யாருமே எதிர்பார்க…
-
- 3 replies
- 841 views
- 1 follower
-
-
இலங்கையில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறை பலரும் அறிந்த ஒரு செய்தியே. இதைப் பற்றி 'அருஞ்சொல்' இதழில் ஒரு கட்டுரை வந்திருக்கின்றது. சரோஜ் பதிரான இதை எழுதியிருக்கின்றார். ********************************** மருத்துவர்கள் பற்றாக்குறையால் தவிக்கும் இலங்கை (சரோஜ் பதிரானா) -------------------------------------------------------------------------------------------------------------- சுகாதாரத் துறையிலிருக்கும் முதுநிலை அதிகாரிகள் அளித்த பணி நெருக்கடிகள் மோசமாக இருந்ததது. அதைவிட, கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் கசக்கிப் பிழிந்து வேலைவாங்கிவிட்டு பிறகு நட்டாற்றில் விட்டுவிட்டனர் அரசை ஆள்பவர்கள். கோவிட் பெருந்தொற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிதான்,…
-
-
- 3 replies
- 465 views
- 1 follower
-
-
ஐயோ சாமி தைப் பொங்கல் எனக்கு வேணாம்! ===================================== நான் சின்னப் பொடியனா இருந்தபோது நாங்கள் எங்கள வயலில நெல்லு விதைச்சுப் பராமரிச்சு அறுவடை செய்தம். தை மாதம் புது அரிசி போட்டுப் பொங்கிச் சந்தோசமா சாப்பிடுவம். பிறகு கோவிலுக்குப் போவம், அப்பிடியா சொந்தக்காரர் வீட்டுக்குப் போவம். பிறகு பொங்கல் திண்ட தியக்கத்தில கொஞ்ச நேரம் நித்திரை கொண்டிட்டுப் பின்னேரம் பருத்தித்துறைக் கடற்கரைக்குப் பட்டம் பார்க்கப் போவம். இப்பிடி ஒரு பிரச்சினை இல்லாமத்தான் எங்கட தைப்பொங்கல் கொண்டாட்டம் இருந்தது. தைப்பொங்கல் உழவர் பெருநாள், சூரியனுக்கு நன்றி சொல்லுற நாள் அடுத்தநாள் கால்நடைகளுக்கு நன்றி சொல்லுற நாள் என்ற புரிதல்தான் எனக்கு இருந்தது. பி…
-
- 3 replies
- 1.2k views
-
-
அநுரவின் அதிரடி நடவடிக்கை! அநுரவினால் கோடீஸ்வரராகும் யூடிப்பர்கள்! ஆரம்பமே பெரும் ஊழல்! https://www.facebook.com/share/1AE8sN2Ykp/
-
- 3 replies
- 612 views
-
-
https://www.facebook.com/100004156729307/posts/2086587891489748/ தலைப்பு என்ன வைப்பது என்று தெரியவில்லை ...வாசிக்கவே ஆச்சரியமாய் உள்ளது கொக்கட்டிச் சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வரலாற்றில் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் முஸ்லிம்கள் ************************************ இந்த ஆலயத்தின் முக்கிய வரலாறு போர்த்துக்கீசர் ஆக்கிரமிப்பில் தொடங்குகிறது.வெள்ளை இராணுவ அதிகாரி விட்ட சவாலை வெற்றி கொள்ள, இங்குள்ள நந்தி வாய் திறந்து புல் உண்டு வாலைக் கிளப்பி சாணமும் போட்ட எல்லோருக்கும் தெரிந்த அதிசயக் கதையில் பிரபல்யமடைந்தது. எனது உம்மாவின் உம்மா தாயும்மாவின் தந்தையின்…
-
- 3 replies
- 581 views
-
-
உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவிற்கும் மேற்கிந்திய தீவிற்கும் இடையே நடந்த போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பு திடீரென்று அந்த அணியின் முன்னணி வீரர் குண்டன் டீ காக் விளையாடாதது தெரிய வந்தது. அதற்கான காரணமாகக் கூறப்பட்டது உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் "BLACK LIVES MATTER MOVEMENT" என்று அடர் நிறத் தோல் கொண்ட மக்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் இந்த உலகில் பிறந்த மக்களை நிற ரீதியாக பிரித்துப்பார்ப்பது தவறென்றும். ஒருவரை விட இன்னொருவர் தாழ்ந்தவரும் இல்லை. உயர்ந…
-
- 3 replies
- 952 views
-
-
பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, மருத்துவர் லீ சுவாங்யே கட்டுரை தகவல் பென்னி லு பிபிசி சைனீஸ் விபெக் வெனிமா பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் 37 வயதான மருத்துவர் லீ சுவாங்யேவின் துயரங்களை வென்றெடுத்த கதை மற்றும் மலை ஏறுதல் மீதான அவரது காதல் ஆகியவை சீனாவில் வைரலானது. போலியோவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சிறுவயதில் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். 16 வயதில்தான் இவர் வாசிக்கக் கற்றுக்கொண்டார். 1988 ஆம் ஆண்டு ஹெனான் மாகாணத்தில் வறுமையில் வாடிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த லீ சுவாங்யேவுக்கு ஏழு மாத குழந்தையாக இருந்தபோது போலியோ தாக்கியது. இது அவரை குதி கால்களில் குந்தி அமர்ந்தால் அன்றி, நடக்க முடியாத நிலைக்கு எடுத்துச் சென்றது. சிறுவயதில், மற்ற …
-
-
- 3 replies
- 378 views
- 1 follower
-
-
ஆங்கிலப் புத்தாண்டில் இந்து ஆலய வழிபாடு 500 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட கிரிகோரியன் காலண்டர் முறைப்படி ஆண்டின் முதல் நாள்ஜனவரி 1 என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்நாள் உலகம் முழுவதும் உள்ள மக்களால் இன, நிற, மத, மொழி வேறுபாடில்லாமல் பிரமாண்டமானவாணவேடிக்கைகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டு கடினவாழ்வு கழிந்து மகிழ்ச்சிநிரம்பிய புதிய வாழ்வுக்கு வாய்ப்பு உருவாவதாக ஓர் நம்பிக்கையை உருவகமாக ஏற்படுத்துகின்றது. எனவேதான் இந்நாள் கொண்டாட்டத்துக்கு உரியதாகின்றது. தமிழர்களும் வரலாறுகளினதும் பாரம்பரியங்களினதும் குழப்பங்களால் தை முதல்நாளா, சித்திரை முதல்நாளாதமிழ்ப்புத்தாண்டு என்ற சர்ச்சைகளுக்குள் சிக்காமல் தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு இரண்டையும…
-
- 3 replies
- 1.8k views
-
-
"மண்ணுளி பாம்பு" பற்றி... கேள்விப் பட்டீர்களா? மண்ணுளி பாம்பு நம்மை நாக்கினால் அல்லது கடித்தால் நமக்கு கை, காலில் குஷ்டம் நோய் வரும் என கிராம மக்களால் நம்பப் பட்டது. இது உண்மை அல்ல. இப்படி ஒரு பயம் இருந்தால் தான் நமது மக்கள் அந்த பாம்பினை தொட மாட்டார்கள் என்பதற்காக நமது முன்னோர்கள் காரணத்துடன் சொல்லி வைத்த பொய் அதுவாகும். SAND BOA என ஆங்கிலத்தில் அழைக்கப் படும் மண்ணுளி பாம்புகள் தற்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நிலங்களில் மட்டுமே வாழும் சூழ்நிலை உள்ளன. இவை பாம்பு இனமா என்று பார்த்தால், அது பாம்பே அல்ல, அது மண்புழு குடும்பத்தை சேர்ந்த ஒரு பெரிய அளவிலான புழு மட்டுமே. மண்ணில் வாழும் இது பாம்பு அல்ல என்கிறது அறிவியல். எனவே இனிமேல் மண்ணுளி…
-
- 3 replies
- 14.4k views
-
-
கம்மாரிசு எல்லாரும் ஒழுங்கையில நாலு மணீல இருந்து கிளிபூர் விளையாடாமல் wait பண்ணிக்கொண்டு இருந்தம். இப்ப வாற நேரம் சரி அண்டைக்கும் உதே நேரம் தான் வந்தவன் , எண்டு அன்பழகன் சொல்ல ஆதித்தன் மாமா வீட்டு மதிலில ஏறி எல்லாரும் இருந்தம். இவன் வாறதாலை இண்டைக்கு விளையாட்டும் இல்லாமல் போட்டு எண்டு செந்தில் புறுபறுக்க நாங்களும் பொறுமை இழந்து வெளிக்கிடுவம் எண்ட சத்தம் கேட்டிச்சு. உடனே Panasonic Radio வில FM ஐ மாத்தினம். அப்ப MW வில தான் எல்லாம் , BBC மட்டும் SW 2 இல கேக்கிறது. நாங்கள் தான் இலங்கையில FM ஐ முதல் கேட்டது, அதுகும் ஒட்டுக் கேட்டது. அவன் கதைக்கிற பாசையை translate பண்ணிறதுக்கும் கிருபான்டை அப்பா இருந்தவர். இந்தா கண்டிட்டானாம் , பதியிறானாம் , கோயில் தெரியுதாம் எண்டு…
-
- 3 replies
- 706 views
-
-
அன்னபூரணி “ போனகிழமை தான் படம் பாத்தனி , திருப்பியும் என்ன சீலைக்கு…. “ எண்டு தொடங்க , ஓம் அப்பிடியே சீலையும் எடுத்துக் கொண்டு வருவம் வருசத்திக்கு எண்டு செல்லம்மாக்கா சண்முகத்தாருக்கு உறுதியா சொல்லிப்போட்டா. மனிசி சொல்லிறதை தட்டிக் கேக்ககிற ஆம்பிளை ஒருத்தரும் பிறக்கிறதில்லை எண்டதால சண்முகத்தாரும் சரண்டர் ஆனார். முந்தி சண்முகத்தாரும் லேசில விட மாட்டார் . மனிசியைப் பேசத் தொடங்கினா ஒழுங்கை முடக்கு வரை பேசிக்கொண்டே போவார் . ஆனால் போன மாசம் பொயிலையோட சேத்து மற்றச் சாமாங்கள் ஏத்த வந்த ஜெயசிங்கவோட கள்ளு அடிக்கேக்க , சண்முகத்தார் மனிசீட்டை ஏதோ கேக்கப்போய் ரெண்டு பானை உடைய , இவர் சங்கடப்பட அவன் “ ஹம கானிம எக்காய் நம வித்தறாய் வெனஸ் “ ( எல்லா மனிசியும் ஒண்டு தா…
-
- 3 replies
- 807 views
- 1 follower
-
-
அந்தர்ஜனம் / சாதனம். கேரளாவில் அந்தர்ஜனம் என்னும் பெயரில் நடந்த பெண்களுக்கு எதிராக பல நூற்றாண்டுகள் நடந்த கொடுமை சுமார்த்த விசாரம் என்பது கேரளத்தில் நம்பூதிரிகளின் சமூகத்தில் வழக்கிலிருந்த ஒரு குற்ற விசாரணை முறை. நம்பூதிரிப் பெண்களின் நடத்தையில் சந்தேகம் உண்டானால் அவர்களை விசாரணைக்குட்படுத்தி தண்டனை வழங்கும் ஒருதலைப்பட்ச விசாரணை முறை இது. நம்பூதிரிகள் சிறுபான்மையினர். அவர்களுக்கு நேரடியாக ஆயுதபலம் சாத்தியமில்லை. ஆகவே கேரளத்தில் மட்டும் ஒரு தனி வழக்கத்தை அவர்கள் கடைப்பிடித்தார்கள். நம்பூதிரி ஆண்கள் மன்னர்குடும்பங்களிலும், நாயர்சாதியின் பெருநிலப்பிரபுக்களின் குடும்பங்களிலும் பெண்களை மணம்புரிந்துகொண்டார்கள். அதன்மூலம் அக்குடும்பங்…
-
- 3 replies
- 973 views
-
-
“ ஆயிரம் பொய் சொல்லி ” “சித்தப்பா சொல்லப் போப் போறாராம் நீயும் போப்போறியே “ எண்டு சின்ன மாமி கேக்க , நானும் ஏதோ அம்மா சொன்னாத்தான் போவன் எண்ட மாதிரி அம்மாவைப் பாக்க , “ வா வந்து இந்த சட்டையை மாத்தீட்டுப் போ” எண்டா அம்மா. ஒற்றை விளப் போகோணுமாம் எண்டு ஆள் கணக்குக்கு என்னை ஏத்தி விட்டது எண்டது பிறகு விளங்கிச்சு. “ உவனை உண்ட மடியில வைச்சிரு அண்ணை “ எண்டு பெரிய மாமி சொல்ல சித்தப்பாவும் காரின்டை முன் சீட்டில இருந்த படி என்னை மடீல தூக்கி வைச்சிருந்தார். “தம்பி காரை கொக்குவிலுக்கு விடும் முதலாவதா பெரியப்பருக்கு சொல்லிப்போட்டுத்தான் மற்றாக்களுக்கு சொல்ல வேணும்” எண்டு சித்தப்பா சொல்ல காரும் பெரிய அப்பப்பா வின்டை வீட்டை போச்சுது. Morris Oxford காருக்கால என்னை விட ஆறு …
-
- 3 replies
- 845 views
-
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது இன்றைய பத்திரிகை சந்திப்பு https://www.facebook.com/share/r/GcHfkZRWV52aPdfH/
-
-
- 3 replies
- 452 views
-
-
தொழில் முறை யூடியூப் டிஜிட்டல் உலகு எங்கோயோ போய் கொண்டிருக்கிறது. விசயம் புரிந்தவர்கள் அங்கே பணம் பண்ண போகின்றனர். தெரியாதவர்கள் சுஜவிபரக்கோர்வை, நேர்முகம், மேனேஜர், ஸ்ட்ரெஸ், மாத சம்பளம் என்று வழமையான வாழ்க்கையினை ஓடிக் கொண்டு இருக்கின்றனர். இலங்கை யூடியூப் பரான டிக்கா ப்ரோ இன்று ஒரு லட்ச்சம் சந்தாதாரர் இலக்கினை அடைந்து கொண்டாடிக்கொண்டிருக்கிறார். இவர் மாத்தறையில் பிறந்த இஸ்லாமிய தமிழர். வட்டார தமிழ் பேசும் இவர், சிங்கள மொழியில் படித்தவர். தனது யூடியூப் சேனலை சிங்களம், தமிழ் என ஆரம்பித்து, இரு பகுதியிலும் பெரும் வரவேற்பினை பெற்றுக்கொண்டார் பின்னர் தமிழ், சிங்களம் என்று தனித்தனியாக பிரித்துக் கொண்டார். இன்று தமிழ் சானல், 100,000 பேரை எட்டி…
-
- 3 replies
- 1.1k views
-
-
அனுராதபுரம் புனித நகரில் கவனிப்பாரற்று அவல நிலையில் கிடக்கும் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளி அம்மன் கோயிலும், அங்கு கண்டெடுக்கப்பட்ட அழகிய அம்மன் சிலையும். அனுராதபுரம் புனித நகரில் கவனிப்பாரற்று அவல நிலையில் கிடக்கும் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளி அம்மன் கோயிலும், அங்கு கண்டெடுக்கப்பட்ட அழகிய அம்மன் சிலையும். ஒரு தடவை அனுராதபும் புனித நகரத்திற்குச் சென்றபோது மிகவும் மோசமான, அவல நிலையில் கவனிப்பாரற்றுக் கிடந்த பண்டைய காளி கோயிலின் இடிபாடுகளைக் கண்டேன். இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். அனுராதபுரம் புராதன நகரின் மத்தியில், தூபராம தாதுகோபத்திலிருந்து அபயகிரி தாதுகோபத்…
-
- 3 replies
- 515 views
-
-
-
இந்தப் புகைப்படம் ஒரு ஸ்பெஷல். JVP இன் ஆரம்பம், அதன் தலைவர் பொரளை மயானத்தில் வைத்து இராணுவத்தால் பின்தலையில் சுட்டுக் கொல்லப்பட்டமை, அந்த இயக்கம் மீதான அரச இராணுவ இயந்திரத்தின் தேடலும் அழிப்பும், அதனாலான அந்தப் போராளிகளின் மறைவு வாழ்க்கை என்று அந்தப் போராட்ட இயக்கம் மீதான தடை நீக்கப்படும் வரையான வரலாற்றைப் படித்தவர்களுக்கு, இந்தப் புகைப்படம் ஏன் ஸ்பெஷல் என்று புரியும். போராளிகளைத் தேடித்தேடி அழித்த ஒரு சீருடை இயந்திரம், அதே போராளி ஒருவரின் முன்னால் பவ்வியமாக தங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கிறது. காலம்தான் எவ்வளவு வலியது பாருங்கள்! வேட்கை நிறைந்த போராளிகள் ஆளும் தேசம் நேர்மையானது என்பார்கள். தமிழர்களுக்கு அது புரியும். காலம் எப்போதும் மாறலாம். கனவு எப்போது…
-
- 3 replies
- 776 views
-
-
Degree 2021 Dec 22 வாயில வைச்ச சுருட்டை பத்த வைக்காமல் lighter ஐ தட்டித் தட்டிக்கொண்டு இருந்த Greig ( கிரேக்குக்கு) , “ Sir முப்படைத்தளபதிகளும் விண்வெளிக் கட்டுப்பாட்டு தலைவரும், உளவுத்துறைத் தலைவரும் வந்திட்டினம்” எண்டு செய்தி வர meeting room க்கு உடன வந்தார். உலகத்து மீடியா எல்லாம் பரபரப்பாக பேசிய ஒரு நியூஸ் , Australia வை கொஞ்சம் கூட உலுக்கி இருந்தது. ஆனாலும் இது இந்தோனேசியாவில் பூகம்பமோ இல்லை பாலியில்( Bali) சுனாமியோ இல்லை. ஐஞ்சு சுவருக்குள் நாள் முழுக்க நடந்த meeting முடிவெடுக்காமல் நீள , “ நாங்கள் ஒரு local agent இட்டை Detail report கேப்பம்” எண்டு முடிவோடு அடுத்த meeting date குறிக்கப்பட்டது. காலமை வந்த call என்னவாக இருக்கும் எண்டு மோப்பம் பிடிச்சு …
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
இன்று பிலவ வருடத்தில் வந்த ஆடிமாதத்தின் முடிவுநாள் 32. இந்த ஆடியில் வரும் அமாவாசை விரத நாளில் மிக முக்கியத்துவம் பெறுவது காற்று ஊட்டியன் காய், இந்தக் காயை காத்தோட்டிக்காய் என்றும் பேச்சுவழக்கில் கூறுவார்கள். தாவரங்களுக்கும் உயிருண்டு. ஆகவே அந்தத் தாவரங்களைக் கொன்று தின்பதால் ஏற்படும் பாவங்களைப் போக்குவதற்காக, மிகவும் கசப்பான இந்தக் காயை வருடத்தில் ஒரு நாள், அதாவது ஆடிமாதத்தில் வரும் அமாவாசை அன்று பொரித்துச் சாப்பிட்டுத் தங்களை வருத்திக்கொள்வார்கள் சைவர்கள் என்ற ஐதீகமும் உண்டு. பஞ்ச பூதங்களால் உருவான எங்கள் உடம்பு அவற்றின் தாக்கங்களாலும் அல்லல் படுவதுண்டு, ஆகவே அந்தத் தாங்களிலிருந்து விடுபடுவதற்கு, எம் முன்னோர்கள் கண்டுபிடித்து, எமது ஆரோக்கிய வாழ்விற்கு காட்ட…
-
- 3 replies
- 1k views
-
-
1983 ஜூலை! இன்றைய பரம்பரை அறிந்துகொள்ளவும், இதற்கு முந்திய பரம்பரை எண்ணிப்பார்க்கவும், சிறுகதைபோல ஒரு நினைவுப் பகிர்வு! 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் திகதி! கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் இறுதியாண்டுப் பரீட்சை ( LL.B, Final) நடந்துகொண்டிருக்கிறது. பரீட்சை மண்டபத்தில், நான்காவது பாடத்தின் இரண்டாவது வினாத்தாளுக்கு விடை எழுதிக்கொண்டிருக்கிறேன். காலை ஒன்பது மணிக்குப் பரீட்சை ஆரம்பமானது. நண்பகல் பன்னிரண்டு மணிக்கு முடிவடையும். குனிந்ததலை நிமிரமுடியாமலும், கண்ணிமைக்கக் கணப்பொழுதும் கிடைக்காமலும் மூளையின் வேகத்துக்கு இயன்றவரை ஈடுகொடுத்தபடி கரம் பேனையை நகர்த்திக் கொண்டிருந்தது. பதினொரு…
-
- 3 replies
- 1k views
-