Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வாழ்க! நீடு வாழ்கவே! வையம் போற்ற வாழ்கவே! வாழ்க! தமிழ் ஈழமே! வாழ்க! என்றும் வாழ்கவே! ஆற்றலுடை தொழில் வளமும், அறிவியல் துறை வளர்வும், மாற்றமுறாப் பண்பு நிறை மாட்சிமைகொள் ஆட்சிசெய்தும், ஏற்றமுடன் தமை ஈந்த சரித்திரத்து நாயகரை சாற்றிவைத்து கூற்றியம்ப சத்தான புலமை செய்தும், வாழ்க! நீடு வாழ்கவே! வையம் போற்ற வாழ்கவே! வாழ்க! தமிழ் ஈழமே! வாழ்க! என்றும் வாழ்கவே! காடுகளும், கழனிகளும் கலை கொழிக்கும் கூத்துகளும், களங்கள் பல கண்ட – வீரக் கதைகள் சொல்லும் ஆவணமும், வேழமொத்த பகை விரட்ட வெகுண்டெழுந்த வேங்கையமும், வீரமுடன் பாடிப் பாடி வெற்றி வாகை சூடியே வாழ்க! நீடு வாழ்கவே! வையம் போற்ற வாழ்கவே! வாழ்க! தமிழ் ஈழமே! வாழ்க! என்றும…

  2. Started by putthan,

    என்னை கைப் பிடித்தவன் மொழி,இன,மத வேறுபாடு பார்ப்பதில்லை அதேபோல் நானும் எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை என்னை அவன் இயக்கினான் நானும் இயங்கினேன் தோளில் சுமந்தான் நானும் அழகாக தூங்குவேன் நண்பனுக்கு அறிமுகம் செய்தான் அவன் என்னை பார்த்து வியந்தான் ஒரு நாள் வீழ்த்தினான் முன்நின்றவனை எதிரி என்றான் இன்னோரு நாள் வீழ்த்தினான் முன்நின்றவனை துரோகி என்றான் மற்றொருநாள் இவன் வீழ்ந்தான் நானும் வீழ்ந்தேன்,முனகினான் மற்றொருவன் ஒடி வந்தான் என்னை தூக்கினான் நிறுத்தினான் அவன் முனகளை இனியோரு நாள் இவனும் வீழ்வான் நான் இன,மத மொழி பார்க்கமாட்டேன் ஆனால் என்னை இயக்குபவன் .......

  3. 'வாழ்தல் எனும் மரணிப்பு' எனும் இந்தக் கவிதை சரிநிகரில் என் சொந்தப் பெயரில் வெளியாகி இருந்தது. அந்தப் பெயரை மறைப்பு செய்து இதில் கவிதையை மட்டும் ஒட்டி உள்ளேன் அன்று சிங்களவர்களுக்கு மத்தியில் இருந்து சொந்தப் பெயரில் எழுதும் போது இருந்த அச்சமில்லா மனவுணர்வு, இன்று போலித் தமிழ் தேசியவாதிகள் மலிந்து போன காலத்தில் இல்லை என்பது ஒரு வெட்கப்படவேண்டிய முரண்நகை

    • 9 replies
    • 1.2k views
  4. பூமிப் பந்தில் எழுந்த இந்தப் புயல்கள் எழுதிய சரித்திரம் கண்டு அணு குண்டும் ஏவுகணையும் ஆட்டம் கண்டதுண்டு..! சிங்களம் முதல் ஏகாதபத்தியம் வரை குலப்பன் அடிக்க... பயங்கரவாத முத்திரைக்குள் முத்தாய் சிரிக்கும் இந்த ஈகைகள் எம் இருப்பின் உயிர்ச் சின்னங்கள்..! வாழ்க்கைக்காக பறந்தடிக்கும் மானிடப் பேடிகளுள் மரணத்துக்குள் வாழ்வைத் தேடி வீசிய இந்தப் புயல்கள் எங்கள் கந்தகப் புயல்கள். மாவீரராய் இல்லை இல்லை... அதிலும் மேலாய் என்றும் எம் மூச்சுக் காற்றோடு அவர் வாழ்வு...! வீழ்ந்தார் என்று மறக்க அவர் மறையவில்லை - எங்கும் நிறைந்தே உள்ளார்..! ஆக்கம்: (முதற் கரும்புலி அண்ணன் மில்லரின் கந்தகப் புயல் தந்த வெடியோசை …

    • 6 replies
    • 665 views
  5. வரலாற்றில் புதையுண்டு போன நிலங்களில் இருந்து மீண்டும் குதிரைகள் வெளிக் கிளம்பும்.. நூற்றாண்டுகளாக சாம்பல் மூடிய வீதிகளில் அந்நிய பாதச் சுவடுகளை மேவி தம் கால்கள் பதிக்கும். இருண்ட கானகங்களில் மழையின் பின் மரங்கள் பொந்துகளுக்குள் பொத்தி வைத்த நீரை வாரி இறைக்க நுதல் வழி வழியும் நீர் படர்ந்து காய்ந்த மண்ணின் துகள்கள் ஒவ்வொன்றும் உயிர்த்து எழும். எம் கடற்கரைகளில் எங்கள் கூழைக்கிடாக்கள் சேர்த்து வைத்திருந்த மீன் குஞ்சுகளின் ஆரவாரங்களில் கடலின் மெளன வெளிகளில் தாண்டு போயிருந்த எம் படகுகள் மீண்டும் எம் கடல்களில் வலம் வரும் கால அசைவியக்க காற்றில் எப்பொழுதும் மரங்கள் காய்ந்து கிடப்பதில்லை எப்போதும் வானம் …

  6. Started by மைத்திரேயி,

    மழை சோ...... என்று பெய்த மழை சொல்லாமல் வந்த மழை சோம்பி இருந்த என் மனசு சோம்பலை ஓரத்தில் தள்ளி வைக்க..... சொட்டுச் சொட்டாய் வந்த மழை முற்றத்தில் முத்தமிட , வந்த புழுதி வாசம் மூக்கையடைக்க..... வண்டுவுக்கும் சிண்டுவுக்கும் கொண்டாட்டம் அவர் கொண்டாடம் காகிதகப்பலில் தெரியவர..... நானும் குழந்தையாகிப் போனாலும் , பெய்த மழையின் வேகத்தில் வீட்டுக்கூரை முகடு பிரிக்க !!!! என் வீட்டினுள் எட்டிப் பார்த்தது அழையாத விருந்தாளியாய் , நான் பானைகளால் கவசம் போட்டாலும் அங்கு என் ஏழ்மை சிரித்தது எக்காளமாய்..... மைத்திரேயி 05/02/2013

  7. உரியவர் உண்மையைச் சொல்லா நிலையில் உதிர்ப்பவை யாவும் கற்பனைக் கதைகளே – பரமபுத்திரன் அணுங்கி ஒருகுரல் மீண்டும் சிணுங்குது தன்னையும் வெளிக் காட்டிட நினைக்குது இன்னமும் நம்பிட இருக்குது தமிழ்ச்சனம் இதனால் தெறிக்குது அவர்களின் உரைகள் ஏனென்றால் தமிழர் உளவியல் அடிமைகள் தன்னினம் பிறனால் இழிக்கப் படினும் மகிழ்ந்து சிரித்துக் கருத்தினை உவந்து எங்களைப் பிழையென்று எப்போதும் ஏற்கும் சங்கடக் குழுவென்று உலகமே நம்புது இந்த எண்ணத்தை வலுவாய்ப் பற்றி எடுத்துத் தொடங்குகிறார் திரும்பவும் பழங்கதை இவரின் செய்தியை கேட்கநாம் தயார்தான் காரணம் இன்னமும் புலிகளில் வெறுப்புண்டு இராசிவ் காந்தியைக் கொன்றது புலிகளா…

  8. ஆண்ட இனம் அடிமைப்பட்டுக் கிடக்க அது அரசிழந்து ஆட்சி இழந்தது மட்டுமா குற்றம்..?! அது சக்தி இழந்து கிடப்பதும் குற்றமே..! எழுச்சி கொள் மாணவ இனமே குமுறும் இந்தக் குரல்களுக்கு.. சக்தி கொடு ஈழ தேசமதில் ஒரு விடுதலைப் பூப் பூத்திட...! அதிகார வர்க்கத்தின் பேசும் மொழி அடக்குமுறை.. காக்கிச் சட்டைகள் அதன் ஏவு இயந்திரம்.. அவை எதிர்த்து நில் அமைதி வழியில்..!! வரும் துயர் தாங்கி நில் சக்தி காட்டி நில்... மாணவர் ஒற்றுமையில்..! பொங்குவோம் நாம் தமிழராய் தரணியெங்கும் நீதி செப்பி மானுடம் போற்றும் தமிழினம் காக்கும் தமிழீழ தேசம் மீட்டிட...! போஸ்டர் மீளமைப்பு :- நெடுக்ஸ். இணைப்பு நன்றி:- முகநூல்.

  9. பூத்த நெருப்பு அறிவுமதி * என் மரணம் அது கண்ணீரை யாசிக்கும் பிச்சைப் பாத்திரமன்று கவிதைக்குள் முகம் புதைத்து யாரங்கே கதறியழுவது... என் மரணம் இரங்கற்பா எழுதுவதற்கானதும் அன்று சவுக்கு மரத்து ஊசி இலைகளில் சறுக்கி விழுகிற பனித் துளிகளாய் நீங்கள் சிந்தும்கண்ணீர்ச் சொற்களால் என் பெயரை உச்சரிக்காதீர்கள் பூமி இது தண்ணீரின் கல்லறை கடல் அது பூமியின் சமாதி என வார்த்தைகளுக்கு வண்ணம் பூசுவதால் கவிதையை நீங்கள் கெளரவப்படுத்தலாம் வாழ்க்கையை கெளரவிக்க இந்த வண்ணங்கள் என்ன செய்யும் மின்னல் இருளின் விரோதியன்று அது மழையின் விளம்பரம் கனவுகளையும் கற்பனைகளையும் மட்டுமே காதலிக்கத் தெரிந்த உங்களின் கவிதைகள் கூட காதல் தோ…

  10. MULLIVAIKKAL REMEMBRANCE DAY- POET'S VOW முள்ளிவாய்க்கால் நினைவு - ஒரு கவிஞனின் பிரதிக்ஞை, . Please perform it as songs, rap songs, and dance. No permission needed. பிடித்த வரிகளை பாடல் ஆடலாக நிகழ்த்த வேண்டுகிறேன். அனுமதி வேண்டியதில்லை. . தோற்றுப் போனவர்களின் பாடல். வ.ஐ.ச.ஜெயபாலன் . எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழப்படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. . எரிந்த மேச்சல் நில…

    • 2 replies
    • 842 views
  11. கல்லறைகளைத் தின்னும் பேய்கள் அல்ல நாங்கள்! செத்தவன் மேல் வன்மம் தீர்க்கும் நாய்கள் அல்லவே நாங்கள்! கல்லறைகளை கிண்டும் பன்றிகள் அல்லவே நாங்கள்! கற்பை தின்றதும்... கழுத்தை வெட்டியதும்.... சுட்டுக்கொன்றதும்.... குழந்தையை பிய்த்து எறிந்ததும்... ஆசுப்பத்திரியில் அடிச்சுக்கொன்றதும்.. "புள்டோசரால்" ஏத்திக்கொண்டதும்... நீங்கள் மறந்திருப்பியள் நாங்கள் மறக்கவில்லை! அடிச்ச அடியின் தழும்புகள் மாறவில்லை. வலிச்ச வலிகளும் மறக்கவும் முடியவில்லை! நாங்கள் கல்லறை தின்னும் பேய்கள் அல்ல! கல்லறைகள் மீது போர்தொடுக்கும் மோடையர்களும் அல்லர்! உங்கள் கல்லறைகள் எங்கள் மண்ணில் பத்திரமாகவே இருந்தது! இனியும் இருக்கும்! …

    • 0 replies
    • 469 views
  12. Started by Tamizhvaanam,

    ஆணிவேர் உலக தரத்தில் உண்மை சொல்ல தமிழை உயர்த்தும் புதிய திரைப்படம்! வன்னி நிலத்தை விழிகள் பருக அகிலம் போற்றும் ஈழத் திரைப்படம்! உடல் சுமக்கும் உயிர் விறைக்க இதயம் கனக்கும் ஈழத்துக் காட்சிகள்! பெயரிலே உறுதியும் திரைத்துளி பார்க்க இமைகள் துடிக்கும் போரின் சாட்சிகள்! உறவை தூக்கி நெஞ்சில் அணைக்க நெருப்பகை; கிழிக்கும் நிமிர்ந்த வேகம்! எதிரியின் பிடியில் தங்கை தவிக்க மூச்சை உடைக்கும் எரிமலைத் தாகம்! வலைக் கூட்டிலே குழந்தை சிரிக்க வலியில் துளிர்க்கும் இனிய காதல்! குரல் வளையை சுடுகுழல் ருசிக்க எதிரியை எரிக்கும் மருத்துவர் மோதல்! முள்ளும் மலரும் நெஞ்சத்தைக் கிள்ள உதிரிப் பூக்களின் …

  13. தினசரி தூறல்கள்... பட்டப்பகலில் ஒரு நிலா..பிரகாசமாக.. அது நீதான்... ஒரு குயில்க்கூட்டம்.. கவலையாக மௌனவிரதம் இருக்கிறது.. நீ பாடியதை அவை கேட்டனவாம்.. நிலைக்கண்ணாடியின் தலைக்கணம் தவறேயில்லை.. தினமும் உன்னைத் தரிசிக்கின்றதே.. உன்னைச் சுற்றியிருப்பவர்கள் எல்லாம்..கவிஞரானார்கள்.. உன் பேரைச் சொல்லியே.. எனது வாழ்க்கை.. முழுமை பெறாத நூலாகியது.. உன் முதல் பாதியை நான் படிக்கவேயில்லை.. எங்கள் முதலிரவில் மட்டும் நான் தூக்கத்தில் விழிக்கவில்லை.. அன்றுதான் நாம் தூங்கவேயில்லையே.. ஒரு ஏழையாயிருந்தும். இருபது வயதின் பின்..நான் பசிக்கொடுமையை உணவில்லாத போதும் உணர்ந்ததில்லை.. அப்போதிலிருந்து நீ என்னைக் காதலிக்கிறாய்…

  14. மலர்ந்துகொண்டே இருந்தவள் நீ வண்ணமும் வாசமும் தான் நாளுக்குநாள் மாறிக்கொண்டன. நினைத்துக்கொண்டே இருந்தவன் நான் மலர்தலை தடுக்கவா முடியும். உன் விழிகள் ஏணியாகவும் இருந்தது _எனை தாலாட்டும் ஏணையாகவும் இருந்தது. சிரித்தேன். கடந்தும் திரும்பி பார்த்தாய். விரும்பித்தானே பார்த்தாய்? முடக்கில் போட்ட பனங்குத்தி மக்கி மடங்கும்வரை அரியாசனம். அப்புறமென்ன தரையே ஆசனம். கடந்து போனது நீ மட்டுமா, காலமும் தான். பகிர்ந்த சில வார்த்தைகளில் பொதிந்திருக்குமோ என்றெண்ணி, பகுத்தறிந்து அதுவா இதுவா என்றங்கலாய்த்தல்லவா_என் அனேக அந்திகள் கலைந்தது. மாரடிக்கும் பெண்(டு)கள் கூட ஓய்ந்ததுண்டு_உனை தேடிதிரிந்த நான்? எரிகல் விழுகையிலும் கல் எறிகையிலும் உன்னைத்தான் நினைக்கிறேன்…

  15. முன் பின் தெரியா நகரில்... காலம் ஒரு பாம்பு போல் தன் ‘சட்டையைக்’ கழற்றும் இந்த மாலைப் பொழுதில் ஒரு கடற்கரை நகரத்துக்கு வந்து சேர்ந்திருந்தேன். இருள்வதும் பின் நீலம் பூசி மீள்வதுமாய் வானத்தின் வித்தைகள். சாலையெங்கும் இலைகளை வீழ்த்திக் கடக்கின்றது ஊசி விரல்களுடன் குளிர் காற்று. எதுவும் நிலையற்றதெனச் சொல்லக் காத்திருக்கின்றன மரங்கள். சூதாட்ட விடுதிகளும் கடைத் தெருவும் குளிர் மெழுகாய் உறைந்து போய்க் கிடக்கின்றன. நெடியவன் ஒருவன் தன் இடுப்பளவேயான சிறுமியைக் குனிந்து முத்தமிட்டவாறே தள்ளிக் கொண்டு செல்கின்றான். மதுப் புட்டிகளுடன் விரைகின்றனர் நகரவாசிகள். பொய்யின் ஏழுவர்ணங்களுடன் அகஸ்மாத்தாய் தோன்றுகிறது வடபுறத்தே ஒரு வானவில். முன் பின் அறியா அந்த …

  16. புதுவை இரத்தினதுரை அவர்களின் உலைக்களம் கவிதை- நூல் தொகுப்பு பகுதி 01: http://www.scribd.com/doc/122361060/Puthuvai-Ulaikalam-collection-1 பகுதி 02 : http://www.scribd.com/doc/122361169/Puthuvai-Ulaikalam-collection-2

    • 0 replies
    • 3.6k views
  17. கொதிக்கும் கல்லறைகள்...... கவிதை - இளங்கவி.... வன்னி முற்றத்தின் வெண்ணிலவைப் பார்த்து வான் குருவி சொன்னது.... உன்னைப் பார்த்து சோறு உண்ண இங்கே குழந்தைகள் இல்லை... இரத்தத்தில் தோய்ந்தும் கந்தகத்தில் எரிந்தும்... மண்ணிலே புதைந்தும்; அவர்கள் இறந்து பல மாதங்களாகிவிட்டது..... உன்னைப் பார்த்து சோறூட்ட இங்கே தாயுமில்லை அவர் மடியில் சேயுமில்லை.... ஆனாலும் உனக்கு வேலையொன்று இருக்கிறது... இலட்சியத்துக்காக உயிர் நீர்த்த மாவீரர் புதைகுளிகளுக்கு மேல் உன் குளிர்வையும் ஒளிர்வையும் காட்டு தலைவர்கள் எனும் பெயரில் தமிழ் தேசியத்துக்கு சேறு பூசுபவர்கள் செயல்கண்டு கொதித்துப் போயிருக்கும் கல்லறைப் பூக்களின் ஆன்மாவாவது சாந்த…

  18. எனது மரணம்: முதலாவது அறிக்கை இப்போதெல்லாம் மரணம் பற்றிய எண்ணங்கள் அடிக்கடி வருகின்றன பல தடவை மரணத்தின் கற்பூர வாசனை (இடையில் சாணி வாசனையும் வரும்) என்னருகே வந்தும் உள்ளது மரணம் நேற்று காபி கடையில் (Starbucks) நான் ஒடு cup காபிக்காக காத்திருக்கையில் என் பக்கம் வந்து அமர்ந்திருந்தது எதுவும் பேசாமல் அதன் கண்ணின் ஓரம் நீர் துளி இருந்தது திடீரென ஒரு Right turn இல் என் car திருப்புகையில் மரணம் என் பக்கத்து seat இல் அமர்ந்திருந்தது என்னை கேள்வி கேட்குமாய் அதன் முகம் இருந்தது பின் அந்த இரவில் சரியாக நடுச் சாமத்தில் மனைவியை தேடி கைகள் போகையில் அருகே மரணம் படுத்திருந்தது இம்முறையும் ஒற்றை வார்த்தையும்…

  19. கடிதங்கள் எழுதுவதில் ஒரு இன்பம். வாழ்த்துமடல் வாங்கி அனுப்புவதிலும் ஆர்வம். பி யோனை எதிர்பார்ப்பதில் ஒரு சுகம். தந்தி வந்தால் ஒரு ஏக்கமும் பட படப்பும். கள்ளமாங்காயின் ருசிக்கு இன்னொரு உணவா? கள்ள இளனி ஒரு தேனாமிர்தம். கள்ள மரவெள்ளி சுட்டால் தனி இன்பம். புத்தகத்தினுள் சினிமா எக்ஸ்பிரஸ் படிப்பது. பள்ளிக்கூடம் கட் அடித்த சினிமா. ஊரின் தெருக்கள் கூட்ட பெல்பொட்டம். சோடாபெட்டி கூனிங்கிளாஸ் போட்டகாலம். 20 இஞ்சிக்குமேல் கீல்ஸ் போட்டு விழுந்தகாலம். கிப்பிதலைமயிர் வளர்த்து சடையுடன் திரிந்த காலம். நாவற்பழம் பெறுக்க ஒரு கூட்டம். படிப்பதில் போட்டி போட்ட காலங்கள். சுழட்டலுக்கு ஒவ்வொரு குழுக்களாய் செல்வது. பீடிக்கொம்பனி தொழிலில் ஒரு ஆர்வம். நெசவுசாலை பெண்களுக்கு என ஒரு …

  20. Started by RaMa,

    அம்மம்மா அம்மா என்று அறிமுகம் ஆனவரே அம்மாவின் அன்பையும் சேர்த்து தந்தவரே அம்மாக்கு நிகர் அம்மாம்மா என்ற புதிய மொழியை சொல்ல வைத்தவரே ஆராரோ பாட்டில் ஆயிரம் கதை சொன்னவரே ஆயிரம் தான் இருந்தாலும் நீங்கள் வேண்டும் எமக்கு அன்னை பிரியும் போது உங்கள் மடியில் கிடத்தினாள் நீங்கள் எம்மை உமது முதுகில் அல்லவா சுமந்தீர்கள் ஆயிரம் பேர் இங்குண்டு அன்பு கொள்ள ஆனாலும் மனம் உங்கள் அன்பைக்காவே ஏங்கின்றது ஆயிரம் புத்திமதிகள் அன்புடனே கூறும் நீங்கள் ஆதரவாய் அரவணைப்பீர்களே நாம் தோற்கும் போதும் எத்தனை அடிகள் வாங்கினாலும் குட்டி நாய்கள் போல் உங்கள் காலடியையே சுற்றி சுற்றியே வருவோம் காலமெல்லாம் கண்ணுக்குள் இமையாக எம்மை காத்தீர் நீர் கண் மூடு…

    • 30 replies
    • 17.3k views
  21. விடிவெள்ளி மீண்டும் வானில் தெரிகிறது வெடி கண்ட நிலம் போல் சிதறிய மனம் மீண்டும் விண்மீன்கள் கண்டு சிரிக்கின்றது கொடுவானின் இடி மின்னல் கொடுங் காற்று எல்லாம் கோரத் தாண்டவம் ஆடி முடித்து காற்று அலைகளின் சீற்றம் குறைந்து கோலங்கள் காட்டி நிற்கிறது வேருடன் மரங்கள் வீழ்ந்தன எனினும் வாடை அடங்கி மீண்ட வானின் மிதப்பின் வேகத்தில் மருண்ட மேகங்களின் மகிழ்ச்சி ஒலியாய் மீண்டும் மின்னல் கீறி மறைகின்றன ஓசை அடங்கக் காத்திருந்தேன் என் ஆசை அடக்கி மேகத் தீயுள் மோதும் உன் முகம் காண முடிவேதும் இல்லா மழை வானின் எல்லையில் மண்ணொடு மண்ணாய் மங்கியும் நானும் மகிழ்ந்திருப்பேன் முடிவுற்ற வெளியின் முகில்கள் கடந்து முடிவற்ற என் பயணம் முடிந்து மலர் கண்ட வனமாய் மலர்கின்ற மனம் க…

  22. கண்கள் மேய விரல்கள் தடவ வெளிச்சத்தில் இது நடக்க.. அவள் வேண்டும். பக்கம் பக்கமாய் பாகம் பாகமாய் பிரித்துப் படிக்க.. காரியம் முடிக்க சித்தி பெற அவள் வேண்டும். சிந்தனைக்கு ஓர் புத்துணர்ச்சி இரத்த நாளங்களுக்கு ஓர் கிளர்ச்சி..! அவள் சேவை தேவை வாழ்க்கை எங்கும்..! சோம்பல் போக்க படுக்கையில் கூட எனக்கு அவள் வேண்டும். இன்றேல் பைத்தியம் தான் பிடிக்கும்..! இத்தோடு சிந்தனைக்கு சிறையிடுங்கள் அவள் வேறு யாருமல்ல.. நான் படிக்கும் பாடப் புத்தகம்..! Spoiler படுத்திருந்து புத்தகம் படிப்பதே எனக்கும் பிடிக்கும். இதில் பல இலாபம் அதில் ஒன்று.. அப்படியே நித்தாக்குப் போயிடலாம்.

    • 21 replies
    • 1.4k views
  23. <span style='font-size:30pt;line-height:100%'>காவியத் தூது கிளியினைத் தூது விட்டால்.. கிறுக்காய் ஆகுமென்றாய்! கிள்ளை மொழியினைத் தூது விட்டால்.. கிளர்ச்சியைத் தூண்டுமென்றாய்! நிலவினைத் தூது விட்டால்.. களங்கம் நிறையுமென்றாய்! நீள்கடலினைத் தூது விட்டால்.. ஆழமோ புரியாதென்றாய்! மலரினைத் தூது விட்டால்.. மதுவினைச் சொரியுமென்றாய்! மானினைத் தூது விட்டால்.. மருட்சியைப் பெருக்குமென்றாய்! முகிலினைத் தூது விட்டால்.. முனகலே மிஞ்சுமென்றாய்! சகியினைத் தூதுவிட்டால்.. சச்சரவு ஆகுமென்றாய்! தென்றலைத் தூது விட்டால்.. திசை மாறிப் போகுமென்றாய்! திரு மடலினைத் தூது விட்டால்.. அந்தரெக்ஸைக் காவுமென்றாய்! தொலைபேசித் தூ…

  24. ''நீ பேசலாமா நீதி....???'' (பொரியல் .கறி) வடக்கு கிழக்கு நமக்கு பிணைப்புயதாய் இருக்கு... அடி பாவி அதில் உனக்கு கேட்க என்ன இருக்கு....??? விடுதலைக்காய் எமக்கு நீ செய்து என்ன இருக்கு....??? காக்கை வன்னியே உனக்கு இன்று கருணை பேச்சு எதுக்கு....??? உந்தன் மக்கள் அங்கு உயிர் துறந்துயன்று கிடக்கு... அந்த நேரம் போயு அதை பார்க்கா நீயும் இருக்கு.... இன்று வந்து என்ன நீ பேசி போயு கிடக்கு....??? ஜயா மகிந்தா வேட்டிக்குள்ளே அடி நீயும் ஒளிந்து கிடக்கு..... இங்கு வந்து உனக்கு வீரப் பேச்சு எதற்கு....??? உன் இனத்தில் உனக்கு வெட்டு கொத்து இருக்கு.... …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.