Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by கோமகன்,

    கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் கழையிடை ஏறிய சாறும், பனிமலர் ஏறிய தேனும், - காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும்; நனிபசு பொழியும் பாலும் - தென்னை நல்கிய குளிரிள நீரும், இனியன என்பேன் எனினும், - தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்! பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப் புனலிடை வாய்க்கும் கலியும், குழலிடை வாய்க்கும் இசையும், - வீணை கொட்டிடும் அமுதப் பண்ணும், குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள் கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும், விழைகுவ னேனும், தமிழும் - நானும் மெய்யாய் உடலுயிர் கண்டீர்! பயிலுறும் அண்ணன் தம்பி, - அக்கம் பக்கத் துறவின் முறையார், தயைமிக உடையாள் அன்னை - என்னைச் சந்ததம் மறவாத் தந்த…

  2. Started by yakavi,

    படித்தவனும் இங்கே தான். படியாத மக்களும் இங்கே தான். பணம் சேர்த்தவனும் இங்கே தான். பரம ஏழையும் இங்கே தான். குடித்தவனும் இங்கே தான். புகைத்தவனும் இங்கே தான். நடித்தவனும் இங்கே தான் நல்லாய் இருந்தவனும் இங்கே தான். கடவுள் காப்பான் என்று இருந்து கடைசியில் வருபவனும் இங்கே தான். இனி கடவுள் தான் காக்க வேண்டும் என்று சிலருக்கு செல்வதும் இங்கே தான். சமரசம் உலாவும் இடமும் இங்கே தான். மனித வாழ்வில் இயற்கையின் இரண்டு நிலை ஐனனம் மரணம் இங்கே தான்.

    • 0 replies
    • 753 views
  3. 03.04.2002 அன்று யாழ் இணையத்தின் முன்னைய களத்தில் எழுதிய கவிதை காலத்தின் தேவை கருதி இங்கு இன்று அடக்கியாண்ட சிங்களமே அடங்கிப் போய்விடு பதுங்கியிருந்த புலி இப்ப பாயத் தொடங்கி விட்டது... இருண்டுகிடந்த எம்மண்ணில் வெளிச்சம் வந்துவிட்டது.. மறைத்துவைத்த சூரியனை வெளிக் கொணர்ந்து விட்டோம்.. கருவறைக்குள் வஞ்சம் கொண்டு எம்மை கல்லறைவரை சென்று அழித்தாய்... எம்மினம் கல்லறையென்ன உன்தன் கருவறை புகுந்தே அழித்துவிடும்.. படித்துவிட்டான் தமிழன் உன்தன் நாசகார பாச வேலைகளை... கூலிப்படை கொண்டே எம்மை கொடூரமாக கொண்றாய்.. தன் மூளையை கொண்டே உன்னை இன்று புலி அடிபணிய வைத்துவிட்டது.. தலைவன் பிறந்த மண் இது... இங்கு ஒரு தளிர் வாட விட…

    • 1 reply
    • 753 views
  4. Started by அஞ்சரன்,

    வாழும் வயது அது பார்த்தீபா .. வண்ணங்கள் கோடி உண்டு உலகில் .. எண்ணங்கள் சுமந்து நீயும் .. எம்மைப்போல் வாழ்த்திருக்கலாம் .. திண்ணமாய் நீர் எடுத்த முடிவு .. கொள்கையின் பற்றும் பிணைப்பும் .. இலக்கினில் கொண்ட உறுதியும் .. எம்மைப்போல் மாறுது இருந்ததால் .. மரணித்து எம் மனங்களில் நிறைந்தாய் .. விடுதலை போரில் நாம் இழந்திருக்க கூடா புலி .. உன்னைப்போல் அரசியலின் தீர்க்கதர்சி எவர் .. மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று அன்று... சொல்லிப்போன உன் வாய்மொழி இன்று .. வெடித்து நிக்கு ஐநா முன்றலில் கூட்டமா ... பார்த்தீபன் என்னும் விடிவெள்ளி எம்மை .. ஈழம் என்னும் நாடு நோக்கி அழைக்கும் .. தாகம் என்னும் சொல் இனி திலீபன் ஆகும் .. தவித்து வந்தது எமக்கு கண்ணீர் .. தாகத…

  5. ஈழத் தமிழர் - பேராசிரியர் இரா. அரங்கசாமி பீதி யுற்றுப் பிறந்த மண்ணில் பரித விக்கும் ஈழவர் நாதி யற்ற நாய்க ளாக நாளும் சாக லாகுமோ? நீதிக் காக அவர்கள் செய்யும் நியாயப் போரைப் பழித்துமே ஓதிக் கற்ற தமிழர் கூட்டம் ஒதுங்கி நிற்ப தென்னவோ? பயிரை மேயும் வேலி யான பாது காப்புப் படையினால் உயிரை விட்டும் இன்னல் பட்டும் உழைக்கும் மறவர் தளரவே கயிறு திரித்துக் கதைகள் பேசிக் காட்டிக் கொடுத்து நம்மிலே வயிறு முட்டச் சோறு தின்னும் வீணர் கூட்டம் வாழ்வதோ? கூறு கெட்டுத் தமிழர் சாகக் கைகள் கட்டிப் பார்ப்பதோ? சேறு கொண்டு வீசி அவரைச் சாடு கின்ற கும்பலும் மாறு பட்டு நிற்கும் மற்ற மானத் தமிழர் கூடியே வேறு பாடு போக்கி விட்டு வகுக்க வேண்டும் நல்வழி! -தென்…

  6. ஆட்காட்டிக் குருவிகள் அமைதியாய் இருக்கின்றன : ச. நித்தியானந்தன் நன்றிhttp://inioru.com/?p=40258

  7. உன் வலிகளின் பெறுமதி அறிவேன் கண்ணே! சிறகெனச் சொல்லி சிலுவை தந்து சுமக்கச் சொல்வர்! முத்துநகை சிதறிவிழ முள்முடி சூடி அழகு பார்ப்பர்! கருணையுடன் கைகளில் ஆணிகள் கடாவிக் களிப்புறுவர்! எட்டி நின்று எட்டி தந்து குடிக்கச் சொல்வர்! ஏனெனில் கடவுளின் மகள் நீ! என் அன்புச் சகோதரி யாயிக்காக 01 sep 2014

  8. என் தேசப்பெருநிலமெங்கும் குவிந்து கிடக்கும் வெண் சாம்பல் மேடுகள் புன்னகைக்கின்றன....... தோழர்களே நன்றி. காலநீட்சியின் கனவுகள் சுமந்த வாழ்தலை ஈழமீட்சிக்காய் உதிர்த்துவிட துணிந்த வீரம் கண்டு, உமிழ முடியாத பெருவெப்பம் சுமந்து உறங்குமவர்கள் விழிகள் பனிக்கின்றன............ உங்களுக்காக............ தொண்டைமான் நீரேரியும் வழுக்கியாறும் -அழகிய சப்ததீவுக்கூட்டங்களும் தசாப்த உறக்கம் கலைத்து நோக்குகின்றன, சோழமண்டல உறவுகளே உங்களின் எழுச்சியை, வல்லைமுள்ளி வெளிகளுக்கும் பகைபணிந்த ஆனையிறவுக்கும், வலசைவரும் ஆயிரமாயிரம் பறவைகளிடம் வாழ்த்துக்களை பகிர்கின்றனர் கண்களால் எம்மவர்கள் -அவை நாளையாவது உங்களிடம் வரும் என்ற நம்பிக்கையில். கருக்கொண்ட மேகங்கள் எழத்தொடங்கிவிட்டன-…

  9. எங்களுக்காகத் தங்களை உதிர்த்து எம்மினம் காத்திடத் தம்மைத் தந்து உயிர் என்னும் கொடை தந்து தம் உணர்வுகள் துறந்து நின்றார் தாய் மண்ணின் தடையகற்ற மன ஓசை அடக்கி மகிழ்வாய் ஆசைகள் தாண்டி வந்தார் பருவ வயதில் பாசம் அடக்கி பசியடக்கிப் பலதும் அடக்கி எதிரி அடக்கும் ஆசை கொண்டார் எங்கள் நிலம் எமதேயாக தங்கள் நிலம் தான் துறந்து காடுமேடெல்லாம் கால் பதித்தார் எத்தனை உயிர்கள் எம்மினமானதில் அத்தனை பெரும் அவலம் தாங்கி எத்தனை ஈனமாய் எருக்களாயினர் எத்தனை தடைகள் எங்கு தாண்டியும் அத்தனை பேரையும் ஆண்டுகள் தோறும் ஓர்மத்துடன் நாம் எண்ணிடுவோம் தோல்வி கண்டு துவண்டோமாயினும் தோள்கள் துடிக்க திருக்களமாடிய துணிந்தவர் உம் புகழ் பாட மறந்திடோம் மண்ணை இழந்து மறுகினோமாயினும் உதிரமிழந்து …

  10. காற்றின் காத்திருப்பு பிணவறையின் மருந்து நெடி நடுவே அந்த உடல் ஆண் என்பது தவிர வேறெதுவும் தெரியவில்லை முகத்தைத் தேடினேன் கைகளைத் தேடினேன் நெஞ்சுக் கூட்டுக்குள் நினைவெதுவும் மீந்திருந்தால் கொண்டுசெல்லக் குனிந்து தேடினேன் காட்சியின் கொடூரம் மூச்சை அடைத்தது கால்கள் நடுங்கிற்று முத்துக்குமார் அவன் பெயர் என்றார்கள். அவனைத் தின்ற நெருப்பு எங்கிருந்து வந்தது? கூராய்வுச் சோதனையில் கண்டறிய முடியாது. இப்போது அது எங்கே போனது? ஒற்றர்கள் முயன்றாலும் அதன் தடயம் தெரியாது. கண்ணீர் வரவில்லை கதறல் எழவில்லை சொல்லிப் புலம்ப ஒரு சொல்லும் கிடைக்கவில்லை வெளியே வந்தேன் கூடியிருந்தனர் இளைஞர் பலபேர் கண்களில் கோபம் கைகளில் நடு…

  11. கேணல் ராயூ நினைவாக… வெற்றிகளின் பின்னால் இருந்த பேராற்றல்… இடிவிழுத்திப்போகும் இச்செய்தி வருமென்றா உன்னை வழியனுப்பி வைத்தோம் போர் ஓய்ந்த நாளிலும் எமக்கேன் இடி விழுகின்றது குருதி நரம்புகள் உறைந்துபோக நெஞ்சில் குத்தீட்டி ஏறுகின்றது கேணல் ராயூ குயிலலெனவும் இவன் குறிக்கப்பட்டான் அதிகம் பேசாமல் அதிகம் சிரியாமல் அதிக அதிசயம் நிகழ்த்திய அதிசயன் . தலைவருகில் தன்னை தயார்படுத்தியதால் கதிரவன் ஒளிகசிந்து ஊறியகாளை நுட்ப மதி நிறைந்த நுாதனன். விடுதலையன்றி வேறொன்று சிந்தியா விவேகன். புதிய அரும்புகள் முளைகொள்ள நாற்றங்கால் போட்ட நாயகன். பெருவெற்றிகள் ஒவ்வொன்றின் பின்னாலும் இந்தபுலிமகனின்பேராற்றலும் இருந்தது பகை நெஞ்சேறிய குண்டுகள்…

  12. ஒரு முறை பாருங்கள் ................ என்.... கருத்துக்கள்.....! சிறுபிள்ளைத்தனமாகவோ ..... குழந்தைத்தனமாகவோ ...... ! செத்ததாகவோ...... இத்ததாகவோ........ இருக்கலாம்..... !!! என்றாலும் ஒருமுறை பாருங்கள்......! அதிலிருந்து உங்களுக்கு.... புதிய கருத்துக்கள்.. தோன்றலாம்..... !!! @ கவிப்புயல் இனியவன் கவிதைகள் தொடரும் சிலுவை சுமக்கும் மனிதன்... ----------------------------------------- மனிதனின் ...... எல்லா செயல்களும் .... சிலுவையாக மாறுகின்றன .... விளைவுகள் ஆணியாக.... அறையப்படுகின்றன....! குடும்பம் என்னும் உறவை .... சிலுவையாய் சுமக்கிறான் .... அன்பு என்னும் ஆணியால் ..... அறையப்பட…

  13. Mummy பொங்குறா பொங்கல் பிள்ளை order பண்ணுறான் Pizza Daddy எனக்கு வேண்டாம் புக்கை வாங்கித்தாங்கோ மக் பேர்கர்! விடியக்காலம மனிசிக்கு வேலை பின்னேரம் எனக்கு வேலை Fridge இக்குள்ள புக்கை! Facebook இல அரட்டை அட் ரா சக்கை ..... அட் ரா சக்கை ...! இதுதாண்டா புலம்பெயர் பொங்கல்!!!! பொங்கலோ பொங்கல்!!!! டமில்போய் 14/01/2014

  14. நெஞ்சிலே ஈரம் கொஞ்சம் இருக்கா ? நம் தாயகத்தில் ,பாலுக்கு அழும் பாலகனை எண்ணிப பார் ,நீ சாப்பிடும் கேக்கு வேண்டாம் ஒரு நேர கஞ்சி யாவது ,கிடைக்கிறதா ? இங்கு அலங்கார கோவில்களுக்கு ,தினந்தோறும் அபிஷகம் , விசேட தினத்தில் விசேடமாக , அங்கு குடியிருக்க குடிசை இல்லை இங்கு பசி வர மாத்திரைகள் அங்கு பட்டினியால் யாத்திரைகள் நீ எதோ தப்பி வந்து விட்டாய் என்று எண்ணாதே , கோழை நீ ? , என்ன செய்வாய் ? போராடி பெறும் தாயகத்தில் என்ன உரிமையிருக்கிறது உனக்கு ? ஒவொரு துளி வியர்வையும் அவன் சிந்தும் ரத்தம் அல்லவா ? அள்ளி கொடுக்க வேண்டாம் கிள்ளியாவது கொடுத்தாயா? ,ஒரு நாள் என் அக்காவின் பேரன் ,என் தாயக திரை படத்தை பார்த்து ,கேள்விகளை கேட்டுவிடு , தன் உண்டியலை (piggy …

  15. பார்த்தீபன் அன்று பசியோடு உந்தன் வாசலில் படுத்திருந்தானே முருகா! அவன் தேசப் பசி போக்க கண் திறந்து நீ அன்றுபார்த்திருந்தால்..., தனை வருத்தும் எவருக்கும் நீயருள்வாய் என்றவர்கள் உணர்ந்திருப்பர். குண்டுமழை பொழிகையில் குடியிருந்த வீடுவிட்டு எஞ்சிய உயிர் காக்க ஏதிலியாய் அவர் தன்னிலம் நீங்கி உன்னையும் தான் விட்டு ஓடோடிப்போகையிலும் கந்தனே நீயுமோ எம்மை கைவிட்டாய் என்றுதான் கண்ணீர் உகுத்து கரம்கூப்பினர் அன்று அசுரனை அழித்த உன் ஆறுமுகம் காட்டி அபயம் அளித்திருந்தால்..., கூப்பிட்ட குரலுக்கும் குவித்த கரங்களுக்கும் செவிசாய்த்து நீ அவர் துயர் துடைப்பாய் என்றவர்கள் நம்பியிருப்பர். ஈற்றில் முள்ளிவாய்க்கால் தன்னில் முடிவற்று செத்தொழ…

  16. புவியீர்ப்பு விசையின் சக்திக்குள்ளே உயரப்பறக்கும் பருந்து கண்ணில்பட்டதை தன்னிலும் சிறியதென்றது துாரம் எம் பார்வைக்குள் அடக்கப்படும் காட்சிகள் அல்ல அதையம் தாண்டும் அருகே போகும்போது ஈர்க்கப்படும் விடையம் எம் சிந்தனையில் கட்டுப்பாட்டை விதிக்கின்றது சாட்சி ஒதுக்கப்பட்ட உண்மைகள்போல் அருகில் இல்லாத ஒன்றின் மீதான விருப்பம் இருப்பதை ஒதுக்கி வைக்கின்றது இழக்க நேரிடும் என்ற உண்மை அறியாதவரை சிந்தனை பந்தில் அடைக்கப்பட்ட காற்றல்ல பரந்த விரிந்த பூமிப்பந்தில் பார்வையின் நோக்கத்தில் படைப்பாளி சிக்கிக்கிடப்பதுபோல்

  17. சாம்பல் பூக்களின் கண்ணீரை திருடும் தேசமிது .. வெந்து வடியும் ஊழியின் பெருமூச்சுக்களை தின்று களிக்கும் கூட்டமுமிது இயலாமையின் ஓலங்களின் மீது வக்கிரக்குறிகளால் புணரும் அரசுமிது.. ஒ கட்டியக்காரர்களே.. எங்கு போனீர்கள் ? சாவுப் பட்டியலில் புள்ளடியிடுகிறீர்களா ஜெனிவாவில்? கண்ணீரால் நிரம்பிய எங்கள் வாசல்களில் கால் நனைத்தீர்களே.. நீரருந்தி நிமிர்ந்து நல்ல உணவருந்தி இன்னும் ஓராண்டு உள்ளக விசாரணைக்கு ஒப்புதல் அளியுங்கள்.. பிணங்களைப் புணர்ந்தவர்கள் காவலில் தேவதைகள் சிறகு விரிப்பதாக வரைவுகளை எழுதுங்கள்... இருள் மூடிக்கிடக்கிறது எங்கள் வானம் நட்சத்திரங்களையும் சூரியனையும் தொலைத்துவிட்டு.. பேரமை…

  18. http://www.youtube.com/watch?v=t71oJeY1OVQ ஆடுவோம் கண்ணா எழும்பிவாட இருவரும் விளையாடுவோம் இன்று பகல் முழுதும் ஆசையாய் கேட்டால் ஆர்வமில்லை ஏனோ ஆரும் இல்லை எனக்கு சேர விளையாட கால்கள் நான்குண்டு குத்திக்க எமக்கு கனிந்த பெரு மனம் உண்டு களிக்க, குலவ.. .. ஆடுவோம் காலத்தை போக்காதே கவலையில் துள்ளி எழுந்தால் தோகை விரித்தால் நம் தனிமை துயரம் பறக்கும் ஒரு நொடியில் தூரம் போய் நாம் தேசம் பல பார்த்து, நாட்டை சுத்தி நுனி மூக்கால் நீண்டமோப்பம் நெடுநேரம் போட்டு, துடுக்கு பல செய்து துயரத்தை போக்கி.. ..ஆடுவோம்.. ஒட்டிக்கொள்ளாதே சுவரோடு தோழா உன்னைபோல் ஒழிவதற்கா இந்த உலகம் என்கரத்தை தட்டினால் எவர் உண்டு எமக்கு கள்ளத்தில் படுக்காதே கவலைதான் மிஞ்சும், காலம் இளம் காலையும…

  19. அகிம்சை. ஒரு சில தசாப்தங்களுக்கு முதல் வரை அகிம்சை என்றால் காந்தி என்றனர். அதனையே உலகும் காந்தியம் என்றது. காந்தி நாடு என்று பாரதத்தை கொண்டாடியது. உண்மை அகிம்சைஎது என்று உலகுக்கு சொல்லி பாரதத்தின் முகமூடி கிழித்தான் பார்த்தீபன் பாரதம் பார்த்திருக்க பசியில் பிள்ளை நீர்த்து பன்னிரண்டாம் நாள் வீர சுவர்க்கம் சென்றான் அகிம்சை தீயை உலகில் ஏற்றிய தீபச் சுடர் திலீபன். பௌத்தத்தை அகிம்சை மதமென்றனர் மதங்கொண்ட பௌத்தார் மனட்சாட்சி இல்லாமல் கொலைக்காட்சியை உலகிற்கு காட்டினர் முள்ளிவாய்க்களில் அந்த ஆ.. கிம்சையாளருக்கு அரவனைப்பு கொடுத்தது கிம்சையாளர் ஆளும் ஹிந்தியா தமிழன் என்ற உணர்வு தலை தூக்கிய பொழுதெல்லாம் தரங்…

  20. ஐந்திணை விக்ரமாதித்யன் குறிஞ்சி கண்ணில் தெரிவதெல்லாம் மலை முகடுகள் ஒரு நறுஞ்சுனை தொலை தூரத்தில் சிற்றாறு மரம் செடி கொடிகளில் கனி சுமந்த கிளைகள் உச்சியில் கொம்புத் தேன் கூடுகள் அதிசயமாய் துலங்கும் அருவிகள் மெளனமே இருப்பான சித்தர்கள் முன்னை பழங்குடிகள் வானம் தொடும் மஞ்சுக்கூட்டம் தண்ணீர் பட்டுத் தெறிக்கும் தேக்குகள் மூங்கில்கள் பக்கத்திலேயே பாக்குமரங்களும் ஏலக்கொடிகளில் எச்சமாய் மணம் சிந்திக் கிடக்கும் மலை முந்திரி படர்ந்து தழுவும் மிளகுக் கொடிகள் வேரில் பழுத்துக் கிடக்கும் பலாக்கள் தேன் கதலிகள் வேட்டுவ வள்ளியின் விழிப்பார்வைக்கும் எச்சில் முத்தத்துக்கும் யாசித்து நிற்கும் வடிவேலன் …

  21. முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் தாய்மொழி கவிஞர் இன்குலாப் நினைவுப் படலத்தில் குருதிக் கோடுகளாய்ப் படர்ந்த கொடிய நாட்கள் அவை வானம் மறுக்கப்பட்ட பறவைகளை நான்கு திசைகளிலிருந்தும் நச்சு அம்புகள் துரத்திய நாட்கள் கலைக்கப்பட்ட கூடுகளிலிருந்து அடைகாக்கப்பட்ட முட்டைகள் உடைந்து சிதற, மண்ணெல்லாம் உதிரக்கொடி படர்ந்த நாட்கள் பறவைகளின் நெஞ்சப்படபடப்பில் காற்றும் நெளிந்து கூகூவெனக் கூக்குரலிட்ட நாட்கள் வேடுவனின் இறையாண்மையில் குறுக்கிடமுடியாதென்று நாக்கைச் சப்புக்கொட்டி பறவைகளின் பச்சைக் கறிவிற்கக் கடைதிறந்த சந்தை வணிகர்களின் பங்கு நாட்கள். கிளிகளுக்கு இரங்குவதாய் அழுத பூனையொன்று ஒரு சிட்டு…

    • 0 replies
    • 748 views
  22. என் கண்ணனே நான் உனக்காக எதையும் விட்டு குடுப்பேன் நான் எவருக்காகவும் உன்னை விட்டு குடுக்க மாட்டேன்......

  23. நான் தான் கொரோனா கொல்லுறன் என்று நாடுகளை எல்லாம் நாசம் செய்கிறேன் என்று வீட்டுக்குள்ள பூட்டி இருந்து போட்டு ஊசியை போட்டு என்னை ஓட வச்சுப் போட்டு சத்தம் இல்லாமல் கிடந்த நீங்கள் இப்போ யுத்தத்தை கொண்டு வந்திட்டியள் பேயை விரட்டிறம் என்று இப்போ பிசாசை எல்லா கொண்டு வந்திட்டியள் என்ன செய்வது எனக்கே சிரிப்பாய் கிடக்கு எட என்னை விட பெரிய கொரோனாக்கள் இருக்குது உலகத்தில என்னைப்போலவே இதுகும் கொல்லும் என்னைப்போலவே எல்லாத்தையும் அழிக்கும் சொல்லப்போனால் சும்மா விடாது சுய நலன்கள் கொண்ட கொரோனாக்கள் நான் இனம் மதம் சாதி சமயம் எந்த நாடு என் நலன் என்று பார்க்காமல் எல்லோரையும் கொன்றே…

    • 9 replies
    • 748 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.