Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மாறிவிடு தமிழினமே அநியாயச் சிங்களத்தின் ஆக்கினைகள் பொறுக்காமல் அந்நியத்தை வந்தடைந்த அன்பான சோதரரே அதிகாரச் சிங்களத்தின் அடக்குமுறை தாங்காமல் அகதிகளாய் புலம்பெயர்ந்த அன்பான உறவுகளே அந்நியத்தில் நீர்செய்யும் அழுக்கான செயல்கள்தந்த கவலைகளை இறக்கிவைக்க கண்ணீரால் எழுதுகிறேன் புலம்பெயர்ந்த மண்ணில்நீh புரிகின்ற அராஜகத்தால் புண்ணான மனத்துடன்நான் புலம்பியிதை எழுதுகிறேன் சீருடனே வாழுமுந்தன் சிறப்பினைநான் காணவந்தேன் சில்லறைச் செயல்கண்டு சினந்துநான் எழுதுகிறேன் குடும்பம் போல்நீங்கள் கூடி வாழாமல் குழுக்கள் பலசெய்து குழம்புவதும் முறைதானோ அண்ணன் தம்பியாக அனுசரித்து வாழாமல் அடிதடியில் இறங்கிநீரும் அழிவதுவும் …

    • 7 replies
    • 1.7k views
  2. ஏன் மௌனமானாய்....??? சிங்களவன் அழிகையிலே சீறி எழும் உலகமே... எம் தமிழ் அழிகையிலே ஏன் உனக்கு மௌனமோ...??? பயங்கர வாதியேன்றேன் பயங்கரமாய் தூற்றுகிறாய்...??? பயங்கரமாய் வந்து அவன் பயங்கரங்கள் ஆடுகிறான்... பார முகமாய் ஏனோ நீ பாரினில் இருக்கிறாய்...?? ஏழை என்றா எம் தமிழை ஏறி இன்று மிதிக்கிறாய்....??? நடு நிலை என்றேன் நா வறள கத்துகிறாய்... இன்று நடு நிலை மறந்தேன் நரகத்திலே கிடக்கிறாய்...??? நா நனைந்து எம் தமிழர் நாட்கணக்காய் ஆச்சு... நலிவடைந்து உடலதுவோ உயிர் பிரியும் நிலை போச்சு.... நின்மதி இன்றியவர் நிர்கதியாய் ஆச்சு... எண் கணக்கில் பயங்கரங்க…

  3. தேநீர் கவிதை: மழை மழை நனைதல் தவம். குழந்தைகளுடன் நனைதல் வரம். பகல் முழுதும் மழையுடன் விளையாடிக் களைத்த குழந்தை தூங்கிப் போனாள். மழையும் ஓய்ந்து தூங்கியது. அதன் பின் தொடங்கிற்று பிறிதொரு சிறுமழை - கிளைகளினூடே துளிகளாகவும் கனவு காணும் குழந்தையின் இதழ்களில் புன்னகையாகவும். இங்க செம மழ. ஜாலியா நனையிறோம் அங்க மழயா என்ற ஒரு குழந்தையின் …

    • 1 reply
    • 1.7k views
  4. வெளி நாட்டு காற்றிலே கவிதைகள் அணல் பறக்கும் ஏராளாமாய்! ஆனாலும் ஏளனமாய் இன்றும் விடுதலை வெற்றி நமதென்று கூவியழைத்தார்! தோல்வி கண்டு துவண்டு அழுதார்! வெல்லும் போது; மட்டும் வாழ்த்து பாடினார் தோற்க்கும் போது மட்டும் சிலர் சோக கீதமிசைத்தார்!. அனுப்பிய பணங்கள் ஆயுதம் அணிந்ததாய் மட்டுமே இதுவரை இல்லை செய்தி! இதுவும் வரலாம் காலகிரமத்தில்! ஏனெனில் கவிதைகள் மட்டுமல்ல செய்திகளும் இங்கே கற்பனையில்! துன்பத்தின் மீதிலேறி பாடுவார்! துன்பத்தை வெல்ல துயர்துடைப்பு என்பர்! வெட்கத்தை விட்டு சொன்னால் வேற்று வேட்டுக்கள் தான் நாம்! வேற்றுவன் கேட்கிறான் எம்மை! வேதாந்தம் பேசவா முடியும் அவருடன்? கேட்கிறார் அறிவார்ந்த கேள்வியாய் சிலர்! வேதாந்தம் சித்தாந்த…

    • 13 replies
    • 1.7k views
  5. Started by வர்ணன்,

    தமிழன் - யாரோ? கூட இருப்பன் கொலையுண்டு போனாலும் - ஒரு பக்கத்தில் ஒதுக்கி விட்டு பஞ்சாமிர்தம் சாப்பிட நினைப்பவன்! தமிழன் என்றால் யாரோ- ? முயற்சி செய்பவருக்கு தடையாய்- இலாபம் இல்லை என்று தெரிந்தும்..... ஏட்டிக்கு போட்டியாய் ஏதும் செய்ய நினைப்பவன்! தமிழன் எவரோ- தாயை தவிக்க விட்டு - பாயை சுருட்டி கொண்டு பரதேசம் ஓடுபவன்! தமிழன் என்ன செய்வானோ? உப்பு யாரும் அள்ளினால்- சாக்கை தூக்கி கொண்டு ஓடுவான் -அவனும்! உப்பு நீரை பாத்திகட்டிவைக்க- நினைக்கான்! தமிழன் இன்னும் என்ன செய்வானோ-? கருத்து யாரும் ஆரம்பித்தால்தான்- தானும் எழுதுவான் - கவிதை என்று யாரும் ஆரம்பித்தால்தான்- தானும் மூக்கை இடையில் நீட்டுவான்! தமிழனுக்கு வீரம் உ…

  6. பாலை நிலமாகி வரண்டுபோன என் வாழ்வில் ஒற்றைப் பூவாய் வந்து சோலையாகிப் போனவள் நீ விடியாத அந்த இரவுகளில் என் விசும்பல்களின் வலிகேட்டு உயிர்ப் பூவெடுத்து மலர்மாலை தொடுத்தவள் நீ

  7. முருங்கை ஏறும் வேதாளம் முத்துப் பல்லக்கில் ஏறிடுமா? காலப் புரவி காற்றாக கண்களை விட்டு நகர்கிறது. யுத்த நிறுத்த அமுலாக்கம் பித்தம் நிறைத்து நகைக்கிறது. முருங்கை ஏறும் வேதாளம் முத்துப்பல்லக்கில் ஏறிடுமா? எத்தனை சபைகள் சென்றாலும் புத்தக ஞானம் வென்றிடுமா? நடுவர் என்பவர் நலன்விரும்பி நட்பாய் நிற்போம் தலைவணங்கி அடிமை என்பது பொருளல்ல - எம் தேசியம் வெல்லும் திறன் சொல்ல. உலக வேதங்கள் எமக்குதவா.. ஊமையாக்கி எமை வாட்டும். உரிமை எவரும் தருவதில்லை. உன்னிப்பாக எண்ணிப்பார்! மெய்யதை வருத்திப் புண்பட்டோம். மேனியில் எத்தனை காயங்கள். பொய்யதுவாகிப் போய்விடுமோ? புூமிப்பந்தே கண்திறவாய்! வேளைகள் வந்தும் வெறுமையுற்றோம். வீரம் நிறைந்தும்…

  8. மலரே என்பான் அவன் வண்டே என்பாள் அவள் மலர் மீது வண்டு உறவாட மலரும் உறவுக்குள் விளையும் குண்டுமணிகள் விடப்படுவது குப்பையில்...! கடைசியில்.. தகாத உறவென்று பெயர் வைக்கும் சமூகம்... மனிதம் குப்பையில் சேர்வது அறிவதில்லை.!!!

  9. Started by Ravi Indran,

    காதல் அம்மாவின் மார்புக்குள் அப்பாவை தொட்டபடி விளையாட்டுப் பொம்மையுடன் தூங்குகிறேன். வெளியில் நான் இலைபோட்டுக் காப்பாற்றிய மழைவெள்ளத்தில் நனைந்த எறும்பு குளிருக்கு என்ன செய்யும்? ஐயோ பாவம்! எல்லாமே என் சொந்தம் சொந்தங்கள் எல்லாமே எனக்காக என்கிறது குழந்தை எனக்குப் பசித்திருக்கும் அவனுக்குப் பால் கொடுப்பேன். எனக்குத் தூக்கம் வரும் அவனைத் தாலாட்டுவேன். தந்தைக்குச் சேமித்த நேரத்தையும் அவனுக்குச் செலவு செய்வேன் என்கிறாள் தாய் என் வலிய தோள்களே வலிபெறுமளவுக்கு சுமப்பேன். முடமான கால்களால்கூட அவனைச் சுமந்து நடப்பேன். வீட்டுக்கொரு கொலுசுச் சத்தம் கூட்டி வந்த பின்பும் கண்ணை இமைபோல அவனை நான் காப்பேன். என்கிறார் தந்தை. …

  10. முரண்பாடுகள்!!! இரவும் பகலும் சிகப்புச் சிங்கமாய் இறுமிய எனகுள்ளே ஏதோ சில முரண்பாடுகள் தமக்குள்ளே அடிபட்டுக்கொள்கிறது என் மனதில் அய்யரை பேசி கோயிலை திட்டி சாத்திரங்களை எரித்து..வேதாந்தம் பல பேசிய பல பேரில் நானும் ஓருவன்! வீரமகன்! சிகப்புச்சிங்கம்! திருமணம் என்கிற பந்தம் வந்ததோ வந்தது! மாமாவின் புற்றுநோய்க்கு என் மனைவி கதிர்காம கந்தனிடம் வைத்த நேர்த்திக்கு நேரம் பார்த்து போய் வந்தோம்! மாமிக்கு வயசாகி கண் மங்கலாய்த் தெரிய என் மனைவி கனடா ஐயப்பனுக்கு நேர்த்தி வைத்தாள் "ஐயப்பனே என் அம்மாவின் கண்கள் சரியாக வர என் கணவர் இந்த முறை மாலை போடுவார்" நண்டு உயிரோடு இருந்தா…

    • 11 replies
    • 1.7k views
  11. ஒலி வடிவம் ------------------------------------- நெஞ்சில் ஓர் மூலையில் ஏதோவொரு சோகம் எனை அணைக்கும் உடம்பு சோர்வின் கைப் பிள்ளையாகும்! மனசு விரக்தியின் விளிம்பில் தற்கொலை செய்யும் எதிர்காலம் கண்முன் விஷ்வரூபமெடுக்கும் தனிமையில் தத்தளித்து தாய் மடி தேடும் மனம் பொல்லாத கற்பனைகளால் இதயம் வெடிக்கும் தலை கோதி நெஞ்சில் முகம் சேர்த்து அணைக்க ஓருயிர் வாராதா என விழிகள் தேடும்! "எனக்கு மட்டும் ஏன் இப்படி" கண்முன் தெரியா கடவுளிடம் விசாரணை நடக்கும் கால் போனால் ஊன்றுகோல் மனசு உடைந்தால் என்ன உதவும் ? "நம்பிக்கை" என்ற பழகிப்போன பதிலில் சமாதானம் …

  12. வாரஇறுதி விடுமுறைகூட வருடங்களின் பின்புதான் ஓய்வின்றிய உழைப்பில்.. தொலைந்து மறையும் தொலைதூர உறவுகள் தொலைபேசி அழைப்பில்.. முழுநாளும் வேலைக்குள் தடம்மாறும் நண்பர்கள் முகம்பார்க்க முடியாமல்.. தொலைவில் இருந்து தொலைபேசிக்குள்ளே குடும்பம் நடத்தி.. தூங்கியெழ மட்டும் வீடுவந்து செல்லும் குடும்பத்து உறவுகள்.. பம்பரமாய் உழைக்கும் பரதேசி வாழ்க்கையின் பாழாய்போன கொள்கை.. பசிக்கும்போது உணவு களைத்தபோது தூக்கம் கிடைத்தாலே போதும்.. வருஷங்களுடன் சேர்த்து வாழ்க்கையை தொலைக்கும் வலிமையான வட்டத்துள்.. முடிவற்ற பாதையில் தெளிவற்ற பயணமாய் புரிந்த…

  13. Started by putthan,

    என்னை கைப் பிடித்தவன் மொழி,இன,மத வேறுபாடு பார்ப்பதில்லை அதேபோல் நானும் எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை என்னை அவன் இயக்கினான் நானும் இயங்கினேன் தோளில் சுமந்தான் நானும் அழகாக தூங்குவேன் நண்பனுக்கு அறிமுகம் செய்தான் அவன் என்னை பார்த்து வியந்தான் ஒரு நாள் வீழ்த்தினான் முன்நின்றவனை எதிரி என்றான் இன்னோரு நாள் வீழ்த்தினான் முன்நின்றவனை துரோகி என்றான் மற்றொருநாள் இவன் வீழ்ந்தான் நானும் வீழ்ந்தேன்,முனகினான் மற்றொருவன் ஒடி வந்தான் என்னை தூக்கினான் நிறுத்தினான் அவன் முனகளை இனியோரு நாள் இவனும் வீழ்வான் நான் இன,மத மொழி பார்க்கமாட்டேன் ஆனால் என்னை இயக்குபவன் .......

  14. புலிகளை துரோகி என்றேன். அவர்கள் என்னை அரவணைத்துக் கொண்டார்கள். ஈழத் தேசியம் ஒரு கற்பிதம் என்றேன். பௌத்த மரபு உனக்கு வசதியாய் இருக்கும் என்றார்கள். பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்ட போது, நான் புலிகள் மக்களை கலைத்துப் பிடித்துச் சுட்டார்கள் என்றேன். எனது நூலை ஆங்கிலத்தில் கொண்டு வர உதவினார்கள். போருக்கு உதவிய எல்லா நாடுகள் குறித்தும் மௌனம் காத்தேன். சாதகமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து போருக்கு எதிராக நிறுத்தினேன். என்னை நடுநிலையாளர் என்று சான்றிதழ் கொடுத்தார்கள். வெளிப்படையாக வரவா என்றேன். இல்லை இல்லை நீ இந்த முகத்தோடு இருப்பதுதான் எங்களுக்கு வசதி என்றார்கள். இதற்கு மேல் விற்க எதுவும் இல்லை என்றேன். அவர்களோ முட்கம்பி வேலிகளிலும் வானாந்தரங்களிலும் வீ…

  15. .... "நல்லூர் புத்தசாமி கோயில்" ... நாலு வரி எழுதுங்கள்

  16. Started by இலக்கியன்,

    எழுதா மறையாக இருந்தவனை எழுதவைத்த நண்பிக்கு நன்றி குடத்துள் விளக்காக இருந்தவனை குன்றிலே ஏற்றிவைத்தீர் நன்றி நண்பனாக வந்த எனக்கு உன் இதயதில் அண்ணாவாக இடம்தந்தாய் நன்றி நம் நட்புக்கு பாலமாக இருந்த அந்த மலர்களுக்கும் நன்றி கூண்டுக்கிளிபோல இருந்த என் சிந்தனையை சிறகுகள் விரித்து பறக்க வைத்தாய் நன்றி வீணாக இருந்த என் பேனாவுக்கு ஒரு அர்த்தம் கொடுத்தாய் நன்றி உன்னுடய அன்புக்கு நன்றி சொல்ல என் கவி நயத்தில் வார்த்தைகள் இல்லை நன்றி

  17. நெஞ்சம் எங்கும்நினைவாலே நிலைத்தவள்நித்தம் என் நினைப்பினில்நீர்க்கமற நிறைந்தவள்உடல் முழுதும் தழுவிஉவகை தருபவள்உதடுகளின் இடை புகுந்துஉல்லாசமாய் நுழைந்தவள்நாசி வழி புகுந்துநாபிக் கமலத்தை நிறைப்பவள்துள்ளி ஓடும் குருதியிலும்தீர்க்கமாய் நிறைந்தவள்அள்ளி ஆசையோடு முத்தமிடும்அழகுச் செவ்வண்ண மேனியாள்நிகரில்லா அவள் வனப்பின்நினைவுகளைச் சுமக்கிறேன்நித்தமும் அவள் மடி துயிலவேதகிக்கிறேன் தவிக்கிறேன்நாடிச் சென்று அவள் மேனி தழுவநாதியற்று நிற்கிறேன்...#ஈழத்துப்பித்தன்06.05.2016 http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post.html

    • 0 replies
    • 1.7k views
  18. மழைக்காலம் துவங்கும் மேய்ச்சல் நிலங்களை புற்கள் போர்த்தியிருக்கும் எல்லாம் எரிந்த சாம்பலிலிருந்து மூங்கில் துளிர்க்கும் நொண்டி நாய் தங்க நிறகுட்டிகள் நான்கை ஈனும் நீண்ட குரலெடுத்து பாடும் ஒற்றை வால்க்குருவி கூடடைந்திருக்கும் வண்ணத்து பூச்சியொன்றின் நிறங்கள் குலைந்திருக்கும் தூறல் நின்றபின் வெளிக்கிடும் தவளைக்காக நீர்ப்பாம்பு கரையை பார்த்திருக்கும் குயவனின் கனவுகளுக்குள் தலைபிரட்டை நீந்த கற்றிருக்கும் சம்பா நாற்று நீரில் மிதந்திருக்கும் பெருங்கிழவன் உளம் விளைந்திருக்கும் செப்பனிடாத கூரைவழியோடும் மழையருவி சிலந்தியின் பின்னலில் சன்னல்களை வரைந்திருக்கும் விட்டில…

  19. முதல் வசந்தப் பாடல் வ.ஐ.ச.ஜெயபாலன் சுனாமிக்குச் பிந்திய வசந்தத்தில் மீனவ குப்பங்களில். பூத்த மரங்களின் எச்சங்களில் குயில்கள் பாட மாலைசூடிய குழந்தைகள் எசப்பாட்டுப் பாடியதை கண்ணீரூடு பார்த்தது போல இன்றும் கரைந்தபடி.. . மனிதனின் வாழும் ஆசையை எந்தக் கொம்பனாலும் கொம்பியாலும் பறித்து விட முடியாது என்றபடி வருடந் தோறும் கீரோசீமா நாகசாக்கியில் செறிகள் மலர்கிறதுபோல என் மண்ணிலும் முறிந்த வேம்புகள் மலர்கின்றன.. . . இற்றை வசந்த இப்பூந் தென்றலில் சுட்டெரிக்கப் பட்ட எங்கள் சோலைகளின் எச்சங்களில் பிள்ளைகளின் மதளைக் கூவலில் காமுற்று குயில்கள் பாடுகின்றன பாதைகளில் கால் மிதிக்க உயிர் கிழிகிறது. குலதெய்வங்களின் கல்லறைகளை உடைத்து …

    • 7 replies
    • 1.7k views
  20. செல்லாதா எங்கள் பா...?? துடுப்பை பறித்து- நீ தூர எறிந்தால் கரைக்கு போகாதா எம் கவிதை படகு...?? இடுப்பை உடைத்து- எம்மை இருத்தி வைத்தால் நடந்து போகாதா- எங்கள் நறுக்கு வரிகள்...?? குப்பி விளக்கதில்- நாம் குத்தும் வரிகள் எட்டி பார்க்காதா எங்கள் தேசம்...? எழுது முனையை- பறித்து சிறையில் இட்டால் பறந்து போகாதா- எங்கள் பா வரிகள்...?? -வன்னி மைந்தன்-

  21. என் ஊரில் முற்றத்து நிலவு என்னைத் தேடித் தவிக்க, ஊரைவிட்டு வந்த நான்... நிலவைத்தேடி, கண்கூசும் மின் விளக்குகளோடு அலைகின்றேன்... முகவரியில்லாத தேசமொன்றில்!!! அம்மாவின் நிலாச்சோறும், மண்வாசனையும்... அடிக்கடி அனுப்பும்... அன்பான அழைப்பிதழ்களையும், என் சூழ்நிலைக் காவலர்கள்... என் மன குப்பைக் குழியில், அப்போதே போட்டுப் புதைக்க... இருட்டு மட்டுமே துணையாக!! இன்னும் நிலவைத் தேடியபடி.... நான் முகவரி தெரியாத பயணத்தில்... பசியோடு!

  22. உன்னை பிரிந்தது வலியில்லை.... பிரிய நீ ஆசைப்படுவது வலிக்கிறது .... மறந்து வாழ்வது வலியில்லை..... மறக்க வைப்பதுதான் வலி ..... காதல் வலியால் தைத்த ஆடை .....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - காதல் தோல்வி கவிப்புயல் இனியவன்

  23. வதை முகாமில் வாடும் நம் உயிர்கள்..... கவிதை - இளங்கவி அம்மா இந்த இடம் வேண்டாம் நாங்கள் போவம் வாங்கோ.... சிணுங்கிறது ஓர் சிட்டு... மலராத அம் மொட்டு..... உன் அண்ணாவை காணவில்லை அவன் சென்ற இடமும் தெரியவில்லை.... அவனின்றி நாம் மட்டும் எங்குமே செல்வதில்லை........ ............................................... பெரும் முற்றுகையில் நடுவினிலும் பெற்றோரின் முகம்பார்த்து சில காலம்.... சிரித்திட்ட மழலைகள்; இன்று சிந்திய முத்துக்களாய்..... பல முகங்களை பார்க்கவில்லை தம்மை பார்ப்போரையும் கண்டதில்லை... பாதியாய் பட்டினி வாழ்க்கையிலே வழியின்றி தவிக்கின்றன....... ................................................... குளித்திடும் வேளையிலே …

  24. வீர வணக்கம் அண்ணனே.... இடியென வந்துன் செய்தி விழுந்தது இதயம் உடைந்தது விழிகள் கதறுது மொத்த தமிழினம் எங்கணும் கதறுது உன்னை இழந்தெம் தேசமே அலறுது.... ஈழ வானின் உதயம் மறைந்தது எங்கள் வானில் காரிருள் படர்ந்தது தாயை இழந்த சேயினை போல உன்னையிழந்து தமிழினம் கதறுது.... எங்களின் உரிமை வென்றிட வேண்டி எத்தனை செய்தாய் நீயே ஓடி நோயுடல் உன்னை வாட்டையில் கூட ஓய்வின்றி உழைத்த உத்தம வீரா.... எங்களை விட்டு ஏனின்று பிரிந்தாய்....??? காலதேவன் ஏன் உன்னை கடுகதியில் அழைத்தான்....??? ஓடியே வந்த பகைகள் எல்லாம் நீ ஏறிய களமதில் ஒழிந்தே போகும்..... உன் மதியுரை கேட்டு அரக்கன் கூட ஆடியே போவான் …

  25. என் கல்லறைச் சினேகிதியே...... கவிதை....... என் கல்லறை சினேகிதியே உன்னை காணவென்று வந்தேன் உனை காக்க வரவில்லை....! நீ சொல்லிவிட்டுச் சென்ற என் கடமைகள் ஏராளம் அதிலும் சில நிமிடங்கள் உனக்காய் தருகிறேன்... அதுவே ஏராளம்....! பல வருங்களாய் நம் தேசத்துக்காய் போரிட உன் தூக்கம் இழந்தாய்.... உன் தாமரை விழியிரண்டும் செண்பக விழியானாய்.... உன் பஞ்சுப் பாதங்களால் பாறையிலும் நடந்தாய்.... எதிரியை எதிர்த்து மண் காக்கும் சமரில் விதையாக விழுந்து என் விழியையும் திறந்தாய்..... கல்லூரிக் காலத்தில் நீ என் கண்கவரும் காதலி நானோ உன்னைத் தேடுவேன் ; நீயோ விடுதலையைத் தேடிச்சென்றாய்... மூடிய சிறையில் உலவும் சுத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.