Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போர் முடிந்தாலும் முடியாத அகதிவாழ்வு – இன்னமும் அகதிகளாக 1.71 இலட்சம் இலங்கையர்கள் JAN 13, 2015 | 11:51by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டாலும், 1.71 இலட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் அகதிகளாகவும், புகலிடம் கோருவாராகவும், உள்நாட்டு அகதிகளாகவும் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் பணியகம் இன்று வெளியிட்டுள்ள 2014ம் ஆண்டுக்கான அகதிகள் தொடர்பான புள்ளிவிபரம் ஒன்றிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்காவைச் சேர்ந்த 1,23,028 பேர், அகதிகளாக உள்ள அதேவேளை,மேலும், 16,190 பேர் புகலிடம் கோரிகளாகவும் இருக்கின்றனர். 30,847 பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு அகதி…

  2. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மறைவையொட்டி தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆறரைக் கோடி தமிழ்மக்களின் உணர்வுகளை இரங்கல் செய்தி மூலம் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி வெளியிட்டமையானது ஆறாத்துயரில் ஆழ்ந்திருந்த எம் எல்லோரையும் ஓரளவேனும் ஆறுதலடையச் செய்துள்ளது என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 22 replies
    • 3.7k views
  3. நாம் அன்றாடம் வீசி எறியும் தேங்காய் தண்ணீர் மற்றும் இளநீருக்கு வெளிநாட்டு சந்தையில் மிக அதிக தேவை உருவாகி வருவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்போதும், இந்த நாட்டில் இளநீரை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை வெற்றிகரமாக நடந்து வருகிறது, ஆனால் தேங்காய் தண்ணீரை பொதி செய்து விற்பதில் கவனம் செலுத்துவதில்லை. நாட்டின் மொத்த தேங்காய் உற்பத்தியில், உள்நாட்டு நுகர்வு தவிர, பெரும்பாலான தேங்காய்கள் கொப்பரை உற்பத்தித் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதிக அளவு தேங்காய் தண்ணீர் வீணாகிறது என்று தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது. வெளிநாட்டு சந்தையில், தேங்காய் நீர் ஒரு ஆற்றல் பானமாக விற்கப்படுகிறது, மேலும் ஒரு லிற்ற ர் தேங்காய் தண்ணீர் கொண்ட ஒரு பொதி வெ…

  4. Published By: RAJEEBAN 14 SEP, 2024 | 10:36 AM தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அமைச்சரவையில் வடக்கு, கிழக்கு, மலையகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள் என கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் இலங்கையின் பரந்துபட்ட அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் விதத்தில் இடைக்கால அமைச்சரவையை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். வடக்குகிழக்கில் உள்ள தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் இடைக்கால அமைச்சரவை ஏற்படுத்துவதற்கு தனது கட்சி முயலும் என அவர் தெரிவித்துள்ளார். …

  5. முஸ்லீம் ஊர்காவல்படையினரால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வீரமுனை பிள்ளையார் ஆலயத்தில் இம்மாதம் உற்சவம் ஆரம்பமாகிறது. கடந்த 21வருடங்களுக்கு முதல் 1990ஆம் ஆண்டு யூலை 20ஆம் திகதி முஸ்லீம் ஊர்காவல்படையினராலும் சிறிலங்கா இராணுவத்தினராலும் இணைந்து குழந்தைகள், பெண்கள் வயோதிபர்கள் என 55 அப்பாவி தமிழ் மக்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வீரமுனை பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது. 1990ஆம் ஆண்டு யூலை மாதத்தில் மட்டும் வீரமுனையில் முஸ்லீம்களாலும், சிங்கள படைகளாலும் 172அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 21வருடங்கள் கடந்த போதிலும் அந்த சோகங்களிலிருந்து மீள முடியாதவர்களாக உள்ள வீரமுனை மக்கள் தங்களை காக்கும் தெய்வமென நம்பும்…

    • 22 replies
    • 1.5k views
  6. மஹிந்த அரசுடன் கூட்டமைப்பு பேசிவருகின்றது. இது இந்தியாவினால் தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நடந்து வருகின்றது. என்ன தீர்வு என்றும் திட்டமிட்டே அதன் அடிப்படையில் பேசப்பட்டு வருகின்றது. ஆனால் ஏதோ புதிதாக நடப்பது போன்று மஹிந்த கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. காரணம் சிங்கள - தமிழ் மக்களை இரு பகுதியினரும் கவனமாக பார்க்கவேண்டும் என்பதற்காகவே இல்லையேல் தேர்தலில் வாக்குகளை வசூலிக்க முடியாது போய்விடுமே. + இந்த பேச்சுவார்த்தைக்கான பேரம்பேசல் என்னவென்றால் புலம்பெயர்ந்த மக்களின் போராட்டம்தான். அதாவது இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றத்தினை நிறுத்தி, மஹிந்த அரசிற்கு எதிரான போராட்டத்தை தமிழர்கள் கைவிடுவார்கள் ஆனால் அரசாங்கம் அதற்கு பதிலாக தமிழர்களுக்கு…

  7. இது திருகோணமலை கன்னியா வெண்ணீர் கிணற்றுக்கு செல்லும் நுழைவு சீட்டாகும். இது சிவ பூமி எனவும் இலங்கையை ஆண்ட இராவணன் தனது தாயின் கிரியைகளுக்காக உருவாக்கிய ஏழு கிணறுகளும் தற்போது இவ் நுழைவு சீட்டில் அனுராதபுர கால பெளத்தர்களுக்கு சொந்தமானது என்று உள்ளது . எது உண்மை. தொல்லியல் தினைக்களத்தில் ஒரு தமிழர் கூடவா வேலை செய்யவில்லை. http://tamilleader.com/

    • 22 replies
    • 2.3k views
  8. காலிமுகத்திடலில் குழப்பமான நிலை அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர்கள் முன்னெடுத்துள்ள காலி முகத்திடல் போராட்ட இடத்தில் திடீரென பொலிஸ் ட்ரக் வண்டிகள் குவிக்கப்பட்டுள்ளன. காலி முகத்திடலில் பொலிஸ் ட்ரக் வண்டிகள் எதற்காக நிறுத்தப்பட்டுள்ளன என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை. இதனால் அப்பகுதியில் போராட்டக்காரர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனினும், ஆர்ப்பாட்டங்களை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியும் நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. “இந்த நாட்டு மக்களின் அமைதியான போராட்டத்தை எந்த வகையிலும் சீர்குலைக்கும் எந்த முயற்சியை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மிகுந்த கவலையுடன் பார்க்கிறது. அத்தகை…

  9. Published By: RAJEEBAN 12 AUG, 2023 | 07:46 AM கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் போர்க்கப்பல் தரித்து நிற்பதை உன்னிப்பாக அவதானிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த விடயத்தையும் இந்தியா உன்னிபாக அவதானிக்கின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரின்டம் பக்சி தெரிவித்துள்ளார். இந்தியா தனது பாதுகாப்பு நலன்களை பாதுகாப்பதற்கான அனைத்து அவசியமான நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தில் உள்ளது யுத்தக்கப்பலா இல்லையா என்பது எனக்கு தெரியாது, எனினும் வெளியான தகவல்களை பர்வையிட்டதன் அடிப்படையில் இந்திய அரசாங்கம் தனத…

  10. இலங்கையில் மீண்டும் புரட்சி வெடிக்கும்! உலகின் மிகக் குரூரமான போர்களை முன்னெடுத்த தளபதிகளில் ஒருவர்... சரத் ஃபொன்சேகா! முப்படைகளையும் கொண்ட விடுதலைப் புலிகளை வீழ்த்தியபோது ராஜபக்ஷே - ஃபொன்சேகா கூட்டணி ஆசியக் கண்டத்தைத் தாண்டியும் கவனம் ஈர்த்தது. ஆனால், வெற்றியின் பலனை அறுவடை செய்வதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் போட்டி ஃபொன்சேகாவைச் சிறைக்குள் தள்ளியது. அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தால் இரண்டு ஆண்டு சிறைவாசத்துக்குப் பின் வெளியே வந்திருக்கிறார் ஃபொன்சேகா. அவருடைய ஒவ்வோர் அசைவும் இன்று இலங்கை அரசால் கண்காணிக்கப்படுகிறது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்கிறார்கள் இலங்கைப் பத்திரிகையாளர்கள். ஃபொன்சேகாவுக்கு ஏற்பட்டு இருக்கும் நிலை இலங்கையில் ஜனநாயகம் எப்ப…

  11. தகாத உறவை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தி, கல்கமுவ பிரதேசத்தில் முஸ்லிம் பெண்ணொருவரின் தலைமுடியை கிராம மக்கள் வெட்டியுள்ளதாக தெரியவருகிறது. குருநாகல் மாவட்டத்தில் கல்கமுவ மொன்னக்குளம் அல் அஸ்னா ஜூம்மா பள்ளிவாசலில் வைத்து இந்த பெண்ணின் தலைமுடி வெட்டப்பட்டுள்ளது. இதன் போது தலையில் காயமடைந்த நிலையில் அந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தான் தமிழ் இளைஞர் ஒருவரை காதலிப்பதாகவும் இதனை குடும்பத்தினர் எதிர்த்து வருவதாகவும் காதலரை பார்த்து விட்டு, திரும்பி கொண்டிருந்த போது தன்னை ஏமாற்றி பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று தலைமுடியை துண்டித்துடன் கைகளை கட்டி தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பெண்கள் கைதுசெய்யப்பட்டு, இன்று கல்க…

    • 22 replies
    • 1.5k views
  12. பிரதமர் உருத்திரகுமாரனால் மறக்கப்பட்ட மாவீரர்களும், மறைக்கப்பட்ட தேசியத் தலைவரும்! [ பிரசுரித்த திகதி : 2011-01-05 07:43:18 AM GMT ] கே.பி. அவர்களால் முன்மொழியப்பட்ட நாளிலிருந்து `நாடு கடந்த தமிழீழ அரசு` தமிழ்த் தேசியத்திற்கெதிரான அச்சுறுத்தல் தளமாகவே தன்னை நிறுவி வருகின்றது. நாடு கடந்த தமிழீழ அரசும், மக்கள் அவைகளும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக தமிழீழ விடுதலைத் தளத்தில் இணைந்து பயணிக்கும் என்ற தனது முன்னைய வாக்குறுதியையும் மீறியே திரு. உருத்திரகுமாரன் அவாகள் செயற்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டும் தமிழ்த் தேசிய விடுதலைத் தளத்தால் முன்வைக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலை நடாத்தி முடிக்கும்வரை புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களு…

    • 22 replies
    • 3.3k views
  13. 'இது ஒரு தேவையற்ற கேள்வி' என கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்த சம்பந்தன்! தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பது முக்கியமான கேள்வி அல்ல, தமிழ் தேசிய சுட்டமைப்பு என்ன செய்கிறது? இது எங்கே பயணிக்கின்றது? தமிழ் மக்களை எங்கே அழைத்துச் செல்கின்றது? இவைதான் முக்கியமான கேள்வி என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஊடவியலாளர் ஒருவருக்கு தொலைபேசியில் வழங்கிய செவ்வியின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினை விடுதலைப் புலிகளின் தலைவர்தான் உருவாக்கினார் என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்துவிட்டு தொலைபேசியின் அழைப்பினைத் துண்டித்துவிட்டார். …

  14. காரணம் எதுவும் கூறாமல் காலம் சில களங்களை தன் போக்கில் உருவாக்கிவிட்டுப் போகிறது. இரு கட்டுரைகளோடு நிறைவுற்றிருக்க வேண்டிய இத்தொடர் முப்பது இதழ்கள் கடந்தும் வளர்கிறது. உள்ளபடியே, உண்மையான உணர்வாளர்களின் திருப்பள்ளியாகவும், பொய்மைகளை எதிர்கொள்ளும் போர்க்களமாகவும் தன்னையே தருவித்து நக்கீரன், தகர்ந்துபோன தமிழர் நம்பிக்கைகள் முற்றிலுமாய் பட்டுப் போகாமல் உயிர்நீர் ஊற்றி வருகிறதென்பதே உண்மை. முல்லைத்தீவு வெற்றிக்குப்பின் தறிகெட்டு ஆடிய சிங்களப் பேரினவாதத்தின் இரைச்சல் எதிர்பார்த்ததை விட வேகமாகவே சுரத்து குறைந்துவிட்டதாக கொழும் பிலிருந்து வரும் நம்பகமான செய்திகள் கூறுகின்றன. விடுதலைப்புலிகள் வெற்றிகளின் உச்சத்தில் நின்ற நாட்களில் கூட இல்லாத "தமிழ் இனப் பேரெழுச்சி' …

  15. விசா இன்றி தாய்லாந்து செல்ல, இலங்கையர்களுக்கு அனுமதி! adminJuly 15, 2024 இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று (15.07.24) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக முதல் தடவையாக இலங்கையர்களுக்கு விசா இன்றி தாய்லாந்து செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய கொள்கையின்படி, ஒரு சுற்றுலாப் பயணி 60 நாட்களுக்கு விசா இல்லாமல் நாட்டில் தங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விசா இல்லாமல் தாய்லாந்திற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள் தங்குமிட நிதி மற்றும் திரும்புவதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும் என்பதுடன், அந்நாட்டின் குடிவரவு அதிகாரிகளின் ஒப்புதல…

  16. மாவிலாறு அணைக்கட்டைக் கைப்பற்றுவதற்கு, இன்று சிறீலங்கா படையினர் மேற்கொண்ட வலிந்த படை நகர்வு, தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6:15 மணிக்கு, ஆட்லறி எறிகணை சூட்டாதரவுடன், கல்லாறு காட்டுப் புறங்கள் ஊடாக, மாவிலாற்றை நோக்கி முன்னேற முற்பட்ட சிறீலங்கா படையினரை எதிர்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள், பதிலடி தாக்குதல்களை தொடுத்தனர். இதனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் மத்தியில் அரை மணி நேரத்திற்கு மேலாக உக்கிர நேரடி மோதல் இடம்பெற்றது.தமிழீழ விடுதலைப் புலிகளின் பதிலடித் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத சிறீலங்கா படையினர், ஆயுதங்களைக் கைவிட்டு, காயமடைந்த சகாக்களை தூக்கிக் கொண்டு ஓட்டமெடுத்தனர். இதனை தொடர்ந்து, தமி…

    • 22 replies
    • 3k views
  17. நிலுவை சம்பளத்துடன் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த தீர்மானம் சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்த குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் பணியில் இல்லாது விடுமுறையில் இருந்த காலத்துக்கான சம்பள நிலுவையையும் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட சுகாதார அமைச்சின் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. TAGS வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த தீர்மானம் | Virakesari.lk

    • 22 replies
    • 1.6k views
  18. மன்னார் தள்ளாடி மற்றும் கொழும்பு களனிதிஸ்ஸ ஆகிய பகுதிகளில் நேற்றிரவு 40 நிமிட இடைவெளியில் வான் புலிகள் துல்லியமான தாக்குதல் நடத்திய போதிலும், வான் புலிகளது வானூர்திகளில் ஒன்றுகூட சிறீலங்கா வான் படையினர், மற்றும் ஏனைய இடங்களிலுள்ள வான்காப்பு பொறிமுறைக்குள் சிக்கவில்லை எனவும், கண்காணிப்புத் திரையில் பதியப்படவில்லை எனவும் சிறீலங்கா படைத்தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவினால் சிறீலங்காவிற்கு வழங்கப்பட்ட அதியுயர் வலுக்கொண்ட முப்பரிமாண கண்காணிப்புக் கருவியான இந்திரா ராடரில்கூட வான் புலிகளின் வானூர்திகளின் அசைவுகள் பதியப்படவில்லை எனும் கருத்தை சிறீலங்கா வான் படையின் பெயர் குறிப்பிட்ட விரும்பாத உயரதிகாரி அதிகார் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். பறப்பை மேற்கொள…

    • 22 replies
    • 4.8k views
  19. கூட்டமைப்பு எம்.பிக்களும் மாவட்ட இணைத் தலைவர்கள் : நியமனம் வழங்கினார் ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டு ஜனாதிபதியினால் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்துக்கு, மாவை.சேனாதிராஜாவும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு சி.சிறீதரனும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு க.சிவமோகனும், மன்னார் மாவட்டத்துக்கு சாள்ஸ் நிர்மலநாதனும், வவுனியா மாவட்டத்துக்கு செல்வம் அடைக்கலநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு க.சிறீநேசன் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக…

    • 22 replies
    • 1.1k views
  20. புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பை வரவேற்கிறேன் – குமரன் பத்மநாதன் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பை வரவேற்பதாக தெரிவித்த அவர், இந்த வாய்ப்பை நழுவவிடாமல் படிப்படியாக கைகோர்த்து பயணிக்க வேண்டும் என புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். இறுதி யுத்த காலத்தில் தான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்த போது தன்னிடம் எந்த சொத்தையும் புலிகள் வழங்கியிருக்கவில்லை எனவும் அவர் கூறினார். அவ்வாறு சொத்து இருத்திருந்தால் இந்த அழிவில் இருந்து மக்களை காப்பாற்றி இருப்பேன் என கிளிநொச்சி – செஞ்சோலையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ…

    • 22 replies
    • 2.2k views
  21. புத்தகங்கள்,காயமுற்ற போராளிகள், செஞ்சோலை சிறுபிள்ளைகள் இவர்களோடே அதிக நேரம்செலவிடுவதாய் பிரபாகரன் அவர்கள் நேர்காணலில் கூறியிருந்ததால் காயமுற்ற போராளிகள் இல்லத்தையும், யுத்தத்தில் பெற்றோரை இழந்த பிஞ்சுகளுக்கு தானே தகப்பனாகி, அவர்களைத் தாலாட்டும் தாய்மடியாய் அவர் உருவாக்கிய செஞ்சோலை இல்லத்தையும் தரிசிக்க விரும்பினேன். அடுத்தநாள் காலை காயமுற்ற பெண் போராளிகள் இல்லத்திற்கு கூட்டிச் சென் றார்கள். முல்லைக்கொடி படர்த்திய புறவேலி. வெயில் நிறுத்தம் செழித்த தென்னை மரங்கள். நீர்தெளித்த முற்றம். நாற்புறமும் பூச் செடிகள். என் தெய்வம் வாழும் இடமொன்று கண்டேன். இருபது படுக்கைகள் இருந்திருக்கு மென நினைக்கிறேன். அனைவருமே இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள்ளான பெண் போராளிகள். பாதிப்ப…

    • 22 replies
    • 4.2k views
  22. டக்கிளஸ் என்பவன் ஈழத் தமிழருக்குத் தலை மைதாங்கப் போகிறானாம். http://news.yahoo.com/s/ap/20090525/ap_on_...he_contenders_1

  23. உலக வாணிபத்துக்கு மிகவும் முக்கியமானதாக இந்துசமுத்திரம் விளங்குகின்ற நிலையில், கொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் அரசாங்கங்கள் இணங்கியிருப்பதாக டோக்கியோ பங்குப் பரிவர்த்தனையின் சந்தை நிலைவர ' நிக்கீ ' அட்டவணையின் மூலம் தெரியவந்திருக்கிறது. தெற்காசியாவிலும் அதைச் சுற்றியும் கடல் போக்குவரத்தை மேம்படுத்துவதும் கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் பரும அளவை அதிகரிப்பதுமே இந்த கூட்டுச் செயற்திட்டத்தின் இலக்குகளாகும். அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் தொடங்கப்படவிருக்கும் திட்டம் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் மூன்று நாடுகளும் விரைவில் கைச்சாத்திடவிருப்பதாக…

    • 22 replies
    • 2.2k views
  24. நெற்றிக்கண் வாரபத்திரிகையின் இவ்வாரத்திற்கான வெளியீட்டில் "கொல்லப்பட்டது 'மாவீரன்' பிரபாகரன் அல்ல… என்ற தலைப்பில் ஒரு ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் உள்ளதாவது : தி.மு.க. வினர் ஏற்கனவே வகித்து வந்த துறைகளை அப்படியே இந்த முறையும் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் போராடிய தி.மு.க. தலைவர் கலைஞர், பேச்சோடு பேச்சாக, "பிரபாகரன் போர்க்களத்தில் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டதாக கூறுவது நம்பும்படியாக இல்லையே. பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றால் அதை என்னிடம் உறுதிப்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமையல்லவா… பிரபாகரன் விடயத்தில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை…" என்று குறிப்பிட்டதாக தி.மு.க. நாடாளுமன்ற கட்சிவ ட்டாரம் கூறுகின்றது! தமிழக முதல்வர் கலைஞர் பிரத…

    • 22 replies
    • 3.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.