ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்! எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் செயற்பாட்டு அரசியலில் இருந்து தான் ஒதுங்கிக்கொள்ளவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அரசியலுக்கு வந்த தான், முடிந்தளவு தமிழ் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த சேவைகளை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த தேர்தலின் போது தான் அரசியலில் இருந்து ஓய்வுப்பெற எதிர்பார்த்த போதும், முன்னெடுத்திருந்த வேலைத்திட்டங்களால் தேர்தலில் போட்டியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது தனது வயது மற்றும் உடல்நிலைகளை கருத்திற்கொண்டு அடுத்த தேர்தலின் பின்னர் …
-
-
- 18 replies
- 1.6k views
-
-
வடக்கு மாகாணசபை ஆட்சி உத்தியோக பூர்வமாக பொற்றுப்பேற்ற பின்னர் இடித்தழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைத்து புனிதமாக்கும் செயப்பாடுகள் தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்று வடமாகாணசபைத் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணிக்கு யாழ்.ரில்கோ விருந்தினர் விடுத்தியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில். வடக்கு மாகணத்தில் இருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் இடித்து அழிக்கப்பட்டுவிட்டிது. அவற்றில் ஒரு சில துயிலும் இல்லங்…
-
- 18 replies
- 4.4k views
- 1 follower
-
-
யாழ்.மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சூழ தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகள் news யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சூழ சங்கிலியன், பண்டாரவன்னியன், எல்லாளன் ஆகிய தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகள் நிறுவப்படவுள்ளன. இரண்டாம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சிவகாமி சித்திர கோட்டம் சிற்பாலயத்திலேயே இச் சிற்பங்கள் வடிவமைக்கப்படுகின்றன. சிற்பங்களை உருவாக்கியுள்ள சிற்பக்கலைஞர் செல்லையா சிவப்பிரகாசத்திடம் இது குறித்து கேட்டபோது; ""மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சூழ சங்கிலியன், பண்டார வன்னியன், எல்லாளன் ஆகிய தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகள் வைப்பதால் வரலாறு பேணப்படுகின்றது. அத்தகைய ஒரு செயலுக்காக எனது சிற்பங்கள் பயன்படுத்தப்படுவது மிக்க மகிழ்ச்சி தருவதாக உள்ளது. குறித்த மூன்று …
-
- 18 replies
- 1.5k views
-
-
தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் நாடாளமன்ற ஊறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட சுமந்திரனின் கொடும்பாவி யாழ் பல்கலைக்காழகத்தில் தூங்கவிடப்பட்டுள்ளது. நேற்று மாலை தூங்கவிடப்பட்டுள்ளதாகவும் தமிழினதுரோகி சுமந்திரன் என எழுதிய சுலோக அட்டையும் களுத்தில் தூங்கவிடப்பட்டுள்ளது சுலோக அட்டையினில் போர் குற்ற விசாரணை எங்கே எனக்கேள்வியும் எழுப்பப்பட்டிருந்தது. படையினரதும் பொலிஸாரினதும் பூரண கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள யாழ்பல்கலைக்கழக வளவினுள் எவ்வாறு சுமந்திரனின் கொடும்பாவி எடுத்து வரப்பட்டிருந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.இலகுவினில் எவரும் களற்றி எடுத்து செல்லாதிருப்பதை உறுதிப்படுத்தும் கையிரினால் உயரமான மாடிக்கட்டடமொன்றினில் அது தொங்க விடப்பட்டிருந்தது. இதனிடை…
-
- 18 replies
- 1.7k views
-
-
சிங்கள மக்கள் ஒரு அடி வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி வைக்க தயார் February 6, 2016 09:19 am இலங்கையின் 68 வது சுதந்திரதினத்தில் தழிழரின் உரிமைக்காக தேசிய கீதம் தமிழில் இடம்பெற்றது மிகவும் வரவேற்கதக்கது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். தழிழ் மக்கள் சிங்கள மக்களுடன் சரிசமமாக சகோதரத்துவத்துடன் இருக்க இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்ற செய்தியினை நேற்று முன்தினம் அரசாங்கம் தந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த சந்தோசத்தினை எடுத்துக்காட்டும் முகமாக நான் யாழ் நாக விகாரகைக்கு வந்து வழிபாட்டில் ஈடுபட்டதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். யாழ் ஸ்ரீ நாக விகாரையில் நேற்றைய தினம் சமய வழிபாட்டில் ஈ…
-
- 18 replies
- 1.6k views
-
-
இறுதிச் சுற்றில் சிறிலங்கா நுழைந்தால் மகிந்த மேற்கிந்திய தீவு பயணம். மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் துடுப்பாட்ட போட்டிகளில் சிறிலங்கா அணி இறுதிச் சுற்றுக்கு தெரிவானால் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மேற்கிந்திய தீவுகளுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். பார்படோஸ்ன் ஹென்சிங்ரன் ஓவல் மைதானத்தில் இறுதிச் சுற்றுப் போட்டி நடைபெற உள்ளது. நான்கு நாள் பயணமாக இத்தாலி சென்றுள்ள மகிந்த எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நியூசிலாந்திற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் நடைபெறவுள்ள துடுப்பாட்டப் போட்டிகளின் முடிவுகளை பொறுத்து மேற்கிந்திய தீவுகளுக்கு பயணத்தை மேற்கொள்வார் இதனிடையே சிறிலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே ஏற்கனவே மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று…
-
- 18 replies
- 2.6k views
-
-
தேசியக் கொடி ஏற்றினார் விக்கி! வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றியதைத் தொடர்ந்து, சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் புதிதாக அமைக்கப்படவுள்ள ஆண் மாணவர் விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. கடந்த காலப் போர் நடை பெற்றவேளை பெற்றோரை இழந்த பொருளாதார ரீதியில் பாதிப்புற்ற வடக்கு - கிழக்கு - மலையக, தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியின் சர்வதேச பழைய மாணவர் ஒன்றியத்தினால் 80 மில்லியன் ரூபா செலவில் ஆண்கள் விடுதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று இட…
-
- 18 replies
- 1.4k views
-
-
“நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் ! நான் ! நான் !,“ என மக்களுக்குத் தமது மன உறுதியைப் பாட்டால் உணர்வுகளையும் இலட்சியங்களையும் மக்களின் மனதில் ஆழப் பதிய வைத்து நீங்காத இடம் பிடித்தவர் புரட்சித் தலைவர் எம். ஜீ. ஆர்.ஆவர். அவருடைய அரசியல் வாரிசாகத் தன்னைப் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் நிலை நிறுத்திச் சாதனை படைத்த பெண்மணியாகத் திகழ்பவர்தான் செல்வி ஜெயலலிதா. எம்.ஜீ.ஆரின் பாடல் வரிகளை வரிக்கு வரியாக சாதனை படைக்கும் சாமர்த்தியம் ஆய்வு:பத்மா படைத்தவராக செல்வி ஜெயலலிதா காணப்படுகிறார். நிறைந்த மனத் திடமும் மதி நுட்பமும் கொண்டு செயல்படும் திறமை படைத்தவர் செல்வி ஜெயலலிதா. அவர் எதையும் இலேசில் நினைத்து விடமாட்டார். ஆனால் நினைத்து விட்டாலோ எதனையும் நிறை வேற்றாது விடவும் மாட்டார்…
-
- 18 replies
- 2.4k views
-
-
ஈழத்தமிழர்களின் வரலாற்று துயரங்களில் ஒன்றான யாழ்ப்பாணத்தின் மாபெரும் இடப்பெயர்வு நடந்து இன்றுடன் 18 வருடங்கள் நிறைவு @ 30.10.1995 மழையுடன் கூடிய கொடிய இரவை நேரடியாக அனுபவித்தவன் சிறீலங்கா அரசுக்கு எவ்விதத்திலும் வால் பிடிக்க மாட்டான்.நன்றி பேஸ்புக் .
-
- 18 replies
- 4.7k views
-
-
கோட்டாபய தலைவர் கைகளால் செத்திருக்கலாம்!! சிங்கள நடிகர் அதிரடி!!
-
- 18 replies
- 1.1k views
-
-
ராமேஸ்வரம்: சர்ச்சைக்குரிய கச்சத்தீவில் நிரந்தர ராணுவம் மற்றும் கடற்படை முகாமை அமைக்க இலங்கை முயன்று வருவதாக அந்தப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்று, இலங்கை கடற்படையினரால் துரத்தப்பட்ட தமிழக மீனவர்கள் கூறியுள்ளனர். அப்படி ராணுவ முகாம் கச்சத்தீவில் அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோய் விடும் எனவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்தியாவால் இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது கச்சத்தீவு. இருப்பினும் இந்திய மீனவர்கள் இங்கு தங்களது மீன்பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளலாம், ஓய்வு எடுத்துச் செல்லலாம் என இதுதொடர்பான ஒப்பந்தத்தில் ஷரத்து உள்ளது. ஆனால் இதை இலங்கை அமல்படுத்தியதே இல்லை. கச்சத்தீவு பகுதிக்கு மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்களை துப…
-
- 18 replies
- 2.5k views
-
-
[Tuesday, 2011-10-11 20:41:32] பிரித்தானியாவின் சில பகுதிகளில் கடந்த சில தினங்களில் 3 தாலிக்கொடி அறுப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக சில சம்பவங்கள் பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பவுனின் விலை முன்னெப்போதும் இல்லாது உயர்வடைந்துள்ளது. இதனை சர்வதேச தொலைக்காட்சிகள் பலவும் நாளாந்தம் ஒளிபரப்பி வருகின்றது. பல தமிழ் பெண்கள் தமது தாலிக்கொடியை எந்நேரமும் அணிந்திருப்பது இல்லை. கோயில் அல்லது நல்ல காரியங்களுக்குச் செல்லும்போதே அதை அணிவது வழக்கம். ஆனால் சில பெண்கள் தாலிக்கொடியை எப்போதும் அணிவது வழக்கம். அவர்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்லும் போது கூட அதனை அணிந்தே செல்கிறார்…
-
- 18 replies
- 3.2k views
-
-
கூட்டமைப்புக்கு வந்த சோதனை? நிலாந்தன் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து அது அனுபவித்து வரும் ஏகபோகத்திற்கு இப்பொழுது சோதனைக் காலம் தொடங்கிவிட்டது போலத் தெரிகிறது. கடந்த ஆறு ஆண்டுகளிலும் படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் படிப்படியாக அதிகரித்து வந்த அதிருப்தியும் சலிப்பும் தற்பொழுது சமூகத்தின் ஏனைய மட்டங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளன. அண்மைய ஆண்டுகளில் இணையப் பரப்பில் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் கூட்டமைப்புக்கு எதிரான கேள்விகளும் விமர்சனங்களும் அதிகரித்து வந்தன. இப்பொழுது அந்த அதிருப்தியானது மெய்நிகர் யதார்த்த பரப்பையும் தாண்டி ஒரு பௌதீக யதார்த்தமாக பரவிவருகிறது. யாழ்ப்பாணத்தின் பத்திரிகைகள் சிலவற்றின் ஆசிரியர் தலையங்கங்களும் அதைப் பிரதிபலிக்கின்றன. இவ்வாறா…
-
- 18 replies
- 1.4k views
-
-
மணலாற்றில் பெருமெடுப்பிலான முன்னகர்வு: விடுதலைப் புலிகள் உக்கிரமான எதிர்த்தாக்குதல் 10 இராணுவம் பலி என சிங்கள இராணுவம் அறிவித்துள்ளது.. நன்றி: புதினம்
-
- 18 replies
- 6.4k views
-
-
Published By: NANTHINI 22 MAY, 2023 | 05:36 PM மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் 542ஆவது படைப் பிரிவினால் அப்பகுதியில் புதிதாக பௌத்த விகாரை அமைக்க இராணுவத்தினால் வேலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த பெளத்த விகாரை அமைக்கும் நடவடிக்கையினை வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னார், உயிலங்குளம் பிரதேசத்தில் புதிதாக இராணுவத்தினரால் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதாக மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து எம்.பி. இன்று திங்கட்கிழமை (22) மதியம் அப்பகுதிக்கு விஜயம் செய்தார். அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்ப…
-
- 18 replies
- 1k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால, யாழ் திறப்பனை பிரதேசத்தில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி, மக்களின் குடிசைகளுக்குள் சென்று உட்கார்ந்து நலம் விசாரித்ததுடன், அவர்கள் சமைத்து உண்ணும் உணவினையும் பார்வையிட்டமை அனைத்து மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிறுவர்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் ஜனாதிபதி இங்கு மிகவும் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/show-RUmtzCRUSWkp2F.html
-
- 18 replies
- 3k views
-
-
திருமா உண்ணாவிரதம்: பல இடங்களில் வன்முறை, பஸ்கள் எரிப்பு-உடைப்பு விடு தலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் தமிழகத்தி்ல் பல்வேறு மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தொடர் உண்ணாவிரம் இருந்து வருகிறார். சென்னை மறைமலை நகரில் உண்ணாவிரதம் இருந்து வரும் திருமாவளவனுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தை தொண்டர்கள் அங்கு கூடியுள்ளனர்.இதற்கிடையே மதுரை, கடலூர், சேலம், புதுச்சேரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. மதுரை புறநகர் பகுதியில் 3 அரசு பஸ்களுக்கு தீ …
-
- 18 replies
- 3.6k views
-
-
அரசாங்க உத்தியோகம்-ஓசியில் இருப்பதற்கு அவங்களுக்கு சம்பளம், இது காணாதெண்டு சம்பளம் கூட்டோனும் எண்டு போராட்டம் வேற..அந்த ரெயில்வே டிபார்ட்மெண்ட்ல வேலைசெய்யிறவங்கட சம்பளம் பாத்தனியே 2 லச்சம் தம்பி..... வைத்தியசாலையில் ஒரு நாள் நிறைகுடிவெறியில் ஒரு குடிமகன் வந்திருந்தார் வாயில் தூசண வார்த்தைகளைக்கொட்டிக்கொண்டுவந்தவர் தனது கோபத்தை அங்கே பணிபுரிந்துகொண்டிருக்கும் வைத்தியர்கள் மீதும் தாதிகள் மீதும் காட்டினார். டேய் நாங்கள் குடுக்கிற டக்ஸ் காசிலதானே சம்பளம் வாங்கிறியள் இப்ப இந்த காயம் மாறோனும் இல்லையெண்டால் டீம் இறங்கும்...... சரி விடயத்திற்கு வருவோம் இலங்கையில் வரியை 15% இல் இருந்து 18% இற்கு அடுத்தவருடத்தில் இருந்து அதிகரிக்கப்போகின்ற…
-
- 18 replies
- 1.8k views
- 1 follower
-
-
தமிழின விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தை அகற்ற வலியுறுத்தி தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 18 replies
- 2.4k views
-
-
ஊடகவியலாளர் தராகி சிவராமின் (Taraki Sivaram) கொலைக்கும் புளொட்டுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என புளொட்டின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் (Dharmalingam Sitharthan) தெரிவித்துள்ளார். சிவராமின் கொலை வழக்கு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிவராமினுடைய கொலையானது 20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. அது சம்பந்தமாக சிலர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று அந்த வழக்கிலிருந்து அவர்கள் முழுமையாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதனுடைய அர்த்தம் இனிமேல் அந்த வழக்கை…
-
-
- 18 replies
- 1.1k views
- 1 follower
-
-
புலிகள் சகோதர படுகொலை புரிந்தனர் – ஆவணப்படத்தை வெளியிட்டு வைத்தார் விக்கி… February 4, 2019 சகோதர படுகொலைகளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர் என ஈ.பி.ஆர்.எல்.எப். உருவாக்கியுள்ள “இயக்க வரலாறு” எனும் ஆவண படத்தினை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டு வைத்துள்ளார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ .பி.ஆர்.எல்.எப்) யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய மாநாடு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போதே குறித்த ஆவண படத்தினை முன்னாள் முதலமைச்சர் வெளியிட்டு வைத்தார். குறித்த ஆவணப்படத்தில், விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சகோதர படுகொலைகள் பற்றி ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்…
-
- 18 replies
- 2.5k views
-
-
ஜனாதிபதி ஜேர்மனியை சென்றடைந்தார் - ஜேர்மனி ஜனாதிபதியை பிற்பகல் சந்திக்கவுள்ளார் 11 JUN, 2025 | 03:06 PM ஜேர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (11) முற்பகல் பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு, ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) தலைமையில் இன்று பிற்பகல் பெர்லினில் உள்ள பெல்வீவ் மாளிகையில் (Bellevue Palace) நடைபெறும். இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியருக்கும் (Frank-Walter Steinmeier) இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு…
-
-
- 18 replies
- 975 views
- 1 follower
-
-
விக்கியின் கட்சியில் திருமலை முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் ரூபன் தேர்தல் களத்தில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராகவும் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவன பொறுப்பாளராகவும் பின்னர் விடுதலைப்புலிகளின் தலைமை செயலக பொறுப்பாளராகவும் இருந்து சிறப்பாக பணியாற்றிய ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன்) களம் இறங்குகிறார். விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி ஊடாக இவருக்கு ஆசனம் வழங்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தம்வரை விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து போராடி பின்னர் பின்னர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார். 1985 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாக இணைத்துக்கொண்ட ரூபன் 24 வருடங்கள் போ…
-
- 18 replies
- 1.8k views
-
-
அதிவேக நெடுஞ்சாலை நீங்கள் வரவா? நாங்கள் வரவா? யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடை யில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான உடன்படிக்கை ஒன்றில் இலங்கையும் சீனாவும் கைச்சாத்திட்டுள்ளன. யாழ்ப்பாணத்தையும் கொழும்பையும் இணைக்கும் ஏ9 பாதைக்கு மேலாக இந்த அதிவேகப் பாதை அமைக்கப்படவுள்ளது. கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் புகையிரத சேவையை நடத்தும் பொருட்டு புகையிரதப் பாதை அமைக்கும் நடவடிக்கைகளும் தீவிரமாகி இருக்கின்றன. அதேநேரம் பலாலிக்கும் இரத்மலானைக் கும் இடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விமான சேவையும் இடம்பெறுகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணத்துக்கும் கொழும் புக்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை அதிரடியாகத் தேவைதானா? என்ற கேள்வி எழவே செய்யும். இந்திய வீடமைப்புத் திட்ட…
-
- 18 replies
- 1.6k views
-
-
உதயன் சுடரொளி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியரும் பிரபல ஊடகவியலாளருமான வித்தியாதரன், கொழும்பின் புறகர்ப்பகுதியான கல்கிசையில் வைத்து இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளார். சற்று முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
-
- 18 replies
- 1.9k views
-