ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
டெல்லி: 23 ஆண்டு காலமாக நீடித்து வரும் இனப் போரால், இலங்கைத் தமிழ் சமுதாயம் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளது. அதை மீண்டும் ஜனநாயகப் பாதைக்குக் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும் என்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எஸ்.மேனன் கூறியுள்ளார். அகில இந்திய வானொலிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கையில் 23 ஆண்டுகளாக நீடித்து வரும் போரால், தமிழச் சமுதாயம் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. அதை மீட்டு, மீண்டும் அங்கு இயல்பு நிலை திரும்பவும், ஜனநாயக நடைமுறைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வேண்டும். சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனை நான் சந்தித்தபோது இதுகுறித்துதான் முக்கியமாக விவாதித்தோம். இலங்கை நிலவரம் மற்…
-
- 17 replies
- 2.3k views
- 1 follower
-
-
இந்திய இராணுவத்தின் மீது போரைப் பிரகடனம் செய்யாமல் இருந்திருந்தால், தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழத்தை அடைந்திருக்க முடியும். -முன்னாள் யாழ். இராணுவ தளபதி [saturday, 2011-04-02 04:59:43] பிரிகேடியர் எச்.எவ்.ரூபசிங்க சிறிலங்கா இராணுவத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றியவர். ஆளணி நிர்வாகப் பணிப்பாளர், இராணுவ செயலர், சட்டப்பிரிவு பணிப்பாளர் உள்ளிட்ட சிறிலங்கா இராணுவத் தலைமையகப் பொறுப்புகள் பலவற்றை வகித்தவர். யாழ்ப்பாணம் மற்றும மன்னார் மாவட்டங்களுக்கான இணைப்பதிகாரியாகவும், கூட்டுப்படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியின் ஆலோசகராகவும், இந்திய அமைதிகாக்கும் படைக்கான இணைப்பதிகாரியாகவும் இருந்தவர். சிறிலங்கா இராணுவத்தின் ஆட்டிலறிப் படைப்பிரிவைச் சேர்ந்த அவர் கொழும்பு ஆங்கில ந…
-
- 17 replies
- 2.8k views
-
-
மாடு வெட்டுவதை நாட்டில் தடை செய்யவேண்டும் என்ற தமது கோரிக்கைக்கு இன்று 18 ஆம் திகதிக்குள் பதில் கிடைக்காவிட்டால் தாம் எடுக்கப் போகும் நடவடிக்கைக்கு நாட்டின் ஜனாதிபதியும் அரசாங்கமும் தான் முழு பொறுப்பு என்று கடும்போக்கு சிங்கள ராவய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது . மாடு வெட்டும் பிரச்சினைக்கு இன்று தீர்வு வழங்கப்பட வேண்டுமென சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தெரிவித்துள்ளார். மாடு வெட்டுக்கு எதிராக பௌத்த பிக்கு தீக்குளித்தால் அதன் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.மாடு வெட்டு சர்ச்சைக்கு தீர்வு காண எட்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உணர்வுகளை புரிந்து கொள்ளும் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி. கொழும்பு நோக்கிய…
-
- 17 replies
- 794 views
-
-
இலங்கையில் கொரோனாவை எதிர்த்து போராட களமிறங்கும் இந்திய இராணுவம் Report us Murali 51 minutes ago இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு உதவும் வகையில் இந்திய இராணுவம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த நாடுகளுக்கு தனி அணிகளை அனுப்பி உதவுவதற்கு இந்திய இராணுவம் தயாராகி வருவதாக அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கையாள்வதற்கான திறன்களை அதிகரிக்க அந்த நாடுகளுக்கு உதவுவதற்கு இந்திய இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகங்களை அமைக்கவும், உள்ளூர் மருத்துவ நிபுண…
-
- 17 replies
- 1.3k views
-
-
ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு சாதகமான அம்சங்களைக் கொண்டது: எம்.ஏ.சுமந்திரன் இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்னெடுத்த விசாரணையின் அறிக்கை வரும் மார்ச் மாதம் வெளியிடப்படாமல், ஆறு மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளமை சாதகமான அம்சங்களைக் கொண்டிருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் அறிக்கை பிற்போடப்பட்டதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்கள் இனப்படுகொலை தொடர்பில் கண்ணால் கண்ட சாட்சிகளை முழுமையாக முன்வைக்க முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்…
-
- 17 replies
- 1.2k views
-
-
யாழ். மாவட்டத்தில் அண்மைய நாட்களாக வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கணவன்-மனைவி மற்றும் திருட்டு நகைகளை வாங்கிய கடை உரிமையாளர் ஆகியோர் இன்று யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் மாவட்டத்தில் அண்மைய நாட்களாக வயோதிபர்கள் வாழும் வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றன. குறிப்பாக சாவகச்சேரி, கொடிகாமம், சுன்னாகம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உள்ள வயோதிபர்களின் வாழும் வீடுகளில் அண்மைய நாட்களாக உடைக்கப்பட்டு திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வந்தன. இந்த சம்பவங்கள் தொடர்பில் குறித்த பிரதேசத்தின் பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படைய…
-
- 17 replies
- 2.2k views
-
-
மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த குட்டி மணி என்கிற செல்வராசா யோகச்சந்திரன், நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், அவரை நாடாளுமன்றத்துக்கு அப்போதிருந்த சபாநாயகர் அனுமதிக்கவில்லை எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ, தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அரசமைப்பை மீறியுள்ளாரெனத் தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றி அவர் கூறியதாவது, “டெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் குட்டி மணி என்கிற செல்வராசா யோகச்சந்திரன், 1982ஆம் ஆண்டு நாடாளுமுன்றத்துக்குத் தெரிவ…
-
- 17 replies
- 1.2k views
-
-
இலங்கை அரசு சமாதான உடன்படிக்கையை இரத்துச்செய்ய முடிவு செய்திருப்பதாக சண் செய்திகள் (இப்போது இலவசமா போகிறது ;) ) தெரிவிக்கிறது. இச்செய்தியை இணயத்தளங்களில் காணமுடியவில்லை.
-
- 17 replies
- 4.9k views
-
-
கண்டியில் நடந்த கூட்டம் ஒன்றில் பொதுபல சேனா அமைப்பின் பௌத்த பிக்கு ஒருவரே, ''பெஷன் பக்'' என்னும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வணிக நிறுவனத்தின் மீதான தாக்குதலுக்கு மறைமுகமாகத் தூண்டியதாக குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை நீதி அமைச்சரான ரவூப் ஹக்கீம் அவர்கள், இது குறித்து ஆராய அவசர அமைச்சரவை கூட்டம் ஒன்றை நடத்துமாறு ஜனாதிபதியை கேட்டிருக்கிறார். ஒரு சிங்கள பெண்ணை அந்த நிறுவனத்தில் பலவந்தப்படுத்தியதாக பொய்க்குற்றஞ்சாட்டியே அப்படி அவர் தூண்டியதாக ரவூப் ஹக்கிம் கூறியுள்ளார். இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சிறுபான்மை மக்கள் மீது ஒரு உதிரிக்கும்பல் இலக்கு வைத்து தாக்குவதற்கு அரசாங்கமே இடமளித்ததாக அமைந்துவிடும் என்றும் அவர் கூறுகிறார். கோட்டாபாய மீது விமர்சனம் …
-
- 17 replies
- 1.4k views
-
-
யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீனுக்கு தடை July 29, 2019 யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீன் பாவனைகளை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக பல்கலை கல்வி சமூகம் தெரிவித்துள்ளது. அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை பேண முடியும். அதன் மூலம் உள்ளூர் உற்பத்திகளையும் ஊக்குவிக்க முடியும். அதன் மூலம் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்த முடியும். இந்த செயற்பாட்டை மாணவர்கள் மத்தியில் இருந்து ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கு மாணவர்கள் பூரண ஆதரவை தருவதற்கு முன் வந்துள்ளனர்.அந்த வகையில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் சிற்றுண்டி சாலையில் பொலித்தீன் பாவனையை இல்லாமல் செய்து அதற்கு மாற்றீடாக வாழையிலை , தாமரையிலை ஆக்கியவற்றை பயன…
-
- 17 replies
- 2.6k views
- 1 follower
-
-
தமிழ் தாய்க்கு... பிறந்தவர்கள், அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் – சாணக்கியன் சிங்கள குடியேற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்துமானால் தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுங்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபையின் 33 ஆவது மாதாந்த அமர்வில் புதிய ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் வெற்றி பெற்ற நிலையில் அதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ தமிழ் மக்கள் வாழும் அனைத்து பிரதேசங்களிலும் காணி அபகரிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கா…
-
- 17 replies
- 1.9k views
-
-
-எம்.எஸ். முஹம்மத்- இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு ஆரம்பித்த வருடம் மக்காவில் இருந்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வெளியேறிய அதாவது ஹிஜ்ரத் செய்த ஆண்டிலிருந்து தான் ஆரம்பிக்கின்றது. யாழ் முஸ்லிம்களும் வடமாகாண முஸ்லிம்களும் 1990 இல் புலிகள் என்ற தமிழ் ஆயுதக் குழுவால் வெளியேற்றப் பட்டது (கலிமாச் சொன்ன) முஸ்லிம்களாக அவர்கள் இருந்த காரணத்தால் தான். எனவே இந்த வெளியேற்றத்தை (இனச்சுத்திகரிப்பை) நினைவு கூறுவது ஒவ்வொரு வடபுல முஸ்லிமினதும் கடமையாகும். அவர்கள் உலகில் எப்பாகத்தில் வாழ்ந்தாலும் தமக்கோ அல்லது தமது தாய் தந்தையருக்கோ இழைக்கப் பட்ட அநீதியை உலகரியச் செய்வது அவர்கள் ஒவ்வொருவரினதும் தார்மீகக் கடமையாகும். வெளியேற்றப் பட்டதற்காக அவர்கள் ஆயுதமேந்திப் போராடியிருக்க வேண்டும். அவ்வ…
-
- 17 replies
- 1.7k views
-
-
நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை விற்கப்பட்டு விட்டது என விஜயகலா மகேஸ்வரன் கவலை. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை , சட்டத்துறை மற்றும் ஊடகத்துறை ஆகியன விற்கப்பட்டு உள்ளது. என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , நீதித்துறை , ஊடக துறை , சட்டத்துறையும் விற்கப்படுகின்றது. இந்த ஜனநாயக நாட்டில் நல்லாட்சி நிலவும் காலத்தில் அவை விற்கப்பட்டு உள்ளது. ஒரு சில பொறுப்பு உள்ள அதிகாரிகளால் தான் அவை விற்கப்பட்டன. அதனால…
-
- 17 replies
- 1.2k views
-
-
Clash erupts in the northern waters off KKS [TamilNet, June 30, 2006 17:39 GMT] A sea fight was reported in the seas east of Kankesanthuari Sri Lanka Navy (SLN) base around 10:15 p.m. Friday. The clash, which erupted between Valalai and Thondamanaru, went on for 30 minutes, re-started again after a short period of silence, residents along the coastal areas in Vadamaradchi said. At least two boats were seen burning. Sri Lanka Army soldiers were firing towards the sea from their coastal sentry points ranging from Mayiliyathanai in Thondamanaru till Valvettithurai, civilian sources said. SLA sources in Jaffna confirmed the reports of a clash in the sea. …
-
- 17 replies
- 3.7k views
-
-
சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலயத்தை ஆக்கிரமிக்க பிக்குகள் முயற்சி! March 16, 2022 சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி வருகின்ற நிலையில், இதைத் தடுத்து நிறுத்த அரசியல்வாதிகளும், மக்களும் முன் வரவேண்டும் என பிரதேச மக்கள் கோரியுள்ளனர். வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயமான பறாளாய் விநாயகர் ஆலயமாகும். இந்த ஆலயத்திற்கு அருகே முருகன் ஆலயமும் உண்டு. குறித்த ஆலய வளாகத்தில் பல ஆண்டுகள் பழமையான அரச மரம் காணப்படுகின்றது. https://globaltamilnews.net/2022/174206
-
- 17 replies
- 948 views
- 1 follower
-
-
யாரை நம்புவது? எம்மைத்தான் - சூரியனுக்காக புனிதன் (அவுஸ்திரேலியா) "..செய்திகளுக்கு மட்டும்தான் யாரை நம்புவது என்ற வினா எழுப்பப் படவில்லை. பொருளாதார மேம்பாட்டுக்கு யாரையும் நம்ப இயலாது - எம்மைத் தான் நாம் நம்பவேண்டும் என்ற விடை உரத்துக் கேட்கிறது.." செய்திகள் இணையத் தளங்களில் தினசரி வருகின்றன. பத்திரிகைச் செய்திகளையும், கட்டுரைகளையும், விமர்சனங்களையும், நேர்காணல்களையும் தாங்கியபடி அவை வீட்டில் உள்ள கணணி மூலம் வருகின்றன.எந்தெந்த இணையத் தளங்களைப் பார்க்கலாம்? யார் யாரின் கட்டுரைகளையும், ஆய்வுகளையும் வாசிக்கலாம்? எந்த நேர்காணல்களையும், ஒலிமூலம் வருகின்ற செய்திகளையும் கேட்கலாம்? என்று ஒருவாறு தெரிவு செய்து முடித்தாலும், தேர்ந்தவையை மட்டும் உள்வாங்கினாலும்,…
-
- 17 replies
- 4.2k views
-
-
ஆயிரக்கணக்கான தமிழர்களும் போராளிகளும் சுற்றிவளைக்கப்பட்டிருந்ததும் இறுதியுமான சிறிய நிலப்பரப்பைக் கைப்பற்றுமுன்னர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் கட்டளைக்கு அமைய 58 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சவீந்திர சில்வா தனக்குக் கீழிருந்த படையினரை ஒன்றுதிரட்டி, இந்தக் கட்டளையைப் பணித்ததாகவும், அதன்போது கைதிகளாக எவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டாமென்று கட்டளையிட்டதாகவும் இந்தப் படைப்பிரிவில் பணியாற்றிய ராணுவ அதிகாரியொருவர் சனல் 4 தொலைக்காட்சிக்குச் சாட்சியமளித்திருக்கிறார். சவீந்திரசில்வாவின் கீழ் அப்போது பணியாற்றிய இந்த அதிகாரியின் சாட்சியத்துக்கமைய கைதிகள் எல்லோரையும் கொல்லும்படியான உத்தரவு கோத்தபாயவினால் அனைத்துப் படைப்பிரிவுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. …
-
- 17 replies
- 2.4k views
-
-
ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. நள்ளிரவு கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் பயனித்த வாகனத்தில் 4 பேர் பயனித்துள்ளதாகவும் அவர்களில் அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் பலியாகியுள்ளதாக ராகம வைத்தியசலையில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. https://www.madawalaenews.com/2024/01/blog-post_48.html
-
- 17 replies
- 1.3k views
- 1 follower
-
-
உலகெங்கும் பரந்து வாழ்ந்து பரம்பரை பரம்பரையாக பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க என்றே இஞ்சினியர்களை.. டாக்டர்களை உருவாக்கும்.. தமிழர்களே.. ஈழத்தில் கொலை வெறியாடும்.. மேற்குலக தொழில்நுட்பங்களுடன் இயங்கும் போர் விமானங்களை தாக்கி அழித்து பொதுமக்களைப் பேரழிவில் இருந்து பாதுகாக்கக் கூடிய ஆயுதத்தை உற்பத்தி செய்ய வேண்டிய தேவை இன்று தமிழர்களுக்கு எழுந்துள்ளது. இதற்காக உங்கள் பிள்ளைகளின் மூளையைப் பாவிக்க ஊக்குவிப்பீர்களா..??! உங்கள் பிள்ளைகளின் உண்மையான கல்வித் திறமையை தேவையான களத்தில் பாவிக்கும் வீரத்தை அவர்களிடம் காட்டக் கேட்பீர்களா..??! ஊக்குவிப்பீர்களா..??! இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜேர்மனிய படைக்கலங்களால் ரஷ்சியப் படைகளுக்கு களத்தில் ஏற்பட்ட பின்னடைவை அடுத்து..…
-
- 17 replies
- 5k views
-
-
இது குளோபல் தமிழ் நியூசில வந்த படம். இதப்பாக்கைக கல்யாணவீட்டி குறுப்படம் எடுத்தமாதிரியல்லோ கிடக்குது. இது ஆற்ற கல்யாணமோ தெரியல்ல. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கோ http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/55355/language/ta-IN/article.aspx#comments
-
- 17 replies
- 2.3k views
-
-
தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட ஜெனிவாக் கூட்டமே ஜனாதிபதிக்கு முக்கியம்! விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு 14 August 2022, 9:58 am தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட நடைபெறவுள்ள ஜெனிவாக் கூட்டமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முக்கியமானது என்பதை நாங்கள் அவரது அழைப்பில் இருந்து அறிந்து கொண்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் அழை…
-
- 17 replies
- 1.3k views
-
-
இலண்டனில் இருந்து விடுமுறையில் கொழும்பு சென்ற ஈழத்தமிழர் ஒருவர் கட்டுநாயக்கா பன்னாட்டு விமான நிலையத்தில் வைத்து சிறீலங்கா காவல்துறைப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். வடமேற்கு இலண்டன் வெம்பிளிப் பகுதியைச் சேர்ந்த இவர், அண்மையில் பிரித்தானியாவில் நிரந்தர வதிவிட உரிமை பெற்றுக் கொழும்பு சென்றிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது. இதனிடையே, மேற்குலக தேசங்களில் இருந்து விடுமுறையில் கொழும்புக்கு வருகை தரும் தமிழர்களை, கட்டுநாயக்கா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கடும் கண்காணிப்பிற்கும், விசாரணைக்கும் உட்படுத்துவதற்கான கட்டளையை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிறீலங்கா பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபாய ராஜபக்ச பிறப்பித்திருப்பதாக தகவல…
-
- 17 replies
- 2.3k views
-
-
Published By: VISHNU 02 AUG, 2023 | 04:12 PM யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், செவ்வாய்க்கிழமை (01) போயா தினத்தை முன்னிட்டு பௌத்த கொடிகள் கட்டி, புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. பௌத்த கொடிகள் பல்கலையினுள் கட்டிக்கொண்டிருந்தபோது அதனை தடுப்பதற்கு கலைப்பீட 3ஆம் ஆண்டு தமிழ் மாணவர்கள் அங்கு சென்றவேளை, அங்கு வந்த ஒழுக்காற்று விசாரணை அதிகாரி மாணவர்களை அங்கு செல்ல வேண்டாம் என தடுத்துள்ளார். அதனையும் மீறிச் சென்ற மாணவர்கள் கொடிகள் கட்டுவதை தடுத்தனர். அதனைத் தொடர்ந்து விஞ்ஞான பீடத்தின் பின்புறத்தினூடாக புத்தர் சிலை எடுத்து வரப்பட்டது. இதன்போது ஒரு கறுப்பு நிற மர்ம வாகனமும் பல்கலையினுள் நுழைந்தது. …
-
- 17 replies
- 1.3k views
- 1 follower
-
-
"மத்திய அமைச்சரவையில் திமுக பங்கு பெறாது!" என்று தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அறிவித்துள்ளார்! இது இந்தியா முழுதும் பெரிய அதிர்ச்சி அலைகளைக் கிளப்பி உள்ளது! "ஈழத்தில் போர்முனையில் இன்னும் சிக்கிக் கொண்டுள்ள ஐம்பதாயிரம் தமிழர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட பின்னரே அமைச்சரவையில் சேருவது பற்றி முடிவு செய்யப்படும்" என்று டாக்டர் கலைஞர் அறிவித்துள்ளார்! "இதனால் மத்திய அரசுக்கு திமுகவின் ஆதரவு இல்லை என்று பொருளாகி விடாது! அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளோம்" என்று இன்று கூடிய தி.மு. கழக செயற்குழுவில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேறி உள்ளது! இது பற்றி திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கூறுகையில்: "தமிழக முதல்வர் டாக்டர்…
-
- 17 replies
- 4k views
-
-
தனது தாயின் சங்கிலியை அடைவு வைத்து தனது நண்பர்களுக்கு பிரபல விடுதியில் மது விருந்து கொடுத்துள்ளான் யாழ் நகர்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை மாணவன். 2016ல் க.பொ.த. உயர்தரப்பரீட்சை எடுக்கும் 17 வயது மாணவனே நேற்று இந்தத் திருவிளையாடல் புரிந்துள்ளார். தனது அயல் வீட்டுக்கு அருகில் இருக்கும் மாணவி ஒருவரை இவர் காதலிப்பதாகவும் இவரது காதலை மாணவி ஏற்றுக் கொண்டதையடுத்தே நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்துள்ளார் மேற்படி மாணவர். இம் மாணவனின் தந்தை ஒரு கிராம சேவகராகவும் தாயும் அரச அலுவலராகவும் இருப்பதாகத் தெரியவருகின்றது. நேற்று இரவு 8 மணியளவில் கொக்குவில் பகுதியில் உள்ள இம் மாணவனது வீட்டுக்கு ஆட்டோ ஒன்றில் நிறை வெறியில் வந்து இறங்கிய இம் மாணவனின் நண்பர்கள் ஆட்டோவினுள் மது போதையில…
-
- 17 replies
- 1k views
-