ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143529 topics in this forum
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மக்களோடு வாழ்ந்து கொண்டிருப்பதாக பி பி சி தமிழோசைக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க http://www.tamilwin.com/view.php?2aIWnJe0d...d436QV3b02ZLu3e
-
- 11 replies
- 1.8k views
-
-
சீமானுக்கு கவிஞர் தாமரையின் பகிரங்கக் கடிதம்! - ஒரு தமிழனின் மறுமொழி அன்புள்ள தாமரை அவர்களே, தாங்கள் அண்ணன் சீமானுக்கு எழுதியிருக்கும் மடலை முழுமையாக படிக்க நேர்ந்தது. அதில் முன்வைக்கப்பட்டிருக்கும் காங்கிரஸை அழிக்க வேண்டும் என்ற தங்களுடைய தீர்க்கமான பார்வை ஒரு வரலாற்றுப்பார்வை. தமிழர்கள் போராடும் போதெல்லாம் வட இந்திய துணை ராணுவப்படைகளை களமிறக்கி சுட்டுப்பொசுக்கியே கறை படிந்த கைகளையுடையது கட்சி காங்கிரஸ் கட்சி. இந்தக் கட்சி இன்னொருமுறை தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டில் ஏறினால் இருக்கும் கொஞ்ச நஞ்ச போராட்ட சக்திகளையும் அடக்குவதற்கு ஒரு நிகழ்சிநிரலை அரங்கேற்றுவார்கள் என்பது திண்ணம். இந்த இன எதிரி காங்கிரஸ் படை இன்று தமிழ்நாட்டில் அரசியலில் காணப்படும் ஒரு…
-
- 11 replies
- 1.9k views
-
-
நடந்து முடிந்த 2020 ஆம் ஆண்டு பொது தேர்தலில் 09 ஆசனங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்று வெற்றி ஈட்டியதை தொடர்ந்து இன்று திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் இரா.சம்பந்தன் தலைமையில் விசேட பூசைகள் இடம் பெற்றது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் மற்றும் அதன் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஊடகங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில், இம்முறை இடம் பெற்ற தேர்தல் ஒரு ஜனநாயக தேர்தலாக நான் கருதவில்லை. மக்களுக்கு பணம் வழங்கி நன்கொடை கொடுத்து மதுபானம் வழங்கி ஆளும் கட்சியினர் ஆசனங்களை பெற்று கொண்டுள்ளனர். சிறிய சிறிய தமிழ் கட்சிகள் போட்டியிட்டு தமிழ் வாக்குகளை பிரித்து உள்ளனர் இதனால…
-
- 11 replies
- 1.5k views
-
-
பொன்சேகாவை மீட்க லியன் பொக்ஸ் இலங்கை விஜயம் இலண்டன் நிருபர் வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2010 Liam fox பிரித்தானிய பாதுகாப்பு நிழல் அமைச்சரும் மஹிந்தவின் நண்பருமான லியன் பொக்ஸ் சனிக்கிழமை இலங்கை செல்லவிருக்கின்றார். இவரது பயணத்தின் முக்கிய நோக்கம் மஹிந்த மற்றும் சரத்பொன்சேகா ஆகியோருக்கு இடையே சமரசம் பேசி பொன்சேகாவை ஒருவாறு மீட்பதே ஆகும் என கூறப்படுகின்றது. லியன் பொக்ஸ் அவர்களை இலங்கை மீதான மேற்கத்தைய நாடுகளின் இறுக்கத்தை தளர்த்த உதவும் படியும், அபிவிருத்திக்கு உதவும் படியும் கேட்பதற்காக மஹிந்த அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள லியன்பொக்ஸ் தான் வருவதென்றால் சரத் பொன்சேகா விடயத்தில் தளர்வு போக்கினை காட்டவேண்டும் என கூறியுள்ளார். இதன் அடிப்படையிலேயே வர…
-
- 11 replies
- 1.8k views
-
-
(ஆர்.யசி) பட்டிக்கலோ கம்பஸ் (பிரைவட்) லிமிடட் நிறுவனம் தொடர்பில் கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு தயாரித்திருந்த அறிக்கையை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கும், மீண்டும் ஒருமுறை அமைச்சரவைக்கும் அனுப்பிவைக்க துறைசார் மேற்பார்வைக்குழு தீர்மானித்துள்ளது. கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு இன்று பாராளுமன்ற குழு அறையில் கூடி இந்த விடயம் குறித்து ஆராய்ந்துள்ளது. அதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பட்டிக்கலோ கம்பஸ் (பிரைவட்) லிமிடட் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக்குழு 2019ஆம் ஆண்டு ஜுன் மாதம் பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தது. இந்த அறிக்கை அப்போதைய அரசாங்க…
-
- 11 replies
- 1.6k views
-
-
யாழ் குடாவில் 2000 இளைஞர்களைக் கொலை செய்யப் படையினர் திட்டம் - இராணுவ உளவாளி யாழ் குடாநாட்டில் மேலும் இளைஞர்களில் ஒரு பகுதியினர் கொல்லப்படலாம் என இராணுவ உளவாளிகளின் மூலம் அறியக் கூடியதாக இருக்கின்றது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இராணுவத்துடன் வெள்ளை வானில் திரிந்து காட்டிக் கொடுக்கும் ஒருவர் இந்த திடுக்கிடும் தகவலைத் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட குரோதங்களுக்காக பலரை இராணுவத்தினரின் வெள்ளை வானில் சென்று தாக்கியும், காட்டிக் கொடுத்தும், கடத்தியும், கொலைகள் செய்தும் வந்த குறிப்பிட்ட நபர் தற்போது தான் பல பிழைகளை விட்டு திருந்தியுள்ளதாக தெரிவித்து குறிப்பி;டட்டவர்களிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டியுள்ளார். இதன்போது தான் எதிர்காலத்தில் இத்தகைய செயல்பா…
-
- 11 replies
- 2.9k views
-
-
இலங்கையில் நாளை துக்க தினம்! இலங்கையில் நாளை (செவ்வாய்கிழமை)யை துக்கத் தினமாக இலங்கை அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது இதேவேளை ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரை நினைவு கூறும் வகையில் துக்கத் தினத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1383227
-
-
- 11 replies
- 932 views
-
-
நயினாதீவில்... தேசிய வெசாக் நிகழ்வுகள், திட்டமிட்டவாறு நடைபெறும்! தேசிய வெசாக் நிகழ்வுகள் திட்டமிட்டவாறு நயினாதீவு நாக விகாரையில் இடம்பெறும் என யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக, யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். அதன் போது ஊடகவியலாளர் , நாக விகாரையில் தேசிய வெசாக் நிகழ்வுகள் நடைபெறுமா ? என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தேசிய வெசாக் நிகழ்வு என்பது தேசிய நிகழ்வு. அதனை நிறுத்துவது தொடர்பில் எமக்கு எந்த அறிவுறுத்தலும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. அதனால் நிகழ்வு …
-
- 11 replies
- 954 views
-
-
தமிழரசுக் கட்சி கோத்தாவையே ஆதரித்திருக்க வேண்டும் – யாழில் நாமல் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கான எமது செயற்பாடுகள் மிகவும் சுமுகமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள், யாழ் மக்களுக்காகவோ வடக்கு- கிழக்கு வாழ் மக்களுக்காகவோ, இதுவரை எந்தவொரு அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்கவில்லை. அவர்கள் தங்களின் சுயலாபத்திற்காகவே இதுவரை செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனை வடக்கு மக்கள் நன்றாக உணர்ந்துள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பங்காளிக் கட்சியாகும். கடந்த காலங்களில் இருந்த கட்சியல்ல அது.அந்தக் கட்சியானது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்கு உரி…
-
- 11 replies
- 943 views
-
-
[size=4]விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசுக்கு எல்லா வகையிலும் உதவிகளைச் செய்திருந்தாலும் சமீபகாலமாக இந்திய அரசையே அலட்சியப்படுத்துகிறது இலங்கை அரசு. இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்யவும், கொடுத்த வாக்குறுதிகளைக் காலில் போட்டு மிதிக்கவும் தயாராகிவருகிறது. அத்துடன் சீனாவுடன் கொஞ்சிக் குலாவத் தொடங்கிவிட்டது.[/size] [size=4]பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இந்திய அரசு, இலங்கையின் போக்கில் இத்தனை மாறுதல்கள் ஏன் என்று நேரிலேயே விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனை இதற்காகவே இம் மாதம் 29-ம் திகதி (வெள்ளிக்கிழமை) கொழும்புக்கு அனுப்பிவைக்கிறது. அவர் சனிக்கிழமையும் அங்கு தங்கி இலங்கைத் தலைவர…
-
- 11 replies
- 1.6k views
-
-
குருநாகல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில்... பொதுமகனை தாக்கிய, இராணுவ அதிகாரி – விசாரணைகள் ஆரம்பம்! குருநாகல் யக்கஹபிட்டியவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் பொதுமகனை தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியதையடுத்து, சம்பவம் தொடர்பாக இலங்கை இராணுவத்தினரால் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இராணுவ அதிகாரி ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரை எட்டி உதைக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதுடன், பொதுமகனை தாக்கிய அதிகாரி இலங்கை இராணுவத்தின் லெப்.கேணல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக இராணுவம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார் என ஆங…
-
- 11 replies
- 601 views
-
-
அரசியல் தீர்வை இலங்கை அரசாங்கம் ஆர்வத்துடன் தலைமையேற்று முன்னெடுக்க வேண்டும் : இந்தியா இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்துள்ளது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிப்பதற்கான காரணங்களை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியப் பிரதிநிதி விளக்கியிருந்தார்:- இலங்கையின் படிப்பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை இந்தியா வரவேற்றிருந்தது. இலங்கையில் வாழும் அனைத்து இன மற்றும் மதக்குழுக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையிலான அரசியல் தீர்வு மூலமான நல்லிணக்கத்தை அந்நாட்டில் கொண்டுவருவதற்கு இந்த பரிந்துரைகள் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திதருவதாய் இந்தியா நம்புவதாகத் தெ…
-
- 11 replies
- 1.4k views
-
-
வடக்கில் நடைபெறும் யுத்தத்தில் வெற்றி பெற முடியாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் கூறியுள்ளார். நாட்டின் சேனாதிபதியான ஜனாதிபதி ராஜபக்ஸ அவர்கள் இப்படி கூறி , அரசுடன் இணைந்து கொள்ளுமாறு இரு முறை தொலைபேசி வழி தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தது மேல் மட்டத்தில் உள்ள ஒரு ஐதேகட்சியின் அமைச்சர் ஒருவருடன் ஆகும். ரணில் விக்ரமசிங்க அரசில் , அமைச்சர் பதவி வகித்த இவ் அமைச்சர் மலை நாட்டை பிரிதிநிதித்துவப் படுத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நம்ப முடியாத அளவு ஆயுதங்கள் விடுதலைப் புலிகள் வசம் இருபதாக கூறியுள்ள ஜனாதிபதி , வடக்கில் நடைபெறும் யத்தத்தால் வெற்றி அடைய முடியாது. அவர்களிடம் இருக்கும் ஆயுதங்கள் என்ன என்று பார்க்க வேண்டுமானால் நேரில் வந்து வீட…
-
- 11 replies
- 3.8k views
-
-
Published By: DIGITAL DESK 3 20 MAY, 2025 | 04:55 PM கொழும்பு, ஹேவ்லாக் டவுன் பகுதியில் அமைந்துள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புக்குள் பெண்ணொருவர் ரி - 56 ரக துப்பாக்கியை கொண்டு சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த ஆடம்பர தொடர்மாடி குடியிருப்பிலுள்ள தனது வீட்டுக்கு பெண்ணொருவர் ரி-56 ரக தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியை கொண்டு சென்றுள்ளார். இவர் துப்பாக்கியை வாகனத்தில் இருந்து எடுப்பதை அவதானித்த அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளவத்தை பொலிஸார் குறித்த வீட்டை பரிசோதனை செய்து பெண்ணை கைது செய்துள்ளனர். இதன்போது, பை ஒன்றில் இருந்த ரி-56 துப்பாக்கியையும் கைப்பற…
-
-
- 11 replies
- 525 views
- 1 follower
-
-
இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி இலங்கை வருகை Published By: Priyatharshan 25 Feb, 2026 | 01:59 PM ( வீ. பிரியதர்சன் ) இந்திய கடற்படையின் “நட்புப் பாலங்கள்” (Bridges of Friendship) திட்டத்தின் தொடர்ச்சியாக, பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி (INS Tarangini ) இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்கிறது. இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பலான INS Tarangini, 2026 பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுகத்திலும், மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்திலும் தரித்து நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் பயணப் பயிற்சி மற்றும் அனுபவப் பகிர்வை நோக்கமாகக் கொண்டு இ…
-
-
- 11 replies
- 542 views
- 1 follower
-
-
ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்ளவே அரசு முயற்சித்து வருகிறது என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அரசு இனவாதத்தைத் தூண்டி வருகின்றது. சர்வதேச சக்திகளின் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க முடியாத நிலைமை இந்த அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மனித உரிமைகள் சபை, சர்வதேச நாணய நிதியம் என பல்வேறு வழிகளிலும் அரசு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது. தமிழ் மக்களுக்கு இழைக்கும் அநீதிகளைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று சோனியா காந்தியும் தெரிவித்திருக்கிறார். சோனியா காந்தி கவலை வெளியிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. எனினும் இந்த அரசு மிகவும் நெருக்கடியான நிலையை …
-
- 11 replies
- 1k views
-
-
வவுனியாவில் உள்ள முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த தமிழர்களை உடனடியாக விடுதலை செய்து அவர்களை தமது மண்ணில் மீள்குடியேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்துப்பேசிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுள்ளது. மகிந்தவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான இந்தப் பேச்சுவார்த்தைகள் இரண்டு மணிநேரத்துக்கு நீடித்த அதேவேளையில், படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியிருப்பதால் உடனடியாக மீள்குடியேற்றம் சாத்தியமானதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையை மகிந்த நிராகரித்துவிட்டார். இதற்குப் பதிலாக முகாம்களில் உள்ளவர்கள் தமது நண்ப…
-
- 11 replies
- 1k views
-
-
துறவியாகும் டயானா கமகே? இந்தியத் திரைப்படமொன்றில் பெளத்த துறவியின் கதாபாதிரத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நடிக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை- இந்திய நட்புறவை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள குறித்த திரைப்படமானது பௌத்த மதத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த கதாபாத்திரத்துக்காக டயானா கமகே தனது தலையை மொட்டையடிக்கத் தீர்மானித்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1363886
-
- 11 replies
- 1.5k views
-
-
(எம்.நியுட்டன்) கொவிட்-19 உயிர்க்கொல்லி நோயிலிருந்தும் விடுதலை பெற்று வெற்றி ஆண்டாக புத்தாண்டிலிருந்து அர்ப்பணித்து வெற்றி பெறுங்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர், மாவை சேனாதிராசா தெரிவித்தார். புத்தாண்டு தொடர்பாக அவர் வெளிட்டுள்ள அறிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன்று இரவு சார்வரி புத்தாண்டு பிறக்கிறது. அனைவருக்கும் இதயபூர்வமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அடிமைத் தழையிலிருந்து விடுதலைக்காக அர்ப்பணித்த எம் தமிழ்பேசும் மக்கள் கொவிட்-19 உயிர்க்கொல்லி நோயிலிருந்தும் விடுதலை பெற்று வெற்றி ஆண்டாக புத்தாண்டிலிருந்து அர்ப்பணித்து வெற்றி பெறுங்கள். எழுந்து நில்லுங்கள். அறு…
-
- 11 replies
- 1.3k views
-
-
கடந்த 20 வருடமாக நாடாளுமன்றம் செல்லும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மக்களுக்கு எதனையும் செய்யவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் ,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. சர்வதேச விவசாயிகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது. அறுவடை காலத்தில் விவசாயிக…
-
- 11 replies
- 876 views
-
-
பொறுப்புக்கூறும் விவகாரத்தில் சிறிலங்கா அரசாங்கம் மீது அனைத்துலக சமூகம் அதிக அழுத்தங்களை கொடுத்தால், அது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் என்று, சிறிலங்காவின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடந்த தென்னாபிரிக்கத் தூதுவருடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அனைத்துலக சமூகம் சுமத்தும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கும், அனைத்து இன மக்களினதும் மனிதஉரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் தயாராகி வருகிறது. உள்ளக செயல்முறைகளின் மூலம் உண்மையைக் கண்டறிந்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஆர்வமாக இருக்கிறார். பொறுப்புக்கூறல் விவகாரத்தில், சிறிலங்கா மீது கொடுக்கப்படும் மிகையான அழுத…
-
- 11 replies
- 773 views
-
-
31 AUG, 2023 | 05:27 PM குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளன, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளைகளை மதித்து நடைமுறைப்படுத்தவில்லை என முல்லைத்தீவு நீதிமன்று கட்டளை வழங்கியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலே அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடர்பிலான வழக்கின் கட்டளைக்காக இன்று வியாழக்கிழமை (31) திகதி யிடப்பட்டிருந்தது. அந்த வகையிலே இன்றைய தினம் (31) குருந்தூர் மலை தொடர்பிலான AR/673/18 என்கின்ற வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. …
-
- 11 replies
- 643 views
- 1 follower
-
-
எள்ளியவர்கள் எல்லாரும் கள்ள மௌனத்துடன் சுமந்திரனின் கருத்துக்களை இப்போது பார்க்கிறார்கள்
-
- 11 replies
- 1.8k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள், வடக்கு முதல்வர்க.வி.விக்னேஸ்வரனை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துக்கலந்துரையாடியுள்ளார். யாழ் பொதுநூலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது வடக்குமுதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களுடன் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்,மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள். http://www.tamilwin.com/politics/01/116240
-
- 11 replies
- 1.1k views
-
-
ரணிலுக்கு மாதம் மாதம் 78 பில்லியன் இலங்கை ரூபாங்களை வழங்குகிறது '' ரோ '' சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்கவுக்கு இந்திய உளவுப் பிரிவான '' ரோ '' அமைப்பு 78 பில்லியன் இலங்கை ரூபாக்களை மாதம் மாதம் வழங்கி வருகின்றது. வன்னி மீது இந்தியாவின் பின்புலத்துடன் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முன்னெடுக்கும் போருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பாது தடுப்பதற்காகவே இந்த நிதி வழங்கப்பட்டு வருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்கவுக்கு மாதம் மாதம் 78 பில்லியன் இலங்கை ரூபாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய தலைவர்கள் மற்றும் பொறுப்பு வகிப்போருக்கும் பெருமளவான நிதியினை ரோ உளவுத்துறை வழங்கி வர…
-
- 11 replies
- 1.7k views
-