ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143568 topics in this forum
-
பிரிட்டிஸ் பிரதமர் கோர்டன் பிறவுண் உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களைச் சந்தித்ததன் மூலம் ஜனநாயக சம்பிரதாயங்களை மீறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள சிறிலங்கா அமைச்சர் கெஹெலிய றம்புக்வெல்ல இது ஒரு நியாயமற்ற செயல் எனவும் வர்ணித்திருக்கிறார். அல் கைடா ஆதரவாளர்களுடன் பேசுவதற்கும் கோர்டன் பிறவுண் தயாராக இருக்கிறாரா எனக் கேள்வி எழுப்பியுள்ள றம்புக்வெல்ல பயங்கரவாதம் தொடர்பில் பிரிட்டன் இரட்டை வேடம் பூணுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். பிரித்தானியப் பிரதமரும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரும் நடந்து கொண்ட விதம் குறித்து உத்தியோகபூர்வமான எதிர்ப்பை அரசு வெளியிடும் எனவும் றம்புக்வெல தெரிவித்துள்ளார். SOURCE: http://www.eelamweb.com/
-
- 8 replies
- 1.2k views
-
-
வைகோ, பழ.நெடுமாறன் பங்கேற்ற மாவீரர் நாள் நிகழ்வு சென்னையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பழ.நெடுமாறன் அய்யா தலைமையில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வுகள் கடைபிடிக்கப்பட்டன. நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பலர் பங்கேற்றனர். மக்கள் அலையென திரண்டு அகவணக்கம் செலுத்தினர். மேலதிக படங்களுக்கு http://meenakam.com/2010/11/28/14838.html
-
- 8 replies
- 1.4k views
-
-
மீனவரின் தாடியை வெட்டி விட்டார் அமைச்சர் ராஜித சேனாரத்ன! [Thursday 2014-10-02 19:00] மீனவர்களுக்கு இறங்குதுறையொன்று நிர்மாணிக்கப்படும் வரை தனது தாடியை வெட்டமாட்டேன் என்று கடந்த 9 வருடங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவரின் ஒருவரின் தாடியை மீன்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று வெட்டினார். தெல்வத்த, பெராலிய பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது. குறித்த மீனவர், தனது போராட்டத்தை கடந்த 2005ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்து வந்தார். அந்தப் பிரதேசத்தில் இறங்குதுறையொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று மீன்வளத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, குறித்த மீனவரை சந்தித்த அமைச்சர், இறங்குதுறை அமைப்பதான தனது உறுதியை நிறைவேற்றியதாக தெரிவித்…
-
- 8 replies
- 907 views
-
-
கரு ஜெயசூரியவை எதிர்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க யூஎன்பி, ஜேவிபி, சோபித தேரோ ஆகியோர் இணங்கியுள்ளதாயும் ரணில் போட்டியிடப் போவதில்லை எனவும் ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுளது. http://www.dailymirror.lk/56057/karu-to-be-common-candidate
-
- 8 replies
- 879 views
-
-
இராணுவத்தினருடன் முரண்பட்ட ஆசிரியர் அடித்துக் கொலை! யாழில் சம்பவம்! Posted by admin On March 28th, 2011 at 12:19 am யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரி ஆசிரியர் ஒருவர் இராணுவத்தினரால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் குப்பிளான் தெற்கைச் சேர்ந்த சம்பந்தன் சக்திதரன்(வயது – 28) என்ற ஆசியர் கடந்த வாரம் இரவு 7.30 மணியளவில் திருநெல்வேலி சந்திப்பகுதியில் இராணுவத்தினர் அவரை கடுமையாகத் தாக்கியதாக அந்தப் பகுதியில் நின்றிருந்த வர்த்தகர்கள் கண்ணுற்றிருக்கின்றனர். இதேவேளை மறுநாள் காலை யாழ். ஆரியகுளம் சந்திப் பகுதியில் வீசப்பட்ட நிலையில் காணப்பட்ட அவர் பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட…
-
- 8 replies
- 2k views
-
-
அலரி மாளிகைக்கான மாதாந்த உணவுச்செலவு 25 மில்லியன் ரூபா என்றும், அதைவிட பழங்களுக்காக மாதம் தோறும் 5 இலட்சம் ரூபா செலவிடப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில், ஹைட் பார்க்கில் நேற்று நடந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அலரி மாளிகைக்கான மாதாந்த உணவுச்செலவு 25 மில்லியன் ரூபா என்றும், அதைவிட பழங்களுக்காக மாதம் தோறும் 5 இலட்சம் ரூபா செலவிடப்படுவதாகவும் தகவல் வெளியிட்டார். ஊழல்மிக்க ராஜபக்ச அரசாங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மை விட்டுச் செல்வதை தடுப்பதற்காக அவர்களுக்கு 250 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் சந்திரிக்கா குற்றம்சாட்டினார். “எங்களைத் தேசத் துரோகிகள் என்றும், 100 நாட்களுக…
-
- 8 replies
- 997 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ். அல்லைப்பிட்டியில், சீன அகழ்வாராட்சியாளர்கள் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகத்தின் தொல்பொருள் அதிகாரிகள், தமது முதலாவது வெளிநாட்டு அகழ்வாய்வு நடவடிக்கைகளை, கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கையில் மேற்கொண்டிருந்தனர். துறைமுக நகரான யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 40 நாள்கள் விரிவான அகழ்வாய்வில், ஈடுபட்டனர்.இதன்போது, அல்லைப்பிட்டி மற்றும் ஊர்காவற்றுறை கோட்டை சிதைவுப் பகுதிகளில், அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக, ஷங்காய் அருங்காட்சியக அதிகாரிகள் குழுவுக்குத் தலைமை தாங்கி…
-
- 8 replies
- 1.2k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனங்களில் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர் பீடத்தினர் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் தனி தமிழர்களைக்கொண்ட தேர்தல் தொகுதியாக கருதப்படும் பட்டிருப்பு தொகுதிக்கு இந்த தேசிய பட்டியலை வழங்க தலைவர் இரா.சம்பந்தன் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த தேர்தலில் பட்டிருப்பு தொகுதிக்கான பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்வுப்போக்கு காணப்படுகின்றது. இந்தநிலையில் பல தரப்பினராலும் பட்டிருப்பு தொகுதிக்கு தேசிய பட்டியல் மூலம் பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா…
-
- 8 replies
- 619 views
-
-
இந்திய உதவியின் கீழ் வடக்கு ரயில் பாதைகள் புனரமைப்பு பணிகள் ஆரம்பம் Published By: Digital Desk 3 11 Jan, 2026 | 05:26 PM 'தித்வா' (Ditwah) சூறாவளியினால் பாரியளவில் சேதமடைந்த வடக்கு மற்றும் தலைமன்னார் ரயில் மார்க்கத்தை புனரமைக்கும் பணிகள் இன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (11) ஆரம்பிக்கப்பட்டதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹோ ரயில் நிலையத்தில் இன்றைய தினம் காலை புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 05 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. https://www.virakesari.lk/article/235774
-
-
- 8 replies
- 505 views
- 1 follower
-
-
மூன்று ஆண்டுகளில் நாற்பதாயிரம் வேலை வாய்ப்பு – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் சூளுரை தமிழ் மக்களுக்கு புலிப் பூச்சாண்டி காட்டி அரசியல் செய்தவர்கள் தற்போது சீனப் பூச்சாண்டியைக் காட்டித் தங்களுடைய போலி அரசியலை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா, உள்ளூர் உற்பத்திகளில் சார்ந்திருகும் பொருளாதாரத்தினை உருவாக்கும் வகையிலே கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கடலட்டை போன்ற நீர்வேளாண்மைச் செயற்பாடுகளை வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் விஸ்தரித்து, அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 40,000 நேரடி வேலை வாய்ப்புக்களையும் சுமார் 200 பில்லியனுக்கும் மேற்பட்ட அந்நியச் செலாவணியை பெற்ற…
-
- 8 replies
- 507 views
-
-
உணவு விலையேற்றத்தை சமாளிக்க 'மாற்றி யோசித்த' 5 நாடுகளின் கதைகள் ஸ்டெபானி ஹெகார்டியால் மக்கள்தொகை செய்தியாளர், பிபிசி உலக சேவை 21 ஆகஸ்ட் 2022, 10:30 GMT புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BEN GRAY படக்குறிப்பு, டோனா மார்ட்டினின் பள்ளி உணவு - வேர்க்கடலை வெண்ணெய்க்கு (peanut butter) பதிலாக பீன் டிப் உலகெங்கிலும் உணவு விலைகள் அதிகரித்துள்ளன, சில இடங்களில் பற்றாக்குறையும் நிலவுகிறது. எல்லா இடங்களிலும் மக்கள் புதிய சூழ்நிலைகளுக்கு மாற வேண்டிய நிலை காணப்படுகிறது.சில சமயங்களில் இது அவர்களின் உணவுப்பழக்கங்களின் மாற்றத்தைக் குறிக்கிறது. …
-
- 8 replies
- 641 views
- 1 follower
-
-
பிள்ளையானை விடுதலை செய்யக்கோரி போராட்டம் முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அடையால உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. http://www.virakesari.lk/article/35498
-
- 8 replies
- 1.5k views
-
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2011 ஆம் ஆண்டில் உலகின் செல்வாக்கு மிக்க நபர்களுள் ஒருவராக டைம்ஸ் சஞ்சிகையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரிற்கு இப்பட்டியலில் ஆறாவது இடம் கிடைத்துள்ளது. டைம் சஞ்சிகையினால் 'டைம்ஸ் 100' என்ற பெயரில் இவ்வாக்கெடுப்புத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க அதிபர் ஒபாமா, சோனியாகாந்தி உட்பட பல பிரபலங்களைப் பின் தள்ளி, இவர் இவ்விடத்தினைப் பிடித்துள்ளார். பயங்கரவாதத்தை இராணுவ ரீதியாக எதிர்கொண்டு, அதில் வெற்றி கண்ட தலைவர், மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் ஆட்சியதிகாரத்துக்குத் தெரிவானவர் எனவும் டைம்ஸ் சஞ்சிகை இத் தெரிவின் போது, அவரைப் பாராட்டியுள்ளது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=31004
-
- 8 replies
- 1.9k views
- 1 follower
-
-
"புலிகள் மீது அடாத பழி" போடும் "றோ" உளவுத்துறை - "இந்து" நாளிதழின் கூட்டுச்சதி: தென்செய்தி [ஞாயிற்றுக்கிழமை, 20 மே 2007, 19:43 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அடாத பழி போட இந்திய றோ உளவுத்துறையும் இந்து நாளிதழும் கூட்டுச்சதி செய்வதாக "தென்செய்தி" இதழ் சாடியிருக்கிறது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனை ஆசிரியராகக் கொண்ட "தென்செய்தி" இதழில் எழுதப்பட்டுள்ளதாவது: வான்புலிகளிடமும், கடற்புலிகளிடமும் தொடர்ந்து தோல்விகளைப் பெற்று நடுங்கிக்கொண்டிருக்கும் சிங்கள இராணுவத்திற்கும் அரசுக்கும் முட்டுக்கொடுத்து நிறுத்தும் முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளனர். சிங்கள அதிபர் இராசபக்ச மற்றும் அவரது அமைச்சர்கள் அடிக்கடி டில்லிக்கு வந்து பா…
-
- 8 replies
- 2.6k views
-
-
பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறிவிப்பு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறிவித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பின்போதே ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு இவ்வாறு அறிவித்துள்ளது. இது தொடர்பில் அந்தக் கட்டமைப்பினர் வெளியிடுள்ள அறிக்கையில், “இன்று தமிழ் தேசிய களத்தில் தூய்மையான மாற்றத்திற்கான மனிதர்களை மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திற்கு அனுப்ப தமிழ் மக்கள் விரும்புகின்றனர். இளையவர்களும் பெண்களும் நிபுணர்களும் இந்தகே குழுமத்தில் கணிசமா…
-
-
- 8 replies
- 681 views
-
-
அதிகாரப் பகிர்வு வேண்டுமென்றால், வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும் -கூட்டமைப்பு ஒருமித்த நாட்டுக்குள், நாடு பிரிக்கப்படாமல் அதியுச்ச அதிகாரப் பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்றால் வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட முதலாவது பிரசாரக்கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “ அதியுச்ச அதிகாரப் பங்கீட்டுடன் நான்…
-
- 8 replies
- 502 views
-
-
இந்தியாவிற்கு விஜயத்தினை மேற்கொள்ளும் இலங்கை அரசியல்வாதிகளுக்கு அச்சுறுத்தல்களும் எதிர்ப்புக்களும் தொடர்ந்தும் நடாத்தப்பட்டு வருகின்றது இதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்தியர்களுக்கு நாமும் பதிலடி கொடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அண்மையில் அமைச்சர் ரெஜினோல்ட் குரே இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அதன் போது அவருக்கு இந்தியாவின் தமிழக மாநிலத்தில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன. இவ்வவவாறு அவர்களுடைய செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியவை. அத்துடன் இந்திய அரசியல்வாதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யும் போதும் நாம் எதிர்ப்பை வெளியிட வேண்டும். அத்துடன் சார்க்கிற்கான வீசாவின் மூ…
-
- 8 replies
- 1.2k views
-
-
ஈழப் பிரச்சினையை முன் வைத்து தமிழக ஆட்சியைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள் என்று கலைஞர் அறிக்கைகளை விடுகிறார். இதே கலைஞர் 1985 ஆம் ஆண்டுகளில், ‘ஈழத் தமிழர் விடுதலை அமைப்பு’ (டெசோ) ஒன்றை உருவாக்கி நாடு முழுதும் தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவான பிரச்சார இயக்கத்தை நடத்தியவர்தான். அப்போது ஆட்சியில் இருந்த முதல்வர் எம்.ஜி.ஆர். மீது ஈழத் தமிழர்களுக்காக மத்திய அரசை வலியுறுத்தவில்லை என்று கலைஞர் குற்றம் சாட்டினார். ஈழத்தில் சிங்கள இராணுவம் இந்தியாவின் பேருதவியோடுதான் போரை நடத்துகிறது. விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்கு தயார் என்று அறிவித்து விட்டார்கள். போரை நிறுத்த மாட்டோம் என்கிறது சிங்களம். புலிகள் இராணுவத்தைக் கலைத்துவிட வேண்டும் என்று சிங்களர் விதிக்கும் நிபந்தனையை தம…
-
- 8 replies
- 1.6k views
-
-
தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையின் சனநாயக போராட்ட வடிவமாக திகழும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் அரசவைக்கான மக்கள் பிரதிநிதிகளின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமைத் தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கை: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவைக்கான தேர்தலுக்காக வேட்பாளர் மனுக்கள் கோரப்பட்டது யாவரும் அறிந்ததே. வேட்புமனுக்கள் உலகளாவிய முறையில், அந்தந்த நாட்டுத் தேர்தல் ஆணையங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஒவ்வொரு நாட்டிலும் பலத்த போட்டி எதிர்பார்க்கப்பட்டுத், தேர்தல் ஆணையம் அதனை எதிர் நோக்கியிருந்த நிலையில், இந…
-
- 8 replies
- 1.1k views
-
-
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்த "மிஹின் எயார்" விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மிஹின் எயார் விமான சேவை தனது கன்னிப் பயணத்தை நேற்று ஆரம்பிப்பதென ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய விசேடமாக அழைக்கப்பட்டிருந்த 50 பயணிகளுடனும் 8 பணியாளர்களுடனும் நேற்று காலை 11 மணிக்கு இந்தியாவின் திருவனந்தபுரம் நோக்கி விமானம் பயணத்தை ஆரம்பித்திருக்கிறது. பின்னர் விமானத்தில் இயந்திரக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. "பொக்கர்-27" எனும் சிறிய ரக…
-
- 8 replies
- 2.7k views
-
-
சிறிலங்கா மாவட்டத்தில் உள்ள அனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் 22 ஆம் நாள் 21 பேரடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணி தாக்குதல் தொடுத்த போது முகாமிலிருந்த வான்படையின் ஆயுதக்களஞ்சியத்தின் திறப்பு உரிய இடத்தில் இருக்காமையால் படையினருக்கு உரிய ஆயுதங்களை வழங்க இயலாமல் போய்விட்டது என்று சிறிலங்காவின் ஐவரடங்கிய விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது. 20 நிமிடங்களின் பின்னரே ஆயுதக்களஞ்சியத்தின் திறப்பைக் கண்டுபிடித்துள்ளனர் எனவும் அந்த விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. அந்த ஐவரடங்கிய விசாரணைக்குழுவில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொட, மேஜர் ஜெனரல் எம்.ஏ.எம்.பீரிஸ், ரியர் அட்மிரல் ஜே.எஸ்.கொலம்பகே, எயார் வைஸ் மார்ச…
-
- 8 replies
- 2.3k views
-
-
[size=4]சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஐ.நா பொதுச்சபையின் 67வது கூட்டத்தில் பங்கேற்காத்தற்கு, எந்தவிதமான அழுத்தங்களும் காரணமல்ல என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நியுயோர்க்கில் நடைபெறும் ஐ. நா.பொதுக்கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் பங்கேற்காததற்கு எந்தவிதமான அழுத்தங்களோ அச்சங்களோ காரணமில்லை. இப்போதுள்ளதை விட பெரும் அழுத்தங்கள் இருந்த போதெல்லாம், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அனைத்துலக மாநாடுகளில் பங்குபற்றியுள்ளார். அவருக்கு இதுஒன்றும் பெரிய விடயமல்ல. வேலைப்பளு காரணமாகவே அவர் இந்தமுறை நியுயோர்க் செல்லவ…
-
- 8 replies
- 608 views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கை இராணுவத்தினருக்கு இந்திய அரசு வழங்கி வரும் இராணுவ உதவிகளை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி ம.தி.மு.க சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் அக்கட்சியின் பொது செயலாளர் திரு. வை. கோ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் தமிழர்கள் மீது இராணுவ தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இப்பிரச்சினையில் இந்திய அரசு, அந்நாட்டு அரசிற்கு உதவி வருவதை கண்டித்தும் ம. தி. மு. க சார்பில் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியில் சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் மறியலுக்கு முன் சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி அருகேயிருந்து ஊர…
-
- 8 replies
- 1.6k views
-
-
பொதுவிவாதத்திற்கு சுமந்திரன் தயாரானால் பதிலளிக்க நாங்கள் தயார்-காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்க செயலாளர் பொதுவிவாதத்திற்கு சுமந்திரன் தயாரானால் பதிலளிக்க நாங்கள் தயார் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார். November 26, 2021 வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இன்று ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தனர். இந்நிலையில், “ஊடக சந்திப்பின் போது உங்களுடைய நோக்கத்திலிருந்து மாறி, தொடர்ச்சியாக நீங்கள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீது குற்றம் சுமத்தி வருகிறீர்கள். அதற்கான காரணத்தை கூறமுடியுமா?” என ஊடகவியலாளரால் வினவப்பட்ட போது, பொதுவிவாதத்திற்கு சுமந்திரன் தயாரானால் பதிலளிக்க நாங்…
-
- 8 replies
- 528 views
-
-
எஸ்.நிதர்ஷன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை இம்முறை கடுமையானதாக இருக்கும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருடனான இன்றைய (01) சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல் விடயங்கள் உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் பேசியுள்ளோம். 13ஆம் திருத்தத்தை ஏற்றுக் கொள்கின்ற தமிழ்க் கட்சிகளின் நடவடிக்கை சம்பந்தமாகவும் தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக நேர்மாறாக நடைபெறுகின்ற விடயம் தொடர்பில் பேசியுள்ளோம். “இந்திய மீனவர்கள் அத்…
-
- 8 replies
- 1.1k views
-