ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143690 topics in this forum
-
பூசாவில் தமிழ் இளைஞருக்கு சித்திரவதை! [Friday 2016-04-22 09:00] சந்தேகத்தின் பேரில் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விஜயகுமார் கேதீஸ்வரன் என்ற இளைஞரின் பெற்றோர் கொழும்பில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி – திருவையாறை சேர்ந்த குறித்த இளைஞர் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு கொழும்பு – மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். கடந்த 2015 ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி விஜயகுமார் கேதீஸ்வரனுக்கு பிணை வழங்கப்பட்டது. கேதீஸ்வ…
-
- 4 replies
- 681 views
-
-
(ஆர்.யசி) கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தாம் இணக்கம் தெரிவிக்கப்போவதில்லை என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ அமைச்சரவையில் அறிவித்துள்ளார். அதற்கமைய எவரும் சண்டித்தனம் காட்டியோ ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தோ பழைய பாராளுமன்றத்தை கூட்டவும் முடியாது என்கிறது அரசாங்கம். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வேளையில், அரசியல் அமைப்பு நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றம் மூலமாக ஒதுக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை நிதி ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்ற நிலையில் அரசாங்கம் மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டி தீர்மானம் எதனையும் முன்னெடுக்க…
-
- 4 replies
- 456 views
-
-
விடுதலைப்புலிகள் கல்மடு குளத்தை குண்டு வைத்து தகர்த்ததில் சுமார் 4ஆயிரம் படையினர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் கொல்லப்பட்டவர்கள் 200 இந்திய படையினர் அடங்கியிருப்பது குறித்து தகவல்கள் வெளியாகி இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று மேற்கொண்ட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாவிரத போராட்டத்தில் உரையாற்றும் போதே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார். இந்தியா அரசாங்கம் தமிழ் மக்களை படுகொலை செய்யும் படுபாதக செயலில் ஈடுபட்டுள்ளது எனவும் திருமாவளவன் குற்றம்சுமத்தியுள்ளார். நன்றி : www.globaltamilnews.ne
-
- 4 replies
- 2.1k views
-
-
மக்கள் திண்டாட்டம் ! அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலை அதிரடியாக உயர்வு - முழு விபரம் இதோ ! (இராஜதுரை ஹஷான்) இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகிய அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதனால் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியாது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சும்,அமைச்சரவை அமைச்சர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். பால்மா, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் தற்போதும் சந்தையில் இப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றமை அவதானிக்க முடிகிறது…
-
- 4 replies
- 507 views
-
-
முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது ஈழத்தமிழர்களை ஒபாமா காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை தகர்ந்த நிலையில் அவரது வருகையால் மகிழ்ச்சியடைய முடியவில்லை. இப்படித் தெரிவித்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். திட்டக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு, கறுப்பு இனத்தை சேர்ந்த முஸ்லிம் ஒருவர் அமெரிக்க குடியரசு தலைவராக இருப்பது போற்றுதலுக்குரியது. ஆனால் மூன்றாவது ஆவது உலக நாடுகள் மீது தனது இராணுவ ஆதிக்கத்தை திணித்து வரும் அமெரிக்கா, ஒபாமா அந்நாட்டின் அடையாளமாக விளங்குவதால் அவரை வரவேற்க வேண்டும் என்பதில் நெருடலாக உள்ளது. குறிப்பாக இஸ்லாமிய நாடுகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் எதிர…
-
- 4 replies
- 792 views
-
-
இந்திய- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி நிறைவு IF இந்திய- சிறிலங்கா கடற்படைகள் திருகோணமலையில் நடத்தி வந்த SLINEX-2018 கூட்டுப் பயிற்சி கடந்தவாரம் நிறைவடைந்துள்ளது. கடந்த 7ஆம் நாள் ஆரம்பமாகிய இந்தக் கூட்டுப் பயிற்சி 17ஆம் நாள் நிறைவடைந்தது. துறைமுகம், கடல் என இரண்டு கட்டங்களாக, நடந்த ஒரு வார கால கூட்டுப் பயிற்சியில் இரண்டு நாடுகளினதும், 1000 கடற்படையினர் பங்கேற்றனர். சிறிலங்கா கடற்படையின் சயுரால, சமுத்ர, சுரனிமல ஆகிய போர்க்கப்பல்களும், இந்தியக் கடற்படையின், சுமித்ரா கிர்ச், கோரா டிவ் ஆகிய போர்க்கப்பர்களும், இரண்டு டோனியர் விமானங்கள் மற்றும் ஒரு உலங்குவானூர்தியும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றன. இந…
-
- 4 replies
- 735 views
-
-
மோடியின் திட்டத்தை நிராகரித்தார் மைத்திரி FEB 20, 2015 | 0:59by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன் வைத்த திட்டத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டதாக, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சந்தித்த போது, இருநாட்டு மீனவர்களின் பிரச்சினையைத் தீர்க்க, இந்தியப் பிரதமரால் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது. சிறிலங்கா மீனவர்கள் எந்தக் கட்டுப்பாடும் இன்றி, இந்திய எல்லைக்குள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடலாம் என்றும், இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்குமாறும்…
-
- 4 replies
- 827 views
-
-
01.12.11 மற்றவை இலங்கையில்விடுதலைப் புலிகளின் பின்னடைவுக்குப் பிறகு மாவீரர் தினம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறிவிட்டது. வரும் 27-ம் தேதி மாவீரர் தினம் வரு வதையொட்டி அதை சீர்குலைக்க இலங்கை அரசு சதித் திட்டம் தீட்டி வருவதாக, வெளிநாட்டுத் தமிழர்கள் பதறுகிறார்கள். மாவீரர் நாளில், போர்க்களத்தில் உயிர்நீத்தவர்கள் மற்றும் வீரத் தியாகம் புரிந்த புலிகளுக்கு சிறப்பான முறையில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இந்த மாவீரர் தினத்தில் ம ட்டுமே விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உரை நிகழ்த்துவது வழக்கம். கடந்த ஆண்டு பிரபாகரனின் உரை இல்லாத போதும், வழக்கத்தை விட அதிக எழுச்சியுடன் உலகெங்கும் மாவீரர் தினம் கொண்டா…
-
- 4 replies
- 1.7k views
-
-
நொதேன் பவர் நிறுவனத்தின் அசமந்ததால் சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் எண்ணெய் கலக்கப்படவில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலைச்சர் சி,வி.விக்னேஸ்வரன் மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் மூடி மறைத்த விடயங்கள் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக வெளிக்கொணரப்பட்டுள்ளது என வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கடசித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, சுன்னாகம் பகுதியில் அனல் மின்நிலையத்தின் ஒய…
-
- 4 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் உள்ள புத்தள பகுதி மக்களுக்கு உடனடியாக 500 துப்பாக்கிகளை வழங்குமாறு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று புதன்கிழமை இரவு உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.2k views
-
-
ஜயகாந்தன் ராமநாதன் எனும் இளைஞர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், பலவந்தமாக காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயற்குழுவிடம் இலங்கை பொய் கூறியுள்ளதாக மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் குற்றம்சாட்டியுள்ளார். அதனை நிரூபிப்பதற்குப் போதுமான சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். "2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஜயகாந்தன் ராமையா எனும் 25 வயது இளைஞர் கொழும்பு - கண்டி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் கடவத்தை நகரில் வைத்து வெள்ளைவானில் வந்த இரகசியப் பொலிசாரால் கடத்தப்பட்டார். இது குறித்து கடத்தப்பட்டவரின் சகோதரர் 2007 மார்ச் 22 ஆம் திகதி கடவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்" எனவும் மனோ கணேசன் குறிப…
-
- 4 replies
- 1.2k views
-
-
இலங்கையின் இராணுவப் புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஒருவர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. அண்மையில் திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது மனைவி மற்றும் பிள்ளைகளை விடுவிக்குமாறு உண்ணாவிரதம் மேற்கொண்ட தயாபரராஜா என்பவர், முன்னதாக படைப் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும் அவர் தற்போது உயிருடன் இந்தியாவில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனைப் போன்றே காணாமல் போனதாக கூறப்பட்ட பலர் உயிருடன் வெளிநாடுகளில் இருக்கலாம் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கோடிட்டு ஆங்கில இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலை…
-
- 4 replies
- 1.3k views
-
-
அனைவருக்கும் ஒரு படிப்பினை..! ரயிலில் மோதுண்டு உயிரிழந்த இளம் பெண்கள் : சிசிடி காணொளி வெளியானது வெள்ளவத்தைக்கும் தெஹிவளைக்கும் இடைப்பட்ட பகுதியில் ரயிலில் மோதுண்டு இரு இளம் பெண்கள் பலியான சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது. இரு இளம் பெண்களும் காதில் இயபோன் மாட்டி இருந்தமையால் ரயில் வருவதையும் அருகில் இருந்தவர்கள் கூச்சமிட்டதையும் கேட்காதமையினால் இந்த கோர விபத்தில் சிக்கினர். பிறந்தநாள் விருந்துபசாரம் ஒன்றிற்கு சென்ற வேளையிலேயே குறித்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. நேற்று முன்தினம் இரு யுவதிகளும் வெள்ளவத்தைக்கும் தெஹிவளைக்கு…
-
- 4 replies
- 1.9k views
-
-
திருமலை பேருந்து நிலையத்தில் சிறுமியை கடத்திய மர்மநபர் -தீவிர தேடுதலில் பொலிஸார் திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று நண்பகல் சிறுமியை இழுத்துச் சென்ற மர்மநபர் ஒருவரை பொலிஸார் தேடிவருகின்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தனது உறவினருடன் பேருந்து நிலையத்திற்கு வந்த 8 வயது மதிக்கத்தக்க சிறுமி தாகமாக இருப்பதாக தனது உறவினரிடம் தெரிவித்ததை அடுத்து, சிறுமியின் உறவினர்கள் அங்குள்ள கடை ஒன்றில் தண்ணீர் போத்தல் வாங்குவதற்காக சிறுமியை ஓரிடத்தில் நிற்குமாறு கூறிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். குறித்த கடையில் தண்ணீர் போத்தலை வாங்கியபின்னர் வந்து பார்த்தபோது சிறுமி அவ்விடத்தில் இல்லாததால் பதற்றமடைந்த சிறுமியின் உறவினர்கள் பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர். …
-
- 4 replies
- 590 views
-
-
சர்வதேச புவி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடவடிக்கையில் மிச்செல் ஜே. சிசன்.... By General 2013-04-22 18:31:00 சர்வதேச புவி தினமான இன்று திங்கட்கிழமை அமெரிக்கத் தூதரகத்தினால் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கையின்போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே. சிசன் மற்றும் தூதரக ஊழியர்கள் இணைந்து கொழும்பு காலிமுகத்திடலில் காணப்பட்ட குப்பைகளை சேகரித்தனர். http://www.virakesari.lk/article/local.php?vid=4126
-
- 4 replies
- 776 views
-
-
28/06/2009, 11:42 [மட்டு செய்தியாளர் மகான்] தமிழர்களை இன அழிப்புச் செய்த படையில் இணைய கருணாவும், பிள்ளையானும் விண்ணப்பம் தமிழ் மக்களையும் பல இலட்சக் கணக்கில் கொன்று குவித்து, இன அழிப்பைச் செய்த சிறீலங்கா படையில் இணைந்து கொள்ளவதற்காக, கருணாவும், பிள்ளையானும் விண்ணப்பித்துள்ளனர். கிழக்கில் துணைப்படை ஆயுதக் குழுக்களை இயக்கிவரும் அமைச்சரான கருணாவும், முதலமைச்சர் பிள்ளையானும் தமது அமைப்பிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லையென தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான பின்புலத்தில் அரசியலில் மட்டும் தாம் ஈடுபட்டு வருவதாகக் கூறும் இவர்கள் இருவரும், சிறீலங்கா படையில் இணைவதற்காக விண்ணப்பம் செய்துள்ளனர். அத்துடன், கருணா குழுவில் இருந்த 540 பேரும், படையில் இணைய விண்ணப்பம் …
-
- 4 replies
- 914 views
-
-
தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும் – வே. மதிமாறன் ஜூனியர் விகடன் பத்திரிகையில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ், இலங்கை அரசிடம் காசுவாங்கிக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிட்டதாகவும், அதற்காகத்தான் ‘தமிழணர்வு’ கொண்ட ஜூனியர் விகடன் அவரை வேலை நீக்கம் செய்ததாகவும் ஒரு செய்தி சமீபத்தில் பரபரப்பாக அலசப்பட்டது. தமிழ்ப் பத்திரிகைகள், இலங்கை அரசிடம் காசு வாங்கிக் கொண்டு படுகொலை செய்கிற ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக, தமிழர்களுக்கு எதிராக செய்தி வெளியிடுகிறது என்பது ஊர் அறிந்த ரகசியம். இதில் ஜூனியர் விகடன் விகேஷ் மட்டுமல்ல, இன்னும் பல ‘எட்டப்பன்கள்-பச்சைத் தமிழன் புதுக்கோட்டை மகாராஜா ரகுநாத தொண்டைமான்கள் -ஆற்காட்டு நவாப்புகள்’ பத்திரி…
-
- 4 replies
- 1.3k views
-
-
விக்ரம், கொழும்பு 20/09/2009, 19:26 மூன்று தசாப்தகால யுத்தத்தில் 26,000 சிறீலங்கா படையினர் பலி! மகிந்த ராஜபக்ச தகவல்! கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தில் இருபத்தாறாயிரம் (26,000) படையினர் பலியாகியிருப்பதாக சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் வைப்பக அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பொழுதே இவ்வாறு சிறீலங்கா அதிபர் கூறினார். இவர்களை விட, ஐயாயிரம் படையினர் உடல் அவயங்களை இழந்து அங்கவீனர்களாகியிருப்பதாகவு
-
- 4 replies
- 1.1k views
-
-
தகவல் தொழில்நுட்பத்தில் உலகின் மிக இளவயது பட்டதாரியாக, கண்டியைச் சேர்ந்த 11வயது தமிழ்ச் சிறுமியான வாசின்யா பிறேமானந்தா அறிவிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய கணினிச் சமூகம் (British Computer Society ) இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கண்டியிலுள்ள கொழும்பு அனைத்துலகப் பாடசாலையில் 8ம் வகுப்பில் கல்வி கற்று வரும் வாசின்யா, பிரித்தானிய கணினிச் சமூகத்தின் தகவல் தொழில்நுட்ப பட்டத்தை (BCS IT)பெற்றுள்ளார். இவரே உலகில் தகவல் தொழில்நுட்பத்தில் ஆகக்குறைந்த வயதில் பட்டம் பெற்றவராவார். இவர் எட்டு வயதில் இருக்கும் போதே, இவர் கபொத சாதாரணதரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் ஏ தரச் சித்தியைப் பெற்று சாதனை படைத்திருந்தார். அத்துடன், எட்டு வயதிலேயே கணினி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்…
-
- 4 replies
- 932 views
-
-
யோஷித நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார் – முக்கிய பிரமுகர்கள் ஜெட் விமானம் மூலம் வெளிநாட்டுக்கு May 10, 2022 முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபக்ஸ நேற்று (9) அதிகாலை நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என தகவல்கள் தெரிவித்துள்ளன. யோஷிதவும் அவரது மனைவியும் சிங்கப்பூர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவா்களது தனிப்பட்ட வாகனத்தில் விமான நிலையத்துக்கு சென்றுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.. அதேவேளைஅரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் திருகோணமலை படைத்தளம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ,அவர்கள் அங்கிருந்து ஜெட் விமானம் ஒன்றின் மூலம் வெளிநாட…
-
- 4 replies
- 554 views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தமது இருப்பினை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது பிரிவினைவாதத்தை முன்வைக்கக் கூடாது என ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹெல உறுமய கட்சி இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின்போது கலந்து கொண்டிருந்த அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரர் இதனைத் தெரிவித்தார். அங்கு தேரர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, விடுதலைப் புலிகளின் கொள்கைகளை முன்வைத்து அவர்களின் நிழலாக செயற்பட எண்ணக் கூடாது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொடுத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்தை விடுத்து, பேச்சுவார்த்தைக்குத் தயாராக வேண்டும். அதனைத்…
-
- 4 replies
- 700 views
-
-
சிங்கள அரசினால் இயக்கப்படும் ஒட்டுக்கும்பல் ஈபிடிபியினால் படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரனின் நினைவுநாள் இன்று! ஈபிடிபி ஆயுததாரியினால் கொழும்பு கொட்டாஞ்சேனை சிவனாலயத்தில் புதுவருட தினத்தன்று ஆலய வழிபாட்டுக்காக வந்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன், சிங்கள அரசினால இயக்கப்படும் ஈபிடிபி ஒட்டுக்கும்பலின் ஆயுததாரியினால் படுகொலை செய்யப்பட்டதும், அவ்வாயுததாரி இன்று வரை சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல், அதன் பின்னும் சிங்களத்தின் ஏவலில் பல தமிழ் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், புத்திஜீவிகள் இவ்வாயுததார 9ஒட்டுக்கும்பலினால் படுகொலை செய்யப்படுக்கொண்டிருப்பதும் தொடர்கதையாகவே உள்ளது!! ...... சிங்களத்தின் ஏவலில் கொலையுண்ட மகேஸ்வரனின் .... மனைவி ... இன்ற…
-
- 4 replies
- 1.6k views
-
-
சீனா இரஸ்யா ஆகிய நாடுகளின் உதவியை நாடுவோம் - கோத்தா எச்சரிக்கை வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 17, 2011 ஐக்கிய நாடுகள் சபையானது வரம்பு மீறி செயற்படுகின்றது, நிபுணர் குழு அறிக்கை மூலம் இலங்கையினை கையகப்படுத்த முயற்சிக்கின்றது மேற்குலகம். இவ்வாறான ஓர் சூழலில் நாம் சீனா , இரஸ்யா ஆகிய நாடுகளின் உதவியினை உத்தியோக பூர்வ ரீதியாக நாடுவோம். என ஐக்கிய நாடுகளையும் மேற்குலகத்தினையும் எச்சரித்துள்ளார் கோத்தபாய இராஜபக்ஷ. . இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு உறுப்புரிமை நாடு அந்த உறுப்புரிமைக்கு ஐக்கிய நாடுகள் சபை மதிப்பு கொடுக்க முடியாவிடின் நாம் சீனா இரஸ்யாவிடம் சரணடைவதனை தவிர்க்க முடியாது என கூறியுள்ளார் கோத்தபாய. . கோத்தபாய இந்தியாவிற்கும் மறைமுக எச்சரிக்கையின…
-
- 4 replies
- 1.9k views
- 1 follower
-
-
கட்டாக்காலி நாய்களுக்கும் முகாம் அமைக்கலாமே இப்படி ஓர் அபூர்வமான ஆலோசனை நேற்று கோப்பாய் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான அபிவிருத்திக் கூட்டம் நேற்று கோப்பாய் பிரதேச செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் அவை தொடர்பான ஆலோசனைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக ஒவ்வொன்றாக ஆராயப்பட்டன.விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்ட போது ஒரு விவசாயி கட்டாக்காலி நாய்கள் தமது விவசாயப் பயிர்களை அழித்து நாசமாக்குவதாகவும் அதனைத் தடுப்பதற்கு …
-
- 4 replies
- 1.9k views
-
-
தழிழர்களால் ஆளப்படுகின்ற சுயாட்சியே தமிழ் மக்களுக்கான தீர்வாகும்: சிறிகாந்தா ஐக்கிய இலங்கையில் தமிழர் மரபுவழிப் பிரதேசங்களுக்குள் அம்மக்களால் ஆளப்படுகின்ற சுயாட்சிதான் தழிழ் மக்களுக்கான தீர்வாக இருக்கின்றது. இதனால் தமிழர்களது கோரிக்கைகள் அடங்கிய பிரேரனைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து அது குறித்த பேச்சுவார்த்தைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட வேண்டும் என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவரும் சட்டத்தரணியுமான எஸ்.சிறிகாந்தா தெரிவித்தார். இன்று புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, இந்திய அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு …
-
- 4 replies
- 944 views
- 1 follower
-