கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
பதுங்கு குழி எழுத்தாளர்: பொ. கருணாகரமூர்த்தி நாச்சிக்குடா வீழ்ந்ததிலிருந்து மாதவன் மனத்துள் அந்தகாரம் புகுந்துகொண்டது. இராணுவம் முன்னேறிய வேகத்தைப் பார்க்கையில் மாதவனது மனம் துவண்டுபோனது. இனிமேலும் நாம் இப்போரை வெல்லமுடியுமோ என்று ஒரு சந்தேகமுண்டாகியது. அவன் அடிக்கடி யோகபுரத்திலுள்ள தன் வீட்டுக்குப்போய், அம்மாவையும் சகோதரங்களையும் பார்த்து வருவதும் அவனது அணியின் பொறுப்பாளனுக்குப் பிடிக்கவில்லை. இப்போது தந்தைக்கு திவசம் கொடுப்பதற்காக வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறான். தந்தைக்கான சடங்குகளைச் செய்வதற்கும் அணித் தலைவனிடம் மண்டாடியே ஒருநாள் விடுப்பு எடுத்து வந்து நிறைவேற்றவேண்டியுள்ளது. தேசத்தின் நிலமையில் மக்களின் பொருண்மியம் பெரிதும் குன்றிவிட்டதால் இப்போ…
-
- 1 reply
- 1k views
-
-
அந்தச் சின்னஞ் சிறு கிராமம் ........காலை யில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் ..... பட்டணத்துக்கு போக பஸ் வண்டிக்கு விரைவோர்....காலை,ஆலயமணியின் பக்தி மிகு எழுப்புதல்கள் .. பள்ளிச் சிறார்கள் ..என்று வீதி ...போக்குவரத்தால் நிறைந்து இருக்கும்.. கலைவாணி அந்த ஊரின் பாட்டு வாத்தியார் பொண்ணு ...கல்லூரியின் இறுதி யாண்டு படித்துக் கொண்டிருந்தாள் ......பெணகள் கல்லூரி அது .எந்நேரமும் சிரிப்பொலிக்கு பஞ்சமில்லை .....பெண்கள் என்றாலே மகிழ்ச்சி தானகவே வரும். ஆண்டு இறுதிகளில் ...வகுப்பேற்றம் நிகழும்..பன்னிரண்டாம்வகுப்பு, முடிவில் ( பிளஸ் டூ போன்று ) . பல்கலை யின் நுழைவு தேர்வு இருக்கும். பாட்டுவாத்தி யாரின் மகள் என்பதாலோ என்னவோ கலைவாணிக்கு நன்றாக பாட்டு வந்தது …
-
- 9 replies
- 5.8k views
-
-
என் உள் மனது இன்றைக்கும் உச்சரிக்கும் ஓர் பெயர் நிவேதா.... எத்தனை புயல்கள், எத்தனை பூகம்பங்கள், எத்தனை ஆழிப்பேரலைகள் வாழ்வில் வந்து தாக்கிவிட்டுச் சென்ற போதும் எல்லாக் காயங்களையும் கொஞ்ச நேரமாவது ஆற்றிக்கொள்ளும் மருந்தாய் என் வாழ்வில் தென்றலாய் வந்து வருடிச்செல்லும் ஓர் பெயதான் நிவேதா.... ஆம் பாடசாலை செல்லும் வயதில் ஏற்பட்ட பருவக்காதல் தான். பலரும் சொல்வார்கள் பாடசாலை செல்லும் வயதில் ஏற்படுவது உண்மையான காதலல்ல அது ஓர் இனக் கவர்ச்சியென்று. அது இனக் கவர்ச்சியானால் ஏன் அது இன்றைக்கும் நீடிக்கிறது, அவள் பெயரின் நினைவு இன்றைக்கும் ஏன் என் நினைவை வருடிச் செல்கிறது, ஏன் என் நினைவைவிட்டு அகல மறுக்கிறது.... சரி.. சரி... வாருங்கள் என் வீட்டு அடுப்படியில் இருந்து அவள்…
-
- 18 replies
- 3.9k views
-
-
2007 ஆவணி காலை 7.30 மணி, 27 வருடத்திற்கு பிறகு கோண்டாவில் சந்தியில் கொண்டுவந்து நண்பன் என்னையும் மனைவியையும் இறக்கி விட்டு எதற்கும் முதல் நந்தவனம் போய் பாஸ் எடுங்கள்,பிறகு மற்ற அலுவல்கள் எல்லாம் என்றான். எனது சந்தி,நான் காலகாலமாக உழுது திரிந்தசந்தி அந்நிய பிரதேசமாக காட்சி அழித்தது.தெரிந்தவர் எவருமில்லை.சனங்ககள் திரியுது எவர் முகத்திலும் சிரிப்பு இல்லை.பான்ஸ்சோட திரியிற எனது மனுசி புலி அலுவலகம் என்று சல்வார் அணிந்து வந்தார், எல்லாம் ஒரு நடிப்பு அதைத்தான் அவர்களும் எதிர்பார்த்தார்கள். நந்தவனத்தில் போய் இருக்கின்றேன்.சற்று தள்ளி எங்களது தோட்டக்காணி,அருகில் நான் சிக்சர் சிக்சர் ஆக அடித்து தள்ளிய விளையாட்டு மைதானம்.யாருடனாவது கதைக்க வேணும் போலுள்ளது தெரிந்த முகம் எதுவு…
-
- 9 replies
- 1.7k views
-
-
சுரேன் முற்றத்தில் இருந்து சட்டி பானைகளை கழுவிக் கொண்டிருந்;தான். அந்த சட்டி பானைகள் அழகை இழந்து போயிருந்தன. கறுத்து ஊத்தை பிடித்திருந்தது. தம்பி அந்தத் தாச்சிய எடுக்குக் கொண்டு வாடா கழுவுறதுக்கு... என்று தன் தம்பியை அழைத்துக் கொண்டிருந்தான் சுரேன். இதே முற்றத்தில் வசந்தாக்கா இருந்து கொண்டு சட்டி பானைகைள அழகாக கழுவும் காட்சிகள் என் கண்ணுக்கு முன்னால் வந்து கொண்டிருந்தன. கிழிந்த பாதிச் சரத்தைக் கட்டிக் கொண்டு குனித்திருந்தபடி கழுவிக் கொண்டிருந்தான். அவனின் தம்பி விதுசாந்தன் கூரையில்லாத வீட்டுக்குள் இருந்தான். வசந்தாக்காவின் சொந்த இடம் பழைய முறிகண்டி. றோசா அண்ணன் அவரை திருமணம் முடிந்த காலத்தில் சிறுவனாக இருந்த என்னை தன் சைக்கிளில் ஏற்றி பழைய முறிண்டிக்கு கூட்டிக் கொண்ட…
-
- 2 replies
- 1.3k views
-
-
கொஞ்சம் இறுக்கி போடடா ..உரக்க கத்தினான் என்னை சைக்கிளில் வைத்து உழக்கியவன் .இயலுமட்டும் எதிர் காற்றுக்கு போராடி என்னடா இவன் போடுற டபிள் பெடல் அவ்வளவு காணதே என்று சலித்து இயலாப்பாட்டில் கூவிய குரல் அது..எங்கோ யோசித்து கொண்டிருந்தபடியால் என் உதைப்பின் வேகம் குறைந்திருக்க வேண்டும்.இந்த கணத்தை விட்டு ஏதோ ஒரு காலத்தில் யோசிப்பதில் ஒரு சுகம்.அது மட்டுமே எங்களுக்கு இப்ப வாழும் வாழ்க்கையில் இருக்கு .என்ன நான் சுகம் காண நினைத்தால் அவன் வேதனை அனுபவிக்க இருக்கு அவ்வளவு தான். டே உழக்கடா ஊண்டி என மீண்டும் சத்தம் போட்டான், ,அவனிலும் பிழையில்லை ஒரு பத்து நிமிசம் பிந்தி போனாலும் அந்த எருமை தலையன் ஒரு மணித்தியால காசை வெட்டி போடுவான் .அதுவும் நாலு கில்டன் இலங்கை காசுக்கு பத்தினொ…
-
- 14 replies
- 1.9k views
-
-
கிளிநொச்சி நகரம் வரவேற்கிறது பெருநிலத்தின் கதைகள் : 01 - நவராஜ் பார்த்தீபன் பெருநிலத்தின் கதைகள் என்ற இந்தப் பகுதியை குளோபல் தமிழ் ஊடகத்தில் இணைத்திருக்கும் அன்பர்கள் ஊடாக பகிர்ந்து கொள்வதில் மிகுந்த ஆறுதல் கொள்ளுகிறேன். பாரிய யுத்தம் ஒன்று நிகழ்த்தப்பட்டு அழிவுகளால் வேருடன் பிடுங்கி எறியப்பட்ட வன்னிப் பெரு நில மக்களின் வாழ்வை அவர்கள் மீட்கும் விதத்தில் தங்கள் நிலத்திற்கு திரும்பிக்கொணடிருக்கிறார்கள். இந்த மக்களுக்குள் இருக்கும் வலியுறைந்த கதைகளையும் அவர்களைச் சுற்றியிருக்கும் அழியாத நினைவுகளையும் இழந்த கனவுகளையும் அவர்களது அழகான சூழல் தகர்ந்து போனதையும் அவர்கள் வாழ்வையும் வலி கிளர்த்தும் வழிகளையும் பதிவு செய்யும் எண்ணத்துடன் இந்தப் பகுதி உங்களிடம் கொண…
-
- 2 replies
- 943 views
-
-
இறைச்சி வாங்க வழக்கமாக போகும் தமிழ் கடைக்கு போனேன்.கல்லாவில் நின்ற முதலாளி என்னை சிரித்து வரவேற்றதுடன் அப்போது கடையால் வெளியேறிக்கொண்டிருக்கும் வயது போன ஒரு மனுசியை பார்க்குமாறு கண்ணால் ஜாடை காட்டினார்.கையில் ஒரு பையுடன் போய்கொண்டிருந்த ஒரு அம்மாவை .இடைக்கிடை இதே கடையில் பார்த்ததாக ஞ்பகம். "என்ன விடயம் என்று" முதலாளியைக் கேட்டேன் . "மீனோ இறைச்சியோ போய் சொல்லிப்போட்டுவாரும் ஒரு அலுவல் காட்டுகின்றேன் " என்றார். திரும்பி வர செக்குரிட்டி கமரா எடுத்த படத்தை ரீவைன் பண்ணி போட்டுக்காட்டினார். அந்த மனுசி வந்து ஆறு இராசவள்ளிக் கிழங்குகளை மேசையில் வைக்க முதலாளி எடுத்து நிறுத்து பின்னர் இரண்டு கிழங்கை வெளியே எடுத்து மீண்டும் நிறுத்து காசையும் வாங்கிக்கொண்டு விட,மனுசி…
-
- 11 replies
- 2.4k views
-
-
ரெண்டாந்தாரமாயெண்டாலும் பறவாயில்லை ஆனால் ஒரு கலியாணம் அன்புள்ள அக்கா, **** அக்காவை அறிஞ்சிருப்பியள். அவாவும் ஒரு எழுத்தாளர். மகளீர் அமைப்பு வெளியிட்ட வெளியீடுகள் ஈழநாதம் புலிகளின் குரலில எல்லாம் அவாடை எழுத்துகள் வந்திருக்கு. தடுப்பிலயிருந்து இப்ப விடுதலையாகி வந்திருக்கிறா. குடும்பம் சரியான கஸ்ரம். பாவம் மேலும் 2தங்கச்சியவை இருக்குதுகள். இவாக்கு 37வயதாகீட்டுது. வெளிநாட்டு மாப்பிளைமார் ஆருக்கேன் கலியாணம் பேசி அவவுக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சுக் குடுக்க வேணும். ஏதாவது ஒரு வழி செய்யுங்கோக்கா. அன்புடன் **** இதென்னடா அநியாயம் விழுந்தது….? நானென்ன கலியாணப் புறோக்கரெண்டு நினைச்சிட்டாங்களோ ? மனிசில சின்னக் கோவமும் வந்தது. இந்த நாலுவரிக்கடிதத்தை எழுதினவனும் ஒர…
-
- 80 replies
- 9.3k views
-
-
இழந்துபோன சிலவற்றின் வாசனைகள்..... (இந்தவார ஒருபேப்பரிற்க்காக எழுதியது) பிரான்ஸில் நானிருக்கும் வீட்டிற்க்கு முன்னால் உள்ள குட்டிப்பூங்கவின் நடுவில் ஓர்க் மரம் ஒன்று ஓங்கி வளர்ந்து கிளை பரப்பி சடைத்திருந்தது.சுற்றிலும் கட்டடங்கள் நிறைந்த மரங்கள் அற்ற சூழழில் வளர்ந்திருந்த அந்த ஓர்க் மரம் பூமியில் தவறி விழுந்த தேவதையைப்போல எப்பொழுதும் வானத்தை அண்ணாந்து பார்த்து தன் தனிமையை நினைத்து அழுவது போலிருக்கும் எனக்கு.அதன் கீழே வட்டவடிவ இருக்கை ஒன்று போட்டிருந்தார்கள்.கோடைகாலங்களில் கிடைக்கும் ஓய்வான நேரங்களில் எனது தனிமையையும் ஊரையும் உறவுகளையும் பிரிந்து வந்த சோகங்களையும் சுமந்து சென்று மனிதர்களின் இடையூறுகள் இல்லாமல் நிறைந்த அமைதியைப் பரப்பிக்கொண்டிருக்கும் அந்தப்பூங்க…
-
- 10 replies
- 2.4k views
-
-
கடந்த ஒரு பேப்பரி இந்தப் பதிவினை ஒரு நிஞாபகப்பதிவாகவே மேலோட்டமாக எழுதியிருந்தேன். அதனை படித்த பலரும் இந்திய இராணுவகாலத்தில் தெய்வேந்திர சர்மா தலைமையில் நடந்த hடுகொலைகளைகளை ஏன் எழுதவில்லையென்றும் இனி வருங்காலத்தில் யாரும் புத்தகங்களையோ பதிவுகளையோ தேடி எடுத்து மினக்கெட்டு படிக்கப்பது அரிழதாகவே இருக்கும் எனவே அவற்றை கணணி பதிவுகளாக்குவது அவசியம் இன்று இல்லாவிட்டாலும் எதிர்வரும் காலத்தில் எமது மக்கள் எதிர்கொண்ட அழிவுகளை எமது சந்ததி அறியவேண்டிய தேவை உள்ளதால் அவற்றை முடிச்தளவு கட்டாயம் எழுதும் படி கேட்டிருந்தனர் எனவேதான் அதன் தொடராக இந்தப் பதிவினை எழுதுகின்றேன். இந்திய இராணுவம் சுதுமலையம்மன் கோயிலை பெரும் எதிர் பார்ப்புடன் முற்றுகையிட்டு அங்கு புலிகள் இல்லாத கார…
-
- 20 replies
- 2.6k views
-
-
சங்கடம் யோ.கர்ணன் அண்மையில் எனது முகப் புத்தகத்திற்கு ஒரு நட்பு வேண்டுகோள் வந்திருந்தது. அவருக்கு மொத்தம் ஐந்து நண்பர்கள். அவரது பிறப்பிடமாக கிளிநொச்சியை குறிப்பிட்டிருந்தார். அவர் ஒரு அனாமதேய நபராக இருக்கலாம் என்ற சந்தேகத்துடன்தான் அவரை நண்பராக எற்றுக் கொண்டேன். எனக்கு சந்தேகம் வர காரணம் ஓரிரண்டு கிளிநொச்சி ‘பொடியள்’ இப்படி பல அனாமதேய கணக்கில் உலாவந்து கொண்டிருக்கிறார்கள் (ஆண்,பெண் பெயர்களில்). நான் நினைத்தது சரியாகவேயிருந்தது. அவர் மிக நாகரிகமாக ஒரு தகவல் அனுப்பியிருந்தார். அதனை ஒரு வரியில் சொன்னால் ‘நீயெல்லாம் உருப்படுவியா’ என்று வரும். உண்மைதான். எனக்கு கூட இந்த சந்தேகம் பல காலமாக இருந்து வருவதுதான். அதுவும் குறிப்பாக கடந்த ஓரிரண்டு வருடமாக அதி…
-
- 26 replies
- 2.6k views
-
-
சின்னனில மாட்ச் கொழுவிறதண்டால் பெரிய விடயம்.கோயிலடியில ஒரு டீமை தொடங்கிபோட்டு பிறகு எதிர்த்து மாட்ச் விளையாட வேறுடீமை தேடி அலையிறது.அதே ஊரிலே பிறகு வடக்கு ,கிழக்கு என்று எங்கட சைசில இருக்கின்ற பெடிகளை தேடிப்போய் வாற சனி மாட்ச் விளையாடுவமோ என கேட்கின்றது ,ஒமேன்று பதில் வந்தால் பிறகு பதினோன்றை சேர்க்க பெரும்பாடு படவேண்டும்.ஆறு அல்லது ஏழு பேர்கள் தான் ஒழுங்காக விளையாடும் மிச்சம் எண்ணுக்கணக்குத்தான்.பிறகு சனி வர இரண்டு மணிபோல் ஒவ்வொன்றாய் போய் பிடித்து கோயிலடிக்கு கொண்டுவர மூன்று மணியாகிவிடும்.மற்ற டீம் வரமட்டும் களைக்ககூடாது என்று பந்த்தை தட்டிக்கொண்டு நிக்கிறது.அவர்கள் வந்து சேர பெரிய சந்தோசம்.நடுவர்கள் இல்லை, எனவே முதலே லைன் எல்லாம் காட்டி அளா ப்பக்கூடாது என்ற வாய்வழி ஒப…
-
- 42 replies
- 4.1k views
-
-
கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 12) உங்கள் மனசாட்சியைத் தொட்டுப் பார்க்கும் என்னுடைய கேள்விகள் தொடர்கின்றது. கேள்வி 18: ''நீதிபதிகளும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல; அவர்களும் மனிதர்களே!'' - சட்டரீதியான, நீதி வழியிலான அற்புதமான இந்தக் கருத்தை பல வழக்குகளில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பதிவு செய்து இருக்கிறார்கள். மிகவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பொய்ச் சாட்சியங்களின் அடிப்படையில் அப்பாவிகள் தண்டிக்கப்பட வாய்ப்பு துளி அளவும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. போதுமான அடிப்படைகளும், ஆதாரங்களும் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளையும், நீதிபதிகளின் முடிவுகளையும் மறுக்கவோ, விமர்சிக்கவோ சம்பந்…
-
- 6 replies
- 2k views
-
-
என்னைக் கவர்ந்த எளுத்தாளர்களில் ந . பிச்சமூர்த்தியும் ஒருவர் . நான் சிறுவயதில் கலைமகளில் அவரின் கதை ஒன்று வாசித்தேன் . பல வருடங்கள் கடந்து மீண்டும் அதே கதையை இணையத்தில் வாசிக்கும் சந்தர்ப்பம் அண்மையில் மீண்டும் எனக்குக் கிடைத்தது . அவரின் இந்தக்கதை 60 களில் வெளிவந்தாலும் , குறிப்பாக எம்மிடையே இப்பொழுது நடக்கின்ற சம்பவங்கழுக்கு ஒரு செய்தியை இந்தக் கதைமூலம் 60 களிலேயே சொல்லியிருப்பது எனக்கு ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது . உங்களுக்காக இதைப் பகிர்கின்றேன்..................................... ஆதிகாலம் முதற்கொண்டே வங்காள வேங்கைக்கும் மூங்கில் கொத்துக்கும் இணை பிரியாத நட்பு. அப்பொழுது மூங்கில்களுக்குப் பொன்வர்ணம் இல்லை. பச்சையாகவே இருந்தன. புலிக்கு வரிகள் இல்லை. பழம் போன்ற …
-
- 6 replies
- 1.5k views
-
-
புலத்தில் மட்டும் அகதியாக இடம் பெயர்ந்து அதன் வலியை உணர்ந்த நான் , என் தாய் மண்ணில் அகதியாக இடம்பெயர்ந்த வலியை உணரத்தவறி விட்டேன் .அவை எனக்கு வெறும் செவிவழிச்செய்திகளே . நெருடியநெருஞ்சியில் , எனது பால்ய சினேகிதி பாமினி மூலம் இடப்பெயர்வின் வலியைத் தொடமுயற்சித்தாலும், அதுவும் எனக்கு ஓர் அனுபவப் பகிர்வில் வந்த வலியே . அண்மையில் என்னை மிகவும் பாதித்த ஓர் பதிவை உங்களுடன் பகிர்கின்றேன்.................................... அந்த நாட்களை எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. என் பாட்டியின் வீட்டிற்கு எப்போதாவது பின்னேரங்களில் சென்று வருவேன்.அப்படித்தான் அந்த 1995 ஐப்பசி மாதம் 30 ஆம் திகதியும் கொழும்புத்துறையில் இருக்கும் பாட்டியைச் சந்தித்து வரச் சென்றேன்.ஆமி முன்னேறி வருவதாகச் ச…
-
- 4 replies
- 1.3k views
-
-
கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 11) எங்களின் தூக்குக்கு எதிராக மொத்தத் தமிழகமும் கைகோத்தபோது, காங்கிரஸ் காரர்கள் மட்டும் கோபத்தோடு எதிர்த் தார்கள். 'மறக்க முடியுமா... மன்னிக்க முடியுமா?’ என உரக்கக் குரல் எழுப்பினர். ராஜீவ் கொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைத் திரட்டி வந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். உண்மையாகவே ராஜீவ் காந்தியின் மீது நேசமும் பாசமும் பூண்டிருக்கும் காங்கிரஸ்காரர்களே... மாண்பையும் மனிதநேயத்தையும் மறவாதிருக்கும் நியாயவாதிகளே... உங்களிடம் எனது நீதிக்கான - உண்மைக்கான சில கேள்விகளை சமர்ப்பிக்கிறேன். உங்களை நீதிபதிகளாக மாறும்படி நான் வேண்ட வில்லை. குறைந்தபட்சம் நீங்கள் உண்மை என்று த…
-
- 0 replies
- 1k views
-
-
அதிகாலை லண்டனில் இருந்து ரவிராஜ் போன் ,அடுத்த கிழமை கனடா வருகின்றேன் ஒரு வார இறுதி நாளை ப்ரீ ஆக வைத்திரு,மற்றது உன்ரை பழைய ஆளின் கணவர் மண்டையை போட்டுவிட்டார் ,எனக்கும் துரத்து சொந்தம் தானே போக இருக்கின்றேன் என்றான் . நான் போனை வைத்துவிட்டு திரும்ப படுத்துவிட்டேன்.பின்னர் அதுபற்றி மறந்தும் விட்டேன். ஏனோ பின்னேரம் போல பழைய படம் ஓடத்தொடங்கியது.அப்போ தான் O/L PASS பண்ணி A/L போன காலம், சோட்ஸ்சும் பான்ஸ்சும் மாறி மாறி போட்ட வயது.பாடசாலை முடிந்ததும் எந்த அலுவல் இருந்தாலும் அதைவிட்டு ஓடிவந்து 3.45 பஸ்ஸை பிடித்து வீடு வந்து ஊரில் இருக்கும் மைதானத்திற்கு ஓடும்காலம்.என்னால் ஏழு நாட்களும் அந்த மைதானத்திற்கு போகாமல் இருக்க முடியாது .CRICKET,FOOTBALL இதுவே எனது LIFE .இரவு வந்து ப…
-
- 50 replies
- 7.4k views
-
-
அரசனும் குதிரைவீரனும் அழியுங்காலத்தின் சனங்களும் ஜெகன் அபூர்வன் பாழடைந்த நூலகத்தின் படிக்கட்டில் அவன் அமர்ந்திருந்தான். புதர்களும் குப்பைகளுமாக சிதறிக்கிடக்கும்; அந்த இடத்தில் சற்றுக்கு முன்புதான் மௌனம் கலையாமல் மரத்தின்கிளைகள் சலசலக்க அந்தப் பட்ஷி பறந்திருந்தது. அவன் நூலகத்தைப் பார்த்தான் புராதன சுவர்களில் எண்ணற்ற வெடிப்புக்களிடையே பசுமை படர்ந்திருந்தது. எல்லா சந்தர்ப்பங்களிலும் கண்டுவிடத்தவறும் ஓவியங்கள் சுவர்களில் மறைந்திருந்தன. ஏராளமான காலடிகளின் ஓசை படிக்கட்டுக்களில் கேட்டுக் கொண்டிருந்தது. யார் வருகிறார்கள்? அவன் திரும்பிப் பார்த்தான் எவருமேயில்லை. ஆனாலும் இடைவிடாத ஓசை கேட்டபடியிருந்தது. அவன் மேலேறிச் சென்றான். புத்தகங்கள் எங்கும் …
-
- 3 replies
- 926 views
-
-
இன்று லண்டன் கட்வீக் விமான நிலையத்தில் நின்றிருந்த போது எனது விமானத்துக்கு சற்று நேரம் இருந்ததால் அங்கிருந்த கடைகளை கண்களால் மேய்ந்தபடியே நடந்து கொண்டிருந்தேன். முதலில் electronic பொருட்கள் இருந்த கடையை வலம் வந்து பின்பு வாசனைத்திரவியங்கள் இருந்த கடையைப் பார்த்த போது தான் நண்பர் தனக்கு ஒரு மதுபான போத்தல் வாங்கி வர உத்தரவிட்டிருந்தது ஞாபகத்தில் வந்தது. எனவே அருகில் இருந்த மதுபான விற்பனைநிலையத்துக்குள் புகுந்து நண்பருக்கான சந்தோஷபானத்தை சீதையை தேடிய அனுமான் போல் தேடியலைந்து கொண்டிருந்தேன். அப்போது "Sir" என்று ஒரு குரல் எனக்கு பின்னால் கேட்க ”நம்மளை யார் இவ்வளவு மரியாதைக் கூப்பிடப்போகிறார்கள்” என்பதால் அதை கவனிக்காது நடக்க முற்பட்டேன். அப்போதும் "Sir, "Sir" என்ற …
-
- 8 replies
- 1.4k views
-
-
அவள் அப்பொழுது நடந்து கொண்டிருந்த இடம் ஒரு சூனிய பிரதேசம் ஒரு ரயில் நிலையமும் கூட...அந்த நாட்டவர்கள் இறங்க முடியாத வேற நாட்டவர்கள் இறங்கி ஏறக்கூடிய இடம்,,அவளுடன் இவ்வளவு தூரம் பயணம் செய்த பொழுது வழித் துணைக்கு வந்தவளைக்கூட யாரோ தெரிந்தவர்கள் கூட்டி சென்று விட்டார்கள் .கூட வந்தவளும் அவளைப் போல அகதியாக வந்தவள் தான் ,,ஏன் அவளை மட்டும் சொல்லுவான்..அந்த நிலையத்துக்குள் நுழைந்தவர்கள் பலரும் அந்த நோக்கத்துட்ன் வந்தவர்கள் தான் .அவர்கள் எல்லாம் இந்த இடத்துக்கு வந்த பின் எல்லாம் வெற்றிக் கரமாக முடிந்து விட்டன என்ற களிப்புடன் கூட்ட வந்தவர்களுடன் சென்று கொண்டிருக்கிறார்கள்.இவளை கூட்ட வரவேண்டியவர்கள் இன்னும் வரவில்லை ..அந்த நிலையத்தில் தீர்வையற்ற விலையில் மதுபானம் எடுக்கலாம் அந்த நோக்…
-
- 13 replies
- 1.6k views
-
-
கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 10) நன்கு தமிழ் பேசத் தெரிந்தவர் என்கிற காரணத்துக்காகவே நளினி சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக, விசாரணை அதிகாரிகள் சொல்கிறார்கள். சம்பவ இடத்தில் நளினி எப்படி நடந்துகொண்டார் என்பதைப் பார்த்தாலே, இது அவரைச் சிக்கவைப்பதற்காகவே புனையப்பட்ட கதை என்பது புலனாகும். அரசுத் தரப்பு ஆவணத்தில் 77-வது பக்கத்தில், ‘சிவராசன் தமிழ்நாட்டுக்காரர் போல் பேசக்கூடிய ஆற்றல்கொண்டவர்’ என எழுதப்பட்டு உள்ளது. அவரே நன்கு தமிழ் பேசும்போது, மொழிப் பிரச்சினைக்காக ஏன் நளினியை அங்கே அழைத்துச் செல்ல வேண்டும்? அரசுத் தரப்பு சான்றுகளின்படி, குற்றமுறு சதியின் உறுப்பினர் ஹரிபாபுவும் (பத்திரிகைப் புகைப்பட…
-
- 0 replies
- 986 views
-
-
ஆமிக்காறருக்கு நாங்களோ உதவி…? சொல்லட்டோ ? சுரேன் கேட்டான். ஓம்...! சொந்த இடம்…..3பிள்ளைகள் ..மூத்த பிள்ளை 19வயது , 2வது பிள்ளை 17வயது….3வது பிள்ளை 11வயது….எழுதிக்கொண்டு வர சுரேன் அவர்களது பெயர்களை வாசித்தான். ஐஞ்சும் கெட்டு அறிவும் கெடுறதெண்டு சொல்றவையெல்லோ அந்த நிலமைலதான் நானும். அண்ணை நீங்களெனக்கு ஆக்களிட்டை அடிவாங்கித்தரத்தான் நிக்கிறியளென்ன…? எங்களுக்கு உதவாட்டிலும் பறவாயில்லை இந்தக் குடும்பத்துக்கு கட்டாயம் உதவுங்கோ….நாங்கல்லாம் நாட்டை நேசிச்சுத்தான் வெளிக்கிட்டனாங்கள். எங்களுக்கு கொள்கை லட்சியமெண்டு எல்லாமிருந்தது…நாங்க உள்ளையிருக்கிறதிலயும் ஞாயமிருக்கு…! ஆனா இந்த 50வயது மனிசன் எங்கடையாக்களுக்கு உதவப்போய்த்தான் இண்டைக்கு இந்தச் சிறையில காய…
-
- 7 replies
- 1.9k views
-
-
அம்மாவுடன் கோவிலுக்கு போவது என்றால் எனக்கு சின்ன வயசில் விருப்பமில்ல,அவர் மூன்றுதரம் கோவிலில் உள்வீதி வலம் வருவார் அவருடன் நானும் வலம் வரவேண்டும் பிறகு வெளிவீதி மூன்று தரம் சுற்ற வேண்டும்.அந்த வயசில் கோவில்கள் மிகவும் பிரமாண்டமாக தெரிந்தன,இதை எப்படி மூன்றுதரம் சுற்றுவது கால் நோகும் என்ற பயம் வேறு,"அம்மா எனக்கு மூன்று தரம் சுற்ற ஏலாது கால் நோகும் ஒரு தடவை மற்றும் சுற்றுகிறேன்" என அழாக்குறையாக கேட்பேன்." தம்பி ஒருதரம் சுற்றினால் பலன் கிடையாது கடவுளின் அருள் கிடைக்க வேணும் என்றால் மூன்றுதரம் சுற்ற வேண்டும், அத்துடன் கோவிலுக்கு போகும் பொழுது நடந்து போனால் இன்னும் அதிக வரம் கிடைக்கும்"என சொல்லுவார். சின்ன வயசு தாய் சொல்லை தட்டாதே என்பது நன்றாகவே மனதில் பதிந்து விட்டத…
-
- 26 replies
- 2.8k views
-
-
இன்று காலை இனிமையாகவே விடிந்தது. நேற்றிருந்த சுகயீனங்கள் இன்றிருக்கவில்லை. சனிக்கிழமை எனவே இந்தக் கிழமை முழுவதும் பின்போடப்பட்ட வேலைகள் நிறையவே இருந்தன. உடுப்புத்தோய்த்தல், கணணி திருத்தவேலைகள் இரண்டு, சப்பாத்துக்கடை, நண்பரின் வீட்டுக்குப் போதல் என்றிருந்தன அவை. முதலில் கணணி திருத்தவேலைக்குப் போனேன். குளிர் -4 என்றிருந்தது. வாகனத்தை நிறுத்தி வீட்டின் முன் கேட் கதவில் கையை வைக்கிறேன். வொவ் வொவ் என்று குரைத்தபடியே நாக்கை தொங்கப்போட்டபடியே பாய்ந்து வந்து கொண்டிருந்தது ஒரு அல்ஷேசன் நாய். என் இதயம் வாய்க்குள் பாய்ந்து வந்த மாதிரி இருந்தது எனக்கு. கேட்டில் இருந்த கையை எடுத்து பின்னால் வைத்துக் கொண்டேன்.. ஒரு தற்பாதுகாப்புக்காக. இரு தரம் குலைத்த பின் கேட்டிற்கு முன்னா…
-
- 2 replies
- 1.6k views
-