Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. மாமனிதர் இராஐரட்னம் அவர்களுக்கு இறுதி வணக்கம்: [Friday, 2014-06-20 20:11:40] ஈழத்தமிழினத்தின் உரிமைப் போரை மனதில் நிறுத்தி நீண்டகாலம் அயராது உழைத்த மாமனிதர் இராஐரட்னம் தனது 89வது வயதில் அமெரிக்காவில் காலமானார். தமிழீழத்தின் வடமராச்சி அல்வாயில் பிறந்தவர் இவர். சிங்கர் இராஐரட்னம் என ஆரம்ப காலத்தில் பலராலும் அறியப்பட்ட இராஐரட்னம் அவர்கள் தமிழர் உரிமைப்போர் தீவிரமடையாத தனது இளமைக் காலத்தில் இருந்தே ஈழத்தமிழர் விவகாரத்தில் அதீத அக்கறையும் நீண்ட தொலைநோக்குப் பார்வையும் கொண்டவராக செயற்பட்டார் என்பது பலரும் அறியாத அதியுட்சசெயற்பாடு. அத்தகைய ஒரு நிலையை அவர் கடைசி வரை பேனினார் என்பதே ஒரு வரலாற்று அதிசயம். படம் போடுவதற்காவும் அறிக்கைகள் விடுவதற்காகவும் …

    • 9 replies
    • 1.3k views
  2. களஉறவு குமாரசாமியின் நெருங்கிய உறவு அகாலமரணம். களஉறவு குமாரசாமி அண்ணன் இன்று ஒரு தகவலை தனிமடலில் எழுதியிருந்தார். தனது நெருங்கிய குடும்ப உறவு ஒருவர் சென்ற செவ்வாய்கிழமை அகாலமரணமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தொலைபேசி தொடர்பில் உள்ளவர்கள் தொடர்பு கொண்டு கதையுங்கள். நேரில் சென்று பங்கேற்கக்கூடியவர்கள் சென்று துயரில் பங்கேற்றால் அவருக்கு சற்று ஆறுதலாக இருக்கும். தன்னால் இத்துயரிலிருந்து மீள முடியாதுள்ளதாக எழுதியிருக்கிறார். தகவல் மிகவும் கவலை தருகிறது. அவதிப்படுவோருக்கு தனது சுமைகளையும் பாராமல் ஓடிவந்து உதவும் ஒரு உறவு. தற்போது மீள முடியாத துயரில் இருக்கிறார். உங்கள் துயரில் நாங்களும் பங்கேற்கிறோம் குமாரசாமி அண்ணா. மனசை ஆற்றுப்படுத்திக் கொண்டு ஆறுதலாக வாருங்கள…

    • 64 replies
    • 5.3k views
  3. சுண்டலின் மாமாவின் இழப்பினால் துயருற்று இருக்கும் சுண்டலுக்கும் , அவரது குடும்பத்தினருக்கும் , உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .

  4. மே 18, 19 ஆகிய தினங்களில், முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின்போது, படுகொலை செய்யப்பட்ட‌ அப்பாவி பொதுமக்கள் ஒவ்வொருவரையும் இந்த நாட்களில் நினைவு கூறுகின்றேன். அனியாயமாக கொல்லப்ப்ட இந்த ஒவ்வொரு ஆத்மாக்களையும் கடவுள் பாதத்தில் சமர்ப்பிக்கின்றேன், அவர்கள் ஆத்மா சாந்திஅடைவதாக!. அவர்களை இழந்த உறவினர்கள் ஒவ்வொருவருக்கும் கடவுள்தாமே ஆறுதலாக இருப்பராக!. நினைவஞ்ச‌லிகள்!

  5. இந்திய அமைதிப்படையின் காலத்தில் EPRLF துரோகக் கும்பலால் படுகொலைசெய்யப்பட்ட யாழ் பரி. யோவான் கல்லூரி மாணவர் அகிலன் அண்ணாவின் 25வது நினைவு நாள் இன்றாகும். அன்னாருக்கு இதயம் நெகிழந்த கண்ணீர் வணக்கங்கள்.!!!

  6. உதயன் பத்திரிகைகை நிறுவனத்தின் மீது காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 8 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளதை அடுத்து ஊடகத்திற்காய் உயிர்நீத்த எமது சக பணியாளர்களான சுரேஸ் மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோரது நினைவு அஞ்சலி இன்று காலை 10 மணியளவில் உதயன் பணிமனையில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,வடமாகாண சபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், இ.ஆனல்ட், வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன், நல்லூர் பிரதேச சபை உறுப்பினரும் - நல்லூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவருமான பொ.கனகசபாபதி ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் உதயன் பணியாளர்களும் இந்த நிகழ்வில் பங்கெடுத்தனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=27…

  7. கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்- மாய யதார்த்தத்தின் முன்னோடி சத்யானந்தன் நோபல் பரிசு பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் மார்க்வெஸ் மரணமடைந்தார். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என இவரது படைப்புகள் உலக அளவில் மொழிபெயர்க்கப் பட்டு வாசிக்கப் பட்டு விவாதிக்கப் பட்டவை. 1967ல் வெளியான One hundred years of Solitude என்னும் இவரது நாவல் இவரது படைப்புகளில் ஆகச் சிறந்தது என்று கூறலாம். 18ம் நூற்றாண்டில் மகாண்டோ என்னும் மிகவும் சிறிய கிராமம் புயந்தியஸ் என்னும் ஒரு குடும்பத்தினரால் விவசாயத் தொழிலை மையமாகக் கொண்ட சிறு நகரமாக உருவெடுக்கிறது. ஜோஸ் அர்காடியோ புயந்தியா குடும்பத் தலைவர். அவர் கிராமத்தின் மையமாகவும் தலைமையாகவும் செயற்படுவரும் ஆவார். அந்தக் கிராமத்தின் மிகப் பெரிய தனி…

  8. சாந்தினி அற்புதசீலன் அவர்கள் புற்றுநோயோடு சில ஆண்டுகளாக போராடி இன்று (03.04.2014) தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டுள்ளார். சாந்தினி அக்காவை இழந்து துயரில் வாடும் மகள் சர்மியா, மகன் குகஜித், துணைவர் சீலண்ணா உங்கள் துயரில் நாங்களும் பங்கேற்கிறோம். சாந்தினி அற்புதசீலன் அவர்களது மரணச்செய்தியை அவரை அறிந்த தெரிந்தவர்களுக்கு இத்தால் அறியத் தருகிறேன்.

  9. இலக்கிய வழிகாட்டியாகவும் பொதுவுடைமைச் சிந்தனையாளராகவும் தமிழ்த் தேசியச் சான்றோராகவும் விளங்கிய தோழர் தி.க.சி. அவர்கள் 25.03.2014 அன்று இரவு காலமானார் என்ற செய்தி பேரதிர்ச்சியை உண்டாக்கியது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தோழர் தி.க.சி. அவர்களுக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மார்க்சிய லெனினியத்தின் மீது நீங்காத பற்றுறுதி கொண்ட தோழர் தி.க.சி., அந்தந்த மண்ணுக்கேற்ப மார்க்சியம் பயன்படுத்தப்படவேண்டும் - வளர்க்கப்படவேண்டும் என்ற தெளிவில் உறுதியாக இருந்தார். கடந்த பத்தாண்டுகளாக தி.க.சி. அவர்களோடு எனக்கும் தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்களுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. தமிழர் கண்ணோட்டம் இதழில் வரும் கட்டுரைகள் மற…

  10. குடித்து ரொம்பக் காலம் ஆயிற்றே என்று, சென்ற வாரத்தில் ஒருநாள் மதியம் ரெமி மார்ட்டினுடன் அமர்ந்தேன். தொட்டுக்கொள்ள ஒரு சாலட் செய்தேன். தக்காளி, வெங்காயம், முள்ளங்கி, கோவைக்காய், ஸுக்னி, ஆலிவ் காய், முட்டைக்கோஸ், கேரட் (துருவியது), கேப்ஸிகம் ஆகிய ஒன்பது அயிட்டங்களை பொறுமையாக வெட்டிப் போட்டு, எலுமிச்சைப் பழம் பிழிந்து செய்த சாலட். அப்போதுதான் குஷ்வந்த் சிங்கின் மரணச் செய்தி வந்தது. 'என்ன ஓர் ஒற்றுமை?!’ என்று நினைத்துக்கொண்டேன். குஷ்வந்த், தன்னை ஒரு குடிகாரன் என்றும், ஸ்த்ரீலோலன் என்றும் சொல்லிக்கொண்டவர். 'எனக்கு ராகிமால்ட் வேண்டாம்; சிங்கிள் மால்ட் விஸ்கி போதும்’ என்பார். பெண்களைப் பற்றி, தனது 97-ம் வயது முடிந்தபோது இப்படிச் சொன்னார், 'பெண்களை தாயாகவும், சகோதரியாகவும், ப…

  11. கலைத்தாயின் குழந்தையை இவ்வுலகம் இழந்து இன்றுடன் நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. . ஆம்! கவிஞனாக,பாடகனாக,எழுத்தாளனாக, ஓவியனாக, நாடகக் கலைஞனாக, பின்னணிக் குரல் கலைஞனாக என கலையின் அத்தனை அம்சங்களையும் தன்னுள் சுமந்து வாழ்ந்த ஸ்ரீதர் என்ற சகாப்தம் என்றுமே எம் மனதை விட்டு நீங்கப்போவதில்லை. நான்கு வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் ஸ்ரீதர் பிச்சையப்பா இறந்துவிட்டார் என்ற செய்தியை எழுதிக் கண்ணீர் வடித்ததை இன்றும் மறக்க முடியாது. யாராலும் எதைக்கொண்டும் எப்போதும் ஈடு செய்ய முடியாத இழப்பு அது. பல்துறைக் கலைத்துவம் யாருக்கும் இலகுவில் வாய்த்துவிடுவதில்லை. அது ஒரு வரம். அந்த வரத்துக்குச் சொந்தக்காரராக உலகம் முழுவதும் வலம் வந்த ஸ்ரீதர் பிச்சையப்பாவை கலையுலகம் இன்றும் போற்றுகிறது. ஸ்…

  12. சென்னை: மூத்த இயக்குநர், தமிழ் சினிமாவின் மிக முக்கிய படைப்பாளி பாலுமகேந்திரா உடல்நலக் குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 74. இலங்கையின் மட்டக்களப்பில் 1934-ல் பிறந்த தமிழரான பாலு மகேந்திரா ஒரு ஒளிப்பதிவாளராகத்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். பாலு மகேந்திரா 1977-ல் கோகிலா படம் மூலம் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார் பாலு மகேந்திரா. இது ஒரு கன்னடப் படம். இந்தப் படம் நேரடியாக தமிழகத்தில் வெளியாகி வெள்ளி விழா கண்டது. தமிழகத்தில் அத்தனை பெரிய வெற்றி பெற்ற கன்னடப் படம் இதுவாகத்தான் இருக்கும். தமிழில் அவர் இயக்கிய முதல் படம் அழியாத கோலங்கள். அந்தப் படத்தில் தொடங்கிய அவரது திரைப் பயணம் ஒரு அழகிய நதியைப் போல தெளிவாக இருந்தது. ஆர்ப்பாட…

  13. 21 ஜனவரி 2014 அண்மையில் அகால மரணமடைந்த யாழ்ப்பல்கலைக்கழக மாணவியான வித்தியா(அம்முக்குட்டி) அவர்களின் நினைவாக எழுத்தாளர் சோபாசக்தி எழுதிய குறிப்பிது. இளம் வயதில் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்கிற படைப்பாளிகளின் உணர்வுகளின் போராட்டமும் மரணத்தை நோக்கிய அவர்களின் நகர்வுக்கான காரணங்களும் அவர்களுக்கு மட்டுமே தெரியும். ஓவியர் பாடகர் கவிஞர் எனப்பலபரிமாணங்களைக் கொண்ட வித்தியாவின் மரணம் சிவரமணியின் மரணத்தை நினைவூட்டுகிறது. சமூக உளவியல் பற்றியும் தனிமனித உளவியல் பற்றியும் மன வடுக்கள் பற்றியும் ஆழமான அறிவும் பிரக்ஞையும் வளர்த்தெடுக்கப்படும் போது இத்தகைய இளவயது மரணங்களை குறிப்பாக மனிதர்களின் தற்கொலை முனைப்புணர்வுகளைப் (Suicidal ideation) பற்றிப் புரிந்து கொள்வது சாத…

  14. சென்னை: பழம்பெரும் நடிகையான அஞ்சலி தேவி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அஞ்சலி தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவனே கண்கண்ட தெய்வம், அனார்கலி உள்ளிட்ட ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளா

  15. சபேசன் அண்ணாவின் தந்தை வெள்ளியன்று காலமாகி இருப்பதாக Facebook இல் கூறி இருக்கின்றார் ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா கடந்த வெள்ளிக் கிழமை எனது தந்தை இயற்கை எய்திவிட்டார். அப்படி ஒன்று அதிக வயது இல்லை. வெறும் 65தான். மாரடைப்பு அவரை கொண்டு போய் விட்டது. செய்தி கேட்டதும் அடித்துப் பிடித்து முப்பது மணித்தியாலங்கள் பயணம் செய்து ஓடி வந்தேன். 3 நாள் அப்பாவின் உடல் எனக்காக காத்திருந்தது. பெற்றோர்களின் கடைசிக் காலங்களில் பக்கத்தில் நிற்க முடியாத ஒரு துர்ப்பாக்கியம் மிகுந்த சமூகமாக ஆகி விட்டோம் என்பது பெரும் வேதனையை தருகிறது. எனக்கு இன்னும் சரியாக புரிபடாத கிழக்கு மாகாணத்தின் பாதைகளில் நாளை நான் நடந்து செல்கின்ற போது, விரல் பிடித்துச் செல்ல அவருடைய கரம் இருக்கிறது என்கின்ற நம்பி…

  16. 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் குள்ளமணி காலமானார். உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் குள்ளமணி நேற்றிரவு காலமானார். கரகாட்டக்காரன், பில்லா, இணைந்த கைகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் குள்ளமணி. தற்போது 65 வயதாகும் குள்ளமணி கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று இரவு 9 மணிக்கு அவர் உயிரிழந்தார். அன்னாருடைய உடல் அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள மரமடக்கி கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) அங்கு அவரது உடல் அடக்கம் செய்யப் …

  17. ஈழத்தின் பிரபல நாடகக் கலைஞரும் ஊடகவியலாளருமான டேவிட் ராஜேந்திரன் கடந்த 19-ம் திகதி வியாழக்கிழமை லண்டனில் காலமானார். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சில் வசித்து வந்த டேவிட் ராஜேந்திரன், ஓரிரு மாதங்களுக்கு முன்னரே லண்டனில் குடியேறி சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இலங்கை வானொலி என்ற பெயரில் இயங்கி வந்த 1960-களின் பிற்பகுதியில் அந்த நிறுவனத்தில் தொழில் நுட்ப பொறுப்பாளராகப் பணியாற்றத் தொடங்கிய டேவிட் ராஜேந்திரன், அன்றைய நாட்களில் நேயர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்ற கிராமியப் பாடல்கள் நிகழ்ச்சியின் தொழில்நுட்பப் பொறுப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாள…

  18. தமிழ்த் தேசிய ஊடக உலகில் பிரசித்தி பெற்ற ஒலிபரப்பாளராக விளங்கிய திருமதி கௌசி ரவிசங்கர் அவர்கள் காலமானார். 2009 மே 18இற்கு முன்னர் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களின் நிர்வாகத்தின் கீழ் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் – தமிழ் (ஐ.பி.சி) இயங்கிய காலத்தில் அதன் ஒலிரபரப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கௌசி ரவிசங்கர் கடமையாற்றினார். அக்காலப் பகுதியில் தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில் (ரி.ரி.என்) கலை நிகழ்ச்சிகள் சிலவற்றையும் கௌசி ரவிசங்கர் தொகுத்து வழங்கினார். 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முகமாலையில் யாழ் - கண்டி நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பொழுது அங்கிருந்தவாறு ரி.ரி.என் தொலைக்காட்சிக்கும், ஐ.பி.சி வானொலிக்கும் நிகழ்வுகளை அவர் …

  19. எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை காலமானார். எழுத்தாளர் ஸ்ரீவேணுகோபாலன் என்ற புஷ்பா தங்கதுரை இன்று மாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது (82)அவர் உடல்நலக் குறைவால், கடந்த இரண்டு வாரங்களாக ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு வென்டிலேட்டர் கருவி மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை இவர் காலமானார். திருமணமாகாததால் இவர் தனது சகோதரி வீட்டில் வாழ்ந்து வந்தார். 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' மற்றும் 'நந்தா என் நிலா' போன்ற இவரின் குறிப்பிடத்தகுந்த படைப்புகள் திரைப் படங்களாகவும் எடுக்கப்பட்டிருக்கின்றன. -தினமணி-

  20. நடிகர் திடீர் கண்ணையா மரணம்! சென்னை: பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் திடீர் கண்ணையா நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 76. நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த "திடீர்' கண்ணையாவுக்கு கடந்த மாதம் நுரையீரலில் சளி அதிகமானதால் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவர் காலமானார். சென்னையைச் சேர்ந்த கண்ணையா சிறு வயதில் இருந்தே பல்வேறு நாடகக் குழுக்களில் பணியாற்றியுள்ளார். 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் முதன் முதலாக திரைத்துறைக்கு அறிமுகமான அவர், இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்…

  21. யாழ்கள கருத்தாளரான வசம்பு அவர்கள் மாரடைப்பால் மரணமடைந்ததாக செய்தியொன்றில் படித்தேன். அதனை இங்கு பதிவிடுகிறேன். திரு சிவஞானசுந்தரம் கிருபானந்தன்(வை.சி) மறைவு : 18 ஒக்ரோபர் 2010 அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் கிருபானந்தன் அவர்கள் 18.10.2010 திங்கட்கிழமை அன்று காலாமானார். அன்னார், காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் பத்மாவதி தம்பதிகளின் கனிஷ்டபுதல்வனும், காலஞ்சென்ற இளையகுட்டி சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும், சத்தியபாமா(Eriswil) அவர்களின் அன்புக் கணவரும், பிரதீபன், கௌரிசங்கர்(கௌசி), பிரியங்கா ஆகியோரின் அன்புத்தந்தையும், நளாயினி(கனடா), தயாளன்(சுவிஸ்), நித்தியானந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தம்பியும், பால…

    • 144 replies
    • 20k views
  22. குடும்பத்தில் பெரியவராகப் பிறந்துவிட்டதால் பா ராமச்சந்திர ஆதித்தனை உறவினர்களும் ஊழியர்களும் பெரிய அய்யா என்று அழைத்தனர். ஆனால் தன் குணத்தாலும் பண்பாலும் கூட அவர் பெரிய அய்யாவாகவே திகழ்ந்தவர் என்றால் மிகையல்ல. தன் ஊழியர்களைப் பார்த்துக் கொள்வதில் அவருக்கு நிகரானவர் இல்லை. அவரது மாலை முரசு, கதிரவன், தேவி, கண்மணி, பெண்மணி போன்ற பத்திரிகைகளில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவருமே நினைவு கூரும் விஷயம், ஊழியர்களுக்கு சம்பளம் தருவதில் பெரியவர் காட்டிய நேரம் தவறாமை. எத்தனை பெரிய நெருக்கடியிலும் சம்பளத்தை மட்டும் 7-ம் தேதியோ அல்லது அதற்கு ஒரு நாள் முன்னதாகவோ தந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அவர். 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அல்லது விடுமுறை தினம் என்றால் ஒரு நாள் முன்…

    • 13 replies
    • 1.4k views
  23. சரிநிகர் பத்திரிகையில் தனது ஊடக பணியை ஆரம்பித்து, பின்னர் தினக்குரல் பத்திரிகையில் நீண்ட காலம் பணியாற்றிய ஊடகவியளாளரான ஆரையம்பதி பரமகுட்டி மகேந்திரராஜா என்ற ரவிவர்மன் அமரத்துவம் அடைந்துள்ளார். நண்பர் ரவிவர்மன் கலைத்துவமான பல படைப்புகளையும், செய்தி ஆக்கங்களையும், கட்டுரைகளையும் தந்த நல்லதொரு படைப்பாளியாய் எம்முடன் பயனித்தவர். 1980களின் நடுப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழத்தில் (புளொட்), மது என்ற பெயரில் உறுப்பினராக இருந்த றவிவர்மன் பின்நாளில் ஊடகத் துறையில் தன்னை இணைத்துக்கொண்டார். அவரது மெய்யுடல் நாளை (2013.10.07) மாலை 6.00 மணி வரை கொழும்பில் அவர் வசித்த இல்லத்தில் வைக்கப்படும் என்றும் அதன் பின் அவரது பிறப்பிடமான ஆரையம்பதிக்கு கொண்டு செல்லப்படும் எனவும் க…

  24. இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான எஸ்.நடராஜா நேற்று சனிக்கிழமை காலமானார். " நடா" என்று அழைக்கப்பட்ட எஸ்.நடராஜா வீரகேசரி பத்திரிகையில் 4 தசாப்தங்களாக பணியாற்றியதுடன் 1997 முதல் 2005 ஆம் ஆண்டுவரை முன்னாள் பிரதம ஆசிரியராகவும் அவர் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=7521

    • 6 replies
    • 891 views
  25. Gari அவர்களின் தாயார் காலமாகிவிட்டார். கள உறவுகளுக்கு தெரியப்படுத்துகிறேன். தாயக மக்களுக்கான பணிகளில் எம்மோடு தோழ்கொடுத்து நிறைய பணிகளைச் செய்து கொண்டிருக்கும் Gariஅவர்களின் துயரில் நாமும் பங்கேற்கிறோம்.

    • 61 replies
    • 4.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.