Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் அவுஸ்த்திரேலியாவில் வசித்து வந்தவருமான திரு. நோயேல் ஹரன் அவர்கள் இன்று அதிகாலை கொழும்பில் அகால மரணமானார். இவர் ஜுலிட்டா அவர்களின் அன்புக் கணவரும், ஹரினி, ஜெயஹரன் ஆகியோரின் அன்புத் தகப்பனும் ஆவார். 39 வயதே நிறைந்த நோயேல் ஹரன் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி பழைய மாணவரும், மொரட்டுவை பல்கலைக் கழகத்தில் கட்டிடத்துறையில் பட்டம் பெற்றவருமாவர். தனது பட்டப் படிப்பின் பின்னர் மத்திய கிழக்கில் சுமார் 7 வருடங்கள் பணியாற்றிய ஹரன், 2005 இலிருந்து அவுஸ்த்திரேலியாவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். தகவல் : ரஞ்சித்

  2. லண்டனில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மாலதி படையணி முன்னாள் போராளி உயிரிழப்பு.! இலண்டன் லூசியம் பகுதியில் வாழ்ந்துவந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாலதி படையணி போராளியான தமிழன்பு என்று அழைக்கப்பட்ட பா சுபாசினி அவர்கள் உடல் நலக்குறைவால் சாவடைந்துள்ளார். தமிழீழ தேச விடுதலைப்போரில் கிளாலிப்பகுதியில் ஏற்பட்ட மோதலில் தனது காலை இழந்த இவர் பின்னர் கணனிப்பிரிவுடன் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது . அத்துடன் போரின் கொடூர பக்க விளைவுகளால் மிகவும் கடுமையான வலிகளை சுமந்தபடி லண்டனில் வாழ்ந்து வந்த ஒரு பிள்ளையின் தாயான இவர் அன்று (22/11/2020) மரணமானார். https://newsthamil.com/லண்டனில்-தமிழீழ-விடுதலைப/

    • 11 replies
    • 1.3k views
  3. இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ள…

  4. இற்றைக்கு 33 வருடங்களுக்கு முன் இதே தினம் சிரிலங்காவின் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்த கொலை வெறி. யாழில் 1974ம் வருடம் ஜனவரி மாதம் 10 திகதி நான்காவது உலகத் தமிழாராச்சி மாநாட்டின் கடைசி நாளன்று மாநாட்டில் பங்கு பற்றியவர்கள் மீது தாக்குதல் நடத்தி சிங்கள அரசு பத்துப் பேர் வரையிலான தமிழ்மக்களை உலகத் தமிழ் அறிஞர்களின் முன் கொன்றோழித்தது தனது இனவாத முகத்தை உலகுக்கு உணர்த்தியது. இந்த நிகழ்வும் எமது தமிழர் எழுச்சிக்கு ஒரு தூண்டுகோலாக இருந்தது எனலாம். தமிழரின் வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாக இச் சம்பவமும் பதியப்படுகின்றது. ஈழத்திலிருந்து ஜானா

  5. ஈழப்பற்றாளர் கிருஸ்ணமூர்த்தி மாஸ்டர் சிட்னியில் காலமானார். தாயக விடுதலையை ஆழமாக நேசித்த கிருஸ்ணமூர்த்தி மாஸ்டர் தமிழீழ விடுதலைக்கு அமைதியாக அரும்பணியாற்றினார். அமைதியான சுபாவமும் அப்பழுக்கற்ற ஈழப்பற்றும் கொண்ட கிருஸ்ணமூர்த்தி மாஸ்டர் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் பல தடவை தமிழீழத்துக்குச் சென்று பல ஆண்டுகள் தங்கியிருந்து பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் தன்னால் இயன்ற சேவைகளைச் செய்தார். உயரிய மானிடப் பண்பு கொண்ட கிருஸ்ணமூர்த்தி மாஸ்டர் அவர்களை அறிந்த தமிழீழ மக்கள் அவரின் சேவைகளை என்றும் நினைவிற்கொள்வர். ஈழப்பற்றாளர் கிருஸ்ணமூர்த்தி மாஸ்டர் அவர்களின் சேவைகளை நினைவுகூருவதோடு அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு தமிழ்லீடர் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின…

  6. கிழக்கு லண்டன்... நியுகாம் தொழிற்கட்சி கவுன்சிலராக பல ஆண்டுகள் மக்களால் தெரிவு செய்யப்பட்டு வந்த போல் சத்தியநேசன் உடல்நலன் குறைவு காரணமாக கடந்த 5ம் திகதி காலமானார். இவர் அடிப்படையில் புளொட் அமைப்புச் சார்ந்தவராக இருந்தாலும்.. புலம்பெயர் மண்ணில்.. தமிழீழத்துக்கு சார்பான நிகழ்வுகளை முன்னின்று நடத்துவதிலும் பிரித்தானியர்களிடம் தமிழ் மக்களின் பிரச்சனைகளைக் கொண்டு செல்வதிலும் முக்கிய பங்காற்றியவர் ஆவார். 1980 களில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்களுக்கு அரசியல் தஞ்சம் கிடைக்க பல வழிகளிலும் இவர் தன் உதவிகளை வழங்கி வந்திருப்பது தெரிந்ததே. கடந்த சில காலங்களாக தாயகத்தில் சில வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வந்திருக்கிறார். இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் இன்…

      • Thanks
      • Sad
    • 11 replies
    • 1.3k views
  7. 'விடைகொடு எங்கள் நாடே' பாடிய பாடகர் மாணிக்க விநாயகம் விடை பெற்றார். ஆழ்ந்த இரங்கல்! பாடகரும், நடிகரும் , இசையமைப்பாளருமான மாணிக்க விநாயகம் அவர்கள் மறைந்த செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். இளம் நடிகர்கள் பலரின் படங்களுக்கு இவர் பாடிய பாடல்களைக் கேட்டபோது நான் அவரை ஓரிளைஞராகவே எண்ணியிருந்தேன். பின்னரே அவர் திரைத்துறைக்குப் பாட வந்ததே அவரது ஐம்பது வயதில் என்பதையறிந்து வியந்தேன். ஆழ்ந்த இரங்கல். இவர் பிரபல நாட்டிய ஆசிரியராக விளங்கிய வழுவூர் பி.இராமையாப்பிள்ளையின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது நினைவாக அவர் பற்றியதொரு காணொளி. இக்காணொளியிலுள்ள பாடல் இவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பாடிய பாடல். மிகுந்த வரவேற்பைப்பெற்ற பாட…

    • 14 replies
    • 1.3k views
  8. Started by akootha,

    [size=4]தெய்வநாயகம் என்றவுடனே நம் தமிழ் உணர்வாளர்களுக்கு நினைவுக்கு வருவது தி நகர் தெய்வநாயகம் பள்ளி தான் .உச்ச கட்டமாக ஈழத்தில் போர் நடந்த நேரத்தில் கருணாநிதி அரசின் கெடுபிடியால் ,ஈழ படுகொலை குறித்த நிகழ்ச்சிகளை நடத்த பொது இடத்திலும், தனியார் இடங்களிலும் எவரும் அனுமதி மறுத்த நிலையில் , ஈழம் சார்ந்த பல நிகழ்ச்சிகளுக்கு தன் கதவை திறந்து விட்டது இப்பள்ளி நிகழ்ச்சி ,பொது கூட்டம் என கேட்டதற்க்கெல்லாம் அனுமதித[/size][size=4]ததோடு .அதர்க்கு மிக குறைந்த வாடகையாக 1000,2000 மட்டுமே வாங்கினர், என்பது ஈழம் சார்ந்த தமிழக போராட்ட வரலாற்றில் பதிவான செய்தி.[/size] [size=4]ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவிய கண்காட்சியாகாட்டும் 2010,2011 நடத்திய மாவீரர் தின நிகழ்வு ,பல கருத்தரங்குகள் ,ந…

  9. 27.08.1992ம் ஆண்டு யாழ். மாதகல் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் ராஜன் அவர்களின் 18ம் ஆண்டு நினைவும் 27.08.1995 அன்று அம்பாறை மாவட்டம் வம்மியடிக்குளம் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் ரஞ்சன்(மாருதியன்) அவர்களின் 15ம் ஆண்டு நினைவும் இன்றாகும். உறுதியின் உறைவிடம். அன்றையநாள் தமிழீழத்திற்குத் துயரந்தரும் நாளாய் விடிந்தது. அன்று காலைதான் ராஜன் எம்மைவிட்டுப் பிரிந்தான். முதல்நாள் மாலை, பண்டத்தரிப்பில் நின்ற போராளிகளைப் பார்க்க வந்த ராஜனிடம், எதிரியின் சிறிய படையணி ஒன்றின் மீதான சிறியதாக்குதல் திட்டம் ஒன்றைக் கூறினர் கோபியும் தோழர்கள…

  10. ஆத்தியடி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் யேர்மனி மன்கைம் நகரத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட மாவீரர்களான கப்டன் மொறிஸ், கப்டன் மயூரன், பிரேமராஜன் மாஸ்டர் (தீட்ஷண;யன்- நாட்டுப்பற்றாளர்) ஆகியோரின் தாயாரான திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்கள் தனது 88 வது வயதில் ஜேர்மனியில் 18.05.2022 ஆம் நாளன்று காலமானார். கப்டன் மொறிஸ் - பருத்தித்துறை பிரதேசப் பொறுப்பாளராக இருந்து 1989 இல் இந்திய இராணுவத்துடன்(ஐPமுகு) ஏற்பட்ட நேரடிமோதலின்போது வீரமரணத்தைத் தழுவியிருந்தார் . கப்டன் மயூரன் - இவர் எமது தேசியத்தலைவரின் பிரத்தியோக மெய்ப்பாதுகாவலராக பல ஆண்டகள் சேவையாற்றி 1993 இல் விடுதலைப் புலிகளால் சிறப்பாத் திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட பூநகரி இராணுவமுகாம் மீது தவளைப் பாய்ச்சல் ந…

  11. "மேகம் கருக்கையிலே.." புகழ் காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார் சென்னை: பழம் பெரும் நடிகர் "வெள்ளை சுப்பையா" உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. திரையில் பார்க்கும் காமெடி நடிகர்கள் வேறு, சொந்த வாழ்க்கையில் அவர்களின் நிலை வேறு என்பதற்கு அடுத்த உதாரணம்தான் வெள்ளை சுப்பையாவின் மரணமும். பெரும்பாலும் திரையில் பார்க்கும் காமெடி நடிகர்களின் வாழ்க்கை வறுமை கலந்த கண்ணீருடன்தான் முடிவு பெறுகிறது. வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் சுப்பையா. வெள்ளை சுப்பையா நடிக்க வந்த புதிதில் சுப்பையா என்ற பெயரில் நிறைய பேர் இருந்தார்கள். வெள்ளை சுப்பையா, எஸ்.வி.சுப்பைய…

    • 2 replies
    • 1.3k views
  12. பிரபல எழுத்தாளர் பூநகரான் குகதாசன் மாரடைப்பால் மரணம்! [Tuesday 2015-04-28 20:00] பூநகரான் என்னும் புனைபெயரில் ஊடகங்களில் சமுக மற்றும் அரசியல் ஆய்வு கட்டுரைகளை எழுதிவந்த குகதாசன் பொன்னம்பலம் அவர்கள் கனடாவில் மாரடைப்பால் காலமானார். ஏயர் கனடா(Air Canada ) விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றியவரும், இலங்கையில் தபால் அதிபராக தபால் திணைக்களத்தில் பணியாற்றியவரும், எழுத்தாளரும் கவிஞருமாக சமூகத்தில் நன்கு அறியப்பட்டவரும் கனடா உதயன் பத்திரிகையின் தொடர் எழுத்தாளருமான “ பூ ந க ரா ன் கு க தா ச ன்” நேற்று கனடாவின் மேபிள் ( Maple) நகரில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அனைத்து நண்பர்களுக்கும் அறியத்தருகின்றோம். …

  13. தமிழ்த் தேசிய ஊடக உலகில் பிரசித்தி பெற்ற ஒலிபரப்பாளராக விளங்கிய திருமதி கௌசி ரவிசங்கர் அவர்கள் காலமானார். 2009 மே 18இற்கு முன்னர் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களின் நிர்வாகத்தின் கீழ் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் – தமிழ் (ஐ.பி.சி) இயங்கிய காலத்தில் அதன் ஒலிரபரப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கௌசி ரவிசங்கர் கடமையாற்றினார். அக்காலப் பகுதியில் தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில் (ரி.ரி.என்) கலை நிகழ்ச்சிகள் சிலவற்றையும் கௌசி ரவிசங்கர் தொகுத்து வழங்கினார். 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முகமாலையில் யாழ் - கண்டி நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பொழுது அங்கிருந்தவாறு ரி.ரி.என் தொலைக்காட்சிக்கும், ஐ.பி.சி வானொலிக்கும் நிகழ்வுகளை அவர் …

  14. சிறீலங்காவில் பெற்றோலின் விலை உயர்வு சிறீலங்கா அரசாங்கத்திற்கு சொந்தமான பெற்றோலிய கூட்டுத்தாபனங்களில் எதிர்வரும் ஈண்டில் இருந்து பெற்றோலியத்தின் விலை அண்ணளவாக ரூ5 ஆல் அதிகரிக்கும் என சிறீலங்கா பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார். ஆனாலும் டீசலின் விலையில் மாற்றம் ஏற்படாது எனவும் ரூபாயின் பெறுமதியின் வீழ்ச்சியே இதற்கு காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 2 replies
    • 1.3k views
  15. Started by oviyan,

    இலங்கை, அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இலண்டன் குறைடனை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சிறிதரன் (சிறி) அவர்கள் 13-12-2007 அன்று இலண்டனில் காலமானார். அன்னார் செல்லத்துரை ஞானதேவி (புனிதம்) தம்பதியினரின் அன்பு மகனும் செல்வகுமாரி (செல்வி) அவர்களின் அன்புக் கணவரும் சாரசி, கபிலன், சாறோன் ஆகியோரின் அன்புத் தந்தையும் காலஞ்சென்ற குணரத்தினம் - ரஞ்சிதமலர் (நீர்வேலி) தம்பதியினரின் அன்பு மருமகனும், குணவதி(இந்தியா) அருந்ததி (பிரான்ஸ்), சிவபாலன் (சுவிஸ்) ராகினி (இலங்கை) குமுதினி (லண்டன்) நந்தகுமார் (ராஜன்-கனடா) பிறேமா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும். சிவபாலன் (சிவம் -அளவெட்டி), தேவகுமாரி (சுவிஸ்), அருளம்பலம் (அராலி), பாஸ்கரன்(பாபு லண்டன்), சைலா(வவுனியா) வசந்தகுமா…

    • 0 replies
    • 1.2k views
  16. இராணுவத்துடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 10 வீரமறவர்களின் வீரவணக்க நாள் . Friday, May 13, 2011, 5:31 13.05.95 அன்று வன்னி செட்டிமலையில் நடந்த இராணுவத்துடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டானர் .தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். கப்டன் வேங்கையன் . இராசையா – திவாகரன் . யாழ்ப்பாணம் . லெப்டினன் ஜெயந்தன் மகாலிங்கம் – விக்னேஸ்வரன் திருமலை. லெப்டினன் கருங்கதிர் ஏகாம்பரம் – முத்துலிங்கம் மட்டக்களப்பு. லெப்டினன் யுகந்தன் கந்தசாமி – கரிகரன் கிளிநொச்சி . லெப்டினன் சுமணன் தம்பிபிள்ளை – முரளி மட்டக்களப்பு . லெப்டினன் தர்ம…

  17. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தமிழீழ காவல்துறை உறுப்பினர் ஒருவர் மண் ஏற்றச் சென்ற பொழுது பரிதாபமாக உயிரிழந்த சம்பம் ஒன்று கிளிநொச்சி உருத்திரபுரத்தில் இடம்பெற்றுள்ளது. ஜீவானந்தம் என்னும் முன்னாள் தமிழீழ காவல்துறை உறுப்பினரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். தடுப்புமுகாமிலிருந்து அண்மையில் விடுதலையாகி வந்த இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். கிளிநொச்சி உருத்திரபுரத்தில் மீளக்குடியேறிய இவர் வறுமை காரணமாக மணல் ஏற்றும் வேலைக்குச் சென்றுள்ளார். களி மண்படைக்குக் கீழாகச் சென்று மணல் அகழும் பொழுது மேல் களிமண்படை அவருக்கு மேலாக சரிந்து பரிதாபகரமாக சம்வப இடத்திலேயே மரணமடைந்தார். இவர் தமீழக் காவல்துறையில் பிரதேசப் பொறுப்பதிகாரியாக இருந்தவர். பிரேதப்…

  18. பிரபல கதாசிரியர், தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்! சென்னை: பிரபல திரைப்பட தயாரிப்பாளர்,கதாசிரியர் பஞ்சு அருணாசலம் சென்னையில் இன்று மரணமடைந்தார். சினிமா ஸ்டுடியோவில் 'செட்' உதவியாளராக வேலை செய்யத் தொடங்கிய பஞ்சு அருணாசலம், கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராகப் பணியாற்றினார். பல திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் 'இளையதலைமுறை', 'மணமகளே வா', 'புதுப்பாட்டு' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். ஆறிலிருந்து அறுபது வரை,கல்யாண ராமன்,எங்கேயோ கேட்ட குரல், ஆனந்த ராகம், ஜப்பானில் கல்யாணராமன், மைக்கேல் மதன காமராஜன், வீரா, ராசுக்குட்டி உள்ளிட்ட பல சில்வர் ஜூப்ளி திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. …

    • 13 replies
    • 1.2k views
  19. ஈகைப்போராளி கொளத்தூர் முத்துகுமாரின் தந்தை காலமானார் 36 Views கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அரசால் நடத்தப்பட்ட போரில் தமிழீழ மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது, குறித்த படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி தீக்குளித்து தன்னுயிர் ஈந்த ஈகைப்போராளி கொளத்தூர் முத்துகுமாரின் தந்தை குமரேசன் ஐயா உடல் நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார். அன்னாரது இறுதி சடங்கு சென்னை கொளத்தூர் சிவசக்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (20.5.2021) வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குமரேசன் ஐயாவின் மறைவுக்கு “இலக்கு செய்தி நிறுவனம்” தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது. https://www.ilakku.o…

    • 9 replies
    • 1.2k views
  20. பெருங்கவிஞன் பிரான்சிஸ் கிருபா மறைந்துவிட்டார். பல்லாண்டுகளாக மிகவும் தீவிரமான தளத்தில் இயங்கிய கிருபாவின் மரணம் மிகவும் துயரம் தருவதாக அமைந்துவிட்டது. உடல் உபாதைகளும், தேடிக்கொண்ட விட்டொழிக்க முடியாத போதையும் அவரை வாழ்வதற்கு வேறு நோக்கங்களே இல்லாத துயரமான தனிமைக்குள் தள்ளிவிட்டது. மிகக் காத்திரமான கவிதைகளையும் யாராலும் பிரதியெடுக்க முடியாத 'கன்னி'யையும் தந்தார். சிற்றிதழ்களில் தொடங்கியவர், திரைப்படங்களில் பாடல்கள் எழுத முனைப்புக் காட்டினார். எழுத்தின்மீது ஆர்வம் கொண்டவர். கவிஞனாக, இருந்ததை விற்று காசாக்கியவர் இல்லை. சில வெற்றி பெற்ற கவிஞர்களைப் போல தன்னையோ தன் படைப்புகளையோ முன்னிறுத்தாதவர். உலக சாதூர்யங்களைத் துறந்தவர். தடுமாற்றங்கள், தத்தளிப்புகள், நிகாக…

    • 5 replies
    • 1.2k views
  21. லெப்.கேணல் ராதாவின் தந்தையரும் நாட்டுப்பற்றாளருமான கனகசபாபதி காலமானார் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆரம்பகால தளபதிகளிலில் ஒருவரான லெப்.கேணல் ராதாவின் தந்தையாரும் நாட்டுப்பற்றாளருமான திரு சிவகுருநாதன் கனகசபாபதி காலமானார். அமரர் திரு சிவகுருநாதன் கனகசபாபதி ஆரம்பகாலகட்டத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்ட ஒரு நாட்டுப்பற்றாளராகவும் , விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் அன்பையும் மதிப்பையும் பெற்ற ஒருவராகவும் விளங்கினார். விடுதலைப்புலிகளினால் சமூக மட்டங்களில் அமைக்கப்பட்ட குழுக்களில் இணைந்து மக்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக பெரும் பணியினை ஆற்றியிருந்தார். லெப்.கேணல் ராதா தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்…

    • 2 replies
    • 1.2k views
  22. 29.10.1999 அன்று முல்லை மாவட்டம் ஒட்டு சுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து நடத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பௌத்திரன், மணலாற்றுப் பகுதியில் இதே நாள் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். puthinam

  23. தைபூசத்தில் பிறந்து கந்த சஷ்டியில் காலமானார் முருக பக்தி பாடகர் பித்துக்குளி முருகதாஸ். சென்னை: பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 95. கோவையில் 1920ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி சுந்தரம் ஐயர், அலமேலு தம்பதியருக்கு மகனாக தைப்பூச திருநாளில் பிறந்தார் பித்துக்குளி முருகதாஸ். இவரது இயற்பெயர் பாலசுப்ரமணியம். தமிழ்க் கடவுளான முருகன் குறித்து பல பாடல்கள் பாடியுள்ள இவர் திரைப்படங்களிலும் சில பக்தி பாடல்கள் பாடியுள்ளார். தலையில் காவித்துண்டு கட்டி கண்ணில் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து சற்றே வித்தியாசமான முருக பக்தராக காட்சி தருவார் பித்துக்குளி முருகதாஸ். கந்தர் அனுபூதி, முருகன் மீது பல பக்திப்பாடல்களை இயற்றியுள்ளார். கண்ணன் மீதான ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.