துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
மறைந்த தமிழக முதல்வர்.... ஜெயலலிதா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். மறைந்த தமிழக முதல்வர்.... ஜெயலலிதா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.
-
- 9 replies
- 2.1k views
-
-
பிரபல பின்னணி பாடகி ஸ்வர்ணலதா உடல் நலக்குறைவினால் சென்னையில் காலமானார். பாலக்காட்டை சேர்ந்த பாடகி ஸ்வர்ணலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல்லாயிரகண்கணக்கான திரைப்படப் பாடல்களை பாடி புகழ் பெற்றவர். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த கருத்தம்மா படத்தி அவர் பாடிய பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகி என்ற தேசிய விருது வழங்கப்பட்டது. கடந்த 23 ஆண்டுகளாக திரைப்படத்துறையில் பாடகியாக புகழ் பெற்ற ஸ்வர்ணதா அண்மைக்காலமாக உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். நுரையிரல் பாதிப்புக்கு சிசிச்சை பெற்றுவந்த அவருக்கு பாதிப்பு அதிகமானதால் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலன் இன்றி இன்று (12-09-10) உயிரிழந்தார…
-
- 18 replies
- 5.6k views
-
-
சினிமா, தொலைக்காட்சி, வானொலி, மேடை, என கலைத்துறையின் அனைத்துத் துறைகளிலும் சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக புகழோடு விழங்கிய "கலைமாமணி" இளவாலை, முகத்தார் யேசுரட்ணம் அவர்கள் 27-11-10 அதிகாலையில் பாரிஸில் காலமானார். இலங்கை வானொலியில் இவரது எழுத்து, நடிப்பு, இயக்கத்தில் ஒலிபரப்பான 'முகத்தார் வீடு" நாடகம் சுமார் ஜந்து வருடங்களாக (268 வாரங்கள்) ஒலிபரப்பாகி சாதனை படைத்ததால் இவருடைய பெயருக்கு முன்னால் "முகத்தார்" என்னும் பெயர் இணைந்துகொண்டது. இந் நாடகம் பின்னர் பாரிஸில் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. 1979ல் வெளியான "வாடைக்காற்று" திரைப்படத்தில் பொன்னுக்கிழவன் என்னும் பாத்திரத்தில் திறம்பட நடித்திருந்ததால் அன்றைய ஜனாதிபதி திரு.ஜே.ஆர். ஜயவர்த்தனா அவர்களினால் …
-
- 13 replies
- 1.4k views
-
-
பிரபல கதாசிரியர், தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்! சென்னை: பிரபல திரைப்பட தயாரிப்பாளர்,கதாசிரியர் பஞ்சு அருணாசலம் சென்னையில் இன்று மரணமடைந்தார். சினிமா ஸ்டுடியோவில் 'செட்' உதவியாளராக வேலை செய்யத் தொடங்கிய பஞ்சு அருணாசலம், கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராகப் பணியாற்றினார். பல திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் 'இளையதலைமுறை', 'மணமகளே வா', 'புதுப்பாட்டு' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். ஆறிலிருந்து அறுபது வரை,கல்யாண ராமன்,எங்கேயோ கேட்ட குரல், ஆனந்த ராகம், ஜப்பானில் கல்யாணராமன், மைக்கேல் மதன காமராஜன், வீரா, ராசுக்குட்டி உள்ளிட்ட பல சில்வர் ஜூப்ளி திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 13 replies
- 1.2k views
-
-
திருமலை முன்னாள் எம்.பி. துரைரெட்ணசிங்கம் காலமானார் – கொரோனா பலியெடுத்தது 1 Views திருகோணமலையின் முன்னாள் எம் பி கதிர்காமத்தம்பி துரைரெட்ணசிங்கம் , கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். கந்தளாய் தள வைத்தியசாலையில் கொரோனே தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டம், மூதூர், சேனையூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சேனையூர் மெதடித்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, மூதூர் புனித அந்தோனியார் பாடசாலை ஆகியவற்றில் கல்வி பயின்று பின்னர் மட்டக்களப்பு ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்றார். 1960 ஆம் ஆண்டு மு…
-
- 12 replies
- 1.2k views
-
-
எமது களஉறவாகிய N.SENTHIL இன் தந்தையாரான திரு. நாகரத்தினம் (அகவை 61) அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்துவிட்டார். அவரது இறுதிக்கிரியைகள் இன்று மாலை சொந்த ஊரான திண்டுக்கலில் நடைபெறுகின்றது என்பதை யாழ்கள உறவுகளிற்கு கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த கவலைகளையும் தெரிவித்துகொள்கின்றோம்.
-
- 37 replies
- 6.7k views
-
-
மதுரை: தமிழ்த் திரைப்பட நடிகையும் பின்னணி பாடகியுமான பரவை முனியம்மா இன்று மதுரையில் முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு வயது 76. சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். தூள் படத்தில் வரும் சிங்கம் போல.. பாடல் இவருக்கு மிகவும் பிரபலமானது. மேலும் தனது நாட்டுப்புறப் பாடல்களாலும் தனது கிராமிய பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்தவர் பரவை முனியம்மா. தூள், சண்டை, காதல் சடுகுடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். . 2000க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் தன் பாடல் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். இவரது கலைச் சேவையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமண…
-
- 13 replies
- 1.2k views
-
-
சென்னை: பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் அசோக்குமார் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் இந்த அசோக்குமார், ஊரப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை மரணம் அடைந்தார். நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜானி, கமல்ஹாசன் நடித்த வெற்றிவிழா, பிரசாந்த் நடித்த ஜீன்ஸ் உள்பட பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக அசோக்குமார் இருந்துள்ளார். மேலும், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கில படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படத்தின் ஒளிப்பதிவிற்காக தேசிய விருதை அசோக்குமார் பெற்றுள்ளார். மறைந்த அசோக்குமாருக்கு, மனைவி மற்றும் 4 மகன்கள் உள்ளனர். http://news.vikatan.com/article.php?module=news&aid=3381…
-
- 1 reply
- 1.8k views
-
-
லெப் கேணல் நிறோஜன் பாலசுப்பிரமணியம் கிறிஸ்ணபாலன் யாழ்மாவட்டம் கால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்று கொண்டிருந்தது. கடலின் கரையைத் தொட்டுவிட ஒவ்வொரு அலையும் துடித்துக் கொண்டிருந்தது. இந்த அலைகளைப் போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள் தான் ஒன்றன் பின் ஒன்றாக எங்களது நெஞ்சில் அழியாத தடங்களாக பதிந்திருக்கின்றன. கடல்நீரும் துள்ளியெழும் அலைகளும் ஒரு பொழுதில் வாய் திறந்து பேசுமானால் இவனைப் பற்றி, இவன் சாதனைகளைப் பற்றி, இவன் இறுதியாய் எப்படி மடிந்தான் எனபது பற்றி தெளிவாகச் சொல்லியிருக்கும். ஆனால் அவை இப்போது மௌனமாய் இருப்பதால் அந்தப் பணியை எனJ எழுதுகோல் ஏற்றுக்கொள்கிறது. தமிழீழத்தின் கடல்நீரை …
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொ.காலமானார் இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு பொ (மு . பொன்னம்பலம்) நேற்று இரவு கொழும்பில் காலமானார். 1939 இல் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்த மு. பொன்னம்பலம், ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளராவார்.கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் பங்களித்த இவர், 1950களில் கவிதை எழுதத் தொடங்கினார்.முதற்கவிதைத் தொகுதியான அது 1968 இல் வெளிவந்தது. மு. தளையசிங்கம் இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான தகவல் பின்னர் அறிவிக்கப்படும். https://thinakkural.lk/article/311831
-
- 10 replies
- 821 views
- 2 followers
-
-
எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்! புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன், இன்று காலமானார். எழுத்தாளர் பிரபஞ்சன் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதியன்று புதுச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். கரந்தை கல்லூரியில் தமிழ் வித்வான் பெற்றவர் இவர். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர், அதன் பின்னர் பத்திரிகையுலகில் நுழைந்தார். தமிழில் உள்ள பிரபலப் பத்திரிகைகளில் பணியாற்றினார். இவரது முதல் சிறுகதை 1961ஆம் ஆண்டு வெளியானது. அன்று முதல் தொடர்ந்து படைப்புலகில் தொடர்ந்து இயங்கி வந்தார் பிரபஞ்சன். சிறுகதை, நாவல்கள், கட்டுரைகள் என்று பல தளங்களில் இயங்கி வந்தார். இதனால் பத்திரிகையுலகை விட்டு விலகி எழுத்துலகில் பயண…
-
- 10 replies
- 1.1k views
-
-
. அவரின் ஆத்ம சாந்திக்கு என் குடும்பத்தார் சார்பில் பிரார்த்திக்கின்றேன். அவரின், பிரிவால் துயருறும் உற்றார், உறவினர்க்கும், அர்ஜுனுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
- 60 replies
- 5k views
- 1 follower
-
-
ஓராண்டாகியும் மாறாத உன் நினைவுடன் வீரவணக்கம்
-
- 13 replies
- 4.5k views
-
-
உதயன் பத்திரிகைகை நிறுவனத்தின் மீது காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 8 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளதை அடுத்து ஊடகத்திற்காய் உயிர்நீத்த எமது சக பணியாளர்களான சுரேஸ் மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோரது நினைவு அஞ்சலி இன்று காலை 10 மணியளவில் உதயன் பணிமனையில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா,வடமாகாண சபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், இ.ஆனல்ட், வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன், நல்லூர் பிரதேச சபை உறுப்பினரும் - நல்லூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவருமான பொ.கனகசபாபதி ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் உதயன் பணியாளர்களும் இந்த நிகழ்வில் பங்கெடுத்தனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=27…
-
- 0 replies
- 404 views
-
-
வணக்கம், அண்மையில் தாயகத்தில் மிகப்பெரிய ஓர் சேவை - மக்களின் உயிர்காக்கும் சேவை செய்த மருத்துவர் சிவா மனோகரன் சிறீ லங்கா பயங்கரவாத அரசின் தாக்குதலில் பலியாகிவிட்டார் என்று செய்தி வந்தது. பலர் அறிந்து இருப்பீர்கள். என்னைப்பொறுத்தவரையில் குறிப்பிட்ட இந்த மருத்துவரையும் ஓர் கரும்புலி என்றே கூறுவேன். அவர் தனக்கு மரணம் ஏற்படும் என்பதை எதிர்பார்த்து காத்து இருந்தார். அவர் நினைத்து இருந்தால் ஓடிபோய் இருக்கலாம். ஓடித்தப்புவதற்கு அவருக்கு இறுதிவரை கால அவகாசம் இருந்தது. ஆனால்... அல்லல்படும் தாயக மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பதற்காக கடைசிவரை அங்கு மக்களின் உயிர்களைக் காப்பதற்காக பணி ஆற்றிக்கொண்டு இருந்தார். மக்களோடு மக்களாக இருந்து மிகப்பெரிய சேவைகளை வைத்தியர் செய்துகொண்ட…
-
- 0 replies
- 701 views
-
-
கப்டன் குணாளனுக்கு வீரவணக்கங்களும் கண்ணீர் அஞ்சலிகளும்............... கப்டன் குணாளனின் வித்துடல் விதைப்பு [ த.இன்பன் ] - [ ஓகஸ்ட் 11, 2007 - 06:04 AM - GMT ] கடந்த ஏழாம் நாள் வவுனியா நகரப்பகுதியில் சிறிலங்கா படையினரால் மறிக்கப்பட்டவேளை தற்காப்பு அங்கியை வெடிக்க வைத்து வீரச்சாவைத் தழுவிய கப்டன் குணாளனின் வித்துடல் முழு படைய மதிப்புடன் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மூங்கிலாறு மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மாவீரர் மண்டபத்தில் இம் மாவீரரின் வித்துடல் வைக்கப்பட்டு வீரவணக்கக் கூட்டம் நடைபெற்றது. பொதுச்சுடரினை போராளி பிரபா ஏற்றினார். வித்துடலுக்கான ஈகைச்சுடரினை தளபதி ஜனார்த்தனன் ஏற்றினார். மலர் மாலையை போராளி பேரின்பம…
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழ் கள உறுப்பினரான K. VETTICHELVAN அவர்களின் தம்பியான கப்டன் தமிழ்க்குமரன் என்றழைக்கப்படும், திருமலை மாவட்டத்தை சேர்ந்த கனகசூரியன் ஜெயகாந்தன் அவர்கள் திருமலை மாவட்டத்தில் கடந்த 7ஆம் நாளன்று நிகழ்ந்த மோதல்களில் வீரச்சாவை தழுவிக்கொண்டார். அவரோடு வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்.
-
- 12 replies
- 3.5k views
-
-
மூதறிஞர் ஆ.சபாரத்தினம் பிரிந்தார்- இன்று இறுதி நிகழ்வு ஊர்காவற்றுறை கரம்பனைப் பிறப்பிடமாகக்கொண்ட மூதறிஞர், சைவசித்தாந்த வித்தகர்ஆ.சபாரத்தினம் ஆசிரியர் (காவல் நகரோன்) வெள்ளிக்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்த இவர் சைவசித்தாந்தம், கீழைத்தேய அல்லது இந்திய தத்துவதிலும் பரந்துபட்ட அறிவைக்கொண்டிருந்தார். நாவலர் பாரம்பரியத்தின் கடைசி மாணவன் எனக்கருதப்படும் முதுபெரும் அறிஞரான பண்டிதமணி கணபதிப்பிள்ளைக்கு ஆங்கில நூல்களிலிருந்து தகவல்களை மொழிபெயர்ப்புச்செய்து உதவியமையுடன் அளவையூர் பொ. கைலாசபதியின் சிந்தனைகள் என்ற நூலைப் பேராசிரியர் சுசீந்திரராஜாவுடன் இணைந்து தொகுத்து வெளியிட்டார். சுவீடிஷ் ப…
-
- 12 replies
- 1.4k views
- 2 followers
-
-
ஈழப் பேராசிரியர் தமிழ் மொழியின் தூதர் தனிநாயகம் அடிகளாரின் பிறந்த தினம் இன்று: சேவியர் தனிநாயகம் அடிகள் எனப்படும் தமிழ் மொழியின் தலைமகனின் பிறந்தநாள் இன்று. இலங்கையில் உள்ள இலங்கையில் உள்ள காம்பொன் ஊரில் ஹென்றி ஸ்ரனிஸ்லால், சிசில் இராசம்மா வஸ்தியா பிள்ளை தம்பதிக்கு முதல் பிள்ளையாக நூற்றியொரு ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தார். கல்லூரிக்கல்வியை ஆங்கில வழியில் படித்து முடித்த அவர். இவரின் இயற்பெயர் ஸ்டானிஸ்லஸ் சேவியர் என்றாலும் பின்னர் தமிழ் மீது கொண்ட பற்றால் சேவியர் தனிநாயகம் என்று மாற்றிக்கொண்டார். இலங்கையில் இருந்த திருச்சபை அவரை இத்தாலி போய் படிக்க அனுமதிக்காமையால் மலங்காரச் திருச்சபையில் இணைந்து தி…
-
- 0 replies
- 705 views
-
-
மண்ணைவிட்டு விண்ணுற்ற வண்ணையெனும் மலரவனே வண்ணமலர்ப் பொன்னடியில் வெண்மலரை வைப்பதற்கு எண்ணரிய புண்ணியனே அம்மலரும் வாடுமெனக் கண்ணனைய எம்நெஞ்சைக் காணிக்கை ஆக்குகின்றோம் இந்துமா கடலின் முத்தாய் இலங்கிடு ஈழநாட்டில் சுந்தர வடிவுகொண்டே சுதந்திர தாகம் மேலாய் செந்தமிழ் வீரத்தோடு சிறந்திடு யாழ் மண்மீது விந்தை கொண்டிலங்கு மெங்கள் விழுமிய வண்ணைநகர் சரித்திரம் பலவுங் காட்டி செந்நெறி ஒழுகிநின்று பாரினில் கற்றோர்போற்ற பகர்பெரும் அறிஞனான அண்ணனாம் வண்ணையாரை அடியேனு மறிந்தவாறு கண்ணீரைச் சொரிந்துநின்று கழிவிரக்கச் சொன்மாலை சாற்றுதற்குப் பேறுபெற்று உலகமே மதித்த நின்னை கொண்ட நன்றிக் கடன் கூட்டுவிக்க வண்டுதாச் சொன்மலர்கள் கொண்டு ஆக்குகிறேன் நான் மனையறப…
-
- 0 replies
- 1.1k views
-
-
கந்தர்மடத்தை சேர்ந்தவரும் எமது உறவினருமான பாலசிங்கம் நந்தபாலன் லண்டனில் தமது 74 ஆவாது வயதில் காலமானார். மிகவும் செல்வந்தரான (பரம்பரை பணக்காரனான அவர் லண்டனில் பல சேர்விஸ் ஸ்டேஷன்கள் வைத்திருந்தவர்) இவர் விடுதலை போராட்ட ஆரம்ப காலங்களில் இருந்தே நிறைய பண உதவி செய்திருந்தார். 2009 இற்கு பிறகு போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், வறிய மக்கள், விதவையான பெண்கள் என்று பலருக்கும் பல விதமான வாழ்வாதார நிதி உதவிகளை செய்து வந்தார். அண்மையில் ஒரு திருமணத்தின்போது அருகில் இருந்தவர்கள் ஒரு வறிய குடும்பத்தை சேர்ந்தவர்களின் கஷ்டத்தை கேட்டுவிட்டு, அவர்களை தொடரபு கொண்டு தேவையான உதவிகளை செய்துள்ளார். அவரது பல உதவிகளும் இப்படி நடந்தவை தான். சரியாகத்தெரியவில்லை. ஆனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் க…
-
- 8 replies
- 879 views
- 1 follower
-
-
யாழ் கருத்துக்கள உறவான கலைஞனின்(கரும்பு, முரளி, மாப்பு) தந்தையார் சற்று முன்னர் இறைபதம் எய்தினார். தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் கலைஞனின் துயரிலும் அவருடைய குடும்பத்தினரின் துயரிலும் பங்கெடுத்துக் கொள்கிறோம். குருநாதசுவாமி கோவிலடி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவகுருநாதன் அவர்கள் 17.02.2013 அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், சுப்பிரமணியம் நீலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும், அமிர்தாம்பிகையின் ஆருயிர் கணவரும், செல்வஜோதி (அவுஸ்திரேலியா), சிவசக்தி (டென்மார்க்), வாசுகி (அமெரிக்கா), கோணேஸ்வரன் (கனடா), முரளிதரன்…
-
- 116 replies
- 11.9k views
- 1 follower
-
-
காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடியலைந்த தாய் உயிரிழப்பு 28 Views காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடியலைந்த தாயார் ஒருவர் சுகயீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த மகாலிங்கம் பத்மாவதி (வயது 70) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார். இவரது மகன் மாகாலிங்கம் உசாகரன் கடந்த 2009 ஆம் ஆண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்து மீண்டு வந்தவர். பின்னர் இவர் தாயகத்தில் இடம்பெற்ற அனைத்து போராட்டங்களிலும் தனது மகனை தேடி நீதி கேட்டு கலந்து கொண்டார். இந்த நிலையிலே இவர் நேற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். காணாம…
-
- 2 replies
- 692 views
-
-
யாழ் கள கனடா வாழ் உறவான சபேஷ் இனது தந்தையார் நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் காலமானார் எனும் செய்தியை மிகுந்த துயரத்துடன் பகிர்கின்றேன் இங்கு. அன்னாரின் உடல் யாழ்ப்பாணத்தில் இருந்து கனடாவுக்கு விரைவில் எடுத்து வரப்பட்டடு அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிய முடிகின்றது. இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்களை தகவல்கள் கிடைத்தவுடன் அறியத் தருகின்றேன். தந்தையை இழந்து வாடும் சபேஷ் இற்கும் அவர் குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த இரங்கல்கள்.
-
- 41 replies
- 5.8k views
- 1 follower
-
-
மதுரை சிந்தாமணி இழப்பு! மதுரை: மதுரை மக்களின் ஒரு முக்கிய அடையாளம் சினிமா ரசனை. சினிமாவை ரசிக்காத, ரசிக்க முடியாத மக்களை மதுரையில் பார்ப்பது அரிது. அப்படிப்பட்ட மதுரையில் சினிமா தியேட்டர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கும்.? மதுரையில் உள்ள ஒவ்வொரு தியேட்டருக்கும் ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கும். ஒவ்வொரு தியேட்டர் குறித்தும் பக்கம் பக்கமாக பேசிச் சிலாகிக்கக் கூடிய அளவுக்கு கதைகள் இருக்கும். அப்படிப்பட்ட தியேட்டர்களில் ஒன்றுதான் சிந்தாமணி. 'அம்சவல்லி பவனி'ல் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, சிந்தாமணிக்குப் போய் செகண்ட் ஷோ பார்க்காத மதுரைக்காரர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்ட சிந்தாமணி தியேட்டர் தற்போது உடைபட்டுக் கொண்டிருக்கிறது. மது…
-
- 1 reply
- 712 views
-