நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரத்தில், தமது இரண்டாவது பிள்ளையை பெத்து, டாக்ஸியில் வீடு திரும்பி இருக்கின்றனர் தம்பதியினர். வழக்கம் போல, ஒரு வயதான மூத்த பிள்ளையினை இறங்க்கிக்கொண்டு, புது குழந்தையினை மறந்து விட்டு இறங்கிப் போய் விட்டனர். காசை வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டார் டாக்ஸி டிரைவர், பின்னாள் நல்ல நித்திரையில் இருந்த தனது பயணி குறித்து தெரியாமல். வீட்டினுள் சென்ற பின்னர் தான் எங்கே குழந்தை என பதறி அடித்துக் கொண்டு தேட, அம்மா எடுத்ததாக அப்பாவும், அப்பா எடுத்ததாக அம்மாவும் நினைத்து விட்டு விட்டது தெரிந்து, அப்பாக்காரர் தெருவில் இறங்கி காரின் பின்னால் கத்தியவாறே ஓடி இருக்கிறார். இவர் ஓடி, காரை பிடிக்க முடியுமா. கூடி விட்ட அயலவர்கள் போலீசாரை அழைத்தனர். …
-
- 2 replies
- 568 views
-
-
சுவிஸைப் போன்று இலங்கையிலும் மாகாணங்களுக்கு சமஷ்டி வேண்டும் - அரசியல் விவகார அதிகாரி! சனிக்கிழமை, 15 செப்டம்பர் 2012 09:18 சுவிஸில் 26 மாநிலங்களும் சுயமாக அதிகாரங்களைக் கொண்டு தாமே நிர்வகிக்கும் சமஷ்டி ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது. அதேபோன்று இலங்கையிலும் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து அவை தங்களைத் தாங்களே நிர்வகிக்கும் சமஷ்டி ஆட்சி முறையை நடைமுறைக்கு கொண்டு வருவதே பொருத்தமானது. இத்தகைய ஆட்சி முறையை கொண்டுவர சகல இனங்களும் பேச்சு நடத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இதையே இந்த நாட்டுக்கு நாம் தெரிவித்து வருகின்றோம். சுவிஸ் நாட்டின் அரசியல் விவகார அமைச்சைச் சேர்ந்த பொருளாதார அபிவிருத்தி அதிகாரி தமினானோ சுடே தமாத்தி மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 2 replies
- 680 views
-
-
ஆக்கம்: சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா புலம் பெயர் தமிழ் மக்களால் மிகவும் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆய்வாளரும், ஊடகவியலாளருமான, நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களை, சிறிலங்கா இராணுவம் தனது எறிகணைத் தாக்குதல் மூலம் கொன்றுள்ளது. வெளிச்சம் சஞ்சிகை, புலிகளின் குரல் வானொலி, ஈழநாதம் பத்திரிகை, மற்றும் தொலைக்காட்சிகள், இணைய ஊடகங்கள் வழியாக அரசியல், படைத்துறை ஆய்வுகளை வெளியிட்டு, தாயக விடுதலைப் போராட்டத்தின் கருத்துக்களைக் கட்டியெழுப்பி வந்த சத்தியமூர்த்தி அவர்களின் உடலம், சவப்பெட்டி கூட இல்லாத நிலையில், வெறும் துணி மட்டும் போர்த்தப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றமையானது ஒரு வரலாற்றுச் சோகத்தைப் பதிவு செய்துள்ளது. இது ஒரு போர்க்கால நிகழ்வு என்பதற…
-
- 2 replies
- 722 views
-
-
ஈழத்தமிழர்களுக்கு எதிராக தமிழகத்தில் திமுக தலைமையில் மாபெரும் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் . on: யூன் 21, 2017 ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அமைந்துள்ளது இலங்கை அகதிகள் முகாம், இங்கு சுமார் 1070 குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றார்கள் , இங்கு ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் சமூக விரோதிகள் என்று குறிப்பிட்டு எதிர்வரும் 24 ஆம் தேதி சனிக்கிழமை திமுக வின் தலைமையில் அனைத்து கட்ச்சிகளும் சேர்ந்து மாபெரும் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் ஒன்றை நடத்த உள்ளனர், இந்த செய்தியை அறிந்த அங்குள்ள ஈழத்தமிழர்கள் , மிகுந்த மனவேதனையுடன் உள்ளானர்…… http://lankasee.com/2017/06/21/ஈழத்தமி…
-
- 2 replies
- 302 views
-
-
நடைபெறப் போகும் தேர்தல் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் தமிழ்த்தேசியத்தின் ஒருமித்த செயற்பாட்டின் அடித்தளத்தையே தகர்த்துவிடும் என்ற ஆபத்து நிலை தற்போது இலங்கை அரசியல் களத்தில் உணரப்பட்டுள்ளது. தேர்தல் குறித்த முனைப்பு, கலந்துரையாடல்கள், உடன்பாடுகள், கருத்துவெளிப்பாடுகள், கருத்து மோதல்கள் என அரசியல் வட்டாரங்கள் மிகுந்த சுறுசுறுப்படைந்துள்ளன. இதன்போது உள்ளேயிருப்பவர்களை வெளியனுப்புதல் வெளியில் இருப்பவர்களை உள்ளே கொண்டுவருதல் என்ற அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் முயற்சி செய்கிறார்கள். இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது இறுதி நிலைபாட்டினை வெளியிடும் என்றும் அது பத்திற்கும் மேற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள…
-
- 2 replies
- 719 views
-
-
http://www.savukku.n...4-17-44-32.html
-
- 2 replies
- 629 views
-
-
இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவாவாதிகள் ஊடுருவி வருவதை, அண்மைக் காலமாக யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் மாற்றங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவ்வளவு காலமும், இலங்கை முழுவதும் உள்ள தமிழ்ப் பாடசாலைகளில் சிறு கோயில்கள் கட்டுவதில் மும்முரமாக இருந்தார்கள். தற்போது, தாலிபான் பாணியில் மாணவர்களுக்கு உடைக் கட்டுப்பாடு விதிக்குமளவிற்கு வளர்ந்து விட்டார்கள். பெப்ரவரி 13 ம் தேதி, யாழ் பல்கலைக்கழகத்தில் "அனைத்துலக சைவ மகாநாடு" நடைபெற்றது. (http://www.pathivu.com/?p=61671) அது நடந்து சில நாட்களுக்குள் (பெப். 17), கலைப்பீட மாணவர்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கும் அறிவித்தல் ஒட்டப் பட்டது. அந்த அறிவி…
-
- 2 replies
- 753 views
-
-
ஜெய்ப்பூர்: தமது பாட்டி இந்திரா மற்றும் அப்பா ராஜிவைப் போல நானும் கொலை செய்யப்படலாம்.. அதற்காக அச்சப்படவில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உருக்கமாக பேசியுள்ளார்.ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலை ஒட்டி 2வது கட்டமாக இன்று பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி பேசியதாவது: நான் என் உள்ளத்தில் இருப்பதையே பேசி வருகிறேன். இதுவரை நான் சொல்லாத விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இதைப்பற்றியெல்லாம் பேசத்தேவையில்லை.. இருப்பினும் சொல்கிறேன்..எங்களுக்காக என் அப்பா ராஜிவ் காந்தி போட்ட கட்டுப்பாடுகளை உடைத்து எங்களைக் காப்பாற்றியவர் பாட்டி இந்திராதான். என்னுடைய பாட்டியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்கு முன்பாக அவர் மீது கையெறி குண்டுகளை வீச…
-
- 2 replies
- 680 views
-
-
புலி எதிர்ப்பு - முதலீடில்லா லாபம் திங்கள், 31 ஆகஸ்ட் 2009 19:39 டி.அருள் எழிலன் பயனாளர் தரப்படுத்தல்: / 46 குறைந்தஅதி சிறந்த 2004- டிசம்பரில் சுனாமி வந்தது. தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட பத்தாயிரம் மக்கள் கடலலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு பிணமானார்கள். அந்த இயற்கை அனர்த்தம் நடந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகப்போகிற நிலையில் அதன் பிறகு தமிழக கடலோராங்களை ஆழிப்பேரலைகள் தாக்கவில்லை; மக்களை அடித்துச் செல்லவும் இல்லை. ஆனால் ஓவ்வொரு மாதமும் வதந்தி வருகிறது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பதறியடித்து மக்கள் ஓடுகிறார்கள். வதந்திகள் அவர்களை கடலோரங்களை விட்டு துரத்துகிறது. இவை வதந்தி என்று மக்களால் ஓடாமல் இருக்கவா முடியும் அல்லது இன்னொரு ஆழிப்பேரலை வராது, அது வெறும் வ…
-
- 2 replies
- 1.8k views
-
-
பதிலளிக்க தவறினால்....... ஸ்ரீலங்கா அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தமிழ் மக்களின் உாிமைக்கான 30 வருட போராட்டத்தில் உயிாிழந்த தமிழ் மக்களையும், போராளிகளையும் நினைவு கூற தடை விதிப்பது தமிழா்களின் உாிமைகளை மறுதலிக்கும் ஒரு செயற்பாடு என தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் கூட்டாக தெரிவித்துள்ளன. எனவே ஸ்ரீலங்கா அரசாங்கம் இந்த தடைகளை உடனடியாக நீக்க வேண்டும் என அக் கட்சிகள் கூட்டாக இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன. தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஜனநாயாக போராளிகள், தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகிய தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் இன்று மாலை நல்லூர் இளங்கலைஞா் மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தன. இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு …
-
- 2 replies
- 1k views
-
-
#GoHomeGota போராட்டம்: தமிழர்கள் தூரவிலகி நிற்பதால் சாதிக்கப்போவது எதுவுமில்லை! Veeragathy Thanabalasingham on April 26, 2022 Photo, Selvaraja Rajasegar தென்னிலங்கையில் இன்று நடைபெறுகின்ற போராட்டங்கள் பொருளாதார இடர்பாடுகளின் விளைவாக மூண்டவை. முன்னரைப் போலன்றி மிகவும் இளையவர்களும் படித்தவர்களும் பெருமளவில் பங்கேற்கிறார்கள். ஆனால், பொருளாதார நிவாரணம் கேட்டு சாதாரண மக்கள் வீதிகளில் இறங்கியிருப்பதை செவிசாய்க்காமல் ஜனாதிபதியும் அரசாங்கமும் அலட்சியம் செய்வதால் நாளடைவில் அவை அரசியல் கோரிக்கைகளை முன்வைக்கும் போராட்டங்களாக முனைப்படைந்து இன்று உலகின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. பௌத்த சிங்கள பேரினவாத போதையை ஊட்டி தங்களை பிழைய…
-
- 2 replies
- 283 views
-
-
*Please inform everyone and make every effort to attend.* In 1983, an orchestrated mob pogrom killed some 2000-3000 Tamils across the island. Within a year, the Tamil Tigers had mushroomed from a rabble of 50 men into an army of thousands who sought revenge. Gordon Weiss - UN spokesperson in Sri Lanka during the war. http://www.theaustralian.com.au/news/opinion/tamil-tiger-is-extinct-and-regime-knows-it/story-e6frg6zo-1225892329407?from=public_rss Subject: Black July Rally - London, Friday 23 July 2010 - Starts 9pm from Tothill Street Ends 11:30pm at Downing Street - *"Walk for Justice" Midnight Vigil* *Remembering Black July 1983 - *2…
-
- 2 replies
- 699 views
-
-
யாரையும் பகைக்க விரும்பவில்லை ; இரா.சம்பந்தன் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக அரசியல் தீர்வொன்றை அடைவதற்கான நம்பிக்கை எமக்குள்ளதோடு அதுகுறித்து சிந்திப்பவர்களுடன் தொடர்புகளை பேணிவருகின்றோம். இலக்குகளை அடைவதற்காக அனைவரையும் ஒன்றிணைத்து பயணக்க விரும்புகின்றோம். நாங்கள் யாரையும் பகைக்க விரும்பவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது குறிப்பிட்டார். அவர் வழங்கிய அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- அரசியல் நெருக்கடிகளின் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலில் தீர்மானிக்கும் சக்தியாகவிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய கட்சிகளுடனான அனுகுமுறைகள் கடுமையான விமர்சனத்…
-
- 2 replies
- 293 views
-
-
யுக்ரேனிய வான் பகுதியை நோ ஃபிளை ஸோன் (No Fly Zone) அதாவது விமானங்கள் பறப்பதற்குத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி கேட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு முறையல்ல, பல முறை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். போலாந்து தலைநகர் வார்சாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் யுக்ரேனிய பெண் ஒருவர் கண்ணீருடன் இதே வேண்டுகோளை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் வைத்தார். விண்ணில் இருந்து எப்போது குண்டுகளும் ஏவுகணைகளும் வருமோ என்று யுக்ரேனிய பெண்களும் குழந்தைகளும் அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் என்று டாரியா என்று அந்தப் பெண் கூறினார். யுக்ரேனில் கிழக்கு, வடக்கு, தெற்கு என மூன்று திசைகளிலும் ரஷ்யாவின் த…
-
- 2 replies
- 384 views
-
-
http://www.tamilskynews.com/index.php?opti...9&Itemid=57
-
- 2 replies
- 1.2k views
-
-
-
- 2 replies
- 1.6k views
-
-
எச்சரிக்கை!: ஈழத்தில் மீண்டும் வன்முறைக்குத் தயார்படுத்தும் பாரதீய ஜனதா கும்பல் 11/17/2020 இனியொரு... 1984 ஆம் ஆண்டு ஆயுதப் பயிற்சி வழங்கிய இயக்கங்களை இந்தியா இணைத்து ஈ.என்.எல்.எப் என்ற கூட்டணியை உருவாக்கிற்று தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டம் இலங்கையில் அழிக்கப்பட்டதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று இந்தியாவின் தலையீடு என்பதை யாரும் மறுப்பதில்லை. 1983 ஆண்டு ஜீலை இன வன்முறைக்குப் பின்னர் இந்திய அரசு, உத்திரப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலை இயக்கம் TELO, தமிழீழ விடுதலைப் புலிகள் LTTE, ஈழப் புரட்சி அமைப்பு EROS, ஈழ மக்கள் விடுதலை முன்னணி EPRLF ஆகிய இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கியதற்கு முன்பாகவே இத் தலையீடு பல வழிகளில் ஆரம்பித்துவ…
-
- 2 replies
- 1.2k views
-
-
மாறாத மக்கள் தீர்ப்பும், மாற்றுக்கருத்திற்கு விழுந்த 43 வாக்குகளும் இம் மாதம் 12ஆம், 13ஆம் திகதிகளில், பிரான்சில் நடைபெற்ற சுதந்திர இறைமையுள்ள தமிழீழத்திற்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில், மாற்றுக்கருத்திற்கு 43 வாக்குகள் விழுந்துள்ளன. 99 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகள், பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக, ‘ஆம்' என்கிற ஒற்றைச் சொல்லால் நிரம்பி வழிந்தது. ஏறத்தாழ 32,000 மக்கள் இவ்வாக்களிப்பில் கலந்துகொண்டாலும், அஞ்சல் மூலம் பெறப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி, முடிவடையவில்லையென்று ஊடகச் சந்திப்பில் கூறப்பட்டது. 32 வருடங்கள் கடந்து சென்றாலும் தாயகக் கனவினை, மக்கள் கைவிடவில்லையென்று, மறுபடியும் உரத்துச் சொல்லப்பட்டுள்ளது. இந்த உலகிற்கு, மக்கள் சொன்ன…
-
- 2 replies
- 804 views
-
-
http://youtu.be/LOdOCYMIi1c
-
- 2 replies
- 665 views
-
-
இவரை நான் அம்பாரையில் அமைந்துள்ள ஏஎஸ்பி என்னும் வியாபார நிர்வனத்தில் காணக்கிடைத்தது. இவரைக்கண்டவுடன் எனக்கு பழய யாபகம் ஒன்று நினைவுக்கு வந்தது. 1990ம் ஆண்டு புலிகளினால் கல்முனை பொலிஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டு, அதில் கடமையாற்றிய முஸ்லிம் சகோதரர்கள் உட்பட 200 பொலிசாருக்கு மேல் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நினைவுகள் எனது யாபகத்துக்கு வந்தது. கல்முனை பொலிஸ் நிலையம் புலிகளினால் தாக்கப்பட்ட அதேநேரம் கல்முனை வாடி வீட்டில் அமைந்திருந்த 30 பேர் கொண்ட ராணுவ முகாமும் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த ராணுவ முகாமில் கடமையாற்றியவர்தான் இந்த குமார என்பவர். இவருக்கு நன்றாகவே தமிழ் பேசத்தெரியும். க…
-
- 2 replies
- 1.2k views
-
-
சண்டே ரைம்ஸ் செய்தி ஏட்டின் புகழ்பெற்ற போர்க்கள செய்தியாளரான மேரி கொல்வின் கடந்த 2012 பெப்ரவரி மாம் 23 நாள் சிரியாவின் நகரங்களில் ஒன்றான Homs நகர முற்றுகையின் போது ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பலியானார். அவருக்கு அப்போது அகவை 55 ஆகும். அவரோடு பிரான்ஸ் நாட்டு படப்பிடிப்பாளரான Remi Ochlik (28) என்பவரும் இறந்து பட்டார். அதற்கு முன்னர் வன்னியை விட்டு 2001 ஆம் ஆண்டு 30 மைல்கள் காடுகள் ஊடாகக் களவாக வெளியேறிய போது எதிர்பாராத விதமாக பதுங்கியிருந்த சிறீலங்காப் படையினரால் சுடப்பட்டு ஒரு கண்ணை இழந்திருந்தார். இப்போது ‘புலிகள் சரண் அடைவதற்குரிய ஏற்பாட்டைச் செய்யுமாறு என்னிடம் யாசித்தார்கள்’ (Tigers begged me to broker surrender – Marie Colvin , Times UK – May 24, 2009) என்ற …
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் ஒரு அமைதியை ஏற்படுத்தலாம். இலங்கையல் சிங்களவர், தமிழர் பிரச்சனைக்குத்தூபமிட்டு வளர்த்து அமைதியில்லா இலங்கையை உருவாக்கியவர்கள் முற்று முழுதாக இந்தியர்களே. சிங்களவர் தமிழர்களுக்கு உரிமையைக் கொடுக் விரும்பினாலும், இதை இப்படிச் செய் அப்படிச்செய் என்று சிங்களத்திற்கும், தமிழர்களுக்கு உரிமைக்காகப் போராடு என்ற ஆயுதத்தையும் அள்ளிக் கொடுத்து உரிமையை கேட்பது போன்று கொடுக்காதே என்ற சிங்களத்திற்கும் சொல்லி இரு இனங்களும் தொடர்ந்து பிர்சனைப்படுவதால் வேறு வல்லரசுகள் இலங்கையில் கால்பதிக்காது வைத்துக் கொள் இதுவே வழி என்ற ரீதியில் இலங்கையை நடத்தி வந்தது இந்தியாதான். மிரட்டல்களும் தட்டல்களும் எங்கே எப்போது போடவேண்டும் என்று அங்கே போட்டு இரு இனங்களையும் அமை…
-
- 2 replies
- 679 views
-
-
Is IIFA brand ambassador Amitabh Bachchan right in skipping the awards over Tamil protests?- Vote Yes Vote Yes Vote Yes http://headlinestoday.intoday.in/site/headlines_today/home ==== Please comment here Big B should have attended IIFA Awards: Salman http://indiatoday.intoday.in/site/Story/99996/Top%20Stories/Big+B+should+have+attended+IIFA+Awards:+Salman.html ==== Muthamizh Chennai
-
- 2 replies
- 786 views
-
-
கஜேந்திரகுமாரின்.... தமிழ் தேசிய மக்கள் முன்னணி, வட பகுதியில் போட்டியிடும் ஏழு தொகுதிகளையும் கைப்பற்றி.... வெற்றி பெற.... முற்கூட்டிய வாழ்த்துக்கள்.நாளை காலையிலேயே... வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, சைக்கிள் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.
-
- 2 replies
- 2k views
-
-
நேர்காணல்: தேர்தல் அரசியற் போட்டிக்குள் சிக்கியுள்ள 13உம் அரசியற் தடுமாற்றங்களும் March 16, 2022 (அ. வரதராஜப்பெருமாள் அவர்களுடன் ஒரு செவ்வி) — நேர்கண்டவர்: அரவிந்தன் — 1987 இல் இலங்கை –இந்திய உடன்படிக்கையின் மூலம் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாகாணசபை முறைமையை உருவாக்கியது இந்தியா. 35 ஆண்டுகள் கடந்த பின்னும் மாகாணசபை முறைமை வெற்றியளிக்காத ஒன்றாகவே உள்ளது. மாகாணசபைகளுக்கான சட்டமூலமான 13 ஆவது திருத்தத்தை இலங்கை அரசு தொடர்ந்து பின்னடிக்கிறது. மாகாணசபை முறைமையும் 13 ஆவது திருத்தமும் தமிழர்களுடைய அரசியல் அபிலாஷைகளுக்குத் தீர்வைத் தராது என்கின்றது தமிழர்களின் ஒரு தரப்பு. இந்தியாவின் பங்களிப்பு தொடர வேண்டும். 13 ஐ நடைமுறைப்படுத்துவத…
-
- 2 replies
- 454 views
-