Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேரீச்சை பூக்களின் மத்தியில் ஒரு ஆண்டி...(Adults only): நிழலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அங்கம் 06: இந்தியர்கள் Vs நாம்

இந்தியர் என்ற அடைப்புக்குகுறியீட்டினுள் தமிழக தமிழர்களை சேர்க்கவேண்டாம். :rolleyes::(

அதே போல் ஒரு PM இற்கு கீழ் இருக்கும் சக இந்திய உறுப்பினர்கள், தம்மை என்ன சொன்னாலும் சரி என்பது போல் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு விசுவாசமுள்ள ஒரு வேலைக்காரன் போல் நடந்து கொள்வர். எதிர்த்து ஒரு சிறு குரல் தானும் வராது. அப்படியானவர்கள் உயர் பதவியினை அடைந்த உடனேயே, தாம் எவ்வாறு முகாமையாளரால் சிரமத்துக்குள்ளானார்களோ அதே போன்ற அதிகாரத்தினை மற்றவர் மீது பிரயோகிக்க முயல்வர்.

இது ஒருமாதிரியான அடிமையுணர்வு பிரித்தானிய காலத்திலிருந்து நாளங்களில் புதைக்கப்பட்டுள்ளது. ஒருவகையான காப்பியடிக்கும் தன்மை...இயலாமையை, வக்கிரத்தை எளியோனிடம் காண்பித்து திருப்திகொள்ளும் கீழ்குணம். உதாரணமாக கல்லூரியில் ராகிங்கினால் பாதிக்கப்பட்டவர் ஜூனியரிடம் தன் வன்மத்தை தீர்ப்பதுபோல...!

எனக்கோ அடிப்படையில் இந்திய படையினரின் அடாவடித்தனங்களாலும், இந்திய தேசத்தின் துரோகத்தனத்தாலும் சிங்களவர்களின் மீது இருப்பதை விட அதிகமாக இந்தியர்கள் மீது இருந்தது. சிங்களவர்கள் வரலாற்று எதிரிகள்.. இந்தியர்கள் வரலாற்று துரோகிகள் எனும் புரிதலில் இன்றும் கூட இருக்கும் எனக்கு ஆரம்பத்தில் எந்த தனிப்பட்ட இந்தியர்களை கண்டால் கூட பிடிக்காமல் இருந்தது.

இதில் தமிழகத்தை, தமிழரை சேர்க்கவில்லைதானே? :D

என்னை மீண்டும் எப்படியாவது இலங்கைக்கு அனுப்பி விட துடித்துக் கொண்டு இருந்தார் யஸ்மின் எனும் என் முகாமையாளர்.

இது மல்லுகளின் இயற்கை குணம்.. குழிபறித்தல். ஆனால் நேரில் மிகசாதுவாக அன்பாக பழகுவர்..சந்தர்ப்பம் அவர்களுக்கு சாதகமாக வாய்க்கும் வரை... இது என்னுடைய அனுபவம்...என் அலுவலகப் பிரிவில் இருப்பது 14 பேர். நானும் என்னுடைய நேரடி உதவியாளர் மட்டுமே தமிழர்கள்.(தமிழன்தான் வேண்டுமென தெரிவு செய்தேன்). மற்ற அனைவரும் மல்லுகள். கேட்க வேண்டுமா மல்லு கும்மிகளை? ஆகையால் மனரீதியில் பிரிவுகளை தவிர்க்க முடியாது. பிறநாட்டு சகதோழர்களும், மல்லுகளும் எம்பிரிவை அழைப்பது "டைகர் குரூப்(Tiger Group)"

ம்ம்.. அந்த பேரீச்சம்பழ ஆன்டி....? :D

.

Edited by ராஜவன்னியன்

  • Replies 72
  • Views 22.9k
  • Created
  • Last Reply

உங்கட கதை சொல்லும் விதம் நன்று வாழ்த்துக்கள். கொஞ்சம் பிந்தி வாசிக்கிறதால

அங்கம் 6 மட்டும் ஒரே மூச்சில வாசிச்சிட்டன்.

இந்த கணனியில மட்டும் நாங்க நினைக்க நினைக்க தமிழில எழுத்து வரவேணும் எவ்வளவு நல்லா இருக்கும்.

நிழலி, நல்லா இருக்கு. தொடருங்கள். வாழ்த்துகள்.

கருத்து எழுதி உங்கள் போக்கை மாற்றுவதை விட , எண்ணம் போல் எழுத விட்டு படிப்பதால் , எனக்கு பரிட்சயமற்ற ஒரு தேசத்தை உங்கள் எழுத்துக்களால் உணரலாம் என நினைக்கிறேன். அனைத்தும் அருமை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கம் 06: இந்தியர்கள் Vs நாம்

நான் வேலை செய்த நிறுவனத்தில் இந்தியர்கள் அதிகம். அவர்களுக்கு அடுத்ததாக இலங்கையர்கள் அதிகம். எப்பவுமே இரு சாராருக்கும் நிழல் யுத்தம் போன்ற ஒன்று நிகழ்ந்து கொண்டே இருப்பதாகவே எனக்கு தெரிகின்றது.

இந்தியருக்கும் எமக்கும் உள்ள நிழல்ப்போரை தெளிவாக உண்மையாக எழுதி உள்ளீர்கள். இந்த அங்கம்-6 இல் உள்ள நிழலியை என்னால் வடிவாக உணர முடிகிறது.

:D

Edited by Ilayapillai

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியருக்கும் எமக்கும் உள்ள நிழல்ப்போரை தெளிவாக உண்மையாக எழுதி உள்ளீர்கள். இந்த அங்கம்-6 இல் உள்ள நிழலியை என்னால் வடிவாக உணர முடிகிறது. ................

தம்பி இளையபிள்ளை.. உங்க கதையும் நிழலியின்ரையைப் போல சுவாரசியமாத்தானே இருக்கு..! ஏன் பிட் பிட்டா இப்ப எழுதிறீங்கள்? நிழலியை மாதிரி ஒரு தொடரா எழுதலாமே?

என்னைப் பொறுத்தவரையில இப்படியான ஆக்கங்கள் பலவிதமான சூழ்நிலைகளையும் வாசிப்பாளனுக்கு அறிமுகப்படுத்தி அவனை நல்ல விதத்தில் தயார் செய்யும் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணா உங்களின் டுபாய் தொடரை தவறவிடாமல் விடாமல் படிப்பேn. அவல் பற்றி அறிவதற்கு இன்னும் பல நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளது.அநேனக மாக எல்லா வெலைஸ்தலங்களிலும் நீங்கள் எழுதுவது போன்ற முகாமையாளர்கள்team workersஇருக்கவே செய்கிறார்கள்.தேவை இல்லாதவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி குறை கண்டு பிடிப்பது. வேலையை விட்டே கலைப்பது இதை எல்லாம் எப்படி சொல்வது.....?அவர்களுக்கு இதெல்லாம் கை வந்த கலை.நன்றி அண்ணா.

யாயினி.

Edited by yagini

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி இளையபிள்ளை.. உங்க கதையும் நிழலியின்ரையைப் போல சுவாரசியமாத்தானே இருக்கு..! ஏன் பிட் பிட்டா இப்ப எழுதிறீங்கள்? நிழலியை மாதிரி ஒரு தொடரா எழுதலாமே?

என்னைப் பொறுத்தவரையில இப்படியான ஆக்கங்கள் பலவிதமான சூழ்நிலைகளையும் வாசிப்பாளனுக்கு அறிமுகப்படுத்தி அவனை நல்ல விதத்தில் தயார் செய்யும் என நினைக்கிறேன்.

ம்ம்ம்... நிழலியின் அங்கம்-6 படித்ததும் ஞாபகம் வந்த அனுபவங்கள்/ உணர்வுகளை எழுதி விட்டேன்... பிறகு தான் நானே ஜோசித்தேன் - தனது diary மாதிரி நிழலி தனது அனுபவங்களை எழுதும் போது, குறுக்க பேச கூடாது என்று!! :D !

எனெவே அந்த பதிவை நானே மட்டறுத்து விடுகிறேன்... சுவாரசியமாக எழுதும் அளவிற்கு எனக்கு எழுத்தாற்றல் நிச்சயமாக இல்லை. எனக்கு ஞாபக சக்தி தான் அதிகம் - அதனால் நடந்த சம்பவங்களை ஆற்றிய உரைகளை மீட்டு எழுதுவேனே தவிர - உணர முடிந்ததை விவரிக்கும் ஆற்றல் இல்லை.

நிழலியின் எழுத்து அந்த விதத்தில் மிக தரமானதாய் உள்ளது. அடுத்த பதிவிற்காய் ஆவலாய் உள்ளேன். :rolleyes:

அங்கம் 06 இணைத்தமைக்கு நன்றி நிழலி அண்ணா...

[பி.கு: நிழலி அண்ணாவின் திரியைத்தானே படித்து பதில் எழுதப் போனேன்... அங்கு எப்படி சாத்திரியின் பதில்

"வணங்காமண் நிவாரணம் மீண்டும் சிக்கல்..." :lol: என்னடா இது என்று ஒரு நிமிடம் ஜோசித்த பின்பு தான் விஷயம் புரிந்தது.... பேரீச்சை.... என்று ஆரம்பித்தால நான் தான் திரி மாறி அங்க போடன் என்று.... ஹிஹீஹி... :D:lol: ]

  • கருத்துக்கள உறவுகள்

அங்கம் 06 இணைத்தமைக்கு நன்றி நிழலி அண்ணா...

[பி.கு: நிழலி அண்ணாவின் திரியைத்தானே படித்து பதில் எழுதப் போனேன்... அங்கு எப்படி சாத்திரியின் பதில்

"வணங்காமண் நிவாரணம் மீண்டும் சிக்கல்..." :lol: என்னடா இது என்று ஒரு நிமிடம் ஜோசித்த பின்பு தான் விஷயம் புரிந்தது.... பேரீச்சை.... என்று ஆரம்பித்தால நான் தான் திரி மாறி அங்க போடன் என்று.... ஹிஹீஹி... :D:lol: ]

நானும் பேரீட்சையை பாத்துகொண்டு அங்கை தான் போய்ட்டேன். :lol:

  • தொடங்கியவர்

அங்கம் 7: ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் நீங்கள் தானே?

எம் அலுவலகத்தில் வார இறுதி நாட்களிலும் வீட்டில் இருக்காமல் வேலைக்கு வருபவர்கள் அதிகம். போய் சேர்ந்த இரண்டாவது மாதத்தில் நல்லா வெயில் எறிக்கும் ஒரு வார இறுதியில் என்னையும் வந்து வேலை பார்க்குமாறு யஸ்மின் கேட்டா. software testing இருந்தது, ஆனால் இவர் இப்படி கேட்பதும் நான் மறுப்பதும் அடிக்கடி நடப்பதால் "சரி நான் வாரன் நீங்களும்ம் வாங்கோ" என்று சொல்லி விட்டு வந்து விட்டேன். உண்மையிலேயே போக வேண்டி இருந்த வேலைதான் அது

ஐக்கிய அரபு ராச்சியத்தில், நான் போயிருந்த காலப் பகுதியில் வார இறுதி நாட்களாக வியாழனும் வெள்ளியுமே இருந்தன. (இப்போது வெள்ளியும் சனியும் என மாற்றி விட்டனர்)... எம் நிறுவனத்தை சேர்ந்த அநேகமானோர் திருமணம் முடிக்காதவர்கள் என்பதால் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் வீதி தோறும் சுத்தி திரிவதும், விடுதிகளில் உணவு உண்பதுமாகவே இருப்போம். அப்படி இல்லை என்றால் ஏதாவது ஒரு சிங்கள நண்பன் Duty free இல் இருந்து கொண்டு வந்திருக்கும் Whiskey யை அடித்து விட்டு அறைகளில் கும்மாளம் இடுவோம். அன்றிரவும் (புதன் இரவு) அப்படியே அடித்து விட்டு குப்புற படுத்ததில் அடுத்த நாள் நேரத்துடன் எழும்ப வெறுப்பாக இருந்தது. யஸ்மினை அலைய விடுவோம் என மனதில் நினைத்து கொண்டு அறையினுள்ளேயே இருந்து விட்டேன். பல தடவை தொலைபேசியில் என்னை அழைத்தும், பதில் சொல்லாமல் பேசாமல் இருந்து உச்ச கட்ட வெறுப்பை ஏத்தி விட்டேன். யஸ்மின் இரு குழந்தைகளின் தாய். அப்படி இருக்கவும் அவற்றை விட்டு விட்டு எனக்காக அலுவலகம் வந்து காத்திருந்து விட்டு போய் விட்டா. நான் மனதுக்குள் ஆயிரம் வாய்களால் சிரித்துக் கொண்டு இருந்தேன். ஒரு தவறை சிரித்து கொண்டு செய்வது சாடிசம் என்பர்

வார இறுதி முடிந்து சனி வந்தது

அலுவலகம் வந்தேன்

எப்படியும் ஒரு மோசமான e mail வரும் என எதிர் பார்த்து மின்னஞ்சல் பெட்டியை திறந்தால் அப்படி ஒன்றும் வரவில்லை. நேரம் கடந்து கொண்டு இருந்தது...நான் செய்ய வேண்டி இருந்த Software testing இன் பகுதி செய்யப் பட்டு கிடந்தது. யஸ்மின் வழக்கம் போலவே என்னுடன் கதைத்து கொண்டதை வைத்து பார்க்கும் போதே புரிந்தது ஏதோ உள்ளுக்குள் ஒரு சதித் திட்டம் இருக்கு என்று

மதியத்தின் பின், திடீரென மனித வள பிரிவில் (Human resource) இருந்து ஒரு Call வந்தது. ஒரு பரீட்சை (aptitude test) இருப்பதாகவும், அதனை நான் கண்டிப்பாக, உடனே செய்ய வேண்டும் எனவும் சொன்னார்கள். சதியின் ஆரம்பம் என புரிந்தது. ஏனெனில் என்னுடன் வேலை செய்யும் என் கொழும்பு நிறுவனத்தை சேர்ந்த ஏனைய 65 பேரில் யாருக்கும் இப்படி பரீட்சை வைக்கவில்லை. நான் கொழும்பு நிறுவனத்துடன் உடனே தொடர்பு கொண்டு இந்த பரீட்சையை தவிர்க்க முயன்றேன்...முடியவில்லை

இந்த பரீட்சை பற்றி சொல்வதென்றால், நான் வேலை செய்த டுபாய் நிறுவனத்தில் நிரந்தர தொழில் பெற (permanent staff) தேர்வு செய்யும் போது இதே போல் தான் வைப்பர். (இலங்கையில் இருந்து போன நாம் அனைவரும் Consultants ஆகவே இருந்தோம்..அதாவது இலங்கை நிறுவனத்தின் ஊழியர்களாக, இந்த டுபாய் நிறுவனத்தின் Projects செய்ய வந்து இருந்தோம்).. ஒரு முறை 35 பேரிற்கு ஒன்றாக இந்த பரீட்சை வைத்ததில் அதி கூடிய புள்ளியாக 23 புள்ளிகள் தான் ஒருவர் எடுத்து இருந்தார் (highest marks 23).. அந்தளவுக்கு கடினமான பரீட்சையை நான் வாழ்வில் காணவில்லை..

வேறு வழியின்றி அதனை செய்தேன். பரீட்சை தாள் ஆங்கிலத்தில் தான் இருந்தது. ஆனால் எனக்கோ வேறு ஒரு பாசையில் இருப்பதை போன்றே இருந்தது. கேள்வியே புரிய மாட்டேன் என ததிங்கினத்தோம் போடும் போது எப்படி பதிலை எழுதுவது? அந்த பரீட்சை 9 ஆவது மாடியில் மட்டும் நடந்திருக்காமல் இருந்திருந்தால் குதித்து தப்பி ஓடிப்பேன்... கிட்டத்தட்ட 25 கேள்விகளில் 12 வரைக்கும் முயன்று விட்டு அடுத்த கேள்வியை பார்க்கும் முன், தரப்பட்ட நேரம் முடிந்து விட்டது என பரீட்சை தாளை வாங்கிக் கொண்டு போய்விட்டனர்

கண்ணுக்கு முன் பெரிய ஆப்பு தெளிவாக தெரிந்தது

இதற்கு எத்தனை புள்ளிகள் பெற்றேன் என பார்க்கும் முன்

6 ஆவது அங்கத்தில் சொன்னது போல், சிங்களவர்கள் இந்தியர்களுடன் அலுவலகம் தவிர்ந்த வேறு எந்த விடயத்திலும் வெளியே இணைவதில்லை. என் team இல் முன்னர் இருந்த சிங்கள நண்பனும் அப்படியே இருந்தான். அவனுக்கு மாற்றீடாகத்தான் நான் போயிருந்தேன் (அவன் யஸ்மினின் தொல்லை பொறுக்காமல் 1 வருடத்திலேயே ஓடி விட்டான்). யஸ்மினின் வீட்டில் ஒரு ஒன்று கூடலும் Party யும் இருந்தது. Team இல் இருந்த மற்றவர்களை கூப்பிடும் போது வேறுவழியின்றி என்னையும் அழைத்தார். இவன் இலங்கையன், அதிலும் தன்னை மிக வெறுப்பவன் எனவே கண்டிப்பாக வரமாட்டான் என தான் நினைத்ததாக பின்னர் சொன்னா

எனக்குத் தான் எவராவது சாப்பாடு தருவினம் என்றால் ஓடிப் போய் சாப்பிடும் தாராள குணம் இருக்கே..... அத்துடன் டுபாய் வந்த நாளில் இருந்து கடை சாப்பாடு சாப்பிட்டு வெறுத்து போயிருந்த நான் "சரி, போவோம் " என முடிவெடுத்து போனேன்

அந்த தினம், நான் பரீட்சை செய்த நாளுக்கும் புள்ளி வெளி வரும் நாளுக்கும் இடைப் பட்ட ஒரு நாள்

அவரின் வீட்டை போனால், அங்கு முற்றுலும் மாறுபட்ட சூழ்நிலை இருந்தது

யஸ்மின் ஒரு கேரள பெண். கணவர் ஒரு தமிழ் ஆள். பொதுவாக மலையாளிகளுக்கு தமிழனை கண்னில் காட்ட ஏலாது...ஆனால் இங்கு இருவரும் குடும்பமே நடத்துகின்றனர்.

நிறைய பாட்டுப் போட்டிகளும், Games களும் வைத்து மிக கலகலப்பாக அந்த ஒன்று கூடல் இருந்தது. நான் அநேகமாக அனைத்திலும் பங்கு கொண்டு தொண்டை கிழிய பாட்டுப் பாடி, ஆட்டம் போட்டதில் இலங்கையன் என்றால் எதிலும் பங்கு கொள்ள மாட்டன் என்ற பிம்பம் உடைந்தது. எனது மனதில் இருந்த பல பிம்பங்களும் உடைந்தன

உண்மையில், தலைக் கனம் என்பது அரை குறை அனுபவம் உள்ள ஒருவனுக்கே வரும். நிறை குடம் தளும்பாது என்பர். எனது தலைக்கனம் எனக்கு உதவி செய்யவில்லை

ஒரு புதிய இடத்திற்கு போனால், அதில் நிலைத்து அந்த புதிய சூழலை எமக்கானதாக மாற்ற வேண்டும் என்றால், கண்டிப்பாக பழக வேண்டியது பணிவும் நிதானமும் பொறுமையும். இவை இல்லாவிடின் எந்த பெரிய கொம்பன் என்றாலும் விழ வேண்டியது தான்

நான் அப்படி இருக்க மறுத்து வந்தேன். ஆனால் அன்று அந்த வைபவத்திற்கு போன பின்பு, என்னுடைய பல கணிப்புகள் வெறும் தலைக்கனத்தில் எடுக்கப் பட்டவை என்று உணர்ந்து கொண்டேன். மற்றவர்கள் தம் அனுபவங்களினூடு கண்டு எமக்கு அறிவுரையாக சொல்பவை சரியாகத் தானிருக்கும் என்ற எடுகோள் மிக பிழையானது. அவர்கள் தாம் சார்ந்த வாழ்க்கை முறையினூடும், தமது அறிவினூடும் நிகழ்வுகளை பார்த்து அதில் இருந்து கற்றிருப்பர்.... அது எல்லாருக்கும் சரியாக வரும் என்பது பிழை.

இனி ஒத்துழையாமை கடைப்பிடிக்க கூடாது என நான் முடிவெடுத்த போது தான் அபிலாஷ் எனும் ஒருவரை அந்த ஒன்று கூடலில் முதன் முதலில் கண்டேன்

யஸ்மின், எம் Project இன் முகாமையாளராக இருப்பினும், முழு Team இற்கானவர் அவர் இல்லை என்பதும் (ஒரு Team பல Project களை கொண்டிருக்கும் வண்ணம்் எம் நிறுவனத்தில் வடிவமைக்கப் பட்டு இருந்தது) அந்த பதவிக்கு புதிதாக வர இருப்பவர் தான் அபிலாஷ் என்பதும் அன்று தான் நான் புரிந்து கொண்டேன்

அபிலாஷும் ஒரு மலையாளி.....(இலங்கை) தமிழர்கள் மீதான கடும் வெறுப்பை கொண்டிருக்கும், அரசியல் வாதியை விட மோசமான குள்ள நரித்தனம் மிகுந்த , ஆனால் மிகத் திறமையான் ஒரு மலையாளி

நானும் அவரும் முதன் முதலில் சந்தித்து கொண்டது அன்று தான்

என்னைக் கண்டதும், நான் இலங்கைத் தமிழன் என்பதை அறிந்ததும் அவர் கேட்டது....

"ஹேய் புலி....எங்கட பிரதமரை கொன்றவர்கள் தானே நீங்கள்...அது தவறுதானே"

அதற்கு நான்

"ஆம்.. தவறுதான்... ராஜீவ் எம் மக்களை குடும்பம் குடும்பமாக கொன்றது போல நாமும் அவரின் முழுக் குடும்பத்தையும் அழித்திருக்க வேண்டும்:

என் இந்த பதிலின் தாக்கம் அடுத்த வந்த 5 வருடங்களும் தொடர்ந்து வந்தன.

கண்ட முதல் நாளே மிக வெறுக்கும் மனிதானாக என்னால் உணரப் பட்ட இந்த மனிதானுடன் தான் என் மிகுதி 5 வருடமும் பல தொல்லைகளுடன் கழியும் என்று நினைக்கவே இல்லை. பிரபாகரன் எனும் உன்னத தலைவனின் மீது மலையாளிகள் கொண்டிருக்கும் உச்ச கட்ட வெறுப்பை அபிலாஷில் காணமுடியும்

அடுத்த நாள் வேலைக்கு போகின்றேன்

என் பரீட்சையின் புள்ளிகள் வந்திருந்தன....Manager அறையில் அபிலாஷ் அமர்ந்து இருந்தார்

நான்...........

(தொடரும்)

அங்கம் 8: டுபாய் வீதிகளில் 'அந்த CD' வேட்டை

Edited by நிழலி

நீங்க சொல்லுறது உண்மைதான் ஆனா பழிக்கு பழி எண்டா யாரும் வாழ ஏலாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்றிரவு அந்த நண்பன்..அவனை 'ஷான்' என்றே இனி அழைக்கின்றேன்...என் அறைக்கு வந்து, மச்சான் Balcony க்கு போய் வெளியே பார் என்றான்.

வெளியே அற்புதமான விளக்கு வெளிச்சத்தில் 'இம்பீரியல்' இரவு விடுதியும் அதனை சுற்றி தேவலோகத்தில் இருந்து நேராக வந்து உதித்த போன்ற அழகு மங்கையரும் நின்று கொண்டு இருந்தனர்.

போவோமா என்று கேட்டான்

நான் அதற்கு...

(தொடரும்...

)

இதின்ரை மிச்சம் எப்பவரும்? அங்காலை என்ன நடந்தது எண்டு சொன்னியளெண்டால் நல்லாயிருக்கும். :D

கிளுகிளுப்பாய் ஏதும் நடந்ததோ???????? :lol:

நிழலி அண்ணா.......அங்கம் 7ம் நன்றாக சுவாரிசமாக இருக்கிறது.......... வாழ்த்துக்கள். பரீட்சையில் சித்தி பெற்றீர்களா என்று அறிய அங்கம் 8ஐ ஆவலுடன் எதிர்பார்திருக்கிறேன்.

நன்றி அண்ணா உங்கள் ஆக்கத்திற்கு

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணா உங்களின் டுபாய் தொடர் அங்கம் 7ம் படித்தாயிற்று.உங்களுக்கு வைத்த பரீட்சையின் முடிவை அறிய மிகவும் ஆவலாய் இருக்கிறது.12கேள்விகள் மட்டும் தானே செய்துள்ளீர்கள் 12.12 மொத்தபுள்ளிகளையும் எடுக்க என்னுடைய வாழ்த்க்கள். :D:lol::lol:

யாயினி.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியை உடனடியாக இவ்விடத்திற்கு வருமாறு அழைக்கப் படுகிறீர்கள். :D இல்லாவிடின் இத்திரியில் 1000 சொற்களுக்கு குறையாத பதிவைப் பதியும் வரை மற்ற திரிகளில் எழுத தடை விதிக்கப்படும். (இப்பிடி ஒரு condition போட்டால் எப்பிடி இருக்கும்?) :lol:

Edited by Sabesh

  • தொடங்கியவர்

அங்கம் 8: டுபாய் வீதிகளில் 'அந்த CD' வேட்டை

அறைக்குள் இருந்த அபிலாஷ் என்னைப் பார்த்து ஒரு நமுட்டுச் சிரிப்பை உதித்துக் கொண்டார்

என் இருக்கையில் அமர போக முன் யஸ்மின் என்னை தன் இருக்கைக்கு வருமாறு தொலைபேசியில் (இன்ரகொம்) அழைத்தார்

"என்ன யஸ்மின்"

"அட நீங்கள் இந்தளவுக்கு ஆட்டம் போடுவீர்கள் என்று தெரியாமல் போச்சுது.... உங்களையும் மற்ற சிறீலங்கன் போல் நினைத்து விட்டேன்"

"எல்லாம் உங்களின் சாப்பாட்டு மேசையில் வைத்திருந்த சாப்பாட்டைப் பார்த்த பின் ஏற்பட்ட குதூகலம் தான்"

"பாட்டுக்கு பாட்டு போட்டியில் நல்லா பாடினீங்க" (என்னுடன் போட்டியில் கலந்து கொண்ட அநேகம் பேர் சின்ன பிள்ளைகள்.)... அந்த தனிப் பாட்டை நல்லா உணர்ந்து பாடின மாதிரி இருந்தது"

நான் பாடிய அந்தப் பாடல் "பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை பொழிந்துடும் கார்த்திகை மாதத்திலே" எனும் தலைவரைப் பற்றிய பாடல்

"நன்றி யஸ்மின்"

"மற்றது...உங்களின் பரீட்சை புள்ளி வந்திருக்கு.... 10 புள்ளிகள் தான் எடுத்திருக்கின்றீர்கள்"

"பத்து புள்ளிகளா....???"

"ஆம்"

"எப்படி 10 புள்ளிகள் வந்தது...நான் ஆகக் கூடியது 5 புள்ளிகள் தான் வரும் என்றுதான் நினைத்து இருந்தேன்"

"பரவாயில்லை...இந்த பரீட்சை ..புள்ளிகள் எல்லாம் பற்றி நான் அபிலாஷிற்கு சொல்லப் போவதில்லை...நீங்களும் அதைப் பற்றி யாரிடமும் கதைக்க வேண்டாம்...ஒரு சம்பிரதாயத்திற்குத் தான் அந்த பரீட்சை"..(பின்னொரு நாளில் என்னுடன் கதைக்கும் போது என்னை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப தான் அப்படி ஒரு பரீட்சை வைத்ததாக சொன்னார்)...

"நன்றி யஸ்மின்"

ஒரு கண்டம் விலகியது....அபிலாஷ் டுபாயில் இருக்கும் வரைக்குமான நித்திய கண்டம் ஆரம்பித்தது.

நான் பலருடன் வேலை செய்துள்ளேன்...நான் வேலை செய்தவர்களில் அபிலாஷ் போன்று கூர்மையான புத்தியுள்ள ஒரு முகாமையாளரை காணவில்லை. என்னை விட 4 வயதே அதிகமான அவரது ஆற்றலும், புதிய விடயங்களை உள்வாங்கிக் கொள்ளும் திறனும் எனக்கு எப்பவுமே ஆச்சரியத்தை ஏற்படுத்துபவை. அதே நேரத்தில் அவரின் குள்ள நரித் தந்திரமும், பொய்யும், எவரையும் மதிக்காத குணமும் கொண்ட ஒருவரையும் இன்னமும் நான் காணவில்லை. இந்த முரண்பட்ட குணாதிசயம் இருக்கும் இவருக்கு புலிகள் மீது ஏன் இவ்வளவு கடும் வெறுப்பு என்பதையும் என்னால் இறுதிவரைக்கும் கண்டு பிடிக்கவும் முடியவில்லை. இவரால் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வேறு அத்தியாயங்களில் எழுத வேண்டிய சந்தர்ப்பங்கள் வரின் எழுதுகின்றேன்

*********

டுபாயில் நான் தன்கியிருந்த மூன்று நட்சத்திர விடுதியில் இருக்கும் ரீவியை எப்படிதான் முறுக்கினாலும், Channel channel ஆக மாற்றினாலும் MTV வியைத் தவிர வேறு எந்த அலைவரிசையிலும் ஒரு 'கவர்ச்சியான' காட்சிகளையும் காணக் கிடைக்காது, இரவு ஒரு மணிக்கு பின் ஒரு சில ஆங்கிலப் படங்களில் காட்டி மறைக்கும் காட்சிகள் தான் இருக்கும்...

கூட்டத்தோட இருந்தாலே குதிக்கின்ற என் மனசுக்கு, தனித்த மூன்று நட்சத்திர அறையில், குளு குளு குளிரில், கை நிறைய காசும் கொண்டு, கேட்க ஆட்களும் இன்றி எனக்கே எனக்கான தனி அறையில் இருக்கும் போது எப்படி கும்மாளம் இட்டு இருக்கும்....

என் நண்பன் ஷானை அழைத்தேன்....இரண்டாம் மாடியில் இருக்கும் தனி அறையில் தான் அவனும் இருந்தான்

"மச்சான்...டுபாயில X rated சிடிகள் கிடைக்காதா ..தனிய இருக்கும் போது பார்த்தால் அந்த மாதிரி இருக்கும்"

"இல்லடா...நானும் எப்படி அவற்றை எடுக்கிறதெண்டு தெரியாமல் கஷ்டப் படுறன்"

"மற்ற பெடியள்ட கேட்பமா...அவங்கள் வந்து கனகாலம் தானே...அவங்களுக்கு தெரிந்து இருக்கும்"

மற்ற அறைகளில் இருக்கும் சிங்கள தமிழ் நண்பர்களிடம் கேட்டோம்

"ஐயோ...மெதுவா கதை...இது முஸ்லிம் நாடு...இங்க இப்படி எல்லாம் விக்க மாட்டங்கள்...எம்மிடம் ஒன்றும் இல்லை...வைத்து இருந்தாலே பிடிச்சுக் கொண்டு போயிடுவாங்கள்"

முயல் பிடிக்கும் நாயை முகத்தில பார்த்தால் கண்டு பிடிக்கலாம்.... உவங்கள் இலங்கையில் இருந்தாவது Hard disk இல் கொண்டு வந்து computer ரில் வைத்து பார்ப்பாங்கள் என்று தெரியும்...ஆனால் சொல்லவே மாட்டன் என்று அடம் பிடித்தாங்கள்

"சரி மச்சான்...வேலைக்கு ஆகாது...தேடுதல் வேட்டை ஒன்று போடுவம்....வா பக்கத்தில இருக்கின்ற எல்லா வீடியோ கடைகளிலும் விசாரித்துப் பார்ப்பம்"

விசாரித்தோம்....எம்மை ஏற இறங்க பார்த்தார்கள்...."இல்லை...இங்க வீடியோ கடைகளில் இதெல்லாம் வைத்திருக்க முடியாது" என்றார்கள்

"எங்க எடுக்கலாம்"

"தேடி பாருங்கள்"

மீண்டும் தெருக்களில் கண்ணில் விளக்கெண்ணை வைத்துக் கொண்டு தேடினோம். டுபாயில் திருட்டு VCD களை முடுக்குச் சந்திகளில் வைத்து திருட்டுத் தனமாக வைத்து விற்பர். போய் பார்த்தால் எல்லாமே புதிய தமிழ், ஹிந்தி மற்றும் மலையாள படங்கள் தான் இருந்தன. விக்கிறவன் ஒவ்வொருத்தனும் ஒரு டைப் பாக இருந்தான்கள்

ஒருத்தனிடம் கேட்டுப் பார்த்தேன்

"அது இருக்கா"

"எது"

கையால் ஒன்று இரண்டு மூன்று என அபிநயம் பிடித்தேன்

"ஓ....திரிபில் எக்ஸா"

"ம்ம்ம்"

அவனும் அங்கையிம் இங்கையும் பார்த்துட்டு....."அந்த முடுக்குள் வாங்கள்" என்றான்

பயம் தொற்றியது..முடுக்குக்குள் கூப்பிட்டு குத்த போறானோ அல்லது பொலிசை கூப்பிடப் போறானோ என்று

ஆனலும் ஆசை பயமறியாது...போனோம்

வகை வகையாக சிடிக்கள் வைத்து இருந்தான்.......ஆக்கிமீடிஸ் திணிவு தொடர்பான தத்துவத்தை கண்டு பிடித்தபோது கூட இப்படி சந்தோசப்பட்டு இருப்பாரோ தெரியாது.

முஸ்லிம் நாடு என்றும் அவை மிகவும் புனிதமான சட்டங்கள் கொண்டவை என்றும் சொல்லப்பட்டு வந்த பொய்யின் இரண்டாவது திரையும் கழன்று விழுந்தது எமக்கு. அவர்களின் சட்டங்கள் எல்லாம் வெளியே பார்ப்பவர்களுக்கு போலித் தனமான தோற்றம் தர உதவுபவையே அன்றி உண்மை அதுவல்ல..... பெண்களின் கவர்ச்சியான படங்களை தாங்கி வரும் இந்திய சஞ்சிகைகளைக் கண்டால் அந்த கவர்ச்சி படங்களுக்கு கறுப்பு மையிட்டு மறைத்து விக்குமாறு சட்டம் உள்ள நாட்டில், தெரு தெருவெங்கும் XXX rated movies மிகத் தாராளமாக விற்கப்பட்டு வருவதை கண்டோம். இதற்கெனவே ஒரு சில எல்லாருக்கும் தெரிந்த ஆனால் ரகசியமான தெருக்களே இருக்கின்றன என்பதை பின்னாளில் அறிந்து கொண்டோம்.

கை நிறைய CD களை அள்ளிக் கொண்டு வந்தோம்...வந்ததுடன் நிற்காமல் நாம் அவற்றை வைத்திருக்கின்றோம் எனும் தகவலையும் மற்ற அலுவலக நண்பர்களுக்கு மெதுவாக பரப்பி விட்டோம்

அடுத்த நாளுக்கு அடுத்த நாள்...என் கொழும்பு நி்றுவனத்தின் டுபாய் மேலாளர் 'மிலிந்த' என்னிடம் வந்தார்.....

"என்ன..வந்து இரண்டு மாதம் கூட முடியவில்லை அதுக்குள்ள இப்படி செய்றியே"

"ஏன் ..என்ன செய்தனான்"

"CD வாங்கினாயா"

யாரோ மேலாளருக்கு போட்டுக் கொடுத்து பேர் வாங்கிட்டான் என்பது புரிந்தது

"அது...வந்து...."

"சரி சரி.... உன்னிடம் இருக்கின்றதில் இரண்டு CD யாவது தா.. இன்றிரவு பார்த்து விட்டு தருகின்றேன்"

(தொடரும்)

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வெருட்டினாத்தான் வாறாங்கப்பா...... :D

ரொம்பவே துணிச்சல் தான் உங்களுக்கு நிழலி அண்ணா....... இந்த சிடீக்காக இப்படி தெருவில தேடி திரிந்தீர்களா? நம்பவே முடியல :wub:

  • கருத்துக்கள உறவுகள்

"எங்க எடுக்கலாம்"

"தேடி பாருங்கள்"

மீண்டும் தெருக்களில் கண்ணில் விளக்கெண்ணை வைத்துக் கொண்டு தேடினோம். டுபாயில் திருட்டு VCD களை முடுக்குச் சந்திகளில் வைத்து திருட்டுத் தனமாக வைத்து விற்பர். போய் பார்த்தால் எல்லாமே புதிய தமிழ், ஹிந்தி மற்றும் மலையாள படங்கள் தான் இருந்தன. விக்கிறவன் ஒவ்வொருத்தனும் ஒரு டைப் பாக இருந்தான்கள்

ஒருத்தனிடம் கேட்டுப் பார்த்தேன்

"அது இருக்கா"

"எது"

கையால் ஒன்று இரண்டு மூன்று என அபிநயம் பிடித்தேன்

"ஓ....திரிபில் எக்ஸா"

"ம்ம்ம்"

அவனும் அங்கையிம் இங்கையும் பார்த்துட்டு....."அந்த முடுக்குள் வாங்கள்" என்றான்

பயம் தொற்றியது..முடுக்குக்குள் கூப்பிட்டு குத்த போறானோ அல்லது பொலிசை கூப்பிடப் போறானோ என்று

ஆனலும் ஆசை பயமறியாது...போனோம்

ரெம்பத்தான் சிரமப் பட்டிட்டீங்கள் போலை இருக்கு..என்னைத் தொடர்புகொண்டிருந்தால் நான் எம்.எம்.எஸ்சிலை துண்டு துண்டாகவாவது அனுப்பியிருப்பேனே :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணா உங்களின் டுபாய் தொடர் அங்கம் 8ம் வாசித்தாயிற்று.உங்களுக்கு தரவேண்டிய புள்ளிகளலில் இரண்டைக்காணவில்லை.யாஸ்மினின

பின் பலதடவை உங்களின் தொடரை வாசிச்சதன் பின் தான் விளங்கியது.உண்மையிலயே உங்களின் தொடரை அடல்ஸ்தான் வாசிக்கனும் எண்டு.. :wub::wub::lol:

யாயினி.

அதுதான் இந்த தொடரை 1ல் இருந்து 8 வரை நான் வாசிக்கவேயில்லை. :wub:

அங்கம் 8: டுபாய் வீதிகளில் 'அந்த CD' வேட்டை

....

முஸ்லிம் நாடு என்றும் அவை மிகவும் புனிதமான சட்டங்கள் கொண்டவை என்றும் சொல்லப்பட்டு வந்த பொய்யின் இரண்டாவது திரையும் கழன்று விழுந்தது எமக்கு.....

(தொடரும்)

எங்க கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கோ, அங்க களவுக்களும் தாராளமாக இருக்கும்....

பிடி பட்டிருந்தால் என்ன செய்து இருப்பீங்கள் நிழலி அண்ணோய்? அதையும் வாசகர்களுக்குச் சொல்லலாம் இல்லையா??? :wub:

  • தொடங்கியவர்

சும்மா வெருட்டினாத்தான் வாறாங்கப்பா...... :wub:

ஹி ஹி... நான் இந்த 8 ஆவது அங்கத்தை எழுதி முடித்த பின் தான் பார்த்தன்

ரொம்பவே துணிச்சல் தான் உங்களுக்கு நிழலி அண்ணா....... இந்த சிடீக்காக இப்படி தெருவில தேடி திரிந்தீர்களா? நம்பவே முடியல :wub:

எல்லாம் ஒரு Thrilling தான்...

ரெம்பத்தான் சிரமப் பட்டிட்டீங்கள் போலை இருக்கு..என்னைத் தொடர்புகொண்டிருந்தால் நான் எம்.எம்.எஸ்சிலை துண்டு துண்டாகவாவது அனுப்பியிருப்பேனே :lol:

அப்ப சாத்திரி என்ற ஒரு புண்ணியவான் இருப்பது தெரியாதே... இப்ப கூட அனுப்பி வைக்கலாம் உங்களிடம் இருப்பதை (மனுசிக்கு தெரியாமல் பார்க்கும் விதமாக phone னை Silent ஆக வைக்க வேண்டும்)

நீங்கள் சிடி தேடி டுபாய் வீதிகளில் அலைந்ததை நினைச்சன் யாராச்சும் வீதியில் வைத்திருப்பார்களாக்கும் எண்டு.பின் பலதடவை உங்களின் தொடரை வாசிச்சதன் பின் தான் விளங்கியது.உண்மையிலயே உங்களின் தொடரை அடல்ஸ்தான் வாசிக்கனும் எண்டு.. :lol::lol::lol:

ஹி ஹி

அதுதான் இந்த தொடரை 1ல் இருந்து 8 வரை நான் வாசிக்கவேயில்லை. :wub:

அச்சாப் பிள்ளை..... இப்படி எல்லா எல்லாச் சின்னப்புள்ளைகளுக்கும் அச்சாவா இருக்கவேண்டும்

எங்க கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கோ, அங்க களவுக்களும் தாராளமாக இருக்கும்....

பிடி பட்டிருந்தால் என்ன செய்து இருப்பீங்கள் நிழலி அண்ணோய்? அதையும் வாசகர்களுக்குச் சொல்லலாம் இல்லையா??? :D

அப்படி ஒரு விடயமே நடப்பதில்லை.... விற்கின்றவர்களைக் கூட பிடித்து fine கட்டிய பின் விட்டு விடுவார்கள்..

தொடரை மேலும் வாசியுங்கள்...டுபாய் பற்றி அறிய முடியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.