Jump to content

சுட்ட கத்தரிக்காய்ச்சம்பல்: குறிப்பு 2


Recommended Posts

சுட்ட கத்தரிக்காய்ச்சம்பல்

தேவையான பொருட்கள்

ஒன்று/ இரண்டு பேருக்கு

4 - மேசைக்கரண்டி தயிர்

1 - பெரிய கத்தரிக்காய்

* சுட்ட சம்பலின் நிறம் வெளிர்ப்பாக இருக்க வேண்டும் என விரும்பினால் வேள்ளை கத்தரிக்காய் தான் நன்றாக இருக்கும்.

* வெள்ளை கிடைக்கவில்லை என்றால் ஊதா கத்தரிக்காய் பாவிக்கலாம். நீண்ட கத்தரிக்காயை தான் பெரிய கத்தரிக்காய் என சொல்லியுள்ளேன்.

நீண்ட கத்தரிக்காய் கிடைக்கவில்லையென்றால் சிறிய வெள்ளை/ ஊதா கத்தரிக்காயும் பாவிக்கலாம். நான் சிறிய கத்தரிக்காயை தான் பாவித்து செய்தேன்.

5-6 - சிறிய வெங்காயம்

2 - பச்சை மிளகாய்

1/2- தே. கரண்டி மிளகு

சுவைக்கு- உப்பு

அலுமினியத் தாள்

செய்முறை

1. போறணை/ Oven ஐ 230 பாகை செல்சியல்லில் சூடாக்கவும்

2. கத்தரிக்காய் மூழை நீக்கி அலுமினியத தாளினால் முழுமையாக மூடி சுற்றவும். சுற்றியபின் முள்ளுகரண்டி (Fork) மூலம் இரண்டு மூன்று இடங்களில் குற்றி தூளை செய்யவும் (இது நீராவி வெளியேற உதவும்)

3. கத்தரிக்காயை சூடான Oven இல் 25- 30 நிமிடம் சுடவும்

4. கத்தரிக்காய் சுடும் நேரத்தில் வெங்காயம், பச்சை மிளகாயை மிகச்சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்

5. 25-30 நிமிடங்களின் பின் கத்தரிக்காயை வெளியே எடுத்து சிறிது குளிர்ந்ததும் அலுமினியம் தாளை அகற்றவும்.

( கீழே உள்ள படத்தில் உள்ளது போல் தோல் சுருங்கி வரும். நான் வெள்ளை நிற பெரிய கத்தரிக்காய் இங்கு கிடைக்காதாதால் ஊதா நிற சிறிய கத்தரிக்காயை பாவித்தேன். இப்படி கபில நிறமாக வருவதை விரும்பாதவர்கள் வெள்ளை கத்தரிக்காயை பாவிக்கலாம்.)

canada103ky5.jpg

6. மேலும் கையால் தோலை உரிக்கக்கூடிய சூடு வரும் வரை குளிர விட்டு தோலை உரித்து கொள்ளவும்

7. சிறிய கத்தரிக்காய் என்றால் 4 ஆக, பெரிது என்றால் 8 ஆக பிளந்து சிறிய துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.

8. அரிந்த கத்தரிக்காயுடன், அரிந்து வைத்த வெங்காயம், மிளகாய், உப்பு, மிளகுத்தூள் என்பனவற்றை சேர்த்து கலக்கவும்

canada111lm6.jpg

9 இறுதியில் தயிரை சேர்த்து நன்கு கலந்தால் சுட்ட கத்தரிக்காய்ச் சம்பல் தயார்,

canada112vn6.jpg

இதனை சோற்றுடன் உண்ணல்லாம்.

குறிப்பு.

1. ஊரில் தயிரிற்கு பதிலாக் இதற்கு தேங்காய்ப்பால் (முதற்பால்) சேர்த்து செய்வார்கள்

2. தயிரிற்குபதிலாக sour cream உம் பாவிக்க முடியும்

நீங்களும் தயிரிற்கு பதிலாக தேங்காய்ப்பால்/ sour cream பாவித்து செய்து பார்த்து எது சுவையானதோ அதை தொடருங்கள்.

3. கத்தரிகாய் சுடுவதற்கு தேவையான நேரம், கத்தரிக்காயின் பருமன், Oven இன் வகை என்பவற்றுக்கு ஏற்ப மாறுபடும். 20 நிமிடத்தின் பின் வெளியே எடுத்து திறந்து பார்த்து படத்தில் காட்டியுள்ளது போல் தோல் சுருங்கி வந்திருந்தால் வெளியே எடுக்கலாம். இல்லாது விடின் மீண்டும் மூடி 5- 10 நிமிடம் சுடவும்.

மேலும் சில படங்களுக்கு

http://viriyumsiraku...og-post_22.html

Link to comment
Share on other sites

அட..படத்தில பார்க்க நன்னா தான் இருக்கு.. :wub: (சாப்பிட்டு பார்க்க எப்படி இருக்கும்??)..நான் சும்மா பகிடிக்கு பிறகு கோவித்து போடாதையுங்கோ :wub: ..எண்ட அம்மாவும் செய்யிறவா நன்னா தான் இருக்கிறது சோறும் இறைச்சி ஏதாச்சும் இருந்தா இதையும் போட்டு நன்னா குழைத்து போட்டு சாப்பிட நன்னா இருக்கும் :wub: ..ஆனா எனக்கு எப்படி செய்யிறது எண்டு எல்லாம் தெரியாது அல்லோ.. :lol:

நன்றி குளகாட்டன் மாமா செய்முறைக்கு... :lol: (முடிந்தா ஒரு பார்சல் இங்கால அனுப்பி விடுங்கோ சாப்பிட்டு விட்டு மிச்சம் சொல்லுறன்)... :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

ஆகா குளம்ஸ்..இது எங்க தயிர் வாரத்திற்கா.? கலக்கிட்டிங்க..

Link to comment
Share on other sites

:wub: ஆகா எனக்கு ரொம்ப பிடிச்ச கறி போட்டு இருக்கிறீங்கள்

படத்தை பார்க்க இப்பவே சாப்பிடனும் போல கிடக்கு

ஊருல இருக்கும் போது அடுப்புல சுட்டுட்டு போடுறது

இலகுவாக இருக்கும் என்டதால ஒரே செய்யுறது/

இங்க உந்த ஒவுனுக்கை வைச்சு எடுக்க பஞ்சில

எப்பாலும் இருந்துட்டுத்தான் செய்யுறது

குளம் ஆசையை தூண்டிவிட்டுட்டார் நாளைக்கு

ஒருக்கா செய்வம்.

Link to comment
Share on other sites

கத்தரிக்காயை சுடுவது கஷ்டமென்றால் முழுதாக அவித்து பிறகு தோலுரித்து சேர்க்கலாம். சிலவேளைகளில் வாழைக்காயையும்/உருளைக்கிழங்கையும் அவித்து/சுட்டு சேர்ப்பது எங்கள் வீட்டு வழக்கம்.

Link to comment
Share on other sites

ஜம்மு பேபி, தூயா நன்றி.

இரசிகை ஓம் ஊரிலை அடுப்பு தணலுக்க தான் கத்தரிக்காயை மூடி சுடுறது. தேங்காய்ப்பாலும், தேசிக்காய் புளியும் விட்டு செய்யிறது.

ஈஸ் நன்றி. தண்ணீரில் அவித்தால் கத்தரிக்காய் அதிகம் நீர் பிடிப்பாக இருக்கும். அதனால் எதிர்ப்பார்க்கும் சுவை கிடைக்காது என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

குளைக்காட்டான் பக்கத்துத் தோட்டத்திலை சுட்ட கத்தரிக்காயாக்கும் எண்டு நினைச்சன். ஆனால் பிறகுதான் தெரிஞ்சுது அது கத்தரிக்காய் சம்பலெண்டு .நானும் உது செய்யிறனான் நல்லாயிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளக்ஸ் உங்க ஊர் தானே கத்தரிக்காய்க்கு பெயர் போன ஊராச்சே.

இதே மாதிரி (சாம்பல்)வாழைக்காய் தோலில் சம்பல் செய்வார்கள்.எப்படி என்பதெதுவும் தெரியாது.ஆனால் ரொம்ப சுவையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுட்ட கத்தரிக்காய்ச்சம்பல் எனக்கும் நல்ல விருப்பம். எப்படி செய்யிறது எண்டு தெரியாம இருந்தன். செய்முறைக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த சம்பலை போறணை வர முன்னர் அடுப்புகுள்ள கத்தரிகாயை வைத்து சூடாக்கிறவை பிறகு தோலை உரித்து போட்டு தயிருக்கு பதிலாக தேங்காய்பாலை விட்டு ஊரில இந்த சம்பலை செய்யிறவை. :lol:

Link to comment
Share on other sites

எனக்கு ரொம்ப பிடித்த சம்பல் இது.

ஊரில ஏதும் விசேசம் என்றால் வாழைக்காய் அண்ட் கத்தரிக்காய் சம்பல் தேங்காய்ப்பூ போட்டு செய்த சம்பல் தருவார்கள்.இருந்து ஒரு பிடி பிடிக்கிறது. இங்கே இதுதான். நானும் நாளைக்கு வெள்ளிக்கிழமை செய்ய போகிறேன் உங்கள் முறையில். :lol:

குளம் அண்ணா!

நீங்கள் சொன்ன முறையில் ஓவனில் வைப்பதாக வருகிறது.

நாங்கள் செய்யும் முறை எப்படி தெரியுமோ.

கத்தரிக்காயை தோல் சீவி பெரிதும் இல்லாமல் சிறியதும் இல்லாத துண்டுகளாக வெட்டி பொரிக்கணும். பொரிப்பது என்று அர பதமாக பொரிக்கணும். கூட அதுவும் அவித்தல் போல தான். ஆனால் எண்ணைக்குள்ள போட்டதும் ஒரு சுவை இருக்கும். (கொழுப்பென்று பேசாதைங்கோ). அப்புறம் நீங்கள் சொன்னவையை சேர்ப்பது.

மரக்கறிகளோடு சேர்த்து உண்ண நன்றாக இருக்கும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா எனக்கும் இது ரொம்பப்பிடித்த கறி.ஆனல் இங்கு இதுக்கு நேரம் கூடத்தேவைப்படுவதால் செய்வது குறைவு.பதிவுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

ஜம்மு பேபி, தூயா நன்றி.

இரசிகை ஓம் ஊரிலை அடுப்பு தணலுக்க தான் கத்தரிக்காயை மூடி சுடுறது. தேங்காய்ப்பாலும், தேசிக்காய் புளியும் விட்டு செய்யிறது.

ஈஸ் நன்றி. தண்ணீரில் அவித்தால் கத்தரிக்காய் அதிகம் நீர் பிடிப்பாக இருக்கும். அதனால் எதிர்ப்பார்க்கும் சுவை கிடைக்காது என நினைக்கிறேன்.

உந்த சம்பலை போறணை வர முன்னர் அடுப்புகுள்ள கத்தரிகாயை வைத்து சூடாக்கிறவை பிறகு தோலை உரித்து போட்டு தயிருக்கு பதிலாக தேங்காய்பாலை விட்டு ஊரில இந்த சம்பலை செய்யிறவை. :lol:

இதை தான் நானும் ரசிகையும் சொல்லியிருக்கிறம். :lol: இங்க எங்க அடுப்புக்கும் தணலுக்கும் போறது? :wub: அப்பிடி எண்டா நிலக்கரியிலை எரிக்கிற பாபிக்கியு தணலுக்க தான் போட வேணும் :lol:

Link to comment
Share on other sites

குளக்ஸ் உங்க ஊர் தானே கத்தரிக்காய்க்கு பெயர் போன ஊராச்சே.

இதே மாதிரி (சாம்பல்)வாழைக்காய் தோலில் சம்பல் செய்வார்கள்.எப்படி என்பதெதுவும் தெரியாது.ஆனால் ரொம்ப சுவையாக இருக்கும்.

வாழைக்காய் தோல் சம்பலுக்கு, வாழைக்காயின் பச்சை வெளித்தோலை மெல்லிசாக சீவி எடுத்து விட்டு, சதைக்கு வெளியே உள்ள தோலை கவனமாக சீவி எடுத்து அதை அவித்து தான் சம்பல் செய்வார்கள். வாழைக்காயை அடுப்பில் சுட்டு வீட்டில் செய்து பார்த்ததில்லை. எதுக்கும் அடுத்தமுறை அதையும் முயற்சித்து பார்த்தால் போச்சு :wub:

எனக்கு ரொம்ப பிடித்த சம்பல் இது.

ஊரில ஏதும் விசேசம் என்றால் வாழைக்காய் அண்ட் கத்தரிக்காய் சம்பல் தேங்காய்ப்பூ போட்டு செய்த சம்பல் தருவார்கள்.இருந்து ஒரு பிடி பிடிக்கிறது. இங்கே இதுதான். நானும் நாளைக்கு வெள்ளிக்கிழமை செய்ய போகிறேன் உங்கள் முறையில். :lol:

குளம் அண்ணா!

நீங்கள் சொன்ன முறையில் ஓவனில் வைப்பதாக வருகிறது.

நாங்கள் செய்யும் முறை எப்படி தெரியுமோ.

கத்தரிக்காயை தோல் சீவி பெரிதும் இல்லாமல் சிறியதும் இல்லாத துண்டுகளாக வெட்டி பொரிக்கணும். பொரிப்பது என்று அர பதமாக பொரிக்கணும். கூட அதுவும் அவித்தல் போல தான். ஆனால் எண்ணைக்குள்ள போட்டதும் ஒரு சுவை இருக்கும். (கொழுப்பென்று பேசாதைங்கோ). அப்புறம் நீங்கள் சொன்னவையை சேர்ப்பது.

மரக்கறிகளோடு சேர்த்து உண்ண நன்றாக இருக்கும். :lol:

பிரிய சகி ஓம் ஊரில் கத்தரிக்காயை பொரித்து பின் பச்சமிளகாய், வெங்காயம் தேங்காய் பூ/ பால் விட்டு சம்பல் செய்வார்கள்.

சாத்திரி இங்க யாரோட தோட்டத்துக்கு போய் கத்தரிகாயை சுடுறது.

கறுப்பி, சஜீவன் உங்கள் கருத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கத்தரிக்காயில் எந்தவகையான உணவுகளை தயாரிக்க முடியுமோ அத்தனை வகையான உணவுகளையும் ஊரிலேயே அதிகம் சாப்பிட்டு வளர்ந்தவன்.கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் கிரந்தி என்று சொல்வார்கள்.

ஆனால் இங்கே கத்தரிக்காய் சம்பல் செய்யும்போது பிள்ளை பிரியசகி சொன்னமாதிரித்தான் கத்தரிக்காயை பொரித்து மிளகாய் வெங்காயம் தயிர் சேர்த்து சாப்பிட அந்த மாதிரித்தான் இருக்கும் :lol:

தவலுக்கு நன்றி குளமண்ணை :lol: எண்டாலும் மட்டுவில் கத்தரிக்காயை அடிக்க ஏலாது :wub:

Link to comment
Share on other sites

கத்தரிக்காயில் எந்தவகையான உணவுகளை தயாரிக்க முடியுமோ அத்தனை வகையான உணவுகளையும் ஊரிலேயே அதிகம் சாப்பிட்டு வளர்ந்தவன்.கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் கிரந்தி என்று சொல்வார்கள்.

ஆனால் இங்கே கத்தரிக்காய் சம்பல் செய்யும்போது பிள்ளை பிரியசகி சொன்னமாதிரித்தான் கத்தரிக்காயை பொரித்து மிளகாய் வெங்காயம் தயிர் சேர்த்து சாப்பிட அந்த மாதிரித்தான் இருக்கும் :lol:

தவலுக்கு நன்றி குளமண்ணை :D எண்டாலும் மட்டுவில் கத்தரிக்காயை அடிக்க ஏலாது :wub:

என்ன உங்களுக்கு நான் அண்ணையோ? :lol:

மட்டுவில் முட்டி கத்தரிக்காய் இனம் 2 வருட தென்மராட்சி இடப்பெயர்வோட இல்லாமல் போய்விட்டதாக அறிய முடிந்தது. மீள குடியமர்ந்த பின் மட்டுவில் பிரதேசத்தில் திருநெல்வேலி ஊதா எனும் வகை கத்தரி வகையை தான் பயிரிடுவதை காண முடிந்தது. தப்பியொட்டி யாராவது ஒருவர் இருவர் வைத்திருக்கிறார்களா என தெரியவில்லை. ஆனால் அந்த இடப்பெயர்வின் வின் சந்தையில் மட்டுவில் முட்டிகத்தரிக்காய் கிடைப்பதில்லை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன உங்களுக்கு நான் அண்ணையோ? :icon_idea:

நான் உங்களை அங்கிள் என்று அழைக்காததை நினைத்து சந்தோசப்படுங்கள் :)

Link to comment
Share on other sites

நான் உங்களை அங்கிள் என்று அழைக்காததை நினைத்து சந்தோசப்படுங்கள் :icon_idea:

இது உங்களுக்கு தேவையா குளம்ஸ்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரக்கறிகளிலையே பிடிக்காத மரக்கறி இந்த கத்தரிக்காயும் வெண்டிக்காயும் தான் (பொதுவாக மரக்கறியே பிடிக்காது எனக்கும் ஜம்முக்கும் .... என்ன ஜம்மு? ) . நன்றி குளக்காட்டான்.

Link to comment
Share on other sites

மரக்கறிகளிலையே பிடிக்காத மரக்கறி இந்த கத்தரிக்காயும் வெண்டிக்காயும் தான் (பொதுவாக மரக்கறியே பிடிக்காது எனக்கும் ஜம்முக்கும் .... என்ன ஜம்மு? ) . நன்றி குளக்காட்டான்.

யம்மு போலவே பேசுறிங்களே!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யம்மு போலவே பேசுறிங்களே!!!!

மரக்கறி பிடிக்காதப்பா வெள்ளிக்கிழமைகளில இதுதான் பிரச்சனை வாறது காணாததுக்கு கனக்க விரதங்கள் என்று வேற இருக்கு (வெள்ளிக்கிழமைகளில எனக்கு கடையில தான் சாப்பாடு (அம்மாக்கு சொல்லிப்போடாதேங்கோ. வீட்ட கொஞ்சம் மரக்கறியை அம்மாக்காக சாப்பிட்டு காணும் என்று சொல்லிட்டு மிச்சத்தை கடையில போய் வெட்டுறது இதுதான் என்ட வழக்கம் )

Link to comment
Share on other sites

மரக்கறி பிடிக்காதப்பா வெள்ளிக்கிழமைகளில இதுதான் பிரச்சனை வாறது காணாததுக்கு கனக்க விரதங்கள் என்று வேற இருக்கு (வெள்ளிக்கிழமைகளில எனக்கு கடையில தான் சாப்பாடு (அம்மாக்கு சொல்லிப்போடாதேங்கோ. வீட்ட கொஞ்சம் மரக்கறியை அம்மாக்காக சாப்பிட்டு காணும் என்று சொல்லிட்டு மிச்சத்தை கடையில போய் வெட்டுறது இதுதான் என்ட வழக்கம் )

ஆகா...அவனா(ரா) நீ(ங்க) :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா...அவனா(ரா) நீ(ங்க) :icon_idea:

எவன் :) ? ஆகா ஆரம்பிச்சிட்டாங்க இனிமல் சடை பின்னி பூ வைச்சு பொட்டும் வைக்காமல் போகமாட்டிங்கள் போல :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ண[கிரந்தி] கடி வந்தால் யார் மருந்து கொடுப்பது? :lol::lol:

ரசிகையா

தூயா வா

எங்க ஜம்மு உங்கட பதிலையும் சொல்லுங்க :rolleyes::o:unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோல்வியில் முடிவடைந்த திம்புப் பேச்சுக்கள் :  வவுனியாவிலும் திருகோணமலையிலும் இருநாட்களில் பலியிடப்பட்ட 220 தமிழர்கள் http://www.tchr.net/his_riots_outcome.htm தமிழர்களையும், இந்தியாவையும் தனது "புதிய யோசனைகள்" எனும் சதித் திட்டத்தினூடாக ஹெக்டர் ஜயவர்த்தன ஏமாற்றிய நாளான 1985 ஆம் ஆண்டு ஆவணி 16 ஆம் திகதி, வவுனியா -  யாழ்ப்பாணம் வீதியில் விமானப்படைக்குச் சொந்தமான ஜீப் வண்டியொன்றின்மீது போராளிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், கண்ணிவெடித் தாக்குதலில் ஜீப் வண்டி தப்பியதுடன், அதில் பயணம் செய்த விமானப்படையினருக்கும் சேதங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனாலும், தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதனால் கொதிப்படைந்த விமானப்படையினர் பொதுமக்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டனர். வவுனியாவிலிருந்து வடக்கே செல்லும் வழியில் பதினைந்து தமிழர்களைச் சுட்டுக் கொன்ற விமானப்படையினர் வீதியின் இரு மருங்கிலும் இருந்த தமிழர்களின் வீடுகளுக்கும், கடைகளும் தீவைத்தனர்.  அன்றிரவு, சுமார் 400 பேர் அடங்கிய இராணுவத்தினரின் படைப்பிரிவொன்று தமிழர்களின் கிராமங்களான இரம்பைக்குளம், தோணிக்கல், கூழைப்பிள்ளையார் குளம், கூடம்குளம், மூன்றுமுறிப்பு ஆகிய பகுதிகளுக்கு  ஐம்பது வாகன‌ங்களில் வந்திறங்கியது. அக்கிராமங்கள் முற்றாகச் சுற்றி வளைக்கப்பட்டதுடன், நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு வீடுகளுக்கு வெளியே வந்தோரை கைகளை மேலே தூக்கி வருமாறு பணித்த இராணுவத்தினர், சனநடமாட்டம் அற்ற பகுதிக்கு அவர்களை இழுத்துச் சென்றனர். அக்கிராமங்களின் வீடுகளுக்குள் புகுந்த சில இராணுவத்தினர் அங்கிருந்த இளைஞர்களை அவர்களின் பெற்றோரின் முன்னிலையில் சுட்டுக் கொன்றனர். மீதிப்பேரைக் கைது செய்து , ஏனையோர் தடுத்துவைக்கப்படிருந்த  ஒதுக்குப்புறமான பகுதிக்கு இழுத்து வந்தனர். "ஒரு வயதான அதிகாரி அடித்தொண்டையில் கத்தினான், "நாற்பது வயதிற்குக் குறைந்த எல்லாப் பேய்களும் எனக்கு முன்னால் வந்து வரிசையில் நில்லுங்கள். மற்றையவர்கள் நிலத்தில் இருக்கலாம்" என்று அவன் கர்ஜித்தான். எனக்கோ 52 வயது. நான் நிலத்தில் இருந்துகொண்டேன். எனது இரு மகன்களும் இராணுவத்தினர் கட்டளையிட்டதன்படி வரிசையில் சென்று நின்றுகொண்டார்கள். எனது பிள்ளைகள் உட்பட சுமார் 50 இளைஞர்களை அவர்கள் வரிசையில் நிறுத்திச் சுட்டுக் கொன்றார்கள்" என்று சர்வதேச மன்னிப்புச் சபையிடம் தனது வாக்குமூலத்தைக் கொடுத்த இரு இளைஞர்களின் தந்தையான கந்தவனம் குமரன் கூறினார்.  29 வயது நிரம்பிய சிவகுமாரன் எனும் இளைஞரது மனைவியான சாந்தினி தனது வாக்குமூலத்தில் அன்றிரவு அப்பகுதியில் நடந்த அகோரமான படுகொலைகளைப்பற்றி இவ்வாறு சாட்சியமளித்தார். "அன்றிரவு எனது வீட்டிற்கு இராணுவத்தினர் வந்தபோது எனது கணவரை நான் ஒளித்திருக்கச் சொன்னேன். ஆனால், வீட்டினுள் வந்த இராணுவத்தினர் அவரைக் கண்டுவிட்டனர். அவரைக் கைகளை உயர்த்துமாறு கேட்டுக்கொண்டே நெற்றியில் சுட்டுக் கொன்றனர். அவரது தலை சிதறிப்போக, மூளைப்பகுதி நிலமெங்கும் சிந்தத் தொடங்கியது. எனது பெயரைச் சொல்லிக்கொண்டே அவர் எனது கைகளில் இறந்துபோனார்" என்று அவர் கூறினார்.  அப்படுகொலைகள் இரண்டு நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்றன. வவுனியாவில் மொத்தமாக 120 தமிழர்களை சிங்கள இராணுவத்தினர் இரு நாட்களில் கொன்றனர். கொல்லப்பட்டவர்களில் 8 சிறுவர்களும் அடங்கும், அவர்கள் எவருமே 10 வயதைக் கடந்திருக்கவில்லை. அப்பகுதியின் சர்வோதய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், அவரது மனைவியும் கொல்லப்பட்டவர்களில் அடங்கும். தாம் கொன்றவர்களில் 40 பேரின் உடல்களை இழுத்துவந்த இராணுவம் வவுனியா வைத்தியசாலையில் போட்டுவிட்டுச் சென்றது. மீதி 80 பேரின் உடல்களும் படுகொலைகள் நடந்த இடத்திலேயே கிடந்தன.   தமிழர்களை வேரோடு பிடுங்கி எறிதல்  இவ்விரு நாட்களிலும் தமிழர் தாயகத்தின் மற்றுமொரு பகுதியிலும் சிங்கள அரச படைகள் தமிழர்கள் மீதான படுகொலைகளைப் புரிந்திருந்தனர். திருகோணமலையில் இவ்விரு நாட்களிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 100 தமிழர்களை இராணுவம் கொன்றது. பாரம்பரிய தமிழ்க் கிராமங்களான பன்குளம், இரணைக்கேணி, சாம்பல்த்தீவு ஆகியவற்றிற்குள் புகுந்த இராணுவத்தினர் அக்கிராமங்களில் இருந்து தமிழர்கள் எவரும் வெளியேற முடியாதவாறு சுற்றிவளைத்து நூறு பொதுமக்களைச் சுட்டுக் கொன்றனர். தமது உறவினர்கள் கொல்லப்பட்டதைக் கண்ணால்க் கண்ட சாட்சிகள் தமது சாட்சியங்களை சர்வதேச மன்னிப்புச்சபை உட்பட பல மனிதவுரிமை அமைப்புக்களுக்கு வழங்கியிருந்தனர். சாம்பல்த் தீவில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை வரிசையில் நிற்கவைத்த இராணுவம் அருகிலிருந்து சுட்டுக் கொன்றது. பன்குளம் பகுதியில் இராணுவத்தினருடன் இணைந்துகொண்ட சிங்கள ஊர்காவல்ப் படையினர் இக்கோரத் தாண்டவத்தில் ஈடுபட்டனர். சிங்கள ஊர்காவல்ப் படை ஆனால், இத்தாக்குதல்கள் நன்கு திட்டமிட்ட வகையில், இராணுவத்தினருக்கான பாதுகாப்பு வலயம் ஒன்றைனை உருவாக்கும் நோக்கில் ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தினால் நடத்தப்பட்டிருந்தது. வடக்கு மாகாணத்திற்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இடையில் சூனிய வலயம் ஒன்றினை ஏற்படுத்துவதே தமது நோக்கம் என்று லலித் அதுலத் முதலி இத்தாக்குதல்கள் குறித்துப் பேசும்போது கூறினார். இத்திட்டத்தினை உருவாக்கும் ஆலோசனைகளை அக்காலத்தில் இலங்கையில் தங்கியிருந்த இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்கள் வழங்கியிருந்தனர். "வடக்கிற்குள் பயங்கரவாதத்தை நாம் ஒடுக்கி விடுவோம்" என்று லலித் அதுலத் முதலி தொடர்ச்சியாகக் கூறிவந்தார். வவுனியாவிற்கு வடக்கே இராணுவத்தினருக்கான பாதுகாப்பு வலயம் ஒன்றினை உருவாக்கி அப்பகுதியில் தமிழர்களை நடமாட தடைசெய்தமையும், திருகோணமலை முதல் முல்லைத்தீவு வரையான கடற்பரப்பினை தடைசெய்யப்பட்ட பிரதேசமாக அறிவித்ததும் வடக்கையும் கிழக்கையும் முற்றாகத் துண்டித்துவிடும் நோக்கில்த்தான் என்பது வெளிப்படையானது. நிலம் வழியாக வடக்கிலிருந்து கிழக்கிற்கு போராளிகளும், ஆயுதங்களும் கொண்டுவரப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே வடக்கு மாகாணத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் இடையிலான நிலத்தொடர்பினை இராணுவப் பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவதன் மூலம் அரசாங்கம் முற்றாகத் துண்டித்தது. அத்துடன், கடல்வழியாக போராளிகள் இந்த மாகாணங்களுக்கிடையில் பயணிப்பதைத் தடுக்க கடல்வலயத் தடையினையும் அரசு கொண்டுவந்திருந்தது. இலங்கையின் மாகாணங்கள்  தெற்கில் காணியற்ற சிங்கள விவசாயிகளை தமிழர் தாயகத்திலிருந்து தமிழர்களை வேறோடு பிடுங்கியெறிந்த பகுதிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் இராணுவப் பாதுகாப்பு வலயங்களில் லலித் அதுலத் முதலி குடியேற்றத் தொடங்கினார். என்னுடன் பேசும்போது குறைந்தது 200,000 சிங்களவர்களையாவது குடியேற்றுவதே தனது திட்டம் என்று ஒருமுறை கூறியிருந்தார். மேற்கின் மன்னார்க் கரையிலிருந்து முல்லைத்தீவின் கிழக்கு எல்லைவரையான பகுதியில் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு வந்த இராணுவப் பாதுகாப்பு வலயத்தில் இவர்கள் குடியேற்றப்பட்டு வந்தனர். மேலும், முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையான கரையோரக் கிராமங்களில் தமிழர்களை விரட்டிவிட்டு சிங்கள மீனவர்களை குடியேற்றவும் லலித் அதுலத் முதலி திட்டமிட்டார். பெருமளவு இயற்கை வளங்கள் நிரம்பிய இப்பகுதிகளில் தமிழர்களின் பாரம்பரிய விவசாய மற்றும் மீன்பிடிக் கிராமங்கள் தொடர்ச்சியாகக் காணப்பட்டு வந்தன. வளம் நிறைந்த இக்கிராமங்களை இராணுவ ஆக்கிரமிப்பு ஒன்றின் ஊடாகக் கைப்பற்றி சிங்களவர்களைக் குடியேற்றுவதே ஜெயவர்த்தனவினதும் லலித் அதுலத் முதலியினதும் நோக்கமாக இருந்தது. இப்பாரம்பரிய தமிழ்க் கிராமங்களில் இருந்து தமிழர்களை வேறோடு பிடுங்கியெறியும் திட்டம் லலித் அதுலத் முதலியினால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. 1984 ஆம் ஆண்டின் ஆரம்பத்துடன் இந்த நடவடிக்கைகளும் அவரால் முடுக்கிவிடப்பட்டன.கென்ட் மற்றும் டொலர் சிங்களக் குடியேற்றப் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதல்களையடுத்து,  1984 ஆம் ஆண்டின் இறுதியிலும், 1985 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலும் இம்முயற்சிகளை லலித் அதுலத் முதலி தீவிரப்படுத்தினார். இக்காலப்பகுதியில் தமிழர்கள்  முற்றாக அடித்து விரட்டப்பட்ட கிராமங்களாவன :  கொக்கிளாய், கருநாற்றுக்கேணி, கொக்குத்தொடுவாய், நாயாறு, கென்ட் - டொலர் பண்ணைகள், ஆண்டான்குளம், கனுக்கேணி, உந்தராயன்குளம், உதங்கை, ஒதியாமலை, பெரியகுளம், தண்டுவன், குமுழமுனை கிழக்கு மற்றும் மேற்கு, தண்ணியூற்று, முள்ளியவளை, தண்ணிமுறிப்பு, செம்மலை மற்றும் அள‌ம்பில்.
    • நோயுற்ற அல்லது காயமடைந்த மனித குரங்குகள் தனக்குத் தானே மருத்துவம் செய்து கொள்வது எப்படி? பட மூலாதாரம்,ELODIE FREYMANN படக்குறிப்பு,மனித குரங்குகள் என்ன சாப்பிட விரும்புகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மனித குரங்குகள் (chimpanzees), வலி நிவாரணி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட தாவரங்களை சாப்பிடுகின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். உகாண்டாவின் காடுகளில் தாங்கள் செய்த ஆய்வை அவர்கள் விவரித்தனர். காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்டதாக தோன்றிய விலங்குகள் தாவரங்கள் மூலம் சுய மருந்துவம் செய்துகொள்கின்றனவா என்பதை அவர்கள் ஆய்வு செய்தனர். காயமடைந்த விலங்கு ஒன்று காட்டில் இருந்து குறிப்பிட்ட ஒரு செடியை தேடிய போது, ஆராய்ச்சியாளர்கள் அந்த தாவரத்தின் மாதிரிகளை சேகரித்து அதை பகுப்பாய்வு செய்தனர். பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான தாவரங்கள் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருந்தன. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். PLOS One இதழில் தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்ட விஞ்ஞானிகள், புதிய மருந்துகளின் கண்டுபிடிப்பில் சிம்பன்சிகள் உதவக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். "இந்த காடுகளில் உள்ள எல்லா தாவரங்களையும் மருத்துவ குணங்களுக்காக நம்மால் சோதிக்க முடியாது. எனவே நம்மிடம் இந்த தகவல் உள்ள தாவரங்களை நாம் ஏன் சோதிக்கக் கூடாது, அதாவது சிம்பன்சிகள் தேடும் தாவரங்கள்?" என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை க்கழகத்தைச் சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளர் டாக்டர் எலோடி ஃப்ரீமேன் குறிப்பிட்டார். கடந்த நான்கு ஆண்டுகளாக, தொடர்ச்சியாக பல மாதங்களை புடோங்கோ மத்திய வனக் காப்பகத்தில் செலவிட்டுள்ள டாக்டர் ஃப்ரீமேன் அங்கு காட்டு மனிதக் குரங்குகளின் இரண்டு சமூகங்களை கவனமாக பின்தொடர்ந்து ஆய்வு செய்தார்.   பட மூலாதாரம்,ELODIE FREYMANN படக்குறிப்பு,காயம் அல்லது நோயின் அறிகுறிகளைக் காட்டிய சிம்பான்சிகள் ஆய்வின் மையமாக இருந்தன வலியின் அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதையும் ஒரு விலங்கு நொண்டியபடி செல்கிறதா அல்லது அசாதாரணமான முறையில் தன் உடலைப் பிடித்துக் கொண்டுள்ளதா என்பதையும் அவரும் அவரது குழுவினரும் கவனிப்பார்கள். பின்னர் அவற்றுக்கு என்ன நோய் அல்லது தொற்று இருக்கிறது என்று அறிய சோதனை செய்வதற்காக அவற்றின் மலம் மற்றும் சிறுநீரின் மாதிரிகளை சேகரிப்பார்கள். காயம்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட சிம்பான்சி தான் பொதுவாக சாப்பிடாத மரத்தின் பட்டை அல்லது பழத்தோல் போன்ற ஒன்றைத் தேடும் போது அவர்கள் குறிப்பாக அதன் மீது கவனம் செலுத்தினர். "தாவரங்கள் மருத்துவ குணம் கொண்டதாக இருக்கலாம் என்பதற்கான இந்த தடயங்களை நாங்கள் தேடிக்கொண்டிருந்தோம்" என்று டாக்டர் ஃப்ரீமேன் விளக்கினார். கையில் மோசமாக காயம்பட்டிருந்த ஒரு ஆண் மனித குரங்கு பற்றி அவர் விவரித்தார். பட மூலாதாரம்,AUSTEN DEERY படக்குறிப்பு,மனித குரங்குகள் தேடிய மரங்கள் மற்றும் தாவரங்களிலிருந்து டாக்டர் எலோடி ஃப்ரீமேன் மாதிரிகளை சேகரித்தார். "அந்தக் குரங்கு நடப்பதற்கு காயம்பட்ட கையை பயன்படுத்தவில்லை. அது நொண்டிக் கொண்டிருந்தது. இந்த சமூகத்தின் மற்ற குரங்குகள் ஒரு இடத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, காயமடைந்த இந்தக் குரங்கு மட்டும் நொண்டியபடி ஒருவகை செடியை (fern) தேடிச்சென்றது. இதைத்தேடி உண்ட ஒரே சிம்பன்சி அதுதான்," என்று அவர் நினைவு கூர்ந்தார். கிறிஸ்டெல்லா பாராசிட்டிகா என்று அழைக்கப்படும் இந்த தாவரத்தை ஆராய்ச்சியாளர்கள் சேகரித்து பகுப்பாய்வு செய்தனர். அதில் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருந்தன. மொத்தத்தில் ஆராய்ச்சியாளர்கள் 13 வெவ்வேறு தாவர இனங்களில் இருந்து 17 மாதிரிகளை சேகரித்து அவற்றை சோதிக்க ஜெர்மனியில் உள்ள நியூபிரான்டன்பர்க் அப்ளைடு சயின்சஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் ஃபேபியன் ஷுல்ட்ஸுக்கு அனுப்பி வைத்தனர். கிட்டத்தட்ட 90% சாறுகள், பாக்டீரியா வளர்ச்சியைத் தடுத்தன. மேலும் மூன்றில் ஒரு பங்கு செடிகள் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருந்தன. அதாவது அவை வலியைக் குறைத்து குணப்படுத்துவதை ஊக்குவித்தன. பட மூலாதாரம்,AUSTEN DEERY படக்குறிப்பு,அழிந்துவரும் இந்தக் காடுகளில் ஆய்வு மேற்கொண்டால் சில புதிய மருத்துவ தாவரங்களை கண்டுபிடிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வில் பின்தொடரப்பட்ட எல்லா காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட மனித குரங்குகளும் முழுமையாக குணமடைந்துவிட்டதாக டாக்டர் ஃப்ரீமேன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். "ஃபெர்ன்களை சாப்பிட்ட அந்தக்குரங்கு அடுத்த சில நாட்களில் மீண்டும் தனது கையைப் பயன்படுத்தியது," என்று அவர் விளக்கினார். "ஆயினும் இவை அனைத்துமே இந்த வளங்களை உண்டதன் நேரடி விளைவு என்பதை எங்களால் 100 சதவிகிதம் நிரூபிக்க முடியாது," என்று அவர் பிபிசி நியூஸிடம் கூறினார். "ஆனால் காடுகளில் உள்ள மற்ற உயிரினங்களை கவனிப்பதன் மூலம் நாம் பெறக்கூடிய மருத்துவ அறிவை இது எடுத்துக்காட்டுகிறது. எதிர்கால சந்ததியினருக்காக இந்த 'வன மருந்தகங்களை' பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது." என்று அவர் குறிப்பிட்டார். https://www.bbc.com/tamil/articles/c4nnq1glz9no
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.