Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊருக்குப் போக விருப்பமில்லை !!! - வடமராட்சி மண்ணில் வந்திறங்கிய விஜயர்கள்! (கவி - 02)

Featured Replies

வெறிச்சோடிப்போன வீடுகளும் வீதிகளும்.... பசித்து பின் நொந்துபோன

அனாதை நாய்களின் ஈனக் குரைப்புகளுடன் அடங்கிப்போயின!

கோயில் திருவிழாக்கள் காணாத மக்கள் கூட்டத்தினை - அகதி மக்கள்

நிரப்பி வழிக்க... செஞ்சிலுவை சுமந்த சாலைகளும் அப்படியே!

வான் பறவைகளின் இரைச்சல்களில்..

அதைவிடச் சத்தமாய்... ஓலமிட்டது நாங்கள்தான்!

இரண்டுமாடி கட்டிடத்தின் "உயரிய பாதுகாப்பில்" நாமிருந்தபோதும்,

பயத்தினில் பரித்தவித்து உயிரை... கையில்தான் வைத்திருந்தோம்!

வெஞ்சினமோடு வந்த பகையை வெறியேற்ற எண்ணாத வரிப்புலிகள் ,

பக்குவமாய்ப் பதுங்கிப் போன பின்னும், வெறியாட்டம் ஆடிக்கொண்டே...

உள்நுழைந்த "விஜயன்கள்" துணைநின்ற பறவைகளின் குறியிலிருந்து,

இந்த ஐந்து வயது கவிக்குஞ்சு ஐந்தடி தூரத்தில்தான் தப்பியது!

சுட்டெரிக்கும் அமிலத்தையும் சுடு தார்ப்பீப்பாக்களையும்

சுமந்துவந்து வரைந்த கொடுஞ்சித்திரங்களை எம்மவர் மேனியில்

பார்த்துப் பரிதவிக்க.... அலறல் ஒலிகளும் அடங்கிப் போக,

என் அம்மா என் கண்களை மறைத்தபோது... தடுத்தன என் கரங்கள்!!!!

கலியாணம் கட்டாதோரும் பிள்ளையைச் சுமந்த நாளது!

தோளில் ஒன்று... கையில் ஒன்றென இரவல் குழந்தைகள்!

அப்போது, கைதின்பின் வதையிலிருந்து தப்பிக்க இரண்டே வழிகள்,

ஒன்றில், கையில் ஒரு பிஞ்சு... அன்றில், கழுத்தில் நஞ்சு!

புலிவேட்டை வந்த (அ)சிங்கங்களுக்கு அப்பாவிகள்தான் கிடைத்தார்கள்... கணக்குக் காட்ட!

ஒரு தாய்க்கு ஒரே மகன்... என் கண்முன், ஒரு தாயின் கதறல்!!!

இன்றும்... இந்த நிமிடம் வரையும்... அந்தத் தாயின் கதறலும்,

அந்த மகனின் கண்களும் அப்படியே... என் கண் முன்னால்!!!

ஐயோ... என்ர பிள்ளையை விட்டிடுங்கோ!!!

என்ர கடவுளே... நான் இனி என்ன பண்ணுவன்???

" ராசா மாரே! " விட்டிடுங்கோ ... என்ர பிள்ளையை!!!

ஓங்கியுதைத்த "பூட்ஸ்" கால்மிதியில் சரிந்து விழுந்த தாய்... பாவம்!!!

மீள எழும்பும்போது நகரத்தொடங்கிய இராணுவ வண்டியையை நோக்கி

நாசமாய்ப் போவீங்களடா!!! என்று சொல்லி....

அவள் அள்ளி எறிந்து வீசிய புழுதிமண்...

அந்த வாகனத்தினை துரத்திக்கொண்டே.......சென்றது!

பயங்கரங்களையும் பழகிக்கொள்ள... பழகிக்கொண்ட நாட்கள் அவை,

பலவிதமாய்ப் பயமுறுத்த பழகுவதற்காய் வந்தன!

சின்ன வயதெனினும் சிந்திக்க முனைந்த காலமதில்,

சிறிதாய் ஒரு தீப்பொறி.... என் மன வைக்கோற்போரில்!!!

பற்றியெரிந்த நெருப்பின் தகிப்புக்கள்...

தொடரும்...

இதன் முன்னைய பதிவுகளைப் பார்க்க:

ஊருக்குப் போக விருப்பமில்லை !!! - கவிமுகம்

http://www.yarl.com/...showtopic=93656

ஊருக்குப் போக விருப்பமில்லை - "ஒபரேஷன் லிபரேஷன் ஆரம்பம்" (கவி-01)

http://www.yarl.com/...showtopic=93788

Edited by கவிதை

< கலியாணம் கட்டாதோரும் பிள்ளையைச் சுமந்த நாளது!

தோளில் ஒன்று... கையில் ஒன்றென இரவல் குழந்தைகள்!

அப்போது, கைதின்பின் வதையிலிருந்து தப்பிக்க இரண்டே வழிகள்,

ஒன்றில், கையில் ஒரு பிஞ்சு... அன்றில், கழுத்தில் நஞ்சு! >

நான் இனி தொடரவில்லை கவிதை , நீங்களே தொடருங்கள் . வாழ்துக்கள் :D :D :D .

கவிதைக்கு நன்றி கவிதை. பழைய நாட்களை அப்படியே கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள். ஒவ்வொரு வரிகளிலும் தெரிகிறது அந்த பிஞ்சு வயதில் அனுபவித்த வலிகள்.......! தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்.

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி. தொடருங்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

மீள் நினை வூட்டும் வலிகள்.....கவியின் வரிகளுக்குள் ஒரு காந்தம்

..நிறுத்தாது வாசித்து முடிக்க வைக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

உள்நுழைந்த "விஜயன்கள்" துணைநின்ற பறவைகளின் குறியிலிருந்து,

இந்த ஐந்து வயது கவிக்குஞ்சு ஐந்தடி தூரத்தில்தான் தப்பியது!

ஒன்றில், கையில் ஒரு பிஞ்சு... அன்றில், கழுத்தில் நஞ்சு!

அருமையான கவிதை வரிகள், வழமை போல.

நல்ல ஒரு கவிதையைத் தந்தமைக்கு நன்றிகள், கவிதை!!!

  • தொடங்கியவர்

< கலியாணம் கட்டாதோரும் பிள்ளையைச் சுமந்த நாளது!

தோளில் ஒன்று... கையில் ஒன்றென இரவல் குழந்தைகள்!

அப்போது, கைதின்பின் வதையிலிருந்து தப்பிக்க இரண்டே வழிகள்,

ஒன்றில், கையில் ஒரு பிஞ்சு... அன்றில், கழுத்தில் நஞ்சு! >

நான் இனி தொடரவில்லை கவிதை , நீங்களே தொடருங்கள் . வாழ்துக்கள் :D :D :D .

கோ! தங்களின் "நெருடிய நெருஞ்சி"......... நெருடிய நெருடலின் தாக்கமே என் கவித்தொடர்!

ம் ஞாபகங்களை தூண்டிவிட்டு .... தாங்கள் "எஸ்கேப்" ஆக நாங்கள் அனுமதியளிக்க மாட்டம்!

பு..ரி..ஞ்..சு..தா?????? :lol: :lol: :lol:

Edited by கவிதை

  • தொடங்கியவர்

கவிதைக்கு நன்றி கவிதை. பழைய நாட்களை அப்படியே கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள். ஒவ்வொரு வரிகளிலும் தெரிகிறது அந்த பிஞ்சு வயதில் அனுபவித்த வலிகள்.......! தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்.

தமிழினி... உண்மையில், எம் வலிகள்தான் புலிகளை உருவாக்கியது!

என் பிஞ்சு வயது வலிகள்........ இன்றும் மறக்கமுடியாத நினைவுகளாக என்னைத் துரத்துகின்றது!

நன்றி தமிழினி! :)

  • கருத்துக்கள உறவுகள்

கவித் தொடர் நன்றாகவே போகிறது வாழ்த்துக்கள்..ஆனாலும் எனக்குள் ஒரு சின்ன கேள்வி எழுகிறது...எப்படி ஐந்து வயது பாலகனாக இருக்கும் போதே இவ்வளவு விஷயங்களை அப்போது கிரகித்து கொண்டீர்கள்..???புரிந்து கொள்ள முடியாமல் தான் முன்பு ஒரு முறை உங்கள் கவிதைப் பகுதியில் எழுத தோன்றாமல் சிமைலியை போட்டு விட்டு போனேன்.ஆமி,பல புரியாத பெயர்களைக் கொண்டு விமானங்களின் குண்டு சத்தங்கள் அந்த தருணங்களை இப்போதும் நான் நினைச்சுப் பார்த்தால் இருதயம் நின்று உயிர்ப்பது போல் ஒரு பிரமை ஏற்படும்.

  • தொடங்கியவர்

பதிவுக்கு நன்றி. தொடருங்கள் :)

மிக்க நன்றிகள் சஜீவன்! :)

  • தொடங்கியவர்

மீள் நினை வூட்டும் வலிகள்.....கவியின் வரிகளுக்குள் ஒரு காந்தம்

..நிறுத்தாது வாசித்து முடிக்க வைக்கிறது

என் வரிகளில் உணர்வுகள் இருக்குதோ இல்லையோ... இன்றும் உணர்வோடு இருக்கும் இதயங்களில் வலிகள் மட்டுமே மீதமாய் இருக்கின்றன!

மீள் நினைவுகளில்... மீட்டப்படும் சில விடயங்கள்.... நல்லதற்காய் அமையட்டும்!

நன்றி நிலா அக்கா! :)

  • தொடங்கியவர்

அருமையான கவிதை வரிகள், வழமை போல.

நல்ல ஒரு கவிதையைத் தந்தமைக்கு நன்றிகள், கவிதை!!!

நன்றி புங்கையூரன்!

தங்களின் நடுநிலையான விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றேன்!

தயவுசெய்து... குறைகள் இருந்தால், தயங்காமல் சுட்டிக் காட்டவும்!

நன்றிகள் பல! :)

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதைக்கு நன்றி கவிதை

  • தொடங்கியவர்

கவித் தொடர் நன்றாகவே போகிறது வாழ்த்துக்கள்..ஆனாலும் எனக்குள் ஒரு சின்ன கேள்வி எழுகிறது...எப்படி ஐந்து வயது பாலகனாக இருக்கும் போதே இவ்வளவு விஷயங்களை அப்போது கிரகித்து கொண்டீர்கள்..???புரிந்து கொள்ள முடியாமல் தான் முன்பு ஒரு முறை உங்கள் கவிதைப் பகுதியில் எழுத தோன்றாமல் சிமைலியை போட்டு விட்டு போனேன்.ஆமி,பல புரியாத பெயர்களைக் கொண்டு விமானங்களின் குண்டு சத்தங்கள் அந்த தருணங்களை இப்போதும் நான் நினைச்சுப் பார்த்தால் இருதயம் நின்று உயிர்ப்பது போல் ஒரு பிரமை ஏற்படும்.

யாயினி! வாழ்க்கையில், எத்தனை சந்தோசங்களையும் மறந்துவிடலாம்... ! ஆனால், பட்ட வலிகள்....... நெஞ்சில் சுட்ட வடுக்களாய் ஆறாமல் நினைவில் நிற்கும்! இன்றைக்கும் நான்... இத்தனை இழப்புக்களின் பின்னும், ஒரே இலட்சியத்தில் உறுதியாய் இருக்கின்றேன் என்றால்... அதற்கு நான் பட்டறிந்த வலிகளே காரணம்!

வலிகளோடு ஒன்றிப்போய் அதிலிருந்து விடுபடும் விடியலில்தான்.... உண்மையான சுதந்திரம் இருக்கும் என எண்ணுகின்றேன்!

எதற்கும் ஓர் எல்லையுண்டு........... நாம் அனுபவிக்கும் வலிகளும் அதற்கு விதிவிலக்கல்ல!

நன்றி யாயினி! :)

உங்கள் கவிதைக்கு நன்றி கவிதை

நன்றி வாத்தியார்!

தங்கள் விமர்சனங்களையும் விட்டுச் செல்லுங்கள்! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.